பித்தனோ பேதையோ!

பைத்தியக்காரனின் பெண்பால் பைத்தியக்காரி என்பர். அவ்விதம் பித்தனின் பெண்பால் பித்தி என்று இல்லை. புலவனின் பெண்பால் புலவி இல்லை. செய்யுள், பாடல், பாட்டு என்பதைக் குறித்த வடசொல் கவி. ‘சான்றோர் கவி எனக்கிடந்த கோதாவரி’ என்பான் கம்பன். கவி கவிதை ஆகி, கவி எழுதுபவன் கவிஞர் ஆனார். இமாலயக் கவி, நயாகரா கவி என்மனார் வேறு இனம். கவிதாயினி எனும் சொல் புனையப்பட்டு இருபது ஆண்டுகள் இருக்கலாம்.

முருகன் ஏஜன்சிஸ்

முருகன் லேப்டாப்பை இறுக்கமாகப் பிடித்தான். அந்தப் பெயரை மறுபடியும் மறுபடியும் படித்தான். அவன் யார், எங்கே இருக்கிறான், எப்படி இருக்கிறான், தனக்குத் தெரிந்தவனா என்று அவன் மனம் அலைபாயத் தொடங்கியது. கல்யாணி குளியலறையில் முணுமுணுத்துக்கொண்டிருந்த பாடல் அவனைக் கோபப்படுத்தியது. முகம் இல்லாத ஒரு பெயருக்கு எதிராக என்ன செய்ய முடியும், செய்தும் என்ன ஆகப்போகிறது என்று தன் கையாலாகாத்தனத்திற்கு அவன் மனம் சப்பைக்கட்டு கட்டியது. குளியலறைக் கதவு திறந்த சத்தம் கேட்டதும் அவன் லேப்டாப்பை மூடினான்.

கால்சியம் நிறைந்த நீரிலிருந்து கால்சியம் கார்பனேட்டின் அதிசயங்கள் வரை

சங்க இலக்கியங்களும் இதை உயிரோட்டத்துடன் பதிவு செய்துள்ளன. மதுரைக்காஞ்சி பாண்டிய நாட்டின் செல்வத்தைப் புகழ்ந்து, கொற்கைக் கடலில் கிடைக்கும் முத்துகளைச் சுட்டிக்காட்டுகிறது. அகநானூறு, நற்றிணை, புறநானூறு ஆகியவற்றிலும் கடல், சிப்பி, முத்து, பரதவர் வாழ்க்கை பற்றிய பல குறிப்புகள் உள்ளன. முத்து என்பது தமிழரின் பொருளாதார வளத்தையும், இயற்கையுடன் இணைந்த வாழ்வியலையும் பிரதிபலிக்கிறது. கடல் கொடுக்கும் செல்வமான முத்து உருவாக பல ஆண்டுகள் தேவை. ஆயிரக்கணக்கான சிப்பிகளில் மிகச் சிலவற்றில்தான் இயற்கையாக முத்து உருவாகிறது. அதனால் அது அரிய பொருளாகக் கருதப்பட்டது. முத்தை எடுப்பதற்காக சிப்பியைத் தேடி கடலுக்கு அடியில் செல்ல வேண்டும். சங்க காலத்துத் தமிழர் இதற்காக உயிரையே பணயம் வைத்தனர்.

தேரோட்டம்

செம்புடங்களை எரவானத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தாள். ஒரு கையில் மோர் செம்பை இறுக்கப் பிடித்தபடி ஒரு எம்பு எம்பி முற்றத்தில் போடப்பட்டிருந்த கம்பிகளை ஒவ்வொன்றாகப் பிடித்து தாவிப்போக ஆரம்பித்தேன். நடுவில் துணி காய்ந்து கொண்டிருந்த கயிற்றிடம் ஒரு கணம் நின்று தயங்கியபின் காற்றில் பறந்து இரண்டு கம்பிகளை தாண்டிச் சென்று பிடித்தேன். கடைசிக்கம்பியிலிருந்து சுற்றுச்சுவர் மீது குதிக்கும்போது, மோர் சிந்தாமலிருக்க ஊஞ்சல் போல இரண்டு முறை ஆடிய பின் கையை விட்டுவிட்டு சுவரின் மீது குதித்தேன்.

கூடுதுறை

கணிதக் கோட்பாடான ‘பை’ இயற்கையில் உள்ளது. அது மனிதன் உற்பத்தி செய்ததல்ல. ஆனால், அதன் கணித விளக்கங்கள் அவன் மூலம் வருகின்றன. அதன் வகுத்தலும், அந்தக் கணக்கீடுகளும் நாம் அறிந்து கொண்டவை, ஏற்படுத்தியவை அல்ல. கணக்கீடுகள் அதை விளக்குகின்றன. அவைகளை அவற்றின் இயல்பான கணிதக் கட்டமைப்பிலே புரிந்து கொள்ளலாம், இந்தச் சிந்தனையில் ப்ளாடோவின் மெய்யியல் ஆர்வத்தைக் காட்டிலும், அவரது உள்ளுணர்வின் வீச்சு தெரிகிறது. இவர்களைப் போன்றவர்களுக்கு கணிதத்தின் தொடர் உறுதி நிலையே உண்மையக் காட்ட வல்லது.

தொலைந்த கிராமம்

கடா அந்த பெண்ணைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்தப்ப கருகும்முன்னு இருட்டிப் போச்சு. பதட்டம் கோபமும் அவனைக் களைச்சுப் போக வெச்சிருந்தது. அவ மடியிலே தலைவச்சபடி அஜின் எங்கே போயிருக்கும்னு பாம்பைப் பத்தி அவன் நெனச்சுப் பார்த்தான். தூக்கத்தை வரவழைக்கக்கூடிய சில பழங்களை அரிசியாலே செஞ்ச மதுவோட சேர்த்து அவனுக்கு அவ கொடுத்தா,இனிமையாப் பாடவும் செஞ்சா. ராத்திரி ஆனதும் அந்தப் பெண்ணோட தலைமுடி ரொம்ப ரொம்ப நீளமா வளர்ந்துக்கிட்டே  போய்த் தூங்கிக்கிட்டு இருந்த கடாவோட உடம்பை அப்படியே சுத்தி வளைச்சுக்கிடிச்சு. 

