அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்த அந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரோடு எனக்குத் தொடர்பு எதுவும் கிடையாது. எம்.ஏ முதல் வகுப்பில் தேறியிருந்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. பம்பாய் போய் அங்கே ‘Free Press Joumal’ என்ற ஆங்கிலத் தினசரியில் உதவி ஆசிரியராகச் சேர்வதாக இருந்தேன். அப்பொழுது திருச்சியிலிருந்து என் அண்ணனிடமிருந்து ஒரு தந்தி வந்தது. திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகச் சேர விருப்பமிருந்தால் உடனே வரலாமென்று.
