சந்திரா தங்கராஜின் ‘மலையேற்றம்’

இந்நாவலின் உருவகங்கள் உயிரோட்டம் அளிக்கின்றன, ராசபாண்டியின் தனிமையின் சுவர்கள் இயற்கையின் அழகில் பாளங்களாய் உதிர்கின்றன. அப்பாவின் அருகில் போவதும் வருவதுமாய் இருக்கும் மஞ்சள் பட்டாம்பூச்சிகளை அவன் அம்மாவாகக் காண்கிறான். ‘தேன் இருக்கும் லட்சம் பூக்களை விட்டுவிட்டுக் காய்ந்த மரக்கட்டைகளில் அவை எதைத் தேடுகின்றன’ என வியக்கிறான்

ஜார் ஒழிக – சாம்ராஜின் சிறுகதைத் தொகுப்பு

மார்க்சிய இலட்சியத் தோழர்கள், சிறு வியாபாரிகளைக் கடுமையாகப் பாதிக்கும் புதிய வரிகளுக்கு எதிராக ‘தொழிலாளர் புரட்சி’ செய்யக் களத்துக்குத் தயாராகி வருகின்றனர். ஆனால் புரட்சி பரிதாபமாக நாய்க்கடியில் பிசுபிசுத்துப் போகிறது. கடைசியில், களத்தெருவில் காய் விற்பனை செய்யும் கிழவிகளும், கை வண்டியில் உணவு விற்றுக்கொண்டு இருந்த பாயும் துரத்தப்படுகிறார்கள்.

காற்றையும் நீரையும் போல் நித்தியம்

நாவலின் நெடிய நூலிழையாக காந்தி. காந்தியை சாதாரண மக்களிடமிருந்து ஆட்சியாளர்கள் பிரிக்கிறார்கள் என்று சொல்லும் ரமேஷிலிருந்து நாவல் தொடங்குகிறது.  காந்தியர்களை,  காந்தியவாதத்தைச் சிறு எள்ளலுடன் விவரிக்கிறான். அசாமின் முன்னாள் முதல்வர், ராஜவம்ஷியை சந்திக்கிறான். முதல் சந்திப்பிலேயே தன்னை எரிச்சலூட்டும், ஆனாலும் அவர் சிரிப்பில் குறுகுறுக்கும் ரமேஷ், அதே அலட்சியமான, இரக்கமற்ற அதிகார அமைப்பை மிக யதார்த்தத்துடன் கையாளும் ராஜவம்ஷியை இவர் நிஜமானவர்தானா? என வழிபடுகிறான்.