இது வேற லெவல்…!

சமீபகாலங்களில் எனக்கொரு சந்தேகம். உங்களுக்கும் இருக்கலாம். தமிழில் வார்த்தைகளுக்கு அத்தனை பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா என்பதே அது. சந்தேகம் சும்மா வரவில்லை. பல நாட்களாக, பல பேரிடம் பேசும் பொழுது சட்சட்டென்று இந்த எண்ணம் வந்து போகும். எதனால் என்று கேளுங்கள்… ஒரு நண்பரிடம் அவர் சென்று வந்த பயணம் “இது வேற லெவல்…!”

இயந்திரச் சிக்கல்கள் – விளாதிமிர் அலெக்ஸீவ்

விளாதிமிர் அலெக்ஸீவ் என்ற தரவிதழாளருக்கும் OpenAI என்ற செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட GPT-3 எனப்படும் மொழி உருவாக்கிக்கும் இடையே நடந்த ஓர் உரையாடலிலிருந்து சில பகுதிகள். இணையத்தில் உள்ள தரவுகளை அலசுவதன் வழியாக GPT-3 தனது செயற்கை நுண்ணறிவை வளர்த்துக் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் பழகியுள்ளது.

மத்தியஸ் எனார் : வரலாற்றின் நிழலுலகில் பயணிக்கும் நில்லாத் தொடர்வண்டி

மத்தியஸ் எனார் (Mathias Enard) என்ற ஒரு நிஜ நாவலாசிரியனின் ஜோன் (Zone) என்ற நிஜ நாவலை வாசிப்பது புனையப்பட்ட நாவலாசிரியன் ரஃபேல் காஹ்லா புனைந்த நாவலை பிரான்சிஸ் வாசிக்க, நாமும் வாசிப்பது என்பது போல், இந்த நாவலில் மரியான், ஸ்டெபானி, சாஷ்காக்களோடு பிரான்சிஸ் கொண்ட காதல் விவகாரங்களின் பரிதாபகர கண்ணீர்க்கதைகளில் மனதை இழப்பது என்பது மற்றைய நாவலின் இரு மடங்கு அந்நியப்படுத்தப்பட்ட நாயகர்களான இன்டிஸார் மற்றும் மார்வானின் தேய்வழக்குத்தன்மை கொண்ட மகோன்னதத்துக்கு எதிர்ப்பாட்டாய் ஆவது போல், பெய்ரூட்டை விடுவிக்கப் போராடி தன் சகா அஹமதால் காட்டிக் கொடுக்கப்படும் மார்வான் ஏதோ ஒரு வகையில் க்ரோயேஷியாவின் விடுதலைக்குப் போராடி முடிவில் ஒரு அரைக்கிறுக்கனைச் சிரச்சேதம் செய்து தன் சகா ஆன்டியின் மரணத்துக்குப் பழி தீர்த்துக் கொள்ளும் பிரான்சிஸின் வடிகால் போல்

வாக்கு தவறாமை

“நீங்க குடுத்த காசுக்கு தென்ன மரச்சின்னத்துல ஒரு குத்து” என்று வாக்குச்சீட்டுகளில் சின்னத்தின் மேல் முத்திரையிட்டு பெட்டியில் போடும் தேர்தல் முறையை நாம் கடந்துதான் வந்திருக்கிறோம். மின்னணு வாக்கு இயந்திரங்கள் வந்தபின்பும் தோற்ற கட்சிகள் ஒரு தேய்ந்த ரெக்கார்டை ஓட்டுகின்றன. “எந்த பட்டன் அமுக்கினாலும் ஒரே கட்சிக்கு ஓட்டு விழும்படிச் செய்துவிட்டார்கள்” இந்தக் கூற்று எந்த அளவு சாத்தியம், அந்த வாக்குப்பதிவு இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது. கொஞ்சம் பார்க்கலாம்.

மானுடத்தை ஆராயும் கலைஞன்

அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகள் வடிவை ஒரு தோட்டம் என்று சொல்லலாம். விதை முளைவிட்டு, நிதானமாக வளர்ந்து, அதன் பலனை கண்ணால் பார்க்கும்போது வரும் குதூகலம், அதை அறுவடை செய்தபின் மறுநாள் தோட்டத்தைப் பார்க்கும்போது வரும் ஒரு துளி சோகம் போன்றவை அவரது கதைகள். தீவிர இலக்கியம் படிக்க ஆரம்பிக்கும்போது நமக்குத் தெரியவேண்டிய ஒன்று, இலக்கியவாதிகளின் கதைகளில் அவர்கள் சொல்லவந்தது வரிகளில் மறைந்திருக்கும். சில கதைகளை மீண்டும் படிக்க வேண்டியிருக்கும், அல்லது அசை போடவேண்டியிருக்கும். அவசர உலகில் நல்ல இலக்கியங்களுக்கு நேரம் ஒதுக்கத்தான் வேண்டும். அ. முத்துலிங்கத்தின் கதைகள் அந்தத் தகுதியைப் பெற்றவை.

