ஆட்டம்

அர்த்தநாரீஸ்வரராகவும், பார்வதி தேவியாகவும், தாருகனாகவும், பத்ரகாளியாகவும், கன்னியாகவும் நடந்து வரும் அவர்களை பக்தர்கள் அனைவரும் வியப்போடு நோக்கினர். ஒரு சிலர் பயபக்தியோடு அவர்களை வணங்கவும் செய்தனர். செண்டை மேளம் வாசிக்கும் இடத்திற்கு வந்ததும் தாங்கள் ஆடுவதற்கு தயார் என்பதை தன் கண்களால் அம்மேளக் கலைஞர்களுக்கு உணர்த்தினார் சிசுபாலன். அம்மேளக்கலைஞர்களும் சிவ பார்வதி நடனம் ஆடுவதற்கு ஏற்றாற்போல் தங்களுடைய மேளத்தை அடிப்பதற்கு தயாராகிக் கொண்டனர். சிசுபாலன் உள்பட அனைவரும் ஒவ்வொரு நபராக அந்த மேளக்கலைஞர்களின் வாத்தியங்களைத் தொட்டு வணங்கி விட்டு தங்களுடைய முதல் ஆட்டத்தை அங்கு அரங்கேற்றத் தொடங்கினர்.

குறத்தி முடுக்கு: ஒரு பார்வையின் பயணம்

விலைமகளிர் தெருவையும் அவன் முதலில் உடல் தேவையை நிறைவேற்றும் இடமாகத்தான் அணுகுகிறான். ஆனால் குறத்தி முடுக்கு தெருவில் உள்ள தங்கம் என்ற இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தின் உடனான உறவு அந்தத் தன்னம்பிக்கையை மெதுவாக உடைக்கத் தொடங்குகிறது. அவள் மற்ற ஆண்களுடன் இருப்பதைப் பார்க்கும்போது அவனுக்குள் ஏற்படும் சங்கடமும் பொறாமையும், உரிமை உணர்வும், “நான் உணர்ச்சியற்றவன்” என்ற அவனுடைய சுயபிம்பத்துக்கு எதிராக நிற்கின்றன. அவளுக்காகப் பணம் செலவழிப்பது, அவளுடைய வீட்டின் உள்தோற்றத்தை மாற்றுவது, அவளை மணக்க வேண்டும் என்ற ஆசை, அவள் இல்லாதபோது ஏற்படும் வெறுமை போன்ற அனைத்தும் அவன் முன்பு மறுத்திருந்த “காதல்” என்ற உணர்வின் வேறு வடிவங்களாகத் திரும்புகின்றன.

உமிழ்

ஒரே ஒரு நொடி, இருளடர்ந்த அந்த மதுக்கூடத்தின் மண் தரையில் தலைகுப்புற நான் விழுந்து கிடப்பதைப்போல் ஒரு காட்சி கண்முன் விரிந்தது. நிகழும் கணத்திலேயே அதனை பிரமை என்று உள்ளம் உணர்ந்தும் இருந்தது. இரண்டொரு நொடிகளில் அக்காட்சியின் மூலம் எது என்பதையும் நினைவுகூர்ந்திருந்தேன். சமீபத்தில் ஏதேனும் கதைகள் எழுதினீர்களா என்று அந்த இயக்குனர் எழுப்பிய வினாவிற்கு, எழுத்தாக எதுவுமில்லை எனவும் ஆனால் மனதினுள் கருக்களாக சில கதைகள் இருக்கின்றன என்றும் பதில் சொல்லியிருந்தேன். அவற்றில் எனக்கு நெருக்கமானதை விவரித்துச் சொல்லும்படி அவர் கேட்டுக்கொண்டதும் நான் சொல்லத் துவங்கிய கதையின் முதல் காட்சி அது.

அமெரிக்க பாப் இசையின் தந்தை

This entry is part 9 of 9 in the series காப்பிரைட் கதைகள்

ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்கப்பட்டது. அது நினைவுகளில் இருந்து பாடப்பட்டது.  எழுதி வைக்கப்பட்டவை அல்ல. ஒருவர் கடைக்குச் சென்று நாட்டுப்புற இசையின் இசைக் குறிப்புகளை விலை கொடுத்து வாங்க முடியாது. அன்றாட நடைமுறை வாழ்க்கையைச் சித்தரிக்கும் என்று சொல்ல முடியாது. குறிப்பாக, குடியேற்றத்தால் உருவாகி இருந்த ஒரு சமூகத்தின் பொது அடையாளமாக ஒரு நாட்டுப்புற இசை இருக்க முடியாது.

நானெனும் நான் (சிலந்தீ) 

என் கூந்தலிழையின்
நுனிப்பற்றி சுருட்டி
இழுத்து நாணாக்குகிறாய்
என் ஓடா குருதியின் கரையிலமர்ந்து
கூடா வார்த்தைகளின்
பண் இசைக்கிறாய்..

அத்தியாயம் 9: பிளாட்பார்மில் முடிதிருத்தும் சலூன்?

