அவனிடம் ஏதோ ஒன்று நம்மை வசீகரிக்கிறது. அவன் அணிந்திருக்கும் ஓவர்கோட் மீது அவன் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை. அது அபூர்வமானது, இந்நூற்றாண்டில் அனேகமாக காலாவதியாகி விட்டதென்றே நினைக்கிறேன். அரிதாகிவிட்டதும் அதன் வசீகரத்தை அதிகரித்துக் காட்டுவதாக இருக்கலாம். தன் அவலத்தைப் பொதுமைப்படுத்த நாம் அனைவருமே குமாஸ்தாக்கள்தான் என்று அவன் கைகொட்டிச் சிரிக்கிறான். உண்மைதான், நமக்கும் ஒரு ஓவர்கோட் தேவையாக இருக்கிறது. அதை இவ்வளவு இறுக்கமாக, சருமமாகிவிடும் அளவுக்குப் பற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கைக்காகவே நாம் அக்கயவனுடன் பயணிக்கிறோம். இதுவே ஆபீஸின் வெற்றியும்கூட.
Category: இதழ்
அவரவர் அடிசில்
சுவரோரம் கிடந்த சூரல் நாற்காலியில் சாய்ந்து, தெருவை மேய்ந்தவாறு அமர்ந்திருந்தார் கும்பமுனி. கால்களிரண்டும் படிப்புரையின் மூன்றடி உயர காப்புச் சுவர் மீது கிடந்தன. பாம்பணையில் துயில்கின்ற அரங்கன் எனும் மிதப்பு மனதில். அரைவேட்டி முட்டுக்குக் கீழே முழு சுதந்திரத்துடன் கற்பழிக்காத கனவான்கள் கழகத்தின் கட்சிக் கொடிபோல் அசைந்து கொண்டிருந்தது “அவரவர் அடிசில்”
வினோத் குமார் சுக்லாவின் கவிதைகள்
ஒரு சுவரில் வாழ்ந்து வந்த ஒரு ஜன்னலிருந்தது.
அந்த ஜன்னலால் வாழ்ந்து வந்தது ஒரு காட்சி:
ஒரு குடில், இரு நடைபாதைகள், ஒரு நதி,
குளங்களிரண்டு.
ஒரே ஒரு வானம் அவற்றுக்கு போதுமாயிருந்தது.
மனிதர்கள் வந்து போயினர்.
மரங்களும், பறவைகளும் அங்கிருந்தன.
ஒவ்வொன்றும் ஜன்னலில் வாழ்ந்து வந்தது.
‘பாலை இறக்கலையோ… பாலகனைத் தூக்கலையோ…’
எந்த ஒரு நல்ல படைப்பினை நாம் ருசித்து அனுபவிக்கிற போதும் நம் வாழ்வின் அனுபவத்தோடு எங்கேனும் அது பொருந்திவிட்டால் நமக்கு இன்னும் மேலான ஒட்டுதலை அது தந்துவிடுவது இயல்பு. அப்படித்தான் ‘நிலம் + நீதி = கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்’ என்ற தலைப்பில் அண்ணன் ரவிசுப்பிரமணியன் இயக்கிய ஆவணப்படத்தைக் கண்டபோது, “‘பாலை இறக்கலையோ… பாலகனைத் தூக்கலையோ…’”
JANUS
முதல் கணம், தாம் எங்கிருக்கிறோம் என்பதே அமருக்கு நினைவிற்கு வரவில்லை. கண் விழித்துவிட்டோமோ? இது பணகுடியா…இல்லை. மடிப்பாக்கம் வீடா, இல்லை… மெல்ல புரண்டு படுத்தார். ஒற்றைப் படுக்கையறை க்ரீச் சத்தம்… எங்கோ வெகு தொலைவில், அடிவானத்தில் மங்கித்தெரியும் ஓர் மலை உச்சியில் ஒரு 0 வாட்ஸ் பல்ப் ஒளிப்புள்ளி “JANUS”
வனத்தின் மடியில் — ஓர் அழிப்பின் வாசிப்பு
ச. பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ – புத்தக வாசிப்பனுபவம் ‘ சோளகர் ’ என்பார் தமிழக மற்றும் கர்நாடக எல்லை வனப்பகுதிகளில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவர் ஆவர். அம்மக்களின் தாய் மொழியான சோளகர் மொழியில் இச்சொல்லிற்கு “ வனத்தைச் சார்ந்தவர்கள் ” என்பது பொருள். மேலும், அம்மக்கள் “வனத்தின் மடியில் — ஓர் அழிப்பின் வாசிப்பு”
அறுந்துவிடாத நூல்
மதுரையின் வெயில் அந்திசாயும் நேரத்திலும் பிசுபிசுவென சட்டையை இழுத்தது. ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தின் இரைச்சலுக்கு நடுவே நின்றபோது, எண்பதுகளைக் கடந்த உஸ்மான் பாயின் முழங்கால் மூட்டுகள் லேசாகத் தாளம் தப்பின. ஆனாலும் நடை நின்றுவிடவில்லை. காலையில் நிலக்கோட்டையில் பார்த்த அந்த அடக்கஸ்தலத்தின் ஈரம் இன்னும் செருப்படியில் ஒட்டியிருப்பது போன்ற “அறுந்துவிடாத நூல்”
