ஆனியெஸ் வர்தா

திரைப்படத் துறைக்கு வெளியிலிருந்து வந்து, ஒரு படத்தைக் கூட அதுவரையில் இயக்காமலே, தன் சொந்தப் பணத்தையும், நண்பர்களின் உதவியை மட்டும் மூலாதாரமாகக் கொண்டு, சராசரி பிரெஞ்சுப் படங்களின் பட்ஜெட்டின் பத்தில் ஒரு பங்கில், முக்கியமான ஒரு படத்தை எடுத்தார் என்பதுதான் Bazin போன்ற விமர்சகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது அவரது Cinecriture அழகியல் கோட்பாடுகளுடன், Cine-Tamaris என்ற அவரது தயாரிப்பு நிறுவனமும் புதுஅலைக்கு ஒரு புதிய பாதையைக் காட்டியது என்பதே வர்தாவின் சாதனை.

யாமினி – பகுதி 3

டாக்டர். சார்ல்ஸ் ஃபாப்ரி, ஹங்கரிய நாட்டவர். தில்லி கலை விமர்சகர்களில் மூத்தவர் எல்லோராலும், ஒரு மூத்தவருக்குரிய, ஆசானுக்குரிய மரியாதையுடன், பெரிதும் மதிக்கப்படுபவர், மேற்கத்திய கலை உணர்வுகளில் பிறந்து வாழ்ந்தவராதலால் அதிலேயே ஊறியவர், பரத நாட்டியத்தின் இலக்கணத்துக்கும் நடன வெளிப்பாட்டு நுட்பங்களுக்கும் தொடர்பற்றவர். அவ்வளவாக ஆழ்ந்த பரிச்சயம் இல்லாதவர். ஒரு வேளை அந்த பரிச்சயமற்று இருந்ததே கூட ஒரு நல்லதுக்குத் தானோ என்னவோ, ஒரு கலைஞரை எதிர்கொள்ளும்போது கலைஞராக இனம் காண்பது அவருக்கு எளிதாகிறது.

ஷார்தா உக்ரா – சந்திப்பு

நிஜத்தில் இத்துறையில் நிறைய பெண் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பலரும் அறிவதில்லை. தொலைக்காட்சியில் அதிகமாய் அவர்களைப் பார்க்கிறோம், ஆனால் அச்சுப்பத்திரிகைகளிலும் விளையாட்டுப் பகுதியில் ஒரு பெண் பத்திரிகையாளர் என்பது இன்று ஆச்சரியமே இல்லை. ஒவ்வொரு பெரிய ஆங்கிலப் பத்திரிகையின் விளையாட்டுப் பகுதியிலும் இன்று பெண்கள் இருக்கிறார்கள், சிலவற்றில் தலைமைப் பதவியிலும் இருக்கிறார்கள்.

சிறகு விரித்து எழுந்த பறவை – அம்பையுடன் உரையாடல்

ஆனந்தவிகடன் கதைகள் உறவுகளில் உள்ள ஏய்ப்புகள் பற்றியும், உடலை மையப் படுத்திய உறவுகளில் உள்ள ஏமாற்றங்கள், சோகங்கள் பற்றியுமான கதைகள். வாழ்க்கையைப் பற்றி மெத்தவும் அறிந்த ஒரு பெண் எழுதுவது போன்ற கதைகள். ஆனால் இளம் வயதில் வாழ்க்கையை முற்றிலும் உணர்ந்து விட்டதுபோல் நினைப்பதும் ஒரு வித முதிர்ச்சியற்ற குழந்தைத்தனம்தான்.
இந்தக் கதைகள் பிரபலமான பத்திரிகைகளின் நடையை ஒட்டியே இருந்தன. கருத்துகள் சிறிதே மாறுபட்டிருக்கலாம். ஆனால் நான் வளரும்போது இருந்த இலக்கியத்திலும் சினிமாவிலும் படித்த, நாகரீகமான பெண், படித்த ஆனால் பழமை விரும்பியான, பண்பாட்டைக் காப்பாற்றும் பெண்ணுக்கு எதிர்மறையாகவே பார்க்கப்பட்டாள். அந்த வகையில் என் கதையின் பெண்கள் தங்கள் மனத்தில் உள்ளதை வெளிப்படையாகப் பேசுபவர்களாகவும், குரல் இழக்காதவர்களாகவும் இருந்தாலும் அவர்களுக்குள் பெண்களை ஒடுக்கும் பல விஷயங்களுக்கான ஆதரவு இருந்தது.

