நற்பண்புகள் நிறைந்த எந்த ஒரு மனிதனும் மேற்கூறிய வகையிலேயே இயங்கி வருவான். ஆனால் கர்மயோகம் என்பது இவ்வாறு செயல்புரிவது மட்டுமல்ல. அதே நேரத்தில் அது எந்த வகையிலும் அடங்காத ஒரு தனித்துவமான செயலும் அல்ல. பொதுப்புரிதலில் கர்மயோகம் என்றால் ஒரு செயலில் தீவிரமாக ஈடுபட்டு அதிலேயே தன்னைக் கரைத்துக் கொள்வது என்பதாக அறியப்படுகிறது. அவ்வாறு செயலுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் கர்மயோகிகள் என்று அறியப்படுகிறார்கள். ஆனால் அத்வைத வேதாந்தத்தின் கூற்றுப்படி இது தவறான புரிதலாகும்
Category: தொடர்கள்
புலங்களும் துகள்களும் ஒன்றே
நுண் துளிம நிகழ்வுகளின் தொடர்ச்சியே இவ்வுலகம். இவை உதிரியான, தனித்த, நுண்ணிய நிகழ்வுகள்; பொருள்வய அமைப்புகளுக்கு இடையே நிகழும் தனித்த உள்வினைகள் அவை. எதிர்மின்மமோ, ஒரு புலத்தின் துளிமமோ, ஒளிமமோ வெட்டவெளியில் எந்தவொரு எறிபாதையையும் பின்பற்றுவதில்லை. மாறாக, வேறொன்றுடன் மோதுகையில் , குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் தோன்றுகிறது. அது எங்கு எப்போது தோன்றும் என்பதை உறுதியாக அறிவதற்கு வழியே இல்லை. உலகின் மையத்தில் ஒரு அடிப்படை அறுதியின்மையை துளிம இயற்பியல் அறிமுகப்படுத்தியுள்ளது
துளிமம்
உப்பு வெண்மையிலும், மிளகு கருப்பிலும், மிளகாய் செந்நிறத்திலும் இருக்கிறது. ஏன்? பொருட்களுக்கு தனித்த நிறங்கள் இருக்கின்றன என்பது அணுக்களின் ஒளி உமிழ்வை ஆராய்கையில் தெரிய வருகிறது. நிறம் என்பது ஒளியின் அதிர்வெண் என்பதால், பொருட்கள் குறிப்பிட்ட சில அதிர்வெண்களிலேயே ஒளியை உமிழ்கின்றன. ஒரு பொருளை அவ்வாறு வகைப்படுத்த உதவும் அந்த சில அதிர்வெண்கள் – அதிர்வெண்களின் தொகை அப்பொருளின் நிறமாலை (Spectrum) எனப்படுகிறது.
இங்கிலாந்திற்கு வந்த அச்சகம் – வில்லியம் காக்ஸ்டன்
ஒருவகையில் காக்ஸ்டன் ஒரு பதிப்பாளர் மட்டுமல்ல. ஒரு வாசகன் எதை விரும்புவான் என்பதைத் தெரிந்து கொண்டு, அதைத் தேடிச் சேர்த்து, எளிமையாகப் புத்தக வடிவில் அச்சாக்கி அதை சந்தைப்படுத்தும் ஒரு தொழிலை உருவாக்கினார். ஒவ்வொரு புத்தகமும் ஏன் முக்கியமானது என்பதை விளக்க, அவற்றுக்கு முன்னுரைகள் எழுதினார். பதிப்புத் தொழிலை ஆதரிக்கும் புரவலர்களை உருவாக்கினார். வாசகன் தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக புத்தகங்களைக் கடைவிரித்தார்.
தெய்வநல்லூர் கதைகள்-34
அன்றைய நாளின் மாலையில் பிரேம் தள்ளாட ஆரம்பித்ததும் நாங்கள் சற்று பயந்தோம். ஆனால் பிரேம் சமாளித்துக் கொண்டார். என்னை அழைத்து ஜெயராஜ் சார் மேசையில் இருக்கும் குறிப்பேட்டை கொண்டுவர முடியுமா எனக் கேட்டார். காளிமுத்து அண்ணன் கேட் அருகே வருகையில் நான் பாய்ந்தோடி என் பை உள்ளே இருப்பதாகவும், அதில்தான் வீட்டின் ‘தாக்கோல்’ இருப்பதாகவும் கெஞ்ச, ஒரே நிமிசத்துல ஓடி வந்துரணும் என அனுமதித்து வேறு எவரும் உள்ளே வராமல் நின்று கொண்டார். நான் பாய்ந்து ஓடி ஆசிரியர் ஓய்வறைக்கு சென்றபோது அங்கு அந்த குறிப்பேடும் இல்லை, ஜெயராஜ் சாரும் இல்லை.
கூட்டு முயற்சியும் பொது நலமும்
ஒரு மனிதனின் ஆரோக்கியம் மருத்துவச் சேவையால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. ஆராய்ச்சிகள் சொல்வது என்னவெனில், ஒரு நபரின் உடல் நலனில் 80 சதவீதம் வரை மருத்துவமனை சார்பற்றக் காரணிகளால் — அதாவது சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் காரணிகளால் — தீர்மானிக்கப்படுகின்றன.
