பாகம் 1 1. ஹாலோ-மென் எலியட்டின் சர்வதேசப் புகழும் The Waste Land கவிதையும் ஒன்றி இருப்பதால் “வாழ்க்கை குறித்த ஓர் தனிப்பட்ட முக்கியமற்ற பிலாக்கணத்திற்கான வடிகால்… வெறும் சந்தநயமான முணுமுணுப்பு” என்று அவர் அப்பெருங்கவிதையைப் பற்றிய பின்னோக்கிய மதிப்பீட்டொன்றில் கூறியது பலருக்கும் ஆச்சரியமளிக்கலாம். நவம்பர் 1922-லேயே அவர் “வைக்கோல் மாந்தர்களும் பேசா பிராட்டிகளும்: பாழ்நிலத்துக்குப் பிந்தைய கவிதைகள்”
Category: புத்தகவிமர்சனம்
”காலாழ் களரில்” – புத்தக மதிப்புரை
சிறுகதைகள் அளவிற் சிறியவை, முக்கிய கதை மாந்தர்களாக ஒன்றிரண்டுபேர் இடம்பெற்றிருப்பார்கள். களமும் பொழுதும் குறுகிய பரப்பிற்குள் அடங்கியவை, உண்மையில் அவை மனித உயிர்வாழ்க்கையின் காட்சித் துணுக்குகள், அடிக்கோடிட்டு சொல்லப்படுபவை. ஒருதேர்ந்த சிறுகதையாளர், தன்வாழ்க்கையில் தான்சார்ந்த சமூக நிகழ்வை, தனது படைப்பென்கிற புகைப்படக் கருவியில் ‘கிளிக்’ செய்கிறார். கலைஞரின் கலைத்துவ ஞானம், புகைப்படக் கருவியின் செயல்திறனுடன் இணைந்து எது சிறந்ததோ, எது முக்கியத்துவம் வாய்ந்ததோ, எது பின்னாட்களில் நினைவூகூரப்பட்டு மனதிற்கு ஆறுதல், மகிழ்ச்சி, சுகம், தரவல்லதோ அதை தன் கருவியில் பதிவு செய்து வாழ்க்கையின் ஈரத்தை, வறட்சியை, தென்றலை, புயலை, வெறுமையை, அபரிதத்தை,சகமனிதரோடு பகிர்ந்துகொள்கிறார். ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளரிடமும் இத்திறனைச் சந்திக்கிறோம்.
பின்கட்டு
இதில் இடம்பெற்றுள்ள ஐந்து கதைகளும் 1970களுக்கு முந்தின காலகட்டத்தில் நடை, கசடதபற போன்ற இதழ்களில் வெளிவந்தவை. நவீன மொழி நடையில் அமைந்துள்ளவை.
வயது மூத்தவளுடன் உறவு, தன்பால் உறவு, குடும்பத்தில் உள்ளவளோடு உறவாடும் இன்செஸ்ட் உறவு, தாயின் மீது சிறுவன் கொள்ளும் மறைமுக நாட்டம், உடலுக்கு ஏங்கி அலையும் இளைஞன் என ஐந்து பொருண்மையில் கதைகள் இடம்பெற்றுள்ளன.
இரா. முருகனின் நளபாகம்
முருகன் சொற்பமான இவ்வரலாற்றுத் தரவுகளைச் சாரக்கட்டாகப் பயன்படுத்தி நானூறு ஆண்டுகள் தொலைவில் அமைந்திருக்கும் இரு நூற்றாண்டு முடிவுகளில் (பதினாறாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் இறுதி) அரசியல், ராஜதந்திரம், வஞ்சகம், போர், பொது மக்கட்கருத்துத் திரிபு, தீவிரவாதம், மதச்சார்பு, நட்பு போன்றவற்றை பாவிழையாகவும் உணவையும் காமத்தையும் அவற்றிற்கு மேலும் கீழும் ஓடும் ஊடு நூலாகவும் பின்னிப் பிணைத்து ஒரு மாபெரும் கதையாதலை நெய்கிறார். பதினாறாம் நூற்றண்டிலிருந்து திரண்டு வரும் இக்கதையாடல்கள் பரமன் என்ற பாத்திரத்தின் வழியே இருபதாம் நூற்றாண்டிறுதியில சன்னமாக எதிரொலித்து புது அர்த்தங்கள் கொள்கின்றன.
கலியுகய நாவலும் சிங்களச் சமூகவெளியும்
கம்பெரலிய நாவலின் தொடர்ச்சியாகவே கலியுகய அமைக்கப்பட்டுள்ளது. நாவலில் மார்ட்டின் விக்கிரமசிங்க வரைந்து காட்டும் அழுத்தமான சமூகச்சித்திரம் சமூகவியல் தன்மையுடனும் சமூக மாற்றம் குறித்த நுண் அவதானங்களுடனுமான ஒரு அழுத்தமான ஆவணமாக கலியுகயவை மாற்றிக் காட்டுகிறது.கம்பெரலியவின் மையக்கதாபாத்திரங்களான கசாறுவத்தே முகாந்திரம்-மாத்தறை அம்மையார் தம்பதியினர் மற்றும் அவர்களது பிள்ளைகளான அனுலா, நந்தா, திஸ்ஸ மருமகன் பியல் போன்றோரைச் சுற்றி கதை நகர்கிறது.
தீர்த்த யாத்திரை – தீராத யாத்திரையின் சுயமி
எதுவும் குற்றமே இல்லை என்று எண்ணுபவர்களுக்குக் குற்றவுணர்ச்சி எழும் சாத்தியங்கள் இல்லை. இருப்பின் சமகாலச் சிக்கல் என்று இருண்மைகளை ஒரு கரிய இறகென சூடிக்கொண்டு விடுதல் எளிய இலக்கியத் தந்திரம். அந்த பாசாங்கைக் கீறி ஓர் ஒற்றையடிப்பாதையை தேடிக்கொண்டு உள்மனக்குரலுக்கு பதில் சொல்ல முடியுமா என்று தேடுபவன், அர்த்தமுள்ள மனிதனாக முயல்கிறான். இதை அவன் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. தன்விருப்பப்படி ஒருவர் எப்படிவேண்டுமானாலும் நடக்கிறேன் என்று பயணிப்பது அவரவர் சுதந்திரம். அவரவர் தேர்வு. ஆனால் யாரோ எப்போதோ நடந்த ஏதோ ஒரு பாதையின் வழியாகவே அவர்கள் செல்லநேர வேண்டி இருப்பதில், தெரிவுகள் குறைவு.
