ஷ்வார்ஸ்வால்டில் தண்ணீரைத் தேடி

அர்ச்சனா விளக்கினாள். அந்த இம்மிக்ரேஷன் பெண் திருப்தி ஆகாமல், யார் அழைத்திருகிறார்கள், திரும்பச் செல்ல டிக்கெட் இருக்கிறதா என்றெல்லாம் கேட்டாள். அர்ச்சனாவுக்கு எரிச்சலாக வந்தது. ஒவ்வொரு முறையும் இப்படித்தான் ஆகிறது. சென்ற முறை ஷீலாவுடன் வந்த போது, அவளை ஒரு கேள்வியும் கேட்காமல் விட்டு விட்டார்கள். அர்ச்சனாவுக்கு மட்டும் இதே மாதிரி கேள்விகளுக்கு பதிலும் டாக்குமெண்ட்களும் கொடுக்க வேண்டி இருந்தது. 

பெண் தெய்வங்களும் மண் பாண்டங்களும்

ஆதிச்சநல்லூரில் இருந்த சிறு அருங்காட்சியகம் இரண்டாம் வகை. நிலத்திற்கு அடியே உள்ள பாறைகளை குடைந்து, மண்ணை அகழ்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மண்பானைகளை சுற்றி வந்து பார்வையிட மர சட்டங்களால் ஆன பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. விட்டத்தில் பொருத்தப்பட்ட குவி விளக்குகளின் வெளிச்சத்தில் நாம் நடக்கும் பாதைக்கு அடியே இருந்த இந்தப் பானைகள் வெண்மை, நீலம், கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் மெளனமாக மிளிர்ந்தன. இவை யாவும் முதுமக்கள் தாழி என்றழைக்கப்படும் ஈமத்தாழிகள் (Burial urns). அதாவது, இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பயன்படுத்தப்படும் மண் கலன்கள்.

தண்டனைக்குரியவன்

சட்டென அவன் நினைவில் ஒரு சொல் ஒலித்தது. “வார்ம்த்” என்றான் தன்னை அறியாமலேயே. எல்லோரும் சுற்றி அமர்ந்து இருந்தனர் அறையில். பாரி சொல்வதை ராகவன் புரிந்தவன் போல் சிரித்தான். பார்வதி குழம்பியவள் போல் பார்த்தாள். கிருஷ்ணன் வேறு ஏதோ பேசிக் கொண்டு இருந்தான் ராகவனிடம். பாரி எதையுமே கவனிக்கவில்லை. மது போத்தலை எடுத்து கையில் வைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். அந்த திரவத்தின் ஒளியும் பாரிக்குள் அந்த வார்த்தையை மீண்டும் எழுப்பியது. “வார்ம்த்” என்றான் சொக்கிய மன ஓட்டத்துடன். 

தரவு ஏக்கம்!

This entry is part 1 of 1 in the series தரவு ஏக்கம்

புறநகர் ரயில் நிறுவனம் போல, இன்னொரு அமைப்பு, நான் வசிக்கும் ஊரின் அரசாங்கம். இவர்களது ஒரே குறிக்கோள், வருடம் ஒரு முறை சொத்து வரியை உயர்த்துவது. அதுவும் சில வருடங்கள், முந்தைய வருடத்தை விட 10% -க்கு மேல் உயர்த்துவது. ரயில் நிறுவனம் போல, இவர்களிடம் என்னைப் பற்றிய அனைத்து விவரங்களும் உண்டு. வருடம் ஒரு முறை ஒரு அறிக்கையை அனுப்புவார்கள். அந்த அறிக்கை வருவது, வயிற்றில் புளியைக் கரைக்கும் விஷயம். இதுவரை நான் கட்டிய வரிக்கு நன்றி என்று ஒரு வருடம் கூடச் சொன்னதில்லை.

மன எல்லைகள் விரியும்போது  ….

