நினா கப்பலின் அப்போதைய உண்மையான கேப்டன் ‘விசென்டே யானேஸ் பின்ஸான்’ (Vicente Yáñez Pinzón – இவர் பிண்டோ கேப்டன் மார்ட்டின் அலோன்சோ பின்ஸானின் தம்பி). சாண்டா மரியா அழிந்த பிறகு, கொலம்பஸ் முழுப் பயணத்திற்கும் தலைவராக இருந்ததால், நினா கப்பலைத் தனது முதன்மை (Flagship) தளபதியகக் கொண்டு, அதன் பொறுப்பைத் தன் கைவசம் எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.
Category: தொடர்கள்
தரவு தனியுரிமை
நாம் இதுவரை இந்தப் பகுதியில் பார்த்தது, உலக அரசியல்வாதிகளால், பூசப்பட்ட பெரும் டெக் நிறுவனங்களின் தீய முகம். இதை உலகெங்கும் ஊதி வாசிக்கும் இவர்களின் அறிக்கைகளில் ஓரளவு உண்மை இருந்தாலும், இந்தத் தொழில்நுட்பத்தின் சக்தியை இதே அரசியல்வாதிகளே மறுப்பதில்லை. குறிப்பாக, இவர்களின் சில அறிக்கைகள், இந்தத் தொழில்நுட்பத்தை வேறு விதத்தில் அணுக வேண்டும் என்றும் சொல்லி வருகின்றன.
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
ஒரு ஞானி தானே ஆத்மா என்று உணர்ந்திருக்கிறான். எனவே ஆத்மாவுக்கு கிருஷ்ணர் குறிப்பிடும் அத்தனை இலக்கணங்களும் அந்த ஞானிக்கே சென்று விடுகின்றன. ஒரு ஞானி ஒருபோதும் தன்னை ஞானி என்று உணர்வதில்லை. அவன் எப்போதும் தன்னை ஆத்மா என்றே உணர்கிறான். ஆத்மா எந்தச் செயலையும் செய்யாதது என்று அவன் அறிந்திருப்பதால் அவன் தனது எல்லாச் செயல்களை தன்னுடைய அறிவால் துறந்து விடுகிறான். எனவே அவன் சர்வகர்ம சன்யாசி (எல்லாச் செயல்களையும் துறந்தவன்) என்றழைக்கப்படுகிறான். ஆனால் அவன் செய்து கொண்டிருக்கும் எந்தச் செயலையும் அவன் செய்யாமல் விட்டு விடுவதில்லை.
திறன்பேசி என் சிறந்த நண்பன்
பொறுப்பற்ற வாழ்க்கை நடத்தும் இளம் பெண் என்று கடிந்து கொள்ள வந்த என்னை, ‘தனியாக, பல விஷயங்களையும் எப்படித்தான் சமாளிக்கிறாளோ’ என்று நினைக்க வைத்து விட்டது. ஒருவருடன் பேசி அவர்களை மாற்ற முயற்சிக்கலாம். ஆனால், என் திறன்பேசியோ பேச வந்த என்னையே மாற்றிவிட்டது. நான் ஒரு கருவியைப் பயன்படுத்தும் மனிதன் என்பதைத் தாண்டி, என் உறவுகள், என் கோபங்கள், என் குறைகள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் நண்பனாக மாறுவது ஒரு விந்தை. இத்தனைக்கும், என்னுடைய மனதில் உள்ள ஆதங்கம், என்னுடைய கோபம் எதையும் என் திறன்பேசியிடம் சொல்லவில்லை
கீதா முகூர்த்தம்
பகவத் கீதை ஒரு மனிதனின் குடும்ப மற்றும் சமூகக் கடமைகள் போன்றவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும், தன் உணர்ச்சிப் போராட்டங்களையும், அற விஷயங்களில் ஏற்படும் குழப்பங்களையும் ஒரு சாதகன் நேர்கொள்ள வேண்டும் என்று போதிக்கிறது. உபநிஷத்துக்கள் நேரடியான, அருவமான, குணங்களற்ற பிரம்மத்தைப் பற்றிப் பேசுகின்றன. துவக்க நிலையில் உள்ள சாதகன் ஒருவனுக்கு எல்லையற்ற அந்தப் பிரம்மத்தை அறிந்து கொள்வதில், புரிந்து கொள்வதில், மனதில் கிரகித்துக் கொள்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
மார்க் & ஜெஃப்: தரவின் தோழர்கள்
அதே போல, என்னைப் பற்றிக் கவலைப்படும் இன்னொரு நபர் ஜெஃப். முதலில் இணையத்தில் புத்தகக்கடையைத் திறந்த ஜெஃப், மெதுவாக, அதை ஒரு பல்சரக்குக் கடையாக மாற்றினார். அவர், எந்த நாட்டில் வியாபாரத்தை விரிவுபடுத்த நினைத்தாலும், ஒரே எதிர்ப்புதான். நான் அமேஸான் பற்றிதான் சொல்கிறேன். எனக்கு ஜெஃபை தெரியாது. ஆனால், அவருக்கு என்னை நன்றாகத் தெரியும்! சற்று தலைகீழாக இருப்பது போலத் தெரியும் – இளையராஜாவுக்கு என்னைத் தெரியும், ஆனால் எனக்கு அவரைத் தெரியாது என்பதைப் போல!
