செல்வம் அருளானந்தம்- நேர்காணல்

 குறிப்பாகக் கவிதைகளை எழுதும்போது அறிவு பூர்வமானதைப் பின்தள்ளி உணர்வே சொற்களைத் தருகிறது. தர்க்கம் என்பது பிரிக்கமுடியாத உணர்வுகளின் படிமுறை ஒழுங்கும்  நியாயமும். அதை உணர்வின் வழி சொல்லும்போது தர்க்க சிந்தனையில்லாவிடில் கவிதை நிற்காது; நிராகரிக்கப்பட்டுவிடும். அறிவையும், தர்க்க அணுகுமுறையையும் மனித உணர்வுகளின் வழியாக எளிமைப்படுத்தலாம் அப்போது அந்தக் கவிதையோ சிறுகதையோ வாசகர்களின் அதிகரித்த கவனவீச்சைப் பெறுகின்றன.

எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் சிறப்பாசிரியர் இதழ்

எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் சிறப்பிதழ் வெளியாகி இருக்கிறது.

பால்மாறி ஆடும் கவிதைகள்: கவிஞர் ந. ஜயபாஸ்கரனுடன் ஒரு கட்டுரையாடல்

அறையில் நிகழ்த்திக் கொண்டதை மீண்டும் அம்பலத்தில் நிகழ்த்த வேண்டுமா என்ற தயக்கம் என்னுள் இருந்தது உண்மை தான். ஆளால் தீவிரமான வாசிப்புத் திறனும், ஆழ்ந்த புரிந்துணர்வும் கொண்ட உங்களுடன் இந்தக் கட்டுரையாடலை நிகழ்த்தத் தொடங்கியபின், எனது மனத்தடைகள் சிறிது சிறிதாக உடைந்து வருவதை உணர முடிந்தது. குற்ற உணர்வும், அச்சமும், துயரமும், தன்னிரக்கமும் குறையத் தொடங்கின. இதற்காக எல்லாம் உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.அனைத்துக்கும் மேலாக, நீங்கள் அறிமுகப்படுத்திக் கொடுத்த கவாஃபியின் கவிதை உலகத்துக்கு.

சந்திப்பு- யுவன்

அடுத்த நாள் கொஞ்சம் நிதானமாக எழுந்து,  கிளம்பி, சிறிய காபி வித் யுவன் நிகழ்வு. அப்போது தான் கவனித்தேன் – கண்ணாடி குவளையின் கைப்பிடியை நான்கு விரல்களை மட்டும் பயன்படுத்தி பிடித்து, கட்டை விரலை தனியாக வைத்து குடிக்கும் காட்சியை. பின் தங்கி இருந்த இடத்தில்  இருந்து புறப்பட்டோம். “காலம்” செல்வம் அவர்கள் – யுவனோடு ஒரு உரையாடல் சந்திப்பை ஒருங்கிணைத்திருந்தார்.

வாழ்நாள் சாதனையாளருடன் நேர்காணல்

This entry is part 10 of 22 in the series இசைவாணர்

அங்கு பள்ளியில் தவில் படிப்பு என்பது என்பது மூன்று ஆண்டுப் பயிற்சி. என் குருநாதருக்கு என்னை இன்னும் கூட அவருடன் வைத்து நிறையச் சொல்லித் தர வேண்டுமென்று ஆசை இருந்திருக்கும் போல. எனக்கு அந்த வயதில் அது புரியாமல் போனது. மற்ற பிள்ளைகள் மூன்றாண்டுப் படிப்பை முடித்துக் கிளம்பும்போது நானும் பெட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டேன். நான் அப்படிச் செய்ததைப் பார்த்ததும் அவருக்குக் கடும் கோபம். “போ! போ! இனி என் முகத்திலேயே விழிக்காதே.”, என்று திட்டினார்.

ஜொராஸ்ட்ரியனிசம்

ஜொராஸ்ட்ரியர்கள் இந்த சடங்கு விழாக்களை செய்வதற்காக மகிகளுக்கு வணக்கஸ்தலங்களை நிர்மாணித்துக் கொடுத்தனர். அவை ஆங்கிலத்தில் ‘fire temples’ (தீக் கோயில்கள்) என அழைக்கப்பட்டன. மூன்றாம் நூற்றாண்டில், சசானிய பாரசீகப் பேரரசு ஜொராஸ்ட்ரியனிசத்தை அதன் அதிகாரபூர்வ மதமாக மாற்றியபோதே உண்மையில் அது ஒரு மதமாக நிறுவப்பட்டது என்று சொல்வேன். அதற்கு முன், இது பாரசீக மற்றும் பிற பேரரசர்களின் அதிகாரப்பூர்வ மதமாக இருந்திருக்கலாம். ஆனால் அது உத்தியோகபூர்வ அரச மதமாக மாறிய பின்னர்தான் பரவத் தொடங்கியது.

ராயல்டி பிரச்னை எனக்கில்லை!

பிஸினஸ் கூட்டாளியின் நம்பிக்கைத் துரோகம், அதனால் வந்த பொருளாதாரச் சிக்கல்கள், வளரும் குடும்பம் எனப் பல பிரச்னைகள். 2005 -இல் மறுபடியும் எழுதத் தொடங்கினேன். என் மனத்துக்கு ஆறுதல் சொல்லிக்கொள்ளவோ, ஏனோ, சுயமுன்னேற்றக் கட்டுரைகள் எழுதினேன்.  முதல் கட்டுரையை ‘ராமகிருஷ்ண விஜயம்’ வெளியிட்டது. அதன் ஆசிரியர் மகாராஜ் விமூர்த்தானந்தாஜி  தொடர்ந்து எழுத ஊக்கம் தந்தார். சுமார் இருபது கட்டுரைகளை வெளியிட்டார். 

துவாரம் மங்கத்தாயாரு

This entry is part 3 of 22 in the series இசைவாணர்

வயலின் குறித்த ஆராய்ச்சியை நோக்கும்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிற்ப வடிவங்களில் பெண்கள் வயலின்போன்ற ஒரு இசைக்கருவியை வாசிப்பதுபோல் வடிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போதுள்ள வடிவில் பிடிலு என்று கன்னடத்திலும் பிடில் என்று தமிழிலும் கூறப்படும் வயலின், 18ம் நூற்றாண்டின் கடைசி தசாப்தத்தில் கர்னாடகாவில் முதலில் தோன்றியது. பொ.யு.1784இல் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் வரையப்பட்ட ஒரு சுவரோவியத்திலும் கிட்டத்தட்ட பொ.யு.1850இல் செதுக்கிய ஒரு மர சிற்பத்திலும் பெண்கள் வயலின் வாசிப்பது காட்டப்பட்டிருக்கிறது.  (காண்க ஸ்ருதி. 1 அக்டோபர் 1985) புகழ்பெற்ற வாக்கேயக்காரரான முத்துஸ்வாமி தீட்சிதரின் தம்பியான பாலஸ்வாமி தீட்சிதர்தான் முதலில் வயலின் பயின்றார் என்று பிற்காலத்தில் கூறப்பட்டது. இது வாத்தியத்தின் வரலாற்றை மாற்றியதோடு மட்டுமல்லாமல் அதை ஆண்களின் வாத்தியமாகவும் மாற்றிவிட்டது

