இ .பா. ஒரு அறிவுக்கேணி

இந்திரா  பார்த்தசாரதி ஒரு பன்முகக் கலைஞர்.  அவர் தொட்ட இலக்கிய வகைமைகள் எல்லாம் துலங்குகின்றன. சிறுகதை, நாவல், நாடகம், இலக்கிய விமர்சனம் . எதுவாயினும். தமிழிலும் பழந்தமிழ் இலக்கியம் முதல் நவீன தமிழ் வரை ஆழங்கால் பதித்தவர் அவர். ஆங்கில, மேற்கத்திய இலக்கியங்களில் கரை கண்டவர். அவர் எழுதுவதை எப்படி வகைப்படுத்தலாம்? இலக்கியம் ஒரு சமூகச் செயல்பாடு. ஏன் எல்லாக் கலைவடிவங்களுமே சமூகச் செயல்பாடு தான் என்பதே இ. பா.வின் கோட்பாடு. நகைச்சுவை. அங்கதம். உணர்ச்சி வெளிப்பாடு.

இந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு சந்திப்பு

‘அஞ்சிறைய மட நாராய்’ என்று திருவாய்மொழியில் ஒரு பாட்டு வரும். தலைவி தலைவனிடம் சொல்கிறாள். அவர்கள் களவொழுக்கத்தில்தானே ஈடுபடுகிறார்கள்!? பராங்குச நாயகி என்று சொல்வார்கள். ‘நாயிக பாவம்’ என்று சொல்வார்கள் அல்லவா? இது பக்தி வெளிப்பாட்டின் இன்னொரு அம்சம். கடவுள்தான் நாயகன். பக்தர்கள் எல்லோரும் நாயகிகள். சங்க இலக்கியத்தில் இருந்து (பிரபந்தத்தில்) இது தொடர்கிறது. இந்தப்பாடலில் இறைவனுக்கு தூது அனுப்புகிறாள் தலைவி.

இந்திரா பார்த்தசாரதி – குறிப்புகள்

அக்னி
ஆகாசத்தாமரை (1991 – கல்கி இதழில் வெளிவந்த தொடர்)
ஏசுவின் தோழர்கள்
காலவெள்ளம்
கிருஷ்ணா கிருஷ்ணா
குருதிப்புனல்; 1975; தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.[4]
சத்திய சோதனை
சுதந்தர பூமி
தந்திர பூமி
திரைகளுக்கு அப்பால்

புதிய நூல்களுடன் சொல்வனம் எழுத்தாளர்கள்

இவர்களின் படைப்புகளில் தனித்துவமான அம்சம் என்னவென்றால், ஒவ்வொரு ஆக்கமும் புதிய பல எண்ணங்களை விதைக்கிறது; ஒவ்வொரு கட்டுரையும் பற்பல கோணங்களைத் திறக்கிறது. பெண்களின் உள்ளுணர்வுகளை சூழலோடு பின்னிப் படைக்கும் திறன், அறிவியலையும் இலக்கியத்தையும் இணைக்கும் அதிர்ஷ்டமான சேர்க்கை, வரலாற்றை புனைவில் புதைக்காமல் ஒளிர வைக்கும் கலை — இவை இந்த எழுத்தாளர்களை சொல்வனம் குடும்பத்தில் தனித்துவமாக்குகின்றன.

சொல்வனம் சிறப்பிதழ்: இந்திரா பார்த்தசாரதிஅவர்களின் படைப்புலகம்

தில்லி, போலந்து என்று உலகின் பல்வேறு கல்விச் சூழல்களில் ஆய்வாளராகவும் பேராசிரியராவும் பணியாற்றிய இ.பா., கல்விச் சூழலில் வாழ்ந்தாலும் எப்போதும் இலக்கியத்தோடும் வாசகர்களோடும் நேரடி நாடி தொடர்பை வைத்திருந்தார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில், புதிய குரல்களை அடையாளம் கண்டு களத்தில் நிறுத்துவதில் அவர் காட்டிய தன்னல மறுப்பு, தமிழ் இலக்கிய வரலாற்றில் பதிவாக வேண்டிய ஒன்று.