காபிரைட் சட்டத்தைச் செதுக்கிய வழக்குகள்
டொனால்ட்ஸன் வெளியிட்ட புத்தகங்கள், ஆன் சட்டப்படி பதினான்கு வருட காப்பிரைட் காலம் முடிவடைந்தவை. மேலும் அன்றைய காலத்தில், ஸ்காட்லாந்த் , இங்கிலாந்துடன் இணைந்திருந்தாலும்கூட, தனித்தனி சட்ட அமைப்புகள், அரசியல் குழப்பங்கள் ஆகியன நிறைந்ததாக இருந்தது. எனவே ஆன் சட்டம் ஸ்காட்லாந்தில் எப்படிச் செல்லுபடியாகும் என்பதும் விவாதம் செய்யக்கூடிய ஒன்றாக இருந்தது. இந்தக் குழப்பங்கள் போதாதென்று, டொனால்ட்ஸன் லண்டனிலேயே கடைதிறந்து தனது புத்தகங்களை மலிவு விலையில் விற்பனை செய்யத் தொடங்கினார். லண்டன் புத்தக விற்பனையாளர்கள் பெரும் வணிகச் சவாலைச் சந்தித்தனர்
தகவல் இளக்காரம்
இவர்கள் சொல்வது என்னவென்றால், இரண்டு வருட ஒப்பந்தம் என்று இருந்தால், ஒப்பந்தத்தின் கடைசி 6 மாதங்களில், தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இவர்களை அழைத்து, புதுச் சலுகைகள் ஏதாவது உள்ளதா என்று நச்சரிக்க வேண்டும். இல்லையேல் உங்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால், மறக்காமல், மாதா மாதம் பில்லை மட்டும் கட்டி விடுங்கள். பில்லைக் கட்ட அவர்களது இணையதளத்திற்குச் சென்றால், உங்களது மின்னஞ்லைக் கொடுத்தவுடன், அனைத்து விஷயங்களும் மாயமாக, உங்கள் முன் நொடிகளில் காட்டப்படும்.
தரவு ஏக்கம்!
புறநகர் ரயில் நிறுவனம் போல, இன்னொரு அமைப்பு, நான் வசிக்கும் ஊரின் அரசாங்கம். இவர்களது ஒரே குறிக்கோள், வருடம் ஒரு முறை சொத்து வரியை உயர்த்துவது. அதுவும் சில வருடங்கள், முந்தைய வருடத்தை விட 10% -க்கு மேல் உயர்த்துவது. ரயில் நிறுவனம் போல, இவர்களிடம் என்னைப் பற்றிய அனைத்து விவரங்களும் உண்டு. வருடம் ஒரு முறை ஒரு அறிக்கையை அனுப்புவார்கள். அந்த அறிக்கை வருவது, வயிற்றில் புளியைக் கரைக்கும் விஷயம். இதுவரை நான் கட்டிய வரிக்கு நன்றி என்று ஒரு வருடம் கூடச் சொன்னதில்லை.
டியரா டியரா!
வரலாற்றாசிரியர்கள், ஒருவேளை கொலம்பஸ் அன்று தனது திசையை மாற்றாமல் நேராகவே மேற்கு நோக்கிச் சென்றிருந்தால், அவர் முதலில் அமெரிக்காவின் மிக ஆபத்தான, பலமான எதிர்க்காற்றும் கொந்தளிக்கும் கடலலைகளும் கொண்ட புளோரிடா கரையை அடைந்திருப்பார் எனக் கருதுகின்றனர். அப்படிச்சென்றிருந்தால் அவரது கப்பல்கள் அங்கு உடைந்திருக்கலாம் அல்லது காற்றின் கட்டற்ற விசையினால் அறியாத திசைக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம். ஆனால், பறவைகளைப் பின்தொடர்ந்ததால் அவர் பாதுகாப்பான பகாமாஸ் தீவுகளுக்குச் சென்றடைந்தார்.
ஆனந்தம் பிரம்மனோ வித்வான்
ஆத்மா, பிரம்மம் இரண்டும் ஒன்றே என்ற கருத்தை உபநிஷத்துக்கள் “அஹம் பிரம்மாஸ்மி” (நானே பிரம்மம்) மற்றும் “தத் த்வமஸி”(அது நீயாக இருக்கிறாய்) போன்ற மகா வாக்கியங்கள் மூலம் பிரகடனப்படுத்துகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால், “சிறிய, வரம்பிற்குட்பட்ட நான் (ஆத்மா) எப்படி இந்தப் பிரபஞ்சத்தையே தாங்கி நிற்கும் எல்லையற்ற பேராற்றலுடன் (பிரம்மம்) ஒன்றாக முடியும்?” என்ற சந்தேகம் எழுவது இயல்பே. ஆனால் இந்த உண்மையை “பாக-த்யாக-லக்ஷணா” (பொருந்தாத பகுதிகளை நீக்கி, சாரத்தை மட்டும் ஏற்கும் தர்க்க முறை) மற்றும் சில எளிய உதாரணங்கள் மூலம் விளக்க முடியும்
அமெரிக்கக் காப்பீடுகளின் வரலாறு: விருப்பமான மருத்துவர் அமைப்பு
உடல்நல பாதுகாப்பு நிறுவனங்களில் (HMO) இருப்பது போல PPO-வில் ஒரு கட்டாய முதன்மை மருத்துவர் (Primary Care Physician – PCP) தேவையில்லை. நீங்கள் நேரடியாக ஒரு தோல் நிபுணரையோ, இதய நிபுணரையோ, எலும்பு நிபுணரையோ — யாரையும் நேரடியாகச் சந்திக்கலாம். குறிப்பாக ஏற்கனவே உங்களுக்குப் பிடித்த மருத்துவர் ஒருவர் வலையமைப்பில் இருந்தால், இடையில் யாரும் பரிந்துரைக்க வேண்டியதில்லை.