நிறமாலை
இலக்கிய உலகில் பெரும்பாலான கதைகள் ஆண்களின் வாழ்க்கையையே சித்தரிக்கின்றன. அதற்கு மாற்றாக பெண்களின் எண்ணங்கள் செயல்கள் மூலம் மனித வாழ்வை அணுகிப் பார்க்கும் இவரது கோணம் சிறப்பாக உள்ளது. இப்படி இருக்கிறது, நான் காட்டுகிறேன் என ஒதுங்கி நின்று காட்டும் திறனும், யதார்த்தம்தான் என நம்பவைக்கும் காட்சிப்படுத்தலும் மேலும் சுவை கூட்டுகிறது. பல்வேறு வணணங்கள் கொண்ட நிறமாலையைப்போல வெவ்வேறு குணங்கள் கொண்ட பெண்களைக் காட்டும் இந்நாவலை வாசிப்பவர்கள் வாழ்க்கையை பெண்களின் நோக்கிலிருந்தும் பார்க்கத் தொடங்குவார்கள் என நம்பலாம்.
“இரு புறமும் சுழலும் கடிகாரம்” பற்றி
“அந்த ஒரே இரவில் நாங்கள் அனைவரும் பெரியவர்களானோம். சிதையில் எரிந்தது எங்கள் பாட்டி மட்டுமில்லை, எங்கள் பால்யமும்தான்.” என்று நேரடியாக தலைப்பும் முடிவும் ஒன்றாகும் இக்கதை வாசகனிடம் விட்டுசெல்வது, இந்த எளிய வார்த்தைகளை மீறிய வலிமிகுந்த இழப்புணர்வை. குழந்தைகளின் நினைவுகளில், களிமண்ணில் அச்சுபோல எத்தனை எளிதாக, கவனிப்பதும் கவனிக்காததும் பதிந்துவிடுகின்றன.
மிதக்காமல் நிலத்தில் விழுந்த இலைகள்
அரூ போட்டியில் அறிபுனைப் பரிசை வென்ற “ஒழிவில் காலெமெல்லாம் உடனாய் மன்னி” இத்தொகுப்பின் முக்கியமான கதைகளில் ஒன்று. அறிவியல் புனைவுகள் தமிழுக்குப் புதிய வகை எழுத்தாகும்….பொதுவாக நாம் அறியாத எதிர்கால உலகை வடிவமைத்து அதில் மனிதர்களின் சமூகக் கட்டமைப்பை சித்தரிப்பது அறிபுனையின் ஒரு வகை மாதிரி. அதே போல, எதிர்காலத்தில் மனிதர்கள் வேறு கோள்களுக்கு இடம் பெறும்போது அச்சூழல்களுக்கு ஏற்ப தங்களையும் சமூகத்தையும் தகவமைத்துக்கொள்ளும் கதைகளும் சுவாரஸ்யமானவை.
குடிபெயரும் கதைகள்
தனி மனிதச் சுதந்திரம் அதன் மோசமான எல்லையில் அரசின்மைக்கும் ஒழுக்கமின்மைக்கும் சுய அழிப்பிற்குமே இட்டுச்செல்லலாம் . குடும்பம் அதன் சாதகமான எல்லையில் ஒரு குழந்தை வளர்வதற்கான ஆகச் சரியான அமைப்பாக விளங்குகிறது. சீரான குடும்பங்கள் சீரான சமூகங்களையும் உருவாக்குகின்றன. தனிமனித விடுதலையின் சாதகமான எல்லையில் தனி மனிதன் எந்தக் கட்டுக்களும் இன்றி தன் முழுத்திறனையும் கொண்டு புதிய உச்சத்தை அடைய முடியும். குடும்பம் தனிமனிதன் எனும் இவ்விரு புள்ளிகளும் ஒன்றை ஒன்று சார்ந்திருந்தாலும் அவற்றிற்கிடையே பெருந்தூரங்கள் எளிதில் உருவாகிவிட முடியும் என்பதை இக்கதைகளிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.
புறத்தைச் சொல்லி அகத்தை அடையாளம் காட்டும் எழுத்து
ஆசிரியரின் முதல் கதையும் அவரது சொந்த அனுபவத்தை வைத்து எழுதியதும் என்று சொல்லப்பட்ட ‘விடிவு’, தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. நண்பர்கள் பைக்கில் செல்லும்பொழுது, ராஜா என்பவன் லாரியில் அடிபட்டு இறந்துவிடுகிறான். அவன் சடலத்தை இறந்தவன் வீட்டில் ஒப்படைக்கும்பொழுது எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை சஸ்பென்சாக வைத்து, கதை நகர்கிறது. ஏமாற்றுபவன், திருடன், காமக்கண்ணோடு பார்ப்பவன், சொல்வதொன்று செய்வதொன்று என்று நடமாடுபவர்கள், அப்பாவிகள் இருக்கும் கதைகள் உள்ள தொகுப்பில், மானுடத்தில் அன்பு மிச்சமிருக்கிறது என சொல்ல ஒரு எளிமையான கதை.
அமெரிக்க பாரம்பரிய மீட்டெடுப்பு
மாண்டேல், அவர் எடுத்துக் கொண்டுள்ள காலத்தை அலசும்போது வழக்கமான ஊகவணிகர்களை (Speculators) கண்டனம் செய்வதை பார்க்கிறோம். உதாரணமாக, இப்புத்தகத்தின் 107ம் பக்கத்தில், எல்ஹானன் வின்செஸ்டர் (Elhanan Winchester) எனும் நியூ இங்கிலாந்து சமய போதகர் தனது “The Plain Political Catechism” என்ற புத்தகத்தின் மூலம் பள்ளிமாணவர்களிடம் ‘பொது நிலங்கள் அங்கு குடியேறியவர்களுக்கு மட்டுமே விற்கப்படவேண்டும். நிலவர்த்தகங்களுக்கும் ஊகவணிகர்களுக்கும் விற்கக் கூடாது’ என போதித்ததை பதிப்பித்துள்ளார்….இவரது புத்தகமும் எவ்வாறு இடத்திற்கேற்ற விலை பிற சமுதாய பிரச்சினைகளை தீர்க்க உதவும் போன்ற கருத்துகளுடன் மல்லாடவில்லை. மேலும், நிலத்தை அதிக விலை கொடுப்பவருக்கு விற்பது வின்செஸ்டர் போன்றவர்கள் அக்கறை காண்பிக்கும் நபர்களுக்கு உதவக்கூடியதாகவும் இருக்கலாம் என்பது போன்ற கருத்திலும் ஆர்வம் காட்டவில்லை.
