கலிஃபோர்னியாவைச் சேர்ந்த புகைப்பட வல்லுனர் பீடெர் மென்ஸெல், ‘Hungry Planet’ எனும் புத்தகத்துக்காக 24 நாடுகளுக்கு சென்று எடுத்த புகைப்படங்கள் இவை. சுடானில், நான்கு தலைமுறைகள் சாப்பிட 79 பவுண்டுகள் செலவு செய்யும் அபூபக்கர் குடும்பத்திலிருந்து 320 பவுண்டுகள் செலவு செய்யும் ஜெர்மானிய குடும்பம் வரை, உலகின் சராசரி “பசித்த பூமி”
Category: இதழ்-86
சிறுவனும் அணுவும்
அணுக்களில் தகவல் சேமிக்கும் தொழில் நுட்பத்தைப் பற்றி ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கும் IBM ஆய்வகத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் ‘உலகின் மிகச் சிறிய’ படம் இது! இந்த தின் ஒவ்வொரு காட்சியையும், அணுக்களை ஒவ்வொன்றாக நகர்த்தி பல மில்லையன் அளவு பெரிதாக்கி உருவாக்கியிருக்கிறார்கள்.
கவிதைகள்
ஆலமரத்திலிருந்தன
ஆயிரம் பறவைகள்
ஒன்றைச் சுட்டான் குறவன்
எஞ்சியவைகளை
எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
லா.ச.ரா – காலத்தின் மொழி
லா.ச.ரா நமக்கு சுவைக்கக் கொடுத்தவை கதைகள் அல்ல. “உணர்வு” என்ற ஒற்றைச் சொல்லின் பொருளை அணுஅணுவாய் பிளந்து கொண்டே போய், அது பிளக்கும் கனங்களின் ஆன்ம ஒலியை காலத்தில் வடிகட்டி, சொற்களுக்குள் திணித்துக் கொண்டே போய், அதிலேயெ வார்க்கப்படும் வரிகளுக்கு வடிவம் செதுக்கி…காகிதக் கூழில் எடுத்த நம் ஞாபகப் பிரதிகள்!
சி சு செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு – நிறைவுப் பகுதி.
வேடிக்கையாகத் தான் இருக்கிறது. இன்று செல்லப்பா காலமாகி பத்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, அவரைப் பற்றி நினைப்பவர்கள் – நினைப்பவர்கள் இருக்க மாட்டார்களா என்ன? எட்டு கோடி தமிழரில் அவரிடம் பழகிய அவருக்கு பத்திருபது வயது இளையவர்கள், அந்த தலைமுறையில் அவர் பெயரைக் கேள்விப்பட்டவர்கள் சிலராவது இருக்க மாட்டார்களா என்ன? இருப்பார்கள் தான் – அவர்கள் முதலில் அவரை விமர்சகராகத் தான் நினைவு கூறுவார்கள். அவர் சுதந்திரப் போராட்ட உணர்வு கொண்டதும் சிறை சென்றதும் கடைசி வரை காந்தி பக்தராகவே இருந்ததும் தவிர அவர் வாழ நினைத்தது ஒரு எழுத்தாளராக. எழுத்தாளராக வாழ்வது சாத்தியமாகத்தான் அவர் சென்னைக்கு வந்ததும். அவர் பழகியதும் உடன் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ்ந்ததும் எழுத்தாளர்களோடு தான். சிறு கதைகள் அவர் மனத்தை ஆக்கிரமித்திருந்தன. க.நா.சு. அந்த காலகட்டத்தில் விமர்சனத்தின் தேவையை வலியுறுத்திப் பேசி வந்த காலத்தில் எல்லாம் அவர் பிச்ச மூர்த்தி போல், இன்னும் மற்ற சக எழுத்தாளர்கள் போல் அதை ஏற்க மறுத்தே வந்திருக்கிறார். க.நா.சு. குளவியாகக் கொட்டிக் கொட்டித் தான் செல்லப்பாவும் குளவியானார்.
'லா.ச.ரா' – எஸ்.ரங்கராஜன்
இன்னா செய்தாரை என்னவோ செய்தல் பற்றி ஒருத்தர் சொல்லிக்கொண்டிருக்கும் போது ராமாமிருதத்தின் கவனம் எங்களிடமிருந்து மெதுவாக நழுவுகிறது. எங்கள் கோஷ்டியில் சேர்ந்துகொண்ட நண்பரின் 5 வயது பெண்ணை அடர்த்தியான புருவங்களின் நிழலில் இருக்கும் தன் சௌகர்யமான பூனைக் கண்களால் பார்க்கிறார். “அவரை வரைவது சுலபம் என்று நினைக்கிறேன். She seems to be all lines”.