சிந்தனைச் சோதனைகளின் நவீன வடிவமைப்பு
தேனீக்கள் இந்த சோதனையில் மிகச்சிறப்பாக வெற்றி பெற்றன. காட்சி அமைப்பு, அடர்த்தி ஆகியவை முற்றிலும் மாற்றப்பட்டபோதும், தேனீக்கள் தங்களின் குறைவானது என்ற விதியை புதிய வடிவங்களுக்கும் வெற்றிகரமாகப் பயன்படுத்தின. மிகவும் வியக்கத்தக்க வகையில், முற்றிலும் வெற்று அட்டை, அதாவது பூஜ்யம் என்ற எண் மதிப்பு கொண்ட கார்டு காட்டப்பட்டபோது, தேனீக்கள் அதை வடிவம் கொண்ட கார்டை விடக் குறைவானது என்று சரியாக அடையாளம் கண்டன. எண்கணித அறிவாற்றல் என்பது வெறும் காட்சி குழப்பத்தின் பக்கவிளைவு அல்ல; அது பூச்சியின் சிறிய மூளைக்குள் நடக்கும் உண்மையான எண்கள் பற்றிய பகுப்பாய்வையும் புரிதல்களையும் பிரதிபலிக்கிறது என்பதை இது நிரூபித்தது.
புதிய லண்டன்
புதிய லண்டன் மாறுபட்டிருந்தது. பாரம்பரிய மரபுப்படியான அமைப்பிற்குப் பதிலாக, வாணிபப் பொருளாதாரத்திற்கு நோக்கம் கொண்டு வணிகப் பகுதிகள் வடிவமைக்கப்பட்டன. இப்போது அரசின் வர்த்தக மையம் பெரிதாகக் கட்டப் பட்டிருந்தது. 1694 ல் உருவான இங்கிலாந்து வங்கி வணிக நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்யத் தொடங்கியது. காப்பீட்டுத் தொழில் உருவாகியிருந்தது. வியாபாரிகள் சந்தித்துப் பேசும் வாய்ப்பை புதிய காபிக் கடைகள் உருவாக்கின.
உடல்நலக் காப்பீடுகளின் விற்பனை சந்தை
அரசாங்க விதிகளின்படி, காப்பீட்டுச் சந்தையில் மானியம் பெற வறுமைக்கோட்டின் 100% மேல் வருமானம் இருக்க வேண்டும். ஆனால், இந்த 10 மாநிலங்களிலோ மெடிகெய்ட் பெற வருமானம் மிக மிகக் குறைவாக இருக்க வேண்டும் (எ.கா: அலபாமாவில் 18% மத்திய அரசின் வறுமைக்கோட்டின் கீழே வருமானம் இருக்க வேண்டும் என்அ (FPL) என்ற வரம்பு. ஆனால் சந்தையில் காப்பீடு கிடைக்க ஊதியம் கஒரு குறிப்பிட்ட அளவாவது இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் பிரிமியம் கட்ட இயலும்.
தனி மனிதனும் முழுப் படையும்
துருபர் சொல்வதில் உள்ள நியாயத்தை நான் முழுவதும் ஆதரிக்கிறேன். நானும், பலராமாரும் இரு தரப்புக்கும் சொந்தக்காரர்கள். எனவே , எந்த ஒரு முடிவெடுப்பதாக இருந்தாலும் பலவற்றையும் சீர்தூக்கி பார்த்தே முடிவெடுக்க வேண்டும். நீங்கள் அனைவரும் அனுபவசாலிகள் மட்டுமல்ல , அறிவிலும் சிறந்தவர்கள். யுத்தத்திற்கு தயாராவீர்களாக! துரியோதனனுக்கு கடைசி நேரத்தில் நல்புத்தி வந்தால் சமாதானத்திற்கு உடன்படுவான்
ஒன்றே நினைந்திருக்க உள்ளம் கனியும்
லௌகீகமான இலக்குகளுக்கு மட்டுமல்ல, ஆன்மிக இலக்கை அடைவதற்கும் உடல் நலமும், அதன் வலிமையும் இன்றியமையாதவை. உபநிஷத் வகுப்புகள் துவங்குவதற்கு முன்பாக பாடப்படும் சாந்தி பாடங்கள் சிலவற்றில் உடல்நலமும், வலிமையும் முதன்மையாக வேண்டப்படுகின்றன. உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக முறையான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை ஓர் ஆன்மிக சாதகன் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு உடல் நலத்தை இழந்த பின்னர் அதை மீட்டெடுப்பதற்காகப் போராடுவதைவிட, ஆரோக்கியத்தைக் காப்பது எளிதானது, செலவு குறைந்தது, காலத்தை மிச்சப்படுத்தக் கூடியது.
