மோகனாங்கி

இவ்வளவு சொல்கிறோமே… மோகனாங்கிக்கு தமிழின் முதல் வரலாற்றுப் புதினம் என்ற இடம் எளிதில் கிடைத்துவிடவில்லை. பொதுவாகவே ஈழத்தவரின் தமிழ் இலக்கியப் பணிகளுக்குக் கிடைக்க வேண்டிய முறையான இடம் கிடைப்பதில்லை என்பது இன்றும் உண்மை. சி.வை.தா ஒருவர் போதுமே! அவர் இல்லையென்றால் தொல்காப்பியம் ஏது! கலித்தொகை ஏது! பல நூல்களைக் கண்டெடுத்த அந்த மாமேதையைப் பற்றி தமிழுலகம் பேசுகிறதா!

சிலையும், கல்லும் – நூல் விமர்சனம்

தங்கத்தின் மாற்றினை அறிவதற்கு. ஆசாரி. உரைகல் என்று ஒன்று வைத்திருப்பார். கிரிதரனின் வசம் அந்தக் கல் வந்திருக்கும் போலிருக்கிறது. முதல் கட்டுரை நாம் கொண்டாடும் ஜெயகாந்தன் எழுதிய ஒரு மனிதன் ஒரு வீடு, ஒரு உலகம். வாசனையைக் கொண்டு, பூவை அறிவது போல, நம்மை நேரடியாக பாதிப்பது, ஒரு எழுத்தின் மூலம் எழுத்தாளனை நாம் அறிந்துகொள்வதே. ஹென்றி என்ற. கதாபாத்திரம், புனைவின் பிடிகளுக்குள் கட்டுப்படாதவன். அவனது சமநிலை. ஆச்சரியப்படுத்தும் ஒன்று. ஜெயகாந்தன் சொல்லும் மிகச்சிறப்பான ஒரு அவதானிப்பை கிரி சொல்கிறார். மனிதன் என்பவன், சமூகத்தின் விளைச்சல் இல்லை. அவன் சுயமான எண்ணங்களைக் கொண்டவன்

இகிகை

‘இகிகை’ என்பது நான்கு கூற்றுகளின் கலவையாகும்: நீங்கள் எதை விரும்புகிறீர்கள், நீங்கள் எதில் சிறந்தவர், உலகிற்கு என்ன தேவை, உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்தேவையை எவ்வாறு நிவர்த்தி செய்வது? என்பதே அந்த நான்கு அடிப்படை மூலக்கூறுகள். “உங்கள் இகிகையைக் கண்டுபிடிப்பது என்பது ஒரு வேலை அல்லது பொழுதுபோக்கைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல, மாறாக உங்கள் தனித்துவமான நோக்கத்தையும் வாழ்க்கையின் பொருளையும் கண்டறிவதாகும்” என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

மயிலன் சின்னப்பன்

மருத்துவத்தில் குறிப்பிட்ட துறையின் வல்லுந‌ரான சார்வாகன் பல கதைகளை எழுதி இருந்தாலும், துறைசார் கதைகளை அவர் எழுதவில்லை.  பொதுவாகவே தமிழில் மருத்துவர்கள் இலக்கியம் எழுதுவது குறைவு,  தொழில் குறித்து எழுதுவது அரிது. மாறாக முதல் நாவல் மட்டுமன்றி,  மூன்று தொகுப்பும் சேர்த்து ஐந்து சிறுகதைகளும் முழுவதும் மருத்துவப் பின்னணியில் எழுதியிருக்கிறார் மயிலன் ஜி சின்னப்பன்.

உயரும் : சுரேஷ் பிரதீப்

திருமணமாக வேண்டிய வயதில், படித்துக்கொண்டோ அல்லது வேலையிலோ இருக்கும் மணமாகாத இளம்பெண்கள்  தோழிகளின் திருமணத்திற்கும் அவர்களின் குழந்தைகளைக் காணவும் சென்றிருக்கையில்.போக வேண்டுமென்னும் ஆர்வமும், போகலாமா, வேண்டாமாவென்னும் போராட்டமும், அங்கிருக்கும் பெரியவர்கள் என்ன கேள்வி கேட்பார்களோ என்னும் பதட்டமுமாக இருப்பது இயல்பு

பேரன்பை அருளும் துக்கம்

குழந்தை பெறுவதற்காக ‘பேக்கேஜ் மெடிசின்ஸ்’ என்று தனக்கு இல்லாத நோய்க்கெல்லாம் மருந்து சாப்பிடும் நந்தினியிடம்  ‘உன் உடம்பு தானே ஊரான் வீட்டுப்பண்டமா’ என்று தோழி கேட்பாள். ஒரு மனித உடல் இயந்திரமாக பார்க்கப்படும் அவலம் இந்த சிகிச்சைகளில் அப்பட்டமாக நடந்தேறுகிறது. 

மொக்குகள் கட்டவிழும் அற்புத தருணங்கள்

ஷெர்லாக் ஹோம்ஸின் தீவிர வாசிப்பின் பின்னணியில் சில குற்றப் புனைவுகளையும் சமைக்கத் தவறுவதில்லை காலத்துகள்.  ஆனால் அதற்கான களம், பின்புலம் என்றெல்லாம் மெனக்கெடாமல், ஒருவித அங்கத நடையில் எழுதி திருப்தியடைந்து கொள்கிறார்.  இடையே, இலக்கிய அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று ஏங்கும் எழுத்தாளனும் இடம்பெறத் தவறுவதில்லை. ஃபோர்ஹேவின் (Jorge Louis Borges)  பாதிப்பில், தன் குறுநாவலில் எழுதும் கனவின் பாதிப்பில், அதிலிருந்து வெளிப்பட்டு ஒரு சிறுகதையை எழுதிவிட்டுப் போகிறார்