ஆரம், காரம், சாரம்

சொல்வனத்தின் 166 ஆம் இதழ் ஒரு சிறப்பிதழ். இந்தச் சிறப்பிதழ், பல நாடுகளிலும் நிலப்பகுதிகளிலும் வசித்தோ, பயணித்தோ பெற்ற அனுபவங்கள் வழியே இலக்கியம் படைக்கும் திரு. அ.முத்துலிங்கம் அவர்களைச் சிறப்பிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழும் பதிப்பாசிரியர்களைக் கொண்ட சொல்வனம் இணையப் பத்திரிகை, இப்படிப் புலம் பெயர்ந்த வாழ்வின் அனுபவங்களை இலக்கியமாக்குவதில் திறன் படைத்தவராகப் பரவலாக அறியப்பட்டிருக்கும் திரு.அ.முத்துலிங்கத்தைச் சிறப்பிக்க எண்ணியது இயற்கை. இந்தச் சிறப்பிதழில் அனேகமாக எல்லாக் கட்டுரைகளும் இதழின் நாயகரது திறன் பற்றிய பாராட்டுகளாக, பலரது பார்வைகளில் அமைந்துள்ளன. இத்தனை பாராட்டுகளாகக் கொடுத்தால் திகட்டாதா, ஒரு ருசி மாற்றத்துக்காகவாவது கார சாரமாக ஏதும் கொடுக்கலாகாதா

வாசகர் மறுவினை

இந்த கட்டுரை பல அரிய தகவல்களை சுவையாக அளிக்கிறது. மேலும் கணினி மொழியியல் (computational linguistics) மற்றும் தரவு மொழியியல் (corpus linguistics) நோக்கில் படித்தால் மிகவும் சுவாரஸ்யாக இருக்கும். நாடன் அவர்கள் புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவரது தமிழ் விழிப்புணர்ச்சி பணி மிகவும் சிறந்தது, பொறியாளர் மற்றும் பல துரை சார் வல்லுநர்கள் கவனத்தை பெரும் ஒரு கட்டுரை.

ஆக்டேவியா பட்லரின் காலடியில்

ஒவ்வொரு நாளும் இதழ்களில் ஏதாவது எழுதுவார், அதன்பின் அவருடைய புதினங்களைப் பற்றிய வேலையோ அல்லது கதை எழுதுவதோ அல்லது வேறொரு வேலை ஏதாவதோ அவருக்கு இருக்கும். அவருக்குக் கிடைக்கக்கூடிய லாபத்தைப் பற்றிக் கணக்கிட்டுக் கொண்டே இருப்பார்- எத்தனை வார்த்தைகள் எழுதியிருக்கிறார், ஒரு வார்த்தைக்கு எவ்வளவு கிடைக்கும், ஒரு வாரத்தில் எவ்வளவு சம்பாதிக்க முடியும், அதை வைத்து எவ்வளவு உணவுப் பொருட்களை வாங்க இயலும் என்பதையெல்லாம் பற்றி கணக்கிட்டு வைத்திருப்பார். அவர் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலில் எத்தனை காசுகள் வரை செலவழியும் என்பதை எழுதி வைத்திருப்பார். இதிலிருந்து நமக்கு அவரது எழுத்துக்களை பரிசாக அளிக்க பல விஷயங்களைத் தியாகம் செய்திருக்கிறார் என்று தெரிகிறது.

வாசகர் மறுவினை

வெறும் பணி சம்பந்தமான அனுபவம் பற்றி மட்டுமோ அல்லது சுற்றுலாவில் பார்த்த விஷயங்களைப்பற்றி மட்டுமோ எழுதாமல், பலமுனைகளில் இருந்து ஸிவிட்ஜெர்லாந்தை பார்த்து எழுதியிருக்கிறீர்கள். நன்றி. உங்கள் பதிவுகள் அனைத்தும் என் பயணங்களின்போது அங்கே நான் கவனித்ததில் இருந்து இம்மி பிசகாமல் இருந்தது மனதிற்கு நிறைவாய் இருந்தது. ஹிந்தி சினிமா தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா தனது பல படங்களை இன்டர்லாக்கன் ஊரைச்சுற்றி எடுத்து அந்தப் பகுதியை பிரபலப்படுத்தி இருப்பதால், இப்போதெல்லாம் அங்கே இந்திய சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆனால் ஜெனீவாவில் உள்ள செர்னில் …

குழப்பவாதக் குரங்குகள் கட்டுரை – மறுவினைகள்

வீட்டில் யாருமில்லையென்றால், ரெண்டு பீர் பாட்டிலுடன், ஒரு நல்ல திரைப்படத்தை டி.வி.டியில் பார்த்தபின் அதனைக்க்குறித்து சிந்தனை செய்யும்போது குழப்பவாதக் குரங்குகள் மனதுள் குதித்து ஆர்ப்பரிக்கும் பாருங்கள். அப்போதும் இது போன்ற உணர்வுகள் சாத்தியம்.. குதர்க்கமாகவோ, கிண்டலாகவோ சொல்லவில்லை. சாத்திய இழைகளை சிந்திக்கிறேன். … சிலிக்கான் பள்ளத்தாக்கின் மீது சிலருக்கு ஒரு காட்டம் இருக்கும். எப்படி, மும்பையிலிருந்து அமெரிக்கா செல்ல விசா கிட்டாதவர், ஊராய்யா அது? என்று பேசுவது போல,