மகரந்தம்

ஆப்கானிஸ்தானில் வசிக்கும் பெண்கள் என்றவுடன் இரண்டு சம்பவங்கள் நினைவிற்கு வருகிறது. போதைப் பொருள் வாங்க நகையை அடமானத்திற்கு தர மாட்டேன் என்று சொன்னதால் புருஷனால் மூக்கும் உதடுகளும் அறுபட்டவர் ஒருவர்; காவல்துறையில் பணியாற்றுவதால் சுட்டுக் கொல்லப்பட்ட நெகர் இன்னொருவர். அந்த மாதிரி சம்பவங்களே, கேட்டும் படித்தும் அலுத்த காலத்தில் கமாண்டர் புறாவை ஆபகானிஸ்தானுக்கே சென்று சந்தித்த ஜென் பெர்சி அறிமுகம் செய்கிறார். ருஷியாவிற்கு எதிராக 150க்கும் மேற்பட்ட போராளிகளை ஒன்றிணைத்து சண்டை போட்டவர். இப்பொழுதும் தாலிபானுக்கு எதிராக தன்னுடைய குறுநிலத்தை இரட்சிப்பவர். அறுபது வயதானாலும் மூட்டு வலி இருந்தாலும் ஏகே 47 பிடிப்பவர். எவ்வாறு உள்ளூர் மக்களுக்கு நாயகியாக வழிகாட்டுகிறார் என்பதன் நேரடி அனுபவத்தை பதிந்திருக்கிறார்.

பரிச்சயமற்ற மண் – ஜும்பா லஹிரி

ஜும்பாவின் எழுத்துக்கள் பொதுவாக குடியேறிகளின் இலக்கியம் என்று வகைப்படுத்தப்படுகிறது. ஆனால் அவர் இந்த வகைப்படுத்தலை ஏற்றுக்கொள்வதில்லை. “அப்படிப் பார்த்தால் அமெரிக்காவின் ஒவ்வொரு படைப்புமே குடியேறிகளின் இலக்கியம் தான்” என்கிறார். இவரது கதாபாத்திரங்கள் மரணம், உறவுச்சிக்கல்கள் போன்ற மானுடத்திற்கே பொதுவான பிரச்சனைகளைத் தான் எதிர்கொள்கின்றனர் என்றாலும்…

என்னுயிர் நீயல்லவோ!

கூரையைப் பிய்த்துக் கொண்டு போகும் அளவுக்கு ரசிகர்களிடமிருந்து உற்சாகக் குரல்கள் எழுகின்றன. பாடகியின் முகத்தில் மகிழ்ச்சி; ரசிகர்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் கம்பீரமான உருவம். மேடைத் தோற்றத்திற்கேற்ற நீண்ட அங்கி போன்ற உடை- கருப்புக் கண்ணாடி அணிந்தவர்; உயரமாக முடிந்த கொண்டை. காதில் தொங்கி ஊஞ்சலாடும் லோலாக்குகள். வலது கையில் ஒரு பெரிய பட்டுக் கைக்குட்டை. புன்சிரிப்பு தவழும் இன்முகம்.

ஸ்டெல்லா க்ராம்ரிஷ்: ஒரு கர்மவீரரின் கலைப் பயணம்

கால அனுமானங்களின் கச்சிதமின்மையைத் தாண்டிச் செல்லும் சீரிய உள்ளுணர்வும், சித்தாந்தங்களின் புரிதலுமே ஸ்டெல்லாவின் அக்காலத்து கலை-வரலாற்று நூல்களை இன்றளவும் இன்றியமையாதவையாக்குகின்றன. ப்ருஹத் சம்ஹிதை, மானசோல்லாசம், மயமதம் போன்ற பல்வேறு காலகட்டத்தின் வாஸ்து நூல்களையும் ஆராய்ந்து, சதபத-ப்ராஹ்மணம் போன்ற வைதீக ஏடுகளிலிருந்து கோயில் ஸ்தாபனத்தின் சடங்கு வழிமுறைகளையும் அடையாளப் படுத்தி அவர் தொகுத்த “இந்து கோயில்” நூல்களுக்கு ஆனந்த குமாரசுவாமி நேரடியான ஆய்வுரை…