கலைச்செல்வி – நேர்காணல்

காந்திக்கும் அவரது மூத்த மகன் ஹரிலாலுக்குமிடையே நிலவிய முரண்பட்ட உறவுமுறை குறித்தும் சிறுகதை எழுதும் ஆர்வம் வந்தது. ஆனால் அதற்கான தகவல்கள் போதாத நிலையில் பல நுால்களை தரவிறக்கியும் மொழி பெயர்த்தும் வாசிக்கத் தொடங்கினேன். அது எழுத்தாக வெளிப்பட்டபோது சிறுகதைக்குள் அடங்கவியலாததாக இருந்தது. நாவலாக எழுதத் தொடங்கினேன். அதற்கு காலமும் நேரமும் கைக் கொடுத்தது என்பேன்.

நாங்களும் படைத்தோம் வரலாறு

என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும். தலித் சமூகத்தைச் சேர்ந்தவள் நான். என் அம்மாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. கொங்கண் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமம்தான் என் பூர்வீகம். என் அப்பா ஆறாம் வகுப்பு வரைதான் படித்திருந்தார். என் கிராமத்திலிருந்தவர்களோ அவர் பெரிய படிப்பு படித்திருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் ஆறாம் வகுப்பு படித்திருந்தாலே போதும், வேலை கிடைத்துவிடும். எனவே அவர் ஓர் ஆசிரியராக இருந்தார். அத்துடன் எங்கள் இனத்தில் நடைபெறும் திருமணங்களை முறைப்படி நடத்தி வைப்பார்.

உண்மைகள் எளிதானவை- பாவண்ணன்

தாய்மொழிப்பயிற்சி உள்ள ஏராளமான பள்ளிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளன. ஒரு மாநிலத்தில் இயங்கக்கூடிய தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையையும் அரசு பள்ளிகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலேயே இதைப் புரிந்துகொள்ளமுடியும். அங்கெல்லாம் மாணவமாணவிகள் தாய்மொழியில்தான் படிக்கிறார்கள். எதிர்காலத்தைப்பற்றிய அச்சத்தைத் துறந்துவிட்டு தாய்மொழியில் படிக்கும் அவர்கள்தான் இந்த நாட்டின் உண்மையான தூண்கள். அவர்கள் வழியாக தாய்மொழிகள் கண்டிப்பாக வாழும்.

பத்மா அர்விந்த் – பேட்டி

படைப்பதனால் அவன் இறைவன் என்றாலும், பிறப்பையும் இறப்பையும் நிறுத்தும் வல்லமை கொண்ட இறைவன்/இயற்கை இல்லை. எழுத்தாளர்களும் மனிதர்கள்தாம், அவர்களுக்கு தொழில் எழுத்து, எனக்கு மேலாண்மை போல. என் துறையிலும் திட்டமிடலும், எழுதுதல், நுட்பமாகவும், விவேகமாகவும், இன்னமும் நூதனமாகவும், சில சமயம் படைக்கும் திறனுடனும் சிந்திக்க வேண்டும். என்னைப்போல, என்னைவிடவும் மேலாக, இன்னும் உயர் பதவிகளில் இருப்பவர்கள் கூட பலர் இருப்பார்கள். நாங்கள் சந்திப்பவர்கள் உண்மையான மாந்தர்கள், தீர்ப்பது உண்மையான பிரச்சினைகள். ஆனால், இதுதான் உயர்ந்தது என்று மற்றதைப் புறந்தள்ள முடியாது. மற்றவர்களை ஒதுக்கித்தள்ளவும் இயலாது. எல்லாவற்றிற்கும் பொது விதியும் இல்லை….

கிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்

மேற்கு வங்கத்தின் சந்தன்நகரில் பிறந்த கிருஷ்ண பாசு, தன்னுடைய பதினொரு வயதிலேயே முன்னணி வங்க மொழி இதழ்களான ஏக்‌ஷாத், தேஷ், கீர்திபாஷ், அம்ருதோ ஆகியவற்றில் படைப்புகளை வெளியிட்டதன் மூலம் தன் கவி வாழ்வைத் தொடங்கினார். அவரது தனிக் கவிதைகளின் முதல் தொகுப்பு 1976-இல் வெளியானது. அன்று தொடங்கி, அதிசயிக்கச் செய்யும்விதமாக, மேலும் 18 தொகுப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”

ஆங்கிலம் நம்மீது ஏற்படுத்தியிருந்த தாக்கத்தினால், மேலை இலக்கியத்தை ஆங்கிலப் படைப்புகளாகவே எதிர்கொள்வதற்கு நாம் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம். ஆனால் அவை உண்மையில் ஆங்கிலப் படைப்புகள் அல்ல; நம்மை நெகிழ்த்திய, நாம் ஒருவருக்கொருவர் மேற்கோள் காட்டிக்கொண்டிருந்த வார்த்தைகள் ஆசிரியரின் வார்த்தைகளே அல்ல, அவர் ஆகிருதிக்குப் பின் மறைவாக நிற்கும் மொழிபெயர்ப்பாளருடையது. இக்கண்டுபிடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவை மூலவடிவங்கள் அல்ல என்ற பிரக்ஞையுடன் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கினேன்.

சுசித்ரா பட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் பெண்கள் எப்படி வெற்றி பெற்றுவருகிறார்கள், ஆண் ஆதிக்கத்தை எப்படிக் கடந்துவருகிறார்கள் என்பதைப் பற்றிய குறிப்பு அதில் வெளியாகி இருந்தது. கவிதை வாசிப்பதில் பிரதீப் கோஷும் ஜகந்நாத் கோஷும் மிகப் பிரபலமானவர்கள், ஆனால் பிரதிபுலி கங்கோபாத்யாய் அவர்களை முந்திவிட்டார் என்று அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அதேபோல் இலக்கியத்தில் சுசித்ரா பட்டாச்சாரியாவின் புகழ், சுநீல் கங்கோபாத்யாயின் புகழுக்கு எந்த அளவும் குறைவானதில்லை. கல்கட்டா நோட்புக்கில் எழுதியிருக்கிறார்கள். அதைப் பார்த்து நான் மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.

ஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி

This entry is part 1 of 13 in the series வங்கம்

சிறப்பிதழ் என்பதே ஒரு பெரும் கூட்டுமுயற்சி. அதை “எடிட்” செய்வது சில சமயங்களில் நொந்து கொள்ளும்படியாக இருந்தாலும் பெரும்பாலும் ஒரு திறப்பாகவே இருந்தது. இவ்விதழின் பல கட்டுரைகளுக்கும் மொழிபெயர்ப்புகளுக்கும் நூற்றுக்கணக்கான திருத்தங்களையும் கருத்துகளையும் அளித்திருப்பது பெருமையளித்தாலும் அவற்றின் மூலமே பல வங்க இலக்கியப் படைப்புகளையும் நான் கண்டறிந்தேன் என்பதையும் இங்கு பதிவுசெய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

வி. ராமஸ்வாமி: நேர்காணல்

This entry is part 2 of 13 in the series வங்கம்

1. உங்கள் பின்னணி பற்றி கொஞ்சம் பகிர்ந்துகொள்ள முடியுமா? நீங்கள் எப்போது வங்க இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கினீர்கள்? நான் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றேன், அதன் பிறகு கல்கத்தாவின் வீடற்றவர்களின் வீட்டு உரிமைகளுக்காக சமூக செயற்பாட்டில் என்னை நான் அமிழ்த்திக் கொண்டேன். உயர்நிலை வகுப்பு, கல்லூரி, பட்ட மேற்படிப்பு “வி. ராமஸ்வாமி: நேர்காணல்”

நேர்காணல்: மல்லிகா சென்குப்தா

பெரும்பாலானவை சிற்றிதழ்களே; அதாவது சாதாரண நிலைமையில் இருப்பவர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து கொண்டுவருபவை. மேற்கு வங்கத்தில் மிக வளமான சிற்றிதழ் பாரம்பரியத்தை நாங்கள் கொண்டிருக்கிறோம். ஆண்டு முழுவதும் வெளிவரும் ஆயிரக்கணக்கான சிற்றிதழ்களும் அரசாங்கமும் ஒன்றிணைந்து நடத்தும் சிற்றிதழ் கண்காட்சி இங்குண்டு. ஆக … நாங்கள் எல்லோரும், எல்லாக் கவிஞர்களும் பெரும்பாலும் சிற்றிதழ்களில்தாம் எழுதுகிறோம், ஐந்தாறு அல்லது எட்டு பத்து கவிதைகள் மட்டுமே பெரிய இதழ்களில் ஆண்டுதோறும் வெளியாகும். ஆக பெரிய இதழ்கள் என்று பார்த்தால் வெகு சில இதழ்கள்தாம் உண்டு. ஒரு வகையில் தேஷ் ஏகபோகமாகச் செயல்படுகிறது. பெரிய இதழ்களுக்கும் அவர்களுக்கேயான அரசியல் உண்டு. [படைப்புகளை வெளியிட] உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம். ஆக, நான் சொல்ல வருவது என்னவென்றால், கவிதை சிற்றிதழ்கள் மூலம் வாழ்கிறது

மேதையுடன் ஒரு நேர்காணல்

This entry is part 3 of 13 in the series வங்கம்

மானுடத்திற்கு நன்மை பயப்பதே அதன் முதல் நோக்கமாக இருந்தாக வேண்டும். ஒருவேளை நீங்கள் மானுட அபிமானம் கொண்ட படைப்பை உருவாக்காவிடில் அது நிச்சயம் கலைப்படைப்பு ஆகாது. கலை முதலில் சத்தியத்திற்கும் அடுத்ததாக அழகிற்கும் விசுவாசமுடையதாக இருக்க வேண்டும் என்று ரவீந்திரநாத் சொல்கிறார். இந்த சத்தியமானது கலைஞனின் சொந்த பார்வையிலிருந்தும் த்யானத்திலிருந்தும் விளைந்ததாக இருக்கிறது.

பேராசிரியர் சு. பசுபதி – பேட்டி

1. உங்களைப் பற்றி அறிமுகக் குறிப்பு தர முடியுமா? என் அப்பாவுக்குச் சொந்த ஊர் கரூருக்கு அருகில் உள்ள வாங்கல் கிராமம்.  என் அம்மா பிறந்தது வெங்கரையில். நான் பிறந்து, வளர்ந்தது சென்னையில். பள்ளிப் படிப்பு தி.நகரில்  உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி (வடகிளை)யில். பிறகு கல்வி லயோலா “பேராசிரியர் சு. பசுபதி – பேட்டி”

“கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்”

ரா கிரிதரன் பேட்டி ரா. கிரிதரனின் அம்மா ஊர் திண்டிவனம். அப்பாவுக்கு புதுச்சேரி. புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பட்டப்படிப்பு. அதன்பின் தகவல் தொழில்நுட்பத்தில் எம்.டெக். படிப்பு. சென்னை, பெங்களூர், பூனா போன்ற நகரங்களில் வேலை செய்தபின் 2006 ஆண்டு முதல் இங்கிலாந்து வாசம். ““கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்””

எண்மக் காலத்தில் பெண்ணிய ஆவணப்படுத்தலும் நெறிமுறைகளும்

புகைப்படங்கள், வாய்வழி வரலாறு, நேர்காணல்கள், கதைகள், மேடைப் பேச்சுகள், டயரிக் குறிப்புகள், கடிதங்கள் இப்படிப்பட்டவைகளால் சித்திரிக்கப்பட்ட சமூகச் சரித்திரம். இவற்றைச் சேகரிக்கும்போது நான் பெண்களிடம் செய்த நேர்காணல்களை ஒலிப்பேழையில் பதிவு செய்தேன். என் நெருங்கிய தோழி ஒருத்தி, டாக்டர் ஜெரால்டின் ஃபோர்ப்ஸ் என்றிருக்கிறார். அவரும் அமெரிக்காவிலிருந்து இந்தியப் பெண்களைக் குறித்து இத்தகைய ஆராய்ச்சி செய்து வருகிறார். அவரை நான் 1972 வாக்கில் சந்தித்தேன். இந்தத் தரவுகளை எப்படி ஒழுங்குபடுத்துவது, எங்கே வைப்பது என்பது பற்றிப் பேச ஆரம்பித்தோம்.

“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”

மிகச் சிறிய இடத்தில் எழுத்தாளர் திலீப் குமாரும் ராமகிருஷ்ணனும் சிகரெட் புகைசூழ வேலை செய்துகொண்டிருப்பார்கள், நானும் என் மாமாவும் அடுத்த அறையில் புத்தகங்களை மேய்ந்து கொண்டிருப்போம். க்ரியா ஒரு கண் திறப்பு அனுபவமாய் இருந்தது. அங்குதான் நான் சுந்தர ராமசாமியின் புத்தகங்களையும் ஸ்ரீராமின் மொழியாக்கங்களையும் அறிந்துகொண்டேன். தார்கோவ்ஸ்கியின் Sculpting in Time என்ற புத்தகத்தின் தமிழாக்கமும் அங்கேதான் கிடைத்தது.

இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல்

This entry is part 7 of 22 in the series இசைவாணர்

பிறந்து வளர்ந்ததெல்லாம் திருவாரூரில். திருவாரூர் இசையும், குறிப்பாக லயமும் என்னைச் சுற்றி எப்போதும் முயங்கிய அற்புதமான ஊர். கண் விழித்ததிலிருந்து உறங்கச் செல்வது வரை வெவ்வேறு வகையான தாளங்கள் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். தியாகராஜர் உற்சவ மூர்த்தியாய் வலம் வரும் போது ஆடப்படும் அஜபா நடத்திற்கொரு லயம்; சிவன் மயானம் நோக்கி செல்கையில் ‘மசான பத்திரம்’ என்று வேறொரு லயம்; ஊர்வலங்களில் வாசிக்கப்படும் வெவ்வேறு வகையான மேள வாசிப்புகள், இறப்பின் போது கேட்கும் பறை, காளி கோயிலில் கேட்கும் உடுக்கை என வெவ்வேறு தாளங்கள் என்னைச் சுற்றிக் கேட்டுக்கொண்டே இருக்கும்.

“நிரந்தரம் எழுதிக்கொண்டே இருக்கிறேன்!” – முக்தேவி பாரதியுடன் ஒரு நேர்காணல்

நேர்காணல் – ராஜி ரகுநாதன் எழுத்தாளர் முக்தேவி பாரதியைப் பற்றிய அறிமுகம் கேள்வி: அம்மா! உங்கள் சிறுவயது வாழ்க்கை, உங்கள் ஊர், பள்ளிப் படிப்பு பற்றி கூறுங்களேன்: பதில்: நான் பிறந்தது 1940ல் கிருஷ்ணா ஜில்லாவில் ‘பெடனா’ என்ற கிராமம். அங்கு என் தாத்தா சப் ரிஜிஸ்ட்ரார் ஆக ““நிரந்தரம் எழுதிக்கொண்டே இருக்கிறேன்!” – முக்தேவி பாரதியுடன் ஒரு நேர்காணல்”

விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்

This entry is part 3 of 4 in the series ஹெரால்ட் ப்ளூம்

போய்க் கொண்டே இருப்பதற்காகவே எழுதிக்கொண்டு இருக்கிறோம், பித்து பிடித்தலைவதைத் தவிர்ப்பதற்காக. அடுத்த விமர்சனக் கட்டுரையை எழுத முடிவதற்காகவே ஒருவர் அதற்கு முந்தைய கட்டுரையை எழுதி முடிக்கிறார், அல்லது அடுத்த ஒன்றிரண்டு நாட்களை வாழ்ந்து முடிப்பதற்காக. ஒருகால் தீங்கு விலக்கும் செய்கையாகவோ அல்லது மரணத்தை ஒத்திப் போடுவதற்காகவோ கூட இருக்கலாம். நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் இதைத்தான் கவிஞர்கள் செய்கிறார்கள் போலிருக்கிறது. தங்கள் மரணங்களை ஒத்திப் போடுவதற்காகவே கவிதை எழுதுகிறார்கள்.

விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்

This entry is part 2 of 4 in the series ஹெரால்ட் ப்ளூம்

இலக்கியத் துறை எனும் போர்வையில் “அரசியல் பொருத்தப்பாட்டையே” முன்மொழிந்து கொண்டிருப்பவை எல்லாம் காலாவதியாகி புறந்தள்ளப்படும் என்றே தோன்றுகிறது. இவையெல்லாமே சிற்றலைகள்தான். மிஞ்சிப் போனால் ஐந்து வருடங்களுக்குத் தாக்குப் பிடிக்கும். இலக்கியத் துறையில் காலடி வைத்த நாளிலிருந்து பல நவீனப் பகட்டுகள் தோன்றி மறைவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நாற்பது வருடங்களுக்குப் பிறகு தற்காலிகமான மேம்போக்குச் சிற்றலையை ஆழ்ந்த நீரோட்டத்திடமிருந்தும், அசலான மாற்றத்திடமிருந்தும் இனம் பிரிக்க முடிகிறது.

விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்

This entry is part 1 of 4 in the series ஹெரால்ட் ப்ளூம்

ஐந்தாறு வயது குழந்தைக்கு உரித்தான வகையில், ஹார்வர்டிலோ யேலிலோ கவிதை பேராசிரியராகப் போகிறேன் என்று பதிலளித்தேன். இதில் என்ன வேடிக்கை என்றால் மூன்று வருடங்களுக்கு முன் ஒரே சமயத்தில் ஹார்வர்டில் சார்ல்ஸ் எலியட் நார்ட்டன் கவிதை பேராசிரியராகவும் யேலில் மனித கலைகளுக்கான ஸ்டெர்லிங் பேராசிரியராகவும் பணியாற்றினேன் என்பதுதான். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் என் துறை பெருமளவில் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்திருக்கிறது.

‘உடலே இல்லாத ஒரு வெளியில் மிதந்து கொண்டிருந்தோம்’ – பேட்டி

ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் , ஒவ்வொரு காலத்தில் வேறுவேறு வகையில் உணரும் ஒன்றை, ஓர் இலக்கணத்திற்கு , விளக்கத்திற்கு உட்படுத்தி கட்டிபோடுகிறது. இது எனக்கு உடன்பாடில்லை. எல்லைகள் என்றும் என்னிடம் எதிர்ப்புணர்வையே உண்டாக்குகின்றன. ஆனால் பெண்ணாக வாழ்வதால், பெண் என்ற நிலையிலிருந்து எழுதுவதால் ஒருவித மொழி பிறக்கலாம். சில உதாரணங்களை சொல்கிறேன். என் ஆராய்ச்சிக்காக நான் பல பெண்களின் கதைகளை படிக்க நேர்ந்தது. ஆண்களுடையதையும் படிக்க நேர்ந்தது. சில விஷயங்கள் என்னை சிந்திக்க வைத்தன.நிறம், வடிவம் போன்ற விஷயங்கள். ஆண்களை விவரிக்கும் போது அவர்களுக்கான உபமானங்கள் தேக்கு மரம், உலக்கை, பாறாங்கல் போன்றவை இருந்தன. ஆண்கள் எழுத்தில் அதேசமயம் பெண்கள், கொடிகள், மிரளும் மான், பூக்கள் பழங்கள் என்று சித்தரிக்கப்பட்டனர். வேர்கள் ஆழப் புதைந்தும் கனத்துடன் கூடியம் உள்ள பொருட்கள் ஆண்களை குறித்தன .எடை இல்லாமல் மற்றவற்றை சார்ந்து, மற்றவர்களுக்கு களிப்பும் சுகத்தையும் தரும் பொருட்கள் பெண்களுக்கு உவமை ஆகின. நிறத்தை பொறுத்தவரை சிவந்த அல்லது சந்தன நிறம் உடைய பெண் தான் அழகு என்று சொல்லப்பட்டாள் . “அவள் கறுப்பு ஆனாலும் அழகு” என்ற விவரணை

