வரலாறும் தத்துவங்களும் ஒரு நாவலுக்கு தேவை. வரலாற்று பின்னணியும் தத்துவ விசாரணையும் வெளிப்படையாக தெரியாதபடி அமைந்த நாவலாக சொர்க்கத்தின் பறவைகள் நாவலை சொல்லலாம். எந்த இடத்திலும் நாவல் தனக்குரிய வரலாற்றை நேரடியாக சொல்லவில்லை. எந்த தத்துவ தேடல்களும் அதற்கில்லை, ஆனால் அவை மிகச்சரியாக பின் தொடர்ந்தபடி இருக்கின்றன. நாவலில் உள்ளீடாக இருக்கும் வரலாறும் தத்துவத்தையும் வாசகன் அறியும் போது ஏற்படும் கிளர்ச்சிதான் நாவலை நடத்திச் செல்கிறது.
Category: புத்தகவிமர்சனம்
கடவுள் தொடங்கிய இடம் – அ. முத்துலிங்கம்
பயணத்திற்கு எப்போதும் தயாராய், சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்கு மாஸ்ரர் “டைனோசர்களுடன் வாழ்ந்த, நான்கு சிறகுகள் கொண்ட மைக்ரோராப்டர் வலிமையானது. அது இரண்டு சிறகுகள் கொண்ட பறவைகளை வேட்டையாடி உண்ணும். உயிர் வாழ்வதற்கு இரண்டு சிறகுப் பறவைகள் அதி வேகமாகப் பறக்கத் தொடங்க, மைக்ரோராப்டரால் அவற்றைப் பிடிக்க முடியவில்லை. பட்டினி கிடந்து அழிந்து போயின. முந்தியது பிந்தியது என்று இல்லை; திறமையும் மதியூகமும் தேவை” எனச்சொல்கிறார்.
உண்மையுமாய் இன்மையுமாய்…
நிர்வாணத் தேடலின் துவக்க நிலையில் ஒரு உரையாடலின் போது சித்தார்த்தன் கோவிந்தனிடம் சொல்கிறான் //”தியானம் என்பது என்ன? உடல் மறந்து கிடப்பதும், உபவாசமிருப்பதும், மூச்சை அடக்குவதும் எல்லாம் என்ன? அகத்தை விட்டுப் பறப்பதுதானே? ‘நான்’ எனும் வேதனையிலிருந்து சற்றே தப்பித்துக் கொள்ளும் தந்திரங்கள் தானே? துயரங்களையும் தொல்லைகளையும் சற்றே மறந்திருக்கிற தன் ஏமாற்றம் தானே?”//
குறத்தி முடுக்கு: ஒரு பார்வையின் பயணம்
விலைமகளிர் தெருவையும் அவன் முதலில் உடல் தேவையை நிறைவேற்றும் இடமாகத்தான் அணுகுகிறான். ஆனால் குறத்தி முடுக்கு தெருவில் உள்ள தங்கம் என்ற இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தின் உடனான உறவு அந்தத் தன்னம்பிக்கையை மெதுவாக உடைக்கத் தொடங்குகிறது. அவள் மற்ற ஆண்களுடன் இருப்பதைப் பார்க்கும்போது அவனுக்குள் ஏற்படும் சங்கடமும் பொறாமையும், உரிமை உணர்வும், “நான் உணர்ச்சியற்றவன்” என்ற அவனுடைய சுயபிம்பத்துக்கு எதிராக நிற்கின்றன. அவளுக்காகப் பணம் செலவழிப்பது, அவளுடைய வீட்டின் உள்தோற்றத்தை மாற்றுவது, அவளை மணக்க வேண்டும் என்ற ஆசை, அவள் இல்லாதபோது ஏற்படும் வெறுமை போன்ற அனைத்தும் அவன் முன்பு மறுத்திருந்த “காதல்” என்ற உணர்வின் வேறு வடிவங்களாகத் திரும்புகின்றன.
இமாமும் ஷாதுலும்: நிலம் மனிதனை மிருகமாக்கும் கதை
நிலம் என்பது ஒரு மனிதனை எப்படி மிருகமாக்கும் என்பதை இந்த நாவலில் வரக்கூடிய சில கதாபாத்திரங்கள் மூலமாக நாம் மிக அற்புதமாக புரிந்து கொள்ளலாம். சந்தர்ப்ப சூழ்நிலையால் மனிதன் மிருகம் ஆகிறான் என்பது இந்த நாவலின் மையக்கருத்து என்று நான் நம்புகிறேன். இந்த கதையின் மைய கதாபாத்திரங்கள் என்று பார்த்தால் ,ஒரு கிராமத்தில் விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய அப்பா, அம்மா மற்றும் மகன் இவர்களோடு ஒரு கரடி மற்றும் சிலர் அவ்வளவே.
