‘மழை’ நாடகத்தில் நடிப்பவர்களுக்குத் திருமணம் ஆகிவிடும் என்று ‘இபா’ அவர்கள் நகைச்சுவையாகக் கூறுவார். இது டெல்கியிலும் இலங்கையிலும் நடந்தது. ‘மழை’ நாடகத்தில் நடித்த நானும் ஆனந்தராணியும் பின்னர் திருமணம் செய்து கொண்டோம். இது குறித்து ‘இபா’ கூறியதை அண்மையில் சென்னையில் நடந்த எனது நூல் வெளியீட்டு வைபவத்தில் உரையாற்றிய ஆவணத் திரைப்பட இயக்குநர் திரு. அம்ஷன் குமார் நினைவுபடுத்தினார்.
Tag: அரங்கு
அருமணிகளின் அழகியல் தேர்ந்த ஆபரணச்சிற்பி
இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களில் அளவில் பெரியதான உடையவர் ராமானுஜர் நாடகம், சமயம் சார்ந்த ஆவணங்களில் இருந்து உருவாக்கப்பட்ட சமகால பிரதிக்கான சிறந்த உதாரணம் எனலாம். காட்சிகளாக நிகழும் இந்த நாடகத்தின் தொடர்ச்சி என்பது ஒரு பாவனை என்கிற முன்னெச்சரிக்கையோடு இந்த நாடகத்தை அணுக வேண்டுகிறார் ஆசிரியர். ராமானுஜர் யாதவ பிரகாசரிடன் சீடராக இருந்து, வேதாந்த சர்ச்சைகளின்பால் கருத்து வேற்றுமை கொண்டு பிரிந்த பிறகு, திருக்கச்சி நம்பியை குருவாக ஏற்றுக் கொள்ளும்போது, வைணவ குரு பரம்பரையின் ஆச்சாரியரான ஆளவந்தாரின் அறிமுகம் ஏற்படுகிறது என்கிறது ராமானுஜ திவ்ய சரிதம்.
ஆறு தாரகைகள்
படு நிதானமாக, யானையின் சாவகாச நடைபோலத் தொடங்கிய வாசிப்பு, துள்ளிப் பாயும் மான் போலவும், அதைத் துரத்தும் வேட்டைநாய் போலவும் வேகமெடுத்து நாலுகால்ப் பாய்ச்சலில் முன்னேறியபோது, யாருக்கு யார் பக்கவாத்தியம் வாசிக்கிறார்கள் என்ற குழப்பம் மையத்தில் அமர்ந்து அபாரமாக ஸாரங்கி வாசித்த மிஸ்.ரிஹானாவுக்கே ஏற்பட்டிருக்கும். அமர்த்தலான தலையசைப்பும், வசீகரமான சிரிப்புமாக அவனைத் தாண்டித்தாண்டி மேலேறினார்.