செயல் என்னும் நிவேதனம்
நற்பண்புகள் நிறைந்த எந்த ஒரு மனிதனும் மேற்கூறிய வகையிலேயே இயங்கி வருவான். ஆனால் கர்மயோகம் என்பது இவ்வாறு செயல்புரிவது மட்டுமல்ல. அதே நேரத்தில் அது எந்த வகையிலும் அடங்காத ஒரு தனித்துவமான செயலும் அல்ல. பொதுப்புரிதலில் கர்மயோகம் என்றால் ஒரு செயலில் தீவிரமாக ஈடுபட்டு அதிலேயே தன்னைக் கரைத்துக் கொள்வது என்பதாக அறியப்படுகிறது. அவ்வாறு செயலுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் கர்மயோகிகள் என்று அறியப்படுகிறார்கள். ஆனால் அத்வைத வேதாந்தத்தின் கூற்றுப்படி இது தவறான புரிதலாகும்
புலங்களும் துகள்களும் ஒன்றே
நுண் துளிம நிகழ்வுகளின் தொடர்ச்சியே இவ்வுலகம். இவை உதிரியான, தனித்த, நுண்ணிய நிகழ்வுகள்; பொருள்வய அமைப்புகளுக்கு இடையே நிகழும் தனித்த உள்வினைகள் அவை. எதிர்மின்மமோ, ஒரு புலத்தின் துளிமமோ, ஒளிமமோ வெட்டவெளியில் எந்தவொரு எறிபாதையையும் பின்பற்றுவதில்லை. மாறாக, வேறொன்றுடன் மோதுகையில் , குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் தோன்றுகிறது. அது எங்கு எப்போது தோன்றும் என்பதை உறுதியாக அறிவதற்கு வழியே இல்லை. உலகின் மையத்தில் ஒரு அடிப்படை அறுதியின்மையை துளிம இயற்பியல் அறிமுகப்படுத்தியுள்ளது
துளிமம்
உப்பு வெண்மையிலும், மிளகு கருப்பிலும், மிளகாய் செந்நிறத்திலும் இருக்கிறது. ஏன்? பொருட்களுக்கு தனித்த நிறங்கள் இருக்கின்றன என்பது அணுக்களின் ஒளி உமிழ்வை ஆராய்கையில் தெரிய வருகிறது. நிறம் என்பது ஒளியின் அதிர்வெண் என்பதால், பொருட்கள் குறிப்பிட்ட சில அதிர்வெண்களிலேயே ஒளியை உமிழ்கின்றன. ஒரு பொருளை அவ்வாறு வகைப்படுத்த உதவும் அந்த சில அதிர்வெண்கள் – அதிர்வெண்களின் தொகை அப்பொருளின் நிறமாலை (Spectrum) எனப்படுகிறது.
இங்கிலாந்திற்கு வந்த அச்சகம் – வில்லியம் காக்ஸ்டன்
ஒருவகையில் காக்ஸ்டன் ஒரு பதிப்பாளர் மட்டுமல்ல. ஒரு வாசகன் எதை விரும்புவான் என்பதைத் தெரிந்து கொண்டு, அதைத் தேடிச் சேர்த்து, எளிமையாகப் புத்தக வடிவில் அச்சாக்கி அதை சந்தைப்படுத்தும் ஒரு தொழிலை உருவாக்கினார். ஒவ்வொரு புத்தகமும் ஏன் முக்கியமானது என்பதை விளக்க, அவற்றுக்கு முன்னுரைகள் எழுதினார். பதிப்புத் தொழிலை ஆதரிக்கும் புரவலர்களை உருவாக்கினார். வாசகன் தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக புத்தகங்களைக் கடைவிரித்தார்.
தெய்வநல்லூர் கதைகள்-34
அன்றைய நாளின் மாலையில் பிரேம் தள்ளாட ஆரம்பித்ததும் நாங்கள் சற்று பயந்தோம். ஆனால் பிரேம் சமாளித்துக் கொண்டார். என்னை அழைத்து ஜெயராஜ் சார் மேசையில் இருக்கும் குறிப்பேட்டை கொண்டுவர முடியுமா எனக் கேட்டார். காளிமுத்து அண்ணன் கேட் அருகே வருகையில் நான் பாய்ந்தோடி என் பை உள்ளே இருப்பதாகவும், அதில்தான் வீட்டின் ‘தாக்கோல்’ இருப்பதாகவும் கெஞ்ச, ஒரே நிமிசத்துல ஓடி வந்துரணும் என அனுமதித்து வேறு எவரும் உள்ளே வராமல் நின்று கொண்டார். நான் பாய்ந்து ஓடி ஆசிரியர் ஓய்வறைக்கு சென்றபோது அங்கு அந்த குறிப்பேடும் இல்லை, ஜெயராஜ் சாரும் இல்லை.
கூட்டு முயற்சியும் பொது நலமும்
ஒரு மனிதனின் ஆரோக்கியம் மருத்துவச் சேவையால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. ஆராய்ச்சிகள் சொல்வது என்னவெனில், ஒரு நபரின் உடல் நலனில் 80 சதவீதம் வரை மருத்துவமனை சார்பற்றக் காரணிகளால் — அதாவது சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் காரணிகளால் — தீர்மானிக்கப்படுகின்றன.
