தில்லி, போலந்து என்று உலகின் பல்வேறு கல்விச் சூழல்களில் ஆய்வாளராகவும் பேராசிரியராவும் பணியாற்றிய இ.பா., கல்விச் சூழலில் வாழ்ந்தாலும் எப்போதும் இலக்கியத்தோடும் வாசகர்களோடும் நேரடி நாடி தொடர்பை வைத்திருந்தார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில், புதிய குரல்களை அடையாளம் கண்டு களத்தில் நிறுத்துவதில் அவர் காட்டிய தன்னல மறுப்பு, தமிழ் இலக்கிய வரலாற்றில் பதிவாக வேண்டிய ஒன்று.
Tag: இந்திரா பார்த்தசாரதி
கி.ரா – நினைவுக் குறிப்புகள்
இதே தன்மையில் உருவானதல்ல கதைசொல்லி என்னும் கலைச்சொல். Performance, Narrative என்ற இரண்டு ஆங்கிலச் சொற்களை அரங்கியல் பலவிதமாகப் பயன்படுத்தத் தொடங்கிய நவீனத்துவ காலகட்டத்துக் கலைச்சொல் சொல்லுதலை நிகழ்த்துதலாக மாற்றிய காலகட்டத்தின் தேவையை உணர்த்தும் சொல். நிகழ்த்துதல் கோட்பாடு..
என்னும் அரங்கியல் சிந்தனையின் வழியாக இலக்கியவியலுக்குள் நுழைந்த அச்சொல்லுதலின் தீவிரம் எல்லாவற்றையும் நிகழ்த்துதலாக்க நோக்கத்தோடு இணைத்தது. நிகழ்த்துதலுக்கேற்ப சொல்லப்படும் மொழியின் பண்புகளும் அடுக்குகளும் மாறவேண்டும் என்று வலியுறுத்தியது.