வாழ்வெனும் விசும்பின் ஓர் துளிர்
இத்தொகுப்பில் பல கதைகள் மனதை நெகிழ வைத்து கண்கள் நிறைத்தன. அவர் ஒரு ஏழை கோவில் அர்ச்சகர்/குருக்கள். மகன் திருமணமாகிய சில வருடங்களிலேயே இளம் வயதில் இறந்து விடுகிறான். மருமகள் இரண்டு குழந்தைகளுடன், இங்கு புக்ககத்தில் தான் வசிக்கிறாள். பேரக் குழந்தைகளுக்கு தாத்தாவின் மேல் மிகப் பிரியம். மகள் முக்தா திருச்சி கணவன் வீட்டிலிருந்து சில நாட்கள் முன்பு தான் இங்கு வந்திருக்கிறாள். கொஞ்ச நாள் தங்கிவிட்டு திரும்பிப் போகிறாளா? என்ன விஷயம் என்று முழுதாகத் தெரியவில்லை. ஆனால் திருமணத்திற்கு முன்பு முக்தாவிடம் இருந்த கலகலப்பும், உற்சாகமும் இப்போது இல்லை. குருக்களுக்கு சமீப காலமாக மனதில் சஞ்சலமும், கேள்விகளும், நாத்திக எண்ணங்களும் தலைதூக்குகின்றன
ரூட் 66: கண்ணீரிலும் கரையாத நம்பிக்கை
மனிதர்கள் எப்படி பெரும் துயர் களை எதிர் கொள்கிறார்கள் என்பது இந்த நாவலில் காட்டப்படுகிறது. முகாமில் வசதிகளே இல்லாத பொழுதும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கின்றனர். தம் பசியை விட வழியில் சந்திப்பவர்களின் துன்பமும் பசியும் பெரிது என்று உதவுகின்றனர். தனித்தனிக் குடும்பங்களாகப் பயணிப்பவர்கள், வழியில் ஒன்றிணைந்து ஒரு பெரிய சமூகமாக மாறுகிறார்கள். மனிதநேயம் மற்றும் ஒற்றுமையே பிழைப்பதற்கான ஒரே வழி என்பதை ரூட் 66 பயணம் கற்பிக்கிறது. ரூட் 66 பயணம் செய்பவர்கள் எல்லாச் சவால்களையும் கடந்து நம்பிக்கை இழக்காமல் விடாமுயற்சியுடன் இடம் பெயர்ந்து தமக்கான வாழ்க்கையை தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு மண்ணின் நினைவுகளும், ஒரு சமூகத்தின் ஆன்மாவும்
இந்த நாவலில் பெண்கள் வெறும் துணைக் கதாபாத்திரங்களாக இல்லை. சமூகத்தின் இயக்க சக்திகளாக இருக்கிறார்கள். உண்ணிமாயா, கொழும்பிலிருந்து பொருளாதார வசதியுடன் வரும் கொழுந்தனை விரும்பி, அதே மனிதன் வேலை இழந்து வறுமையுடன் திரும்பியபோது ஒரு கிழிந்த பாயை மட்டும் கொடுத்து ஒதுக்கும் காட்சி, மனித உறவுகளில் பொருளாதாரத்தின் தாக்கத்தை மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறது.
இத்தி மரத்தடி எஞ்சுவது: மண்ணின்றி நிலைகொள்ளா வாழ்வுகள்
படைப்பு உள்நாட்டுப் போரின் சிங்களத் தரப்பை பற்றிப் பேசுவதில்லை. அதன் மறு தரப்பான இயக்கத்தைப் பற்றியும் விரிவாகப் பேசுவதில்லை. இந்தப் போரில் அகப்பட்ட மலையக மற்றும் ஈழத்தமிழர்களின் போர்க்கால வாழ்வை, அவர்களின் தரவுகளை, கண்ணீரை, வாழத்துடிக்கும் விழைவை, இழந்தவற்றை, போர் அன்றாடம் ஆவதன் நிதர்சனத்தை, குரூரத்தை, சாகவும் தயார் என்ற அர்ப்பணிப்பைச் சொல்கிறது. ஈழத்தமிழர்களின் அனுபவம் வேறுபட்டது.
பார்க்கப்படாத வாழ்வுகளின் சாளரம்: ஷாராஜின் வீதிகளூடே ஒரு பயணம்
கைவிடப்பட்ட , மனப்பிறழ்வுக்கு ஆளான , சுய சுகாதாரத்தைப் பேணிக்கொள்ளத் தெரியாத நிலையில் பேருந்து அல்லது இரயில் நிலையங்களிலோ, நம் ஊர்களிலோ அல்லது நாம் வசிக்கும் வீதிகளிலோ, இப்படி ஏதோ ஒரு இடத்தில் தம் உயிரை மட்டுமே தக்கவைத்துக் கொண்டு நம்மிடையே பிழைத்துக் கிடக்கும் மனிதர்களை நாம் எல்லோரும் நம் வாழ்வில் ஒரு முறையாவது சந்தித்திருப்போம்; அப்படி இதுவரை இல்லையெனில் இனி நிச்சயம் சந்திக்க நேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அப்படியான ஒரு பெண்ணின் கதை தான் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘ பரட்டச்சி ’ என்கிற கதை.
போனதும் நின்றதும் : சேர்வராயன் மலை சாட்சி சொல்கிறது
‘போக்கிடம் நாவலின் பேசுபொருளான இடப்பெயர்வே அதன் இளமைக்கும் புதுமைக்கும் காரணம் என இப்போது புரிகிறது. மானுடகுலம் உருவான காலத்திலிருந்தே இடப்பெயர்வுகளும் உருவாகிவிட்ட சூழலில் இடம்பெயர்தல் தொடர்பான ஒரு படைப்பு ஒரு போதும் தன் இளமையை இழப்பதில்லை. காலம்தோறும் வாழ்வதற்கான வழிகளைத்தேடி அமைதியைத்தேடி பாதுகாப்பத்தேடி வெற்றியைத்தேடி சுதந்திரத்தைத்தேடி மனிதர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் சென்றுகொண்டே இருக்கிறார்கள்.’
கண்ணாடிச்சுவரின் இந்தப்புறம்: ஐந்து நிலப்பரப்புகளில் பெண்
நாவலின் தொடக்கத்தில் நாற்பதை நெருங்கும் பெண்ணாக அறிமுகமாகும் லீலா தன் கடந்த காலத்தை நினைவுகூறுவதன் வழியாக, அவளது குழந்தைப் பிராயம், பதின்ம வயது மாற்றம் பின் இளவயதிலேயே திருமணம் எனத் தன் வாழ்வை மீண்டும் மீண்டும் கனவுகளாலேயே அர்த்தப்படுத்திக் கொள்ள முயல்வதாக இந்தக் குறுநாவல் அமைந்திருக்கிறது. லீலா தனது நினைவுகளை மீட்டெடுக்கும் விதம், அவளுக்கு கடந்தகாலம் என்பது நினைவுகள் அல்ல; காலத்தின் முன் எப்போதும் பதினாறு வயதுப் பெண்ணாகத் துள்ளிக்குதிக்க விரும்புகின்ற அவளால், இயல்பாக சுவாசிக்க முடிகின்ற ஒரே உலகம் எனக் காட்டுகிறது.