சீர்மையின் நுதல் விழி – சித்ரனின் சிறுகதைகள் முன்வைத்து

சித்ரனின் கதைகள் அறிமுக எழுத்தாளர்களுக்கான எந்த தடையையோ தடுமாற்றத்தையோ பெரிய அளவில் எதிர்கொள்ளவில்லை. அவரது தொடக்கக்கால கதைகளில் சில நெருடலான/ பொருத்தமற்ற உவமானங்கள் வெளிப்படுகிறது. உதாரணமாக “செதில்களால் நெய்யப்பட்ட சட்டையை உரிக்கும் அரவமாய் எனது வெறுமையை என்னிலிருந்து அகற்ற அண்ணா நகர் பூங்காவிற்கு கிளம்பினேன்.” “கூட்டத்தால் கைவிடப்பட்ட கழுதைப்புலி ஒரு வலிமையான இரையை தாக்க வழியில்லாது வெறித்திருப்பதைப் போல் அவளை கவனித்தவாறிருந்தேன்” (தூண்டில்). இரண்டு மூன்று கதைகளுக்கு பிறகு இவ்வகையான பயன்பாடும் மறைந்து நேர்த்தி

மோட்சமெனும் தப்பிச்செல்லல்

தொகுப்பின் தலைப்பில் உள்ள ‘மோட்சம்’ என்ற சொல்லைச் சுற்றியே தொகுப்பின் பெரும்பாலான கதைகள் நிகழ்கின்றன. மோட்சம் என்ற சொல் சட்டென ‘நவீனத்துக்கு எதிரான’ மனநிலையை வெளிப்படுவதாகத் தோன்றுகிறது அல்லவா! ஆனால் விஜய்குமாரின் இக்கதைகள் அனைத்தும் நவீனமானவை. எளிமையான ஆற்றொழுக்கான நேரடி நடையைக் கொண்டிருக்கும் இக்கதைகளின் வாயிலாக தான் பேச எடுத்துக் கொண்ட விஷயத்தை மிகத் தெளிவாக விஜய்குமார் முன்வைக்கிறார்.

அஜிதனின் ‘அல் கிஸா ’

பெரும்பாலையில் துவங்கி இன்று வரை ஆயிரத்து முன்னூறு வருடங்களாக உபாசிக்கப்படும் நிகழ்வு ஒன்று இசையால், வரலாற்றின் துயரத்தால், காதலால் அதீத உருவகம் கொண்டு எழுச்சியடையும் கதை. படிக்கத்  துவங்கிய உடனே உள்ளிழுத்து வாசகரை அஜ்மீர் நகரத்தின் மேலே ஒரு மேகம் போல நிலை கொள்ள வைத்து விடுகிறது. அங்கிருந்து நாம் காண்பது மக்கள் செறிவு பல ஆறுகள் போல் ஒழுகும் காட்சி.

மானஸா- லஷ்மி பாலகிருஷ்ணன்

பிறக்கும் போதே அல்லது கருவுற்றிருக்கும் காலத்திலேயே ரஷ்யாவிற்கு எதிரான மனப்போக்கில் வளரும் குழந்தைகள், பழி வாங்க வேண்டும் என்றே பிறப்பிக்கப்படும் குழந்தைகள் என்று எப்போதுதான் இந்த வன்முறையும் போரும் ஓயும்? இதற்காக இன்னும் பல உயிர்களைக் காவு கொடுக்க வேண்டுமா?

பேச்சினும் எழுத்து ஆகச்சிறந்தது

அதீதத்தின் ருசி கிராமத்து வாழ்வியலை அவர்களின் மன உணர்வுகளோடு கலந்து புலம்பலை புறந்தள்ளி வாழ்வை வார்த்தைகளின்றி அவதானிக்கச் செய்து மன அமைதியோடு அமர்ந்து மண்ணை தன் மனதிற்கு ஏற்றவாறு மாற்றி அதற்கும் ஒரு ருசியை கொடுத்த மகத்துவத்தை உணர்த்தும் ஆழமானதொரு சிறுகதை. பெண்களின் அக உணர்வுக்குள் சலிப்பு, இயலாமை, அவமானம் எல்லாவற்றையும் அண்டவிடாமல் நுட்பமானதொரு மன வடிவை கட்டமைத்து பிரபஞ்சத்தை தன் உள்ளங்கைக்குள் அடக்கிவிட்டதொரு உணர்வைத் தரும் அதீத்தின் ருசி பெண்களின் பேராளுமையை பறைசாற்றுகிறது.

மனதில் புதைந்த காயம்பட்ட மிருகம் !

தனிப்பட்ட மனிதர்களின் பொறுப்போ, அல்லது திருமணம் என்கிற அமைப்பில் இருக்கக் கூடிய மௌடீகமோ, அந்தத் தம்பதிகளுக்குள் ஒரு விலகல் நேர்ந்து அவர்கள் தேமேயென்று வாழ்கிறார்கள். அவன் வெளியூருக்கு சென்ற சுதந்திரமான ஒரு நாளில் அவள் இணையத்தில் நுழைய, ஒரு மற்றொரு ஆளுடன் சுவாரஸ்யம் பூக்கிறது. அதில் அவள் திளைக்கிறாள். ஒரு ஓரத்தில் குற்ற உணர்ச்சிகளுக்கான ரெடிமேட் பதில்களும் உண்டு.

உலகில் ஒருவன் – தொப்புள்கொடி அறாத குழந்தை

சிறுவனின் பார்வையில் இருந்து பெரியவர்களைப் பற்றி, பெரியவர்களின் வாழ்வைப்பற்றி பெரிதும் பேசும் இக்கதையை வாசிக்கும் நாம் பெரியவர்களின் பார்வையில் சிறுவனாகவும், சிறுவனின் பார்வையில் பெரியவர்களாகவும் தோற்றம்கொள்ளும் மாற்றமும் மாயமும் நாவல் முழுவதும் நிகழ்துகொண்டே இருப்பது , வாசிப்புக்கு மட்டுமல்ல வாழ்வுக்கும் புதிய பரிமாணத்தைக் கொடுக்கிறது.

இரு மதிப்புரைகள்

வெறும் இருபத்தியைந்து அத்தியாயத்தில் எல்லாவற்றையும் சுருக்கி ஒரு தேர்ந்த மிலிடரி ஆபிசரின் ஆணைப் போல் எழுதியிருக்கிறார். வாழ்வின் துயரங்களை அனுபவிப்பவன் அதற்கான காரணங்களை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது? அதனால் குற்ற உணர்ச்சியே இல்லாமல் பரபரவென்று விரிகின்றக் கதை அதே வேகத்தில் முடிந்து விடுகிறது.