அச்சு இயந்திரத்திற்கு முன் ஒரு புத்தகம்
ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அச்சு தேவை. முதலில் இந்த எழுத்துருக்கள் கடினமான இரும்பு ஒன்றில் இடம்வலமாகச் செதுக்கப்படவேண்டும். அப்படிச் செதுக்கப்பட்ட எழுத்துரு செப்புத் தட்டின் மேல் வைத்து அடிக்கப்பட்டு, அச்சுப் பாதிக்கப் படவேண்டும். இப்படி உருவாக்கப்பட்ட செப்பு அச்சில் உலோகக் கலவை ஊற்றப்பட்டு, எழுத்துருக்கள் உருவாக்கப்படவேண்டும்.
தெய்வநல்லூர் கதைகள்- 33
அந்த இன்னொரு குறிப்பேடு கலையக்காவுடையது. பிரேம் மிக இயல்பாக டெஸ்க்கின் உள்ளே வைத்து அக்குறிப்பேட்டை சோதித்தார். அவர் எதிர்பார்த்தது போலவே நான்காக மடிக்கப்பட்ட இரு பக்க கடிதம் ஒன்று குறிப்பேட்டின் உள்ளட்டைக்குள் இருந்தது. இன்னும் இயல்பாக அக்கடிதத்தை எடுத்த பிரேம் தன் புத்தகத்திற்குள் செருகி, விரித்து பாடத்தை புத்தகத்தில் கவனிப்பதுபோல அக்கடிதத்தை படிக்க ஆரம்பித்தார். இவை அனைத்துமே பிரேம் சொல்லி நாங்கள் தெரிந்து கொண்டவை.
உடல்நலக் கல்வி
சமூகக் கூட்டுக் கற்றல்: ஒரு சமூகத்தையே மாற்றும் வல்லமை கொண்டது. நீண்ட கால மாற்றத்தைத் தரும். ஒரு மாற்றத்தைத் தொடங்க அதிக நேரமும், பெரும் சமூக முயற்சியும் தேவைப்படும். புகைப்பிடித்தல், போதைப் பொருள் பயன்பாடு போன்ற பழக்கங்களைக் குறைக்கவும், தடுக்கவும் இந்த மாதிரி பயன்படும். இதன் பலன் உடனடியாகத் தெரியாவிடினும், நீண்ட காலப் பலன்களையும் சமூக மாற்றங்களையும் ஏற்படுத்த வல்லது.
வகையறச் சூழ்ந்தெழுதல்
அத்வைத வேதாந்தம் மற்றும் குமாரில பட்டரின் பட்ட மீமாம்சம் ஆகிய இரு தத்துவப்பள்ளிகள் மட்டுமே அனுபலப்திப் பிரமாணத்தை சுதந்திரமான ஓர் அறிதல் வழிமுறையாக ஏற்றுக் கொள்கின்றன. இந்த முறையில் பெறப்படும் அறிவில் சத்ரூபம் (நேர்மறை) மற்றும் அசத்ரூபம் (எதிர்மறை) இரண்டுமே சரியானதும், செல்லுபடியாகக் கூடுவதுமாகும் என்பது அவர்களது கணிப்பு. பிற பிரமாணங்கள் தோல்வியுறும் இடங்களில் அனுபலப்திப் பிரமாணத்தைப் பயன்படுத்த முடியும் என்பது அவர்களது வாதம்.
பொதுநலக் கொள்கைகள்- 101
பொதுநலத் துறையின் அடிப்படைப் பணி என்பது சமூகத்தின் சுகாதார நிலையைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதாகும். ஒரு பகுதியில் வாழும் மக்களின் உடல் மற்றும் மனநலத்தை அறிந்து கொள்வதுடன், அவர்களின் நல்வாழ்வைப் பாதிக்கும் காரணிகளை முன்கூட்டியே கண்டறிய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் புதிய காரணிகளைத் தேடி கருத்துக்கணிப்புகளையும் ஆய்வுகளையும் நடத்துவது அவசியம்.
தடுப்பூசிகளின் துணைச்சேர்க்கைகளால் பாதிப்பு உண்டா?
ஒரு தடுப்பூசியில் அதன் முதன்மைப் பொருளான ஆன்டிஜென் (Antigen) தவிர, அதன் செயல்பாட்டைத் தீர்மானிக்கும் ‘துணைச் சேர்க்கைகள்’ (Adjuvants & Excipients) மிக முக்கியமானவை. குறிப்பாக, தொற்றுநோய்களைத் தாண்டி இன்று புற்றுநோய் சிகிச்சையிலும் இவை புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன.
தெய்வநல்லூர் கதைகள்- 30
தயாராக இருந்த டிரிப்பிள் எஸ் சார் தனக்கு வந்திருக்கும் புகாரில் மாணவர் தாக்கப்பட்டதை நேரில் கண்ட சாட்சிகள் பலர் இருப்பதாக குறிப்பிட்டார். அதன்பிறகும் இதை எம் எஸ் சி சார் மறுப்பாரேயானால் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் பள்ளியில் விசாரணை செய்யப்படும் என்றார். முதல் சுற்றில் தோல்வி அடைந்ததாக உணர்ந்த எம் எஸ் சி சார் தான் தாக்கவில்லை எனவும் தண்டித்தது அம்மாணவனின் கல்வித்தரம் உயரவே எனவும் அதனால் அம்மாணவன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் எனவும் வாதிட்டார்.