கர்மத்தின் வகையறிதல்
எனவே கிருஷ்ணரின் கூற்றுப்படி இருப்பது இரண்டே இரண்டு யோகங்கள்தாம். கர்மயோகம், மற்றும் ஞானயோகம். விளக்குவதற்கு வசதிக்காகவும், ஒரு குறிப்பிட்ட யோகம் எம்முறையில் பயிலப்படுகின்றது என்பதைப் பொறுத்தும் அவற்றுக்கு வெவ்வேறு பெயர்கள் கொடுப்பது வழக்கத்தில் இருந்து வருகின்றது. எனவேதான் ராஜயோகம், பக்தியோகம், உபாசனாயோகம் என்ற பிரிவுகளும் பேசப்படுகின்றன. ஆனால் சிந்தித்துப் பார்த்தால் மேற்கூறப்பட்ட மூன்று யோகங்களையும் கர்மயோகம் என்ற பிரிவுக்குள் அடக்கி விடலாம்.
றெக்கை – அத்தியாயம் 18
பேரிளம்பெண் நிர்மலாவையும் முத்தச்சியையும் கையெடுத்து வணங்கி, அக்கச்சி, முத்தச்சி ரெண்டு வியக்திகளும் என்னை காப்பாற்றணும்..என்று சொல்லியபோது சிறுமி றெக்கை விரித்தபடி நாலடி பறந்து தெருமுனைக்கு போக, தெருநாய்கள் பலமாக திட்டி அவளை கார் பக்கம் விரட்டின. அடுத்த வினாடி வெண்சிறகு மறைந்துபட அவளோர் ஓநாயாகி பற்களை வெளியே நீட்டி பக்கத்தில் குரைத்தபடி இருந்த தெருநெய் ஒன்றை கழுத்தில் கடித்து தட்சணம் உயிருண்டோ என்று அங்கே இருந்த மனுஷர்களும், நாய்களும் – பேரிளம்சிறகுப் பெண் தவிர – வியப்பும் பயமுமாக உறைந்து போக வைத்தன.
இந்தியத் தாவரவியலின் முன்னோடிகள் – அச்சுதனும் ரீடியும்
கொச்சியிலிருந்த பிரம்மாண்டமான அந்த டச்சுக்கோட்டை முழுக்க உப்புக் காற்றின் ஈரம் நிறைந்திருந்தது. கொச்சி ஆளுனரான வான் ரீடி மிகுந்த மனவருத்தத்துடன் ஒரு சாளரத்தின் அருகே அமர்ந்து வெளியே விரிந்திருந்த அரபிக்கடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அது 1674-ம் ஆண்டு. ஐரோப்பிய இறைப்பணியாளர் மேத்யூவின் உதவியுடன் மலபார் பகுதியின் தாவரங்களை ஆவணப்படுத்தும் “இந்தியத் தாவரவியலின் முன்னோடிகள் – அச்சுதனும் ரீடியும்”
தலைப்புச் செய்திகள்
பயங்கரமான கனவிலிருந்து திடுக்கிட்டு எழுவது போல்தான் இருந்தது, மொபைலில் படித்த செய்தி. சுந்தரேசன் இறந்து போய்விட்டான். மரியாதையுடன் சொல்லணும் இல்லையா? ‘…காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.’ வாட்சப் செய்தி. போன மாதம் வரை அவனது வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டிருந்தவன் இப்போ போயிட்டான். உடனே சுந்தரேசனின் மொபைலுக்கே போன் “தலைப்புச் செய்திகள்”
தோல்விகளைக் கடந்து எழுந்த தேசம்
அமெரிக்காவின் உணர்ச்சி நிறைந்த வரலாறு ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள அந்த நாட்டில் வாழ்ந்த அனுபவம் மட்டுமில்லாமல் அதன் வரலாறு, அங்கு நடக்கும் அரசியல், பொது நிகழ்வுகள், வாழ்க்கை முறை, மக்கள் என்று அனைத்தையும் வாசித்தும், கண்டும், கேட்டும் உணர்ந்துகொள்ள வேண்டும். என் குடும்பத்துடன் அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்து கிட்டத்தட்ட கால் “தோல்விகளைக் கடந்து எழுந்த தேசம்”
கேள்வி-பதில்
