அலாஞ்சியம் சால்விஃபோலியம்

முதலில் ஆஸ்பத்திரி மாதிரி ஒரு மருந்து நெடியும் வீச்சமும் அடித்தது. இருட்டாக இருந்தாலும் குளிர்ச்சியாக இருந்தது.சிறிய வரவேற்பறையில் அரை இருட்டில் ஒலி இல்லாத டீவிக்கு முன்பு சக்கர நாற்காலியில் இருந்தது பெரியப்பா என்று அறிய ஒரு கணம் தாமதம் ஆனது. நாங்கள் உள்ளே வந்தது அவருக்கு தெரியவில்லை, கண்களை பாதி மூடிய மாதிரி அசையாமல் டீவியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

திரிசங்கு மாலை: எழுத்தாளனின் அலைபாயும் கனவும் நதிக்கரையோர வாசகியும் – ஊடே போஸ்டன் விசாரகனும்

சலிப்பு ஏன் வரவேண்டும்? நல்ல கேள்வி. பதில்தான் சிலர் எதிர்பார்த்தபடி வராமல் போகும். பெயரென்பது — அது பல் உதிர்வது போல, மீசை அரும்புவது போல — பிரக்ஞைக்கு உள்ளேயும் வெளியேயுமாக தன்னியல்பாக நிகழும் சமாசாரம். முதல் கவிதையை எழுதி முடித்ததும், ஏதோ இரண்டாம் ஆளுமை சட்டென்று கிளம்பி வந்துவிட்டது. அதற்குப் பெயரிட வேண்டியதிருந்தது. “யுவன்” என்று எந்தப் படைப்பு வழியாக வந்தேன் என்று இன்றைக்குக்கூட எனக்கு ஞாபகம் இல்லை.

ஸ்விட்ச்

ஸ்னாக் சுதாரித்து, விண்கலத்துடன் ஒன்றுவதைக் கைவிட்டு, அதன் உந்துவான்கள் (thrusters) வேகமாக உந்தித்தள்ள, அவசரமாக சுற்றுவட்டப்பாதையை விட்டு விலகியது. சற்றைக்கெல்லாம், ஆராய்ச்சி  நிலையத்திற்கும், ஸ்னாக்கிற்கும் இடையில், விண்வெளிக் குப்பைகள் மிதமிஞ்சிய வேகத்துடன் அவ்விடத்தைக் கடந்து போயின. எல்லாமும் கடந்து போய்விட்டது என்பதை ஊர்ஜிதம் செய்யும் ராடார் கருவி மற்றும் நட்சத்திரக் கண்காணிப்பான் (star trackers) இருளைத் துழாவிவிட்டு பச்சையில் ஒளிர்ந்தது. 

வேட்கை கொண்ட மனதின் ஆன்மீகத் தேடல்

பக்தி நாவலின் முக்கிய புள்ளியாகிறது. கலை வெளிப்பாடுகளின் வழியே, பண்பாட்டு நிகழ்வுகள் வழியே பக்தியை காணும்போது அவற்றை அர்த்தமற்றவையாகவே நாயகன் கருதிக் கொள்கிறான். அஸீசுன் எனும் சிறிய கதாபாத்திரம் இடம் பெறுகிறது. அவர்கள் தங்களை மறந்து, பசியில் நடனமாடுகிறார்கள். நடனத்தின் வழியே ஒரு உன்மத்த நிலையை அடைய முயற்சிக்கிறார்கள். முதலாளித்துவ பார்வையில் தேவைகளை செல்வத்தின் மூலம் நிரப்பி விட முடியும். ஆழ்மன ஆசைகளையும் வேட்கைகளையும் செல்வத்தின் வழி நிறைவேற்றிவிட முடியும் எனும் போது செல்வமற்றவர்கள் எதைக் கொண்டு தங்களின் ஆழ்மனத் தேவைகளை நிறைவேற்றுகிறார்கள் ? நடனத்தின் வழியே எந்த இடைவெளியை அவர்கள் நிரப்ப முனைகிறார்கள் என்று சிந்திக்கிறான்.

அதிபன்

ராஜகோபால் அந்தத் திரையைச் சுருக்கிவிட்டு, மற்றொரு திரையைத் திறந்து, அதில் அவர் சற்றுமுன் பதிவிறக்கம் செய்துவைத்திருந்த காணொளியை ஓடச்செய்து நோக்கினார். ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் அரவிந்தன் மிக வேகமாய் சிலம்பம் பயிற்சி செய்வதும், திடீரென செவி அருகே வந்த பூச்சியைத் தவிர்க்கும் முயற்சியில் அவன் நிலையிழப்பதும், கையில் அசுரவேகத்தில் சுழன்றுகொண்டிருந்த கழி தறிகெட்டுத் தெறித்து, ஒரு ஓரத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த மணிகண்டனின் முகத்தைத் தாக்குவதும் அதில் தெளிவாக பதிவாகியிருந்தது.