ஆலமரத்தின் கீழ் ஒரு குடியிருப்பு

ராஜஸ்தானத்தில் பெண்களின் மேம்பாட்டுக்காக வேலை செய்ததால் உயர்சாதியினரால் மானபங்கப் படுத்தப்பட்டு, நீதிக்காகப் போராடி பின்னர் நீரஜா பனேட் விருது பெற்ற பவ்வரி தேவியை எல்லோருக்கும் தெரியும். ஆனால் ராஜஸ்தானத்தில் பல பவ்வரிகள். பவ்வர் என்று ஆண் குழந்தைகளையும், பவ்வரி என்று பெண்குழந்தைகளையும் கூப்பிடுவது வெகு சகஜம். செல்லமாக, கிராமப்புறங்களில் இந்தச் செல்லப் பெயரே பெயராக நிலைத்து விடுவதும் உண்டு. பவ்வரிகளின் வாழ்க்கை, போராட்டங்களுடன் இணைந்த வாழ்க்கையாக இருப்பதும் வியப்புக்குரியது இல்லை. காரணம், தாழ்ந்த சாதியினர் என்று அடையாளமிடப் பட்டவர்களிடையேதான் பவ்வரிகள் நிறைய உண்டு. அப்படிப்பட்ட ஒரு பவ்வரிதான் பவ்வரி பாயிபட்

ரோபாட்களுக்கு விருப்பு வருமா?- ஜூடேயா பேர்ல்:நேர்காணல்

பேர்ல்: ரோபோட்டுகள் நிகழ்வுச் சான்றுகளுக்கு மாறாக, “நீ இன்னும் நன்றாகச் செய்திருக்க வேண்டும்,” என்பதுபோல், ஒன்றுடனொன்று தகவல் பரிமாறிக் கொண்டால், அப்போது அது முதல் தடயமாக இருக்கும். கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கும் ரோபோட் அணி ஒன்று இந்த மொழியில் பேசிக் கொள்ளத் துவங்கினால் அப்போது அவற்றுக்கு சுய இச்சை உணர்வு இருக்கிறது என்பது நமக்குத் தெரிய வரும். “ நீ பந்தை எனக்கு பாஸ் செய்திருக்க வேண்டும்- உனக்காகக் காத்திருந்தேன், ஆனால் நீ பாஸ் செய்யவில்லை!”. “நீ செய்திருக்க வேண்டும்,” என்று சொன்னால், நீ என்ன செய்தாயோ, உன்னை அப்படிச் செய்யச் செய்த உந்துதல் எதுவாக இருந்தாலும் அதை நீ கட்டுப்படுத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று பொருள். ஆனால் நீ கட்டுப்படுத்தத் தவறிவிட்டாய் என்று சொல்வது, எனவே முதல் அறிகுறி உரையாடலாய் இருக்கும்; அடுத்தது, இன்னும் நல்ல கால்பந்தாட்டம்.

பரத நாட்டியம் – இன்றைய சில பிரச்னைகள் ஒரு பேட்டி (1973)

இது 1973 இல் எப்போதோ நடந்த பேட்டி. தற்செயலாக ஓர் நாள் அம்பையின் நாட்டிய நிகழ்ச்சி ஒன்று நிகழவிருக்கிறது ஓரிரு நாளில் என்ற செய்தி மூன்றாமவர் ஒருவரிடம் கேட்டபோது ஆச்சரியமாயிருந்தது எனக்கு. பின் நான் அது பற்றிக் கேட்டபோது தான் அம்பை திரிவேணி கலா சங்கத்தில் நாட்டியம் பயின்று வருவது தெரிந்தது. அப்படியானால் நல்லதாயிற்று. பல வருஷங்களாய் என் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்விகள் பிரச்சினைகள் பல உண்டு. அவை முடங்கிக் கிடக்கின்றன; அவற்றை எழுதித் தருகிறேன், சாவகாசமாக யோசித்துப் பதில் சொல்லுங்கள் என்றேன். அப்படித்தான் பின்வரும் பேட்டியில் உள்ள ஒரு பாதி கேள்விகள் முதலிலும் பின்னர் கிடைத்த பதில்களை வைத்து மேற்கொண்டு மறுபாதிக் கேள்விகளும் எழுதித் தரப்பட்டன. அம்பை தந்த பதில்கள் எல்லாம் இங்கே. இன்றானால் சில கேள்விகளைக் கேட்டிருக்க மாட்டேன். பல இன்னும் நிறைய கேட்டிருப்பேன்.

கரிக்கும் பாதையின் இனிக்கும் ஆரஞ்சுகள்

தடைகளுக்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள், கடினமான சூழலில் தீர்வுகளைக் கண்டெடுக்கும் கட்டாயத்தால்தான் பாலெஸ்டீனிய சினிமா இவ்வளவு நன்றாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அனைத்துமே கடினமாக இருப்பதால் என்ன செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. இக்கடினங்களை விரும்பித் தேர்ந்தெடுக்கவில்லை, ஏனெனில் இரண்டே வாரங்களில் ஐம்பது வயதாகியது போல் களைத்து விடுகிறது. இது இரானியச் சினிமா போலதான், சற்று வித்தியாசமான விதத்தில். அங்கே சென்சார் தடைகளை மீற மாற்றுவழிகள் தேவைப்படுகின்றன. அவ்வழிகளைப் பயன்படுத்த அவர்கள் இன்னமும் நுண்மையாக கற்பனை செய்ய வேண்டியிருக்கிறது. அதிகாரிகளை வெல்ல எப்போதுமே அவர்கள் ஜாக்கிரதையாகவும் சாமர்த்தியமாகவும் இருக்க வேண்டியிருக்கிறது. பாலெஸ்டீனிலும் இது மாதிரியான ஒரு…

எழுத்தாளர் எப்படி உருவாகிறார்?

பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் உலகெங்கும் பிரபல்யம் பெற்றிருந்தனர். ஆனால் யூரோப்பில் பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் தெரிய வந்த அளவுக்கு, யூரோப்பிய எழுத்தாளர்கள் பிரிட்டனில் தெரிய வந்ததில்லை என்று சொல்லப்படுகிறது. யூரோப்பிற்கும் பிரிட்டனுக்கும் இடையில் ஒரு குளிர்ப்போர் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. தீவுகளுக்கே ஓரளவு தனிப்படக் கிடக்கும் “எழுத்தாளர் எப்படி உருவாகிறார்?”