கோன்ராட் எல்ஸ்ட்டின் ‘இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’
ஆட்டோ வான் பிஸ்மார்க்தான் ஜெர்மனியில் கிறிஸ்துவ தேவாலயத்திடமிருந்து கல்வியாதிக்கத்தைக் கலாசாரப் போர் (kulturkampf) என்ற பெயரிட்டுப் பறிக்க முயன்று தோல்வியடைந்தார். அதுமுதல், பொருளாதாரத்தைத் தவிர்த்து மற்ற அனைத்து சச்சரவுகளுமே கலாசார யுத்தமாகவே எல்லா நாடுகளிலும் கருதப்படுகிறது. சச்சரவுகள் சிலசமயம் ஒரேவிதமாக இருந்தாலும் வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு விதமாக அவற்றை அணுகுகின்றன.
பாரதி விஜயம்: பாரதியின் வரலாற்று நூல்
திருவல்லிக்கேணியில் மதம் பிடித்த யானை இவரைக் கீழே தள்ளியதால் இறந்துபோனார் என்றுதான் ஜனரஞ்சகமாக நம்பப்படுகிறது. யானை கீழே தள்ளிய ஓரிரு நாள்களில், தனது வேலைகளைப் பழையபடி பாரதியார் செய்ய ஆரம்பித்துவிட்டார். சில ஊர்களில் பிரசங்கமும் செய்திருக்கிறார். இது நடந்து சில மாதங்கள் கழித்துத்தான், அதாவது செப்டம்பர் மாதம் 12 ஆம் நாள்தான் (11 ஆம் நாள் அன்று, 12 ஆம் நாள் அதிகாலை 1.30 மணிக்கு) வயிற்றுக் கடுப்பின் காரணமாக இறந்திருக்கிறார்.
இமையம் எழுதிய ‘எங் கதெ’ நாவல் பற்றி
கமலாவிற்கு தான் செய்வது குறித்து ஒரு தெளிவு இருக்கிறது.தன் தேவைகளை தான் விதிக்கும் விதிகளுக்கு உட்பட்டு தீர்த்துக் கொள்கிறாள்.விநாயகத்தின் ஏமாளித்தனத்திற்கு அவளா பொறுப்பு. அல்லது முடிவெடுக்க இயலாதவனை அவள் என்ன செய்ய முடியும் .
ஆகாரசமிதை
ஹரன்பிரசன்னாவின் மாயப் பெரு நதி நாவலை முன்வைத்து: முதல் பாகத்தை மின்சார ரயில் பகுதி எனலாம். தெரிந்த விஷயங்கள். அதே குப்பை நாற்றங்கள். பழகிய முகங்கள். இருப்பிடம் வந்தாலும் நாளையும் இதே பயணம் என்னும் எதிர்பார்ப்பில்லாத திக்கில் முடிவு. அடுத்த பகுதி சென்னை முதல் டெல்லி செல்லும் ராஜதானி வண்டி. அவசரகதியில் எக்ஸ்பிரெஸ் ரயிலாக சேரிடத்தில் முடிந்தாலும், அந்தப் பயணம் சுவாரசியம் மிக்கது. தெரியாத, புதிய விஷயங்களை உணர்த்துவது. தூங்கி எழுந்தவுடன் கடைசி ஸ்டேஷன் வந்து விடுவது போல் …
பொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்
எடுத்ததும் இயக்குனர் பியர் பாவோலோ பஸோலீனிதான் (Pier Paolo Pasolini) நினைவுக்கு வருகிறார். குறிப்பாக, அவரது ‘சாலோ’. இதுவரை எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மிகவும் குரூரமானதும் அருவெறுக்கச் செய்யுமளவு நேர்மையானதுமான திரைப்படம் அது, உங்களுக்கு நினைவிருக்கிறதா தெரியவில்லை. மார்கீடுசாதின் (Marquis de Sade) ‘120 டேஸ் ஆஃப் சாடம்’ என்ற “பொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்”
தாவீதுகளின் சங்கீதம்: பொலான்யோவின் ‘டிஸ்டன்ட் ஸ்டார்’
அந்த கர்வச் செருக்கைப் புறமொதுக்கி விட்டு, வாழ்வை சூறையாடிச் செல்கிற மலினமான நாடகங்களில் இருந்து விலகி, தம்மை இழக்காமல் தத்தம் கண்ணியத்தை காத்துக்கொள்வதே கலைஞர்களின் முதன்மை நோக்கமாக இருக்க முடியும். அத்தகைய இடர்ப்பாடுகளைப் புடம்போட்டு அணி செய்கையிலேயே கலையின் விஸ்தீரணம் புதிய பரிமாணங்களைப் பெறுகிறது. விடுதலையின் சிறகடிப்பில் மதர்க்கும் ஞானப் பொலிவானது அவர்களுடைய படைப்பில் பொசிகிறது.. எனவே, கலையும் அரசியலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.
உயர்ந்த உள்ளம்
பிரசவத்துக்குக் காத்திருக்கும் மனைவியைப் பார்க்கவும் அவளோடு வாழவும் வேலையைத் துறந்து செல்லும் அவனுக்கு உள்ளூர உதவவேண்டும் என்பதுதான் ஜெனரலின் விருப்பம். ஒருவேளை தான் மரணமடைந்து, வேறொரு ஜெனரலின் கட்டுப்பாட்டுக்கு அவன் சென்றுவிட்டால் விடுவிப்பில் சிக்கல் நேரிடலாம் என்னும் முன்யோசனையாலேயே அவர் அக்குறிப்பை எழுதி அனுப்பியிருக்கிறார். உயிருக்குப் போராடும் நேரத்திலும் இன்னொரு உயிருக்காக இரக்கப்படும் உயர்ந்த உள்ளத்துக்கு மட்டுமே அது சாத்தியம். அதுவரை உயர்ந்த சிகரத்தைப்பற்றிய கதையாக இருந்த விவரணைகள் எல்லாமே உயர்ந்த உள்ளத்தைப்பற்றியதாக மாற்றம் பெற்றுவிடுகிறது.
மகிமை
இன்றைய பிளவுபட்ட நோக்குகள் பெருகி பேருருவமெடுத்து நிற்கும் உலகில் இச்சா போன்ற அடிப்படை மானுட விழுமியங்களை, அனைத்து வேற்றுமைகளுக்கு நடுவிலும் அடையப்படக்கூடிய ஒற்றுமைகளை பற்றி பேசும் நாவல் நமக்கு இன்றியமையாத தேவை என்றே நான் நினைக்கிறேன்.