அச்சு இயந்திரத்திற்கு முன் ஒரு புத்தகம்
ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அச்சு தேவை. முதலில் இந்த எழுத்துருக்கள் கடினமான இரும்பு ஒன்றில் இடம்வலமாகச் செதுக்கப்படவேண்டும். அப்படிச் செதுக்கப்பட்ட எழுத்துரு செப்புத் தட்டின் மேல் வைத்து அடிக்கப்பட்டு, அச்சுப் பாதிக்கப் படவேண்டும். இப்படி உருவாக்கப்பட்ட செப்பு அச்சில் உலோகக் கலவை ஊற்றப்பட்டு, எழுத்துருக்கள் உருவாக்கப்படவேண்டும்.
தெய்வநல்லூர் கதைகள்- 33
அந்த இன்னொரு குறிப்பேடு கலையக்காவுடையது. பிரேம் மிக இயல்பாக டெஸ்க்கின் உள்ளே வைத்து அக்குறிப்பேட்டை சோதித்தார். அவர் எதிர்பார்த்தது போலவே நான்காக மடிக்கப்பட்ட இரு பக்க கடிதம் ஒன்று குறிப்பேட்டின் உள்ளட்டைக்குள் இருந்தது. இன்னும் இயல்பாக அக்கடிதத்தை எடுத்த பிரேம் தன் புத்தகத்திற்குள் செருகி, விரித்து பாடத்தை புத்தகத்தில் கவனிப்பதுபோல அக்கடிதத்தை படிக்க ஆரம்பித்தார். இவை அனைத்துமே பிரேம் சொல்லி நாங்கள் தெரிந்து கொண்டவை.
உடல்நலக் கல்வி
சமூகக் கூட்டுக் கற்றல்: ஒரு சமூகத்தையே மாற்றும் வல்லமை கொண்டது. நீண்ட கால மாற்றத்தைத் தரும். ஒரு மாற்றத்தைத் தொடங்க அதிக நேரமும், பெரும் சமூக முயற்சியும் தேவைப்படும். புகைப்பிடித்தல், போதைப் பொருள் பயன்பாடு போன்ற பழக்கங்களைக் குறைக்கவும், தடுக்கவும் இந்த மாதிரி பயன்படும். இதன் பலன் உடனடியாகத் தெரியாவிடினும், நீண்ட காலப் பலன்களையும் சமூக மாற்றங்களையும் ஏற்படுத்த வல்லது.
வகையறச் சூழ்ந்தெழுதல்
அத்வைத வேதாந்தம் மற்றும் குமாரில பட்டரின் பட்ட மீமாம்சம் ஆகிய இரு தத்துவப்பள்ளிகள் மட்டுமே அனுபலப்திப் பிரமாணத்தை சுதந்திரமான ஓர் அறிதல் வழிமுறையாக ஏற்றுக் கொள்கின்றன. இந்த முறையில் பெறப்படும் அறிவில் சத்ரூபம் (நேர்மறை) மற்றும் அசத்ரூபம் (எதிர்மறை) இரண்டுமே சரியானதும், செல்லுபடியாகக் கூடுவதுமாகும் என்பது அவர்களது கணிப்பு. பிற பிரமாணங்கள் தோல்வியுறும் இடங்களில் அனுபலப்திப் பிரமாணத்தைப் பயன்படுத்த முடியும் என்பது அவர்களது வாதம்.
பொதுநலக் கொள்கைகள்- 101
பொதுநலத் துறையின் அடிப்படைப் பணி என்பது சமூகத்தின் சுகாதார நிலையைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதாகும். ஒரு பகுதியில் வாழும் மக்களின் உடல் மற்றும் மனநலத்தை அறிந்து கொள்வதுடன், அவர்களின் நல்வாழ்வைப் பாதிக்கும் காரணிகளை முன்கூட்டியே கண்டறிய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் புதிய காரணிகளைத் தேடி கருத்துக்கணிப்புகளையும் ஆய்வுகளையும் நடத்துவது அவசியம்.
தடுப்பூசிகளின் துணைச்சேர்க்கைகளால் பாதிப்பு உண்டா?
ஒரு தடுப்பூசியில் அதன் முதன்மைப் பொருளான ஆன்டிஜென் (Antigen) தவிர, அதன் செயல்பாட்டைத் தீர்மானிக்கும் ‘துணைச் சேர்க்கைகள்’ (Adjuvants & Excipients) மிக முக்கியமானவை. குறிப்பாக, தொற்றுநோய்களைத் தாண்டி இன்று புற்றுநோய் சிகிச்சையிலும் இவை புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன.
தெய்வநல்லூர் கதைகள்- 30
தயாராக இருந்த டிரிப்பிள் எஸ் சார் தனக்கு வந்திருக்கும் புகாரில் மாணவர் தாக்கப்பட்டதை நேரில் கண்ட சாட்சிகள் பலர் இருப்பதாக குறிப்பிட்டார். அதன்பிறகும் இதை எம் எஸ் சி சார் மறுப்பாரேயானால் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் பள்ளியில் விசாரணை செய்யப்படும் என்றார். முதல் சுற்றில் தோல்வி அடைந்ததாக உணர்ந்த எம் எஸ் சி சார் தான் தாக்கவில்லை எனவும் தண்டித்தது அம்மாணவனின் கல்வித்தரம் உயரவே எனவும் அதனால் அம்மாணவன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் எனவும் வாதிட்டார்.
புறாவின் அழைப்பு
வசந்தகாலத்தில் மழை பொழிகிறது. எப்போதும் பொந்துக்குள் இருக்கும் ஆந்தைக்கு மழை பொழிவது பிடிக்கவில்லை, தன்னுடைய முகத்தில் சலிப்பைக்காட்டுகிறது. ஆந்தை இப்படி மழையைப் பார்த்துச் சலிப்பை வெளிப்படுத்துவது புறாவுக்குப் பிடிக்கவில்லை. ஆந்தையை அழைத்துத் தன் பார்வையை வெளிப்படுத்துகிறது.
அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்
வேதாந்தம் என்றால் வேதத்தின் அந்தம் (இறுதி) என்று பொருள். நான்கு வேதங்களான ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் இறுதிப் பகுதியாக வருவன உபநிஷத்துக்கள். இவை மெய்ப்பொருள் குறித்தும், தனிப்பட்ட ஜீவனுக்கும், எல்லாமுமாக இருக்கும் பிரம்மத்துக்கும் உள்ள உறவு குறித்தும் ஆராய்ச்சி செய்கின்றன. இவ்வுபநிஷத்துக்களே வேதாந்தம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. எனவே வேதாந்தம் என்று சொன்னால் அச்சொல் நேரடியாக உபநிஷத்துக்களையே குறிக்கும்.
தெய்வநல்லூர் கதைகள்- 29
வாரத்தேர்வு தண்டனை முறைகளில் மாற்றம் வரக் காரணம் நாங்கள் தொடர்ந்து 100% மதிப்பெண்களை அடைந்ததே. எங்களை மாட்டிவிட வேண்டி கடினமான கணக்குகளைக் கேட்டால் அவரிடம் தனிப்பயிற்சிக்கு வருவோர்தாம் அதிக அடிகளைப் பெறும் வாய்ப்புள்ளவர்களாக இருந்தனர். ஆகவே “கெரில்லா” தாக்குதல் முறைகளைக் கையாள ஆரம்பித்தார்.
மனிதர்களுக்கு ஏழாவது உணர்வு இருக்கிறதா?
தொட்டு உணர்வு, பார்வை, கேள்வி, மணம், சுவை“ என்று நம்மால் வரையறுக்கப்பட்ட ஐந்து உணர்வுகளின் பட்டியல் முழுமையல்ல என்று நவீன நரம்பியல் இந்த வரைபடத்தை விரிவுபடுத்தி, மேலும் பல உணர்வுகளை வாழ்வியல் அமைப்பிற்குள் கொண்டு வருகிறது. உடல் உறுப்புகளின் நிலையை அறியும் ‘ப்ரோப்ரியோசெப்ஷன்’, சமநிலை உணர்வு, வெப்பம் உணர்வு, வலி உணர்வு, உட்புற உறுப்புகளின் இயக்கம் உணரும் ‘இன்டரோசெப்ஷன்’ ஆகியவை இவற்றுள் அடங்கும்.
தடுப்பூசிகளின் வரலாறு
எட்வர்ட் ஜென்னரின் பங்களிப்பு ஒரு நோய்க்கான சிகிச்சையைக் கண்டுபிடித்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவர் நோய்த் தடுப்பு என்ற முற்றிலும் புதிய அணுகுமுறையை உருவாக்கினார். அவரது முறை பிற்காலத்தில் லூயி பாஸ்டர் போன்ற விஞ்ஞானிகளுக்கு வழி காட்டியது. பாஸ்டர் ரேபீஸ் மற்றும் ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்களுக்குத் தடுப்பூசி உருவாக்கினார்.
தெய்வநல்லூர் கதைகள்- 28
தோழரண்ணனிடம் முன்பே நாங்கள் சொல்லியவற்றை அவர் டிரிப்பிள் எஸ் சாரிடம் சொல்லியிருந்தார். நாங்கள் மெல்ல எம் எஸ் சி சாருக்கும், பிரேமுக்குமான உரசல் குறித்தும், அது தொடர்பாக நடந்து வரும் ‘பழிவாங்கல்களையும்’ சொன்னோம். டிரிப்பிள் எஸ் சார் முகம் இறுகியது. தோழரண்ணன் கூட அதிர்ச்சி அடைந்தார்
பொது நலம், மேரி டைபாய்ட் கதை மற்றும் சமூக நலன் ஓர் அறிமுகம்
மேரியின் காலத்தில், நோய்கள் பற்றிய பல தவறான நம்பிக்கைகள் இருந்தன. பழைய நம்பிக்கைகளின்படி, நோய்கள் “மோசமான காற்று” அல்லது “மியாஸ்மா”வால் ஏற்படுகின்றன என்று மக்கள் கருதினர். நோய்கள் தெய்வீக தண்டனை அல்லது பாவத்தின் விளைவு என்றும் நம்பினர். சில மக்கள் “சபிக்கப்பட்டவர்கள்” அல்லது “அசுத்தமானவர்கள்” என்று முத்திரை குத்தப்பட்டனர்.
தெய்வநல்லூர் கதைகள் -27
கணிதத் தேர்வில் தன்னுடைய கணக்கு சரியாக இருந்தும் 2 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டிருப்பதாக பிரேம் எம் எஸ் சி சாரிடம் முறையிட்டார் (சார், நீங்க சொல்லிக் கொடுத்தபடிதான் சார் இந்தக்கணக்கை போட்ருக்கேன். ஏழு ஸ்டெப்தான சார் மொத்தம், ஏழும் சரியாத்தான போட்ருக்கேன். ஆனா 5 க்கு மூணு மார்க்தான் சார் போட்ருக்கீங்க- விடைத்தாளை நீட்டியபடி). எம் எஸ் சி சார் சிறிதும் அலுங்காமல் பிரம்பை கையில் எடுத்தபடியே துரையை அழைத்து அவர் விடைத்தாளை வாங்கி பிரேம் முகத்தின் முன் நீட்டினார்
பராக்குப் பார்த்தல்!