‘அப்பாடா! நல்லபடியா இத்தோடு கெளம்பி போனாரே?’ ராதிகா வாசற்கதவை சார்த்தி கொண்டு உள்ளே வந்தாள். அவளும் அலுவலகம் கிளம்ப வேண்டும். அந்த நேரத்துக்கு அவனுக்கு ஏதோ பதில் சொல்லிவிட்டாளே தவிர அவள் மனதில்,  ‘என்ன ஆச்சு உங்களுக்கெல்லாம்? ஏன் பேச்சு கொறஞ்சு போச்சு?’ என்று அவன் கேட்ட கேள்வியே சுழன்று கொண்டிருந்தது.

கால வெளிக்கு அப்பால்

பிரபஞ்சம் (Universe ) என்ற சொல்லே குழப்பமானது‌. ‘அனைத்தையும் கொண்டிருக்கிற’ ஒன்றே  பிரபஞ்சம் என்றால்,  இரண்டாவது பிரபஞ்சம் என ஒன்று இருக்க இயலாது. ஆனால், அண்டவியலில் பிரபஞ்சம் வேறொரு அர்த்தத்தில் வருகிறது: நாம் தொடர்ந்து கண்டறியும் விண்மீன் மண்டலங்களை, அதன் வடிவியலுடனும் வரலாற்றுடனும் கொண்டுள்ள காலவெளி‌ தொடர் பொருண்மையே அது. இந்த நோக்கில், காணும் இப்பிரபஞ்சம் மட்டுமே திகழ்கிறது என்பதில்லை. ஜான் வீலரின் கூற்றுப்படி, காலவெளியிட தொடர் பொருண்மை ( spatiotemporal continuum )‌‌ அல்லது காலவெளி , கடல்நுரையென‌ சிதறி நிகழ்தகவுகளின் துளிம மேகங்கள் எனப் பரவும் புள்ளி வரை கடந்த காலத்தை மறு கட்டமைப்பு செய்யலாம்.

கொரியப் பண்பாடு, வரலாறு மற்றும் தேசிய வடு

கொரிய ஊடகங்களிலும் 2018 MBC ஆவணப்பட விசாரணையிலும் ஆவணப்படுத்தப்பட்ட கிம்மிற்கு எதிரான குற்றச்சாட்டுகளில், பல நடிகைகளை வற்புறுத்தி முத்தக் காட்சிகளில் நடிக்க வைத்தது, அவர்கள் விரும்பாத இழிவான காட்சிகளில் நடிக்கக் கட்டாயப்படுத்தியது, ஒத்திகையின் போது அறைந்தது மற்றும் பாலியல் வன்புணர்வு போன்ற புகார்கள் அடங்கும். MBC-யின் ‘பண்டோராஸ் பாக்ஸ்’ ஆவணப்படத்தில், ‘லீ’ என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு நடிகை, மொபியஸ் (Moebius – 2013) படப்பிடிப்பின் போது கிம் தன்னை அறைந்ததாகவும், ஸ்டாப் (Stop – 2015) தயாரிப்பின் போது பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பகிரங்கமாகத் தெரிவித்தார். இவை அநாமதேயப் புகார்கள் அல்ல; சட்டப்பூர்வ செயல்முறைகளை எதிர்கொள்ளத் தயாராக இருந்தவர்களால் பொதுவெளியில் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள்.

கூர்வேல்

வந்தியத்தேவர் செறுமினார். “எனக்கென்னவோ கங்கவர்மனின் ஆள் எவனோதான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நாம் ராஜதந்திரம் என்று அவனிடம் ஒரு ஒற்றனை அனுப்பினால் அவன் திறமையாக நம் ஒற்றனைக் கொன்றுவிட்டு அந்தக் கொலையையே நமக்கு எதிராகப் பயன்படுத்துகிறான். அவனுக்கு சாரங்கபாணி விமலாதித்தனை அழைத்து வரப் போயிருப்பது தெரிந்திருக்க வேண்டும். இப்போது பழி விமலாதித்தன் மீது விழுந்துவிட்டால், அவன் தண்டிக்கப்பட்டால், வேங்கி சாளுக்கியரோடு இணையும், நம்மை எதிர்க்கும்” என்று சொன்னார்.