நூற்கடலின் கரையில்…
மிகத் துரிதமாக நடக்கும் கதை. ஆனால் செல்லப்பாவுக்கு இக்கதையின் மேல் உள்ள முழுப் பிடியின் காரணமாக வெளிப்பார்வைக்குச் சாதாரணம் எனத் தோன்றும் மொழியில், கதையின் அவசரம் ஆசிரியனைத் தொற்றாமல், சிறு சிறு வேக வார்த்தைகளாலான செயற்கை உத்வேகங்கள் இன்றி, தவ்வாத மொழியில், தவ்வலைச் சொல்லும் சர்வ நிச்சயம் உள்ள எழுத்து. போதை தரும் கதைக் கரு, களம். அதில் கம்பீரமாக செல்லப்பா நடை போடுகிறார். பதற்றம் கொள்ளாத, அவசரம் இல்லாத மொழியில் எழுதப் பட்ட சாகசக் கதை
நெடுங்காலமாகத் தொடரும் அரண் – ராபர்ட்டோ பொலானோ
ராபர்ட்டோ பொலானோவைப் பொறுத்தவரை கவிஞர்களது உலகம் என்பது ஒரு உயிருள்ள மிருகம் போன்றது. ஆயிரம் கைகளும், பல்லாயிரம் சிந்தனைகளும் ஒன்றாக இயங்கி ஒரே இலக்கை நோக்கி பயணம் செய்யும் இயந்திரம். கவிதையின் உள்ளடக்கமும் உருவமும் அதில் மட்டும் முடிவதில்லை. கவிஞனின் உலகத்துள்ளும் ரசனையின் மிச்சங்கள் அடங்கியுள்ளன.
வாசகர் மறுவினை
ஆரவார அரசியல், பகட்டான அடிமைத் தொழில் மோகம் என்று பலரும் சிந்தையற்றுக் கிடக்கையில் சிந்திக்க வைக்கின்ற கட்டுரை. இக்கட்டுரை ஆசிரியருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
இந்தியக் கவிதைகள் – கன்னடம் – மம்தா சாகர்
என் கைகளை வீசினால்
நதி துளிகளாகச் சிதறி
வானம் மேகம் சூரியனாக
என் மேல் தெறிக்கிறது
டாக்டருக்கும் பெப்பே ! மருந்துக்கும் பெப்பே !
சின்னஞ் சிறுசாக இருப்பதால் பாக்டீரியாவை ஏதோ அற்பக் கிருமி என்று எண்ணிவிட வேண்டாம். ஆண்டி பயாடிக்குகளை சமாளிக்க அது செய்யும் தந்திரங்களைப் பார்த்தால், சில சமயம் நம்மை விட அதற்கு மூளை அதிகமோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. தன்னைத் தானே உரு மாற்றிக் கொள்ளும் வல்லமை அதற்கு உண்டு. அதன் மரபீனிகளில் தற்செயலாக நடக்கும் ரைபோஸோம் மாற்றங்களால் ஏதாவது ஒரு பாக்டீரியாவிற்கு மருந்து எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடுகிறது. அப்படியே விட்டால் தானாகவே செத்து மடிந்துவிடும். ஆனால் நாம் அதை வடிகட்டிப் பிரித்து வளர்த்து ஊர் ஊராகப் பரப்பி நாமே அதை சூப்பர் கிருமியாக மாற்றிவிடுகிறோம்.
சின்ன விஷயங்கள்
குழந்தை முகம் சிவக்க அலறி அழுதது. அவர்களின் சிறிய கைகலப்பில் அடுப்பிற்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருந்த பூச்சட்டியைக் கீழே தள்ளிவிட்டார்கள். அவன் அவளைச் சுவரோடு சேர்த்து அழுத்தி, அவள் பிடியை விடுவிக்க முயன்றான். குழந்தையை பிடித்துக்கொண்டு அவளை முழுபலத்தோடு தள்ளினான்.
புதிர் அவிழும் கணங்கள்
ஃபெர்மா 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கணித மேதை. இவர் இரு காரியங்கள் செய்தார். ஒன்று உலகமே அறியும். இன்னொன்று யாருக்குமே தெரியாது. ஃபெர்மா சிக்கலான கணக்குகளுக்குத் தானே விடை கண்டுபிடிப்பார். பின் கணக்குகளின் விடைகளை நன்றாக அழித்து துடைத்துவிட்டு கணக்குகளை மட்டும் மற்ற கணிதவியலாளர்களிடம் சுற்றுக்கு விடுவார். அவை விடைகளுக்குப் பதிலாக பகையையும் வெறுப்பையும் சுமந்துகொண்டு வரும்.