செயற்கை நுண்ணறிவு : இயற்றறிவு கவிதைகள்

நீ சொன்னாய்: “உன் தாய்நாட்டைப் பற்றிச் சொல்”
நான் என் நாக்கை கடித்தேன்.
எப்படி விவரிப்பது தீயில் மூழ்கும் வீட்டை?
எப்படி விவரிப்பது கடலில் மிதக்கும் பெயர்களை?
எனது தாத்தா கவிதை போல வாழ்ந்தார்,
வார்த்தைகள் அவரது உடலில் வடுக்களாக.
இங்கே, வெளிச்சத்தில், நான் நிழல் மட்டுமே,
அவரது கதையின் ஒரு துண்டு.
இந்தப் பழைய புகைப்படத்தில், அம்மா சிரிக்கிறாள்,
அவளது கண்களில் இன்னும் கனவுகள் இருக்கின்றன.
அப்போது அவள் தெரியவில்லை

சொல்வனம் சிறப்பு வெளியீட்டு அறிவிப்பு: “கவிதையின் நேரம் – சொல்வனம் சிறப்பிதழ்”

இதழ்-340 – சொல்வனம் | இதழ் 340 | 13 ஏப் 2025 அன்பார்ந்த வாசகர்களுக்கும் கவிஞர்களுக்கும், சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளாலும், “கவிதையின் நேரம்” என்ற சொல்வனம் சிறப்பிதழுக்கான சிறப்பு தொகுப்புப் பணிகளின் காரணமுமாக, இம்முறை சொல்வனம் இதழ் சிறிது தாமதமாகி, ஏப்ரல் 30 அன்று பிரசுரிக்கப்படும் “சொல்வனம் சிறப்பு வெளியீட்டு அறிவிப்பு: “கவிதையின் நேரம் – சொல்வனம் சிறப்பிதழ்””

மனித ஆன்மாவின் நெசவு

இலக்கியத்தை மொழியின் கிரீடம் என்று கருதினால் அதன் மீது அமர்ந்திருக்கும் இறகு என கவிதையை உருவகிக்கலாம். மனித மனதிற்கு அதன் இயல்பில் தர்க்க ஒழுங்குகள் இல்லை, அது மொழியினூடாக ஒரு பயிற்சியாகவே வந்து சேர்கிறது. நாவல்களும் சிறுகதைகளும் கவிதை அல்லாத பிற இலக்கிய வடிவங்களும் மொழி கட்டமைக்கும் இந்த தர்க்கத்தினூடாகவே வாசகனிடம் உரையாடுகின்றன, கற்பனை விரிவினால் சிந்தனைகளை மறுவரையறை செய்கின்றன. கவிதை மொழிக்குள் தர்க்கமற்ற தூய இருப்பாக ஒளிந்திருக்கும் ஏதோ ஒன்றைத்தான் தொட எத்தனிக்கிறது. அதன் வாயிலாக ஆழ் மனதின் தர்க்கமற்ற ஒரு பரப்பை சீண்டுகிறது.

வாசகர் கடிதங்கள்

வாசகருக்குப் பஞ்சு மிட்டாயையும் கொடுக்கக் கூடாது, பொருள்விளங்கா உருண்டையையும் கொடுக்கக் கூடாது. எளிதான வாசிப்புள்ளதில் புரதச் சத்து இருந்தால் நல்லது- கேப்பைக் களி, கம்பு அடை போல. கடினமானதில் சுவை அசாதாரணமாக இருக்க வேண்டும். தேங்காய்- இளநீர் போல முயற்சிக்குத் தக்க பலன் வேண்டும். 

வாழ்த்துகளும் அறிவிப்புகளும்

சொல்வனம் இதழ்கள் பிரதி மாதம் இரண்டாவது/ நான்காவது ஞாயிறுகளில் வெளியிடப்படுகின்றன. பிரசுர தினத்துக்கு ஆறு நாட்கள் முன்பு எங்களை வந்தடையும் படைப்புகளை மட்டுமே உடனடி இதழுக்குப் பரிசீலிக்கிறோம். அந்த நாளுக்குப் பிறகு எங்களை வந்தடைவன அடுத்த இதழுக்கு ஒத்தி வைக்கப்படும். 

வாசகர் கடிதம்

கல்வியியலில் எக்விட்டி என்ற பதம் பிரயோகிக்கப்படுகிறது. ஒரு சித்திரம்: உயர்ந்ததொரு வேலிக்கு அப்பால் ஒரு விளையாட்டுப் போட்டி நடக்கிறது. வேலிக்கு இந்தப் புறம் உயரமும் குட்டையுமாக பல சிறுவர்கள் நிற்கிறார்கள். குட்டையான சிறுவர்கள் பார்ப்பதற்கு வசதியாக ஸ்டூல்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன் மீது ஏறி நிற்பதன் மூலம், உயரமான சிறுவர்கள் பார்ப்பதைப் போலவே, குட்டைச் சிறுவர்களும் விளையாட்டுப் போட்டியைப் பார்த்து அனுபவிக்க முடிகிறது.

கனவு மழை

This entry is part 54 of 72 in the series நூறு நூல்கள்

கொள்கை, கோட்பாடு, தத்துவம் என்று எதையும் எவருக்கும் நிறுவ வேண்டிய எந்த நெருக்கடியும் இன்றி இயல்பாகக் கதை சொல்லிப் போகும் வ.ஸ்ரீ.யின் பாணி சமகால இலக்கியச் சூழலில் காண்பதற்கு அரிது.