அனைத்துக்கும் சாட்சியாக நாம் 

ஒவ்வொரு காலகட்டமும் ஏதோரு விதத்தில் அதன் சாராம்சத்தை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது. பாரதியாரின் படைப்புகளை வாசிக்கும் ஒருவர் அரசர் காலத்தில் இருந்து ஜனநாயகக் காலம் அடைந்த தாவலின் சித்திரத்தை கண்டு கொள்ள முடியும். உலகலாவிய புது சிந்தனைகளை முன்வைத்துப் பேசிய முதல் தமிழரின் படைப்புகள் என்பதையும் உணர முடியும். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் எழுதிய வ.வே.சு ஐயர் அவர்கள் காலனிய ஆட்சியால் தொலைந்து போன பண்பாட்டுச் செல்வங்களை மீட்டுப் பேசத் தேவையான சிந்தனைகளை முன்வைக்கும் படைப்புகளை உருவாக்கினார். இருவரும் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் ஒரு வேளை தமிழில் நவீனத்துவமும் பின்நவீன நவ காலனிய யுகமும் ஒரே சமயத்தில் முதிர்ச்சி அடைந்திருக்கும்

தமிழ்ப் பெண்கவிதைவெளி

இத்தொகுதியில் ஒரு சில கவிதைகளைத் தவிர ஏனைய கவிதைகளின் மைய விசயமாக பெண் இருக்கிறாள். ஆனால் இந்தப் பெண்ணை அவளின் அன்றாட வாழ்வோடு பொருத்தி அவளது பல்வேறு பரிமாணங்களை, அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். இந்தப் பகிர்வு பாசாங்குகளற்றது. சராசரியான ஒரு பெண் அனுபவிக்கக்கூடிய உடல், உள காயங்களிலிருந்து எழுவது

புதுவெளிச்சம்

இக்கதைகள் பரப்பும் நிறங்கள் வெவ்வேறாக இருந்தாலும், அவை நிச்சயமாய்  ஒளிர்தலைக்  கொண்டிருக்கின்றன. இந்தத் தொகுப்பின் அயல்நிலம் சார் கதைகள் பெரும்பாலும் தமிழ்ச் சிறுகதை உலகத்துக்குப் புதியவை. அவை தங்களை,  கதையை மொழிந்து வெளிப்படுத்திக் கொள்ளும் விதம் அபூர்வமானவை. கதையிடைவரும் அந்நிய நிலப்பரப்பின் மொழியும், நிலக்காட்சிகளும்  வசிப்பவரின் மனதை வசீகரப்படுத்துபவை. 

வண்ணதாசனின் வரிகள் வரைந்து செல்கின்ற அழியாச் சித்திரங்கள்

மே 1974இல் தலைஞாயிறு இலக்கிய அமைப்பு பதிப்பித்த, 32 கவிஞர்களின் 42 கவிதைகளை உள்ளடக்கிய ‘நாற்றங்கால்’ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த வண்ணதாசனின் (கல்யாண்ஜி) இரண்டு கவிதைகளில், ‘குரங்கின் குரங்குகளால் குரங்குகளுக்காக‘ என்கிற தலைப்பில் வெளியான கவிதை இது.   பயத்துடன் விடியும் காலைகுரங்குகள் வருமோ என்றுமதில் சுவர் ஓரம் “வண்ணதாசனின் வரிகள் வரைந்து செல்கின்ற அழியாச் சித்திரங்கள்”

‘குரவை’ நூல்– வாசிப்பு அனுபவம்

இந்த நாவலை, _”பன்முக நாட்டுப்புற கலைகளில் ஈடுபட்டு வரும் அத்தனை கலைஞர்களுக்கும்”_ சமர்ப்பித்துள்ள நூலின் ஆசிரியர், _”தஞ்சை வட்டாரத்தில் மரபார்ந்த கலையான கரகாட்டம் உள்ளிட்ட கலைகள் நீண்ட நெடுங்காலமாக நிகழ்த்தப்பட்டு வருகின்றது. அது ஒரு காலத்தில் உன்னத கலையாக இருந்தது. காலப்போக்கில் அது தனது அழகியலை இழந்து வெறும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட ஒரு நிகழ்ச்சியாக சுருங்கிவிட்டது. அந்த கலையில் திறன்மிக்க கலைஞர்களாக இருந்தவர்கள் காலச்சூழலில் அடையாளமற்று போனார்கள். அவர்கள் குறித்து நான் தொடர்ந்து பதிவு செய்து வந்தாலும், ஒரு நீண்ட கலை மரபுக்கு அவர்கள் ஆற்றி வந்த கலை சேவையை போற்றும் வகையில் இந்த நாவலை எழுதத் தொடங்கினேன்”_ என்று இந்த நாவல் எழுதத் தொடங்கியதற்கான நோக்கத்தை எழுத்தாளர் கூறுகின்றார்.

கோட்டைகளை ஆய்ந்த விட்டல் ராவ்

’பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் வாழ்ந்த டானியல் சகோதரர்கள் தென்னிந்தியாவில் பயணம் செய்தார்கள். அப்போது தாம் கண்டு களித்த பட்டணக்காட்சிகளையும் கோட்டைக்காட்சிகளையும் ஓவியங்களாக வரைந்து எடுத்துக்கொண்டு இங்கிலாந்துக்குச்சென்றார்கள். அங்கே எல்லாபடங்களையும் செப்புத்தகடுகளுக்கு மாற்றி  ஆக்வாடிண்ட்( நீர்வண்ண) பதிப்புகளாக நூல் வடிவில் வெளியிட்டார்கள். 144 ஓவியங்கள் ஆறு தொகுதிகளாக அவை வெளிவந்தன. கீழைநாட்டு இயற்கைக்காட்சிகள் ( ஓரியண்டல் சீனரி) என்னும் தலப்பில் அமைந்த அத்தொகுதிகளை தற்செயலாகப்பார்த்து மனம் பறிகொடுத்த விட்டல் ராவ் தனக்குள் உருவான மன எழுச்சியின் காரணமாக அத்தொகுதிகளில் உள்ள கோட்டைகளை நேரில் சென்று பார்த்து எழுதும் திட்டத்தை தனக்குள் வகுத்துக்கொண்டார்.’ 