கொலம்பஸ் -1

கொலம்பஸிற்கு வைஸ்ராய், அட்மிரல் மற்றும் கவர்னர் போன்ற பட்டங்களும், அதற்கான அதிகாரங்களும் அளிக்கப்படுமென்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், புதிய நிலப்பரப்புகளில் கிடைக்கும் எந்தப் பொருளாக இருந்தாலும், அவற்றின் மதிப்பில் 10% கொலம்பஸிற்கு வழங்கப்படுமென்றும், எதிர்காலத்தில் அவர் கண்டுபிடித்த நிலப்பரப்புகளிலிருந்து கிளம்பும் எந்த வணிகக் கப்பலின் செலவிலும் எட்டில் ஒரு பங்கு (1/8th) அளிக்கும் பட்சத்தில், அதில் கிடைக்கும் லாபத்திலும் எட்டில் ஒரு பங்கு அவருக்கு அளிக்கப்படும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது.

அருந்துணை

ஒவ்வொரு மூன்று தலைமுறையிலும் அதே வகையான அதித்திறன் கொண்ட ஆட்டிசம் பாதிப்புள்ள மனிதர்கள் கதிரின் தலைமுறையில் இருந்தார்கள் என்பதைச்  சொல்ல இயல்மனிதர்கள் யாரும் கதிரோடு தொடர்பில் இல்லை. 

ஏழாவது தளம்

கோபால்ராவுக்கு அத்தகைய ஆச்சர்யம் விளைவித்த அனுபவம் ஐம்பது ஆண்டு கால வாழ்க்கையில் இன்னொன்று ஏற்படவில்லை. லஞ்சம் வாங்கிக் கொண்டு வேலை செய்யாமல் ஏமாற்றியவர்களைப் பார்த்திருக்கிறான். தொகையை நீட்டினாலொழிய  கோப்புகளை நகர விடாதவர்களையும் பார்த்திருக்கிறான். ஆனால் கேட்டும் கேட்காமலும் இருக்கும் போதே வேலையை முடித்து விட்டு பணத்தைப் பற்றியே பேசாமல் அனுப்பிவிட்ட மனிதரை முதல் முறையாகப் பார்த்தான். அப்படி நினைத்து மகிழ்ந்து போனான் கோபால்ராவ். 

‘சாதகப் பறவையின் காத்திருப்பு’ மற்றும் ’துப்பாக்கி போல் சொகுசாய் கிடக்கிறது பேனா’ 

படைப்புலகம் என்கிற அரசவையில் வீற்றிருக்கும் படைப்பாளிகளில் திறனை அவரவர் படைப்புகள் ஊடாக அவரது விமர்சன துலாக்கோல் அளவிட முயற்சிக்கிறது. ’செட்டியார் மிடுக்கை’ப் பார்க்காது, அதாவது படைத்தவர் யார் என்பதைக் காட்டிலும்  அன்னாருடைய சரக்கின் மிடுக்கைக் கணக்கிற்கொண்டு, படைப்பினை நவீன இலக்கிய எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் அணுகியுள்ளார்.

றெக்கை – அத்தியாயம் 20  

This entry is part 20 of 20 in the series றெக்கை

பாவலன் அதிகமாக மது அருந்தி விட்டு அவனது சமூக பூர்வமான மனைவி பாதவி உறங்கிக்கொண்டிருந்தபோது  அசமூகமான பந்தம் புலர்த்த காதலி பண்ணிகை இல்லம் நாடிச் சென்றான். இரண்டு மணி நேரம் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த பிறகு போதை தலைக்கேற, எடுத்துப்போன மது போத்தலை பத்திரமாக திரும்ப எடுத்துக்கொண்டு வழியோடு நடக்க, வடக்கு வாசல் அருகே டாகினியிடம் சிக்கினான்.

இந்தியாவில் மருத்துவக் காப்பீடு: வாக்குறுதிகளும் யதார்த்தங்களும்

சில திட்டங்கள் அந்த அந்தப் பிராந்தியங்களுக்கு ஏற்ற வண்ணமும், சில மாநிலம் முழுமைக்குமானதாகவும், சில தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுபவையாகவும் இருக்கின்றன. . இந்த வகையில் பல தெரிவுகள் இருப்பது பயனர்களுக்கு ஒருவகையில் வரமாகும். ஆனால் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பதைக் கொடுக்கும் சாபமும் கூட.  

11. ஒன்றே நினைந்திருக்க உள்ளம் கனியும்

லௌகீகமான இலக்குகளுக்கு மட்டுமல்ல, ஆன்மிக இலக்கை அடைவதற்கும் உடல் நலமும், அதன் வலிமையும் இன்றியமையாதவை. உபநிஷத் வகுப்புகள் துவங்குவதற்கு முன்பாக பாடப்படும் சாந்தி பாடங்கள் சிலவற்றில் உடல்நலமும், வலிமையும் முதன்மையாக வேண்டப்படுகின்றன. உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக முறையான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை ஓர் ஆன்மிக சாதகன் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு உடல் நலத்தை இழந்த பின்னர் அதை மீட்டெடுப்பதற்காகப் போராடுவதைவிட, ஆரோக்கியத்தைக் காப்பது எளிதானது, செலவு குறைந்தது, காலத்தை மிச்சப்படுத்தக் கூடியது.

காசு மேல காசு வந்து…!