இல்லை என்பதும் வாழ்க்கையின் அங்கம்: சட்டிச்சாமியிலிருந்து சார்லு வரை
அங்கம்மாவின் கடி தவரிகளோ வேண்டுகோளோ மட்டும் அவன் ஊருக்குத் திரும்பி வருவதற்கான காரணமல்ல. அங்கம்மாவின் சொற்களுக்கு அப்பால் அவன் எழுதிய கூடுதல் சொற்களே முக்கியக் காரணம். அதன் கூர்மையும் அழுத்தமும் தாங்காமல்தான் அவன் வெளி நாட்டிலிருந்து வேக வேகமாகத் திரும்பிவிட்டான். அது தெளிவாகத் தெரிகிறது.ஆனால் அவனை வரவழைக்கும் வகையில் என்ன எழுதியிருப்பான் என்பது புதிராகவே இருக்கிறது.’ கதையில் புதிராகவே விடப்பட்டுள்ளது என்பதுதான் கதையின் வெற்றி. அந்த மெளனமே விட்டல்ராவின் சிறுகதைக்கலை என்கிறார் பாவண்ணன்.
ஜரிகையற்ற வாழ்வின் கதைகள்
ஐம்பது வயது முதியவர் சிறு கதையின் நாயகன். மணமாகாதவர்.மனம் விட்டுப்பேசவும் ஒரு ஆறுதல் கூறவும் அவருக்கு ஒரு துணை வேண்டும். அப்படி ஒரு பெண்ணும் அமைந்து விடுகிறாள். ஊரார் ஆயிரம் பேசுவர்தான். ஈவிரக்கமற்றது காலம். அவள் இறந்தும் விடுகிறாள். அம்முதியவர் அவளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு ஊர் திரும்புகிறார். அவரின் மன வலி யாருக்குத்தான் புரியும். அக்களூர் இரவி தத்ரூபமாக அந்த பாத்திரத்தை நம்மோடு அமர்ந்து பேச வைக்கிறார்.
காத்திருப்பின் கலை: கிரிதரனின் திறனாய்வுலகம்
விமர்சகர் கிரிதரன் இப்படி சடங்காக அன்றி விமர்சனத்துக்குறிய இலக்கணங்களோடு நூல்கள் எதுவாயினும், எழுதியவர் எவராயினும் மொழிபேதமின்றி வாசித்து மகிழ்ந்ததை உணர்வுக்கொப்ப தீர்ப்பளித்துள்ளது ஒரு பக்கமெனில், ஒவ்வொரு நூலைக்குறித்தும் திறனாய்வு செய்கிறபோது முனைகிறபோது அந்நூல் அவர் எப்போதோ எங்கோ வாசித்த நூல்களை, நூலாசிரியர்களை நினைவுகூர அப்பகுதி நண்பர் கிரிதரனின் பரந்த வாசிப்புக்கு மட்டுமல்ல அவர் விமர்சனத்திற்கு எடுத்துக்கொண்டுள்ள நூல்களுக்கும் பெருமை சேர்க்கின்றன.
ராமச்சந்திரம்
நகரத்தில் வளர்ந்த பெண்ணான 18 வயது மாயாவிற்கு, கேட்டவரம்பாளையத்தின் இயற்கை அழகு மிகப் பிடித்து விடுகிறது. ஆனால் கிராமத்தின் பழக்க வழக்கங்கள் சில அவளுக்கு வியப்பையும், மெல்லிய அசூயையும் அளிக்கின்றன. கிராமத்து மனிதர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள். வாசுவிற்கு ஊரில் நல்ல மரியாதை. பட்டணத்துப் பெண்ணான மாயாவின் நடை, உடை, பாவனைகள்/நடத்தைகள் கிராம மக்களுக்கு புதிதாக இருக்கின்றன. கேட்டவரம்பாளையம் ஊருக்கு வந்த புதிதில், கிராமத்து மனிதர்கள், பெண்களின் சில கட்டுப்பெட்டித்தனங்கள் மேல் மனதுக்குள் சிறிய கேலியும், எள்ளலும் கொண்டிருக்கிறாள் மாயா.