அந்தப் பிளாட்பார்ம் ஒரு விசித்திரமான பொருளாதாரச் சூழலையும் உருவாக்கியிருந்தது. அங்கே இலவச உணவு, துணி துவைக்கும் வசதி, குளிர்பானங்கள் என அனைத்தும் வழங்கப்பட்டதால், ஜூஹு ஹெலிபேஸிலிருந்து ஹெலிகாப்டரில் ஏறும்போதே நாங்கள் எங்கள் பணப்பைகளை (wallets) பைக்குள் பத்திரமாக வைத்துவிடுவோம். பிளாட்பார்மில் இருக்கும்போது பணத்தைச் செலவழிக்க வேண்டிய தேவையே இருக்காது. ஆனால், அதில் ஒரு சுவாரசியமான விதிவிலக்கு இருந்தது. அக்காலத்தில் இந்தியா பல துறைகளில் சுயாதிபத்தியக் கொள்கையைப் பின்பற்றி, இறக்குமதிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளையும் வரிகளையும் விதித்திருந்தது. நாங்கள் சர்வதேசக் கடல் எல்லைக்கு மிக அருகில் இருந்ததால், பிளாட்பார்மிற்கு வரும் பிற வெளிநாட்டுப் படகுகளோ அல்லது கப்பல்களோ சில வெளிநாட்டுப் பொருட்களைக் கொண்டு வந்து அங்கே விற்பனை செய்ய முடியும்

  ஆழி மனங்கள்

“என்ன உரிமை” என்றான் சரவணன் பலவீனமாக. அத்தை அடுத்த வார்த்தையை சொல்லும் முன் ராசு கொஞ்சம் உரக்க “நான் போக மாட்டேன்” என்றான். அங்கிருந்த அனைவரும் அவனை நோக்கினார்கள் அத்தை அவன் முன்னாடி நின்று “உனக்கு என்ன உரிமை இருக்குனும் அவன் உனக்கு யாருனும் தெரிஞ்சா நீ இப்படி சொல்ல மாட்டே ராசு” என்றாள்.  “எனக்கு தெரியும்” என்றான். சரவணனை தவிர  மூன்று பெண்களுமே அதிர்ந்து போனார்கள். ராசு எழுந்து உறுதியோடு “அத்தை ..நீங்க எனக்கு போன் பண்ணி வர சொன்னதுமே நான் தெரிஞ்சுகிட்டேன்..முதல்ல வரக்கூடாதுனு தான் நினைச்சேன் ஆனா சிலதை தெளிவாக்கிடனும்னு தோணுச்சு..எனக்கும் உங்க தம்பிக்கும் உறவுனா அது அவருடைய அண்ணன் மகன்னு இருக்குற ஒரு உறவுதான் அதை தாண்டி எதுவுமே இல்லே..இப்போ மட்டும் இல்லே எப்பவுமே அது ஒண்ணு தான்.

புத்தியில் நிலைத்தவன்

“எவன் ஒருவன் உடலும் மனமும் இயங்கும்போது அந்தச் செயல்களுக்குள் செயலற்ற தன்மையையும், செயலற்று வெறுமனே அமர்ந்திருக்கும் போதும் அந்த நிலையில் செயலையும் காண்பானோ, அவனே மனிதர்களுக்குள் உண்மையான புத்திமான். அவனே யோகி. அவனே தன் அனைத்துக் கடமைகளையும் செய்து முடித்த நிறைவு பெற்றவன் ஆவான்.” என்று ஒரு சுலோகத்தில் கூறுகிறார்.

ரொட்டி சுட்டதடா…

முதலில்லெல்லாம் எனக்கு ப்ரெட்டைக் கண்டாலே பிடிக்காது. உடம்பு சரியில்லாத பொழுது உண்ணும் பண்டம் என்பது என் மனத்தில் பதிந்து விட்டதாலோ என்னவோ ரொட்டியைக் கண்டாலே ஒருவித ஆயாசம் ஏற்படும். அதிலும் அதை பாலில் முக்கி சொதசொதவெனச் செய்து தருவார்கள். இப்பொழுது நினைத்தாலும் குமட்டுகிறது. இதையே தோசைக்கல்லில் கொஞ்சம் நெய் “ரொட்டி சுட்டதடா…”

தேசிய நெடுஞ்சாலை I-94 கிழக்கு

வாகனத்தில் உள்ளே
அதிசயிக்க தக்கது என எதுவுமில்லை
தன் நோக்கத்தை நேர்த்தியாய் நிறைவேற்றும்
இயந்திரத்தின் மெல்லிய உறுமல்.
சக்கரங்களின் சீரான இசை.

திரும்பும் பயணம்

This entry is part 8 of 8 in the series கொலம்பஸ்

நினா கப்பலின் அப்போதைய உண்மையான கேப்டன் ‘விசென்டே யானேஸ் பின்ஸான்’ (Vicente Yáñez Pinzón – இவர் பிண்டோ கேப்டன் மார்ட்டின் அலோன்சோ பின்ஸானின் தம்பி). சாண்டா மரியா அழிந்த பிறகு, கொலம்பஸ் முழுப் பயணத்திற்கும் தலைவராக இருந்ததால், நினா கப்பலைத் தனது முதன்மை (Flagship) தளபதியகக் கொண்டு, அதன் பொறுப்பைத் தன் கைவசம் எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.

றெக்கை- அத்தியாயம் 27

This entry is part 27 of 27 in the series றெக்கை

அல்பிக்கு வந்திருக்கும் ஷயரோகம் குழந்தைகளை பற்றிப் படராமல் முன் ஜாக்கிரதையோடு குழந்தைகள் விசியையும் கிட்டாவையும் அவுட் ஹவுஸில் முத்தச்சன் தம்பதியோடு தற்காலிகமாக தங்க வைத்திருக்கிறாள். லெவி வேறு வேலை இல்லாமல் பார்த்துக் கொண்டு ஒரு நாள் விடாமல் டிஸ்பென்சரியில்  தனித்திருக்கும் நிர்மலாவுக்கு அட்டெண்டென்ஸ் கொடுக்க வந்து விடுகிறான். கையெழுத்து போட்ட கை சும்மா இருக்குமா என்ன.