முதலாவது தொலைக்காட்சி மற்றும் இணையவெளி நேரடி ஒளிபரப்பு உரிமைகளுக்கான விலை. ஒரு வருடத்தில் 74 போட்டிகள்தாம். இரண்டு மாதங்களில் மொத்தத் தொடரும் முடிந்து விடுகிறது. ஆனால் இந்தப் போட்டிகளைப் பல்வேறு ஊடகங்கள் வழியாக நேரடி ஒளிபரப்பும் உரிமைக்காக ஊடக நிறுவனங்கள் பெரும் தொகையைச் செலுத்தத் தயாராக இருக்கின்றன. காரணம் அதன் மூலம் அவர்கள் பெறக்கூடிய விளம்பர வருமானம். 2023ஆம் ஆண்டிலிருந்து 2027ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ஒளிபரப்பு உரிமைகளுக்காகச் செலுத்தப்பட்டிருக்கும் தொகை 6.1 பில்லியன் டாலர்கள்

மணம் மறக்கப்பட்ட உணர்வா?

எரிமலை கந்தகத்திலிருந்து ஆயுர்வேத மருந்துகள், அங்கிருந்து நவீன எரிவாயு குழாய்கள் வரை, மணம் மனிதனுக்கும் வேதியியல் உலகத்திற்கும் இடையிலான பாலமாகவே இருந்துள்ளது. இது இன்று பொறியியல் முறையில் வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு கருவியாக மாறியுள்ளது. பெரும்பாலும் மணத்தை நாம் புறக்கணித்தாலும், அது மூலக்கூறு அளவிலான தகவல்களை நேரடியாக உணர்த்தும் அறிவியல் வாயிலாக செயல்பட்டு வருகிறது.

பொய்மையின் பக்தன்

தந்தை, தாய் மற்றும் அவர்களது மூத்த மகனுக்கு இடையிலான அந்த முக்கோண உறவுதான் இந்த வியக்கத்தக்க புத்தகத்தின் மையக்கரு. ஏமாற்றங்களும், அதே சமயம் வசீகரமும், ஆபாசமும், வீண் பெருமையும் கொண்ட தந்தை, சிறுவன் மிமியை ஒரே நேரத்தில் அச்சத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்துகிறான். தந்தையின் கலை லட்சியங்கள் நிறைவேற எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் மிமி, அந்தப் புத்தகத்தின் அட்டையில் இடம்பெற்றுள்ள ‘The Drinkers’ ஓவியத்திற்காக நீண்ட நேரமும் வலியுடனும் முழங்காலிட்டு போஸ் கொடுக்கிறான்

சிவப்பின் பின்னிருளில்: ‘பலி பீடம்’ ஒரு வாசிப்பு

யாமாவின் பெரிய தெருவில் இடதுபக்கம் முதல் வீட்டுக்குடிக்கு டிரெப்பல் என்று பெயர். டிரெப்பல் அப்பகுதியில் முதல் தரமான விடுதி. டிரெப்பலில் வேளைக்கு மூன்று ருபிள்களும், ராத்திரி முழுவதும் தங்குவதென்றால் பத்து ரூபிள்களும் வாடிக்கை. இரண்டு ரூபிள் விடுதிகள் யாமாவில் மூன்றுண்டு. ஒன்று ஸொபிவாஸிய்வனா நடத்துவது. மற்றொன்று அன்னா மார்க்கோவ்னா நடத்துவது.

‘உறங்கும் நிலை’ – வித்தித்தல் (Sporulation)

நிலைமை பாதகமாகும்போது இந்த பாக்டீரியாக்கள் தம்மைச்சுற்றி ஒரு கடினமான உறையை (spore coat) உருவாக்கிக் கொண்டுவிடும். அமைதியாக அதனுள் இருந்துகொண்டு இறந்துவிட்டது போலும் நிலையை உருவாக்கிக் கொள்ளும் (dormancy). இதனை உடைத்து இவற்றை மருந்துகளால் அழிப்பது கடினம். அதிகப்படியான நீண்ட சூட்டினால் (பிரஷர் குக்கர் போன்ற அமைப்புகளில் – autoclave) மட்டுமே இவற்றை அழிக்க முடியும். இது உறக்கத்திற்கு சமானம். இந்த உறக்கம், இவை தம்மை அழிவிலிருந்து காத்துக்கொள்ள உதவுகிறது.

காலம் என்பது இல்லை

சுழல்நுரைகளை வைத்து கணிக்கும் துளிம ஈர்ப்பியலின் இந்த வழிமுறை, கோட்பாட்டு இயற்பியலின் வழக்கமான கணக்கீட்டு முறைக்கு முற்றிலும் வேறானதாக முதல் பார்வையில் தெரியும். குறிப்பிட்ட வெளியோ காலமோ இல்லை , சுழல்நுரைகள் பொது மாதிரியின் துகள்களிலிருந்து வெகுவாக விலகியிருக்கும் பொருட்கள் எனத் தோற்றமளிக்கிறது. ஆனால், சுழல்நுரை உத்திகளுக்கும் ( techniques)  பொதுமாதிரி உத்திகளுக்கும் இடையே வலுவான ஒற்றுமைகளும் உள்ளன.

