வசதி படைத்த சமூகத்தினர் சிலர் ,எங்கள் அடிமை நிலை குறித்து வெளிப்படையாகப் புலம்பி அலட்டிக் கொண்டிருந்தபோதும் எங்களைப்போன்ற புத்திசாலிகளுக்கு அது ஒரு பொருட்டாகவே படவில்லை. மாதம் பிறந்ததும், முதல் தேதியன்று சம்பளக்கவரோடு நான் வீட்டுக்குள் நுழையும் நேரத்தில் இந்த உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கும் ஒரு பேரரசனைப் போன்ற ஓர் உணர்வே எனக்கு ஏற்படும்.
Tag: எம். ஏ. சுசீலா
தாரகேஸ்வரி
ஏதோ ஒரு வேலையில் தீவிரமாக ஆழ்ந்திருந்தாலும் முதல்வரின் பார்வை இடையிடையே வெளியே நிற்பவர்களையும் தொட்டு மீளாமல் இல்லை. ஆனால் அதில் எங்களைக் கண்டுகொண்ட பாவனையோ, அறைக்குள் வரச்சொல்லி அழைக்கும் சைகையோ கொஞ்சமும் இல்லை. மனதுக்குள் சுழன்று கொண்டிருக்கும் முக்கியமான ஏதோ ஒரு சிந்தனையையே அந்த முகம் வெளிப்படுத்திக்கொண்டிருந்ததால், எங்கள் மீது அவ்வப்போது படியும் அவரது பார்வை , இலக்கற்ற வெற்றுப்பார்வை மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
வசந்த காலத்து உணவுப்பட்டியல்
மறுநாளே உணவு வகைகளை வரிசைப்படுத்தி அழகாகத் தட்டச்சு செய்து ஒரு சீரான மெனு கார்டைத் தயாரித்துக்கொண்டு போய் ஷூலென்பர்கிடம் காட்டினாள் சாரா. சாப்பிட வருபவர்களை ஈர்க்கும் வகையில் சரியான தகுந்த தலைப்புக்களுக்கு அடியில் உணவுப்பொருட்களை அவள் தட்டச்சு செய்திருந்தாள். பசியைத் தூண்டுவதற்கான தொடக்கச்சிற்றுணவுகள் தொடங்கி ‘சாப்பிட வருபவர்கள் மறந்து போய் விட்டு விட்டுப் போய்விடும் குடைகளுக்கும்,கோட்டுகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல’ என்ற வாசகம் வரை எல்லாவற்றையும் சரிவர வகைப்படுத்தி அமைத்திருந்தாள் அவள்.
மேபெல்
அதிருஷ்டவசமாக மறுநாள் ஒரு ஃபிரெஞ்சுக் கப்பல் சைகோனுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தது. அவன் அதில் ஏறிக்கொண்டான். சைகோனில் பத்திரமாக இருக்கலாம்; அவன் அங்கே போகக்கூடும் என்று அவளுக்கு ஒருபோதும் தோன்றாது. அப்படித் தோன்றியிருந்தால் நிச்சயமாக இதற்குள் மோப்பம் பிடித்திருப்பாள். பாங்காக்கிலிருந்து சைகோன் செல்ல ஐந்து நாட்கள் பயணம் செய்தாக வேண்டும். செல்வதற்கான படகுகளும் அழுக்காகவும் கூட்ட நெரிசலோடும் அசௌகரியமாகவும்தான் இருக்கும்.
வேட்டை நாய்
முதுகிலும், கைகளிலும் பட்டிருந்த காயங்களின் வலிக்கடுமை பிரெலைப் பாதித்துக் கொண்டிருந்தது. அவர்கள் அவனை வலுவாகத் தாக்கி அடித்துப் போட்டுவிட்டுப் போயிருந்தார்கள். அவனோ ஒரு முட்டாளைப்போல் இங்கே நின்று கொண்டு தன் பிரச்சினைகளுக்கு மிக எளிதான ஒரு பதிலை யோசித்துக் கொண்டிருக்கிறான். தனது அம்மாவும் தங்கையும் வாத்துகளை விட முக்கியமில்லாதவர்களாக மாறிவிட்டிருக்கிறார்களா என்ன?
என் தலைக்கான கொன்றை
நடந்து முடிந்திருந்த இறுதிச் சடங்குகள் அங்கிருந்த எல்லாரையுமே அசதிக்கு ஆளாக்கி இருந்தன. அந்த வீட்டிலிருந்த மிகவும் வயது குறைவான பெண்ணும் கூட சீக்கிரம் தூங்கப் போகலாமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் படுக்கையில் படுத்திருந்தபடி நல்ல முழு விழிப்போடு இருந்த லெண்டினாவோ, தான் செய்ய வேண்டிய அடுத்த காரியத்தைப் பற்றித் திட்டமிட்டுக் கொண்டிருந்தாள். புதைகுழிக்காகத் தேர்ந்தெடுத்த இடத்தில் ஒரு கொன்றை மரத்தை நடவேண்டுமென்று அவள் ஆசைப்பட்டாள்.
ஐந்து பெண்கள்
‘’என்ன சொல்கிறாய்..? பேரழிவா? ஏ மூதாட்டியே, அது இயற்கையாக நேரிட்டிருக்கும் பேரழிவென்றா சொல்கிறாய்? அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான ஒரு சண்டயில் பெரிய பெரிய அரசர்களெல்லாம் பங்கெடுத்துக் கொண்டார்கள். சிலர் ஒரு பக்கம் இருந்தார்கள்; வேறு சிலர் எதிர்த் தரப்புக்குச் சென்றுவிட்டார்கள்…
200-அம்பை சிறப்பிதழுக்குச் சில மறுவினைகள்
வண்ணநிலவன் சொன்னது போல அம்பை என்கிற பெயரைக் கேட்டவுடன் அந்தச் சிறு வயதில் எனக்கு அது அம்பாசமுத்திரமாகத்தான் தோன்றியது. அதுவும் ‘அம்மா ஒருகொலை செய்தாள்’ படித்த போது ‘என்ன இருந்தாலும் நம்ம ஊருல்லா! அதான் இவ்வளவு அளகா எளுதுதாங்க’ என்று தோன்றியிருக்கிறது. பின்னால் எழுத்தாளர் அம்பை என்கிற லட்சுமியைப் பற்றி அறிய நேர்ந்த போது “ச்சே! நம்ம ஊர் இல்லையாமே’ என்கிற வருத்தம் இல்லாமல் அவரது எழுத்து குறித்த மதிப்பை அந்த சமயத்தில் சற்றே வளர்ந்திருந்த எனது வாசக அனுபவம் தந்தது.