பெண்ணியல் சிந்தனைச்சோதனைகள்

உலகம் முழுதும் எல்லா நாடுகளிலும் தேர்வுகள் நடத்தி, பின்லாந்து நாட்டில் இருந்து ஜான் என்ற ஒரு ஆணும், தாய்லாந்தில் இருந்து ஜாய் என்ற ஒரு பெண்ணும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் இருவரையும் தனித்தனியே ஒரு விண்கலத்தில் அமர்த்தி செவ்வாய் கிரகத்துக்கும், வீனஸ் கிரகத்துக்கும் அனுப்பி வைக்கிறோம். விண்கலங்களில் தேவையான பிராணவாயு, தண்ணீர், எக்கச்சக்கமாக சாப்பாடு, தங்களை தாங்களே குளோனிங் செய்துகொள்ள தேவையான இயந்திரங்கள்…

சிங்கப்பூர் அரசியலில் பெண்கள்

பல திறமையுள்ள பெண்கள் தங்கள் திறமையால் எந்த துறையிலும் பிரகாசிக்கலாம் என்று இருக்கும்போது கஷ்டங்கள் நிறைந்த அரசியலில் நுழைவானேன் என்று நினைக்கிறார்கள். தவிர பெரும்பாலோர் தங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தையும், தங்கள் தனி வாழ்க்கையையும் மிக மதிக்கிறார்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தங்கள் தனிமனித சுதந்திரத்தை இழக்க விரும்புவதில்லை. சிங்கப்பூரின் அரசியல் கலாசாரப்படி, மக்கள் ஆதரவினால் மட்டுமே அரசியல் தலைவர்கள் உருவாவதில்லை. ஒரு கட்சியினுள்ளே அழைக்கப்பட்டு ஆரம்பத்திலிருந்து பல பொறுப்புகளில் உழைத்து படிப்படியாகவே மேல் நிலைக்கு வந்து அரசியல்வாதியாக முடியும்.

குருவி

எல்லாம் கச்சிதமாய் நேர்த்தியாய் இருக்கவேண்டும் சதாசிவனுக்கு. வீடு பளபளவென்று மின்னவேண்டும், தேடினாலும் சின்ன தூசிக்கூட தென்படக்கூடாது. பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் இருந்தால் அவை அந்தந்த இடத்தில் இருக்கும் என்பது அவனுடைய சட்டம். தொலைப்பேசி இடதுகையால் எட்டும் இடத்திலேயே இருக்கவேண்டும். அதிலிருந்து ஓரடி இடம் விட்டு சின்ன அலமாரி. இடதுகோடி மூலையில் சின்னதாய் பேனாக்களுக்கான ஸ்டாண்டு. அது ஒரு இஞ்ச் கூட நகர்ந்திருக்கக்கூடாது. அப்புறம் திவான், சோபா. டீப்பாய், பேப்பர் எல்லாம் அளவு எடுத்து கோடுபோட்டு வைத்தது போல அதனதன் இடத்தில் இருக்கவேண்டும். ஞாயிற்றுக்கிழமை காலை…

கசாப்புக்காரர்

‘கறுப்புச் சூரியன்’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து வெளியான ஆஷாபூர்ணா தேவியின் கதைத்தொகுப்பின் விமரிசனத்தில் திரு வெங்கட் சாமிநாதன்: ஞானபீட விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் வங்க எழுத்தாளர் ஆஷா பூர்ணா தேவி. இச்சிறுகதை ,வங்காளக்கூட்டுக் குடும்பங்களில் பெண் நிலை பற்றியது இது. தான் பெண்ணாக இருந்தபோதும் பெண்ணின் எதிர்த்தரப்பை எடுத்துக்கொண்டு இதில் நடுநிலையோடு பேசியிருக்கிறார் ஆசிரியர்; பெண்ணின் மீட்சி அவளிடமிருந்துதான் வர வேண்டும் என்பதையும் கழிவிரக்கம் தேவையில்லை என்பதையும் உணர்த்தும் அருமையான படைப்பு இது.