தலைக்குடைகள்

This entry is part 14 of 12 in the series ஹைக்கூ

ஹைக்கூக்கள் ஒற்றை வரியில் கடந்துசெல்லும் காட்சி பொதுவான இயற்கைக் காட்சியாக அமைந்திருப்பின் அதன் படிமங்களை ஜப்பானியரல்லாத வாசகரும் உணர்ந்துகொள்ள இயலும். ஆனால், காட்சிப்படுத்தலில் ஜப்பானிய சமூக, கலாசாரப் பின்னணிகளும் கலந்திருக்கையில் அந்தக் கவிதையை அதன் தளத்தில் நின்று புரிந்துகொள்வதற்கு அந்தக் கவிதை எழுதப்பட்ட காலகட்டத்தின் சமூக அமைப்பை மேலோட்டமாகவாவது அறிந்துகொள்ளும் தேவை இருக்கிறது.

கல்பாக்கத்தில் ஒரு கற்பகத் தரு

மேலை நாடுகளைப் ‘பார்த்து செய்பவை’ அல்ல அவரது வரைவுகள். நாட்டின் இயற்கை வளம், குறைந்த செலவு, இடு பொருளுக்கு ஆகும் செலவை விட பெறும் பொருள் மிகுதி என்ற கனவு, ஆகியவற்றால், தனித்து நிற்பவர் அவர். இத்தகைய அணு மின் உலைகள், சூழலை மாசு படுத்தாது. இன்று உலகம் எதிர் கொள்ளும் மாபெரும் சூழற்சிதைவான பசும்வாயு விளைவு இந்த அணு உலைகளால் ஏற்படாது

அ. முத்துலிங்கத்தின் ‘பூனை மனிதன்  (உலகச் சிறுகதைகள்)’

கதைகளைவிட, முத்துலிங்கம் அவர்களின் முன்னுரையில் குறிப்பிடும் சம்பவங்களும், ஒவ்வொரு கதாசிரியரின் மனோபாவம் மற்றும் அவர்களது அனுபவப் பகிர்வுகளும் மெல்லிய நகைச்சுவையுடன் கூடிய சுவாரஸ்யங்கள்! ஜெர்மனியில் பெர்லின் நகரில் வசிக்கும் எழுத்தாளர் ஒருவர் முத்துலிங்கத்திற்கு எழுதிய கடிதத்தில், ‘எப்போது பெர்லின் நகருக்கு வந்தாலும் தன் வீட்டு அழைப்பு மணியை அடியுங்கள்’ என்று கரிசனையுடன் அழைத்திருந்தாராம் – ‘ஆனால் வீட்டு முகவரியைத் தர மறந்துவிட்டார்’ என்று அ.மு. குறிப்பிடுகின்றார்!

நாவலாய் நீடுவிரியும்  நெஞ்சையள்ளும் கவித்துவம்

யதார்த்தமும் மாயமும் நெடுக இழைந்து, ஒரு மாய யதார்த்தவாத ரீதியில் நாவல் நகர்கிறது.  நாவலில் பயிலும்  மாய யதார்த்தச் சித்தரிப்புகளோடு,  ஒருவர் ஒன்று வினவ, இன்னொருவர் அதை வேறுவிதமாய்க் கேட்க, பதிலுக்கு அவர் ஒன்று வினவ முன்வினவியவர் அதை வேறுவிதமாய்க் கேட்க- இப்படி மாறி மாறித் தொடரும்  வித்தியாசமான உரையாடல்களும்  சேர்ந்து, நாவலில் நெடுக ஒரு புதிய உத்தியாய் வந்து  நாவலின் மாய யதார்த்தவாதத்தை நாவலில் மேலும் வலுக்கூட்டுகின்றன.

பஞ்சவர்ணம்

இளமை நெடுக இயற்றிய கொடும்பாவங்கள் தனக்கு மிகக்குரூரமான மரணத்தை விளைவிக்குமோ என்கிற ஆழ்மன அச்சத்தைப் போக்கும்பொருட்டு ஆன்மீகக் கடலில் கழுத்துவரை மூழ்கியிருந்த அவர் இதுபோன்ற உலகியல் சச்சரவுகளை அறவே வெறுப்பவராக அப்போது மாறியிருந்தார். அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டுவிட்டதை உணர்ந்துகொண்ட சிதம்பரநாதனின் இளமனம், எஞ்சியிருந்த ஒரே வாசலினுள் தன்னைச் சுருட்டிக்கொண்டு நிரந்தரமாக முடங்கியது.

ராஜீவன் எனும் நண்பன்

வடிவங்கள் தாண்டி, தாம் செயல்பட்ட விதங்கள் தாண்டி, ராஜீவனின் வாழ்க்கைப் பார்வை மிகத் தீவிரமானது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கேலியின் வழியாக, நகைச்சுவையின் வழியாக அதைத் தெரிவிக்க  முயன்றார் என்றே படுகிறது. அதுவே அவரது வாழ்நாள் முயற்சியாக இருந்திருக்கிறது.   இப்படி யோசிக்கும்போது,  ஒட்டுமொத்த ப்ரணய சதகமே காதல்மீது அவருக்கிருந்த   பகடியான அபிப்பிராயம்தானோ என்றும் தோன்றுகிறது.