இத்தி மரத்தடி எஞ்சுவது: மண்ணின்றி நிலைகொள்ளா வாழ்வுகள் 

படைப்பு உள்நாட்டுப் போரின் சிங்களத் தரப்பை பற்றிப் பேசுவதில்லை. அதன் மறு தரப்பான இயக்கத்தைப் பற்றியும் விரிவாகப் பேசுவதில்லை. இந்தப் போரில் அகப்பட்ட மலையக மற்றும் ஈழத்தமிழர்களின் போர்க்கால வாழ்வை, அவர்களின் தரவுகளை, கண்ணீரை, வாழத்துடிக்கும் விழைவை, இழந்தவற்றை,  போர் அன்றாடம் ஆவதன் நிதர்சனத்தை, குரூரத்தை, சாகவும் தயார் என்ற அர்ப்பணிப்பைச் சொல்கிறது.  ஈழத்தமிழர்களின் அனுபவம் வேறுபட்டது.

சம்ஹாரம்

அப்பாவின் கைகள் முன்பைப்போல ஓங்குவதில்லை இப்போது. அதற்கு மாறாக மிகவும் கீழ்தரணமான வசைச்சொற்களை சரமாரியாக பிரயோகித்தவண்ணம் இருக்கிறார். அம்மா ஏதேனும் சாதாரணாமாக பேசினால்கூட உச்சுக்கொட்டுவதும், பதில் என்று அவர் வழங்கும் ஒவ்வொரு வாக்கியத்தின் இறுதியிலும் ஏதேனும் ஒரு கொடிய சொல்லை இணைத்து அளிப்பதும் வழமையாக மாறிவிட்டிருக்கிறது. அவரின் ஒவ்வொரு தேவைக்கும் உடனிருக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதாலோ, அல்லது அவளுக்கே அலுத்துவிட்டதாலோ என்னமோ, அம்மா இப்போதெல்லாம் எந்த நிகழ்வுகளிலும் பங்கெடுப்பதில்லை.

ஜோஸ் முஜிகா – எளிய வாழ்க்கையின்  ஒரு குறியீடு  

பொதுவாக, உலக நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் தங்களுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்தவர்களின் வாழ்க்கை  தரத்திலிருந்து பெரிதும் விலகிச் சென்று,  ஆடம்பரமான அரசு பங்களாவில், அரசு பணத்தைக் கோடிக்கணக்காகச் செலவு செய்து சுகபோகமாக வாழ்வதே இயல்பாக உள்ளது.  இந்நிலைக்கு மாறாக,  தனது வாழ்க்கை தரத்தை  பிற நாடுகளின்  அதிபர்களுடைய வாழ்க்கைத்  தரத்தோடு எவ்விதத்திலும் ஒப்பிட முடியாத அளவிற்கு, எளிய வாழ்வை இன்முகத்துடன் ஏற்றுத் தனது நாட்டின் சாதாரண மக்களைப் போன்று வாழ்ந்து வழிகாட்டியவர் ஜோஸ் முஜிகா.

தயங்கி தயங்கி நடந்த புரட்சி – மேலை உலகம் தன் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்க கற்றுக்கொண்டது எப்படி?

மிஸ்டர் கார்டர் சில நொடிகள் பதில் சொல்லவில்லை. “மதம் இல்லாத அறிவு என சொல்லத் தேவையில்லை, வெறும் மதம் மட்டுமே அறிவு இல்லை என பார்ப்பது”  தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார். அவருக்கே அது போதுமானதாக இல்லாமையால் எச்சில் விழுங்குவதை போல விழுங்கிக் கொண்டார். பிறகு யோசித்து “சில சமயம்,” என்றார் அவர் மெதுவாக, “ஜெபர்சன் மனிதர்களை ரொம்ப நம்புறாரோன்னு தோணும்.”

றெக்கை –  அத்தியாயம் 25

This entry is part 25 of 25 in the series றெக்கை

நான் சமையல் அறைக்கு போகும்போது பின்னாலேயே வந்துவிட்டான் லெவி. விவஸ்தையே இல்லாமல் பின்னால் இருந்து இறுக அணைத்து காது மடலைக் கடித்தான்.விடு லெவி என்று நாலு தடவை வற்புறுத்தியாகி விட்டது, அவன் விடமாட்டேன் என்கிறது போல் என்னை திருப்பி அவனை பார்க்க வைத்தபடி உதடுகளை கவ்விக்கொண்டான். என் மார்பு நோக்கி ஊர்ந்து கொண்டிருந்த அவன் கைகள் லட்சியம் நிறைவேற இன்னும் உழைக்க வேண்டிய சுகமான நிர்பந்தம் இருபபதை உணர்ந்து சாரைப் பாம்பு போல் சத்தமின்றி ஊர்ந்தன.

மாயமான நாட்குறிப்பு

This entry is part 6 of 6 in the series கொலம்பஸ்

கொலம்பஸின் இந்தியாவை நோக்கிய (ஆனால் அமெரிக்காவை சென்றடைந்த) கடல் பயணத் திட்டத்திற்கு ஸ்பெயின் அரச குடும்பம் முதலில் நிதியுதவி செய்ய மறுத்துவிட்டது. அந்த இக்கட்டான சூழ்நிலையில், சாண்டாஞ்செல் தனது சொந்தப் பணத்திலிருந்தும், அரசவையின் நிதி ஆதாரங்களிலிருந்தும் கணிசமான தொகையை (சுமார் 1.1 மில்லியன் மாரவெடிகள் ) வட்டியற்ற கடனாக ஸ்பெயின் அரசுக்கு வழங்கினார். இதன் மூலமே கொலம்பஸின் பயணம் சாத்தியமானது

பார்க்கப்படாத வாழ்வுகளின் சாளரம்: ஷாராஜின் வீதிகளூடே ஒரு பயணம்  

கைவிடப்பட்ட , மனப்பிறழ்வுக்கு ஆளான , சுய சுகாதாரத்தைப் பேணிக்கொள்ளத் தெரியாத நிலையில் பேருந்து அல்லது இரயில் நிலையங்களிலோ, நம் ஊர்களிலோ அல்லது நாம் வசிக்கும் வீதிகளிலோ, இப்படி ஏதோ ஒரு இடத்தில் தம் உயிரை மட்டுமே தக்கவைத்துக் கொண்டு நம்மிடையே பிழைத்துக் கிடக்கும் மனிதர்களை நாம் எல்லோரும் நம் வாழ்வில் ஒரு முறையாவது சந்தித்திருப்போம்; அப்படி இதுவரை இல்லையெனில் இனி நிச்சயம் சந்திக்க நேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அப்படியான ஒரு பெண்ணின் கதை தான் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘ பரட்டச்சி ’ என்கிற கதை.