கனவின் சிறை, கதையின் ஊர்தி
காண்டீபத்தின் மாலினி தேவி மற்றும் சுபகையின் உரையாடல்களில் முரண் ஒன்று உள்ளது. நாவல் முழுக்க கதைகள் சொல்லப்படுவதும், சில நேரங்களில் கேள்விக்குள்ளாக்கப்படுவதும் இந்த இரு பெண்களின் குரல்களில் தான் எனலாம். சந்தேகத்துடன் பேசும் சுபகை மகாபாரதம் கூறும் நகரங்களின் ஆண்டுகளைச் சேர்த்தால், அர்ஜுனன் நூறு வயதாக இருக்க வேண்டும் என்று ஓர் இடத்தில் சொல்வாள். மாலினி சிரிப்பினை அதற்குப் பதிலாக வைப்பாள். புராணத்தில் இடைவெளிகள் இருந்தே ஆக வேண்டும்; அதன் உண்மை தேதி என நகரும் நாட்களில் இல்லை என்று அவள் சொல்கிறாள். இந்த உரையாடல் வாசகனுக்கு ஒருவகை சுதந்திரத்தை அளிக்கிறது: நம்பாமலும், அதே நேரம் மறுக்காமலும் கதைகளை அனுபவிக்கலாம்
வேட்கை கொண்ட மனதின் ஆன்மீகத் தேடல்
பக்தி நாவலின் முக்கிய புள்ளியாகிறது. கலை வெளிப்பாடுகளின் வழியே, பண்பாட்டு நிகழ்வுகள் வழியே பக்தியை காணும்போது அவற்றை அர்த்தமற்றவையாகவே நாயகன் கருதிக் கொள்கிறான். அஸீசுன் எனும் சிறிய கதாபாத்திரம் இடம் பெறுகிறது. அவர்கள் தங்களை மறந்து, பசியில் நடனமாடுகிறார்கள். நடனத்தின் வழியே ஒரு உன்மத்த நிலையை அடைய முயற்சிக்கிறார்கள். முதலாளித்துவ பார்வையில் தேவைகளை செல்வத்தின் மூலம் நிரப்பி விட முடியும். ஆழ்மன ஆசைகளையும் வேட்கைகளையும் செல்வத்தின் வழி நிறைவேற்றிவிட முடியும் எனும் போது செல்வமற்றவர்கள் எதைக் கொண்டு தங்களின் ஆழ்மனத் தேவைகளை நிறைவேற்றுகிறார்கள் ? நடனத்தின் வழியே எந்த இடைவெளியை அவர்கள் நிரப்ப முனைகிறார்கள் என்று சிந்திக்கிறான்.
‘சாதகப் பறவையின் காத்திருப்பு’ மற்றும் ’துப்பாக்கி போல் சொகுசாய் கிடக்கிறது பேனா’
படைப்புலகம் என்கிற அரசவையில் வீற்றிருக்கும் படைப்பாளிகளில் திறனை அவரவர் படைப்புகள் ஊடாக அவரது விமர்சன துலாக்கோல் அளவிட முயற்சிக்கிறது. ’செட்டியார் மிடுக்கை’ப் பார்க்காது, அதாவது படைத்தவர் யார் என்பதைக் காட்டிலும் அன்னாருடைய சரக்கின் மிடுக்கைக் கணக்கிற்கொண்டு, படைப்பினை நவீன இலக்கிய எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் அணுகியுள்ளார்.
சிவப்பின் பின்னிருளில்: ‘பலி பீடம்’ ஒரு வாசிப்பு
யாமாவின் பெரிய தெருவில் இடதுபக்கம் முதல் வீட்டுக்குடிக்கு டிரெப்பல் என்று பெயர். டிரெப்பல் அப்பகுதியில் முதல் தரமான விடுதி. டிரெப்பலில் வேளைக்கு மூன்று ருபிள்களும், ராத்திரி முழுவதும் தங்குவதென்றால் பத்து ரூபிள்களும் வாடிக்கை. இரண்டு ரூபிள் விடுதிகள் யாமாவில் மூன்றுண்டு. ஒன்று ஸொபிவாஸிய்வனா நடத்துவது. மற்றொன்று அன்னா மார்க்கோவ்னா நடத்துவது.
அ. முத்துலிங்கத்தின் ‘பூனை மனிதன் (உலகச் சிறுகதைகள்)’
கதைகளைவிட, முத்துலிங்கம் அவர்களின் முன்னுரையில் குறிப்பிடும் சம்பவங்களும், ஒவ்வொரு கதாசிரியரின் மனோபாவம் மற்றும் அவர்களது அனுபவப் பகிர்வுகளும் மெல்லிய நகைச்சுவையுடன் கூடிய சுவாரஸ்யங்கள்! ஜெர்மனியில் பெர்லின் நகரில் வசிக்கும் எழுத்தாளர் ஒருவர் முத்துலிங்கத்திற்கு எழுதிய கடிதத்தில், ‘எப்போது பெர்லின் நகருக்கு வந்தாலும் தன் வீட்டு அழைப்பு மணியை அடியுங்கள்’ என்று கரிசனையுடன் அழைத்திருந்தாராம் – ‘ஆனால் வீட்டு முகவரியைத் தர மறந்துவிட்டார்’ என்று அ.மு. குறிப்பிடுகின்றார்!
நாவலாய் நீடுவிரியும் நெஞ்சையள்ளும் கவித்துவம்
யதார்த்தமும் மாயமும் நெடுக இழைந்து, ஒரு மாய யதார்த்தவாத ரீதியில் நாவல் நகர்கிறது. நாவலில் பயிலும் மாய யதார்த்தச் சித்தரிப்புகளோடு, ஒருவர் ஒன்று வினவ, இன்னொருவர் அதை வேறுவிதமாய்க் கேட்க, பதிலுக்கு அவர் ஒன்று வினவ முன்வினவியவர் அதை வேறுவிதமாய்க் கேட்க- இப்படி மாறி மாறித் தொடரும் வித்தியாசமான உரையாடல்களும் சேர்ந்து, நாவலில் நெடுக ஒரு புதிய உத்தியாய் வந்து நாவலின் மாய யதார்த்தவாதத்தை நாவலில் மேலும் வலுக்கூட்டுகின்றன.