சீட்டுக்கட்டு ராஜ்ஜியம்

இதனால், ஹார்ட்ஸ் ராணியின் தவறுகளைச் சரிசெய்ய அனைவரும் முயன்று கொண்டிருக்கையில், அவர்கள் தாமும் தவறுகளைச் செய்யத் தொடங்கினர். ஏஸ்கள் தங்களை ராஜாக்களால் ஒதுக்கப்படுவதை கண்டனர். ராஜாக்கள் நாவ்கள் பற்றிக்  குழப்பமடைந்தனர். ஒன்பதுகளும் பத்துகளும் தங்களை அரசச் சீட்டுக்களாகக் கருதும் போக்கைக் கொண்டனர். இரண்டுகளும் மூன்றுகளும் நான்குகளுக்கும் ஐந்துகளுக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களை ரகசியமாக பிடித்துக் கொண்டனர். இதுவரை இல்லாத அளவுக்கு குழப்பம் ஏற்பட்டது.

“உடைமை வாழ்வியல் ” மற்றும் “இருப்பு வாழ்வியல்” முறைகள்

நவீன நுகர்வு கலாசாரம் வாழ்க்கையை தொடர்ச்சியான வாங்குதல் மற்றும் கைவிடுதல் என்ற செயல்முறையாக மாற்றுகிறது. பொருட்கள் நீண்டகால பயன்பாட்டிற்காக அல்லாமல், குறுகிய கால சுகத்தை அளிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இதனால் மனிதன் உண்மையான திருப்தியை அனுபவிப்பதற்குப் பதிலாக தற்காலிக தூண்டுதல்களின் பின்னால் ஓடுகிறான். இத்தகைய நுகர்வுச் செயற்பாடு மனித வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தை மாற்றி உடனடியாக கிடைக்கக்கூடிய அனுபவங்களின் தொடர்ச்சியாக வாழ்க்கையை மாற்றுகிறது.

செத்த வீடு

வரவேற்பறையில் பட்டு வேட்டி சட்டையோடு மார்க்கண்டேயரை வளர்த்தியிருந்தார்கள். பார்த்தால் மிக வயதானவராகத் தெரிந்தார். சிவலை மனுசன். தன்னைவிட இருபது வயதேனும் குறைந்த என் மாமாவோடு எப்படி இவருக்கு நட்பு ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகம் எழுந்தது. நான் அவரது காலடியில் பூங்கொத்தை வைத்துவிட்டு சற்று நேரம் அமைதியாக நின்றேன்.

ஒரு நூற்றாண்டு நினைவுகள் – இதழியலாளர் மூவர்

வ.வே,.சு.ஐயரும், சுப்பிரமணிய சிவாவும் நேரடியாக  சுதந்திர போட்டத்தில் ஈடுபட்டவர்கள். மாதவையாவைப் பொறுத்தவரையில், அவர் மிகுந்த தேசபக்தியினைக் கொண்டிருந்தாலும், அரசாங்க உத்தியோகத்தில் இருந்தபடியால், அரசியல் வாதங்களில் தலையிடவில்லை. தேச விடுதலை சார்ந்தும், தமிழ்ச் சமூக மேம்பாடு சார்ந்தும் விசாலமான கனவுகளைக் கொண்டிருந்த அக்காலத்திய இளைஞர்கள் இவர்களுக்கிடையேயான ஒற்றுமை என்னவென்று ஒப்பிடுகிறபோது, இம்மூவர் கண்ட ஓரே கனவைத்தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது.

JANUS- 2

சென்னை ஏர்போர்ட்டிலிருந்து அனைத்து கார் பயணங்களிலும் ஏகப்பட்ட ப்ளைஓவர்கள், பாலங்கள், அப்பாவின் நினைவிலிருந்த இடங்கள் பல மாறிவிட்டன; அவருக்கு சந்தோஷம்தான்.  இரண்டு, மூன்று லேன்கள் எல்லாம். அத்தனை செலவு தரைக்கு மேல் செய்வதற்கு முன் தரைக்கு அடியில் எத்தனையோ, பாதாள சாக்கடைகள் மாதிரி செய்திருக்க வேண்டும் அங்கிள்…”

புழக்கடைப் பேரோட்டம்!

4.167 மைல்கள் நீளமுள்ள ஓடுபாதை. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இதைச் சுற்றி வர வேண்டும். ஒரு மணி நேரத்திற்குள் அந்தச் சுற்றை முடிக்கவில்லை என்றாலோ அடுத்த சுற்று ஆரம்பிக்கும் பொழுது ஓடத் தொடங்கவில்லை என்றாலோ போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள். மற்ற ஓட்டப்பந்தயங்களைப் போல இவ்வளவு தூரம் ஓட வேண்டும் என்ற கணக்கெல்லாம் கிடையாது. இறுதியில் ஒருவர் மட்டும் எஞ்சி நிற்கும் வரை ஓடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். அதனால் பந்தயம் ஒரு நாளில் முடியலாம், இரண்டு நாட்கள் தொடரலாம் அல்லது இந்த வருடம் நடந்தது போல நான்காம் நாள் வரைக் கூடச் செல்லலாம்.