தும்பியின் பிம்பம்

This entry is part 19 of 17 in the series ஹைக்கூ

பறக்கும் தும்பி நீரில் தன் பிம்பத்தைக் காண்கிறது, அது பறந்து கொண்டிருப்பதால் பிம்பமும் நகர்கிறது, பிம்பம் நகர்வதால் அதைத் தும்பி துரத்துகின்றது. துரத்துவதால், பிம்பம் நகர்கிறது. துரத்துவதும் நகர்வதுமாக அந்தக் குளிக்கும் நீர்த்தொட்டியின் மேல் தும்பியின் பயணம் தொடர்கிறது. தொட்டியின் எல்லையில் தும்பியின் பயணம் முடியலாம், அல்லது அது திரும்பி மீண்டும் நீரில் தன் பிம்பத்தைக் கண்டுத் தொடரலாம்.

நேர்க்காட்சி நிரூபணங்கள்

நான் இங்கு கூறிய மூன்று பரிசோதனை முடிவுகளும் இயற்கையின் குரலிலேயே பேசுகின்றன : “ புதிய புலங்கள், விசித்திரமான துகள்கள், துணை பரிமாணங்கள், பிற சீர்மைகள், இணை பிரபஞ்சம், இழைகள் மற்ற பிற – கனவு காணாதீர். நம்முன் உள்ள புதிரின் பகுதிகள் எளியவை: பொது சார்புக் கொள்கை, துளிம இயக்கவியல் மற்றும் பொது மாதிரி கொள்கை. நம்முடைய அடுத்த அடிவைப்பு என்பது இம்மூன்றையும் எப்படி சரியாக இணைப்பது மட்டுமே”

கீதா முகூர்த்தம்

பகவத் கீதை ஒரு மனிதனின் குடும்ப மற்றும் சமூகக் கடமைகள் போன்றவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும், தன் உணர்ச்சிப் போராட்டங்களையும், அற விஷயங்களில் ஏற்படும் குழப்பங்களையும் ஒரு சாதகன் நேர்கொள்ள வேண்டும் என்று போதிக்கிறது. உபநிஷத்துக்கள் நேரடியான, அருவமான, குணங்களற்ற பிரம்மத்தைப் பற்றிப் பேசுகின்றன. துவக்க நிலையில் உள்ள சாதகன் ஒருவனுக்கு எல்லையற்ற அந்தப் பிரம்மத்தை அறிந்து கொள்வதில், புரிந்து கொள்வதில், மனதில் கிரகித்துக் கொள்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

சுகாதார பராமரிப்பு அமைப்பு (HMO) Health Maintenance Organization

This entry is part 26 of 15 in the series பொது நலம்

இந்த அமைப்பின் நோக்கம் இரண்டு: ஒன்று, தேவையற்ற, விலையுயர்ந்த நிபுணர் சிகிச்சைகளைத் தவிர்த்து செலவைக் கட்டுப்படுத்துவது; இரண்டு, ஒரே ஒரு மருத்துவர் உங்கள் முழு சுகாதார வரலாற்றையும் ஒருங்கிணைத்துப் பார்ப்பதன் மூலம் தடுப்பு சிகிச்சையை (preventive care) மேம்படுத்துவது. சில குறிப்பிட்ட சேவைகளுக்கு — உதாரணமாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான வருடாந்திர மேமோகிராம் — பரிந்துரை தேவைப்படாத விதிவிலக்குகளும் உண்டு.

இல்லாதவனின் வீடு

மூன்று வருடங்களுக்கு முன் என்னைப் பிரிந்து, என் காதலை ஏற்காமல் போன கமலாவை என்னால் மறக்க முடியவில்லை. — 12B-க்கு புதிதாக வந்தவள் என்று நினைத்தேனா? இல்லை, அது தவறு. அவள் எப்போதுமே அங்குதான் இருந்தாள். அவள் சிரிப்பின் உரப்பு, யாரேனும் சொல்வார்களோ என்று கவலைப்படாத அவளின் வாளிப்பு, மறைக்க வேண்டிய ஒன்றாக அவள் ஒருபோதும் நினைக்காத அவளின் உடல், ஜன்னல் திறந்தபடி ஆடை மாற்றும் தன்னம்பிக்கை, மாலைக் காற்றை நெடுநேரம் முகரும் அவளின் கொண்டாட்டவுள்ளம்… நாங்கள் நெருக்கமாக இருந்த காலம் மிகக் குறுகியது. ஆனால் அவளுக்கு அது ஒரு பருவம் மட்டும், எனக்கோ அது வாழ்க்கை.

‘பேராண்மை’ – விதியும் விளக்கமும்

அறத்தின் குரலாய் ஒலிக்கும் திருக்குறள் வகுத்த விதிகள் பலவற்றுக்குக் கம்பராமாயணம் விளக்கம் தர முற்பட்டிருப்பதை இரு நூல்களையும் இணைத்துச் சிந்தித்தால் விளங்கிக் கொள்ள முடியும்.இன்னொரு வகையில் சொன்னால் திருக்குறள் இலக்கணம் எனில் கம்பராமாயணம் இலக்கியம் எனலாம்.

அமெரிக்காவின் புதிய தங்க வேட்டை- AI உருவாக்கும் புதிய கோடீஸ்வரர்கள்

ஒவ்வொரு மாபெரும் தொழில்நுட்பப் புரட்சியும் வெற்றியாளர்களையும், சவால்களையும், கடினமான தேர்வுகளையும் உருவாக்குகிறது என்பதை வரலாறு காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவுப் புரட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் ஒரு விஷயம் மேலும் மேலும் தெளிவாகிறது. செயற்கை நுண்ணறிவு யுகத்தில், “தரவு”, உலகின் புதிய இயற்கை வளமாக மாறியுள்ளது. அதைத் தாங்கும் நிலம் அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க பொக்கிஷங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்குமான புரட்சி.