அம்ரிதா ப்ரீதம்

அம்ரிதா ப்ரீதமின் பிராபல்யத்துக்கும் புகழுக்கும், அவரது அழகு, இடது சாரி, கவித்வம் எல்லாமே உதவின. அதற்கும் மேல் அவரது சுதந்திர தாகம் கொண்ட வாழ்க்கை. அது தன் முனைப்புக்கொண்ட பெண்யம். தன் ஆளுமையிலிருந்து கிளர்ந்த பெண்­யம். சுதந்திரம். கோட்பாடாகப் பெற்றதல்ல.

வார்ட் 34பி

அவளது பார்வையில் அதுவரை இருந்த வெறுமை உயிர் பெற்று சற்றே சலனங்காட்டியது. பதிலாக ஏதோ சொல்ல வருகிறாளோ என்று நினைக்கும் அளவிற்கு ஒரேயொரு கணம் கண்களில் லேசான ஈரமின்னல் தெறித்து மங்கியது. திறந்த வாயைச் சட்டென்று மூடிக் கொண்டாள். கூர்ந்த என் பார்வையைச் சந்திக்க விருப்பம் இல்லாதவளாகக் கண்களைத் தாழ்த்திக் கொண்டவளின் வாயோரம் லேசான துடிப்பு. எதையோ சொல்லவரும் அசைவாக இல்லாமல் அழுகைக்கு முன்பானதாக இருந்தது. வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்வது தெரிந்தது. “பேச ஆரம்பிச்சா அழுக வரும் அதான்,..”, என்றவள் குரலில் மயில் அகவுவது போன்றதொரு பிசிறு தட்டியது.

மோசமான நிலைகள்

என் குடும்பம் அதிகாரம் உள்ள பதவிகளுக்கு ஏற்றதில்லை; வாழ்நாளில் பெரும்பகுதியை அதிகாரம் கொண்டவர்கள் மேல் கசப்போடு வாழ்ந்து விட்ட எங்களுக்கு, அப்படி ஒரு அதிகாரமுள்ள பதவிக்கு மாறுவது என்பது உளநிலையளவிலேயே செய்ய முடியாததாக இருக்கிறது. வெகு நாட்களுக்கு, மேல்மட்டத்தினர்பால் நான் கொண்டிருந்த ஆங்காரம், என் நிலையை முன்னேற்றிக் கொள்வதில் நான் காட்டிய சுணக்கம், இதெல்லாம் என் சொந்த ஒழுக்கப் பார்வையிலிருந்து கிளைத்த விடலை மார்க்சிய நிலைப்பாட்டால் நேர்கிறவை என்று நான் கருதி இருந்தேன். என்னுடைய நடு 30களில்தான், நான் என் வீட்டில் கேட்டதனைத்தையும் கிளிப்பிள்ளை போலத் திரும்பிச் சொல்லிக் கொண்டிருந்தேன் என்பதை உணர்ந்தேன்.

கவிதைகள் – பா. கண்மணி, பா.சரவணன், ராமலக்ஷ்மி, கு.அழகர்சாமி

என்
இதழ்பிரியா புன்னகைக்குச்
சிலிர்த்துப் போகும் நீ
நான் பைத்தியமாகி
நாணமின்றி வெடித்துச் சிரிக்கையில்
என்ன செய்வாய்?

கர்மயோகம்

ஃபேன் காற்றில் காபி ஆறிபோயிருந்தது. “ஏ கமலம்..இப்படி வா..இத கொஞ்சம் சூடு பண்ணி கொண்டுவா..”. “ராமா ராமா ராமா” என்றவாரே பாடி வந்தாள். சரியாக இந்த நேரத்தில் இப்படியொரு கோரிக்கையை எதிர்ப்பார்த்தவள் போல வந்து காபி டவராவை எடுத்து சமையல் கட்டுக்கு சென்றாள்.