உயிர்காக்கும் நீரிலிருந்து நீராவியின் ஆற்றல் வரை

ஆய்வகத்தில் காணப்படும், hydrothermal autoclave வெளியிலிருந்து பார்க்கும்போது வலிமையான உலோகப் பாத்திரமாகத் தோன்றினாலும், அதற்குள்ளே சிறிய செயற்கை பூமி உருவாக்கப்படுகிறது. நீர் கரைப்பானாகச் செயல்படும்போது, அதிக வெப்பநிலையில் அதன் இயற் பண்புகள் மாறுகின்றன. அழுத்தம் அதிகரிக்கும்போது அதன் கொதிநிலையும் மாறுகிறது. பல கனிமப் பொருள்கள் சாதாரண சூழலில் எளிதில் கரையாவிட்டாலும், சூடான அழுத்தமுள்ள நீரில் வேறுவிதமாக நடந்து கொள்ளலாம்.

அலகு 

பாதியிலேயே ரத்னா கிளம்பினாள். சைகை காட்ட குமரனும் பின் தொடர்ந்தான். நடுஇரவிற்கு மேல் ஆகியிருக்க வேண்டும்.  கண்சிமிட்டும் தெருவிளக்குகள், அரைத்தூக்கத்தில் சில நாய்கள் தவிர யாரும் இல்லை. தன் வீட்டிற்குள் நுழையாமல் குமரனுடன் உள்ளே வந்தாள். அவளின் உடல் நடுக்கத்தையும் பெருமூச்சையும் அருகில் உணர்ந்தான். ஏதோ ஒரு பூவின் வாசனை. ஸ்பரிசம். எல்லாம் கலந்து ஒரு புது அனுபவம். நினைவில் அது அப்படியே தேங்கிவிட்டது.

கண்ணுக்குத் தெரியாத AI முத்திரை: நம்பகத்தன்மைக்கான தீர்வா, புதிய பிரச்சினையா?

உள்ளடக்கத்தைத் தயாரிக்கும் பொழுதே வார்த்தைகளை வடிவமைக்கும் முறையைக் கொண்டு ஒரு குறியீட்டை/முத்திரையை அதற்குள் கிளாட் பதித்து விடுவதால் படிப்பவர்களால் கண்டுபிடிக்க இயலாது. உரையை ஆய்வு செய்யும் ஒரு சிறப்பு தொழில்நுட்பத்தால் மட்டுமே அந்த குறியீட்டைக் கண்டுபிடிக்க முடியும். அதனால் இதை ஒரு வகையில் “டிஜிட்டல் கைரேகை” என்றும் புரிந்துகொள்ளலாம்.

இமாமும் ஷாதுலும்: நிலம் மனிதனை மிருகமாக்கும் கதை

நிலம் என்பது ஒரு மனிதனை எப்படி மிருகமாக்கும் என்பதை இந்த நாவலில் வரக்கூடிய சில கதாபாத்திரங்கள் மூலமாக நாம் மிக அற்புதமாக புரிந்து கொள்ளலாம். சந்தர்ப்ப சூழ்நிலையால் மனிதன் மிருகம் ஆகிறான் என்பது இந்த நாவலின்  மையக்கருத்து என்று நான் நம்புகிறேன். இந்த கதையின்  மைய கதாபாத்திரங்கள் என்று பார்த்தால் ,ஒரு கிராமத்தில் விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய  அப்பா, அம்மா மற்றும் மகன் இவர்களோடு ஒரு கரடி மற்றும் சிலர் அவ்வளவே.

தரவு தனியுரிமை

This entry is part 5 of 5 in the series தரவு ஏக்கம்

நாம் இதுவரை இந்தப் பகுதியில் பார்த்தது, உலக அரசியல்வாதிகளால், பூசப்பட்ட பெரும் டெக் நிறுவனங்களின் தீய முகம். இதை உலகெங்கும் ஊதி வாசிக்கும் இவர்களின் அறிக்கைகளில் ஓரளவு உண்மை இருந்தாலும், இந்தத் தொழில்நுட்பத்தின் சக்தியை இதே அரசியல்வாதிகளே மறுப்பதில்லை. குறிப்பாக, இவர்களின் சில அறிக்கைகள், இந்தத் தொழில்நுட்பத்தை வேறு விதத்தில் அணுக வேண்டும் என்றும் சொல்லி வருகின்றன.

கோதை வருவாளா?

புலரி… புலரி… புள்ளினங்கள் கூட்டில் சோம்பல் முறித்துக் கொள்கின்றன. பசுங்கன்றுகள் தாயை தேடிக் கொண்டு குதியல் போட பசுக்கள் மடியின் கனம் இறக்கி நிம்மதிக் கொள்கின்றன. அய்யோ… கிழக்கு வெளுத்து விட்டதா… இந்நேரம் கோதை வந்து விட்டிருப்பாளோ? அனிருத்யையின் உள்ளமும் உடலும் படபடத்தது, பஞ்சணையிலிருந்து துடித்தெழுந்த வேகத்தில் அதில் “கோதை வருவாளா?”