புறாவின் அழைப்பு
வசந்தகாலத்தில் மழை பொழிகிறது. எப்போதும் பொந்துக்குள் இருக்கும் ஆந்தைக்கு மழை பொழிவது பிடிக்கவில்லை, தன்னுடைய முகத்தில் சலிப்பைக்காட்டுகிறது. ஆந்தை இப்படி மழையைப் பார்த்துச் சலிப்பை வெளிப்படுத்துவது புறாவுக்குப் பிடிக்கவில்லை. ஆந்தையை அழைத்துத் தன் பார்வையை வெளிப்படுத்துகிறது.
அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்
வேதாந்தம் என்றால் வேதத்தின் அந்தம் (இறுதி) என்று பொருள். நான்கு வேதங்களான ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் இறுதிப் பகுதியாக வருவன உபநிஷத்துக்கள். இவை மெய்ப்பொருள் குறித்தும், தனிப்பட்ட ஜீவனுக்கும், எல்லாமுமாக இருக்கும் பிரம்மத்துக்கும் உள்ள உறவு குறித்தும் ஆராய்ச்சி செய்கின்றன. இவ்வுபநிஷத்துக்களே வேதாந்தம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. எனவே வேதாந்தம் என்று சொன்னால் அச்சொல் நேரடியாக உபநிஷத்துக்களையே குறிக்கும்.
தெய்வநல்லூர் கதைகள்- 29
வாரத்தேர்வு தண்டனை முறைகளில் மாற்றம் வரக் காரணம் நாங்கள் தொடர்ந்து 100% மதிப்பெண்களை அடைந்ததே. எங்களை மாட்டிவிட வேண்டி கடினமான கணக்குகளைக் கேட்டால் அவரிடம் தனிப்பயிற்சிக்கு வருவோர்தாம் அதிக அடிகளைப் பெறும் வாய்ப்புள்ளவர்களாக இருந்தனர். ஆகவே “கெரில்லா” தாக்குதல் முறைகளைக் கையாள ஆரம்பித்தார்.
மனிதர்களுக்கு ஏழாவது உணர்வு இருக்கிறதா?
தொட்டு உணர்வு, பார்வை, கேள்வி, மணம், சுவை“ என்று நம்மால் வரையறுக்கப்பட்ட ஐந்து உணர்வுகளின் பட்டியல் முழுமையல்ல என்று நவீன நரம்பியல் இந்த வரைபடத்தை விரிவுபடுத்தி, மேலும் பல உணர்வுகளை வாழ்வியல் அமைப்பிற்குள் கொண்டு வருகிறது. உடல் உறுப்புகளின் நிலையை அறியும் ‘ப்ரோப்ரியோசெப்ஷன்’, சமநிலை உணர்வு, வெப்பம் உணர்வு, வலி உணர்வு, உட்புற உறுப்புகளின் இயக்கம் உணரும் ‘இன்டரோசெப்ஷன்’ ஆகியவை இவற்றுள் அடங்கும்.
தடுப்பூசிகளின் வரலாறு
எட்வர்ட் ஜென்னரின் பங்களிப்பு ஒரு நோய்க்கான சிகிச்சையைக் கண்டுபிடித்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவர் நோய்த் தடுப்பு என்ற முற்றிலும் புதிய அணுகுமுறையை உருவாக்கினார். அவரது முறை பிற்காலத்தில் லூயி பாஸ்டர் போன்ற விஞ்ஞானிகளுக்கு வழி காட்டியது. பாஸ்டர் ரேபீஸ் மற்றும் ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்களுக்குத் தடுப்பூசி உருவாக்கினார்.
தெய்வநல்லூர் கதைகள்- 28
தோழரண்ணனிடம் முன்பே நாங்கள் சொல்லியவற்றை அவர் டிரிப்பிள் எஸ் சாரிடம் சொல்லியிருந்தார். நாங்கள் மெல்ல எம் எஸ் சி சாருக்கும், பிரேமுக்குமான உரசல் குறித்தும், அது தொடர்பாக நடந்து வரும் ‘பழிவாங்கல்களையும்’ சொன்னோம். டிரிப்பிள் எஸ் சார் முகம் இறுகியது. தோழரண்ணன் கூட அதிர்ச்சி அடைந்தார்
பொது நலம், மேரி டைபாய்ட் கதை மற்றும் சமூக நலன் ஓர் அறிமுகம்
மேரியின் காலத்தில், நோய்கள் பற்றிய பல தவறான நம்பிக்கைகள் இருந்தன. பழைய நம்பிக்கைகளின்படி, நோய்கள் “மோசமான காற்று” அல்லது “மியாஸ்மா”வால் ஏற்படுகின்றன என்று மக்கள் கருதினர். நோய்கள் தெய்வீக தண்டனை அல்லது பாவத்தின் விளைவு என்றும் நம்பினர். சில மக்கள் “சபிக்கப்பட்டவர்கள்” அல்லது “அசுத்தமானவர்கள்” என்று முத்திரை குத்தப்பட்டனர்.