நண்டுச் சுவடுகள்

சதுப்புக் குட்டைகளில் நண்டுகள் குடித்தனம் இருக்க, அவற்றைத் தின்ன கொக்குகளின் கிரீச்சலான சண்டைகள்.
“இந்த கொக்குகள் கடலுக்கு நன்றி சொல்லுமா?”
“புரியல.”
“சதுப்புக் குட்டைகளை இந்தக் கடல் உருவாக்கிருக்கு. அப்படி உருவான அதில நண்டுக உருவாகி, இந்த கொக்குகளுக்கு சாப்பாடாக மாறுது. இந்த சதுப்பு குட்டைகளால்தானே கொக்குகளுக்கு சாப்பாடு கெடைக்குது.”

பொறியியல் போதனையாளருடன் ஒரு உரையாடல்

சார்ந்திருப்பதிலிருந்து விடுதலை பெற்று சுயமாகச் செயல்பட முனையும்போது துவக்கத்தில் பல குறைபாடுகள் எழும். ஜப்பானியரின் உதாரணம் ஒன்றையோ, தாய்வானியரின் அனுபவங்களையோ, ஏன் சீனர்களின் அனுபவங்களையோ கூட நாம் எடுத்து நோக்கலாம். அந்த நாட்டு உற்பத்தித் துறைகளின் விளை பொருட்கள் முதல் பத்து ஆண்டுகள், ஏன் பதினைந்தாண்டுகள் வரையிலும் கூட மேலைப் பொருட்களோடு ஒப்பிட்டால் கீழ்த்தரமானவையாகவும், மலினமான தொழில் திறன் உள்ளனவாகவும் தெரிய வந்திருந்தன. மேற்கு நாடுகளுக்குத் தொடர்ந்து பொருட்களைக் கொடுக்கத் துவங்கிய போது அவர்கள் மேற்கின் அளவைகளைத் தம் பொருட்கள் ஈடுகொடுத்து நிற்க வேண்டும் என்ற அவதிக்கு உட்பட்ட போது தர மேம்படுதல் அவசியமாயிற்று. ஜப்பானியர் மேற்கின் உற்பத்தித் தொழில் நுட்பங்களைத் தம் சமூகக் குழுவினரின் பழக்க வழக்கங்களோடும், பண்பாட்டுத் தேர்வுகளோடும் பொருத்தி…

ஒரு பணிவான அப்பா

எழுத்தாளர்கள் எப்படி எழுதத் துவங்குகிறார்கள்? அவர்களின் முதல் நாவல் எவ்வாறு உருவானது? பாரிஸ் ரிவ்யூ பல நாவலாசிரியர்களை பேட்டி கண்டிருக்கிறது. அகில் ஷர்மாவின் அனுபவத்தை இங்கே பார்க்கலாம்:

மா.அரங்கநாதனின் "சித்தி"

சுத்த சைவமே சிவம் எனக்கொள், ஆடலும் ஆடுபவனும் வேறல்ல (கடவுளும் கந்தசாமிப்பிள்ளை) என சைவத்தின் முக்கியமான தத்துவம் செய்யும் செயலும், செய்பவனும் ஒன்றாக ஆகிவிடும் தருணம். கதையில் கருப்பனும் அப்படியே ஓட்டமாகவே இருக்கிறான். இடம் பொருள் தெரியாது ஓட்டத்தின் விதிகளைப் பற்றிய அக்கறையற்று ஓடுகிறான். அவனுக்கானப் பெயர், அவன் புழங்கும் ஊர் எதையும் ஆசிரியர் குறிப்பிடுவதில்லை. அவன் ஒரு செயலாக மட்டுமே இருக்கிறான்.

அ.முத்துலிங்கம்: "மஹராஜாவின் ரயில் வண்டி"

“கவிதை என்பதை அனுபவங்களில் இருந்து பழக்கத்தின் பாசியை அகற்றும் ஒரு செயல் என்று சொல்வார்கள். முதன் முறையாக ஒன்றை அனுபவிக்கும் போது நமது அகம் அதை முழுவதும் உள்வாங்கிக் கொள்கிறது. பின் வரும் ஒவ்வொரு அனுபவத்திலும் நமக்கும் அதற்கும் நடுவில் ஞாபத்தின் திரை விழுகிறது. அதை விலக்கி மீண்டும் அந்த அனுபவத்தைப் புதிதாக அடைவது இயல்வதில்லை. ஆனால் முதன்முறை அடைந்த அந்த அனுபவத்தின் பரவசம் மனதில் தங்கி விடுகிறது”

மௌனியின் “அழியாச்சுடர்”

