இ.பா.வுடனான உரையாடல்கள் எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் செல்லாது; அது பல தளங்களில் விரிந்து செல்லும் அனுபவம். இலக்கியம், சமூகம், அரசியல், லெளகீக வாழ்க்கையெனச் சென்ற அந்த உரையாடல்கள் என்னை மெதுவாகச் செழுமைப்படுத்தின. அவர் பேச்சு சில சமயம் திக்கி வரும். ஒரு வரியின் மீது இன்னொரு வரி படிந்தபடியே செல்லும். கவனத்துடன் அதைக் கேட்க வேண்டும். ஆனால், அதற்குள் ஓடும் சிந்தனை ஓட்டம் தீவிரமானது.
Author: ரவிசுப்பிரமணியன்
ரவிசுப்பிரமணியன் கவிதைகள், இசை வடிவம்
மலரின் இருப்பு மணத்தை சொல்லுகையில்
மரத்தின் அசைவு காற்றை சொல்லுகையில்
பறவையின் பாடல் இசையை சொல்லுகையில்
வாலின் அசைவு வாஞ்சையை சொல்லுகையில்
ரவிசுப்பிரமணியன் கவிதைகள்
சிகையடர்ந்த நெஞ்சில்
மார்புக் கதுப்புகள் அழுந்த முகம் புதைத்து
அரை உறக்கம் கொள்ளும் என் தங்கமே
நின் பின்னழகில் விரல்கொண்டு எழுதுகிறேன்
இனி இந் நதியின் கரையெலாம்
நின் பொன்னொளியால் சுடரட்டும்