ராமலக்ஷ்மி கவிதைகள்

காற்புள்ளிகளைத் திருத்துவதிலும்
முற்றுப்புள்ளிகளை மாற்றுவதிலும்
ஆச்சரியக்குறிகளைத் துரத்துவதிலும்
கேள்விக்குறிகளுக்கு அஞ்சுவதிலும்
கழிகின்றன வருடங்கள்

மார்க் & ஜெஃப்: தரவின் தோழர்கள்

This entry is part 3 of 3 in the series தரவு ஏக்கம்

அதே போல, என்னைப் பற்றிக் கவலைப்படும் இன்னொரு நபர் ஜெஃப். முதலில் இணையத்தில் புத்தகக்கடையைத் திறந்த ஜெஃப், மெதுவாக, அதை ஒரு பல்சரக்குக் கடையாக மாற்றினார். அவர், எந்த நாட்டில் வியாபாரத்தை விரிவுபடுத்த நினைத்தாலும், ஒரே எதிர்ப்புதான். நான் அமேஸான் பற்றிதான் சொல்கிறேன். எனக்கு ஜெஃபை தெரியாது. ஆனால், அவருக்கு என்னை நன்றாகத் தெரியும்! சற்று தலைகீழாக இருப்பது போலத் தெரியும் – இளையராஜாவுக்கு என்னைத் தெரியும், ஆனால் எனக்கு அவரைத் தெரியாது என்பதைப் போல!

காபிரைட் சட்டத்தைச் செதுக்கிய வழக்குகள்

This entry is part 7 of 7 in the series காப்பிரைட் கதைகள்

டொனால்ட்ஸன் வெளியிட்ட புத்தகங்கள், ஆன் சட்டப்படி பதினான்கு வருட காப்பிரைட் காலம் முடிவடைந்தவை. மேலும் அன்றைய காலத்தில், ஸ்காட்லாந்த் , இங்கிலாந்துடன் இணைந்திருந்தாலும்கூட, தனித்தனி சட்ட அமைப்புகள், அரசியல் குழப்பங்கள் ஆகியன நிறைந்ததாக இருந்தது. எனவே ஆன் சட்டம் ஸ்காட்லாந்தில் எப்படிச் செல்லுபடியாகும் என்பதும் விவாதம் செய்யக்கூடிய ஒன்றாக இருந்தது. இந்தக் குழப்பங்கள் போதாதென்று, டொனால்ட்ஸன் லண்டனிலேயே கடைதிறந்து தனது புத்தகங்களை மலிவு விலையில் விற்பனை செய்யத் தொடங்கினார். லண்டன் புத்தக விற்பனையாளர்கள் பெரும் வணிகச் சவாலைச் சந்தித்தனர்

இந்திரா பார்த்தசாரதியைக் கொண்டாடுதல்

இந்தச் சிறப்பிதழ் பயணத்தில் பல சுவாரசியமான தகவல்களும் கிடைத்தன. எங்கள் கும்பகோணம் பகுதியில் கல்யாணம் ஆக வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் காவிரியாற்றின் அருகிலிருக்கும் திருமணஞ்சேரிக்குச் சென்று வழிபடுவார்கள். லண்டன் பாலேந்திராவுடன் பேசிக்கொண்டிருந்தபோது உடனடி கல்யாணத்திற்கு இன்னொரு வழியும் இருக்கிறது என்று தெரியவந்தது. தான் நடத்திய ‘மழை’-யின் (இ.பா எழுதிய முதல் நாடகம்) இணை நடிகையாக வந்த ஆனந்தராணியைக் கைப்பிடித்த கதையைச் சொன்னார். இதேபோல தில்லியில் பாரதி மணியும் க.நா.சுவின் மகள் ஜமுனாவும் மழை நாடகத்தின் வழியே இணைந்ததும் பாலேந்திராவின் உரையாடல் வழியே தெரிந்தது. கோவிலுக்குச் செல்ல ஆர்வமில்லாதவர்கள் கட்டாயம் இ.பாவின் மழை நாடகத்தைக் முயலலாம். 

இ.பா சார் 

ஆபத்பாந்தவன் அனாதை ரட்சகனாக அன்றைய தினம் சுஜாதா தடுத்தாட்கொண்டபோது இ.பா சார் மௌனமாக வாழ்த்து சொன்னது – குட் லக் – நினைவில் திரும்ப திரும்ப வந்தது. நான் சந்திக்கப் போன இ.பா இவரில்லை. அவர் இருக்கும் இடத்தை கலகலவென்று மாற்றும் நகைச்சுவை உணர்வு மிகுந்தவர். நான் சந்தித்த தினத்தில் அவர் பகடியை இல்லத்திலேயே விட்டுவிட்டு வந்திருப்பார். ச்விட்ச் போட்டதும் விளக்கு எரிவது போல் நிமிடத்துக்கு ஒரு நய்யாண்டியோ பகடியோ உதிர்த்துக் கொள்ளாமல் கல்லூரியில் தத்துவம், நுண்கலை, இலக்கியம் என்று கற்பிக்கும் வித்வத்கர்வம் சற்றே நனைத்த பேராளுமை.

இ.பா என்றொரு நண்பர்

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்த அந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரோடு எனக்குத் தொடர்பு எதுவும் கிடையாது. எம்.ஏ முதல் வகுப்பில் தேறியிருந்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. பம்பாய் போய் அங்கே ‘Free Press Joumal’ என்ற ஆங்கிலத் தினசரியில் உதவி ஆசிரியராகச் சேர்வதாக இருந்தேன். அப்பொழுது திருச்சியிலிருந்து என் அண்ணனிடமிருந்து ஒரு தந்தி வந்தது. திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகச் சேர விருப்பமிருந்தால் உடனே வரலாமென்று.