சந்திரா தங்கராஜின் ‘மலையேற்றம்’

இந்நாவலின் உருவகங்கள் உயிரோட்டம் அளிக்கின்றன, ராசபாண்டியின் தனிமையின் சுவர்கள் இயற்கையின் அழகில் பாளங்களாய் உதிர்கின்றன. அப்பாவின் அருகில் போவதும் வருவதுமாய் இருக்கும் மஞ்சள் பட்டாம்பூச்சிகளை அவன் அம்மாவாகக் காண்கிறான். ‘தேன் இருக்கும் லட்சம் பூக்களை விட்டுவிட்டுக் காய்ந்த மரக்கட்டைகளில் அவை எதைத் தேடுகின்றன’ என வியக்கிறான்

மீசை

“உழைப்பு, பணம், உறவு, வயசு எல்லாம் போச்சு,” என்று நினைக்க நினைக்க வலி தாங்க முடியல. நினைக்காமல் இருக்கவும் முடியல. நினைக்காமல் இருந்தா உடம்பு நடுங்குது, நினைத்தா கண்ணீர் வழியுது. முடியல.” அவன் உடல் நடுங்கியது; கண்களில் நீர் ஊறி வழிந்தது. அவன் முன் தலையில் லைட் விழுந்து ஒளிர்வதைக் கோபால் அப்போதுதான் கவனித்தான். இருக்கும் முடி உப்பும் மிளகும் கலந்த கலவை. காலம் வரைந்த கோலம்!

 ஆவுடை அக்காள் காட்டும் மானிட விடுதலை

கவிஞர், ஞானி என்ற பார்வைகளில் போற்றப்படும் ஆவுடையக்கா செங்கோட்டை அக்கிரகாரத்தில் ஆசாரமான ஓர் அந்தணக் குடும்பத்தில் பிறந்தவர். திருமண வாழ்க்கை, யார் தன்னுடைய கணவன், என்பது பற்றிய தெளிவு என்று எதுவுமறியாத பருவத்தில், வயதுக்கு வருமுன்பே பெற்றோர் அவளுக்கு அண்டை வீட்டுப் பையனை மணமுடித்து வைத்தனர். ஒரு நாள் தன் வீட்டில் அழுகையும், அதிகமான வருத்தமும் தொடர்ந்திருக்க, ஆவுடை அக்கா தாயிடம் அதற்கான காரணம் கேட்கிறாள். அடுத்த வீட்டுச் சிறுவன் இறந்து விட்டான் என்று தாய் சொல்ல. அடுத்த வீட்டுச் சிறுவன் இறந்ததற்கு நாம் ஏன் அழ வேண்டுமெனக் கேட்கிறாள்.

மகளிர் மட்டும்

இத்தனை நடக்கிறது.. இன்னும் என்ன முக்காடு வேண்டியிருக்கிறது?” என்று ரஜாக், பர்தாவைப் பிடித்து இழுக்க, பர்தா கழன்று ஒரு ஆண் நிற்பது தெரிந்தது. நீண்ட கருத்த தலை மயிர், வெளுப்பான சருமம், கருப்பு பேண்ட், சட்டை, இடுப்பைக் கச்சிதமாய்ப் பிடித்த பெல்ட், காலில் உயர் ரக காலணிகள் என்று கதா நாயகன் போல் இருக்க, “ஹோ”வென்ற இரைச்சல் பெண்கள் மத்தியில் எழுந்தது

செயல் என்னும் நிவேதனம்

நற்பண்புகள் நிறைந்த எந்த ஒரு மனிதனும் மேற்கூறிய வகையிலேயே இயங்கி வருவான். ஆனால் கர்மயோகம் என்பது இவ்வாறு செயல்புரிவது மட்டுமல்ல. அதே நேரத்தில் அது எந்த வகையிலும் அடங்காத ஒரு தனித்துவமான செயலும் அல்ல. பொதுப்புரிதலில் கர்மயோகம் என்றால் ஒரு செயலில் தீவிரமாக ஈடுபட்டு அதிலேயே தன்னைக் கரைத்துக் கொள்வது என்பதாக அறியப்படுகிறது. அவ்வாறு செயலுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் கர்மயோகிகள் என்று அறியப்படுகிறார்கள். ஆனால் அத்வைத வேதாந்தத்தின் கூற்றுப்படி இது தவறான புரிதலாகும்

றெக்கை – அத்தியாயம் 19

This entry is part 19 of 20 in the series றெக்கை

அவசரமாக இங்கே வரும்போது இடுப்பில் வளைத்துக் கட்டி இருந்த கீசை இருக்கிறதா என்று தேடினேன். காணவில்லை. எனக்கு ஆச்சரியமில்லை.. நானும்  லெவியும் மதுவோ மாதுவோ மாந்தி கண்ணுக்கு மேல் போதை ஏறி இருந்தால் ஆப்பிரிக்க கடவுள் யெபுருவை வந்தித்தால் தொலைந்து போன மனுஷர், பொருள், உடுதுணி எல்லாம் அரை மணி நேரத்தில் திரும்பக் கிட்டும்.வேர்க்கடலை அச்சு ரெண்டு நைவேத்தியமாக கொடுத்தால் போதும்