சந்திரா தங்கராஜின் ‘மலையேற்றம்’
இந்நாவலின் உருவகங்கள் உயிரோட்டம் அளிக்கின்றன, ராசபாண்டியின் தனிமையின் சுவர்கள் இயற்கையின் அழகில் பாளங்களாய் உதிர்கின்றன. அப்பாவின் அருகில் போவதும் வருவதுமாய் இருக்கும் மஞ்சள் பட்டாம்பூச்சிகளை அவன் அம்மாவாகக் காண்கிறான். ‘தேன் இருக்கும் லட்சம் பூக்களை விட்டுவிட்டுக் காய்ந்த மரக்கட்டைகளில் அவை எதைத் தேடுகின்றன’ என வியக்கிறான்
பைரப்பாவின் நாவல் ‘பிளவு’ – ஒரு பார்வை
கணவன் மனைவி முரண்களில், குழந்தைகள் நிலை பரிதாபமானது. நாவலில் வரும் குழந்தைகள், தந்தையைச் சார்ந்தே இருப்பது, பொருளாதாரம் சார்ந்ததா? பாசம் சார்ந்ததா? பெண்ணுரிமையில் தாய்மை உணர்வு அற்றுப்போய்விடுமோ என நினைக்கத் தோன்றுகிறது.
ஓவர்கோட்டுக்கும் பார்டெல்பீக்கும் இடையே: விமலாதித்த மாமல்லன் சில குறிப்புகள்
அவனிடம் ஏதோ ஒன்று நம்மை வசீகரிக்கிறது. அவன் அணிந்திருக்கும் ஓவர்கோட் மீது அவன் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை. அது அபூர்வமானது, இந்நூற்றாண்டில் அனேகமாக காலாவதியாகி விட்டதென்றே நினைக்கிறேன். அரிதாகிவிட்டதும் அதன் வசீகரத்தை அதிகரித்துக் காட்டுவதாக இருக்கலாம். தன் அவலத்தைப் பொதுமைப்படுத்த நாம் அனைவருமே குமாஸ்தாக்கள்தான் என்று அவன் கைகொட்டிச் சிரிக்கிறான். உண்மைதான், நமக்கும் ஒரு ஓவர்கோட் தேவையாக இருக்கிறது. அதை இவ்வளவு இறுக்கமாக, சருமமாகிவிடும் அளவுக்குப் பற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கைக்காகவே நாம் அக்கயவனுடன் பயணிக்கிறோம். இதுவே ஆபீஸின் வெற்றியும்கூட.
வனத்தின் மடியில் — ஓர் அழிப்பின் வாசிப்பு
ச. பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ – புத்தக வாசிப்பனுபவம் ‘ சோளகர் ’ என்பார் தமிழக மற்றும் கர்நாடக எல்லை வனப்பகுதிகளில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவர் ஆவர். அம்மக்களின் தாய் மொழியான சோளகர் மொழியில் இச்சொல்லிற்கு “ வனத்தைச் சார்ந்தவர்கள் ” என்பது பொருள். மேலும், அம்மக்கள் “வனத்தின் மடியில் — ஓர் அழிப்பின் வாசிப்பு”
பேட்டை நாவல் காலத்தின் ஆவணம்
1639-இல் ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டையை நிறுவுவதற்கு முன்பு, சோழமண்டலக் கடற்கரையோரம் மீன்பிடித் தொழிலையும் வேளாண்மையையும் வாழ்வாதாரமாகக் கொண்ட தமிழ் சமூகங்கள் வாழ்ந்து வந்தன. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, எழும்பூர், நுங்கம்பாக்கம் மற்றும் புரசவாக்கம் போன்ற கிராமங்கள் கடலோர வணிகப் பாதைகள், கோயில் வலைப்பின்னல்கள் மற்றும் விவசாய நிலப்பரப்புகளுடன் இணைக்கப்பட்ட சிறிய குடியிருப்புகளாக இருந்தன. இவர்களின் உலகம் கடல், பருவமழை என்றுதான் பிணைக்கப்பட்டிருந்தது.
புதைகுழி மேல் நின்ற வாழ்க்கை
போரின் இரு பக்கங்களிலும் சாதாரண மனிதர்கள் சிக்கிக்கொள்கிறார்கள் என்பதை இந்தச் சம்பவம் மிக எளிமையாகவும் ஆழமாகவும் வெளிப்படுத்துகிறது. ஒரு பக்கம் தமிழர்கள் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்; மறுபக்கம் சிங்கள இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமில்லாத ஒரு போரில் சிக்கிக்கொண்டு அதிலிருந்து தப்பிச் செல்ல முயல்கிறார்கள். இந்தச் சந்திப்பு போரின் அரசியல் எல்லைகளைத் தாண்டி மனித துயரத்தின் பொதுவான தன்மையை வெளிப்படுத்துகிறது.
மெக்கானிக் கதைகள்
சிறிய எளிய கதைகள், எளிமை இக்கதைகளில் வலிமை எனலாம். நேரடியாக வாசகருடன் உரையாடும் இக்கதைகளை நாம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. தன் கதைகள் மேலிருக்கும் அளவிலாத பற்று ஒவ்வொரு கதைகளிலும் மிளிர்க்கிறது. தன் சொந்த அனுபவத்தின் சாயல்களும் நெருக்கமான ஒன்றின் அமைதியும் கதைகளில் பிரதிபலிக்கின்றன. கூடவே இக்கதைகளை சொல்லியே தீரவேண்டும் என்கிற ஆசிரியரின் வேட்கையும் வெளிப்படுகிறது.
கிருதுமால் நன்செய் – மதுரை மக்களின் வாழ்வியல் சித்திரம்
துணைஇல் தொடங்கி சில்லறைக் காசுகள் வரையான 16 கதைகளும் நாம் அன்றாடம் சந்திக்கும் எளிய மனிதர்களின் வாழ்வியலைச் சொல்கின்றன. தூக்குச் சட்டியில் (துணைஇல்) தொடங்கும் கதை சாப்பாட்டுப் பொட்டலத்துடன்(சில்லறைக் காசுகள்) முடிகிறது. இரண்டும் உணவுதான். தானொரு விவசாயி என்பதால் கூட அவரையறியாமலே இப்படி அமைந்திருக்கலாம்.