சின்னஞ்சிறு கிளியே

அம்மாவுக்கு பிரச்சனை தான் படிக்காததா அல்லது தன் அழகா, என்றொரு கேள்வி அவளுக்குள் எப்போதுமே இருந்தது. என்னவோ அலங்கரிப்பில் ஆர்வம் போகப் போய்தான் படிப்பைக் கோட்டை விட்டதாகக் கூப்பாடு போடுவாள். தோழி கனகாவின் அக்கா பியூட்டி பார்லரில் வேலை செய்கிறாள். வண்ண வண்ண நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக், மஸ்கரா, ஐ ஷேடோ, ஐ லைனர், ப்ளஷ் என அவள் மூலமாக விதம் விதமான அழகுச் சாதனங்கள் அவளுக்கும் தோழிகளுக்கும் அறிமுகமாயிற்று.

மஞ்சள் சூரியனில் ஒரு பாதி

குண்டு அதிர்ச்சியில் இருந்த வீரர்கள், மீட்புப் பணி மையத்தில், அழுக்கான சட்டைகளில், தெளிவில்லாமல் உளறிக் கொண்டு அலைய, குழந்தைகள் அவர்களிடமிருந்து தப்பி ஓடினார்கள். வீரர்கள் என்னைத் தொடர்ந்து வந்து, முதலில் கெஞ்சினர், பின்னர், என்னிடம் இருந்த உணவைப் பிடுங்கப் பார்த்தனர். நான் அவர்களைத் தள்ளினேன், சபித்தேன், அவர்களைப் பார்த்து துப்பினேன். ஒரு முறை, அவர்களை அத்தனை வேகமாகத் தள்ளிய போது அவர்களில் ஒருவன் கீழே விழுந்தான், நான் அவன் எழுந்தானா என்று திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. ந்நாம்டியைப் போன்று அவர்களும் ஒரு காலத்தில் கர்வமிக்க பியாஃபரா வீரர்களாக இருந்திருப்பார்கள் என்று என்னால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை.

நடியாவின் பாடல்: ஸொஹேர் கஷோக்கி

இந்தத் தலைப்பு கொண்ட ஆங்கிலப் புதினத்தை, நடியாவுக்கான பாடல் எனவும் பொருள் கொள்ளலாம். இதுதான் சரியான தலைப்பாக அமையும். இந்தப் புதினம் அரபு நாடுகளின் பண்பாட்டின், கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக, பெண்கள் வாழும், (வாழ அனுமதிக்கப்படும்) முறையை விவரித்து, கரிமா அஹமது எனும் ஒரு பெண்ணின் வாழ்வின் வெற்றிப் பெருமிதத்தையும் சோகக் கதையையும் வெகு அழகாக விவரிக்கின்றது. இதை எழுதியவரும் ஒரு பெண்ணே என்பது தான் இதன் கூடுதல் சுவாரசியம்.

சிலப்பதிகாரக்கதை – எனது புரிதல்

கண்ணகி, மாதவி ஆகிய பாத்திரப் படைப்புகளை விமரிசனக் கண்ணோட்டத்தில் அணுகும் ஸ்வர்ணமால்யாவின் முயற்சி குறித்தும் குறிப்பிடவேண்டிய தேவை உள்ளது. கண்ணகியைத் தமிழ்த்தேசிய ஆன்மாவின் அடையாளமாகக் காண்கிற முயற்சி, உலக அனுபவமற்ற எளியவளாக இருப்பினும் தார்மிக ஆவேசங் கொண்டு நீதி கேட்டு அரசாட்சியையே வீழ்த்திய ஒரு பெண்மணியாகக் கண்ணகியைச் சித்திரிக்கும் முயற்சி இவ்வாறு பல கோணங்களில் கண்ணகியைக் கண்டுணர்ந்து பல அறிஞர்கள் பேசியும் எழுதியும் வந்துள்ளனர். சிலம்புக்ச் செல்வர் ம.பொ.சி. அவர்கஷீமீ தொடங்கி, மா.ரா.போ. குருசாமி, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், தற்கால அறிஞர் சிலம்பு நா.செல்வராசு…

கவிதை – எலிஸபெத் ப்ரௌனிங்

என் காதலை நீ அறிவாயா?
உன்னைக் காணாது,
திசைகளற்று, தடைகளற்று பரந்து விரியும்
என் ஆன்மாவின் தேடலைப் போல் வரைகளற்ற என்
காதலை அறிவாயா?