நான் கண்விழித்தபோது, விண்களனிற்குள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தேன். விண்களன் எந்த வித அசைவுமின்றி நிற்பது போல் இருந்தாலும் அது வேகமாக வெற்றிடத்தின் ஆழத்திற்குள் சீறிப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது. குறுகிய ஜன்னல் வழியே பார்த்தேன். அகண்ட கருமை நிற பிரபஞ்சத்தில் விண்வெளியின் எந்தப் பகுதி அது என்பதை என்னால் “கேள்வி-பதில்”
காப்பீட்டின் பிறப்பிடம்: ஐரோப்பா
ஒரு அரசியல்வாதியின் கணக்கும், ஒரு கனவாளியின் போராட்டமும் சுகாதாரக் கொள்கைகளில் முக்கியமானது காப்பீடு. வாகனங்கள், வீடு எல்லாவற்றுக்குமே காப்பீடு உண்டு. அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மிக குறைந்த அளவில் காப்பீடு இல்லாவிட்டால், ஒருவர் வாகனமே வாங்கக் கூட இயலாது. வீட்டுக்கான காப்பீடு தீ, வெள்ளம் போன்றவற்றால் நஷ்டமடையும் “காப்பீட்டின் பிறப்பிடம்: ஐரோப்பா”
மதியம்
மதிய நேரக் குட்டித் தூக்கத்திலிருந்து, அம்மா ஓர் உந்துதல் உணர்வோடு கண் விழித்த போது, ஜன்னலினருகே கிடந்த அழுக்கான, கசங்கிப் போயிருந்த ஒரு துண்டுச் சீட்டைப் பார்த்தாள். மதியச் சூரியனின் புழுதி படர்ந்த காற்றின் வேகத்தில் ஒரு கடிதம் துருப்பிடித்த ஜன்னல் கம்பிகளினூடே உள்ளே வந்து விழுந்திருந்தது. ஹரிதாசன் வீட்டிற்கு வருகிறான். அந்தச் சீட்டின் “மதியம்”
சிவப்பில் ஒளிரும் மண்ணின் நினைவும் மனதின் மொழியும்
சிவப்பு என்பது வெறும் நிறமல்ல; அது கற்கால மனிதன் தன் உள்ளுக்குள் புதைந்திருந்த உணர்வுகளை ஒளியின் மூலம் வெளியில் கொண்டு வந்ததற்கான முதல் சாட்சி. நிறங்களில் சிவப்பு மட்டும் கண்ணில் விழும் முன்பே இதயத்தில் பதிந்துவிடும். அதனால்தான் என்னவோ மனித வரலாற்றின் அனைத்து காலங்களிலும் ரத்தத்தின் சுமை, “சிவப்பில் ஒளிரும் மண்ணின் நினைவும் மனதின் மொழியும்”
பெதும்பை
அத்துவானக் காட்டைப் போல் நீண்டு பரந்து விரிந்திருந்தது வயல். சுஜித்தாவும் தாயார் தெய்வானையும் நடு வயலிற்குள் நின்று களை பிடுங்கிக்கொண்டு நிற்கின்றார்கள். அவர்களைப் போலவே வேறு சிலரும், அங்கே தலை தெரியும் தூரத்தில் நின்று வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். வயல் அவர்களுடையது அல்ல. வறுமை அவர்களை அங்கே கொண்டுவந்து “பெதும்பை”
துளிம வெளியும் சார்பான காலமும்
இதுவரை என்னைப் பின்தொடர்ந்திருந்தாலே, அடிப்படை இயற்பியலின் வழி உலகின் தற்போதைய காட்சியை அறிவதற்கான அனைத்து விஷயங்களையும் – அதன் வலிமை, பலவீனம், எல்லைகள் உட்பட – தெரிந்து கொண்டிருப்பீர்கள். 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வளைந்த காலவெளி, எப்படி என்று தெரியாமலே தொடர்ந்து விரிவடைந்து கொண்டிருக்கிறது. வெளி “துளிம வெளியும் சார்பான காலமும்”
தில தானம்
தெலுங்கில்: மணி வட்லமானி మణి వడ్లమాని (Mani Vadallamani) தமிழில்: ராஜி ரகுநாதன் இரண்டு நாட்களாக ஜுரம் விட்டு விட்டு அடிக்கிறது. ஏதோ மாத்திரைகள் போட்டுக் கொண்டாலும் பெரிதாகப் பலன் தெரியவில்லை. “வரிசையாக மூன்று நாட்கள் வேலை இருக்கும். வேறு எங்கும் வேலை ஒப்புக்கொள்ள வேண்டாம்” என்று “தில தானம்”
பிள்ளையின்மை