இயற்கை கற்பிக்கும் மருந்து – தரவுத்தளம்

பல்வேறு உயிரினங்கள் மனிதனுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக இயற்கை மூலக்கூறுகளை உருவாக்கவில்லை. செடிகள் பூச்சிகளிடமிருந்தும் பூஞ்சைகளிடமிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேதிப்பொருட்களை உற்பத்தி செய்கின்றன. நுண்ணுயிர்கள் இடத்திற்கும் உணவுக்கும் போட்டியிடுகின்றன; அதற்காகவே அவை நுண்ணுயிர் எதிரிகள் மற்றும் சமிக்கை மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. பூஞ்சைகளும், கடற்பஞ்சுகளும், விலங்குகளும் தங்கள் வாழ்வைத் தாங்கிக்கொள்ள சிக்கலான மூலக்கூறுகளை உருவாக்குகின்றன.

உறங்குவது போலும்…

தொற்று பாக்டீரியாக்கள் உடலினுள் புகுந்தால், உடலில் இயற்கையாகவே உள்ள எதிர்ப்புச் சக்திகள் (Body’s natural immunity) அவற்றை அழித்துக் கொன்றுவிடும். நம் உடலின் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள பொழுதுகளில் அவற்றின் கை ஓங்கி அவை நம் உடலில் பல்கிப் பெருகும். சில பொழுதுகளில் அவ்வாறு அவை நம் உடலில் பெருகும்போது ஆன்டிபயாடிக்குகளை உட்கொண்டு அவற்றை அழிக்க வேண்டியிருக்கும்.

வெளியின் துளிமம்

ஆமையைத் துரத்திச் செல்லும் அஃகிலீஸ் நினைவுக்கு வருகிறாரா? மெதுவாக நகரும் ஆமையை துரத்திப் பிடிக்க எல்லையற்ற எண்ணிக்கையிலான தொலைவுகளை அவர் தாண்டிச் செல்ல வேண்டும் என்னும் கருத்தாக்கத்தில், ஒவ்வாத ஏதோ ஒன்று இருப்பதாக ஜீனோ (Zeno) கருதினார்.  எல்லையற்ற படிப்படியான சிறு இடைவெளிகளே என்றாலும் அறுதியுள்ள மொத்த இடைவெளிக்கே சமானமாகும் என கணிதம் இச்சிக்கலுக்கான  தீர்வினை கண்டறிந்தது.

கட்டித் தங்கம் வெட்டி எடுத்து

ஒவ்வொரு நாட்டின் அரசும், தங்கள் நாணயத்தின் மதிப்பு என்று ஒன்றைச் சொல்ல, அதை அதனுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளும் ஏற்க, ஒரு பொருண்மையான பொருளின்றி, அதாவது, தங்கம் போன்ற ஒரு அடிதாங்கியின்றி, நாணய மாற்று விகிதம் உருப்பெற்றது. நாணயக் கொள்கையின் மூலம் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய வங்கிகளுக்குத் தேவையான நீர்மையை இது வழங்கினாலும், தங்கம் முன்பு விதித்திருந்த கட்டுப்பாடான ‘நாணய வழங்கல்’ (Money Supply) இல்லாமல் போய், நாடுகள் அதிக நாணயங்களை அச்சிடத் தொடங்கின.

முதற்பனி

This entry is part 13 of 12 in the series ஹைக்கூ

புதிய தொடக்கத்தைக் கவித்துவமாகக் குறிப்பிடும் வார்த்தையாக மொழியிலும், கடந்த கால நிகழ்வுகளுக்கு மன்னிப்புக்கேட்டுப் புதிதாகத் தொடங்குவதற்கு ஏற்ற பருவகாலமாகக் கலாசாரத்திலும் ஹட்சுயுகி என்னும் முதல் பனிப் பனிப்பொழிவு இணைகிறது. ஹைக்கூவின் முதல் அடி பருவகாலத்தின் முதற்பனியை மட்டும் குறிப்பிடாமல் உள்ளுறையாக ஒரு புதிய தொடக்கத்தைச் சொல்வதாகவும் பார்க்கப்படுகிறது.

பைரப்பாவின் நாவல் ‘பிளவு’ – ஒரு பார்வை

கணவன் மனைவி முரண்களில், குழந்தைகள் நிலை பரிதாபமானது. நாவலில் வரும் குழந்தைகள், தந்தையைச் சார்ந்தே இருப்பது, பொருளாதாரம் சார்ந்ததா? பாசம் சார்ந்ததா? பெண்ணுரிமையில் தாய்மை உணர்வு அற்றுப்போய்விடுமோ என நினைக்கத் தோன்றுகிறது.

