வேரை மறந்தவன், விலை கொடுத்தவன் – குற்றமும் மன்னிப்பும், போலந்தும் தமிழும்

இன்று நினைத்துப் பார்த்தால், அந்த நாவல் எனக்கு ஒரு இலக்கிய அனுபவமாக மட்டுமல்ல, உலகத்தைப் பார்க்க ஒரு புதிய சாளரமாகவும் அமைந்தது. போலந்து என்ற நாடு, கிழக்கு ஐரோப்பாவின் சோசலிச அரசியல், யூதர்களின் வரலாறு, இந்தியத் தூதரகத்தின் செயல்பாடுகள், வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் வாழ்க்கை, மனித உறவுகளின் சிக்கல்கள்—இவற்றையெல்லாம் முதன்முதலில் இந்த நாவலின் வழியாகத்தான் அறிந்தேன். இணையமும் சமூக ஊடகங்களும் இல்லாத அந்தக் காலத்தில், நல்ல இலக்கியங்கள்தான் உலகத்தின் பல கதவுகளை நமக்காகத் திறந்து வைத்தன.

ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்றுமில்லாததற்குள்

பேரழிவின் கலை இந்த ஆண்டு (2025) இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரியைச் சேர்ந்த நாவலாசிரியர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய் (László Krasznahorkai)க்கு அளிக்கப்பட்டுள்ளது. அமைதியின்மையின் அடர்த்தி மற்றும்  இருண்மையின் அதிசயம் ஆகியவற்றின் மீதான அவரது படைப்புகளின் தனித்துவமான பார்வைக்காக அளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி குறிப்பிடுகிறது.  அவரது படைப்புகள் நேர்த்தியான முடிவுகளை “ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்றுமில்லாததற்குள்”