லெமாங்கும் தனி மொழியும்

தேங்காய்ப்பாலின் ஆடைச்சத்து கவுணியரிசியின் பசைத்தன்மையைப் பதப்படுத்துகிறது. எரிக்கப் பயன்படும் விறகுக்குக் கூட சொல்வதற்கு ஒரு சொந்தக் கதை இருக்கிறது. தீ தொடர்ந்து எரிய வேண்டும் என்றால் விறகுகளை அடுக்கும்போது குறுக்குமறுக்காக அடுக்கவேண்டும். இவ்வாறு செய்வது வெவ்வேறு விருப்பங்கள் கொண்ட ஒவ்வொரு குடும்ப உறுப்பினரையும் பலப்படுத்தும் ஓர் இணைப்பைப் போன்றது.

அர்ஜுன்

நாளின் இறுதியில் நான்கு துண்டுகள் — மரத்தை வெட்டினாலும், மனிதர்களை வெட்டினாலும்… இன்னும் சொல்லப் போனால், மனிதனை வெட்டுவது சுலபம் தான். ஏன் யாரும் அவனிடம் அதைச் சொல்வதில்லை என்று தனக்குள் கேட்டுக் கொண்டான். அதனால் அவனுக்கு முழு நான்கு ரூபாய் கிடைக்குமே!

அதே வீடு

குமுதினி  (1905-1986) அவர்கள் தன்  வாழ்வில்  முரண்பாடுகளை எப்படி ஒருங்கிணைத்தார் என்பது எனக்கு இன்னும் ஆச்சரியமே.  அவர் தீவிர காந்தியவாதி.  முரட்டுக்கதர் புடவையை மடிசாராக உடுத்துவார்! தேய்ந்த இரு பொன் வளையல்கள், திருமங்கலியச்சரடு, ஒற்றைக்கால் தோடு, மூக்குத்தி. அவரை என் சிறு வயதிலிருந்து  நாற்பதாண்டுகள்   பார்த்திருக்கிறேன்.  இந்த ஆடையிலும், அணியிலும் மாறுதலே கிடையாது. ஆனால் எங்களை தன்னைப்போல் இருக்கவேண்டும் என்று சொன்னதில்லை.

நீளும் கனவு – சிறுகதைத் தொகுப்பு

புனைவு இலக்கியத்தில் எப்போதும் சிறுகதைக்குத் தனி இடம் உண்டு. அதன் சாத்தியங்களில் எத்தனை எத்தனை பரிசோதனைகளை, ரசவாதத்தை, கிளர்ச்சியை, ஆவேசத்தை, அதிர்ச்சியை, பெருத்த அமைதியை நிகழ்த்துகின்றனர் படைப்பாளிகள்! ஒரு கதையை வாசித்து முடித்தபிறகு வாசகர் தமது உடல்மொழியில் வெளிப்படுத்தும் அவஸ்தைகளைவிட பெரிய விமர்சனத்தை யார் எழுதிவிட முடியும்! கதைகள் சிலவேளை படிப்பவரை உண்டு இல்லை என்றாக்கி விடுகின்றன. எட்டே கதைகள்தானா, தொகுப்பு உண்மையிலேயே முடிந்துவிட்டதா, நமது பிரதிதான் ஒருவேளை தவறுதலாக பக்கங்கள் குறைத்து அடுக்கப்பட்டுவிட்டதா…

நந்துவின் பிறந்தநாள்

அந்தக் காலண்டரின் சீட்டில் தேதிக்கு அடியில், ‘திரயோதசி’, ‘அசுவினி’, ‘சதுர்த்தசி’, ‘பரணி’ என்று இம்மாதிரி எழுதியிருக்கும். அதில் ஒவ்வொரு சீட்டாகத் தூக்கித் தூக்கிப் பார்த்ததில் ஏழாம் தேதி அன்று ‘திருவோணம்’ என்று இருந்தது. “அட! திருவோணமா! அன்னிக்குத்தானே நேக்குப் பொறந்தநாள்?” என்று நந்து சொன்னான். அவன் சொன்னதை ஒருவரும் கவனிக்கவில்லை. அக்கா மாத்திரம், ‘பாவம், தன் பிறந்தநாளைத் தானே பார்த்துக் கொள்ளுகிறது!’ என்று நினைத்துக் கொண்டாள்.