வைக்கோல் மாந்தர்களும் பேசா பிராட்டிகளும்: பாழ்நிலத்துக்குப் பிந்தைய கவிதைகள்

பாகம் 1 1. ஹாலோ-மென் எலியட்டின் சர்வதேசப் புகழும் The Waste Land கவிதையும் ஒன்றி இருப்பதால் “வாழ்க்கை குறித்த ஓர் தனிப்பட்ட முக்கியமற்ற பிலாக்கணத்திற்கான வடிகால்… வெறும் சந்தநயமான முணுமுணுப்பு” என்று அவர் அப்பெருங்கவிதையைப் பற்றிய பின்னோக்கிய மதிப்பீட்டொன்றில் கூறியது பலருக்கும் ஆச்சரியமளிக்கலாம். நவம்பர் 1922-லேயே அவர் “வைக்கோல் மாந்தர்களும் பேசா பிராட்டிகளும்: பாழ்நிலத்துக்குப் பிந்தைய கவிதைகள்”

”காலாழ் களரில்” – புத்தக மதிப்புரை

சிறுகதைகள் அளவிற் சிறியவை, முக்கிய கதை மாந்தர்களாக ஒன்றிரண்டுபேர் இடம்பெற்றிருப்பார்கள். களமும் பொழுதும் குறுகிய பரப்பிற்குள் அடங்கியவை, உண்மையில் அவை மனித உயிர்வாழ்க்கையின் காட்சித் துணுக்குகள், அடிக்கோடிட்டு சொல்லப்படுபவை.  ஒருதேர்ந்த சிறுகதையாளர், தன்வாழ்க்கையில் தான்சார்ந்த சமூக நிகழ்வை, தனது படைப்பென்கிற புகைப்படக் கருவியில் ‘கிளிக்’ செய்கிறார். கலைஞரின் கலைத்துவ ஞானம், புகைப்படக் கருவியின் செயல்திறனுடன் இணைந்து எது சிறந்ததோ, எது முக்கியத்துவம் வாய்ந்ததோ, எது பின்னாட்களில் நினைவூகூரப்பட்டு மனதிற்கு ஆறுதல், மகிழ்ச்சி, சுகம், தரவல்லதோ அதை தன் கருவியில் பதிவு செய்து வாழ்க்கையின் ஈரத்தை, வறட்சியை, தென்றலை, புயலை, வெறுமையை, அபரிதத்தை,சகமனிதரோடு பகிர்ந்துகொள்கிறார். ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளரிடமும் இத்திறனைச் சந்திக்கிறோம்.  

பின்கட்டு

This entry is part 45 of 48 in the series நூறு நூல்கள்

இதில் இடம்பெற்றுள்ள ஐந்து கதைகளும் 1970களுக்கு முந்தின காலகட்டத்தில் நடை, கசடதபற போன்ற இதழ்களில் வெளிவந்தவை. நவீன மொழி நடையில் அமைந்துள்ளவை.
வயது மூத்தவளுடன் உறவு, தன்பால் உறவு, குடும்பத்தில் உள்ளவளோடு உறவாடும் இன்செஸ்ட் உறவு, தாயின் மீது சிறுவன் கொள்ளும் மறைமுக நாட்டம், உடலுக்கு ஏங்கி அலையும் இளைஞன் என ஐந்து பொருண்மையில் கதைகள் இடம்பெற்றுள்ளன.

இரா. முருகனின் நளபாகம்

This entry is part 44 of 48 in the series நூறு நூல்கள்

முருகன் சொற்பமான இவ்வரலாற்றுத் தரவுகளைச் சாரக்கட்டாகப் பயன்படுத்தி நானூறு ஆண்டுகள் தொலைவில் அமைந்திருக்கும் இரு நூற்றாண்டு முடிவுகளில் (பதினாறாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் இறுதி) அரசியல், ராஜதந்திரம், வஞ்சகம், போர், பொது மக்கட்கருத்துத் திரிபு, தீவிரவாதம், மதச்சார்பு, நட்பு போன்றவற்றை பாவிழையாகவும் உணவையும் காமத்தையும் அவற்றிற்கு மேலும் கீழும் ஓடும் ஊடு நூலாகவும் பின்னிப் பிணைத்து ஒரு மாபெரும் கதையாதலை நெய்கிறார். பதினாறாம் நூற்றண்டிலிருந்து திரண்டு வரும் இக்கதையாடல்கள் பரமன் என்ற பாத்திரத்தின் வழியே இருபதாம் நூற்றாண்டிறுதியில சன்னமாக எதிரொலித்து புது அர்த்தங்கள் கொள்கின்றன.

கலியுகய நாவலும் சிங்களச் சமூகவெளியும்

கம்பெரலிய நாவலின் தொடர்ச்சியாகவே கலியுகய அமைக்கப்பட்டுள்ளது. நாவலில் மார்ட்டின் விக்கிரமசிங்க வரைந்து காட்டும் அழுத்தமான சமூகச்சித்திரம் சமூகவியல் தன்மையுடனும் சமூக மாற்றம் குறித்த நுண் அவதானங்களுடனுமான ஒரு அழுத்தமான ஆவணமாக கலியுகயவை மாற்றிக் காட்டுகிறது.கம்பெரலியவின் மையக்கதாபாத்திரங்களான கசாறுவத்தே முகாந்திரம்-மாத்தறை அம்மையார் தம்பதியினர் மற்றும் அவர்களது பிள்ளைகளான அனுலா, நந்தா, திஸ்ஸ மருமகன் பியல் போன்றோரைச் சுற்றி கதை நகர்கிறது.

