இ.பா என்றொரு நண்பர்

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்த அந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரோடு எனக்குத் தொடர்பு எதுவும் கிடையாது. எம்.ஏ முதல் வகுப்பில் தேறியிருந்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. பம்பாய் போய் அங்கே ‘Free Press Joumal’ என்ற ஆங்கிலத் தினசரியில் உதவி ஆசிரியராகச் சேர்வதாக இருந்தேன். அப்பொழுது திருச்சியிலிருந்து என் அண்ணனிடமிருந்து ஒரு தந்தி வந்தது. திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகச் சேர விருப்பமிருந்தால் உடனே வரலாமென்று.

தெய்வநல்லூர் கதைகள் – 6

This entry is part 6 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

ராமர் கோவில் கருப்பனுக்கு இரு கிடாக்கள் செய்த உயிர்தியாகத்தில் பிறந்த பிள்ளை காணாமலானது குறித்து அவர் தாய் நியாயம் வேண்டினார். வெள்ளானைக்கோட்டை ஊர்க்காரர்கள் எண்திசையும் கடுகி  முடுகி  தேடுகையில்  திருமண விருந்தின் பின்விளைவாக ஊருணி சென்றிருந்த மணியின் தாத்தா திரும்பி வந்து நிகழ்வைக் கேள்வியுற்று சற்றே சிந்தித்த அவர் வெடித்த பலாவின் சுளையென மீசைக்குள் தெரிந்த வாய் விட்டு சிரித்து இருவர் தன்னைப் பின்தொடர ஆணையிட்டு “பொறவாசலில் சோறாக்குமிடத்திற்கு” வந்து இரண்டடி விட்டமும், மூன்றடி  உயரமும் கொண்ட சேமியா பாயாச வட்டைக்குள் பார்க்கும்படி சொன்னார்.