தெய்வநல்லூர் கதைகள் -27
கணிதத் தேர்வில் தன்னுடைய கணக்கு சரியாக இருந்தும் 2 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டிருப்பதாக பிரேம் எம் எஸ் சி சாரிடம் முறையிட்டார் (சார், நீங்க சொல்லிக் கொடுத்தபடிதான் சார் இந்தக்கணக்கை போட்ருக்கேன். ஏழு ஸ்டெப்தான சார் மொத்தம், ஏழும் சரியாத்தான போட்ருக்கேன். ஆனா 5 க்கு மூணு மார்க்தான் சார் போட்ருக்கீங்க- விடைத்தாளை நீட்டியபடி). எம் எஸ் சி சார் சிறிதும் அலுங்காமல் பிரம்பை கையில் எடுத்தபடியே துரையை அழைத்து அவர் விடைத்தாளை வாங்கி பிரேம் முகத்தின் முன் நீட்டினார்
பராக்குப் பார்த்தல்!
தமிழிலும் இதற்குத் தொன்மையான ஒரு பெயர் உண்டு. அது பராக்குப் பார்த்தல். அக்கு என்றால் கண். பர என்றால் மற்றயவை. பரலோகம் என்றால் நம்முடைய உலகம் இல்லாத மற்றொரு உலகம். பரமண்டலம், பரதேசமெல்லாமும் அப்படியே. பரோபகாரி என்றால் மற்றவர்களுக்கு உதவி செய்வபன். ஆக பார்க்க வேண்டியவற்றை விட்டுவிட்டு மற்றவற்றில் கண்ணை வைப்பதற்குப் பராக்கு என்றார்கள். பொதுவாக கவனமின்மை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டாலும், வேடிக்கை பார்ப்பதற்கும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தலாம்.
சையது சலீம்
பெண்களுக்கு, அதிலும் முக்கியமாக முஸ்லிம் பெண்களுக்கிருக்கும் மற்றொரு பிரச்சினை கல்வியறிவு இன்மை. அது எத்தனை அனர்த்தங்களுக்கும் விபரீதங்களுக்கும் வழி வகுக்கிறது என்பதைக் கூறி, முக்கியமாக அதன் மதிப்பை அறியாத முஸ்லிம் இளைய தலைமுறை ஏன் முன்னேறுவதில்லை என்பதையும் ‘சலீம்’ உதாரணங்களோடு விவரிக்கிறார். ஒரு பெண் கல்வியறிவு பெற்றால். அவள் மட்டுமே அல்ல அந்தக் குடும்பமும், அவளுடைய ஊரும் எத்தனனை பயன் பெறும் என்பதை ‘அன்வர்’ மூலம் நிரூபிக்கிறார் சலீம்
தெரிவுகள் அதிகம், முடிவு ஒன்று
சின்ன முடிவுகள் முதல் வாழ்க்கையையே புரட்டிப்போடும் முடிவுகள் வரை. இன்று என்ன காபி குடிப்பது என்பது முதல் காலை உணவு என்ன உண்பது வரை. நாம் சிறுவர்களாக இருந்தபோது இந்தக் குழப்பம் இருந்திருக்கவில்லை. அம்மா செய்வதுதான் காலை உணவு. இப்போது அப்படி இல்லை. பல இல்லங்களில் பலவகை சீரியல்களும் பிரெட் டோஸ்டா இல்லை பழரசமா என பிள்ளைகளைக் கேட்பதில் குழப்பம் ஆரம்பிக்கிறது. பழரசத்தில் ஆயிரம் வகை இருக்கும். இது ஒரு வகை பொருளாதார மேம்பாட்டைக் காட்டினாலும் முடிவெடுக்க குழந்தைகளைத் திணறடிக்கச் செய்கின்றன. நான் சொல்வது சற்றே பொருளாதாரத்தில் மேல்தட்டு குடும்பங்களை.
ஹர்ஷனின் உறுதிமொழி
என் உடன் பிறந்தவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவனை பழி வாங்கும் வரை, என் தந்தை மறைந்தபின் வரிசையாக வந்த பல துன்பங்களால் வருந்தும் என் பிரஜைகளுக்கு என் கடமையை செய்யும் வரை, என் மனம் ஆறுதல் அடையாது. அதன் பின் நானும் வருகிறேன். உங்களிடம் தர்ம உபதேசங்களை கேட்கவும், உங்கள் அடி பணிந்து தவ வாழ்க்கையை மேற் கொள்ளவும் வருகிறேன். இந்த உபதேசங்களால் என் ரஜோ குணங்கள் அடங்கட்டும்
வினை முடித்தன்ன இனிமை
’நாம் செய்ய வேண்டிய வேலை என்ன’ என்பது நமக்குத் தெரியும். பல சமயம் நாம் அதைக் கவனிப்பதில்லை. கவனமின்மையும், அசிரத்தையும், பயம், இன்பம் துய்த்தல் போன்ற உந்துதல்களும் நம் கண்களை மறைத்து விடுகின்றன. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தால் அது தன்னைக் காட்டிக் கொள்ளும். அலை பாயும் மனம், அதைக் காணவொட்டது தடுக்கும். எனவேதான் அமைதி முக்கியம். செய்ய வேண்டிய வேலை சரியான வேலையாகவும் இருக்க வேண்டும்.