தீர்த்த யாத்திரை – தீராத யாத்திரையின் சுயமி

This entry is part 43 of 48 in the series நூறு நூல்கள்

எதுவும் குற்றமே இல்லை என்று எண்ணுபவர்களுக்குக் குற்றவுணர்ச்சி எழும் சாத்தியங்கள் இல்லை.  இருப்பின் சமகாலச் சிக்கல் என்று இருண்மைகளை ஒரு கரிய இறகென சூடிக்கொண்டு விடுதல் எளிய இலக்கியத் தந்திரம். அந்த பாசாங்கைக் கீறி ஓர் ஒற்றையடிப்பாதையை தேடிக்கொண்டு உள்மனக்குரலுக்கு பதில் சொல்ல முடியுமா என்று தேடுபவன், அர்த்தமுள்ள மனிதனாக முயல்கிறான். இதை அவன் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.  தன்விருப்பப்படி ஒருவர் எப்படிவேண்டுமானாலும் நடக்கிறேன் என்று பயணிப்பது அவரவர் சுதந்திரம். அவரவர் தேர்வு.  ஆனால் யாரோ எப்போதோ நடந்த ஏதோ ஒரு பாதையின் வழியாகவே அவர்கள் செல்லநேர வேண்டி இருப்பதில், தெரிவுகள் குறைவு.

நிறமாலை

This entry is part 5 of 48 in the series நூறு நூல்கள்

இலக்கிய உலகில் பெரும்பாலான கதைகள் ஆண்களின் வாழ்க்கையையே சித்தரிக்கின்றன. அதற்கு மாற்றாக பெண்களின் எண்ணங்கள் செயல்கள் மூலம் மனித வாழ்வை அணுகிப் பார்க்கும் இவரது கோணம் சிறப்பாக உள்ளது. இப்படி இருக்கிறது, நான் காட்டுகிறேன் என ஒதுங்கி நின்று காட்டும் திறனும், யதார்த்தம்தான் என நம்பவைக்கும் காட்சிப்படுத்தலும் மேலும் சுவை கூட்டுகிறது. பல்வேறு வணணங்கள் கொண்ட நிறமாலையைப்போல வெவ்வேறு குணங்கள் கொண்ட பெண்களைக் காட்டும் இந்நாவலை வாசிப்பவர்கள் வாழ்க்கையை பெண்களின் நோக்கிலிருந்தும் பார்க்கத் தொடங்குவார்கள் என நம்பலாம்.

“இரு புறமும் சுழலும் கடிகாரம்” பற்றி

This entry is part 20 of 48 in the series நூறு நூல்கள்

“அந்த ஒரே இரவில் நாங்கள் அனைவரும் பெரியவர்களானோம். சிதையில் எரிந்தது எங்கள் பாட்டி மட்டுமில்லை, எங்கள் பால்யமும்தான்.” என்று நேரடியாக தலைப்பும் முடிவும் ஒன்றாகும் இக்கதை வாசகனிடம் விட்டுசெல்வது, இந்த எளிய வார்த்தைகளை மீறிய வலிமிகுந்த இழப்புணர்வை. குழந்தைகளின் நினைவுகளில், களிமண்ணில் அச்சுபோல எத்தனை எளிதாக, கவனிப்பதும் கவனிக்காததும் பதிந்துவிடுகின்றன.

சாம்பனின் பாடல்

மிதக்காமல் நிலத்தில் விழுந்த இலைகள்

அரூ போட்டியில் அறிபுனைப் பரிசை வென்ற “ஒழிவில் காலெமெல்லாம் உடனாய் மன்னி” இத்தொகுப்பின் முக்கியமான கதைகளில் ஒன்று. அறிவியல் புனைவுகள் தமிழுக்குப் புதிய வகை எழுத்தாகும்….பொதுவாக நாம் அறியாத எதிர்கால உலகை வடிவமைத்து அதில் மனிதர்களின் சமூகக் கட்டமைப்பை சித்தரிப்பது அறிபுனையின் ஒரு வகை மாதிரி. அதே போல, எதிர்காலத்தில் மனிதர்கள் வேறு கோள்களுக்கு இடம் பெறும்போது அச்சூழல்களுக்கு ஏற்ப தங்களையும் சமூகத்தையும் தகவமைத்துக்கொள்ளும் கதைகளும் சுவாரஸ்யமானவை.

குடிபெயரும் கதைகள்

தனி மனிதச் சுதந்திரம் அதன் மோசமான எல்லையில் அரசின்மைக்கும் ஒழுக்கமின்மைக்கும் சுய அழிப்பிற்குமே இட்டுச்செல்லலாம் . குடும்பம் அதன் சாதகமான எல்லையில் ஒரு குழந்தை வளர்வதற்கான ஆகச் சரியான அமைப்பாக விளங்குகிறது. சீரான குடும்பங்கள் சீரான சமூகங்களையும் உருவாக்குகின்றன. தனிமனித விடுதலையின் சாதகமான எல்லையில் தனி மனிதன் எந்தக் கட்டுக்களும் இன்றி தன் முழுத்திறனையும் கொண்டு புதிய உச்சத்தை அடைய முடியும். குடும்பம் தனிமனிதன் எனும் இவ்விரு புள்ளிகளும் ஒன்றை ஒன்று சார்ந்திருந்தாலும் அவற்றிற்கிடையே பெருந்தூரங்கள் எளிதில் உருவாகிவிட முடியும் என்பதை இக்கதைகளிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.

புறத்தைச் சொல்லி அகத்தை அடையாளம் காட்டும் எழுத்து

This entry is part 21 of 48 in the series நூறு நூல்கள்

ஆசிரியரின் முதல் கதையும் அவரது சொந்த அனுபவத்தை வைத்து எழுதியதும் என்று சொல்லப்பட்ட ‘விடிவு’, தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. நண்பர்கள் பைக்கில் செல்லும்பொழுது, ராஜா என்பவன் லாரியில் அடிபட்டு இறந்துவிடுகிறான். அவன் சடலத்தை இறந்தவன் வீட்டில் ஒப்படைக்கும்பொழுது எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை சஸ்பென்சாக வைத்து, கதை நகர்கிறது. ஏமாற்றுபவன், திருடன், காமக்கண்ணோடு பார்ப்பவன், சொல்வதொன்று செய்வதொன்று என்று நடமாடுபவர்கள், அப்பாவிகள் இருக்கும் கதைகள் உள்ள தொகுப்பில், மானுடத்தில் அன்பு மிச்சமிருக்கிறது என சொல்ல ஒரு எளிமையான கதை.