இந்திரா பார்த்தசாரதியின் சிந்தனைகளைப் பற்றி சில சிந்தனைகள்

திராவிட இயக்கங்கள் பிம்ப கவர்ச்சியை முன்னிறுத்தி அதிகாரத்தை அடைந்தன எனும் பார்வைக்கு மாற்றாக ஏற்கனவே இங்கு செல்வாக்கோடு இருந்த வழமையைத் தனக்கு சாதகமாக்கிக்கொண்டது. கோவில் விளைவுகள் (விழாக்கள்??), உற்சவங்களோடு தேர்தல் அரசியலுக்கு உள்ள ஒப்புமையை அளிக்கிறார். ‘ஒரு சமுதாயப் புரட்சி ஏற்பட்டிருந்தால் உண்மையாகவே அச்சமுதாயப் புரட்சிக்கு காரணமானவர்கள் புத்தரைப் போலவோ அல்லது இயேசுநாதர் போலவோ அல்லது லெனினை போலவோ மிகப்பெரிய சிந்தனையாளர்களாக இருந்திருந்தால் நம்முடைய இலக்கியம் இப்பொழுது இருக்கக்கூடிய இந்நிலையில் இருக்காது என்று உறுதியாக கூறலாம்.

தமிழ் இலக்கியங்களில் வைணவம் – நூல் அறிமுகம்

ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் வாழ்ந்த காலத்தை பக்தி காலகட்டத்துக்கு (கிபி ஏழாம் நூற்றாண்டு) ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் அமைத்திருப்பதாக குரு பரம்பரை வைபவம் தெரிவிக்கிறது. தமிழ் இலக்கிய ஆய்வாளர்களின் கூற்றுப்படியும், மொழியியல் ஆய்வு வழியாகவும் வைணவ பிரபந்தங்கள் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்கும் பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் என வகைப்படுத்தியுள்ளனர். ஆனாலும், ஆழ்வார்கள் கால வரிசை, அவர்களது பிறப்பிடம், பாடல் பெற்ற கோயில்களின் வரலாறு, நித்திய கைங்கர்யங்களை தொகுத்து வைக்கும் கோயிலொழுகு போன்றவற்றை ஆவணமாகக் கொள்ளமுடியும்.

இந்திரா பார்த்தசாரதியின் மாயமான் வேட்டை: இலட்சியவாதமும் சந்தர்ப்பவாதமும்

இந்திரா பார்த்தசாரதி தன் நாவலில் ஆட்சி அமைப்பில் அதிகாரம் அடங்கியிருக்கும் ஒவ்வொரு அடுக்கையும் அதன் நடிப்பையும் செயலின்மையையும் ஒவ்வொரு காட்சியிலும் நேரிடையாகவும் மறைமுகமாகவும் ’அக்குவேறு ஆணிவேறாக’ சுட்டிக் காட்டுகிறார். இறுதியாக, நாவல் முடிவடையும் தருணத்தில், மாயமான் வேட்டைக்கும் த ஆப்பிள் கார்ட்டுக்கும் உள்ள நெருக்கத்தை நாமே புரிந்துகொள்கிறோம். 

தமிழ் நாடகப் படைப்புலகில் இந்திரா பார்த்தசாரதியின் புதிய தடம்

இலக்கிய வாசிப்பு பழக்கம் இல்லாத நானும் அம்மாவும் இந்திரா பார்த்தசாரதி ஒரு ‘அம்மா ‘ என்றே நினைத்திருந்தோம். ஆனால் கதவைத் திறந்த அந்தப் பெரியவர், ‘ இந்திரா பார்த்தசாரதி அம்மா இல்லை, அப்பா ! ‘ என்று சற்றே கடுமையான அன்போடு சொன்னார். மேலும் புதுவைப்பல்கலைக்கழகத்தின் நூலகம் ராம் இன்டர்நேஷனல் கட்டிடத்தில் இருப்பதாகவும் அங்குதான் உன் ஆசிரியர் இருக்கிறார், உங்களுக்கு அங்குதான் நேர்முகத் தேர்வு நடக்கப் போகிறது என்று வழிகாட்டினார். அந்த பெரியவர் புகழ்பெற்ற இலக்கிய மேதை ஒருவரான க.நா. சுப்பிரமணியம் என்பதை பின்னாளில்தான் தெரிந்து கொண்டேன்.

இந்தியத்தனம் நிரம்பிய நவீன நாடகங்கள்: இந்திரா பார்த்தசாரதி, கிரிஷ் கர்னாட் ஓர் ஒப்பீடு

இந்திய நாடக முயற்சிகள் தொடங்கியபோதே அதற்குப் பலவிதமான எதிர்ப்புகள் இருந்தன. பல்வேறு மொழிகள் பேசும் இந்திய துணைக் கண்டத்தில், ஒவ்வொரு மொழி பேசும் மாநில எல்லைக்குள்ளேயே பல்வேறு மரபுக் கலை வடிவங்களின் செல்வாக்கு நிரம்பிய ஒரு தேசத்தில் -எல்லா மரபுக்கலை வடிவங்களின் அடையாளங்களோடும் கூடிய ஒரு அரங்கியல் வடிவத்தை உருவாக்குவது என்பது சாத்தியமில்லை என்பது முக்கிய காரணமாக முன் வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்தவர்களும் தங்களின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடும் கால கட்டத்தில் அனைவருக்கும் பொதுவான ஒரு வடிவத்தை உருவாக்குவது ஒரு ஒட்டுப் போட்ட ஆடையை உருவாக்குவதைப் போன்றதே தவிர பயன்படுத்தத் தக்க ஆடையைத் தயாரிப்பதாக அமையாது என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்திரா பார்த்தசாரதி எனும் பேராளுமை

‘மழை’ நாடகத்தில் நடிப்பவர்களுக்குத் திருமணம் ஆகிவிடும் என்று ‘இபா’ அவர்கள் நகைச்சுவையாகக் கூறுவார். இது டெல்கியிலும் இலங்கையிலும் நடந்தது. ‘மழை’ நாடகத்தில் நடித்த நானும் ஆனந்தராணியும் பின்னர் திருமணம் செய்து கொண்டோம். இது குறித்து ‘இபா’ கூறியதை அண்மையில் சென்னையில் நடந்த எனது நூல் வெளியீட்டு வைபவத்தில் உரையாற்றிய ஆவணத் திரைப்பட இயக்குநர் திரு.  அம்ஷன் குமார் நினைவுபடுத்தினார்.