குழந்தையற்றவள்பொம்மை விற்கிறாள்விதி கவிஞர்: ரென்செண்ட்சு (1654 – 1707) உமஸுமெனொஹினாகஷிட்சுகுசொஅவரெனரு 石女の雛かしづくぞ哀れなる கிரிகோரியன் நாட்காட்டியின்படி ஒரு மார்ச் 3ம் தேதி, பழைய ஜப்பானிய நாட்காட்டியின்படி மூன்றாம் மாதத்தின் மூன்றாம் தேதி பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அதே நாள் ஹினா மட்சுரி என்னும் பெயரில் பொம்மைகள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. “பிள்ளையின்மை”
நாய்வால்
என் வீட்டுப் பின்பக்கம் ஒரு காலி மனை இருந்தது.அதனை விலைக்கு வாங்க முடியுமா என்ன, அது எல்லாம் இப்போதைக்குச் சாத்தியமே இல்லை. நான் மாதச்சம்பளம் வாங்கி நாட்களை ஓட்டும் நடுத்தரக் குடும்பத்துக்காரன். அதற்குத்தான் பிராப்தம் இல்லை விடுங்கள் அந்த மனையை விலைக்கு வாங்கி வீடு கட்டிக்கொண்டு வரும் “நாய்வால்”
உடைந்த காலவரிசைகளும் நம்பகமற்ற சுயமும் (2)
இரு இயக்குநர்களும் பகுத்தறிவுக்கும் (Rationality) அதன் தோல்விகளுக்கும் இடையிலான உறவில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டுள்ளனர். தர்க்கம் மற்றும் கட்டுப்பாட்டை நோக்கிய அதீத முனைப்பு எவ்வாறு அபத்தமான அல்லது விபரீதமான விளைவுகளைத் தருகிறது என்பதை இவர்கள் ஆராய்கின்றனர். குப்ரிக்கின் 2001 படத்தில், HAL 9000 கணினி, மனிதர்களைக் காப்பதை விடத் தனது ‘பணிக்கு’ (Mission) முன்னுரிமை அளிப்பதன் மூலம், ஒரு உறைந்த பகுத்தறிவு மனித உயிர்களைப் பறிக்கத் துணிவதைக் காட்டுகிறார்.
கூடடைதல்
புழுக்கம் மிகுதியாக இருந்ததால் அப்பா அன்று சட்டை அணிந்திருக்கவில்லை. திண்ணை விளிம்பில் மடித்துவைக்கப்பட்டிருந்த தினசரி அருகே உள்ளங்கையளவு ரேடியோவில் இருந்து சன்னமான இசை கேட்டுக்கொண்டிருந்தது. அவருடன் அமர்ந்திருந்த அம்மா வெந்த பனங்கிழங்கை சிறு சிறுத் துண்டுகளாக நொடித்து அவர் கையில் வைத்துக்கொண்டிருந்தாள். மெனோபாஸை நெருங்கிக்கொண்டிருந்த அவளது வலதுமூட்டில் நிரந்தமான “கூடடைதல்”
தானே ஒளிர்வது தன்னில் ஒளிர்வது
புறவயமாக நமக்குத் தென்படும் உலகம் என்று ஒன்று இருக்கிறது அகமுகமாக நம்முள் ஒரு இயக்கம் இருக்கிறது. செயல்படு கருவிகளும், உணர்தல் தன்மை உள்ள கருவிகளும் மனிதனிடத்தே இருக்கின்றன. அக்கருவிகளும் கூட கண்கள் அறியாத ஒரு செயலை அல்லது செயல்களை நம் உள்ளே நடத்துகின்றன. முன்னொரு காலத்தில் அறிதல் என்பது “தானே ஒளிர்வது தன்னில் ஒளிர்வது”
ஒற்றைக் கண் பறவையின் வானம்
ஐம்பொன் விக்கிரகம் தீர்த்தமாடும்
சமுத்திரம்
ஒவ்வொரு காலடியாக எடுத்து வைத்து
குழந்தையைப்போல மணல் பரப்பில்
தவழ்ந்து விளையாடி,
உப்பு நீரில் பாதம் எடுத்து வைக்கையில்;
சமுத்திரத்தை ஒழித்த நிலவின் வெளிச்சத்தில்;
புத்தனின் கருப்புப் பௌர்ணமி (குறுங்காவியம்)
இன்னமும் அணையவில்லை
யாழ் நூலகம் எரிந்த பெருநெருப்பு
இன்னமும் கருகிக்கொண்டிருக்கிறது
அறிவின் வேர்களைப் பொசுக்கிய வாடை
பசிபிக் பெருங்கடலிலும் கேட்கிறது
குமுதினிப் படகில் வெட்டிச் சாய்க்கப்பட்டவர்களின்
குடல் சரிந்த மரண ஓலம்
காஞ்சி பூசூடா உமையாள் படலம்
யாருக்கு கற்றுத்தருவது என்று காத்திருந்தாற் போல சொன்னாள். “நிரம்ப செய்யலாம்பா, மொளகா இருக்குல, அது, கொஞ்சூண்டு எண்ணெய், சின்னவெங்காயம் நிறைய, உப்பு, புளித்தண்ணி, பெருங்காயம் இதெல்லாம் போட்டு வதக்குனினா தொட்டு திங்க நாக்கு மெச்சுக்கொட்டும், கீரைய பொரிச்சுவைக்காம பருப்பு கொத்தமல்லி புதினா போட்டு கடஞ்சு வைய், தோசைக்கு மாத்தா ஆப்பஞ்செய்.”