தமிழ் நாவல்களுக்கு புலிட்சர் அல்ல புளிப்பு மிட்டாய்கள் கூட கொடுக்கப்படுவதில்லை. ஆயினும் புலிட்சர்வாங்கிய நாவலுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாத, பல இடங்களில் அதனினும் மேம்பட்ட தரத்தில் எழுதுபட்டநாவல் இச்சா என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
வெக்கையும் ஈரமும்
ஊருக்குள் இருந்தவரை மனத்தில் நிறைந்திருக்கும் கசப்பு, ஆங்காரம், ஏமாற்றம், பழி,வெற்றி, தோல்வி போன்ற சமூகக் கட்டமைப்பிற்குள் உருவாக்கப்பட்டவை அனைத்தும் கரிசல் காட்டுக்குள் நுழைந்ததும் அழிந்துபோய், உயிர் வாழ்தலுக்கான அடிப்படைப் பிரச்சனைகளான பசியும் எதிரிகளிடமிருந்து உயிர் தப்புதலும் மட்டுமே அன்றாடங்களை நிரப்பி ஆதிமனிதனாக்கிவிடும் நிலையை அப்பட்டமாகச் சொல்லும் கதை.
புத்தக விமர்சனம்: வாஸ்லாவ் ஸ்மீல் Energy and Civilization -A History
ஆசிரியர் உண்மையிலேயே ஒரு பெரிய நிபுணர்தான். எடுத்துக்காட்டாக, நிலத்தில் ஓடும் மனிதர்களைப் பற்றி பேசும்போது, தரவை அவர் இவ்வாறு பகுப்பாய்வு செய்கிறார்: ஓடுவதற்கு பெரும்பாலும் 700 முதல் 1,400 வாட் வரை ஆற்றல் தேவைப்படுகிறது, இது அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதத்தைப்போல் 10-20 மடங்கு அதிகம். மனிதர்களுக்கான இயங்கும் ஆற்றல் செலவு நிறைய. ஆனால் இந்த செலவை வேகத்திலிருந்து விலக்குவதற்கான தனித்துவமான திறனை மக்கள் கொண்டுள்ளனர். இயங்கும் மொத்த செலவில் 80% உடல் எடை ஆதரவு மற்றும் முன்னோக்கி நம்மைச் செலுத்தும் உந்துவிசைக்கே ஆகிறது. கால்களை முன்னும் பின்னுமாக இயக்குவதற்கு 7% செலவு. பக்கவாட்டு சமநிலையை பராமரித்தலுக்கு 2%. ஆனால் கைகளை ஆட்டி பேலன்ஸ் செய்வது ஒட்டுமொத்த செலவை சுமார் 3% குறைக்கிறது.
வரைபடத்தின் உள்ளே: போலோ ஓலாய்சராக்கின் இரு நாவல்கள் பற்றி
க்ரெய்க் எப்லின் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ்ஸின் ( Jorge Luis Borge ) நெடுநாள் நீடித்திருக்கப் போகும் புனைகதைகளில் ஒன்று “டெல் ரிஹோர் என் லா சியென்சியா” (“அறிவியலில் துல்லியமானது”) என்ற ஒரே ஒரு பத்தி நீளமே உள்ள கதை. மூலாதாரம் உறுதியாகாத கால வரலாற்றின் ஒரு துண்டாகக் “வரைபடத்தின் உள்ளே: போலோ ஓலாய்சராக்கின் இரு நாவல்கள் பற்றி”
எல்லைகள் அற்ற வெளி
கிரிக்கெட்டில் உற்சாக நடனமாடப் பெண்கள், குடிக்கும் பார்களில் நடன மாதுக்கள், கிராமத் திருவிழாக்களில் குட்டைப் பாவாடையோடு ஆடும் பெண்கள். . . இவை சொல்வது என்ன? பெண் என்பவள் உடல் மட்டுமே என்ற பெரும்பான்மையான மன நிலையை. இதை முறியடிக்க எத்தனைக் காலங்களாக பெண்கள் போராடுகிறார்கள், எத்தனை எள்ளல்களையும், இழிவுகளையும் கடக்கிறார்கள், அதை பெண்ணும், மொழியும், வெளிப்பாடும் என்ற பரிமாணங்களில் அம்பை தனது ‘உடலெனும் வெளி’ என்ற நூலில் மிக அருமையாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்கிறார். குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் அவர்களின் மொழியால் அல்லாமல், உடலாலேயே முத்திரை குத்தப்பட்டு அவ்வை முதல் அரங்கமல்லிகா வரை கால, சரித்திர பேதமற்று
உரக்க ஒலித்த பெண் குரல்
1953இல் ராஜம் கிருஷ்ணன் அவர் பெண் குரல் நாவலுக்கு கலைமகள் பத்திரிகையின் நாராயணசாமி ஐயர் விருது பெற்றபோது எனக்கு ஒன்பது வயது ஆகியிருக்கவில்லை. கி.வா.ஜ. என்று அறியப்பட்ட கி.வா. ஜகந்நாதனை ஆசிரியராகக்கொண்ட கலைமகள் பத்திரிகை இலக்கியப் பத்திரிகையாக கருதப்பட்டது. எங்கள் வீட்டில் மாதாமாதம் கலைமகள் வந்துவிடும். காரணம் என் “உரக்க ஒலித்த பெண் குரல்”
அம்பையின் சிறுகதைகள்
‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ தொகுப்பில் இந்த ஆணாதிக்க எதிர்ப்பு, ரசனையற்ற ஆண்களைச் சித்தரித்து உவகை கொள்ளும் போக்கிலிருந்து முற்றிலும் விடுபட்டு,பாம்பு தன் சட்டையை உரிப்பது போல் உரித்துக் கொண்டு வெளியே வந்துவிடுகிறார் அம்பை.பொதுவாக எந்த எழுத்தாளரும் செல்ல விரும்பாத பகுதி இது. ஒரே மாதிரி எழுதினால் தான் ‘இமேஜ்’ அடிபடாமல் இருக்கும், சுந்தர ராமசாமி,எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற வெகு சிலரே தங்களை அடிக்கடிச் சட்டையுரித்துக் கொள்பவர்கள். இந்தச் சட்டையுரிப்பில், தனது பழைய இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல்,அம்பையும் இறங்கியுள்ளது பாராட்டுதலுக்குரியது. ‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ கதைகள் எல்லாமே …
மிருத்யுஞ்சய்
‘மிருத்யுஞ்சய்’ என்ற பி.கே. பட்டாச்சாரியாவின் அஸ்ஸாமிய நாவலின் களம் 1942ஆம் ஆண்டு காலகட்டத்தில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைக் களமாய்க் கொண்டது. நாவல் புரட்சியாளர்கள் கொண்ட ஒரு குழுவைப் பற்றியது. அவர்கள் பிரிட்டிஷ் ராணுவ ரயிலொன்றைக் கவிழ்க்கச் சதி செய்கின்றனர். இந்த திட்டத்தை எப்படி நிறைவேற்றுகின்றனர், அதற்கு அவர்கள் தரும் “மிருத்யுஞ்சய்”
ராபர்ட் கனிகலின் The Man Who Knew Infinity: புத்தக விமர்சனம்
ராபர்ட் கனிகல் எழுதிய The Man Who Knew Infinity என்ற புத்தகத்தின் ஆங்கிலம் மற்றும் தமிழ் பிரதிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இரு வேறு நண்பர்களிடமிருந்து எனக்கு பரிசாய்க் கிடைத்தன. அதுவும் ஒரே டிசம்பர் வாரத்தில் இரு வேறு நாட்களில் இந்தப் புத்தகங்கள் என்னை வந்தடைந்தன (இதோ இதை தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் பிப்ரவரி 14ஆம் தேதியும்கூட புத்தக காதலர்களுக்கு விசேஷமான நாள்: இன்று சர்வதேச புத்தகப் பரிசு தினம் கொண்டாடப்படுகிறது). ஆங்கில புத்தகத்தைக் கொடுத்த நண்பரும் நானும் ஒவ்வொரு முறை நாங்கள் சந்திக்கும்போதும் புத்தக பரிவர்த்தனை செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருப்பவர்கள். அந்த வழக்கப்படி ஆங்கில பிரதி கிடைத்ததில் ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. 2015ல் கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்வையொட்டிய இந்தப் புத்தகம் திரைப்படமாக வடிவெடுத்து வெளிவந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். நான் படம் பார்த்திருந்ததால் கதையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது நினைவில் நன்றாகவே பதிந்திருந்தது. எனவே, “அப்புறம் படிக்கலாம்,” என்று ஆங்கிலப் பிரதியை எடுத்து வைத்திருந்தேன்.