அ. முத்துலிங்கம் நேர்காணல்

ஆங்கிலேயர்களில் ஒரு வழக்கம் உண்டு. வைன் குடிப்பதற்கு ஒருவித கிளாஸ். சாம்பெய்னுக்கு வேறு ஒரு கிளாஸ். பியர் என்றால் கைப்பிடி வைத்த பெரிய கிளாஸ். விஸ்கிக்கோ, பிராந்திக்கோ வேறொன்று. எந்தப் பாத்திரத்தில் குடித்தாலும் சுவை ஒன்றுதானே. ஆனாலும் எப்படி பருகுவது என்பதற்கு ஒரு முறை உண்டு. கதை மனதில் உருவாகியவுடன் ஒரு சிக்கல் வரும். யார் கோணத்தில் சொல்வது? ஒருமையிலா, பன்மையிலா? தன்மையிலா படர்க்கையிலா. இவற்றை தீர்மானித்தபின்தான் வடிவத்தைப் பற்றி சிந்திக்க முடியும், ஒரு சிறுகதை மனதில் தோன்றிய பின் அதை எப்படியும் சொல்லலாம். ஆனால் சரியான வடிவத்தில் அது வெளிப்படும்போது உயர்வு பெறுகிறது. படைக்கும் பொருளே வடிவத்தையும் தீர்மானிக்கிறது

என்னுடன் ஒரு நேர்முகம் – சால் பெல்லோ

நாவல் இருக்க வேண்டிய இடத்தில், அதற்குப் பதிலாக “படித்தவர்கள்” அதைப் பற்றி என்ன கூறமுடியும் என்பதே முன்னிலையில் இருக்கிறது. நாவலைக் காட்டிலும் இதைப்போன்ற “படித்த” சொல்லாடல்களே சில பேராசிரியர்களுக்கு உவப்பாக இருக்கிறது. தேவாலயப் பிதாமகர்களில் ஒருவர் வேதாகமத்தை எதிர்கொண்ட மனோபாவத்துடன் இவர்கள் புனைவை எதிர்கொள்கிறார்கள். ஆதாமும் ஏவாளும் புதரடியில் ஒளிந்து கொண்டிருக்கையில் கடவுள் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்ததை நாம் உண்மையிலேயே கற்பனை செய்ய வேண்டுமா என்று அலெக்சாண்டிரியாவின் ஒரீஜென் (Origen) கேட்டார்.

சுயதிருப்தியில் சிக்காமல் விலகி எழுதுதல்

இந்தப் புத்தகத்தில் தவிர்க்கமுடியாதபடி ஒரு கருவாக இருப்பது பெண்கள் மீது வெறுப்பு. இது ஆண் எழுத்தாளர்களிடம் உள்ளதும், பெண்களை கற்பனையைத் தூண்டும் சக்திகளாகவோ, அல்லது வேசைகளாகவோ, மனைவிகளாகவோ, வேலைக்காரிகளாகவோ வருணித்து அவர்கள் வாழ்வுகளைக் கட்டுப்படுத்தி வைக்கிறதுமான பெண் வெறுப்பு. இந்தப் பெண் வெறுப்பைத் தாமும் உள்வாங்கிக் கொண்டுள்ளதாலேயே தமது காலத்துக்கும் இடத்துக்கும் எதிராக முரண்டிக் கொண்டிருக்கிற பெண் எழுத்தாளர்கள் . இந்த இரண்டு போக்குகளுக்கும் இடையில் உள்ளே உங்களைப் பொருத்திக் கொள்வதால் நீங்கள் ஏதோ தனிச்சிறப்பான ஒன்றைச் செய்கிறீர்கள்- பெண் வெறுப்பு என்பது இதயத்தை நொறுக்குவது, இல்லையா…

கண்ணப்ப தம்பிரானுடன் நேர்காணல்

தெருக்கூத்துங்கற கலை எப்போதிருந்து ஆரம்பம் என்கிற விஷயங்களைக் கேட்கிறீங்க. எங்க பாட்டனார் வீராசாமி தம்பிரான், அவருக்கு … வீராசாமி தம்பிரானுக்கு மாந்திரீகங்கள் தெரியும், மாந்திரீகத்திலே, எங்க ஊர் ஏரியை, யார் ஜலத்தின் பேர்ல நடந்து வருவாங்கன்னு போட்டியிட்டாங்க. அதிலே எங்க பாட்டா, ஜலத்தின் மேலே போய்ச் சேர்ந்துட்டாங்க. அப்போ அனத காலத்து ஆட்சியிலே என்ன பரிசு வேணும்னு கேட்டாங்க., எனக்கு 60 கிராம மிராசு வேணும்னு கேட்டார். அதிலே 60 கிராமம் அவருக்கு விட்டாங்க. மிராசு வருஷந்தோறும் வீட்டுக்கு வந்து சேர்ந்துடும். அவரு தோல் பொம்மை விளையாட்டும் செய்தார். கிராமங்கள்லே ஏதானும் விசேஷம் நடந்தா, அவர் போய் விளையாட்டு காமிப்பாரு. இதுக்கு வந்து மக்கள் எல்லாம் சாதம் கட்டிகிட்டு வெளியூர் கிராமத்திலேயிருந்து வந்து பார்ப்பாங்க. அப்படி இருக்கும்போது குழந்தைகள் நாலு பேரும் தலையெடுக்கவும் ‘கம்ஸ ஸம்ஹாரம்’கிற ஒரு கூத்து, அதை பாகவத கீர்த்தனைகளாலே ஏற்படுத்தி நடத்தினாரு. அதை நடத்தி வந்தாரு. அப்புறம் பிள்ளைங்கள்ளாம் வயசுக்கு வந்த உடனே …

மொழியாக்கங்கள் குறித்த ஓர் உரையாடல் – பகுதி1

மொழிபெயர்ப்புகள், ஒரு பண்பாட்டில் உள்ளதை வேறொரு பண்பாட்டுக்குக் கொண்டு செல்கின்றன. அடிப்படை மனித உணர்வுகள் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால் புறச்சூழல்கள் மற்றும் வரலாறு சார்ந்த பல்வேறு காரணங்களால் வெவ்வேறு மக்களிடையே பல்வகைப்பட்ட பண்பாட்டு வேற்றுமைகளைப் பார்க்க முடிகிறது, அடிப்படை மானுட உணர்வுகளே வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன. ஒரு பண்பாட்டின் செறிவு என்பது நுண்விவரங்களில்தான் இருக்கிறது. ஆனால், மனித மனம் எதையும் எளிமைப்படுத்தியே புரிந்து கொள்கிறது, பிற பண்பாடுகளைப் புரிந்து கொள்ள அது உதவாது.