பேட்டை நாவல் காலத்தின் ஆவணம்
1639-இல் ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டையை நிறுவுவதற்கு முன்பு, சோழமண்டலக் கடற்கரையோரம் மீன்பிடித் தொழிலையும் வேளாண்மையையும் வாழ்வாதாரமாகக் கொண்ட தமிழ் சமூகங்கள் வாழ்ந்து வந்தன. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, எழும்பூர், நுங்கம்பாக்கம் மற்றும் புரசவாக்கம் போன்ற கிராமங்கள் கடலோர வணிகப் பாதைகள், கோயில் வலைப்பின்னல்கள் மற்றும் விவசாய நிலப்பரப்புகளுடன் இணைக்கப்பட்ட சிறிய குடியிருப்புகளாக இருந்தன. இவர்களின் உலகம் கடல், பருவமழை என்றுதான் பிணைக்கப்பட்டிருந்தது.
மஜ்ரேஹா
என் மனைவி ஊருக்குப் போயிருந்த ஒரு நாளில் நண்பர் ஷியாம் படம் பார்க்க ‘வன்கோல்பேஸ்’ வருமாறு அழைத்திருந்தார். அவர் வரும்வரை அங்கிருந்த கடைகளை நோட்டம் விட்டவாறு நடந்து திரிந்துகொண்டிருந்த போதுதான் பீப்பி என்னைக் கண்டிருக்க வேண்டும். அவளும் அவளது பிள்ளைகளுடன் குடும்பமாக கொழும்புக்கு விடுமுறைக்காக வந்திருந்தார்கள்.
இந்தியக் (காலனிய) ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறையும் தொடரும் மனநலப் பிரச்சினைகளும்
வறுமையின் கோரப்பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள இத்தகைய இடப்பெயர்வு நடைபெற்றாலும் பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி இடைத்தரகர்களின் மூளைச் சலவையால் இவர்கள் வெகுவாக ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தாங்கள் மிகச் செல்வச் செழிப்பான நாட்டிற்குச் செல்ல இருப்பதாகவும், மிக அதிக சம்பளத்தை வருமானமாக ஈட்டப் போவதாகவும் நம்ப வைக்கப்பட்டார்கள். Girmit.org என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலார்களின் முதல் நிலை தரவுகள் இதனை உறுதிசெய்கின்றன
பிறந்தநாள் பரிசு
காசு, நிலம், வீடு இல்லாதவனுக்கு அம்மாவை கட்டிக்கொடுக்க மாமாக்கள் விரும்பவில்லை. அதனால் அம்மாவுக்காக அப்பாவை எதிர்க்க மாமாக்கள் முற்பட்டார்களாம். அப்பா, அம்மா வீட்டுக்குச் சென்று அம்மாவை அழைத்தார். மாமாக்கள் அதைப் பார்த்து அப்பாவை அடிக்க ஓடி வர, அப்பா சிரித்துக்கொண்டே, ‘சண்டை வேண்டாம். உங்கள் தங்கச்சி வந்து ‘’போ’’ என்று சொன்னால் நான் போய்விடுகிறேன்’ என்று சொன்னாராம்.
உடைந்த காலவரிசைகளும் நம்பகமற்ற சுயமும்
நோலனின் திரைமொழியில் மிகவும் வியக்கத்தக்க அம்சம் அதன் வழக்கத்திற்கு மாறான கட்டமைப்பாகும். ஃபாலோவிங் (1998) தொடங்கி, நோலன் கதையாடல் விவரிப்பைத் துண்டாடும் ஒரு தனித்துவமான நடைமுறையை (Practice of narrative fragmentation) நிறுவினார். இது மரபார்ந்த ஹாலிவுட் கதைசொல்லல் முறைக்கு நேரெதிரானது. கிளாசிக்கல் கதையாடல் என்பது, போர்ட்வெல் விளக்குவது போல, காரண-காரியத் தொடர்புகளால் பிணைக்கப்பட்ட, ஒரு இலக்கை நோக்கி நேர்க்கோட்டில் நகரும் நிகழ்வுகளின் சங்கிலித் தொடர். நோலன் இந்தத் தர்க்கத்தை முறையாகச் சிதைக்கிறார்.