சொல்வனம் வழங்கும் “எண்ணெய்யும் தண்ணீரும்” ஆங்கிலப் புத்தகம்

அந்தக் காலகட்டத்தில் பிளாட்பார்மில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் ஆண்கள்தான். நிறுவனத்தின் ஆன்ஷோர் (கரை) பிரிவுகளிலும், தலைமை அலுவலகத்தின் சப்போர்ட் ரோல்களிலும் பெண்கள் பணிபுரிந்த போதிலும், இந்த ஆஃப்ஷோர் வேலைகள் முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே நிறைந்ததாகவே இருந்தன. ஊழியர்களின் வயது இருபதுகளின் தொடக்கத்திலிருந்து ஐம்பதுகளின் இறுதிவரை விரிந்திருந்தது. மாதத்தில் பாதி நாட்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து ஊழியர்கள் படும் சிரமங்களை நிறுவனம் நன்கு உணர்ந்திருந்ததால், பிளாட்பார்மில் எங்கள்  வாழ்க்கையை எவ்வளவு சொகுசாக்க முடியுமோ, அவ்வளவு சிறப்பாக வைத்து கவனித்துக் கொண்டது. எண்ணெய் மற்றும் எரிவாயு மூலம் கிடைத்த வருவாய் அங்கே வழங்கப்பட்ட தாராளமான வசதிகளை எளிதாக நியாயப்படுத்தியது.

முடிவிலி

பல வருடங்களுக்கு முன்னால் ஒரு பால்கனியில் நின்றுகொண்டு, தண்ணீர் வழிந்து தரையைக் கறைபடுத்தும் வரை மல்லிகைக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். அவளது கூந்தல் ஒழுங்கற்று அள்ளி முடிக்கப்பட்டிருந்தது. எந்தவொரு ராகமும் இன்றி அவள் ஏதோவொரு மெட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அவர் அப்போது இளைஞராக இருந்தார்; அந்தத் தண்ணீர் வீணாவதைக் கண்டும், அந்தச் சேற்றைக் கண்டும், குடும்ப வாழ்க்கைக்குள் அன்பு நுழையும்போது ஏற்படும் அந்த ஒழுங்கின்மையைக் கண்டும் எரிச்சலடைந்திருந்தார்.

ஒளிரும் ஒரு நதி

இடைவிடாத அதன் அதிர்வில்
பூஜை பொருள்களின்
மணத்தை கேட்கிறேன்.
மௌனமடைந்த குரல்களைக் கேட்கிறேன்.
செவ்வந்தி மாலை அணிவித்த
படத்திலிருந்து வெளியேறி வந்து

பூமியைச் செதுக்கும் இரு எதிர் மூலகங்கள்:நீரும், கரியமில வாயுவும்

இயற்கை பரிணாம வளர்ச்சியில் கரியமில வாயு, நீர், நொதிகளுக்கு இடையே உள்ள சிக்கலான வேதியியலை வடிவமைக்க பல யுகங்களைச் செலவிட்டபோது, எதிர்பாராத சிக்கலையும் எதிர்கொண்டது. வாழ்வின் வளர்சிதை மாற்றப் பாதைகள் முற்றிலும் தூய்மையாக இருப்பதில்லை. அவை அடிக்கடி எதிர்பாராத வேதியியல் பக்கவிளைவுகளையும் உருவாக்குகின்றன. உயிரியலால் ஒருங்கிணைக்கப்பட்ட மிக மோசமான, சிக்கலான பக்கவிளைவுப் பொருட்களில் ஒன்று அதிக எதிர்வினை கொண்ட ஆக்ஸலேட் (oxalate C₂O₄²⁻) அயனி ஆகும்.

தலைப்பாறை 

ஒரு பெரும் மரம் வழியில் முறிந்து கிடந்தது. அம்மரத்திற்கு கிட்டத்தட்ட நூறு வயதிருக்கும் என்று யூகத்தின் அடிப்படையில் சொன்னான் நிஷாந்து. அம்மரத்தை மொத்தமாக முறிக்காமல் பாதையில் இடையூறாக இருக்கும் பாகத்தை மட்டும் அருகில் முறித்து போட்டிருந்தனர். அதைக் கண்ட திலீப் அண்ணன் “பாத்திய இந்த மரத்த மொத்தமா வெட்டக்கூட நம்மாளுங்களால முடியல, அவ்ளோ பெரிய மரம்” என்று சொல்லிக் கொண்டே  முழு மரத்தின் நீளத்தையும் தன் கண்ணால் ஒருமுறை அளந்தான். அவ்வளவு பெரிய மரத்தை அப்பெரும் காட்டிலிருந்து முழுவதுமாக அகற்றுவதென்பது பெரும் சிரமத்திற்குரிய வேலை என்பதால் அந்த மரம் வாழ்ந்த காட்டிலேயே அதை அப்படியே விட்டுவிட்டு பாதைக்கு இடையூறான அதன் பாகத்தை மட்டும் வெட்டி அப்புறப்படுத்தியிருந்தனர். அது மட்டுமல்லாமல் அது பாதுகாக்கப்பட்ட வனமானதால் சீசன் காலகட்டத்தில் மட்டுமே அதற்குள் செல்ல அனுமதியுண்டு.

வாழ்வெனும் விசும்பின் ஓர் துளிர் 

இத்தொகுப்பில் பல கதைகள் மனதை நெகிழ வைத்து கண்கள் நிறைத்தன. அவர் ஒரு ஏழை கோவில் அர்ச்சகர்/குருக்கள். மகன் திருமணமாகிய சில வருடங்களிலேயே இளம் வயதில் இறந்து விடுகிறான். மருமகள் இரண்டு குழந்தைகளுடன், இங்கு புக்ககத்தில் தான் வசிக்கிறாள். பேரக் குழந்தைகளுக்கு தாத்தாவின் மேல் மிகப் பிரியம். மகள் முக்தா திருச்சி கணவன் வீட்டிலிருந்து சில நாட்கள் முன்பு தான் இங்கு வந்திருக்கிறாள். கொஞ்ச நாள் தங்கிவிட்டு திரும்பிப் போகிறாளா? என்ன விஷயம் என்று முழுதாகத் தெரியவில்லை. ஆனால் திருமணத்திற்கு முன்பு முக்தாவிடம் இருந்த கலகலப்பும், உற்சாகமும் இப்போது இல்லை. குருக்களுக்கு சமீப காலமாக மனதில் சஞ்சலமும், கேள்விகளும், நாத்திக எண்ணங்களும் தலைதூக்குகின்றன

