பைத்தியக்காரனின் பெண்பால் பைத்தியக்காரி என்பர். அவ்விதம் பித்தனின் பெண்பால் பித்தி என்று இல்லை. புலவனின் பெண்பால் புலவி இல்லை. செய்யுள், பாடல், பாட்டு என்பதைக் குறித்த வடசொல் கவி. ‘சான்றோர் கவி எனக்கிடந்த கோதாவரி’ என்பான் கம்பன். கவி கவிதை ஆகி, கவி எழுதுபவன் கவிஞர் ஆனார். இமாலயக் கவி, நயாகரா கவி என்மனார் வேறு இனம். கவிதாயினி எனும் சொல் புனையப்பட்டு இருபது ஆண்டுகள் இருக்கலாம்.