பரதக் கலைஞர் சங்கர் கந்தசாமியுடன் ஒரு மாலை உரையாடல்

மலேசியாவைச் சேர்ந்த சங்கர் கந்தசாமி ஒரு சுவாரஸ்யமான பரதக் கலைஞர். இந்த 47 வயதில் நாட்டிய அரங்கில் உயிரோட்டமும் துடிப்பும் சக்தியும் ததும்பும் அவரது பிரசன்னம் பிரமிப்பூட்டும் ஒன்று. ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அவர் ஒருவரே தனியாக ஆடும் நிகழ்ச்சிகளில் கூட சலிப்பு ஏற்படாமல் புதுமைகளை வழங்கிக் கொண்டே இருக்கும் அவரது கலைத்திறனும் சிருஷ்டிகரமும் ஆச்சரியப் படுத்துபவை. தனித்துவமிக்க நர்த்தகராகவும், நாட்டிய ஆசிரியராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருபவர் : “அந்த அழகியலின் அடிப்படை ஆண் அல்லது பெண் கலைஞரின் தன்னுணர்வு தான், instinctive feeling. சிவனுடைய தாண்டவமோ, அல்லது விஷ்ணுவின் காம்பீர்யமோ அல்லது கால்களை வீசி குதித்து ஆடுதலோ ஆண்மை ததும்பும் விஷயங்கள். அவை ஒரு நர்த்தகரின் உடலம் (frame) மீது இயல்பாகக் குடி கொள்கின்றன. அவற்றை பெண் கலைஞர்களும் செய்யலாம் தான். ஆனால் செய்தால் அந்த அளவுக்கு இசைவதில்லை. பரதத்தில் “வேஷம்” என்பது இதை சமன் செய்வதற்காகத் தான் இருக்கிறது.”

எம்.கோபாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்

என்னைப் பொறுத்தவரையில் எல்லா மட்டங்களிலுமே தொழிற்சங்கங்கள் வலுவிழந்துவிட்டன என்றுதான் தோன்றுகிறது. திருப்பூரும் அதில் விதிவிலக்கல்ல. ஆனால் திருப்பூரில் பனியன் தொழிலாளிகளுக்கான அடிப்படை உரிமைகளை அமைத்துக் கொடுத்ததில் தொழிற்சங்கங்களுக்கு பெரும் பங்கு உண்டு. தொழிலாளர்களுக்கு இன்று சாத்தியமாகும் ஒவ்வொரு விஷயத்திலும் சங்கங்களின் பங்களிப்பு என்பது முக்கியமான ஒன்று. இன்றும் பின்தங்கியவர்களுக்கு உதவும் வகையில் நடக்கிறதா என்ற கேள்விக்கு அவசியமே இல்லை. மணல்கடிகை நாவலில் இதைப் பற்றிய எனது பார்வை தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது.

சிறகு விரித்து எழுந்த பறவை – அம்பையுடன் உரையாடல்

ஆனந்தவிகடன் கதைகள் உறவுகளில் உள்ள ஏய்ப்புகள் பற்றியும், உடலை மையப் படுத்திய உறவுகளில் உள்ள ஏமாற்றங்கள், சோகங்கள் பற்றியுமான கதைகள். வாழ்க்கையைப் பற்றி மெத்தவும் அறிந்த ஒரு பெண் எழுதுவது போன்ற கதைகள். ஆனால் இளம் வயதில் வாழ்க்கையை முற்றிலும் உணர்ந்து விட்டதுபோல் நினைப்பதும் ஒரு வித முதிர்ச்சியற்ற குழந்தைத்தனம்தான்.
இந்தக் கதைகள் பிரபலமான பத்திரிகைகளின் நடையை ஒட்டியே இருந்தன. கருத்துகள் சிறிதே மாறுபட்டிருக்கலாம். ஆனால் நான் வளரும்போது இருந்த இலக்கியத்திலும் சினிமாவிலும் படித்த, நாகரீகமான பெண், படித்த ஆனால் பழமை விரும்பியான, பண்பாட்டைக் காப்பாற்றும் பெண்ணுக்கு எதிர்மறையாகவே பார்க்கப்பட்டாள். அந்த வகையில் என் கதையின் பெண்கள் தங்கள் மனத்தில் உள்ளதை வெளிப்படையாகப் பேசுபவர்களாகவும், குரல் இழக்காதவர்களாகவும் இருந்தாலும் அவர்களுக்குள் பெண்களை ஒடுக்கும் பல விஷயங்களுக்கான ஆதரவு இருந்தது.

லெ குவின்: புனைவின் கலை (3)

அதை எழுதியபோது நான் கால்வினோ, போர்ஹெஸ் போன்ற எழுத்தாளர்களை நினைத்துத்தான் அப்படி எழுதி இருப்பேன். ஆனால் வகைமைப் பட்ட இலக்கியம் எழுதியவர்கள், நடை என்று ஏதும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத, மிகவுமே தட்டையான, செய்தியாளர்களின் எழுத்தைப் போன்ற உரைநடையைத்தான் வேண்டுமென்றே பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அன்று கதை எழுதிய ஆண்களின் குணங்களைப் பொறுத்து அப்படி அமைந்தது என்று நான் ஊகிக்கிறேன். மேலும், ஹெமிங்வேயைப் போன்ற, முழுக்க முழுக்க ஆணடையாளமுள்ள ஒரு எழுத்தாளரின் ஆடம்பரமாகவே மிகத் தெளிவான, தட்டையான நடையை அவர்கள் பெரிதும் விரும்பியிருக்கலாம் என்றும் நினைக்கிறேன்.

அர்சுலா லெ குவின்: புனைவின் கலை (2)

அது அனேகமாக த டிஸ்பொஸஸ்டு புத்தகத்தைப் பொறுத்து உண்மையாக இருக்கலாம். அது ஒரு சிறுகதையாகத்தான் துவங்கியது என்றாலும், எனக்கு ஒரு இயற்பியலாளரின் பாத்திரம் மனதிலிருந்தது, அவர் எங்கோ ஒரு சிறைப்பாசறையில் இருப்பதாக என் எண்ணம். அந்தக் கதை எங்கும் போய்ச் சேரவில்லை, ஆனால் எனக்கு அந்தப் பாத்திரத்தை நன்கு தெரிந்திருந்தது. என்னிடம் ஒரு காங்க்ரீட் பாறை இருந்தது, அதனுள் எங்கோ ஒரு வைரம் பொதிந்திருந்தது, ஆனால் இந்த காங்க்ரீட் பாறைக்குள் துளைத்துப் போக- அதற்குப் பல வருடங்கள் ஆயிற்று. என்னவோ காரணங்களால், நான் அமைதி வழி போதிக்கும் பிரசுரங்களைப் படிக்கத் துவங்கினேன், போரை எதிர்க்கும் கிளர்ச்சிகளிலும் பங்கெடுத்தேன். (அணு) குண்டைத் தடை செய் இத்தியாதி. நீண்ட காலமாகவே நான் ஏதோ விதங்களில் அமைதிமார்க்க இயக்கத்தினராக இருந்திருக்கிறேன். ஆனால் எனக்கு என் தேர்வு மார்க்கம் பற்றி அதிகம் தெரியவில்லை என்று உணர்ந்தேன். சொல்லப் போனால், காந்தியைக் கூட நான் படித்திருக்கவில்லை.