றெக்கை – அத்தியாயம் 4
ஜாக்கிரதைன்னா இங்கே இருக்கற இளம் வயசு, மத்திய வயசு ஆண்களும் பெண்களும் உங்க சிநேகம் கிடைக்காதான்னு ஏங்கப் போறாங்க. நீங்க கையைப் பிடிச்சு பார்த்து உடம்புக்கு என்னன்னு விசாரிப்பீங்க ஒரு டாக்டராக. நீதான் வேணும்னு கையை விடாமல் அடம் பிடிக்கலாம். ஜாக்கிரதை. அதிலே முதல் ஆசாமி என் வீட்டுக்காரன் தான். என் தங்கச்சியை கணக்கு பண்ணிட்டு இருக்கான் இப்போ. அவகிட்டேயும் ஜாக்க்கிரதைன்னு தான் சொல்லியிருக்கேன் நிம்மி
கண்டான் சகோதரியை!
மைதியாக இருந்த இடம் – திடீரென இந்த அழுகுரல் கேட்கவும் விரைந்து ஓடி அருகில் சென்றேன். பல பெண்கள் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தனர். அந்த பெண்ணோ, பிடிவாதமாக நெருப்பில் இறங்க முயன்றாள். யாரோ துரத்தி வந்தார்களோ, என்ன காரணம் தெரியவில்லை பாதங்கள் வீங்கி இருந்தன. நகங்கள் உடைந்து கிடந்தன – அடிபட்டிருந்தது போலும். போஜ பத்திரங்களால் முழங்காலில் கட்டு போட்டிருந்தாள். வழியில் பேரீச்ச மரங்கள் உண்டு. முள் கிழித்ததோ என்னவோ. தண்ணீர் விட்டான் கிழங்குகள் என்போம், அதிலும் முள் உண்டு. அது தான் குத்தியதோ, கீறல்கள் தெரிந்தன. தாறு மாறாக வளர்ந்த கொடிகள் அவள் ஆடையில் சுற்றிக் கொண்டு விட்டன போலும்
இயற்கை ஏன் வடிவங்களை உருவாக்குகிறது
சுழல் வடிவங்கள் (spirals), இயற்கையின் மிகவும் கவர்ச்சிகரமான வடிவங்களாகும். அம்மோனைட் புதைபடிவங்கள், சூறாவளிகள், மற்றும் சூரியகாந்தி விதைகளின் அமைப்பு ஆகியவை இதற்கு உதாரணங்கள். இந்த logarithmic சுழல்கள், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வளரும்போது தங்கள் வடிவத்தைத் தக்கவைத்துக்கொள்கின்றன. உதாரணமாக, கடல் சிப்பியில் புரதப் பட்டைகள் சுழல் வடிவங்களை உருவாக்குகின்றன. இவை ஃபிபோனாச்சி வரிசையைப் பின்பற்றி, சூரியகாந்தி விதைகள் அல்லது பைன் கோன்களில் உள்ள செதில்களை அமைக்கின்றன
தென்கொரியப் பயணம் – சியோல் அனுபவங்கள்
ஓடோடி வரும் குதிரைகள், ஆயுதங்களைச் சுமந்த வீரர்கள், வண்ணமயமான உடைகள், கட்டுக்கோப்பான நடைமுறைகள், பாரம்பரிய ஆயுதங்கள், இசை என்று ஒரு விழாவைப் போல காட்சிப்படுத்தியிருந்தார்கள். கடமையாக அனைத்தையும் வீடியோ எடுத்துக் கொண்டோம். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நின்றதில் அப்பொழுதே கால் வலிக்க ஆரம்பித்து விட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் உள்ளே சென்று பார்க்க வேண்டிய இடங்களைப் பார்க்கப் பார்க்க இன்பம்.
பள்ளி-சமூகம்-பெற்றோர் கூட்டுறவு: நிலையான கல்வி மேம்பாட்டிற்கான அடிப்படை
முதலாவதாக, குடும்பங்களுக்கும் பள்ளி பணியாளர்களுக்கும் இடையே ஒரு கூட்டுறவு உண்டு, அதன் நோக்கம், மாணவர் வெற்றிக்கான ஒரு வரையறையை உருவாக்கி முன்னேறுவது. இரண்டாவதாக, குடும்பங்களும் பள்ளி பணியாளர்களும் சேர்ந்து மாணவர்கள் நலனுக்காக, கலாசாரம் மற்றும் பிற நம்பிக்கைகள் அடிப்படையில் பரஸ்பர நம்பிக்கை, புரிதல் மற்றும் பாராட்டுக்களை வளர்க்கும் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குகின்றனர்.