சின்னா தேவி
“உன்னுடைய வேதனையும் கவலையும் எங்களுக்குத் தெரியும் கிருஷ்ணா. இன்னும் கொஞ்ச நாள்தான். நீ துளுவ வம்சத்தில் பிறந்தவனாக இருந்தாலும் ஆந்திர சாம்ராஜியத்தை நிலைநிறுத்தப் போவது நீ ஒருவன்தான். இது உண்மை. வித்யாரண்ய சுவாமி மகா விஷ்ணுவின் அம்சம். அவருடைய வாக்கு பொய்க்காது, மகனே. உன்னைப் பெற்ற தாயார் நன்றாக இருக்கட்டும். நாகமாம்பாவின் ஆசியோடு தென்னாட்டுக்கு ஏக சக்ராதிபதியாக நீ மகுடம் சூடும் நாள் விரைவில் வரப் போகிறது. இந்த பூமித்தாய் அதற்காகக் காத்திருக்கிறாள். அந்த நொடிக்காகவே இந்தக் காத்திருப்பு” என்றார்.
புதைகுழி மேல் நின்ற வாழ்க்கை
போரின் இரு பக்கங்களிலும் சாதாரண மனிதர்கள் சிக்கிக்கொள்கிறார்கள் என்பதை இந்தச் சம்பவம் மிக எளிமையாகவும் ஆழமாகவும் வெளிப்படுத்துகிறது. ஒரு பக்கம் தமிழர்கள் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்; மறுபக்கம் சிங்கள இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமில்லாத ஒரு போரில் சிக்கிக்கொண்டு அதிலிருந்து தப்பிச் செல்ல முயல்கிறார்கள். இந்தச் சந்திப்பு போரின் அரசியல் எல்லைகளைத் தாண்டி மனித துயரத்தின் பொதுவான தன்மையை வெளிப்படுத்துகிறது.
தேனம்மை
கல்யாணப்படம் எதிர் சுவற்றில் தொங்கியது. ‘அக்கா மஞ்சள் நிறம்..அத்தான் மாநிறமானாலும் அழகு. கண்கள் ஈர்ப்புடையது. நின்று நேருக்கு நேர் பார்க்கமுடியாது. இவனுடைய அப்பாவின் இறப்பிற்கு பின் அங்குதான் அண்ணனோடு சேர்த்து இவன் ஜாகையும்.பயமும் மரியாதையும் கலந்த உறவு. நேருக்குநேர் பார்த்துப் பேசியதில்லை’.
ரோஸலிண்ட் ஃப்ராங்க்ளின்- போட்டோ 51
ரோஸலிண்ட் DNA வை வெறும் புகைப்படம் மட்டும் எடுக்கவில்லை, அந்தப் புகைப்படங்களில் உள்ள புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தை மிக நுணுக்கமாகக் கணக்கிட்டார். ஒரு சுருளின் நீளம் எவ்வளவு? இரண்டு இழைகளுக்கும் இடைப்பட்ட தூரம் என்ன? பாஸ்பேட் மூலக்கூறுகள் எங்கே அமைந்துள்ளன? இவை அனைத்தையும் அவர் கணித ரீதியாகத் தனது குறிப்பேடுகளில் பதிவு செய்திருந்தார்.
நரனா? நாராயணனா?
அவன் சொன்ன விஷயம், அதைச் சொன்ன விதம், அதுவும் என் கண்களை நேராகப் பார்த்தபடி அவன் சொன்னது, எனக்கு என்னவோ மாதிரி இருந்தது. என் இதயம் துடிப்பதைக் கூட ஒரு நொடி மறந்திருந்தது. வெட்கத்தால் என் முகம் சிவந்ததை மறைப்பதற்காகத் தலைகுனிந்தேன். இதை அவனே எழுதினானா, இல்லையென்றால் யாராவது உதவினார்களா என்று யோசித்தேன்.
என் பெயர் பூனா (Buna)!
இன்றைக்குக் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக அதிகம் வர்த்தகம் செய்யப்படும் பொருள் நான்தான். அராபிகா, ரொபஸ்டா என்று இரண்டு வகையில் என்னைப் பயிரிடுகிறார்கள். இந்த இரண்டு வகைகளையும் கலந்து காபி தயாரிப்பவர்களும் உண்டு. இவை இரண்டுதான் முக்கியமான வகைகள் என்றாலும் நான் நூற்றுக்கணக்கான வகைகளில் பயிரிடப்படுகிறேன்.
வாட்ஸாப்ப் தாத்தா
குழந்தை எங்கே போய் இருப்பாள்? அந்த கோவில் வளாகம் பெரியது. கேட்டு வழியே குழந்தை போகவில்லை என்று செக்யூரிட்டி ஆள் சத்தியமே செய்தான். நுழைவு வாயில் பக்கம் அமர்ந்து இருக்கும் பூக்காரி கூட குழந்தையைப் பார்க்கவில்லை என்றாள். நாகராஜனுக்கு சற்றே நிம்மதியாக இருந்தாலும் வயிற்றைக்கலக்கியது. லலிதாவிடமும் ப்ரகாஷிடமும் எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு குழந்தை இல்லாமல் நிற்பார்? யாரேனும் குழந்தையைக்கடத்தி இருந்தால்? நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.