அமெரிக்க பாரம்பரிய மீட்டெடுப்பு

மாண்டேல், அவர் எடுத்துக் கொண்டுள்ள காலத்தை அலசும்போது வழக்கமான ஊகவணிகர்களை (Speculators) கண்டனம் செய்வதை பார்க்கிறோம். உதாரணமாக, இப்புத்தகத்தின் 107ம் பக்கத்தில், எல்ஹானன் வின்செஸ்டர் (Elhanan Winchester) எனும் நியூ இங்கிலாந்து சமய போதகர் தனது “The Plain Political Catechism” என்ற புத்தகத்தின் மூலம் பள்ளிமாணவர்களிடம் ‘பொது நிலங்கள் அங்கு குடியேறியவர்களுக்கு மட்டுமே விற்கப்படவேண்டும். நிலவர்த்தகங்களுக்கும் ஊகவணிகர்களுக்கும் விற்கக் கூடாது’ என போதித்ததை பதிப்பித்துள்ளார்….இவரது புத்தகமும் எவ்வாறு இடத்திற்கேற்ற விலை பிற சமுதாய பிரச்சினைகளை தீர்க்க உதவும் போன்ற கருத்துகளுடன் மல்லாடவில்லை. மேலும்,  நிலத்தை அதிக விலை கொடுப்பவருக்கு விற்பது வின்செஸ்டர் போன்றவர்கள் அக்கறை காண்பிக்கும் நபர்களுக்கு  உதவக்கூடியதாகவும்  இருக்கலாம்  என்பது போன்ற  கருத்திலும் ஆர்வம் காட்டவில்லை. 

கோன்ராட் எல்ஸ்ட்டின் ‘இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’

ஆட்டோ வான் பிஸ்மார்க்தான் ஜெர்மனியில் கிறிஸ்துவ தேவாலயத்திடமிருந்து கல்வியாதிக்கத்தைக் கலாசாரப் போர் (kulturkampf) என்ற பெயரிட்டுப் பறிக்க முயன்று தோல்வியடைந்தார். அதுமுதல், பொருளாதாரத்தைத் தவிர்த்து மற்ற அனைத்து சச்சரவுகளுமே கலாசார யுத்தமாகவே எல்லா நாடுகளிலும் கருதப்படுகிறது. சச்சரவுகள் சிலசமயம் ஒரேவிதமாக இருந்தாலும் வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு விதமாக அவற்றை அணுகுகின்றன.

பாரதி விஜயம்: பாரதியின் வரலாற்று நூல்

திருவல்லிக்கேணியில் மதம் பிடித்த யானை இவரைக் கீழே தள்ளியதால் இறந்துபோனார் என்றுதான் ஜனரஞ்சகமாக நம்பப்படுகிறது. யானை கீழே தள்ளிய ஓரிரு நாள்களில், தனது வேலைகளைப் பழையபடி பாரதியார் செய்ய ஆரம்பித்துவிட்டார். சில ஊர்களில் பிரசங்கமும் செய்திருக்கிறார். இது நடந்து சில மாதங்கள் கழித்துத்தான், அதாவது செப்டம்பர் மாதம் 12 ஆம் நாள்தான் (11 ஆம் நாள் அன்று, 12 ஆம் நாள் அதிகாலை 1.30 மணிக்கு) வயிற்றுக் கடுப்பின் காரணமாக இறந்திருக்கிறார்.

இமையம் எழுதிய ‘எங் கதெ’ நாவல் பற்றி

This entry is part 22 of 48 in the series நூறு நூல்கள்

கமலாவிற்கு தான் செய்வது குறித்து ஒரு தெளிவு இருக்கிறது.தன் தேவைகளை தான் விதிக்கும் விதிகளுக்கு உட்பட்டு தீர்த்துக் கொள்கிறாள்.விநாயகத்தின் ஏமாளித்தனத்திற்கு அவளா பொறுப்பு. அல்லது முடிவெடுக்க இயலாதவனை அவள் என்ன செய்ய முடியும் .

ஆகாரசமிதை

This entry is part 23 of 48 in the series நூறு நூல்கள்

ஹரன்பிரசன்னாவின் மாயப் பெரு நதி நாவலை முன்வைத்து: முதல் பாகத்தை மின்சார ரயில் பகுதி எனலாம். தெரிந்த விஷயங்கள். அதே குப்பை நாற்றங்கள். பழகிய முகங்கள். இருப்பிடம் வந்தாலும் நாளையும் இதே பயணம் என்னும் எதிர்பார்ப்பில்லாத திக்கில் முடிவு. அடுத்த பகுதி சென்னை முதல் டெல்லி செல்லும் ராஜதானி வண்டி. அவசரகதியில் எக்ஸ்பிரெஸ் ரயிலாக சேரிடத்தில் முடிந்தாலும், அந்தப் பயணம் சுவாரசியம் மிக்கது. தெரியாத, புதிய விஷயங்களை உணர்த்துவது. தூங்கி எழுந்தவுடன் கடைசி ஸ்டேஷன் வந்து விடுவது போல் …

பொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்

எடுத்ததும் இயக்குனர் பியர் பாவோலோ பஸோலீனிதான் (Pier Paolo Pasolini) நினைவுக்கு வருகிறார். குறிப்பாக, அவரது ‘சாலோ’. இதுவரை எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மிகவும் குரூரமானதும் அருவெறுக்கச் செய்யுமளவு நேர்மையானதுமான திரைப்படம் அது, உங்களுக்கு நினைவிருக்கிறதா தெரியவில்லை. மார்கீடுசாதின் (Marquis de Sade) ‘120 டேஸ் ஆஃப் சாடம்’ என்ற “பொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்”

தாவீதுகளின் சங்கீதம்: பொலான்யோவின் ‘டிஸ்டன்ட் ஸ்டார்’

அந்த கர்வச் செருக்கைப் புறமொதுக்கி விட்டு, வாழ்வை சூறையாடிச் செல்கிற மலினமான நாடகங்களில் இருந்து விலகி, தம்மை இழக்காமல் தத்தம் கண்ணியத்தை காத்துக்கொள்வதே கலைஞர்களின் முதன்மை நோக்கமாக இருக்க முடியும். அத்தகைய இடர்ப்பாடுகளைப் புடம்போட்டு அணி செய்கையிலேயே கலையின் விஸ்தீரணம் புதிய பரிமாணங்களைப் பெறுகிறது. விடுதலையின் சிறகடிப்பில் மதர்க்கும் ஞானப் பொலிவானது அவர்களுடைய படைப்பில் பொசிகிறது.. எனவே, கலையும் அரசியலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.