டியரா டியரா!

This entry is part 4 of 4 in the series கொலம்பஸ்

வரலாற்றாசிரியர்கள், ஒருவேளை கொலம்பஸ் அன்று தனது திசையை மாற்றாமல் நேராகவே மேற்கு நோக்கிச் சென்றிருந்தால், அவர் முதலில் அமெரிக்காவின் மிக ஆபத்தான, பலமான எதிர்க்காற்றும் கொந்தளிக்கும் கடலலைகளும் கொண்ட புளோரிடா கரையை அடைந்திருப்பார் எனக் கருதுகின்றனர். அப்படிச்சென்றிருந்தால் அவரது கப்பல்கள் அங்கு உடைந்திருக்கலாம் அல்லது காற்றின் கட்டற்ற விசையினால் அறியாத திசைக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம். ஆனால், பறவைகளைப் பின்தொடர்ந்ததால் அவர் பாதுகாப்பான பகாமாஸ் தீவுகளுக்குச் சென்றடைந்தார்.

றெக்கை –  அத்தியாயம் 23

This entry is part 23 of 23 in the series றெக்கை

இறகு எஜமானி, எனக்கும் கிழவருக்கும் பொன்னும், வைரமும், முத்தும் மரதகமும் பவிழமும் எல்லாம்  வீட்டில் வைத்தும் விரலில் அணிந்தும் மகிழ்ச்சியோடு பாடி ஆடவும் வயசு பாக்கியாக ஒன்றும் இல்லை. நானோ என் கணவர் கிழவரோ நினைத்தால்  மனதில் கொடூரமாகத் திரும்பும் நினைவுகள் திரும்பத் திரும்ப  நெஞ்சில் ஆழமாகக் குருதி நனைத்து நிலைக்கவொட்டாமல் ஒரு நொடியில் சுவாசிக்க மறந்துபோக வைக்கும். பொன்னும் வைரமும் எம் போன்ற தொண்டு கிழங்களுக்கு ஏற்பில்லை. டாக்டர் எஜமானி,  சரிதானே?

போனதும் நின்றதும் :  சேர்வராயன் மலை சாட்சி சொல்கிறது 

‘போக்கிடம் நாவலின் பேசுபொருளான இடப்பெயர்வே அதன் இளமைக்கும் புதுமைக்கும் காரணம் என இப்போது புரிகிறது. மானுடகுலம் உருவான காலத்திலிருந்தே இடப்பெயர்வுகளும் உருவாகிவிட்ட சூழலில் இடம்பெயர்தல் தொடர்பான ஒரு படைப்பு ஒரு போதும் தன் இளமையை இழப்பதில்லை. காலம்தோறும் வாழ்வதற்கான வழிகளைத்தேடி அமைதியைத்தேடி பாதுகாப்பத்தேடி வெற்றியைத்தேடி சுதந்திரத்தைத்தேடி மனிதர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் சென்றுகொண்டே இருக்கிறார்கள்.’

பிரார்த்தனை

இப்போது இதற்கு
காலம் கடந்து விட்டது என்று அவள் அறிவாள்
விரைவில் அவளும்
மறைந்து போவாள் என்பதையும்
பனைமரங்களை மட்டுமே தனக்குப் பின்னால்
விட்டுச் செல்வாள் என்பதையும் கூட
அவள் அறிந்திருக்கக் கூடும்.