வீடியோ விளையாட்டுகளில் பெண் சித்திரிப்பு

அனிதா சர்க்கீஸியன் (Anita Sarkeesian) இராக்கில் பிறந்தவர். அர்மீனியர். ஐந்து வயதில் வீடியோ விளையாட்டுகளுக்கு அறிமுகமானவர். இன்றளவும் எல்லா விழியப் பந்தயங்களிலும் இறுதி நிலையை அனாயசமாக முடித்துவிடுபவர். இப்படித் தொடர்ச்சியாக பல்வேறு கணினி விளையாட்டுகளை, பல்லாண்டுகளாக ஆடிவரும்போது ஒரு விஷயத்தைத் அவதானிக்கிறார். எல்லா கணினி விளையாட்டுக்களிலும் பெண்களைப் போகப் “வீடியோ விளையாட்டுகளில் பெண் சித்திரிப்பு”

கவிதைகள் – அம்ருதா ப்ரீதம்

இன்று,
என் வீட்டின் மேலிருந்து
இலக்கத்தை அகற்றிவிட்டேன்
தெருவின் பெயரையும் சுத்தமாய் அழித்து விட்டேன்

ஒலிம்பிக் விளையாட்டுகளில் பெண்கள்

“சுற்றிலும் இருப்பவர்கள் அவர்களுக்குத் தடையாய் இல்லாமல் இருந்திருந்தால் மொரோக்கோவில் பல பெரிய பெண் விளையாட்டு வீராங்கனைகள் உருவாக்கியிருப்பார்கள்” என்றார் . “பலரும் 13 வயதில் தொடங்கி 18 வயதில் நிறுத்திவிடுகிறார்கள் ஏனெனில் இது பெண்களுக்கானதல்ல என அவர்களுக்குச் சொல்லப்படுகிறது.” என்றார்.

ராஜம் கிருஷ்ணன் – அஞ்சலி

கலைமகள், ஆனந்த விகடன் நாவல் போட்டிகள், சோவியத்லாந்து-நேரு, இலக்கிய சிந்தனை, பாரதீய பாஷாபரிஷத், தமிழ் நாடு அரசு , சாஸ்வதி பரிசுகளையும், சாகித்ய அகாதமி, திரு.வி.க., தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் முதலிய விருதுகளையும் பெற்றவர். அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது ‘ஊசியும், உணர்வும்’ என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று, ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத்தொகுப்பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.

பெண்கள் சிறப்பிதழ்

சிறப்பிதழ் என்றால் இவையெல்லாம், இவர்களெல்லாம் இருக்க வேண்டும் என்கிற Blue Print பற்றியெல்லாம் எண்ணாமல் பல் கலைகளையும், இலக்கியத்தின் பல்வேறு வகைகளையும், பல வயதுப் பகுப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் எழுத்தாளர்களின் தமிழ் எழுத்துகளையும் மற்றும் உலக, அகில இந்திய எழுத்துகளின் மொழி ஆக்கங்களையும் கொண்டிருக்கும் ‘பெண்கள் சிறப்பிதழை’ மிகுந்த மகிழ்ச்சியோடு வெளிக் கொணர்கிறோம்.

நெடுந்தூர ஓட்டக்காரி

க்ரேஸ் பேலி நியூயார்க் மாநகரத்தில் வாழ்ந்த எழுத்தாளர், கவிஞர், ஆசிரியர் மற்றும் அரசியல் போராளி. தன் வாழ்நாளில் மூன்று சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்ட க்ரேஸ் பேலி சிறுகதை வடிவத்தின் சாத்தியங்களை விரிவாக்கியவர் என்று கொண்டாடப்படுகிறார். பெண்களின் உலக இருப்பைப் பற்றிய நுட்பமான, ஆழமான பார்வை பேலியின் சிறுகதைகளில் பிரமிக்கவைக்கும் ஒளியுடன் வெளிப்படுகிறது. பெண்களின் உரிமைக்காகவும் போர்களுக்கு எதிராகவும் தன் வாழ்நாள் முழுவதும் அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டுவந்த க்ரேஸ் பேலி, எளிய மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தியே தன் படைப்புகளைக் கட்டமைத்ததார். இந்த இயல்புகளை ‘நெடுந்தூர ஓட்டக்காரி’ சிறுகதையிலும் காணலாம்.