கவிஞர் பகவான், ஆசு பாபு ராஜேந்திர பிரசாத் & என்ட்லூரி சுதாகர்
இது ஒரு விதத்தில் விட்டுப் பிரிய முடியாத, உயிருக்கும் உயிருக்கும் இடையில் இருக்கும் நுட்பமான உறவுக்கு உயர்ந்த இடத்தைக் கொடுக்கும் கவிதை. ஒரு பெண் தன் வாழ்க்கைப் பயணத்தில் இவ்வாறு தன் வீட்டை விட்டு இன்னொருவர் வீட்டுக்குச் சென்று, அவர்களில் ஒருவராக மாறுவது என்பது உயிர் வாழ்வதற்காக மட்டுமே. அந்த வீட்டு மனிதர்களின் இயலாமை அவளுக்கு பற்றுக்கோடானது.
வாழ்க்கை: இடரின் நீர்நிலை, முயற்சியின் படகு
அதே போல குடுபங்களுக்கென ஒரு கொள்கைப் பிடிப்பு அறம் உண்டு. அது எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். சில குடுபங்களில் கடின உழைப்பு, நேர்மை, சில குடுபங்களில் எதிலும் விட்டுக்கொடுக்காத தன்மானம், வேறு சில குடுபங்களில் காலத்தோடு காரியமாற்றும் பண்பு என எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். அந்த கொள்கைப் பிடிப்புகளை விட்டுவிடாமல் செயலாற்ற பழக வேண்டும். இல்லை எனில் குடும்பச் சூழல் இனிக்காது.
நவீன தெலுங்கு இலக்கியத்தில் பெண்ணியம் எழுதிய ஆண் எழுத்தாளர்கள் – பகுதி- 1
சில ஆண் எழுத்தாளர்கள், பெண்கள் எழுதிவரும் பெண்ணியக் கருத்தியலோடு ஒன்றுபட்டு, பெண்களின் உணர்வுகளை மதித்து, பல படைப்புகளைச் செய்தனர். பெண்கள் மட்டுமே அன்றி அவர்களுக்குத் துணையாக ஆண் எழுத்தாளர்களும் தம் பங்கு உதவியை அனைவரும் ஏற்கும் விதமாக அளித்து வருகிறார்கள். அவற்றில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற அனைத்தும் உள்ளன.
11. அறிவின் ஒளி
பசுவுடன் தொடர்புடைய பால்காரர்களுக்கு பெரியம்மை தொற்று ஏற்படுவதில்லை என்று கவனித்த ஜென்னர் தன் வேலைக்காரர் மகனான ஜேம்ஸ் பிப்ஸ் என்ற 10 வயது சிறுவனுக்கு மாட்டின் அம்மை (cowpox) கொப்புளத்திலிருந்து எடுத்த சீழை உட்செலுத்தினார். பின்னர் அவனுக்கு பெரியம்மை (smallpox) பொருக்குகளை உட்செலுத்தியும் பெரியம்மை நோய் அறிகுறிகள் ஏற்படவில்லை. பின்னர் தன் மகன் உட்பட பலரிடம் சோதனை செய்து நோய்த்தடுப்பூசி முறையை முன்வைத்தார்.
பாறைகள் பகிரும் பழங்கால கதைகள்
தக்காண பீடபூமியில் பாறைகளின் உருவாக்கம் சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எரிமலை வெடிப்புகளினால் உருவான பசால்ட் (basalt) பாறை அடுக்குகளில் உள்ளது. இந்த நிகழ்வு ‘டக்கன் டிராப்ஸ்’ (deccan traps) என்று அழைக்கப்படுகிறது. அடுக்கடுக்காக படிந்துள்ள பசால்ட் பாறைகள் பல லட்சம் சதுர கிலோமீட்டருக்கு மேல் பரப்பில் காணப்படுகின்றன. தக்காண பீடபூமி ஆழமான உணர்வும் ஆயுட்காலமும் கொண்டது. இதில் கிடைக்கும் கறுப்பு (Black) மண் வகை பயிரிட மிகவும் உகந்தது.
பாரம்பரியப் படிக்கிணறுகளின் ஆய்வில் அறிவியல் சிந்தனை
மேற்கு இந்தியாவின் ராஜஸ்தான், குஜராத் போன்ற வறண்ட பகுதிகளில் காணப்படும் பல படிக்கிணறுகள், இப்பகுதியைச் சேர்ந்த ராணிகள் மற்றும் இதர பெண் புரவலர்கள் அங்கிருந்தவர்களின் குடிநீர் தேவைகளை மனதில் கொண்டு, உருவாக்கிய காதல் சின்னங்கள்.
பூமியில் அரசர்களின் அனுராகம்
தன் சுய கௌரவம் இன்றி தண்ணீருக்காக உடலை வளைத்து கை நீட்டுவான். இதற்கு உதாகரணம் துலா யந்திரம் – எடை பார்க்கும் கருவி. கௌரவம்-கனம், சுய மதிப்பு இரு பொருள். துலா யந்திரம் கனத்தை கீழே தள்ளூம். யாசிப்பவன் என் கௌரவத்தை இழப்பான். கஞ்சன்- தர மாட்டான் என்று தெரிந்தும் அவன் காலைப் பிடித்து வேண்டுபவன் போல, அவன் திட்டினாலும் பொருட் படுத்தாமல் தன் தேவைக்காக நெருங்குபவன் மனதில் எந்த அளவு வேதனை இருக்கும்.