அசுவ யாகம்

மடொன்னா, தனக்கொரு உடனடி விமோசனம் வேண்டி பரிதாபமாய் யாசித்துக்கொண்டிருந்தது. கடந்துகொண்டிருந்த விநாடிகளின் நரக வேதனையைக் கால்கள் காட்டித் துடித்தன! வழக்கமாக, கருணைக் கொலையைக் கால்நடை மருத்துவரே செய்வார். டத்தோ, தன் கையாலேயே மடொன்னாவின் வேதனையை முடித்து வைக்க விரும்பி, மருத்துவரிடம் அனுமதி கேட்டுக் கெஞ்சினார். மருத்துவர், இக்கொலையில் பிரதானமாக உறுதிசெய்யப்பட வேண்டிய உடனடி மயக்கமும், மரணமும் பற்றி விலக்கி, அதற்கானத் துல்லியமான இடத்தை நெற்றிப் பொட்டில் சுட்டிக் காட்டி,  அரைமனதுடன் உடன்பட்டார்.

சம்பூ: வசந்தத்தின் பிரிவும் பறவையின் பாடல் உதிர்க்கும் மீனின் கண்ணீரும் -தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள்

இளவேனிற்காலத்தின் தொடக்கக் காற்றில் நிலவும் குளிரைக் கண்டு அஞ்சி, பாஷோ வடக்கு நோக்கிப் பயணம் செய்வதை சம்பு தடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. பாஷோவிற்கும் சம்புவிற்கும் இடையிலான அந்த இணக்கமான உறவே, பாஷோ இந்தக் கவிதையை இயற்றுவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். அல்லது, ஒருவேளை மீன்களைக் குறிப்பிடுவதன் மூலம், அவர் தனது இளமைக்காலத்திலிருந்து ஒரு தெளிவான முறிவை ஏற்படுத்த எண்ணியிருக்கலாம்.

நவரத்தின விலாசத்தின் யானைக் கொட்டில்

ப்ரின்ஸ் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார். இளைய மகாராணி அவரைப் பார்த்து மெல்லிய குரலில் ஏதோ கேட்டார்.  இன்றும் பெண்கள் மகாராஜா முன்னிலையில் சாதாரணமான குரலில் பேச மாட்டார்கள். பெரிய மகாராஜா அதை எதுவும் கவனிக்காமல் மேசையில் தலைமை இடத்தில் அமர்ந்து கொண்டு பெரிய குரலில் “குட்மார்னிங் ஆல்” என்று எல்லோரையும் புன்னகையுடன் பார்த்து விட்டு உணவு கொண்டு வரச் சைகை செய்தார். வெள்ளைச் சீருடையில் இரண்டு பணியாளர்கள் வெள்ளி தம்ளர்களில் பழ ரசம் ஊற்றி விட்டு, பெரிய வெள்ளி தட்டுகளில் பரிமாறினார்கள். முதலில் வந்தது குங்குமப்பூ போட்ட பாதாம் ஹல்வா போன்று இருந்தது. ப்ரின்ஸ் ஹல்வா வேண்டாம் என்று கையை மறித்தார். 

கனவின் சாவி

மீண்டும்
எனக்குள் பயணம் செய்த போது
அங்கொரு நீதி மன்றம் இருந்தது
பூனையும் எலியும்
வாதி பிரதி வாதிகளாக
விவாதித்துக்கொண்டிருந்தன

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்

ஒரு ஞானி தானே ஆத்மா என்று உணர்ந்திருக்கிறான். எனவே ஆத்மாவுக்கு கிருஷ்ணர் குறிப்பிடும் அத்தனை இலக்கணங்களும் அந்த ஞானிக்கே சென்று விடுகின்றன. ஒரு ஞானி ஒருபோதும் தன்னை ஞானி என்று உணர்வதில்லை. அவன் எப்போதும் தன்னை ஆத்மா என்றே உணர்கிறான். ஆத்மா எந்தச் செயலையும் செய்யாதது என்று அவன் அறிந்திருப்பதால் அவன் தனது எல்லாச் செயல்களை தன்னுடைய அறிவால் துறந்து விடுகிறான். எனவே அவன் சர்வகர்ம சன்யாசி (எல்லாச் செயல்களையும் துறந்தவன்) என்றழைக்கப்படுகிறான். ஆனால் அவன் செய்து கொண்டிருக்கும் எந்தச் செயலையும் அவன் செய்யாமல் விட்டு விடுவதில்லை.

றெக்கை –  அத்தியாயம் 26

This entry is part 26 of 27 in the series றெக்கை

இறந்தவர்களுக்கு வணக்கம் சொல்லப் புறப்பட்டு விட்டேன், சாரட் உள்ளே ஒற்றை மெழுகுவர்த்தி இருளை அதிகமாக்கிக் கொண்டு எரிந்தது. அதன் சுடர் எந்த தொந்தரவும் தராமல் அணைய லெவி மெழுகுதிரி மேல் காற்றை ஊதினான், உய்ய்ய் என்று உதட்டில் சூடான  மெழுகு திரவம் ஒட்ட பின்வாங்கி இனிச் செய்ய வேண்டியது என்ன என்று என்னை உற்று நோக்கினான்.சாரட் முழுக்க இருள் அப்ப,அருகில் அமர்ந்து என் ஸ்தனங்களை கை குவித்து பற்றினான், பேசலானான்.