“அழியாச்சுடர் சிறுகதை ஒரு நவீன ஓவியத்தைப்போலவே எழுதப்பட்டுள்ளது. அதன் வடிவம் மட்டுமல்ல அதன் கதைமாந்தர்களும் துல்லியமற்ற சூழலிலேயே நிகழ்ந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் பேசும்போது பேச்சு எழுகிறதா எனத் தெரியவில்லை. அவர்கள் அழுகைக்கான காரணங்கள் அவர்களுக்கே தெரிவதில்லை. அவர்கள் காணும் காட்சிகளும் உண்மையா அல்லது கற்பனையா என்பதும் அவர்களுக்குப் புலப்படுவதில்லை. அவர்கள் உண்மையில் காட்சிகளை அல்ல அர்த்தங்களை மட்டுமே கண்டுகொள்கிறார்கள். காட்சிகள் மீது அவர்களே ஏற்றிக்கொண்ட ஏதேதோ அர்த்தங்கள். “

லண்டனில் இலக்கிய உரையாடல்கள் – புதுமைப்பித்தனின் “செல்லம்மாள்”

வானத்திலே தறிகெட்டுச் சிதறிக் கிடந்த நட்சத்திரங்களில் திரிசங்கு கிரகமண்டலம் அவர் கண்ணில் பட்டது. அவருக்கு வான சாஸ்திரம்ம் தெரியாது. சங்கு மண்டலத்தின் கால், தூரத்தில் தெரிந்த கறுப்பு ஊசிக்க் கோபுரத்தில் மாட்டிக் கொண்டு அஸ்தமிக்கேவா உதயமாகேவா முடியாமல் தவித்தது. — சங்கு மண்டலம் crux எனப்படும் நட்சத்திரக்கூட்டம். நமது புராணத்தில் அது திரிசங்கு சொர்க்கம் – அங்கும் போக முடியாமல் இங்கும் வரமுடியாமல் நடக்கும் ஊசலாட்டத்தைக் குறிக்கிறது. இங்கு செல்லம்மாளின் மனநிலை அப்படிப்பட்டது தான். அவளது சமூக மனம் கணவன் வேலைக்குச் அனுப்ப நினைக்கிறது, உடல் வியாதியும் மனமும் தனிமையை உணர்ந்து தவிக்கிறது“

சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம்

கலந்துரையாடல் பங்கேற்பவர்கள் : ஜெயந்தி சங்கர், சத்தியானந்தன் இவர்களுடன் சொல்வனம் சார்பில் ரவி சங்கரும், நவீன விருட்சம் சார்பில் அழகியசிங்கரும் இடம் : பனுவல் விற்பனை நிலையம் 112 திருவள்ளுவர் சாலை திருவான்மியூர், சென்னை 600 041 தேதி 02.01.2016 (சனிக்கிழமை) நேரம் துவக்கம்: மாலை 5.30 மணி “சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம்”

ஓகே கண்மணி: உரையாடல்

ஒ.கே. கண்மணி இரண்டாம் ரகம். ஐஃபோன் பிரியர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரி விஷயங்கள்தான் படம் முழுக்க உலா வரும். ஐஃபோனில் எல்லாமே வழுக்கிக் கொண்டு போகுமாறு அமைத்திருப்பார்கள். உயர்தர appகளை மூன்றாவது தரப்பைக் கொண்டு வழங்குவார்கள். ஒ… காதல் கண்மணியில் அந்த விஷயங்கள் எல்லாம் செமையாக உருவாக்க ஏ.ஆர் ரெஹ்மான், பி.சி. ஸ்ரீராம் போன்ற மூன்றாவது தரப்பு கட்டமைக்கிறது. காதுக்கினிய இசை, கண்ணுக்கினிய ஒளிப்பதிவு, சிந்திக்கவேத் தேவைப்படாத இடைமுகம் போல் ஸ்ரீகர் பிரசாத்தின் படத் தொகுப்பு – எல்லாம் எளிமைவிரும்பிகளுக்கு, இந்தக்கால ஃபேஸ்புக் பயனாளர்களுக்கு சொர்க்கம்.

ராய் மாக்ஸம் நேர்காணல்

முதல் சிப்பாய் கலகம் வரை கிழக்கிந்திய கம்பனியின் ஆட்கள் தான் கலெக்டர்களாக இருந்தார்கள். அதனால் ஊழல் சாத்தியம். பின் கிழக்கிந்திய கம்பனி நாட்டுடைமையாக்கப்பட்டு அரசாங்கம் அதை எடுத்துக்கொண்டது. அதன் பின் மிக அர்ப்பணிப்புள்ள கலெக்டர்கள் அமைந்தார்கள். ஆனால் காலனி நாட்டை பிடிப்பதன் காரணம் அதன் நலன் கருதியோ அதை முன்னேற்றுவதற்கோ அல்ல. அப்படி நினைப்பது ஒரு வெகுளித்தனம் மட்டுமே. பொதுவாக இந்தியர்களைச் சுரண்டுவதில் சக இந்தியர்களுக்கு நிகர் யாரும் இல்லை. ஜாதியமைப்பு முதலியவற்றைப் பார்த்தாலே அதை தெரிந்து கொள்ளலாம்.

இணைய உரையாடல் – ஆள் குறைப்பு, ஐ.பி.எம்.