சமூக உணர்ச்சி கற்றலை வகுப்பறையில் ஒருங்கிணைக்கும் வழிகள்
ஒவ்வொரு மாணவனின் திறமையையும், உழைப்பையும், கலாச்சாரத்தையும் பாராட்ட வேண்டும். நம் வகுப்பில் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்த மாணவர்கள் இருக்கலாம். ஒருவர் கிராமத்து பின்னணி, இன்னொருவர் நகர பின்னணி என்று இருக்கலாம். ஒருவர் வீட்டில் தமிழ் பேசுவார், இன்னொருவர் தெலுங்கு அல்லது இந்தி பேசுவார். இந்த வேறுபாடுகளை பலவீனம் என்று நினைக்காமல், அது ஒவ்வொருவருடைய தனித்துவம் என்று பாவித்து, அவற்றைப் பாராட்ட வேண்டும்.
9. ஒருங்கிணைப்பின் வழியே
அஹ்ரிமான் சிலையின் நான்கு சிறகுகள், நான்கு பருவங்களின் சின்னங்களைத் தாங்கியுள்ளன. இடியின் சின்னம் அவரது மார்பில் பொறிக்கப்பட்டுள்ளது. சிலையின் அடிப்பகுதியில் தீயின் தெய்வமான வல்கனின் (Vulgan) சுத்தியல் மற்றும் இடுக்கியும் – மெர்க்குரி தெய்வத்தின் சேவல் மற்றும் கோல் (கடுசியஸ்) உள்ளன. மெர்க்குரி வணிகம், சொல்லாற்றல், தகவல் தொடர்பு, பயணிகள், எல்லைகள், அதிர்ஷ்டம், தந்திரம் ஆகியவற்றுக்கும், ஆன்மாக்களை பாதாள உலகத்திற்கு வழிகாட்டி அழைத்தும் செல்லும் தெய்வம்
பகைவனுக்கும் அருள்வாய்!
பல யானைகளின் பலம் கொண்டவன் என புகழப்பட்ட பீமனுக்கு அது மிகப் பெரிய அவமானமாக இருந்தது. இருந்த பொழுதும், இம்முறை தனது இரு கரங்களையும் கொண்டு அதன் வாலை தூக்கி நகர்த்த முயன்றான். அவன் பலமுறை பலவிதமாய் முயற்சித்தும் இம்மி கூட அசையவில்லை. அப்பொழுதுதான் தன்னுடன் பேசிக்கொண்டிருப்பது சாதாரண குரங்கில்லை என்பது அவனது சிற்றறிவுக்கு புரிந்தது.
புரட்சியின் தொடக்கம்
நியூட்டனுடையதும் மாக்ஸ்வெலுடையதுமான கொள்கைகள் ஓன்றுடன் ஒன்று மிக மிக நுட்பமாக முரண்படுவது போல தோன்றும். மாக்ஸ்வெலின் சமன்பாடு திசைவேகம் (velocity ) – குறிப்பாக ஒளியின் திசைவேகத்தினை கணிக்கிறது. நியூட்டனுடைய இயக்கவியலோ அடிப்படை திசைவேகம் என்னும் கோட்பாட்டிற்கே இயைந்து போகாதது. அதன் சமன்பாட்டில் திசைவேகமல்ல, வேக முடுக்கமே (Acceleration) முக்கியமானது. நியூட்டனின் இயற்பியலில், திசைவேகம் என்பது இன்னொன்றைப் பொறுத்த ஒன்றின் திசைவேகம் மட்டுமே
துவங்கிய பயணமும் வந்த பரிசும்
அரசன் இந்த குடையின் வரவினால் தன் பிரயாணத்தின் ஆரம்பமே சோபனம்- நிறைவான பயன் தருவதாக அமைந்து விட்டது என்று மனம் மகிழ்ந்தான். ஹம்சவேகனிடம் பிரியமாக பேசினான். ‘ பத்ர! பரமேஸ்வரனுக்கு அர்ப்பணிக்க வேண்டிய எல்லா ரத்தினங்களையும், இந்த பெருமை மிக்க குடையையும், குமாரன் அனுப்பியதில் வியப்பில்லை. அவனே பாற்கடலில் நிலவு தோன்றியது போல உயர்ந்த ராஜ குலத்தில் பிறந்தவன். அந்த குலத்தில் வந்தவர்களின் அன்பளிப்பு அவர்களுக்கு கை வந்த கலை.
எறும்புத் தோலை உரித்துப்பார்க்க யானை வந்ததடா!