தமிழிலும் இதற்குத் தொன்மையான ஒரு பெயர் உண்டு. அது பராக்குப் பார்த்தல். அக்கு என்றால் கண். பர என்றால் மற்றயவை. பரலோகம் என்றால் நம்முடைய உலகம் இல்லாத மற்றொரு உலகம். பரமண்டலம், பரதேசமெல்லாமும் அப்படியே. பரோபகாரி என்றால் மற்றவர்களுக்கு உதவி செய்வபன். ஆக பார்க்க வேண்டியவற்றை விட்டுவிட்டு மற்றவற்றில் கண்ணை வைப்பதற்குப் பராக்கு என்றார்கள். பொதுவாக கவனமின்மை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டாலும், வேடிக்கை பார்ப்பதற்கும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தலாம்.
சையது சலீம்
பெண்களுக்கு, அதிலும் முக்கியமாக முஸ்லிம் பெண்களுக்கிருக்கும் மற்றொரு பிரச்சினை கல்வியறிவு இன்மை. அது எத்தனை அனர்த்தங்களுக்கும் விபரீதங்களுக்கும் வழி வகுக்கிறது என்பதைக் கூறி, முக்கியமாக அதன் மதிப்பை அறியாத முஸ்லிம் இளைய தலைமுறை ஏன் முன்னேறுவதில்லை என்பதையும் ‘சலீம்’ உதாரணங்களோடு விவரிக்கிறார். ஒரு பெண் கல்வியறிவு பெற்றால். அவள் மட்டுமே அல்ல அந்தக் குடும்பமும், அவளுடைய ஊரும் எத்தனனை பயன் பெறும் என்பதை ‘அன்வர்’ மூலம் நிரூபிக்கிறார் சலீம்
தெரிவுகள் அதிகம், முடிவு ஒன்று
சின்ன முடிவுகள் முதல் வாழ்க்கையையே புரட்டிப்போடும் முடிவுகள் வரை. இன்று என்ன காபி குடிப்பது என்பது முதல் காலை உணவு என்ன உண்பது வரை. நாம் சிறுவர்களாக இருந்தபோது இந்தக் குழப்பம் இருந்திருக்கவில்லை. அம்மா செய்வதுதான் காலை உணவு. இப்போது அப்படி இல்லை. பல இல்லங்களில் பலவகை சீரியல்களும் பிரெட் டோஸ்டா இல்லை பழரசமா என பிள்ளைகளைக் கேட்பதில் குழப்பம் ஆரம்பிக்கிறது. பழரசத்தில் ஆயிரம் வகை இருக்கும். இது ஒரு வகை பொருளாதார மேம்பாட்டைக் காட்டினாலும் முடிவெடுக்க குழந்தைகளைத் திணறடிக்கச் செய்கின்றன. நான் சொல்வது சற்றே பொருளாதாரத்தில் மேல்தட்டு குடும்பங்களை.
ஹர்ஷனின் உறுதிமொழி
என் உடன் பிறந்தவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவனை பழி வாங்கும் வரை, என் தந்தை மறைந்தபின் வரிசையாக வந்த பல துன்பங்களால் வருந்தும் என் பிரஜைகளுக்கு என் கடமையை செய்யும் வரை, என் மனம் ஆறுதல் அடையாது. அதன் பின் நானும் வருகிறேன். உங்களிடம் தர்ம உபதேசங்களை கேட்கவும், உங்கள் அடி பணிந்து தவ வாழ்க்கையை மேற் கொள்ளவும் வருகிறேன். இந்த உபதேசங்களால் என் ரஜோ குணங்கள் அடங்கட்டும்
வினை முடித்தன்ன இனிமை
’நாம் செய்ய வேண்டிய வேலை என்ன’ என்பது நமக்குத் தெரியும். பல சமயம் நாம் அதைக் கவனிப்பதில்லை. கவனமின்மையும், அசிரத்தையும், பயம், இன்பம் துய்த்தல் போன்ற உந்துதல்களும் நம் கண்களை மறைத்து விடுகின்றன. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தால் அது தன்னைக் காட்டிக் கொள்ளும். அலை பாயும் மனம், அதைக் காணவொட்டது தடுக்கும். எனவேதான் அமைதி முக்கியம். செய்ய வேண்டிய வேலை சரியான வேலையாகவும் இருக்க வேண்டும்.
றெக்கை – அத்தியாயம் 4
ஜாக்கிரதைன்னா இங்கே இருக்கற இளம் வயசு, மத்திய வயசு ஆண்களும் பெண்களும் உங்க சிநேகம் கிடைக்காதான்னு ஏங்கப் போறாங்க. நீங்க கையைப் பிடிச்சு பார்த்து உடம்புக்கு என்னன்னு விசாரிப்பீங்க ஒரு டாக்டராக. நீதான் வேணும்னு கையை விடாமல் அடம் பிடிக்கலாம். ஜாக்கிரதை. அதிலே முதல் ஆசாமி என் வீட்டுக்காரன் தான். என் தங்கச்சியை கணக்கு பண்ணிட்டு இருக்கான் இப்போ. அவகிட்டேயும் ஜாக்க்கிரதைன்னு தான் சொல்லியிருக்கேன் நிம்மி
கண்டான் சகோதரியை!