இயற்பியல் எனும் அழகும் மந்தணமும்
ஏழாவது பகுதி மனிதர்களாக நம்மையும் அறிவியல் பாய்ச்சல்களையும் ஒன்று சேர்த்துவிடுகிறது. நம்மைச் சுற்றி இருக்கும் உலகை முழுமையாக விளக்கிவிட முடியுமா? பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் நாம் இந்த உலகின் மையம் அல்ல எனும் அறிதலுக்கு வந்திருக்கிறோம். ஒரு ஆக்டோபஸ் மூளையை விட மனிதர்களின் சிந்தனைத் திறன் ஒற்றைப்படைத்தன்மையக் கொண்டிருக்கிறது என நாம் உணர்ந்திருக்கிறோம். விண்ணிலிருந்து மழை போல துகள்களும், கதிர்களும், தூரக்கோள்களின் கார்பன் துகள்களும் நம் மண்ணோடும் நீரோடும் கலக்காவிட்டால் இன்று உயிர் எனும் அமைப்பு உருவாகி இருக்காது.
ஏழு ஸ்வரங்களுக்குள்..
திரு. அரவிந்த் நீலகண்டன், அவர் சிறு வயதில் படித்த மிர் பதிப்பக கதைகளைப் பற்றி மிக அழகாக எழுதுவார். அதைப் போலவே கிரியும் சொல்கிறார். அறிவியல், அவருக்கு கதைகளின் வழியே சுவையான அனுபவமாக ஆகியிருக்கிறது. அறிவியலும், அறிதல் முறைகளும், அவர், தன் முன்னுரையில் சொல்வதைப் போலவே, இந்தக் கதைகளில் காணக் கிடைக்கின்றன. குறிப்பாக விஞ்ஞான ஆய்வுகளுக்காக, தொழில்நுட்பத்துறையும், கச்சிதத்திற்காக விஞ்ஞானமும் ஒன்றை ஒன்று உந்தியபடி வளர்வது சுவாரஸ்யமான போட்டி.
ஜார் ஒழிக – சாம்ராஜின் சிறுகதைத் தொகுப்பு
மார்க்சிய இலட்சியத் தோழர்கள், சிறு வியாபாரிகளைக் கடுமையாகப் பாதிக்கும் புதிய வரிகளுக்கு எதிராக ‘தொழிலாளர் புரட்சி’ செய்யக் களத்துக்குத் தயாராகி வருகின்றனர். ஆனால் புரட்சி பரிதாபமாக நாய்க்கடியில் பிசுபிசுத்துப் போகிறது. கடைசியில், களத்தெருவில் காய் விற்பனை செய்யும் கிழவிகளும், கை வண்டியில் உணவு விற்றுக்கொண்டு இருந்த பாயும் துரத்தப்படுகிறார்கள்.
போதி மரத்தடியில்
இந்த அறிதலுக்கு, வெளியிலிருந்து சான்றுகள் ஏதும் தேவையற்று இருக்கிறது. பொருள்களை அறியத்தான் வெளிச்சம் தேவையாகிறது. வெளிச்சத்தை இன்னொரு வெளிச்சம் கொண்டு அறியத் தேவை இல்லை. இவ்வறிதல்களை அறிந்துணர்ந்து கடந்துசெல்வது ஞானம் என்றால் அது அளிக்கும் உயரிய கொடை என்பது விடுதலையே என்றாகிறது.
சலூன் நாற்காலியில் சுழன்றபடி கோணங்கி
கோணங்கியின் உரைநடை தனித்துவமானது. கனவு, கானல் நீர், ரசாயன மயக்கம், கட்புலனுக்கிடையே எச்சரிக்கையின்றி சுமூகமாகத் தாவும் வரிகள். புனைவு எழுதுபவர்கள் பொதுவாக காட்சிச் சிந்தனையாளர்களாக இருப்பது அரிது. ஆனால் அந்த அரிய பகுப்பைச் சேர்ந்தவர் கோணங்கி. வண்ணதாசன் படைக்கும் பாத்திரங்களைக் காட்டிலும் கோணங்கியின் பாத்திரங்கள் நிலையற்று காணப்படுகின்றன.
கண்ணனேந்தல் பறவைகளின் ஒளிப்பாய்ச்சி
தான் ஒரு இயற்கைக் காதலன் என்பதனை மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றன சிவக்குமார் கணேசனின் கவிதைகள். அதிலும் குறிப்பாக “மாங்குயில்களின் கருங்கொண்டை” என்ற வார்த்தையை கவிதைகளில் நிறைய இடங்களில் புழங்குகிறார். கொன்றை மலர் அரும்பிய மரத்தைப் போன்றிருக்கும் மயிலின் கொண்டைகளை யார் தான் ரசிக்காமல் இருக்க முடியும். ஆசிரியரையும் அகவியலைக்கின்றன மாங்குயிலின் கருங்கொண்டைகள் என்பதனை உணர்த்துகிறது.
பாரதியின் காளி
காசியில் இருந்த சமயம் பாரதிக்கு சுதேசி இயக்கம் அறிமுகமாகிறது. பொருளாதாரத்தின் சிக்கலான சமன்பாடுகளைக் கொண்டு தேசம் என்பதையும், அதனால் அது எதிர்கொள்ளும் அபாயம் என்பதையும் தாதாபாய் நௌரோஜி மிகச் சாதுர்யமாக விளக்குகிறார். அதை பாரதி கவனிக்கிறார். அதுவரை பண்பாட்டுப் பரப்பாக மன்னர்களும் மக்களும் கருதிக் கொண்டிருந்த காலத்தில், ஜாதிமைய அடையாளம், அதிகாரம் போன்றவற்றையே அறிந்திருந்தவர்கள் மத்தியில் பொருளாதாரப் பார்வையை நௌரோஜி முன்வைத்து அபாயத்தை எச்சரிக்கிறார்.