தத்துவத்தின் மீதான வரலாற்றின் நகைப்பு (அல்லது) இரண்டாவது நசிகேதன் வழி நான்காவதாக ஒரு கேள்வி

ஒரு சமூகம் எதைக் கைவிடுகிறது? எதற்காகக் கைவிடுகிறது? எந்த விதிகளைத் தளர்த்திக் கொள்கிறது? இக்கேள்விகள் சமூக மாற்றத்தைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமானவை. உதாரணமாக, பிராமணர்களுக்குக் கடல் தாண்டிச் செல்வது என்பது தடைசெய்யப்பட்ட ஒன்று. மூன்று கால சந்த்யாவந்தனமும் கட்டாயமானதாகக் கருதப்பட்டது. ஆனால் நவீனக் கல்வியையும் வேலைவாய்ப்புகளையும் ஏற்றுக்கொண்ட பிராமண சமூகம் இவ்விரு விதிகளையும் கணிசமாகத் தளர்த்திக் கொண்டதைக் காண்கிறோம். அங்கு  பழமைக்கும் நவீனத்துக்குமான ஒரு மோதல் உருவாகிறது. தலைமுறைகளுக்கிடையே விவாதம் எழுகிறது. இதேபோன்ற உரையாடல்கள் ஜைன சமூகத்திலும் நிகழ்ந்துள்ளன. இம்மாற்றங்களின் அடிப்படையில் பொருளாதார முன்னேற்றத்திற்கான தேவை உள்ளது.

நினைவில் மேவும் உரையாடல்கள்

இ.பா.வுடனான உரையாடல்கள் எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் செல்லாது; அது பல தளங்களில் விரிந்து செல்லும் அனுபவம். இலக்கியம், சமூகம், அரசியல், லெளகீக வாழ்க்கையெனச் சென்ற அந்த உரையாடல்கள் என்னை மெதுவாகச் செழுமைப்படுத்தின. அவர் பேச்சு சில சமயம் திக்கி வரும். ஒரு வரியின் மீது இன்னொரு வரி படிந்தபடியே செல்லும். கவனத்துடன் அதைக் கேட்க வேண்டும். ஆனால், அதற்குள் ஓடும் சிந்தனை ஓட்டம் தீவிரமானது.

‘நவீனக் கண்ணன்’ – இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா, கிருஷ்ணா.

கிருஷ்ணாவதாரத்தின் முடிவு, ஜரா என்ற வேடன் எய்யும் அம்பால்  நிகழ்கிறது. அந்த இறுதிக் கட்டத்தில் அவன் கேட்கும் கேள்விகளுக்கு விடையாகக் கண்ணன் பல தன்னிலை விளக்கங்களை அளிக்கிறான். அதை நாரதர், தனக்கே உரிய பாணியில் விவரிப்பதாக இந்த நூல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தொடக்கம், நடு, முடிவு என்ற வழக்கமான நேர்கோட்டுக் கதைப்பாணியைத் தவிர்த்து விட்டுப் பாரதத்திலும் பாகவதத்திலும் கண்ணன் ஆற்றும் பங்கோடு அவனது தனிப்பட்ட வாழ்க்கையையும் இணைத்து,  ‘நான்லீனியர்’ முறையில் முன்னும் பின்னுமாய்த் தாவித் தாவிச் செல்லும் வகையில்  கதைப்பின்னலை அமைத்திருப்பது இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கதைக்கூறு உத்தியின் உச்சம், ‘கிருஷ்ணா கிருஷ்ணா’-வின் தனித்துவமும் அதுவே. 

இந்திரா பார்த்தசாரதி – வரலாற்றின் மறுவாசிப்பு

பிராம்மணநெறிச் சடங்குகள், கடவுள் பற்றிய கருத்து, பிறவித் தொடர்ச்சி, ஆத்மாவின் இருப்பு போன்றவைகளை கேள்விக்குட்படுத்திய லோகாயவாதமும், சார்வாகக் கோட்பாடுகளும் இந்திய சிந்தனை மரபின் பகுதியாகவே கொள்ளப்பட்டதையும், நிறுவனங்களுக்கும் அவைகளை எதிர்ப்பவர்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டங்கள் தொன்றுதொட்டு நடந்துவ்ருவதையும், இந்திய தத்துவ வரலாற்றில் பெரும்பாலான தத்துவப் போர்கள் தென்னாட்டில் நடைபெற்றதையும் தன்னுடைய கட்டுரைகளில் குறிப்பிடுகிறார்.

இந்திரா பார்த்தசாரதியும் நாடகங்களும்

தொன்மம் இன்றைய நூற்றாண்டில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் புதுப் பரிமாணம் பெற்று சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  கொங்கைத் தீயில் கண்ணகியின் கதையைச் சொல்வதன் மூலம் இன்றைய பெண்ணியச் சிந்தனைகளைத் தட்டி எழுப்புகிறார். மரபு வழிப்பட்ட சிலப்பதிகாரக் கதையில் இன்றைய பெண்ணியக் கருத்துகளுக்கான வேர்களைக் காண்கிறார் இ.பா. அவரது படைப்பு மனம் கண்ணகியை வேறுவகைப்பட்ட கண்ணோட்டத்தில் கண்டு தற்காலத்திற்குப் பொருத்தமான பல நவீனச் சிந்தனைகளை உள்ளடக்கி `கொங்கைத் தீ` என்ற புத்தம் புதிய நாடகத்தைப் படைக்கிறது.

ஆசாரத்தை உடைத்த அறிவுஜீவி

இந்த வரிகளைப் படிக்கிற ஒரு தலைமுறை எளிதாக இ.பா.வை சங்கி என்று முத்திரை குத்திவிட முயலும். ஒரு காலத்தில் அவருக்கு திமுக மீது கடும் விமர்சனங்கள் இருந்தன என்பதற்கு கணையாழியில் அவர் ‘பரகால ஜீயர்’ என்ற பெயரில் எழுதிய அரசியல் கட்டுரைகளே சாட்சி. அந்த நாள்களில் அவர் எழுதிய நாடகம் ஒன்றில் தோளிலிருந்து தரையைத் தொடும் அளவிற்கு துண்டணிந்த ஒரு பாத்திரத்தின் பெயர் இளவழகன். ஆனால் அவரைக் கூப்பிடுபவர்கள் எல்லோரும் இளவு, இளவு என்றுதான் கூப்பிடுவார்கள்.