ப. கல்பனாவின் குரல்: பார்வையிலிருந்து சொல்லுக்கு
படைப்பு மொழி நிமிர்ந்து நிற்கும் மொழி, பிறர் பரிவுக்காக காத்திருக்கும் மொழியல்ல, பசிவயிற்றில் இருந்தாலும், யாசித்து அல்ல உழைத்து அப்பசியைப் போக்கிக்கொள்ளத் தெரிந்த தன்மான மொழி. அவ்வை முதல் ப. கல்பனாவரை இப்பெண்கவிஞர்களின் கவிதைமொழி காலம் காலமாய் மானுடத்திற்கு தெரிவிப்பது இச்செய்தியை த்தான். எனவே எழுதியவர், பெண்ணா ஆணா. எந்த சாதி, எந்தகுலம் என்பதெல்லாம் முக்கியமல்ல அவர்களின் படைப்பே முக்கியம். வலிமை என்பது உடல் சார்ந்த து அல்ல மனம் சார்ந்தது.
சித்தார்த்த முகர்ஜியின் The Gene – An Intimate History: புத்தக விமர்சனம்
தறிகெட்டு இயங்கும் மரபணுக்களின் அசாதாரண செயல்களை விவரிக்கும் கேன்சரின் கதை அது. நிறைய யோசித்தபின், மறுபுறம் மரபணுவின் இயல்பான செயல்பாட்டைப் பேசும் இன்னொரு கதை இருப்பதை உணர்ந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அந்த யிங் (Ying) கதையை பாலன்ஸ் செய்ய வந்திருக்கும் இந்த யாங் (Yang) கதை அதே சுவையுடன் வெகு நன்றாகவே வந்திருக்கிறது. கிரேக்க தத்துவஞானிகளில் துவங்கி கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளின் கதையை இந்தப் புத்தகம் சொல்கிறது. ஆங்காங்கே மன நோய்கள் விரவியிருக்கும் தன் குடும்ப வரலாற்றினூடே முகர்ஜி, மென்டல் மற்றும் டார்வின் போன்ற மகத்தான விஞ்ஞானிகளின் ஆய்வுகளில் துவங்கி மன நோய்களுக்கு மரபணு காரணமாகுமா என்று கேட்டுக் கொண்டு இன்று ஆய்வு செய்யப்படும் CRISPR/Cas-9 வரை வந்துவிடுகிறார்.
ரிச்சர்ட் தேலரின் Misbehaving: The Making of Behavioral Economics – புத்தக விமர்சனம்
மனித மனம் அங்கே ஒரு கணக்கு போடுகிறது. 1200 ரூபாய் சாமான் ஒன்று அறுநூறு ரூபாய்க்கு கிடைக்கும்போது பெரிய தொகை ஒன்று தள்ளுபடியாவதுபோல் தோன்றுகிறது. (பாதிக்குப் பாதி மிச்சம் செய்கிறோம்). ஆனால் 35000 ரூபாய் செலவு செய்யத் தயாராக இருக்கும்போது ஒப்பீட்டளவில் அதே அறுநூறு ரூபாய் நமக்கு அவ்வளவு பெரிய தள்ளுபடியாய் தெரிவதில்லை. என்றைக்கு இருந்தாலும் என்ன வாங்கினாலும் அறுநூறு ரூபாயின் மதிப்பு அறுநூறு ரூபாய்தானே? ஆனால் நடைமுறையில் மனித மனம் அப்படி யோசிப்பதில்லை.
தப்பித்தல் நிமித்தம்
முக்கியமான கதையான கன்னியாகுமரி, மனிதனின் ஆழ்மனதுக்கும் மேல்மனத்துக்கு இடையிலான போராட்டத்தை இயல்பு மீறாவண்ணம் காட்டுகிறது. காமமும் மரணமும் தொடர்ந்து ஒன்றை ஒன்று நிரப்பும் இரு வேறு விசைகளாக மனித மனதை அலைக்கழிக்க வைத்தாலும் ஒன்று திரும்பவியலா நிகழ்தகவைக் கொண்டது என்பதால் மற்றொன்றின் அலைகழிப்பு மனிதனின் கீழ்நிலையின் முடிவுறா ஆழத்தைக் காட்டும் படிமமமாக என்றும் அமைந்துவிடுகிறது.
நைபால் எங்கிருந்து வருகிறார்?