மேற்கத்திய பெண் ஓவியர்கள்

வார்த்தைகளால் சொல்லி விட முடியுமென்றால், வரைவதற்கான அவசியமே இருக்காதே! – எட்வர்டு ஹாப்பர் [1882-1967] இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் பெண் கலைஞர்கள் என்று தனித்து அறிமுகம் செய்ய வேண்டுமா? தற்கால விஷயங்களை மகளிர் எவ்வாறு கையாளுகிறார்கள்? மில்லியன்கள் புரளும் ஓவியச் சந்தையில் ஆண் ஓவியர்களோடு ஒப்பிட்டால், பெண் ஓவியர்களின் “மேற்கத்திய பெண் ஓவியர்கள்”

ஆண்/பெண் சிக்னல்

ஏன் எப்போதும் ஆணுக்கும் பெண்ணுக்கும் எதாவது லடாய்?ஆண் பெண்ணிற்கும் பெண் ஆணிற்கும் அளிக்கும் விருப்ப சிக்னலில் ஏதும் குழப்பமா? புரிந்து கொள்ள முடியாமல் போயிற்றா? ஏன்? எதனால்?
மிருகங்களுக்கு இது போன்ற குழப்பங்கள் இருப்பதாகத் தெரியவில்லையே? மிருகங்களில் எதிர்பாலினத்திற்கு அளிக்கும் சிக்னல் பிரச்சினை இல்லாததற்குக் காரணம்… அவை எதிர்பாலினத்தை காமத்திற்காக மட்டுமே எதிர்பார்க்கின்றன.
மனிதன் அப்படி இல்லை. காமம் மட்டும் அவன் தேவை இல்லை, பேரண்டல் பர்டனின் நீண்ட காலத் தேவையினால் மற்றவர் உடனிருக்க, காதல் எனும் பட்டுத்துணி தேவை.

பெண்ணிய பயங்கரம்!

இவை பெண்களின் கதைகள், பெண்கள் அதி-இயற்கையைச் சாதிக்கும் கதைகள் – ஆனால் ஒவ்வொரு கதையும் திகில் கதையாக ஆவது அதில் ஓர் ஆவி இருப்பதால் அல்ல, மாறாக அவை, நாம் வாழ்வில் ஏதோ சில கட்டங்களில் கேள்விப்பட்டிருந்த அல்லது அடைந்த அனுபவங்களை வினோதமான ஒரு வகையில் ஒத்திருக்கின்றன என்பதால்தான். ….”எனக்கு உருவங்களில்தான் கதை துவங்குகிறது. நான் ஒரு ஓவியராக இருப்பதால் இப்படி இருக்கலாம் என்று ஊகிக்கிறேன். வரிசையாக சில உருவங்களைப் பார்க்கிறேன், இவை கிளர்வூட்டி என்னைச் சிந்திக்கத் தூண்டுன்றன. அதன்பின் அவற்றுக்குள் ஒரு தொடர்பு ஏற்படுத்தும் வகையில் கதை எழுதத் துவங்குகிறேன். ஆனால் கதை எழுதும்போது, இதை மட்டும்தான் செய்ய வேண்டும். உனது நோக்கம், உனது பெண்ணிய வாதையைப் போகவிட வேண்டும்- உனக்குள் இருக்கும் கதைசொல்லிக்கு மட்டுமே செவிசாய்க்க வேண்டும்.”

ரங்கநாயகி தாத்தம்

“…குமுதினி’ எழுதிய முதல் கட்டுரையைப் படித்த உடனேயே எனக்கு ஒரே வியப்பாய் போய்விட்டது. தமிழ் பாஷையை இவ்வளவு லாவகமாகக் கையாண்டு எழுதும் இந்தப் பெண்மணி யாரோ, எந்த ஊரோ, என்ன பேரோ என்று பிரமித்துப் போனேன். ஊர், பேர் முதலியன தெரிந்து போய் விட்டதினால் பிரமிப்பு நீங்கி விடவில்லை, நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது.”