காளான்கள் சித்தரிக்கும் நவீன உலகம்
காளான் (mushroom) உயிரினங்களின் வித்தியாசமான உலகத்தை பிரதிபலிக்கும் ஒரு சுவாரஸ்யமான வாழ்க்கைச்சுழலைக் கொண்டுள்ளது. காளானின் முதன்மையான உயிரியல் அமைப்பு மைசீலியம் என்கிற நுண்ணிய ஊசிகளால் (hyphae) ஆன வலையாகும், தரையிலும், மரச்சரிவிலும், மற்றும் உயிரியல் பொருள்களில் உள்ள வெற்றிடங்களில் பரவுகிறது. காளானின் உணவு உறிஞ்சுதல், வளர்ச்சி ஆகியவை மைசீலியம் மூலம் நடைபெறுகிறது.
றெக்கை – அத்தியாயம் 17
நிறைசூலியான ஒரு பேரிளம்பெண் கம்புக்கூட்டுக்கு கீழே தூவெண் சிறகுகள் பறப்பித்து உந்தி எழ கடுமையான பிரயத்னம் செய்து கொண்டிருந்தாள். அவள் அருகே ஆறு வயது காணும் ஓரு சிறுமி இவள் பறக்க றெக்கை விரிக்க தன்னால் ஆன எல்லாம் செய்து கொண்டிருந்தாள்.
தென்னை மரத்தில்…
மார்ச் 2026ல், இந்தியாவும், ஐக்கிய அமீரகமும் இதன் தொழில் நுட்ப சாத்தியங்களையும், அதற்குத் தேவையான நிதிகளையும் பற்றிய தீவிரமான கட்டுரைகளை விவாதித்து ஒரு வடிவத்திற்கு கொண்டு வந்துள்ளன. சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்தியா பகல் நேரத்தில் சூர்ய சக்தியை ஐக்கிய அமீரகத்திற்கு அனுப்பும்; அந்திப் போதில், சூரியன் இந்தியாவில் மறையும் நேரத்தில், சூரியன் மேற்கிலிருப்பதால் ஐக்கிய அமீரகம் சக்தியை அனுப்பும். 2025ல் சவுதி அரேபியாவும் இந்தத் திட்டத்தில் இணைந்து கொண்டுள்ளது. அது இந்த ‘ஆற்றல் பெட்டகத்தை’ யூரோப் வரை எடுத்துச் செல்ல உதவும்.
படுக்கை வரையில் பனி
அறைக்குள் போர்வையில் பனி பொழிந்திருப்பது கூரையின் வழியாகவும் இருக்கலாம் எனக் காட்சியமைப்பு விரிவதை நுட்பமாக மூன்றாம் அடியின் திருப்பம் தடுக்கிறது. மேலிருந்து கீழே பனி வீழ்வதைச் சொல்லாமல், புனிதபூமியிலிருந்து எனச் சொல்லி பௌத்த மடாலயம் இருக்கும் புனிதபூமியின் திசையிலிருந்து வீசுகின்ற காற்று பனித்துகளை அறைக்குள் நிறைப்பதைச் சொல்கிறது.
எழுதாக்கிளவியும், ஏனைய நூற்களும்
முழு வேத இலக்கியத்தையும் ஆறு அடுக்குகளாக அல்லது தொகுப்புகளாகப் பிரித்து விடலாம். முதலாவதும் மிக முக்கியமானதுமானவை வேதங்கள் ஆகும். வேதம் என்ற சொல்லே அறிவின் மூலத்தைக் குறிக்கிறது. ‘வித்’ என்ற மூலச்சொல்லுக்கு அறிதல் என்று பொருள். வேதங்கள் சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மந்திரங்களைக் கொண்டுள்ள மிக விரிவான இலக்கியம். முழு வேத இலக்கியமும் ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ரிக் வேதம், செய்யுள் அல்லது கவிதை அல்லது “பத்ய” வடிவில் உள்ள ரிக் மந்திரங்களைக் கொண்டுள்ளது. யஜுர் வேதம், உரைநடை வடிவில், அதாவது “கத்ய” வடிவில் உள்ள யஜுர் மந்திரங்களைக் கொண்டுள்ளது.