இது ஐபிஎம் மில் உலகெங்கும் உள்ள பிரச்சினையா அல்லது அமெரிக்கா அல்லாத இடங்களில் உள்ள பிரச்சினையா? இதில் என்ன அளவு மிக்க உயர் கல்வி பெற்றவர்களின் ஆதிக்கம் உள்ளது? நேற்று உயர்கல்வித் தகுதி பெற்றவர்களின் தகுதிகள் இன்று பயனற்றவையாக ஆகும் நிலை பல துறைகளில் பல தொழில் முகங்களில் ஆகி விட்டது. காட்டாக கெமிகல் ஃபிஸிக்ஸ் அல்லது ஆர்கானிக் கெமிஸ்ட்ரி என்ற துறைகளில் முனைவர் பட்டம் வாங்கியவர்கள் இன்று கிட்டத்தட்ட வேலைக்காகாதவர்களாகப் பல கெமிகல் நிறுவனங்களிலும், மருந்துதயாரிப்பு நிறுவனங்களிலும் பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் குறுக்கு வெட்டாக இருக்கும் பல இன்றைய தொழில் நுட்பத்துறைகளுக்குப் பக்கவாட்டிலோ, மேல் நோக்கியோ தாவ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

ஆறு பேர் உரையாடுகிறார்கள் – பெற்றோர் எதிர்க்கும் காதல்

தமயந்தி: சினிமாக்கள் மொத்தம் 7 கதைக்கருக்களைச் சுற்றியே எடுக்கப்படுகின்றன என்கிறார்கள். பெற்றோர் எதிர்க்கும் காதல் என்பதுதான் இவற்றில் மிகவுமே அடிச்சுத் துவைக்கப்பட்ட ப்ளாட்டோ? லட்சத்திப் பத்தாவது படமாய் இந்தக் கருவில் எடுக்கப்பட்டிருக்கும் படத்தின் கலெக்ஷன் 100 கோடியைத் தாண்டிவிட்டதாமே? அதிலே 100 ரூபாய் என்னுடையது. வேறு யாராவது பார்த்தீர்களா?

பேட்டிகள் – சில குறிப்புகள்

நாம் ஒரு எழுத்தாளரைச் சந்திக்கும்போது என்ன எதிர்பார்க்கிறோம்? ஏன் அத்தனை நேரம் அதற்குச் செலவழிக்கத் தயாராக இருக்கிறோம்? புனைவுலகில் அப்படி என்னதான் பெரும் சூட்சுமம் இருக்கிறது, புனைவு எப்படி உதிக்கிறது, அதை ஒருவர் எப்படிக் கட்டமைக்கிறார், ஏன், அவருடைய அனுபவம்தான் என்ன அப்படி ஒரு வாழ்வு வாழ்வதில், அவர் எப்போது திறன் இருக்கிறது என்பதை அறிகிறார், வாசகர்களின் ஆர்வம் என்பது அவர் வாழ்வில் என்ன பங்காற்றியுள்ளது என்பன போன்றவற்றைத் தெரிந்து கொண்டு நமக்கு என்ன கிட்டப் போகிறது?

அசோகமித்திரனுடன் ஓர் உரையாடல்

நாவல் வடிவத்துக்கே சில குறைகள் உண்டு.
அது நீளமா போயிடறதாலயே, கதையை வேறே வேற காலகட்டங்கள் சொல்றதாலயே, அதுலே கொஞ்சம் பிழைகள் வருவதற்கான சாத்தியங்கள் உண்டு. பர்ஃபக்ட் நாவல்னு தேர்ந்தெடுக்கறது ரொம்ப கஷ்டம். உலக இலக்கியத்திலே எனக்கு தெரிஞ்ச அளவிலே, அப்படி பர்ஃபெக்ட்னா – சின்ன நாவல்கள்லதான் கண்டுபிடிக்க முடியறது. ஆல்பர்ட் காமு எழுதினது, ‘த அவுட்சைடர்’ன்னு ஒண்ணு எடுத்துண்டாக்க, அது அப்படியே, ஒண்ணுமே பிரிக்கவே முடியாது, சேர்க்க முடியாது. கரெக்ட்டா இருக்கும். காஃப்காவோட நாவல்களும் கரெக்டா இருக்கும். ஆனா காஃப்காவே ஒரு லாங்கர் பீஸா, இன்னும் நீளமா எழுதணும்னு ஆசைப்பட்டிருக்கார் – அவருக்கு சார்ல்ஸ் டிக்கன்ஸ் மாதிரி எழுதணும்னு ஆசை, சார்ல்ஸ் டிக்கன்ஸ் அவரோட சமகாலத்தவர் இல்லை, செத்துப் போயிட்டாரு, ஆனா அவர் எவ்வளவு பேரை சந்தோஷப்படுத்தினார்… அந்த மாதிரி தானும் எழுதணும்னு அதை நினைச்சு ஒண்ணு எழுதினார், ‘அமெரிக்கா’னு. ஆனா அது அவ்வளவு வெற்றிகரமா வரலை. அது என்னன்னா இந்த நீளமும் – அதுலே ஏதோ சங்கடம் இருக்குனு எனக்கு தோணறது, இல்லே. என்னால பெருசாத்தான் நினைக்க முடியும், எழுத முடியும்னா இதுலெ ஒண்ணும் நாம யாரையும் தடை சொல்ல முடியாது. அதுதான் உத்தமமானதுன்னு சொன்னாக்க உத்தமமானதுன்னு நாம ஒத்துண்டுட்டா போறது.

லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் நேர்காணல்

ஒரு புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு மொழியாக்கம் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. மூல ஆசிரியரின் சொற்சித்திரங்கள் எனக்குப் பழக வேண்டியது மிக அவசியம். எல்லாவிதமான படைப்புகளையும் ஆங்கிலத்து மொழிமாற்றம் செய்கிறேன் என்றாலும், மெளனியின் படைப்பு அமைதிக்கும், அம்பையின் படைப்பு ஆழத்துக்கும் வித்தியாசம் இருக்குதானே? ஆங்கிலத்தில் படிக்கும்போது இந்த வித்தியாசத்தை வாசகரிடம் கடத்த வேண்டியது அவசியம்.

திலீப்குமாருடன் ஒரு சந்திப்பு

அசோகமித்திரன் தற்காலத்து முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். நவீனத்துவ இலக்கியத்தின் முதன்மைப் பிரதிநிதிகளில் ஒருவர். தன் சமகால தமிழ் புனைவு மொழியின் திசையையும் வீச்சையும் மிக அடக்கமாகவும் தன்முனைப்பின்றியும் கட்டமைத்தவர். அவரை நெடுங்காலம் நெருக்கமாக அறிந்திருக்கும் திரு திலீப் குமார் அவர்கள், சொல்வனம் கேட்டுக் கொண்டதன் பேரில் அசோகமித்திரன் குறித்து உரையாடச் சம்மதித்தார். நானும் திரு ரவிசங்கரும் அவரது அலுவலகத்தில் அவரைச் சந்தித்தோம்.

இணைய உரையாடல் – பெற்றோர்- குழந்தைகள் உறவு

இது மாறிவருகிறது. பெற்றோர்- குழந்தைகளிடையே மன அழுத்ததிற்கு இன்னொரு பெரிய காரணம் அவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட முடிவுகளை குழந்தைகளின் ஆர்வம், ஆற்றல் இவற்றிச் சார்ந்து எடுக்காமல் பெற்றோர் தம் கனவுகளை அவர்கள் மேல் திணிப்பதும்தான்., போர்ட் தேர்வுகளுக்கு முன்பு, பரிட்சை முடிவுகள் வெளியாகும்போதும்தான் எத்தனை தற்கொலைகள்!

மேல்நாட்டுச் செருப்பு

மேலை நாட்டினர் அவர்களின் குறுகிய புரிதலுக்கு ஏற்ப உருவாக்கிய செருப்புக்கு ஏற்ப இந்துமதத்தின் கால்கள் வெட்டப்பட்டு அச்செருப்புக்குள் தினித்து நிற்க வைக்கப்படுகிறது. நம்முடைய தத்துவங்களை விளக்க நாம் இந்தச் செருப்புக்குள் நின்று கொண்டு விளக்க வேண்டியதில்லை.

ஜெஃப் டையருடன் ஒரு நேர்காணல்

“நான் பற்பல பொருள்களைப் பற்றி நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். எல்லாப் பொருள்களுக்கும் ஒரே மாதிரி கட்டமைப்பையே பயன்படுத்தியிருந்தால், அதெல்லாம் ஒரு தூசுக்குச் சமமாகி விடும்..”

பெரிய வீட்டின் ஒரு சிறிய பிறைக்குள்… – ஆதவனை வாசிப்பதில் உள்ள அடிப்படைச் சிக்கல் – ஓர் உரையாடல்

“ஆதவனை நான் தாழ்வாகக் கருதவில்லை. ஆனால் அவர் பெரும் ஆகிருதி உள்ள எழுத்தாளர் அல்ல. அ.மி சமகாலத்தில் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு காடா விளக்கின் புகை கக்கலில் முகம் ஒளியூட்டப்பட்டும், இருண்டும் தெரிய, உண்டிகளை விற்கும் ஒரு தெருமுனைத் தள்ளு வண்டி வியாபாரியை அ.மி தீட்டும் சித்திரத்தின் எளிய உறுதியை ஆதவனால் அடைய முடியாததற்குக் காரணம், அவர் கூடதிகமாக உளநிலைச் சிக்கல்களை இழை பிரிப்பதிலேயே கவனத்தைச் செலுத்தியது என்று நினைக்கிறேன்.”