ஒளிரும் இருள்

விண்மீன்களைப் பார்க்க முடியாமல் மட்டும் செய்வதில்லை இந்த ஒளி மாசு. அது உடல் நலத்தையும் பாதிக்கிறது. உணவுச் சங்கிலியில் இதன் பாதிப்பு நீடித்தும், பெருகியும் வருவது உடல் நலத்தை பாதிக்கும் ஒன்றாகும். இருள் நல்லதே; அது செயல்படும் உயிர் சக்தி. சரியான இடத்தில் சரியான விகிதத்தில், தேவையான அளவு ஒளி இருந்தால், சரியான இருட்டும், அதன் நன்மைகளும் நமக்குக் கிடைக்கும். நகரப் பூங்காக்கள், நகர அமைப்பு மற்றும் வாழ்விடங்கள், வானவியல் கூடுகைகள், எரிமலை உச்சிகள், பல கட்டுமானங்கள் இவற்றில் இருளிற்கு உரிய இடத்தை பெற்றுத்தர பேராசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள், போரடுகிறார்கள். இது ஒரு சரியான நடவடிக்கை.

ரூட் 66: கண்ணீரிலும் கரையாத நம்பிக்கை 

மனிதர்கள் எப்படி பெரும் துயர் களை எதிர் கொள்கிறார்கள் என்பது இந்த நாவலில் காட்டப்படுகிறது. முகாமில்  வசதிகளே  இல்லாத பொழுதும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கின்றனர். தம் பசியை விட வழியில் சந்திப்பவர்களின் துன்பமும் பசியும் பெரிது என்று உதவுகின்றனர். தனித்தனிக் குடும்பங்களாகப் பயணிப்பவர்கள், வழியில் ஒன்றிணைந்து ஒரு பெரிய சமூகமாக மாறுகிறார்கள்.  மனிதநேயம் மற்றும் ஒற்றுமையே பிழைப்பதற்கான ஒரே வழி என்பதை ரூட் 66 பயணம் கற்பிக்கிறது. ரூட் 66 பயணம் செய்பவர்கள் எல்லாச் சவால்களையும் கடந்து நம்பிக்கை இழக்காமல் விடாமுயற்சியுடன் இடம் பெயர்ந்து தமக்கான வாழ்க்கையை தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.

கொலம்பஸும் கொலம்பியாவும்!

This entry is part 7 of 8 in the series கொலம்பஸ்

1486-ல் சலமங்கா பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த மோதல்  19-ம் நூற்றாண்டில் வாஷிங்டன் இர்விங் எழுதிய நாவல் பாணி வரலாற்று நூலில்,   வெகுவாக மிகைப்படுத்தப்பட்டது. சலமங்காவில் இருந்த முட்டாள்தனமான மதகுருமார்கள் “பூமி தட்டையானது; அதனால் கொலம்பஸின் கப்பல் கடலின் முனையில் கீழே விழுந்துவிடும்” என்று வாதிட்டதாகவும், புத்திசாலியான கொலம்பஸ் “பூமி உருண்டையானது” என்று அவர்களிடம் போராடி நிரூபிக்க முயன்றதாகவும் இர்விங் ஒரு கற்பனைக் கதையை உருவாக்கினார்.

தேடல்

அந்தக் கட்டிடங்கள்
கயிறுகள், இஸ்திரிப் பலகைகள்,
சன்னல் சட்டங்கள் மற்றும் கம்பிகளால்
நிரம்பியவை.
தொப்புள் கொடிகளைப் போல
கருப்பு மற்றும் நீலச் சுருள்களாக

எழுத்தின் விலை – அமெரிக்காவின் பைரஸி வரலாறு

This entry is part 8 of 9 in the series காப்பிரைட் கதைகள்

பாஸ்டன், நியூயார்க், ஃபிலடெல்ஃபியா, வாஷிங்டன் என்று தான் கலந்து கொண்ட ஒவ்வொரு கூட்டத்திலும் தன் மனக்குறையை வெளிப்படுத்தினார் டிக்கென்ஸ். அமெரிக்காவில் தங்கள் புத்தகங்கள் விற்பனையாவதால் பிரிட்டிஷ் எழுத்தாளர்களுக்கோ, பதிப்பாளர்களுக்கோ எந்தப் பயனும் இல்லை. அமெரிக்கர்கள் இலக்கிய ரசிகர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் பைரஸியைக் கண்டிப்பதில்லை. அதனை ஏற்றுக் கொள்கிறார்கள். என்று கூட்டங்களில் பேசினார் டிக்கென்ஸ். இந்தப் பேச்சை அமெரிக்கர்கள் ரசிக்கவில்லை.

அழிக்கப்பட்ட புத்தகங்கள்… உருவான செயற்கை நுண்ணறிவு – அறிவின் புதிய போராட்டம்

எழுத்தாளர்களின் முக்கிய குற்றச்சாட்டு, ஆன்த்ரோபிக் பல லட்சக்கணக்கான பதிப்புரிமை பெற்ற புத்தகங்களை உரிய அனுமதி இல்லாமல் பயன்படுத்தி தனது செயற்கை நுண்ணறிவு மாதிரியைப் பயிற்சி செய்துள்ளது. அது மட்டுமில்லாமல், சில காலகட்டங்களில் அனுமதியற்ற இணைய மூலங்களில் இருந்து பெறப்பட்ட மின்னூல்கள் ஒரு பெரிய டிஜிட்டல் தொகுப்பாக சேமிக்கப்பட்டு செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்பட்டன. “எங்கள் பல ஆண்டுகால படைப்பாற்றலும் உழைப்பும் எங்களிடம் அனுமதி பெறாமல் ஒரு வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படக் கூடாது.” என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தனர்.