உரூப்-ன் ‘உம்மாச்சு’
மனம் நொய்மையடைந்து வாழ்வில் சலிப்புற்றிருந்த மாயன் மலைக் காட்டுப் பகுதியில் ஒரு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொள்கிறான். ஊரிலிருந்து வரும் மரக்காரும், ஹைத்ரோஸும் ஹஸ்ஸனுடன் மாயனின் உடலை லாரியில் ஊருக்கு எடுத்துப் போகிறார்கள். அப்பாவின் சாவிற்கு அப்துதான் காரணம் என்றெண்ணும் மரக்காரும், ஹைத்ரோஸும் அப்துவின் மேல் வன்மம் கொள்கிறார்கள். உம்மாச்சு நடைப் பிணமாகிறாள்.
அகவாழி
ஆழமறிய இயலாத ஆழ்கடலென அகவய மனித மனங்களின் கடலாகவும் எங்கும் பரந்து எல்லாவற்றையும் ஏந்தி, எல்லாவற்றையும் எல்லோருக்கும் தரும் புறவய அருட்கடலாகவும் ‘கடல்’ இருமுகங்காட்டி நிற்கிறது. அதன் முதல் முகம் லூசிஃபருக்கும் இரண்டாம் முகம் கிறிஸ்துவுக்கும் உரியது என நாம் கருதலாம். கடலின் முதல் முகம் மானுடத்தையும் அழிக்கவும் இரண்டாம் முகம் மானுடத்தைத் திளைக்கவும் செய்கிறது.
காற்றையும் நீரையும் போல் நித்தியம்
நாவலின் நெடிய நூலிழையாக காந்தி. காந்தியை சாதாரண மக்களிடமிருந்து ஆட்சியாளர்கள் பிரிக்கிறார்கள் என்று சொல்லும் ரமேஷிலிருந்து நாவல் தொடங்குகிறது. காந்தியர்களை, காந்தியவாதத்தைச் சிறு எள்ளலுடன் விவரிக்கிறான். அசாமின் முன்னாள் முதல்வர், ராஜவம்ஷியை சந்திக்கிறான். முதல் சந்திப்பிலேயே தன்னை எரிச்சலூட்டும், ஆனாலும் அவர் சிரிப்பில் குறுகுறுக்கும் ரமேஷ், அதே அலட்சியமான, இரக்கமற்ற அதிகார அமைப்பை மிக யதார்த்தத்துடன் கையாளும் ராஜவம்ஷியை இவர் நிஜமானவர்தானா? என வழிபடுகிறான்.
விட்டல் ராவ் ஓர் கலைச்சுரங்கம்
பொண்ணா இருந்தாலும் சரி, ஆணா இருந்தாலும் சரி, ஒவ்வொரு ஆர்டிஸ்ட் மனசுக்குள்ளயும் ஒரு பொண்ணுக்கான முகம்,ஒரு ஆணுக்கான முகம்னு தனித்தனியா இருக்கும். அந்த உருவம்தான் ஓவியத்துக்குள்ள வரும். அப்புறம் எதுக்கு மாடல்னு உங்களுக்குத் தோணலாம். அது அந்த குறிப்பிட்ட ஒரு கோணத்துக்காக ஒரு சாயலுக்காக. உடல் வளைவுக்காக. அந்த துல்லியத்தைப் புரிஞ்சிக்கறதுக்காகத்தான் மாடலை நிக்க வைக்கிறது
”குற்றத்தின் நறுமணம்” கவிதைகள் – விமர்சனம்
தனது கடந்தகால வாழ்வியலின் காட்சியை நிகழ்கால அசலாகக் கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். நிரை மரக்காலில் நிறைந்திருக்கும் நெல்மணிகளாய் சொற்கள் நிறைந்தவையாகக் கவிதைகள் காணப்படுகின்றன. தலைப்பே கொஞ்சம் வித்தியாசமாகத் தானிருக்கின்றன “குற்றத்தின் நறுமணம்”என்று. குற்றத்தினை பல்வேறு வகையான கோணங்களில் வகைப்படுத்தலாம்.
பாட்டினைப் போல் ஒரு விந்தை பாரின் மிசை இல்லை
நமது சங்கீதமே ஒரு ராகத்தின் நுணுக்கங்களை எல்லாம் ஒரு பாடகன் அல்லது ஒரு வாத்தியக்காரன் நுணுகி நுணுகி வெளியிடுவதில் தான் இருக்கிறது மேற்கத்திய இசையில் பல ஸ்கேல்களில் குறுக்கும் நெடுக்கும் தறியில் நெய்யப் படுவது போல் அனந்தமான இழைகளால் அது ஊடும் பாவுமாய் உருவாக்கப்படுகிறது
பேய்ச்சி – பேரன்பும் பெருவெறியும்
தன் குலத்தொழிலான வெட்டியான் வேலையை வெறுத்து அங்கிருந்து ஓடி வந்து, தன் குருவைக் கண்டடைந்து சிலம்பம் கற்றுக்கொள்கிறார். அங்கிருந்து தோட்ட முதலாளியிடம் சேர்ந்து, எவ்வாறோ அவரும் ஓலம்மாவின் அதே தோட்டத்திற்கு வந்து சேர்ந்து, அவளை மணந்துகொண்டு வாழத்துவங்கிறார். மணியத்தின் வீரம், குருவின் சொல்லுக்காக மதுவைத் தொடாதிருப்பது, பெரியார் மீதுள்ள பற்று, தோட்டத்து மக்களின் நலனுக்காக நீதி கேட்டுப் போராடுவது என அவரது வெளித்தோற்றம் இளைஞர்களின் தலைவனாக அவரை ஆக்குகிறது.
