ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் வாழ்ந்த காலத்தை பக்தி காலகட்டத்துக்கு (கிபி ஏழாம் நூற்றாண்டு) ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் அமைத்திருப்பதாக குரு பரம்பரை வைபவம் தெரிவிக்கிறது. தமிழ் இலக்கிய ஆய்வாளர்களின் கூற்றுப்படியும், மொழியியல் ஆய்வு வழியாகவும் வைணவ பிரபந்தங்கள் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்கும் பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் என வகைப்படுத்தியுள்ளனர். ஆனாலும், ஆழ்வார்கள் கால வரிசை, அவர்களது பிறப்பிடம், பாடல் பெற்ற கோயில்களின் வரலாறு, நித்திய கைங்கர்யங்களை தொகுத்து வைக்கும் கோயிலொழுகு போன்றவற்றை ஆவணமாகக் கொள்ளமுடியும்.
Tag: தெய்வம்
சிவகாமி நேசன் என்னும் இனிமை
பனிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கன்னட பக்திக் கவிஞரான அக்கமகாதேவி சிவனை நினைத்து எழுதிய வசனங்களை எழுத்தாளர் பெருந்தேவி மொழிபெயர்த்துள்ளார். அவை ‘மூச்சே நறுமணமானால், என்ற நூலாக வெளிவந்திருக்கிறது. நூற்றி இருபது வசனங்கள் கொண்ட இந்த நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் “சிவகாமி நேசன் என்னும் இனிமை”