எனக்குத் தெரிந்த இந்திரா பார்த்தசாரதி

நாடகங்கள் மேல் தமிழ் இலக்கியவாதிகள் நம்பிக்கையற்று இருந்த போது அந்த படைப்பு வடிவத்தினால் ஈர்க்கப்பட்டவர் இ.பா. இ.பா.வின் முதல் நாடகம் ‘மழை’. பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே டில்லியில் இருந்த தஷிண பாரத நாடக சங்கத்தைச் சேர்ந்த பாரதி மணி என்பவரால் இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த ஊக்கத்தினால் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரம்பித்தார். போர்வை போர்த்திய உடல்கள் இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களில் முதன்மையானது. இது இருத்தலியல் பார்வையை முன்வைக்கும் நாடகம். அவசரநிலைக் காலத்துப் பின்னணியில் வெளிவந்தமையால் இந்நாடகம் பெரிதும் விவாதிக்கப்பட்டது.

அருமணிகளின் அழகியல் தேர்ந்த ஆபரணச்சிற்பி

இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களில் அளவில் பெரியதான உடையவர் ராமானுஜர் நாடகம், சமயம் சார்ந்த ஆவணங்களில் இருந்து உருவாக்கப்பட்ட சமகால பிரதிக்கான சிறந்த உதாரணம் எனலாம். காட்சிகளாக நிகழும் இந்த நாடகத்தின் தொடர்ச்சி என்பது ஒரு பாவனை என்கிற முன்னெச்சரிக்கையோடு இந்த நாடகத்தை அணுக வேண்டுகிறார் ஆசிரியர். ராமானுஜர் யாதவ பிரகாசரிடன் சீடராக இருந்து, வேதாந்த சர்ச்சைகளின்பால் கருத்து வேற்றுமை கொண்டு பிரிந்த பிறகு, திருக்கச்சி நம்பியை குருவாக ஏற்றுக் கொள்ளும்போது, வைணவ குரு பரம்பரையின் ஆச்சாரியரான ஆளவந்தாரின் அறிமுகம் ஏற்படுகிறது என்கிறது ராமானுஜ திவ்ய சரிதம்.

ஒரு கப் காபியிலிருந்து தொடங்கிய வாசிப்பு

பிறர் முன் தன் மரியாதையை இறக்கி வைக்கத் தயங்கும் மனித மனத்தை இந்தக் கதை அமைதியாக வெளிப்படுத்துகிறது. பொருளாதாரச் சரிவு என்பது வெறும் பணக்குறைவாக அல்லாமல் அந்த வீட்டில் உள்ள உறவுகளின் தொனியையும் மாற்றி விடுகிறது என்பதை இக்கதையில் காணலாம். இக்கதை ராஜப்பாவின் தனிப்பட்ட நிலையை எடுத்துரைத்திருந்தாலும், அவர் சார்ந்த சமூகத்தின் கடந்தகால வரலாறு மற்றும் இன்றைய நிலைப்பாடு புலப்படுகின்றது. 

வரலாற்றின் நிழலில் அதிகாரத்தின் தனிமை

இங்கு தோல்வியடைந்தவன் தாரா ஷிகோ அல்ல; வெற்றி பெற்ற அவுரங்கசீப்பே. ஏனெனில் வரலாற்றில் வென்றவன், வாழ்க்கையில் தோற்றுவிட்டான். இதுவே கிரேக்கத் துன்பியலின் அடிப்படை உண்மையாகும். மனிதன் தனது வெற்றியிலேயே தனது அழிவுக்கான விதையை விதைத்துக் கொள்கிறான். இந்திரா பார்த்தசாரதியின் மிகப்பெரிய கலைநயம், வரலாற்றை நிகழ்காலத்தோடு இணைக்கும் திறனில்தான் இருக்கிறது. நாடகத்தில் நேரடியாக எந்தச் சமகால அரசியல்வாதியையோ எந்த அரசியல் இயக்கத்தையோ அவர் குறிப்பிடுவதில்லை. ஆனால் நாடகத்தை வாசித்து முடிக்கும் ஒவ்வொருவருக்கும், அது தங்கள் காலத்தைப் பற்றியே பேசுகிறது என்ற உணர்வு இயல்பாக உருவாகிறது.

வேரை மறந்தவன், விலை கொடுத்தவன் – குற்றமும் மன்னிப்பும், போலந்தும் தமிழும்

இன்று நினைத்துப் பார்த்தால், அந்த நாவல் எனக்கு ஒரு இலக்கிய அனுபவமாக மட்டுமல்ல, உலகத்தைப் பார்க்க ஒரு புதிய சாளரமாகவும் அமைந்தது. போலந்து என்ற நாடு, கிழக்கு ஐரோப்பாவின் சோசலிச அரசியல், யூதர்களின் வரலாறு, இந்தியத் தூதரகத்தின் செயல்பாடுகள், வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் வாழ்க்கை, மனித உறவுகளின் சிக்கல்கள்—இவற்றையெல்லாம் முதன்முதலில் இந்த நாவலின் வழியாகத்தான் அறிந்தேன். இணையமும் சமூக ஊடகங்களும் இல்லாத அந்தக் காலத்தில், நல்ல இலக்கியங்கள்தான் உலகத்தின் பல கதவுகளை நமக்காகத் திறந்து வைத்தன.

இ .பா. ஒரு அறிவுக்கேணி

இந்திரா  பார்த்தசாரதி ஒரு பன்முகக் கலைஞர்.  அவர் தொட்ட இலக்கிய வகைமைகள் எல்லாம் துலங்குகின்றன. சிறுகதை, நாவல், நாடகம், இலக்கிய விமர்சனம் . எதுவாயினும். தமிழிலும் பழந்தமிழ் இலக்கியம் முதல் நவீன தமிழ் வரை ஆழங்கால் பதித்தவர் அவர். ஆங்கில, மேற்கத்திய இலக்கியங்களில் கரை கண்டவர். அவர் எழுதுவதை எப்படி வகைப்படுத்தலாம்? இலக்கியம் ஒரு சமூகச் செயல்பாடு. ஏன் எல்லாக் கலைவடிவங்களுமே சமூகச் செயல்பாடு தான் என்பதே இ. பா.வின் கோட்பாடு. நகைச்சுவை. அங்கதம். உணர்ச்சி வெளிப்பாடு.