கர்ணனும் குந்தியும்
தங்களது குரல் என்னைப் புராதனமான, உலகின் குழந்தைப்பருவத்தைத் தொலைத்த, அந்திக்கருக்கல் போலும் பிரக்ஞைக்குள் நடத்திச் செல்கிறது. எப்படியானாலும், இது கனவாக இருந்தாலும், அல்லது மறந்துபோன நிஜத்தின் துண்டாக இருப்பினும், என்னருகே வந்து உங்கள் வலதுகரத்தை எனது நெற்றிமீது வையுங்கள். என் தாய் என்னை நிராகரித்து விட்டாள் எனும் வதந்திகள் உலவுகின்றன. பல இரவுகளில் அவள் எனது உறக்கத்தில் வந்திருக்கிறாள்; ஆனால் நான், “உனது முக்காட்டை எடுத்து உன் முகத்தைக் காட்டு,” என்று அழுதபோது, அவள் உருவம் மறைந்துவிடும்.
மெக்கானிக் கதைகள்
சிறிய எளிய கதைகள், எளிமை இக்கதைகளில் வலிமை எனலாம். நேரடியாக வாசகருடன் உரையாடும் இக்கதைகளை நாம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. தன் கதைகள் மேலிருக்கும் அளவிலாத பற்று ஒவ்வொரு கதைகளிலும் மிளிர்க்கிறது. தன் சொந்த அனுபவத்தின் சாயல்களும் நெருக்கமான ஒன்றின் அமைதியும் கதைகளில் பிரதிபலிக்கின்றன. கூடவே இக்கதைகளை சொல்லியே தீரவேண்டும் என்கிற ஆசிரியரின் வேட்கையும் வெளிப்படுகிறது.
விழுது தேடிய வேர்
எப்போதும் மடிப்பு கலையாத, தங்கப் பொத்தான்கள் மின்னும் அந்த வெள்ளை ஜிப்பா இன்று இல்லை. அதற்குப் பதிலாக மார்பு வரை போர்த்தப்பட்டிருந்த வெண் பட்டு வேஷ்டி , அந்தத் தேகத்தின் கம்பீரத்தை மறைத்திருந்தது. காதுகளில் எப்போதும் மின்னும் அந்தக் கடுக்கன்கள் கழற்றப்பட்டு, வெறும் துவாரங்கள் மட்டுமே எஞ்சி நின்றன.
சாளுக்கிய தேசத்தில்…
கன்னட அரசன் சிக்க தேவராஜன். இவனும் நரசிம்மனைப்போல புதிய நீர்தேக்கங்களை ஏற்படுத்தி தமிழ்நாட்டுக்கு நீர் கிடைக்காமல் செய்தான். அப்போது தஞ்சையை ஆண்டுகொண்டிருந்த சரபோஜியும் மதுரையை ஆண்டுகொண்டிருந்த ராணி மங்கம்மாளும் அந்த நீர்தேக்கங்களை உடைக்க கூட்டாகப் படையை அனுப்பிவைத்தனர். ஆனால் படை அங்கு போய்ச்சேருவதற்கு முன்னாலேயே பெருவெள்ளம் ஏற்பட்டு நீர்த்தேக்கங்கள் தாமாகவே உடைந்துபோயின.
எதிர்மறை சோதனை வழக்கு
ஒரு கிரகத்தால் உருவாக்கப்படும் உயிர், மற்றொரு கிரகத்தால் உருவாக்கப்படும் உயிராவது எதைக் குறிக்கிறது? ஒரு கிரகம், தன் சாத்தியங்களுக்குள் ஒரு உயிரை உருவாக்க எத்தனை காலமெடுத்துக்கொள்கிறது? அந்தத் தயாரிப்பை, அந்த முனைப்பை, அதில் செலுத்தப்படும் உழைப்பை ஒரு தழுவு கருவி ஒரு நொடியில் கடப்பது என்பது எதைக்குறிக்கிறது? இதன் பொருள் என்ன?
காலமும் வெளியும் கடந்து – ஐன்ஸ்டைனைச் சந்திக்கும் பிக்காஸோ
1905-ஆம் ஆண்டு ஐன்ஸ்டைனின் பேரற்புத ஆண்டு (Annus mirabilis) என்று போற்றப்படுகிறது. அந்த வருடத்தில் மார்ச்சு மாதம் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு ஒரு ஆய்வுக் கட்டுரையாக நான்கு கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். முதலாவது கட்டுரை ஒளிமின் விளைவை (photoelectric effect) விளக்கியது. இது ஒளியன் (photon) என்ற அடிப்படைக் கருத்துருவாக்கத்திற்கு வித்திட்டது. இது அவருக்கு நோபெல் பரிசைப் பெற்றுத்தந்தது. இரண்டாவது கட்டுரை அணுக்களின் ஓய்வில்லாத அலைச்சலான ப்ரொனியன் இயக்கத்தை (Brownian motion) விளக்கியது. இது அணுக்களின் இருப்பைக் கருத்தியல் ரீதியாக உறுதி செய்தது.