உயர்ந்த உள்ளம்

This entry is part 24 of 48 in the series நூறு நூல்கள்

பிரசவத்துக்குக் காத்திருக்கும் மனைவியைப் பார்க்கவும் அவளோடு வாழவும் வேலையைத் துறந்து செல்லும் அவனுக்கு உள்ளூர உதவவேண்டும் என்பதுதான் ஜெனரலின் விருப்பம். ஒருவேளை தான் மரணமடைந்து, வேறொரு ஜெனரலின் கட்டுப்பாட்டுக்கு அவன் சென்றுவிட்டால் விடுவிப்பில் சிக்கல் நேரிடலாம் என்னும் முன்யோசனையாலேயே அவர் அக்குறிப்பை எழுதி அனுப்பியிருக்கிறார். உயிருக்குப் போராடும் நேரத்திலும் இன்னொரு உயிருக்காக இரக்கப்படும் உயர்ந்த உள்ளத்துக்கு மட்டுமே அது சாத்தியம். அதுவரை உயர்ந்த சிகரத்தைப்பற்றிய கதையாக இருந்த விவரணைகள் எல்லாமே உயர்ந்த உள்ளத்தைப்பற்றியதாக மாற்றம் பெற்றுவிடுகிறது.

மகிமை

இன்றைய பிளவுபட்ட நோக்குகள் பெருகி பேருருவமெடுத்து நிற்கும் உலகில் இச்சா போன்ற அடிப்படை மானுட விழுமியங்களை, அனைத்து வேற்றுமைகளுக்கு நடுவிலும் அடையப்படக்கூடிய ஒற்றுமைகளை பற்றி பேசும் நாவல் நமக்கு இன்றியமையாத தேவை என்றே நான் நினைக்கிறேன்.

தமிழ் நாவல்களுக்கு புலிட்சர் அல்ல புளிப்பு மிட்டாய்கள் கூட கொடுக்கப்படுவதில்லை. ஆயினும் புலிட்சர்வாங்கிய நாவலுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாத, பல இடங்களில் அதனினும் மேம்பட்ட தரத்தில் எழுதுபட்டநாவல் இச்சா என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

Poomani

வெக்கையும் ஈரமும்

ஊருக்குள் இருந்தவரை மனத்தில் நிறைந்திருக்கும் கசப்பு, ஆங்காரம், ஏமாற்றம், பழி,வெற்றி, தோல்வி போன்ற சமூகக் கட்டமைப்பிற்குள் உருவாக்கப்பட்டவை அனைத்தும் கரிசல் காட்டுக்குள் நுழைந்ததும் அழிந்துபோய், உயிர் வாழ்தலுக்கான அடிப்படைப் பிரச்சனைகளான பசியும் எதிரிகளிடமிருந்து உயிர் தப்புதலும் மட்டுமே அன்றாடங்களை நிரப்பி ஆதிமனிதனாக்கிவிடும் நிலையை அப்பட்டமாகச் சொல்லும் கதை.

புத்தக விமர்சனம்: வாஸ்லாவ் ஸ்மீல் Energy and Civilization -A History

ஆசிரியர் உண்மையிலேயே ஒரு பெரிய நிபுணர்தான். எடுத்துக்காட்டாக, நிலத்தில் ஓடும் மனிதர்களைப் பற்றி பேசும்போது, ​​தரவை அவர் இவ்வாறு பகுப்பாய்வு செய்கிறார்: ஓடுவதற்கு பெரும்பாலும் 700 முதல் 1,400 வாட் வரை ஆற்றல் தேவைப்படுகிறது, இது அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதத்தைப்போல் 10-20 மடங்கு அதிகம். மனிதர்களுக்கான இயங்கும் ஆற்றல் செலவு நிறைய. ஆனால் இந்த செலவை வேகத்திலிருந்து விலக்குவதற்கான தனித்துவமான திறனை மக்கள் கொண்டுள்ளனர். இயங்கும் மொத்த செலவில் 80% உடல் எடை ஆதரவு மற்றும் முன்னோக்கி நம்மைச் செலுத்தும் உந்துவிசைக்கே ஆகிறது. கால்களை முன்னும் பின்னுமாக இயக்குவதற்கு 7% செலவு. பக்கவாட்டு சமநிலையை பராமரித்தலுக்கு 2%. ஆனால் கைகளை ஆட்டி பேலன்ஸ் செய்வது ஒட்டுமொத்த செலவை சுமார் 3% குறைக்கிறது.

வரைபடத்தின் உள்ளே: போலோ ஓலாய்சராக்கின் இரு நாவல்கள் பற்றி

க்ரெய்க் எப்லின் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ்ஸின் ( Jorge Luis Borge ) நெடுநாள் நீடித்திருக்கப் போகும் புனைகதைகளில் ஒன்று “டெல் ரிஹோர் என் லா சியென்சியா” (“அறிவியலில் துல்லியமானது”) என்ற ஒரே ஒரு பத்தி நீளமே உள்ள கதை. மூலாதாரம் உறுதியாகாத கால வரலாற்றின் ஒரு துண்டாகக் “வரைபடத்தின் உள்ளே: போலோ ஓலாய்சராக்கின் இரு நாவல்கள் பற்றி”

