டொனால்ட்ஸன் வெளியிட்ட புத்தகங்கள், ஆன் சட்டப்படி பதினான்கு வருட காப்பிரைட் காலம் முடிவடைந்தவை. மேலும் அன்றைய காலத்தில், ஸ்காட்லாந்த் , இங்கிலாந்துடன் இணைந்திருந்தாலும்கூட, தனித்தனி சட்ட அமைப்புகள், அரசியல் குழப்பங்கள் ஆகியன நிறைந்ததாக இருந்தது. எனவே ஆன் சட்டம் ஸ்காட்லாந்தில் எப்படிச் செல்லுபடியாகும் என்பதும் விவாதம் செய்யக்கூடிய ஒன்றாக இருந்தது. இந்தக் குழப்பங்கள் போதாதென்று, டொனால்ட்ஸன் லண்டனிலேயே கடைதிறந்து தனது புத்தகங்களை மலிவு விலையில் விற்பனை செய்யத் தொடங்கினார். லண்டன் புத்தக விற்பனையாளர்கள் பெரும் வணிகச் சவாலைச் சந்தித்தனர்