இந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு சந்திப்பு

‘அஞ்சிறைய மட நாராய்’ என்று திருவாய்மொழியில் ஒரு பாட்டு வரும். தலைவி தலைவனிடம் சொல்கிறாள். அவர்கள் களவொழுக்கத்தில்தானே ஈடுபடுகிறார்கள்!? பராங்குச நாயகி என்று சொல்வார்கள். ‘நாயிக பாவம்’ என்று சொல்வார்கள் அல்லவா? இது பக்தி வெளிப்பாட்டின் இன்னொரு அம்சம். கடவுள்தான் நாயகன். பக்தர்கள் எல்லோரும் நாயகிகள். சங்க இலக்கியத்தில் இருந்து (பிரபந்தத்தில்) இது தொடர்கிறது. இந்தப்பாடலில் இறைவனுக்கு தூது அனுப்புகிறாள் தலைவி.

ஆதவன் சிறுகதைகள்

வர்க்கப் பேதங்களுடைய சமூகத்தில், தொழில் வளர்ச்சிகளின் காரணமாகச் சமூகச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. பொருளாதாரக் காரணங்களினால் குடும்ப வாழ்க்கை நிலை குலைகின்றது. அடிப்படையில், பிரபுத்துவ சமூக அமைப்பை உடைய ஒரு சமுதாயத்தின் மீது, தொழில் யுக வாழ்க்கைக்குரிய மதிப்புக்கள் சுமத்தப்படும்போது, முரண்பாடுகள் மேலோங்குகின்றன. வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுவதிலும், போலிப் பரவசங்களிலும், விளையாட்டுக்காகச் செய்யும் வன்முறைகளிலுந்தான் தங்களை நிரூபித்துக் கொள்ள முடியுமென்று இளைஞர்கள் கருதுகிறார்கள். அவர்களுக்கு நிறையக் கோபம் இருக்கிறது. யார் மீது என்றுதான் அவர்களுக்குப் புரியவில்லை; ‘

‘என்றுமுள தமிழும் இன்று உள்ள தமிழும்’ – இந்திரா பார்த்தசாரதி

‘எந்தக் காரணத்தை முன்னிட்டும் (குறிப்பாக அரசியல் காரணம்) சங்க இலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள் போன்றவை தமிழனுக்கு மட்டும்தான் சொந்தமானவை என்கிற ரீதியில் பிரச்சாரம் செய்வதை நாம் நிறுத்த வேண்டும் என்கிறார். ‘அவைகளை உலக இலக்கியமாகக் கொண்டு கிளாஸிக்கல் மொழியாக தமிழை அடையாளம் காட்டி லத்தீன் கிரேக்க இலக்கியங்கள் போல உலக பொதுச் சொத்தாக ஆக்குவதற்கு தற்காலத் தமிழையும் சங்ககாலத் தமிழையும் தனித் தனியாக பாகுபடுத்த வேண்டும்’ என்கிறார். மிகவும் சிந்திக்க வைக்கிறது இந்தக் கட்டுரை.

நவீன தமிழ் இலக்கியத்தில் நிகழ்காலத்தின் வெளிப்பாடாக இறந்தகாலம்

இந்திரா பார்த்தசாரதியின் இலக்கியப் படைப்புகள் பெருமளவு புத்தெழும் இந்தியக் குடியரசின் குடிமக்கள் எதிர்கொள்ளும் சமகால சமூகப் பிரச்சினைகளைக் கையாள்கின்றன, மேலும் கதைக்களம் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினரின் பிரதிநிதிகள் — முக்கியமாக அறிவுஜீவிகள் மற்றும் அதிகாரிகள் — மத்தியில், ஆசிரியர் தாமே வாழ்ந்து பணியாற்றிய துடிப்பான தலைநகர் புது டெல்லியில் நிகழ்கிறது என்பதைத் தாண்டி, அவரது பல படைப்புகளில் விரிவாகப் புரிந்துகொள்ளப்பட்ட வரலாற்று நிகழ்வுகள் மற்றும் தெளிவாக முன்வைக்கப்பட்ட (அரை)வரலாற்றுப் பொருண்மைகள் பற்றிய வெளிப்படையான குறிப்புகளும் உள்ளன; இவை அவரது தனிப்பட்ட உலகக் கண்ணோட்டத்தின்படி மீள்-எழுதப்பட்டவை.

கம்பனின் கவித் தீண்டலில் இராம காதை  

இறக்கும் தருவாயில், கம்பனின் கும்பகர்ணன் இராமனிடம், “உன்னிடம் இரண்டு வாக்குறுதிகளை கோருகிறேன். முதலாவதாக, சிதைந்துபோன என் உடலை என் எதிரிகள் பார்த்து எள்ளி நகையாடுவதை நான் விரும்பவில்லை; எனவே, உன்னுடைய அம்பால் என் உடலை அப்படியே கடலுக்குள் தள்ளிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இரண்டாவதாக, என் அன்பிற்குரிய தம்பி விபீஷணனை உன்னுடைய பொறுப்பில் ஒப்படைக்கிறேன்; ஏனெனில், உன்னோடு போரிட இராவணன் போர்க்களத்திற்கு வரும்போது, அவனுடைய முதல் இலக்கு விபீஷணனாகத்தான் இருக்கும் என்பதை நான் அறிவேன்.” என்று உரைத்தான்.[3]

இந்திரா பார்த்தசாரதி – குறிப்புகள்

அக்னி
ஆகாசத்தாமரை (1991 – கல்கி இதழில் வெளிவந்த தொடர்)
ஏசுவின் தோழர்கள்
காலவெள்ளம்
கிருஷ்ணா கிருஷ்ணா
குருதிப்புனல்; 1975; தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.[4]
சத்திய சோதனை
சுதந்தர பூமி
தந்திர பூமி
திரைகளுக்கு அப்பால்