தெய்வங்களைக் கொல்லுதல் எனும் புனித சடங்கு

சிப்பாய் கோடாரியை வீசினான். முதல் அடி தாடையில் விழுந்தது. கல் பொடியாகி வெண்மையான தூசியாக கீழே விழுந்தது. இரண்டாவது அடி முழங்காலில். மூன்றாவது வயிற்றில். உடைந்த சிலைக்குள்ளிருந்து எலிகள் திரண்டோடின. கடவுளின் உடலை வீடாகக் கொண்டிருந்த சிறு உயிரினங்கள் திடீரென்று வீடிழந்தன. கும்பலில் சிலர் பின்வாங்கினார்கள். சிலர் சிரித்தார்கள். சிலர் அழுதார்கள். கடவுளுக்காக அல்ல. தங்கள் இளமைக்கால நினைவுகள் கைவிட்டு போவதால் அவர்கள் அழுதார்கள்.

திறன்பேசி என் சிறந்த நண்பன்

This entry is part 4 of 5 in the series தரவு ஏக்கம்

பொறுப்பற்ற வாழ்க்கை நடத்தும் இளம் பெண் என்று கடிந்து கொள்ள வந்த என்னை, ‘தனியாக, பல விஷயங்களையும் எப்படித்தான் சமாளிக்கிறாளோ’ என்று நினைக்க வைத்து விட்டது. ஒருவருடன் பேசி அவர்களை மாற்ற முயற்சிக்கலாம். ஆனால், என் திறன்பேசியோ பேச வந்த என்னையே மாற்றிவிட்டது. நான் ஒரு கருவியைப் பயன்படுத்தும் மனிதன் என்பதைத் தாண்டி, என் உறவுகள், என் கோபங்கள், என் குறைகள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் நண்பனாக மாறுவது ஒரு விந்தை. இத்தனைக்கும், என்னுடைய மனதில் உள்ள ஆதங்கம், என்னுடைய கோபம் எதையும் என் திறன்பேசியிடம் சொல்லவில்லை

ஓடும் நதி.. உதவாக்  கரை..

முக்தா அப்பாவின் டேபிளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது அது அதனதன் இடத்தில் – தாத்தாவின் உபதேசமென அப்பா பல முறை சொன்னது.  அப்படியேதான் இருந்தது. இருட்டில் கூட வந்து எடுக்கலாம்.  டைரியின் நடுவே  இருந்த ஒரு கடித உறை கீழே விழுந்தது. அதை எடுத்து முக்தா படிப்பதை பூரணி பார்த்துக் கொண்டிருந்த்தாள். ஒரு வசதியான முதியோர் இல்லத்தில் சேர்வதற்கான காகிதங்கள் அப்பாவின் கையெழுத்துடன். 

அரிதாரம் பூசும் கனகம்

ஆனிப்பொன் பெட்டகத்தை
“தகரம்” என்று
எப்படியோ
நம்ப வைத்து விடுகிறார்கள்
பழைய இரும்புத்தகரத்திற்கு
பேரீச்சம்பழம் விற்பவர்கள்!

மெடிக்கேர் (Medicare) 65 வயதுக்கு மேற்பட்டோருக்கான கூட்டாட்சி சுகாதாரக் காப்பீடு

This entry is part 27 of 16 in the series பொது நலம்

1960களின் நடுப்பகுதியில், அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டோரில் பெரும்பான்மையினருக்கு தனியார் சுகாதாரக் காப்பீடு கிடைப்பது கடினமாக இருந்தது — வயதான பின் நோய் அபாயம் அதிகரிப்பதால் காப்பீட்டு நிறுவனங்கள் அவர்களைத் தவிர்த்தன அல்லது மிக அதிக பிரீமியம் கோரின. இந்த இடைவெளியை நிரப்ப, 1965-இல் ஜனாதிபதி லிண்டன் ஜான்சன்(Lyndon B. Johnson) இன் கீழ் மெடிக்கேர் சட்டமாக்கப்பட்டது. முதியோர்களின் மருத்துவச் செலவை ஈடுசெய்வதோடு, தனியார் சந்தையில் அவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரப் பாரத்தையும் குறைப்பதே அதன் நோக்கம்.

ஒரு மண்ணின் நினைவுகளும், ஒரு சமூகத்தின் ஆன்மாவும்

இந்த நாவலில் பெண்கள் வெறும் துணைக் கதாபாத்திரங்களாக இல்லை. சமூகத்தின் இயக்க சக்திகளாக இருக்கிறார்கள். உண்ணிமாயா, கொழும்பிலிருந்து பொருளாதார வசதியுடன் வரும் கொழுந்தனை விரும்பி, அதே மனிதன் வேலை இழந்து வறுமையுடன் திரும்பியபோது ஒரு கிழிந்த பாயை மட்டும் கொடுத்து ஒதுக்கும் காட்சி, மனித உறவுகளில் பொருளாதாரத்தின் தாக்கத்தை மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறது.

பித்தனோ பேதையோ!

பைத்தியக்காரனின் பெண்பால் பைத்தியக்காரி என்பர். அவ்விதம் பித்தனின் பெண்பால் பித்தி என்று இல்லை. புலவனின் பெண்பால் புலவி இல்லை. செய்யுள், பாடல், பாட்டு என்பதைக் குறித்த வடசொல் கவி. ‘சான்றோர் கவி எனக்கிடந்த கோதாவரி’ என்பான் கம்பன். கவி கவிதை ஆகி, கவி எழுதுபவன் கவிஞர் ஆனார். இமாலயக் கவி, நயாகரா கவி என்மனார் வேறு இனம். கவிதாயினி எனும் சொல் புனையப்பட்டு இருபது ஆண்டுகள் இருக்கலாம்.