தெலுங்கு மொழியில் 1930களின் துவக்கங்களில் எழுதப்பட்ட ‘ஹாஹா ஹூஹூ’ என்ற அற்புதமான சிறுகதையில் விஸ்வநாத சத்யநாராயணா (1893-1976) ஒரு விபத்தாய் இங்கிலாந்து சென்ற பயணியை விவரிக்கிறார்: ஒரு கந்தர்வன், செவ்வியல் காலத்துக்குரிய இந்தியாவிலிருந்து வந்த பறக்கும் பாதி மனிதன் பாதி குதிரை, தன் சிறகுகளை இழந்து ட்ரஃபல்கர் சதுக்கத்தில் விழுகிறான். சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அவன் சிறகுகள் மீண்டும் முளைக்கக் காத்திருக்கையில் ஆங்கில சமூகத்தை எதிர்கொள்வது பல விஷயங்களைப் பற்றி வரண்ட நகைச்சுவையுடன் பேச சத்யநாராயணாவுக்கு வாய்ப்பளிக்கிறது: கலாசார வேறுபாடு, அறிவியல் வளர்ச்சியின் இயல்பு, காலனிய ஆட்சிக்கு உட்பட்டிருந்தாலும் இந்திய கலாசாரம் இழக்காதிருக்கும் வளங்கள், இவற்றில் சில. இது உயர்வுநவிற்சி தன்மை கொண்ட பிரதியல்ல, பண்டைய இந்து விழுமியங்களின் மறுமலர்ச்சிக்கு அழைப்பு விடுக்கும் தீவிர குரலுமல்ல. தெலுங்கு மற்றும் சம்ஸ்கிருத இலக்கிய மரபின் நீண்ட தொடர்ச்சியில் முழுமையாய் ஒன்றியிருந்தும்கூட தனித்தன்மை கொண்ட நவீன இலக்கிய நுண்ணுணர்வு அமையப் பெற்றிருந்த சத்யநாராயணா இன்று ஆந்திர பிரதேசத்துக்கு வெளியே அதிகம் வாசிக்கப்படுவதில்லை. அவரது கந்தர்வன் விண்ணில் உயரப் பறந்து கதைக்கு முடிவு கட்டுகிறான், குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் தன் ஆங்கிலப் பிணைப்பாளர்களை நோக்கி, ‘இதைவிட சிறுபிள்ளைத்தனமான இனத்தை’ கண்டதேயில்லை என்று கூவிச் செல்கிறான்
ரணங்கள்: ஃ பிர்தவுஸ் ராஜகுமாரன்
இந்த படைப்பின் பலம் என்பது, கோவையில் 80களின் பிற்பகுதிகளில் தொடங்கி தொடர்ந்து சந்தேகத்தோடும் அச்சத்தோடும் பார்க்கப்பட்டு, பல்வேறு அவஸ்தைகளுக்காட்பட்டு, தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து தவிக்கும் எளிய இஸ்லாமியர்கள் பற்றி அது அளிக்கும் சித்திரம். நாவல் துவங்குவதே அத்தகைய ஒரு எளிய பெண்ணான நூர்ஜகானின் ஒரு நாளில்தான். நூர்ஜகானைப் போலவே, காதர்ஷா, காஸிம் பாய், அஹமது ராவுத்தர், ஜமால் அஹமது ராவுத்தர் போன்ற எளிய மனிதர்களின் அவஸ்தைகளை வாசிப்பவரின் மனதை பிசையும்படி விவரித்திருப்பதுதான்.
ஒளிர்நிழல் – கரிப்பின் விசாரணை
வெறுப்பின் பலவித அலகுகளைச் சோதித்துப்பார்க்கும் களமாக இந்த நாவலை நான் காண்கிறேன். தனிப்பட்ட உறவுகள் மீதான கசப்பும், தன் சமூகம் மீதான சுய எள்ளலும் (இது அடுத்த கட்டத்துக்கு நகர்த்த உந்தும் விமர்சனமாக அமையவில்லை. பள்ளர் சமூகம் எட்டிப்பிடிக்க வேண்டிய காலத்தைப் பற்றி உரையாற்றிய சக்தி, காரில் ஏறியதும் தாங்கமாட்டாது சிரிக்கிறான்; அதனால் இது கரிப்பாகவே மிஞ்சுகிறது), ஒழுங்கில்லாத எளிய வரலாற்றின் மீதான கோபமும் ஆகிய மூன்றும் நாவலின் அடியோட்டமாக மிஞ்சுகின்றன.
சு. வேணுகோபாலின் ‘வலசை’ நாவல் பற்றி
வேணுகோபாலின் சொந்த ஊர் போடி பக்கம் என்றாலும் தற்போது பல ஆண்டுகளாக கோவையில் வசித்துவரும் அவர் தன் வசிப்பிடத்துக்கு மிக அருகே நடைபெறும் இந்த மனித மிருக மோதல்களை, குறிப்பாக, மனிதனுக்கும் யானைகளுக்கும் இடையே மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்கள் காரணமாக நடந்து வரும் மோதல்களை மையமாக்கி இந்த நாவலை படைத்திருக்கிறார்.
அறிவும் அறியாமையும் – அருண் ஷௌரியின் ‘டூ செயிண்ட்ஸ்’ நூலை முன்வைத்து
அருண் ஷௌரியின் வாழ்வு துயர் தோய்ந்தது. அவரது மகன், cerebral palsyயாலும் மனைவி Parkinson’s Diseaseஆலும் அவதிப்படுகின்றனர். செரிப்ரல் பால்ஸி, உடல் இயக்கங்களை மெல்ல மெல்லச் சீரழிக்கிறது. பார்க்கின்சன்ஸ் டிசீஸ் மூளையின் செயல்பாட்டை மெல்லச் சீர்குலைக்கிறது. இரண்டுமே தொடர்ந்து முற்றி, முடிவில் மரணத்துக்கு இட்டுச் செல்லும் நோய்மை நிலைகள். “அறிவும் அறியாமையும் – அருண் ஷௌரியின் ‘டூ செயிண்ட்ஸ்’ நூலை முன்வைத்து”
பருவம் – எஸ்.எல்.பைரப்பா
துரியோதனன் தர்மம் குறித்து ஒரு முக்கியமான கேள்வி எழுப்புகிறான், அதுதான் பாரதப் போரின் மையத்தில் உள்ள கேள்வியாகவும் இருக்கிறது: “பாண்டவர்கள் எப்படி குரு வம்சத்தினராக முடியும்? நியோக முறைப்படி குந்திக்குப் பிறந்த அவர்கள் பாண்டுவுக்குப் பிறந்தவர்களல்ல”. நியோகம் என்பது பிள்ளைப் பேற்றை நோக்கமாய்க் கொண்டு கணவன் அனுமதியுடன் வேற்று மனிதனுடன் உடலுறவு கொண்டு கருத்தரித்தல். பாண்டு ஆண்மையற்றவன் என்பதால் தேவ குலத்தைச் சேர்ந்த வெவ்வேறு ஆண்களுடன் நியோகம் பயிலும்படி பாண்டு குந்தியிடம் கேட்டுக் கொள்கிறான். அந்நாளைய பண்டிதர்கள் நியோக முறைப்படி வம்ச விருத்தி செய்வதை ஏற்றுக் கொண்டிருந்தாலும் துரியோதனன் இப்போது அதைக் கேள்விக்குட்படுத்தி, நிராகரிக்கிறான். இது குந்தியை கள்ள உறவு பூண்ட நிலைக்குச் செலுத்துகிறது.