’கலங்கிய நதி’ – பி.ஏ.கிருஷ்ணனுடன் ஒரு உரையாடல்

எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணனின் சமீபத்திய நாவல் ‘கலங்கிய நதி’. அவரது ஆங்கில நாவலான ‘The Muddy River’ என்ற ஆங்கில நாவலை அவரே தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு மத்திய அரசு அதிகாரியின் வாழ்க்கையினுடான பயணத்தில் பல விஷயங்களை பேசிச் செல்லும் இந்நாவலின் வடிவம் தமிழ்க்கு புதிது. இந்நாவல் குறித்து பி.ஏ.கிருஷ்ணனுடன் நடந்த ஒரு உரையாடல் இது. ’ஆங்கிலத்தில் நன்றாக எழுதுபவன் என்ற பெயரை விட தமிழில் நன்றாக எழுதுபவன் என்ற பெயர் எனக்கு வாசகர்கள் மத்தியில் கிடைத்தால் மிகவும் பெருமையாக இருக்கும்’, என்று சொல்லும் கிருஷ்ணன், இந்த உரையாடலில் தன் நாவல் குறித்து மட்டுமல்லாமல், தன்னுடைய இளவயது குறித்தும், அதிகார மட்டத்தில் நிகழும் ஊழல், காந்தியம், அண்ணா ஹசாரே முதலிய பலவற்றைக் குறித்தும் பி.ஏ.கிருஷ்ணன் தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார் : ‘நேசிப்பவர்களுக்கிடையே நெருக்கம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு இடைவெளியும் இருக்கிறது. இது ஒருவருக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பைச் சிறிதளவும் குறைப்பதில்லை. ஆனாலும் அன்புடை நெஞ்சங்கள் தாங்கலந்தாலும் வானம் நீரை மீண்டும் இழுத்துக் கொள்கிறது. செம்புலம் உலர்ந்து விடுகிறது. வானம் மறுபடியும் பொழியும், நீர் திரும்பச் செம்புலத்தை வந்தடையும் என்ற நம்பிக்கையே இந்த நாவலின் மைய அச்சு. கதையின் இரு முக்கியமான பாத்திரங்களான சந்திரனும், சுகன்யாவும் இந்த நம்பிக்கையை வெவ்வேறு பாதைகளில் பயணம் சென்று சேர்ந்தடைகிறார்கள் அவர்களது பயணங்களைப் பற்றிப் பேசும் ஒரு சிறிய முயற்சியே இந்த வடிவம்.’

வண்ணநிலவனுடன் ஒரு சந்திப்பு

ஏராளமான படைப்புகளைப் படித்துப் படித்து மனம் ஒருவிதமான மொழிசார்ந்த தளத்தில் பக்குவமாக இருக்கிறது. இதனுடன் நமது சொந்த அனுபவங்கள் சேரும்போது படைப்பு வெளியாகிறது என்று நினைக்கிறேன். என்னுடைய முதல் சிறுகதையான ‘மண்ணின் மலர்கள்’ என்ற சிறுகதை, சாலையோர மரம் ஒன்று வெட்டப்படுவதைப் பற்றியது. இது ஒரு உண்மைச் சம்பவம். பாளையங்கோட்டையில் முருகன்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் பலருக்கும் நிழல் தந்த மரத்தை எதனாலோ வெட்டினார்கள். அது எனக்குக் கஷ்டமாக இருந்தது. அந்த மனநிலையைத்தான் சிறுகதையாக எழுதினேன்.

மதராஸ் கண்ணனுடன் ஒரு நேர்முகம் – பாகம் இரண்டு

தனக்கு இருபது வயதாகும்போது கண்ணன் அரியக்குடி, செம்பை, ஜிஎன்பி, செம்மங்குடி, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்ற ஜாம்பவான்கள் அனைவருக்கும் வாசித்திருத்தார். “என் பக்கவாத்தியம் இல்லாத தண்டபாணி தேசிகரின் கச்சேரியை நீங்கள் கண்டுபிடிப்பது அரிது,” என்கிறார் கண்ணன்.

மதராஸ் கண்ணனுடன் ஒரு நேர்முகம்

ஒரு நல்ல நாளன்று நான் வாய்ப்பாட்டையும் வீணையையும் கிருஷ்ணசாமி நாயுடுவிடமும், மிருதங்கத்தை பீதாம்பர தேசாயிடமும் கற்றுக் கொள்ளத் துவங்கினேன். இப்போதெல்லாம் ஒருவரே பல துறைகளில் வல்லுனர்களாக இருக்கிறார்கள். அந்த நாட்களில் ஏதோ ஒன்றில் தேர்ச்சியை அடைய வேண்டுமென்றாலும் மற்ற அனைத்தையும் விட்டு விட வேண்டும் என்று நம்பினோம். நான் வீணையையும் வாய்ப்பாட்டையும் மிருதங்கத்துக்காக விட்டுவிட்டேன்”.

‘கோவில் பொக்கிஷங்கள் சந்தைப் பொருட்கள் அல்ல’

இவற்றை வெறும் “சொத்து”க்கள் என்று மட்டுமே பார்க்க முடியாது. இவை நமது கலைப் பொக்கிஷங்கள். கலைப் பொக்கிஷங்கள் சந்தையில் விற்கப்படும் பொருள்கள்(commodity) அல்ல. உதாரணமாக, தஞ்சை பெரிய கோவிலை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த கோவிலில் இருக்கும் ஓவியங்களை வெறும் “சொத்து”க்கள் என்று நீங்கள் கூறமுடியுமா? சோழர் கால சிலைகளை வெறும் “சொத்து” என்று வகைப்படுத்திவிட முடியுமா? ”இவற்றையெல்லாம் அரசாங்கம் கைப்பற்றி அதை சந்தையில் விற்று விட வேண்டும். அந்த பணத்தைக் கொண்டு மக்கள் நலப்பணித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்” என்ற சொல்லத் துணிவது எத்தகைய முட்டாள்த்தனம்!