இசைவைத் தேடும் வாழ்க்கை
மற்ற புலிகள் அனைத்தும் கற்பனையில் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள், ஆனால் வேங்கை வனம் நாவலின் மச்சிலி உண்மையில் வாழ்ந்த புலி. அதுவும் நாம் வாழ்ந்த காலகட்டத்திலேயே வாழ்ந்த புலி என்பது குறிப்பிடத்தக்கது. வேங்கைவனம் நாவல் வெறும் புலியைப் பற்றிய கதை தானா என்ற கேள்வியை முன்வைத்தால், ஆம்/இல்லை என்று இருபதில்களும் சொல்லலாம். புலிகள் மூலமாக வரலாறு, வரலாற்று புனைவு, போர், அதிகாரம், படிநிலை, காலனித்துவம், சூழியல், காதல், அறம், துரோகம், மனித-விலங்கு உறவு, இயற்கையின் வலிமை, இயற்கை மீதான ஆதிக்கம் போன்ற பல பரிமாணங்களை இந்நாவல் ஆராய்கிறது.
வேங்கை வனம் நாவல்: ஒரு சூழலியல் ஆவணம்
துவக்கத்திலிருந்தே கோட்டையில் இருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு பெருமைக்குரிய விஷயமாக இருக்கிறது புலிவேட்டை. புலிவேட்டைகள் மிகக் கொடூரமாக நடந்திருக்கின்றன. நேரடியாகப் புலியின் வாயிலேயே ஈட்டியை சொருகுவது, ஒரே சமயத்தில் வாளால் வெட்டியும் ஈட்டியால் குத்தியும் புலிகளைக் கொல்வது தொடர்ச்சியாகச் சொல்லப்படுகிறது. பல புலிகள் இதில் இருக்கின்றன. பாஹினி, மோஹினி, கிருஷ்ணவேணி என்னும் கிருஷ்ணா, சுல்தான் புரி , சுல்தான் புரியின் குட்டியான மற்றோரு சுல்தான் புரி, பிறகு மச்சிலி
கரானா – மறையும் சுவடுகள் – ஹிந்துஸ்தானி இசை உலகம்
சிறுவனான சந்திரகாந்தின் பயிற்சியிலிருந்து கதை முஸ்தபாவின் நாட்குறிப்புக்குள் சென்று சேரும் இடம் கரானாவின் வரலாற்றை சொல்லத் தொடங்கும் இடம். ஜாபர் கான் என்பவர் யார்? அவரது இசையின் தொடக்கம் என்ன எனும் கேள்விகளிலிருந்து கரானாவின் ஆரம்ப காலங்களுக்குள் கதை செல்கிறது. சுதந்திரத்துக்கு முன்னான காலத்தில் அமைந்திருப்பதால் வரலாற்றின் சிறு பின்னல்களும் கதையினூடாகச் சொல்லப்படுகிறது. நம் கவனத்தைச் சிதறடிக்கக்கூடிய வகையில் வரலாற்றுப் பாடம் இல்லை. அது இந்த நாவலின் வேகத்துக்கு உதவியிருக்கிறது என்றாலும் நாவலின் பலகீனமும் இதுதான். பல தலைமுறைகளின் கதையைச் சொல்ல முற்படும்போது நாம் கால மாற்றத்தையும், மனிதர்களின் எழுச்சி வீழ்ச்சிகளை மட்டும் எதிர்பார்ப்பதில்லை.
பனி நிலமும், தனித்த பறவைகளும் – வேணு தயாநிதி கவிதைகள்
வேணு கவிதைகளை அகம் புறம் என இரண்டு வகைமைகளிலும் எழுதியிருக்கிறார். புறம் நோக்கிய கவிதைகள் இயற்கை, மனிதர்கள், நகரம், கோவில்கள் என்றும் அகம் சார்ந்த கவிதைகள் வாழ்வின் பொருள், தனிமை, பிரிவு, மரணம் ஆகியவற்றை சுட்டியும் அமைந்துள்ளன. ஒப்புநோக்க புறம் சார்ந்த கவிதைகளே தொகுப்பில் மிகுதியாக உள்ளன. வேணு காட்சிகளையும் நுண் தருணங்களையும் கவிதைகளில் மிக விரிவாகவே பதிவு செய்திருக்கிறார்.
சிவக்குமாரின் துதிக்கைத் துழாவல் கவிதை நூல் குறித்து
குறைந்தபட்சம் ஒரு முத்தத்தையாவது எதிர்பார்த்து ஏமாந்த கவிதை, உங்கள் அவசரத்தைக் கண்டு, தன்னை அடியாழத்தில் புதைத்துக் கொண்டதை அறிவீர்களா என்று நேரடியாகவே குற்றம் காட்டுகிறார். இந்தப் பொருண்மைக்கு அவர் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் பின்னட்டையில் போட்டிருப்பதிலேயே தெரிகிறது.
தெரிந்த நிழல்களும் தெரியாத நிஜங்களும்
மேற்கத்திய அறிஞர்கள் அல்லது இந்தியாவில் உள்ள மக்கள் கூட நாட்டில் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று புகார் செய்யும்போது, வளர்ந்த நாடுகளுடன் இந்தியாவின் தற்போதைய நிலைமைகளை ஒப்பிட்டுச் சாடுகிறார்கள். ஆனால் கொஞ்சம் ரூம் போட்டு யோசித்தால், அமெரிக்கா போன்ற நாடுகள் ஆரம்பத்தில் மிகச் சிறிய சிறுபான்மையினர் (அதாவது நில உடமைகளை வைத்திருந்த ஆண் வெள்ளையர்கள்) மட்டுமே வாக்களிக்கும் வழக்கைக் கொண்டிருந்த ஜனநாயக நாடுகளாக உருவாகின என்பது தெரிய வரும்.