சமீப காலமாக, சிறிய எறும்புகளைப் பெரும் நுண்ணோக்கிகளின் வழியாக ஆராயும் ஆர்வம் அதிகரித்துள்ளது. மனிதக் கண்களுக்கு சாதாரணமாகத் தெரியாத அச்சிறிய புள்ளிகள், இன்று இந்த எறும்புகள் அவைகளின் சமூக நடத்தை, ஒத்துழைப்பு, மற்றும் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன் அனைத்தும் உயிரியல்-ஈர்க்கப்பட்ட தொழில்நுட்பத்தில் (biomimicry) விஞ்ஞானிகளின் பெரும் ஆராய்ச்சி பொருளாக மாறிவிட்டன. இயற்கையின் இந்த சிறிய அதிசயங்கள், மனித பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய வழிகளைத் திறந்துள்ளன.
தவறாக விதிக்கப்பட்ட சாபம்
ஒருநாள், காட்டில் சென்று கொண்டிருக்கையில் களைப்பாய் உணர்ந்த பரசுராமரை உறங்க விரும்பினார். உடனிருந்த கர்ணன், தனது தொடையில் தலை வைத்து உறங்குமாறு கூறினான். அதை ஏற்று, அவனது தொடையில் தலை சாய்த்து உறங்கினார். அவர் உறங்கத் துவங்கி சிறிது நேரத்தில் ஒரு வண்டு அவனது தொடையைக் கடிக்க, தான் அசைந்தால் குருவின் தூக்கம் களைந்து விடுமோ என வலியை பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவனது தொடையை கடித்து ஊடுருவி மறுபக்கம் வழியே வெளிவந்தது வண்டு
தெலுங்கு பெண் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள் – பகுதி- 2
எந்தக் கதையைப் படித்தாலும், யாருடைய கதையைக் கேட்டாலும் அதில் பெண் கதாபாத்திரம் என்ன என்று கவனமாகப் பார்த்து அந்தப் பாத்திரத்தை ஆராய்வது என் வழக்கம். இந்தக் கவனிப்பால் பல பெண்களின் மேன்மையை தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நாம் முன்பென்றும் அறிந்திராத பெண்களும், அவர்களுடைய இயல்புகளும் கதைகளின் மூலம் அறிமுகமாகி, என்னோடு உரையாடுவதும், உயிரோடு நினைவில் நிற்பதுமாக சிறந்த அனுபவத்தைத் தருகிறார்கள்
அணிவகுத்த படைகள்
மூன்றாவது யாமம் தொடங்கியதுமே, பிரயாண படஹ என்ற வாத்யங்கள் ஒலிக்கலாயின. நிச்சப்தமாக இருந்த இரவில் அவை கம்பீரமான ஒலி அலைகளை பரப்பி, அனைவரையும் எழுப்பி விட்டது. திக்குகளில் கும் கும் என்ற நாதமே நிறைந்திருக்க பொழுது புலரும் முன் வழியனுப்ப அனைவரும் வந்து கூடினர். முன்னால் நின்று பிரயாண க்ரோசம் என்ற பெயரில், எட்டு பேர் தனித்தனியாக படஹத்தை வாசித்து அதன் நியமத்தை அனுசரித்தனர்.
மயக்கமும் பித்தமும் கொண்டார்
வீரயுகப் பாடங்களின் தொகுதியான புறநானூற்றில், அதன் அடிப்படை தொனியை மீறிய சில கவிதைகள் இடம் பெற்றிருப்பதைக் காண முடிகிறது. மாற்பித்தி என்ற பெண் கவிஞர் பாடியதாகப் புறநானூற்றில் அடுத்தடுத்து வைக்கப் பட்டிருக்கும் இரண்டு கவிதைகளும் (251,252) வழக்கமான புறப்பாடல்களிலிருந்து தொனியால் வேறுபடுபவை. வாகைத் திணையில் தாபத வாகைத் துறையில் அடக்கப்பட்டுள்ளவை.
7. மூன்றே பொருளாய் முடிந்தது
சித்த மருத்துவம் என்று குறிப்பாகவோ, இல்லை காலத்தை தெளிவாக குறிக்கக்கூடிய அகழ்வாராய்ச்சி முடிவுகளோ, இலக்கிய குறிப்புகளோ கிடைப்பதில்லை. மாறாக, சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவூர் விடுத்த காதையில், “ஆயுர்வேதரும் காலக்கணிதரும் பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்” என்ற குறிப்பு காணப்படுகிறது. காவிரிபூம்பட்டினத்தில் காலத்தைக் கணிப்பவருக்கும், ஆயுர்வேத மருத்துவர்களுக்கும் தனித்தனி தெருக்கள் இருந்ததாக தெரியவருகிறது.
நீர் துளியில் நிகழும் புதுமைகள்
பைட்டோபிளாங்க்டன் (அல்லது பாசி பிளாங்க்டன்) என்ற ஒற்றை செல் உயிரினங்கள்தான் மிகவும் முக்கியமானவை. நிலத் தாவரங்களைப் போலவே, இவை கார்பன் டைஆக்சைடு எடுத்துக்கொண்டு, ஒளி ஆற்றலைப் பயன்படுத்தி கார்போஹைட்ரேட்டுகளை உருவாக்குவதுடன், ஆக்ஸிஜனையும் வெளியிடுகின்றன. கடலின் முதன்மை உற்பத்தியாளர்களான இவைகள், உணவுச் சங்கிலியின் அடித்தளத்தை உருவாக்கும் உயிரினங்கள் ஆகும்