நீலக்கடல் – பிரெஞ்சு இந்தியக் காலனி – மொர்ரீஸியஸ்
நாட்குறிப்பு எழுதி தன் எழுத்தின் மூலம் புதுவை பிரஞ்சு ஆட்சிக்கு நீங்காத இடம் தந்த துய்ப்பளே துபாஷி ஆனந்தரங்கப்பிள்ளை பாத்திரத்தை இரு எழுத்தாளர்களும் வெவ்வேறு வரலாற்றுப் பார்வையில் அணுகியுள்ளனர். மானுடம் வெல்லும் பிரபஞ்சன் ஆனந்தரங்கப்பிள்ளையை தனது காலத்தின் விதிகளுக்கேற்ப பிரெஞ்சு கவர்னரிடம் விசுவாசமாக நடந்துகொள்பவராக மட்டுமல்லாது புதுவை ஹிந்துக்கள் மீது பரிவு கொண்டவராகவும் சித்திரிக்கிறார். நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக்கடலைப் பொருத்தவரை ஆனந்தரங்கப்பிள்ளை பிரெஞ்சு அராஜகத்துக்கு ஊமைச்சாட்சியாக நின்ற மற்றொரு உயர்மட்ட ஹிந்துவாக சித்திரிக்கிறார். பிள்ளை ஒரு நேரடியான கதாபாத்திரமாக வராவிட்டாலும், மொர்ரீஸியஸ் தீவிலுள்ள தமிழரின் நிலையையும் அடிமை வாழ்வையும் ஆட்டிவைக்கும் பாவைகளாக விளங்கும் பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் அச்சாணியாக உயர்மட்ட வணிகர்களைக் குறிப்பிடுகிறார்.
பசு, பால், பெண்
மரத்துப் போன பசு, மரத்தால் ஆன பசு என்று பால் வற்றிப் போன உபயோகமற்ற மிருகமாயும், உயிரே இல்லாத பொம்மை மிருகமாயும் இரு பொருள் படும்படி பெண்ணை உவமித்துக் கூறும் மரப்பசு என்ற தலைப்பு மேற்கொண்ட பாதை பெண்பாலைப் பற்றிய பாரபட்சம், பூடக அவமதிப்பு, பொய்மை நிறைந்த மதிப்பீடுகள் இவற்றால் கட்டப்பட்ட பாதை. இந்தப் பாதை இந்த நாவலில் எப்படி எல்லாம் புகுந்து புறப்படுகிறது, இதன் அடித்தளம் என்ன என்று தெரிந்துகொண்டால்தான் இத்தலைப்பையும், அதன் விளக்கத்தையும், இந்த நாவலையும் நாம் புரிந்துகொண்டு விவாதிக்க முடியும். பெண்ணின் பால்தன்மை பற்றி ஆணித்தரமாகக் கூறக்கூடியவர்கள் ஆண்கள்தான் என்ற நிலைமை ஆரம்ப காலத்திலிருந்தே இருக்கிறது.
மூச்சுக்காற்று வெறும் காற்றாகும்போது
பெரும்பாலான பள்ளி நாட்கள் அரிசோனா நகரத்தில் கிங்க்மான் எனும் சிறிய பாலைவன பள்ளத்தாக்கில் கழிகிறது.. மற்ற மருத்துவர்களின் குழந்தைகள் போலவே தந்தையுடன் சேர்ந்து களித்த நேரம் சிறிதளவே என்ற சோகம் ஒரு புறம் இருக்க இவருடைய தாய், ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்க்கும் மேல் ஓர் படி போய் தன பள்ளியிலேயே கல்லூரி பாடங்களை தனக்கு மட்டுமன்றி மற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களை கற்பிக்க வற்புறுத்தி பள்ளியின் கல்வி தரத்தையே உயர்த்திய அதிசயத்தையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். Stanford பல்கலைகழகத்தில் ஆங்கில இலக்கியமும் உயிரிய லும் இளங்கலை கல்லூரியில் பயில்கிறார்
தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ளேயே இருந்த தீண்டாமை
தோல் 2012ல் சாஹித்ய அகடமி விருதுபெற்ற நாவல். திண்டுக்கல்லில் தோல்ஷாப்பு எனப்படும் தோல் பதனிடும் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் வாழ்வும், அதன் நெருக்கடிகளால் தொழிற்சங்கம் எப்படி உருவாகிவந்தது என்பதும்தான் கதை. நாவல் தொடங்குமுன் கதா மாந்தர்கள் என்ற தலைப்பில் 117 பாத்திரங்கள், அவர்களது பெயர்கள்-தொழில்கள் என்ற அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆசிரியர் டி.செல்வராஜ் அவரது முன்னுரையில்,’ இந்த நாவலில் இடம்பெற்றுள்ள கதைமாந்தர்கள் தமிழகத்தின் சரித்திர கதியில் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த மாந்தர்களின் பிரதிபிம்பங்களே’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த அளவில் வரலாற்றை நெருக்கமாகப் பிரதிபலிக்கும் நாவல்
அதைப் போக விடு
திரள் நினைவு (Collective Memory) எனும் கருத்து குறித்து அதிக அளவு சிந்தனைகளைத் தரும் ரீஃப், அக்கருத்திற்குப் பெரும் அழுத்தத்தையும் வைக்கிறார். .. .. .. திரள் நினைவு என்பது “நிகழ்காலத்து வெளிச்சத்தில் பழங்காலத்தை புணரமைத்தல்”, அத்துடன் “சமூகங்களும் தேசங்கள் முழுமையும் அவற்றின் அடையாளத்தை வார்ப்படம் செய்வதற்கான வழியாகவும் இருக்கிறது”. .. .. .. ரீஃப் அடித்துச் சொல்கிறார், “வரலாற்றை நினைவுகொள்வதின் சாராம்சமாக இருப்பது, வரலாற்றுத் துல்லியத்தைவிட, அடையாளப்படுத்துதல் மற்றும் மனோபாவ நெருக்கமே எனும்போது வரலாற்று நுணுக்கங்கள் மற்றும் ஆழம் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை”.
தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்
கட்சி மாநாட்டுக்குச் சென்று திரும்பும் பரமசிவம் பிள்ளை. தனது இரண்டாவது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு வந்து நிற்கும் சுந்தரம். விரதச் சாப்பாட்டுக்காக மகள்கள் வீட்டுக்குச் சென்று சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளும்பொருட்டு சாப்பிடாமலேயே திரும்பிவந்து பழைய சோற்றை சாப்பிட உட்காரும் சின்னத்தம்பியா பிள்ளை.