எல்லைகள் அற்ற வெளி

This entry is part 25 of 48 in the series நூறு நூல்கள்

கிரிக்கெட்டில் உற்சாக நடனமாடப் பெண்கள், குடிக்கும் பார்களில் நடன மாதுக்கள், கிராமத் திருவிழாக்களில் குட்டைப் பாவாடையோடு ஆடும் பெண்கள். . . இவை சொல்வது என்ன? பெண் என்பவள் உடல் மட்டுமே என்ற பெரும்பான்மையான மன நிலையை. இதை முறியடிக்க எத்தனைக் காலங்களாக பெண்கள் போராடுகிறார்கள், எத்தனை எள்ளல்களையும், இழிவுகளையும் கடக்கிறார்கள், அதை பெண்ணும், மொழியும், வெளிப்பாடும் என்ற பரிமாணங்களில் அம்பை தனது ‘உடலெனும் வெளி’ என்ற நூலில் மிக அருமையாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்கிறார். குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் அவர்களின் மொழியால் அல்லாமல், உடலாலேயே முத்திரை குத்தப்பட்டு அவ்வை முதல் அரங்கமல்லிகா வரை கால, சரித்திர பேதமற்று

உரக்க ஒலித்த பெண் குரல்

1953இல் ராஜம் கிருஷ்ணன் அவர் பெண் குரல் நாவலுக்கு கலைமகள் பத்திரிகையின் நாராயணசாமி ஐயர் விருது பெற்றபோது எனக்கு ஒன்பது வயது ஆகியிருக்கவில்லை. கி.வா.ஜ. என்று அறியப்பட்ட கி.வா. ஜகந்நாதனை ஆசிரியராகக்கொண்ட கலைமகள் பத்திரிகை இலக்கியப் பத்திரிகையாக கருதப்பட்டது. எங்கள் வீட்டில் மாதாமாதம் கலைமகள் வந்துவிடும். காரணம் என் “உரக்க ஒலித்த பெண் குரல்”

அம்பையின் சிறுகதைகள்

‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ தொகுப்பில் இந்த ஆணாதிக்க எதிர்ப்பு, ரசனையற்ற ஆண்களைச் சித்தரித்து உவகை கொள்ளும் போக்கிலிருந்து முற்றிலும் விடுபட்டு,பாம்பு தன் சட்டையை உரிப்பது போல் உரித்துக் கொண்டு வெளியே வந்துவிடுகிறார் அம்பை.பொதுவாக எந்த எழுத்தாளரும் செல்ல விரும்பாத பகுதி இது. ஒரே மாதிரி எழுதினால் தான் ‘இமேஜ்’ அடிபடாமல் இருக்கும், சுந்தர ராமசாமி,எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற வெகு சிலரே தங்களை அடிக்கடிச் சட்டையுரித்துக் கொள்பவர்கள். இந்தச் சட்டையுரிப்பில், தனது பழைய இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல்,அம்பையும் இறங்கியுள்ளது பாராட்டுதலுக்குரியது. ‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ கதைகள் எல்லாமே …

ராபர்ட் கனிகலின் The Man Who Knew Infinity: புத்தக விமர்சனம்

ராபர்ட் கனிகல் எழுதிய The Man Who Knew Infinity என்ற புத்தகத்தின் ஆங்கிலம் மற்றும் தமிழ் பிரதிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இரு வேறு நண்பர்களிடமிருந்து எனக்கு பரிசாய்க் கிடைத்தன. அதுவும் ஒரே டிசம்பர் வாரத்தில் இரு வேறு நாட்களில் இந்தப் புத்தகங்கள் என்னை வந்தடைந்தன (இதோ இதை தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் பிப்ரவரி 14ஆம் தேதியும்கூட புத்தக காதலர்களுக்கு விசேஷமான நாள்: இன்று சர்வதேச புத்தகப் பரிசு தினம் கொண்டாடப்படுகிறது). ஆங்கில புத்தகத்தைக் கொடுத்த நண்பரும் நானும் ஒவ்வொரு முறை நாங்கள் சந்திக்கும்போதும் புத்தக பரிவர்த்தனை செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருப்பவர்கள். அந்த வழக்கப்படி ஆங்கில பிரதி கிடைத்ததில் ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. 2015ல் கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்வையொட்டிய இந்தப் புத்தகம் திரைப்படமாக வடிவெடுத்து வெளிவந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். நான் படம் பார்த்திருந்ததால் கதையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது நினைவில் நன்றாகவே பதிந்திருந்தது. எனவே, “அப்புறம் படிக்கலாம்,” என்று ஆங்கிலப் பிரதியை எடுத்து வைத்திருந்தேன்.

மிருத்யுஞ்சய்

This entry is part 26 of 48 in the series நூறு நூல்கள்

‘மிருத்யுஞ்சய்’ என்ற பி.கே. பட்டாச்சாரியாவின் அஸ்ஸாமிய நாவலின் களம் 1942ஆம் ஆண்டு காலகட்டத்தில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைக் களமாய்க் கொண்டது. நாவல் புரட்சியாளர்கள் கொண்ட ஒரு குழுவைப் பற்றியது. அவர்கள் பிரிட்டிஷ் ராணுவ ரயிலொன்றைக் கவிழ்க்கச் சதி செய்கின்றனர். இந்த திட்டத்தை எப்படி நிறைவேற்றுகின்றனர், அதற்கு அவர்கள் தரும் “மிருத்யுஞ்சய்”

ப. கல்பனாவின் குரல்: பார்வையிலிருந்து சொல்லுக்கு

This entry is part 27 of 48 in the series நூறு நூல்கள்

படைப்பு மொழி நிமிர்ந்து நிற்கும் மொழி, பிறர் பரிவுக்காக காத்திருக்கும் மொழியல்ல, பசிவயிற்றில் இருந்தாலும், யாசித்து அல்ல உழைத்து அப்பசியைப் போக்கிக்கொள்ளத் தெரிந்த தன்மான மொழி. அவ்வை முதல் ப. கல்பனாவரை இப்பெண்கவிஞர்களின் கவிதைமொழி காலம் காலமாய் மானுடத்திற்கு தெரிவிப்பது இச்செய்தியை த்தான். எனவே எழுதியவர், பெண்ணா ஆணா. எந்த சாதி, எந்தகுலம் என்பதெல்லாம் முக்கியமல்ல அவர்களின் படைப்பே முக்கியம். வலிமை என்பது உடல் சார்ந்த து அல்ல மனம் சார்ந்தது.