தி.ஜானகிராமனுடன் ஓர் உரையாடல்

காவிரின்னா சங்கீதம்னு சொல்றபடி இருக்கு. இது நமக்கு பிதுரார்ஜிதம், நீங்க எழுத ஆரம்பிச்சபோதும் சரி… இப்போதும் சரி… சுற்றியிருக்கிற எழுத்தாளர்கள் இந்தக் காவிரிக் கரையிலிருந்து வந்தவர்கள் தான். உங்க எழுத்தில வர்ற சங்கீதம் ஒரு சூழலா ஒவ்வொருத்தவர் உள்ளேயும் ஒரு ஆத்மிக உத்வேகமா வந்திருக்கு. பிரமாதமான விஷயம் அது… நான் பார்த்து ரொம்பவும் சந்தோஷப்பட்டது… வியப்படைந்தது. பிரமாதமான விஷயம்.

’கதை என் மீது துள்ளியபடி இருக்கும்’

ஆம் என் தலைக்குள் பல எண்ணங்கள் ஓடியபடி இருக்கும். இருந்தும் எந்த புதிய எண்ணங்களும் இல்லாததைப் போல பல தினங்கள் வெறுமே கழியும். ஆனால் எதையாவது எழுத துவங்கிவிட்டால் பித்து பிடித்ததைப் போல் ஒரு வாரத்தின் ஏழு நாட்களிலும், ஒரு நாளைக்கு பத்து அல்லது பதினைந்து மணிநேரங்கள் உழைப்பேன். இப்படி நடக்கும் நிகழ்வுகளே என் கதைகளை தீர்மானிக்கும்.

கதைக்களன் – ஓர் உரையாடல்

ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய தண்டனை அவன் வாழும் இடத்திலிருந்து இடம்பெயர்க்கப்படுவதுதான். அப்படி இடம்பெயரும்போது, படைப்பூக்கத்தின் ஊற்றுக்கண் திடீரென்று அடைக்கப்பட்டதுபோல் பெரும்பாலான படைப்பாளிகள் உணர்வார்கள். ஒரு எழுத்தாளனை நாடு கடத்துவது அவனைக் கொல்வதை விட சித்திரவதையளிக்கும் தண்டனை.

பட்ஜெட் 2010 – ஒரு பேட்டி

2010ஆம் ஆண்டின் நிதி அறிக்கை (budget) பற்றிச் சில கேள்விகளை இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (பெங்களூரு) பேராசிரியர் திரு. ரா.வைத்தியநாதனுடன் உரையாடினோம். பெருகிவரும் தாராளமயமாக்கல், கிராமப் புற வளர்ச்சித் திட்டங்கள், விவசாயம், உள்கட்டுமானம் போன்ற துறைகள் மீது இந்த பட்ஜெட்டின் கவனம் குறித்து உரையாடல் நீண்டது. “தனியார் மயமாக்குவது என்பது அதனளவிலேயே ஒரு இலக்காக ஆக முடியாது. அது ஒன்றும் மந்திரக் கோல் அல்ல. நம் அமைப்பும் மிகவும் குழப்பம் நிறைந்த ஒரு அமைப்பு. தவிர அரசு நிறுவனங்களைச் சரியான மதிப்பு போட்டு விற்பது என்பதும் எளிய செயலல்ல.”

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தில் அடையாள அரசியல்

அடையாள, இலக்கிய மற்றும் குழு அரசியலில் இருக்கும் ஈடுபாட்டில் வெறும் கால்பங்கு நல்ல பல படைப்புகளை உருவாவதிலும் அவற்றை மேலும் மேம்படுத்தி வளர்த்தெடுப்பதிலும் இருந்தாலே போதுமானது. சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் வளர்ச்சிக்கு உத்திரவாதம் கிடைத்துவிடும். இதற்கெல்லாம் இப்போதைக்கு ஆசை மட்டும் தான் படலாம். மாற்றங்கள் ஏற்படுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

குறைந்த வயது – முதிர்ந்த பாட்டு

கே.வி.நாராயணசாமி நினைவாக நடந்த அந்தக் கச்சேரியில் விரிவாக காபி ராகத்தைப் பாடி, “இந்த சௌக்ய” பாடினார். அன்றிலிருந்து, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கேட்டு வருகிறேன். பாட்டில் வயதுக்கு மீறிய முதிர்ச்சி. நல்ல அழுத்தம். கனமான சாரீரம் இருந்தும், குரலின் ஆற்றல்களைக் காட்டுவதில் கவனம் செலுத்துவதை விட, பாவப் பூர்வமாய் பாடுவதில் கவனம் செலுத்துகிறார். சொல்வனத்துக்காக இவரோடு நடத்திய உரையாடல் இது.