முருகன் ஏஜன்சிஸ்

முருகன் லேப்டாப்பை இறுக்கமாகப் பிடித்தான். அந்தப் பெயரை மறுபடியும் மறுபடியும் படித்தான். அவன் யார், எங்கே இருக்கிறான், எப்படி இருக்கிறான், தனக்குத் தெரிந்தவனா என்று அவன் மனம் அலைபாயத் தொடங்கியது. கல்யாணி குளியலறையில் முணுமுணுத்துக்கொண்டிருந்த பாடல் அவனைக் கோபப்படுத்தியது. முகம் இல்லாத ஒரு பெயருக்கு எதிராக என்ன செய்ய முடியும், செய்தும் என்ன ஆகப்போகிறது என்று தன் கையாலாகாத்தனத்திற்கு அவன் மனம் சப்பைக்கட்டு கட்டியது. குளியலறைக் கதவு திறந்த சத்தம் கேட்டதும் அவன் லேப்டாப்பை மூடினான்.

கால்சியம் நிறைந்த நீரிலிருந்து கால்சியம் கார்பனேட்டின் அதிசயங்கள் வரை

சங்க இலக்கியங்களும் இதை உயிரோட்டத்துடன் பதிவு செய்துள்ளன. மதுரைக்காஞ்சி பாண்டிய நாட்டின் செல்வத்தைப் புகழ்ந்து, கொற்கைக் கடலில் கிடைக்கும் முத்துகளைச் சுட்டிக்காட்டுகிறது. அகநானூறு, நற்றிணை, புறநானூறு ஆகியவற்றிலும் கடல், சிப்பி, முத்து, பரதவர் வாழ்க்கை பற்றிய பல குறிப்புகள் உள்ளன. முத்து என்பது தமிழரின் பொருளாதார வளத்தையும், இயற்கையுடன் இணைந்த வாழ்வியலையும் பிரதிபலிக்கிறது. கடல் கொடுக்கும் செல்வமான முத்து உருவாக பல ஆண்டுகள் தேவை. ஆயிரக்கணக்கான சிப்பிகளில் மிகச் சிலவற்றில்தான் இயற்கையாக முத்து உருவாகிறது. அதனால் அது அரிய பொருளாகக் கருதப்பட்டது. முத்தை எடுப்பதற்காக சிப்பியைத் தேடி கடலுக்கு அடியில் செல்ல வேண்டும். சங்க காலத்துத் தமிழர் இதற்காக உயிரையே பணயம் வைத்தனர்.

தேரோட்டம்

செம்புடங்களை எரவானத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தாள். ஒரு கையில் மோர் செம்பை இறுக்கப் பிடித்தபடி ஒரு எம்பு எம்பி முற்றத்தில் போடப்பட்டிருந்த கம்பிகளை ஒவ்வொன்றாகப் பிடித்து தாவிப்போக ஆரம்பித்தேன். நடுவில் துணி காய்ந்து கொண்டிருந்த கயிற்றிடம் ஒரு கணம் நின்று தயங்கியபின் காற்றில் பறந்து இரண்டு கம்பிகளை தாண்டிச் சென்று பிடித்தேன். கடைசிக்கம்பியிலிருந்து சுற்றுச்சுவர் மீது குதிக்கும்போது, மோர் சிந்தாமலிருக்க ஊஞ்சல் போல இரண்டு முறை ஆடிய பின் கையை விட்டுவிட்டு சுவரின் மீது குதித்தேன்.

கூடுதுறை

கணிதக் கோட்பாடான ‘பை’ இயற்கையில் உள்ளது. அது மனிதன் உற்பத்தி செய்ததல்ல. ஆனால், அதன் கணித விளக்கங்கள் அவன் மூலம் வருகின்றன. அதன் வகுத்தலும், அந்தக் கணக்கீடுகளும் நாம் அறிந்து கொண்டவை, ஏற்படுத்தியவை அல்ல. கணக்கீடுகள் அதை விளக்குகின்றன. அவைகளை அவற்றின் இயல்பான கணிதக் கட்டமைப்பிலே புரிந்து கொள்ளலாம், இந்தச் சிந்தனையில் ப்ளாடோவின் மெய்யியல் ஆர்வத்தைக் காட்டிலும், அவரது உள்ளுணர்வின் வீச்சு தெரிகிறது. இவர்களைப் போன்றவர்களுக்கு கணிதத்தின் தொடர் உறுதி நிலையே உண்மையக் காட்ட வல்லது.

தொலைந்த கிராமம்

கடா அந்த பெண்ணைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்தப்ப கருகும்முன்னு இருட்டிப் போச்சு. பதட்டம் கோபமும் அவனைக் களைச்சுப் போக வெச்சிருந்தது. அவ மடியிலே தலைவச்சபடி அஜின் எங்கே போயிருக்கும்னு பாம்பைப் பத்தி அவன் நெனச்சுப் பார்த்தான். தூக்கத்தை வரவழைக்கக்கூடிய சில பழங்களை அரிசியாலே செஞ்ச மதுவோட சேர்த்து அவனுக்கு அவ கொடுத்தா,இனிமையாப் பாடவும் செஞ்சா. ராத்திரி ஆனதும் அந்தப் பெண்ணோட தலைமுடி ரொம்ப ரொம்ப நீளமா வளர்ந்துக்கிட்டே  போய்த் தூங்கிக்கிட்டு இருந்த கடாவோட உடம்பை அப்படியே சுத்தி வளைச்சுக்கிடிச்சு.