சீறும் சீனத்து டிராகன்
சுமார் இரண்டாயிரம் கிலோமீட்டர்கள் வரை சென்று தாக்கும் திறனுள்ள சீனாவின் இந்த குறிப்பிட்ட ஏவுகணை சற்று மாறுபட்டது. இதில் அணுகுண்டிற்கு பதிலாக கடலில் உலாவும் விமானந்தாங்கிகளை துல்லியமாகத் தேடி அழிக்கும் திறன் படைத்த குண்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. யாருமே யோசிக்காத மிகவும் சிக்கலான இந்த தொழில்நுட்பத்தைக் கைகொண்டு இந்தப் புதியவகை ஏவுகணையை உருவாக்கியதன் மூலம் கடற்போரின் அடிப்படைகளையே சீனா மாற்றிவிட்டதாக கடற்போர் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
It Happened in Boston? – புத்தக விமரிசனம்
நாவலின் முதல் வாக்கியத்திலிருந்தே ஆச்சரியங்கள் தொடங்குகின்றன. இது அதி புனைவா, மர்ம நாவலா, திகில் நாவலா, கலைஞர்கள், கலை உலகம், அதில் நடக்கும் மோசடிகள் பற்றியதா, அல்லது ஒரு சிதைந்து கொண்டிருக்கும் மனதின் நாட்குறிப்பா என்று இறுதி வரை எந்த முடிவுக்கும் வரமுடியாமல், நாவலின் பெயரிடப்படாத கதைசொல்லியை, அவன் மனதை நாம் பின்தொடகிறோம். ஒரு கதையை நேர்கோட்டில் நடக்கும் சம்பவங்களாக எழுதி, பக்கங்களை முன் பின்னாக மாற்றிப் பிரசுரித்தால் எப்படிஇருக்குமோ அப்படி உள்ளது இது.
நம்பிக்கை
உடன் பிறந்தவர்கள் நான்கு பேரிலும் பெண் குழந்தை உள்ள ஒரே குடும்பம் இவருடையது தான். ஒரு கோழி குஞ்சை போல் அத்தனை சிறியதாக, வெதுவெதுப்பாக இருந்த பிறந்த குழந்தையை உச்சி முதல் உள்ளங்கால் வரை உடம்பே கண்ணாக இரு கைகளிலும் ஏந்தி மனம் பொங்க நின்றார். இத்தனை சிறிய உயிருக்கு இவ்வளவு கனம் இருக்க முடியுமா? கனம் அதன் உடலில் இல்லை.குவிந்த அவர் கவனத்தில் இருந்திருக்க வேண்டும்.
பசுமை நிறைந்த நினைவுகளே…
இப்போது தொடங்குவது எனது பசுமை நினைவுகளுடன் கூடிய பல பசுமை பயணங்கள். 1990ஆம் ஆண்டிற்கு முன்னும் பின்னுமான ஒரு காலகட்டம். அப்போது நான் சென்னையில் பணிபுரிந்து வந்தேன். நான் வேளாண்மை சார்ந்த பொருளியல் துறை சம்பந்தமான கட்டுரைகளை தினமணி பத்திரிக்கையில் 1980லிருந்து வழங்கிக் கொண்டிருந்த நேரம். பி.பி.எஸ்.டி என்று சொல்லப்பட்ட, “தேசபக்தி மாணவர்கள் மக்கள் இயக்க அறக்கட்டளை” என்ற அமைப்பில் உறுப்பினரான திரு முகுந்தன் என்பவர் ஒரு நாள் வீடு தேடி வந்தார்.
மகரந்தம்
அச்சுப் புத்தகங்கள் நிறைய விற்கின்றன. இன்னமும் விற்கின்றன என்பது அதிசயம்தான் என நிறைய மேற்குலக கருத்தாளர்கள் அடிக்கடி சொல்கிறார்கள். அதே நேரம் முன்னெப்போதையும் விட ஏராளமான எழுத்தாளர்கள் இப்போது புத்தகங்களையும், கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதித் தள்ளுகிறார்கள். நிறைய முழு நேர எழுத்தாளர்கள் இப்போதெல்லாம் புத்தகங்கள் எழுதித் தொழில் நடத்த முடியவில்லை, வேறு வேலைகள் செய்தபடி அவ்வப்போது ஒரு புத்தகம் எழுதலாம், அது ஏதோ சில ஆயிரம் பிரதி விற்றால் அதிகம். அதையும் பெரும் பிரசுரகர்த்தர்களிடம் கொடுத்தால் நமக்கு ஏதும் கிட்டுவதில்லை என்கிறார்கள். அதனால் நிறைய எழுத்தாளர்கள் புத்தகங்களைத் தாமே பிரசுரிக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள்.
எரிமலையில் தொலைந்த காதலன் – இருந்தும், தொலையாத காதல்
ஒவ்வொரு துணுக்கையும்
குளிர்ந்த நீலப் பீங்கான் கிண்ணத்தில் சரித்து
பழச் சாறு குளமாய்த் தேங்க முழுப்பழத்தையும்
அதன் தோலினின்று பிரித்து
அதன் பின்பே அதை உண்பது.
எத்தனை இனிமையான
ஓர் ஒழுங்கு
துல்லியமாய் அர்த்தமற்றதாய்
காமசூத்திர ஓய்விடம்
நான் சொல்லப்போவது ஒரு உண்மைச் சம்பவம். வகுப்பு முடிந்து பல்கலையிலிருந்து அறைக்கு திரும்பிய ஒரு கோடை காலத்தின் மாலை ஒன்றில் என் அறையின் கதவின் முன் உறையுடன் கூடிய ஒரு இசை குறுவட்டு வைக்கப்பட்டிருந்தது. அதை முன்வைத்துத்தான் இந்த கட்டுரை. இதைப்பற்றி இவ்வளவு நீளமான கட்டுரை எழுதுவேன் என்றும் அப்போது நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.