படு நிதானமாக, யானையின் சாவகாச நடைபோலத் தொடங்கிய வாசிப்பு, துள்ளிப் பாயும் மான் போலவும், அதைத் துரத்தும் வேட்டைநாய் போலவும் வேகமெடுத்து நாலுகால்ப் பாய்ச்சலில் முன்னேறியபோது, யாருக்கு யார் பக்கவாத்தியம் வாசிக்கிறார்கள் என்ற குழப்பம் மையத்தில் அமர்ந்து அபாரமாக ஸாரங்கி வாசித்த மிஸ்.ரிஹானாவுக்கே ஏற்பட்டிருக்கும். அமர்த்தலான தலையசைப்பும், வசீகரமான சிரிப்புமாக அவனைத் தாண்டித்தாண்டி மேலேறினார்.
