இந்திரா பார்த்தசாரதியின் சிந்தனைகளைப் பற்றி சில சிந்தனைகள்

திராவிட இயக்கங்கள் பிம்ப கவர்ச்சியை முன்னிறுத்தி அதிகாரத்தை அடைந்தன எனும் பார்வைக்கு மாற்றாக ஏற்கனவே இங்கு செல்வாக்கோடு இருந்த வழமையைத் தனக்கு சாதகமாக்கிக்கொண்டது. கோவில் விளைவுகள் (விழாக்கள்??), உற்சவங்களோடு தேர்தல் அரசியலுக்கு உள்ள ஒப்புமையை அளிக்கிறார். ‘ஒரு சமுதாயப் புரட்சி ஏற்பட்டிருந்தால் உண்மையாகவே அச்சமுதாயப் புரட்சிக்கு காரணமானவர்கள் புத்தரைப் போலவோ அல்லது இயேசுநாதர் போலவோ அல்லது லெனினை போலவோ மிகப்பெரிய சிந்தனையாளர்களாக இருந்திருந்தால் நம்முடைய இலக்கியம் இப்பொழுது இருக்கக்கூடிய இந்நிலையில் இருக்காது என்று உறுதியாக கூறலாம்.