மணி பத்மம் – ஆபிரகாம் எராலி
இதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது, இந்த மேற்கத்திய நாகரிகங்களுடன் இந்தியாவுக்கு இருந்த வணிக உறவுகள் இந்தியாவில் கொண்டு குவித்த செல்வ வளம். வர்த்தகம் உலகமயமாகும் போக்குக்கு இன்றும் இந்தியாவில் எதிர்ப்புகள் இருக்கின்றன. அந்தப் பின்னணியில் பார்க்கும்போது, அன்றைய அறியப்பட்ட உலகத்துடன் இந்தியா தொடர்ந்து வணிக உறவுகள் கொண்டிருந்ததால்தான் இந்தியாவில் எல்லா துறைகளிலும் ஒரு மலர்ச்சி ஏற்பட்டது என்றும், அது கிட்டத்தட்ட ஒரு ஆயிரம் ஆண்டுகள் நீடித்திருந்தது என்றும் ஒரு முடிவுக்கு எராலி வருவது வியப்புக்குரிய செயல். ஆனால் அதில் பிழை இல்லை என்றே தோன்றுமளவுக்கு அவர் அதை தர்க்க ரீதியாக நிறுவுகிறார்.
வெங்கட் சாமிநாதன் – தொடரும் பயணம்
சில விமர்சகர்கள் போல வெ.சா. எந்த காலத்திலும் தனது கருத்துகளை மாற்றிக்கொள்ளவில்லை என்பது அவரை இறுகிய சட்டகத்துக்குள் அடைக்கும் முயற்சி. மரபார்ந்த அணுமுறையில் சென்றதால் தனது இறுதி காலத்தில் இந்துத்துவத் தரப்பை முன்வைப்பவராக சிலரால் அடையாளம் காணப்படுகிறார். இது ஒரு குறுக்கல்வாதமாகத் தோன்றுகிறது. தனது காலத்தில் வெ.சா. அடையாளப்படுத்திய விழுமியங்களைத் தொடர்ந்து கவனிக்கும்போது இது எத்தனை மேலோட்டமானப் பார்வை என்பது தெளிவாகிறது. தெருக்கூத்து மற்றும் பாவைக்கூத்தின் மாற்றங்களின் கலை அனுபவம் ஐரோப்பிய நவீனத்துவ பாணியில் தொடங்கி பார்ஸி நாடகக் கூறுகளை ஒத்திருப்பதை அவதானித்து ஒரு மரபுத் தொடர்ச்சியைச் சுட்டிக்காட்டுகிறார்
அம்பாஸடர்ஸ் க்ளப் – புத்தக அறிமுகம்
1991 ல் பாரதம் மேற்கொண்ட பொருளாதாரச் சீர்திருத்த காலத்தில், உலகில் பல நாடுகள் இதே போன்ற சிக்கல்களை எதிர்கொண்டன. அர்ஜெண்டினா போன்ற நாடுகள் பெரும் பண வீக்கத்தால் மக்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தின. ரஷ்யா பல சிறு நாடுகளாக வெடித்துச் சிதறி, உணவுப் பற்றாக்குறையைச் சந்தித்தது. ஆனால், இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்தம், மக்களை நேரடியாக அவதிக்குள்ளாக்கவில்லை. படிப்படையாக ஏழ்மை குறைந்து, நாடு வளமுற்றது. இதை ”மத்திமப் பாதை” என்னும் பெயரில், டாவோஸில் நடந்த வருடாந்திரப் பொருளாதார உச்சி மாநாட்டில், உலக நாடுகளின் முன் வைத்தார். அரசின் கட்டுப்பாடுகளில் இருந்து …
சொல்லப்படாத வம்சக் கதைகளின் முன்னோடி
’குண்டாற்றுக்கு அந்தப் பக்கம் நீ ஜமீந்தார் என்றால், இந்த பக்கம் நான் – உனக்கெதுக்கு தாரை தப்பட்டை’ என்று மேலக்கோட்டை கவுடர் ஜமீனை கேட்கும் அங்கப்பதேவரை, அங்கப்பர் என்று எழுதியிருந்தால் அல்லது முத்தையாத்தேவர் என்கிற ராஜாவை ’தாயோளி’ என்று திட்டி செருப்பால் அடிவாங்கிய தாசில்தார் நடராஜ ஐயரை நடராஜன் என்றூ எழுதியிருந்தாலோ அல்லது சோழமூக்கன் வழிவந்து பல தலைமுறைகளாக பிள்ளைமாராக வாழ்ந்த மேகநாதம்பிள்ளையின் அக்குடும்ப ரகசியம் உடைந்து போனபின்பு அக்குடும்பத்தில் கட்டிக் கொடுத்து வாழ்த்த பெண்கள் திருப்பி அழைத்துக் கொள்ளப் படுவதை, முத்தையா தேவரை கட்டிக் கொண்ட ஜெயலட்சுமி தனது குடும்பத்துடனான உறவுகளை அறுத்துக் கொள்வதை, ஜெயலட்சுமியின் அத்தை ராஜாவை (முத்தையாதேவரை) த் திட்டும்போது…
திருவரங்கன் உலா
இந்த சரித்திர ஆவணங்களின் பின்னணியில் வேணுகோபாலனின் ‘உலா’ தமிழில் எழுதப்பட்ட முக்கியமான ஒரு நாவலாகத் தோன்றியது. சாண்டில்யன் கதைகள் போன்று கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்டு வேயப்பட்ட கதை எனினும் ‘உலா’ கற்பனை உலகில் நிகழ்கிற கதை அல்ல. பதினான்காம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கத்தில் உண்மையாகவே நடந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்து தொடங்கும் இந்த அவலக் கதையானது பல சரித்திரச் சான்றுகளுடனேயே பயணிக்கிறது.
ச. தமிழ்ச்செல்வனின் ’பேசாத பேச்சு’
எழுதுவதில் இருக்கும் சலிப்புக் காரணமாக, ‘தீம்தரிகிட’ இதழ் நின்றபோது ‘அப்பாடா’ என மகிழ்ந்ததாகக் கூறும் தமிழ் சாரின் வார்த்தைகள் தரும் சிரிப்புடன் புத்தகத்தைத் துவங்கினேன். முதல் கட்டுரையில், கல்லூரிப் பேச்சுப்போட்டியில் கடைசி நேரத் தலைப்பு, நடுவரின் விதி காரணமாக ஒரு வார்த்தைக் கூட பேச இயலாமல் திக்கித்திணறி மேடைக்குப் பின்புறம் குதித்து ஓடிப் போனதாக சொல்லியிருக்கிறார். அந்த நடுவர் …