ஓவர்கோட்டுக்கும் பார்டெல்பீக்கும் இடையே:  விமலாதித்த மாமல்லன் சில குறிப்புகள்

அவனிடம் ஏதோ ஒன்று நம்மை வசீகரிக்கிறது. அவன் அணிந்திருக்கும் ஓவர்கோட் மீது அவன் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை. அது அபூர்வமானது, இந்நூற்றாண்டில் அனேகமாக காலாவதியாகி விட்டதென்றே நினைக்கிறேன். அரிதாகிவிட்டதும் அதன் வசீகரத்தை அதிகரித்துக் காட்டுவதாக இருக்கலாம். தன் அவலத்தைப் பொதுமைப்படுத்த நாம் அனைவருமே குமாஸ்தாக்கள்தான் என்று அவன் கைகொட்டிச் சிரிக்கிறான். உண்மைதான், நமக்கும் ஒரு ஓவர்கோட் தேவையாக இருக்கிறது. அதை இவ்வளவு இறுக்கமாக, சருமமாகிவிடும் அளவுக்குப் பற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கைக்காகவே நாம் அக்கயவனுடன் பயணிக்கிறோம். இதுவே ஆபீஸின் வெற்றியும்கூட.

அவரவர் அடிசில்

சுவரோரம் கிடந்த சூரல் நாற்காலியில் சாய்ந்து, தெருவை மேய்ந்தவாறு அமர்ந்திருந்தார் கும்பமுனி. கால்களிரண்டும் படிப்புரையின் மூன்றடி உயர காப்புச் சுவர் மீது கிடந்தன. பாம்பணையில் துயில்கின்ற  அரங்கன் எனும் மிதப்பு மனதில்.  அரைவேட்டி முட்டுக்குக் கீழே முழு சுதந்திரத்துடன் கற்பழிக்காத கனவான்கள் கழகத்தின் கட்சிக் கொடிபோல் அசைந்து கொண்டிருந்தது “அவரவர் அடிசில்”

வினோத் குமார் சுக்லாவின் கவிதைகள்

ஒரு சுவரில் வாழ்ந்து வந்த ஒரு ஜன்னலிருந்தது.
அந்த ஜன்னலால் வாழ்ந்து வந்தது ஒரு காட்சி:
ஒரு குடில், இரு நடைபாதைகள், ஒரு நதி,
குளங்களிரண்டு.
ஒரே ஒரு வானம் அவற்றுக்கு போதுமாயிருந்தது.
மனிதர்கள் வந்து போயினர்.
மரங்களும், பறவைகளும் அங்கிருந்தன.
ஒவ்வொன்றும் ஜன்னலில் வாழ்ந்து வந்தது.

‘பாலை இறக்கலையோ… பாலகனைத் தூக்கலையோ…’

எந்த ஒரு நல்ல படைப்பினை நாம் ருசித்து அனுபவிக்கிற போதும் நம் வாழ்வின் அனுபவத்தோடு எங்கேனும் அது பொருந்திவிட்டால் நமக்கு இன்னும் மேலான ஒட்டுதலை அது தந்துவிடுவது இயல்பு. அப்படித்தான் ‘நிலம் + நீதி = கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்’ என்ற தலைப்பில் அண்ணன் ரவிசுப்பிரமணியன் இயக்கிய ஆவணப்படத்தைக் கண்டபோது, “‘பாலை இறக்கலையோ… பாலகனைத் தூக்கலையோ…’”

JANUS

இரண்டாம் பகுதியைப் படிக்க முதல் கணம், தாம் எங்கிருக்கிறோம் என்பதே அமருக்கு நினைவிற்கு வரவில்லை.  கண் விழித்துவிட்டோமோ? இது பணகுடியா…இல்லை. மடிப்பாக்கம் வீடா, இல்லை… மெல்ல புரண்டு படுத்தார். ஒற்றைப் படுக்கையறை க்ரீச் சத்தம்… எங்கோ வெகு தொலைவில், அடிவானத்தில் மங்கித்தெரியும் ஓர் மலை உச்சியில் ஒரு 0 “JANUS”

வனத்தின் மடியில் — ஓர் அழிப்பின் வாசிப்பு

ச. பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’  – புத்தக வாசிப்பனுபவம் ‘ சோளகர் ’ என்பார் தமிழக மற்றும் கர்நாடக எல்லை வனப்பகுதிகளில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவர் ஆவர். அம்மக்களின் தாய் மொழியான சோளகர் மொழியில் இச்சொல்லிற்கு “ வனத்தைச் சார்ந்தவர்கள் ” என்பது பொருள். மேலும், அம்மக்கள் “வனத்தின் மடியில் — ஓர் அழிப்பின் வாசிப்பு”

அறுந்துவிடாத நூல்

மதுரையின் வெயில் அந்திசாயும் நேரத்திலும் பிசுபிசுவென சட்டையை இழுத்தது. ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தின் இரைச்சலுக்கு நடுவே நின்றபோது, எண்பதுகளைக் கடந்த உஸ்மான் பாயின் முழங்கால் மூட்டுகள் லேசாகத் தாளம் தப்பின. ஆனாலும் நடை நின்றுவிடவில்லை. காலையில் நிலக்கோட்டையில் பார்த்த அந்த அடக்கஸ்தலத்தின் ஈரம் இன்னும் செருப்படியில் ஒட்டியிருப்பது போன்ற “அறுந்துவிடாத நூல்”