பேட்டிகள் – சில குறிப்புகள்

நாம் ஒரு எழுத்தாளரைச் சந்திக்கும்போது என்ன எதிர்பார்க்கிறோம்? ஏன் அத்தனை நேரம் அதற்குச் செலவழிக்கத் தயாராக இருக்கிறோம்? புனைவுலகில் அப்படி என்னதான் பெரும் சூட்சுமம் இருக்கிறது, புனைவு எப்படி உதிக்கிறது, அதை ஒருவர் எப்படிக் கட்டமைக்கிறார், ஏன், அவருடைய அனுபவம்தான் என்ன அப்படி ஒரு வாழ்வு வாழ்வதில், அவர் எப்போது திறன் இருக்கிறது என்பதை அறிகிறார், வாசகர்களின் ஆர்வம் என்பது அவர் வாழ்வில் என்ன பங்காற்றியுள்ளது என்பன போன்றவற்றைத் தெரிந்து கொண்டு நமக்கு என்ன கிட்டப் போகிறது?

அர்சுலா லெ குவின் – புனைவின் கலை

நான் யோசிப்பது என்னவென்றால், அதை ஒரு மத வழிப் பார்வை என்று சொல்ல முடியாது, ஏனெனில் மதம் என்ற சொல்லே பிரச்சினையானது- நான் டாவோயியத்திலும், பௌத்தத்திலும் மிக ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருக்கிறேன், அவையும் எனக்கு நிறைய அளித்திருக்கின்றன. இப்போது, டாவோயியம் என்பது என் புத்தியின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டது. அப்புறம் பௌத்தம் என்பது குறித்து என் ஈடுபாடு தீவிரமாக உள்ளது. அதை மத வழி புத்தி என்று நாம் அழைக்கவில்லை என்றால், ஆன்மீகம் என்று அழைக்க வேண்டி வரும். அதுவோ மிகவும் இரண்டுங்கெட்டதாக, பட்டும் படாமலும் இருப்பது போலத் தெரியும். மதம் என்பது சில பெரும் பிரச்சினைகளைக் கையாளப் பார்க்கிறது, அதில் எனக்கு மிகவே ஈடுபாடு இருக்கிறது.

லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் நேர்காணல்

ஒரு புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு மொழியாக்கம் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. மூல ஆசிரியரின் சொற்சித்திரங்கள் எனக்குப் பழக வேண்டியது மிக அவசியம். எல்லாவிதமான படைப்புகளையும் ஆங்கிலத்து மொழிமாற்றம் செய்கிறேன் என்றாலும், மெளனியின் படைப்பு அமைதிக்கும், அம்பையின் படைப்பு ஆழத்துக்கும் வித்தியாசம் இருக்குதானே? ஆங்கிலத்தில் படிக்கும்போது இந்த வித்தியாசத்தை வாசகரிடம் கடத்த வேண்டியது அவசியம்.

கல்யாணராமனுடன் ஒரு காஃபி

அம்பையின் ஓரிரு சிறுகதைகளையும் இந்த காலகட்டத்தில் மொழிபெயர்த்தேன். சுந்தர ராமசாமியின் ‘எங்கள் டீச்சர்’ கதையையும் ஒரு போட்டிக்காக மொழிபெயர்த்தேன். ஆறுதல் பரிசுதான் கிடைத்தது.

இந்த கட்டத்தில் பல விஷயங்கள் எனக்குத் தெளிவாகியது. மொழிபெயர்ப்பு, படைப்பெழுத்துக்கு ஈடான நிறைவைக் கொடுக்ககூடியது.மொழிபெயர்ப்பு தரமானதாயிருந்தால் தேர்ந்த வாசகர்கள் அதை நாடி வருவர். ஒரு சிறந்த படைப்பின் வாசகத் தளத்தை மொழிபெயர்ப்பின் மூலம் விரிவாக்குவது முக்கியமான சமூகப் பங்களிப்பு.எதற்கும் மேலாக மொழிபெயர்ப்பு எனக்கு ஊக்கமும் உவகையும் தரும் செயல்பாடாக இருந்தது.நான் அதைத் தொடர்ந்து செய்துவருவதற்கு இவையே இன்றும் உந்துதலாக விளங்குகின்றன.

நேர்காணல் – சங்கீதா ஸ்ரீராமுடன்

அங்கு பெரும்பாலும் மரம் நடச் சொல்வது, பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மட்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரித்தல், பெருநகரத்து நீர்வழிகளைச் சுத்திகரிக்கக் கோரிப் போராடுவது போன்ற மத்தியவர்க்கச் செய்ல்பாட்டாளரிய நடவடிக்கைகளில்தான் ஈடுபட்டு வந்தேன். ஆனால் அது ஒரு நல்ல அனுபவம். நிறைய நட்புகள் கிடைத்தன. இங்குத் தான் சூழலியல் சார்ந்த பாலபாடங்களைக் கற்றேன்.

எழுத்துக்காரர் வண்ணநிலவனுடன் சில நிமிடங்கள் . . .

இலக்கியவாதிக்கு விசேஷத்தன்மை ஒண்ணும் கெடையாது. அவங்க செஞ்ச சாதனைகளால அப்படி தோணுது. கான்ட்ரிப்யூஷன் நெறைய இருக்கு. ஒருத்தரின் கான்ட்ரிப்யூஷன் நிறைய இருக்கும்போது அவனை பிரம்மாண்டமா பாக்கோம். அது ஒண்ணே ஒண்ணு இல்லாட்டி அவனை யாரும் யோசிக்கப் போறதில்ல. பத்தோட பதினொன்னுன்னு மறந்துருவாங்க. விசேஷம் ஒண்ணும் கெடையாது. இந்தத் தெறமை ஒண்ணும் கெடையாது.
இது ஒரு வேலை மாதிரிதான். டீக்கடைக்காரன் என்ன பண்ணுதான்? அவன் டீ போடுதான். நல்ல டீ போட்டுக் கொடுத்தா அந்தக் கடைக்குத் தேடிப் போறோம். அது மாதிரி நல்லா எளுதுனா, படிப்பீங்க, அவ்வளவுதான். நல்லா இல்லைன்னா நல்லா இல்லைன்னு சொல்லிட்டுப் போயிருவோம், அவ்வளவுதான்.