மைதியாக இருந்த இடம் – திடீரென இந்த அழுகுரல் கேட்கவும் விரைந்து ஓடி அருகில் சென்றேன். பல பெண்கள் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தனர். அந்த பெண்ணோ, பிடிவாதமாக நெருப்பில் இறங்க முயன்றாள். யாரோ துரத்தி வந்தார்களோ, என்ன காரணம் தெரியவில்லை பாதங்கள் வீங்கி இருந்தன. நகங்கள் உடைந்து கிடந்தன – அடிபட்டிருந்தது போலும். போஜ பத்திரங்களால் முழங்காலில் கட்டு போட்டிருந்தாள். வழியில் பேரீச்ச மரங்கள் உண்டு. முள் கிழித்ததோ என்னவோ. தண்ணீர் விட்டான் கிழங்குகள் என்போம், அதிலும் முள் உண்டு. அது தான் குத்தியதோ, கீறல்கள் தெரிந்தன. தாறு மாறாக வளர்ந்த கொடிகள் அவள் ஆடையில் சுற்றிக் கொண்டு விட்டன போலும்
இயற்கை ஏன் வடிவங்களை உருவாக்குகிறது
சுழல் வடிவங்கள் (spirals), இயற்கையின் மிகவும் கவர்ச்சிகரமான வடிவங்களாகும். அம்மோனைட் புதைபடிவங்கள், சூறாவளிகள், மற்றும் சூரியகாந்தி விதைகளின் அமைப்பு ஆகியவை இதற்கு உதாரணங்கள். இந்த logarithmic சுழல்கள், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வளரும்போது தங்கள் வடிவத்தைத் தக்கவைத்துக்கொள்கின்றன. உதாரணமாக, கடல் சிப்பியில் புரதப் பட்டைகள் சுழல் வடிவங்களை உருவாக்குகின்றன. இவை ஃபிபோனாச்சி வரிசையைப் பின்பற்றி, சூரியகாந்தி விதைகள் அல்லது பைன் கோன்களில் உள்ள செதில்களை அமைக்கின்றன
தென்கொரியப் பயணம் – சியோல் அனுபவங்கள்
ஓடோடி வரும் குதிரைகள், ஆயுதங்களைச் சுமந்த வீரர்கள், வண்ணமயமான உடைகள், கட்டுக்கோப்பான நடைமுறைகள், பாரம்பரிய ஆயுதங்கள், இசை என்று ஒரு விழாவைப் போல காட்சிப்படுத்தியிருந்தார்கள். கடமையாக அனைத்தையும் வீடியோ எடுத்துக் கொண்டோம். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நின்றதில் அப்பொழுதே கால் வலிக்க ஆரம்பித்து விட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் உள்ளே சென்று பார்க்க வேண்டிய இடங்களைப் பார்க்கப் பார்க்க இன்பம்.
பள்ளி-சமூகம்-பெற்றோர் கூட்டுறவு: நிலையான கல்வி மேம்பாட்டிற்கான அடிப்படை
முதலாவதாக, குடும்பங்களுக்கும் பள்ளி பணியாளர்களுக்கும் இடையே ஒரு கூட்டுறவு உண்டு, அதன் நோக்கம், மாணவர் வெற்றிக்கான ஒரு வரையறையை உருவாக்கி முன்னேறுவது. இரண்டாவதாக, குடும்பங்களும் பள்ளி பணியாளர்களும் சேர்ந்து மாணவர்கள் நலனுக்காக, கலாசாரம் மற்றும் பிற நம்பிக்கைகள் அடிப்படையில் பரஸ்பர நம்பிக்கை, புரிதல் மற்றும் பாராட்டுக்களை வளர்க்கும் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குகின்றனர்.
கவிஞர் பகவான், ஆசு பாபு ராஜேந்திர பிரசாத் & என்ட்லூரி சுதாகர்
இது ஒரு விதத்தில் விட்டுப் பிரிய முடியாத, உயிருக்கும் உயிருக்கும் இடையில் இருக்கும் நுட்பமான உறவுக்கு உயர்ந்த இடத்தைக் கொடுக்கும் கவிதை. ஒரு பெண் தன் வாழ்க்கைப் பயணத்தில் இவ்வாறு தன் வீட்டை விட்டு இன்னொருவர் வீட்டுக்குச் சென்று, அவர்களில் ஒருவராக மாறுவது என்பது உயிர் வாழ்வதற்காக மட்டுமே. அந்த வீட்டு மனிதர்களின் இயலாமை அவளுக்கு பற்றுக்கோடானது.
வாழ்க்கை: இடரின் நீர்நிலை, முயற்சியின் படகு
அதே போல குடுபங்களுக்கென ஒரு கொள்கைப் பிடிப்பு அறம் உண்டு. அது எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். சில குடுபங்களில் கடின உழைப்பு, நேர்மை, சில குடுபங்களில் எதிலும் விட்டுக்கொடுக்காத தன்மானம், வேறு சில குடுபங்களில் காலத்தோடு காரியமாற்றும் பண்பு என எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். அந்த கொள்கைப் பிடிப்புகளை விட்டுவிடாமல் செயலாற்ற பழக வேண்டும். இல்லை எனில் குடும்பச் சூழல் இனிக்காது.