ஆனந்தம் பிரம்மனோ வித்வான்

ஆத்மா, பிரம்மம் இரண்டும் ஒன்றே என்ற கருத்தை உபநிஷத்துக்கள் “அஹம் பிரம்மாஸ்மி” (நானே பிரம்மம்) மற்றும் “தத் த்வமஸி”(அது நீயாக இருக்கிறாய்) போன்ற மகா வாக்கியங்கள் மூலம் பிரகடனப்படுத்துகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால், “சிறிய, வரம்பிற்குட்பட்ட நான் (ஆத்மா) எப்படி இந்தப் பிரபஞ்சத்தையே தாங்கி நிற்கும் எல்லையற்ற பேராற்றலுடன் (பிரம்மம்) ஒன்றாக முடியும்?” என்ற சந்தேகம் எழுவது இயல்பே. ஆனால் இந்த உண்மையை “பாக-த்யாக-லக்ஷணா” (பொருந்தாத பகுதிகளை நீக்கி, சாரத்தை மட்டும் ஏற்கும் தர்க்க முறை) மற்றும் சில எளிய உதாரணங்கள் மூலம் விளக்க முடியும்

வேம்பும், அரசும்

தன் நண்பன் கண்மூடிக் கிடப்பதை அருகில் சென்று பார்க்க அவருக்கு தைரியமில்லை. பெரியசாமியின் வீட்டிற்கு எதிர்சாரியிலிருந்த அந்த நாவல் மரத்தடியிலேயே அமர்ந்து விட்டார். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. பெரியசாமியின் ஆத்ம சிநேகிதர். ஐந்து வயதில் ஆரம்பப் பள்ளியில் இடித்துக்கொண்டு உட்கார்ந்தபோது ஆரம்பித்த அறுபது வருட சிநேகிதம். கருவேல முள்வேலியில் கையைவிட்டு புளியம்பழம் பொருக்கவும், மரத்தில் ஏறி நாவல் பழம் உலுக்கவும், குளம் கண்ட இடத்திலெல்லாம் குதிக்கவும் என்று ஒன்றாகத் திரிந்தவர்கள். அவர்களின் வாழ்க்கையில் அடித்த வெள்ளமும், புயலும், கொளுத்திய அனலும் அவர்களின் சிநேகிதத்தைச் சிதைக்க முடியவில்லை. எதிர்நீச்சல் போட வேண்டியிருந்த நேரங்களில், ஒருவர் கையை ஒருவர் இறுக்கிக் கொண்டு கரையேறினார்கள்.

மனிதர்கள் காந்தப் புலத்தை உணர்கிறார்களா?

ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, காந்தம் என்றால் நினைவிற்கு வருவது திசைகாட்டியோ அல்லது குதிரைக்குளம்பு வடிவ காந்தம்தான். ஆனால் இன்று நாம் தினமும் பயன்படுத்தும் பல சாதனங்களின் மையத்தில் அமைதியாகச் செயல்பட்டு வருவது பல்வகை காந்தங்கள் என்பதை பெரும்பாலானோர் உணர்வதில்லை.  காலையில் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, பணப்பையில் இருக்கும் ஏடிஎம் அட்டை, பாக்கெட்டில் இருக்கும் கைப்பேசி, பையிலுள்ள மடிக்கணினி, டேப்லெட்,  ஐபாட் ஆகியவை. இவை அனைத்திலும் பொதுவாக மறைந்து கிடப்பது மிகச் சிறிய, சக்தி வாய்ந்த காந்தப்பொருட்கள்.

பிள்ளையிழப்பு

This entry is part 17 of 15 in the series ஹைக்கூ

கம்பராமாயணத்தில் இந்திரஜித் போரில் வீழ்ந்த பின், பிள்ளையிழந்த துயரத்தால் இராவணன் அடையும் வேதனைகளையும் அவனுடைய புலம்பலையும் விருத்தத்தில் வடிக்கிறார். அதில் ஒரு பகுதியாக, // மைந்தனெ எனக் கதறுவான், பெருமை பெற்ற மகனே எனக் கூவுவான், என் தந்தையே என்பான், என் உயிரே எனச் சொல்வான், உன்னைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு நான் இன்னும் இருக்கிறேனே எனத் தன்னைத் தானே நொந்துகொள்வான், வெந்த புண்ணின் மீது வேல் பாய்ச்சப்பட்டது போன்ற துயரத்தை அனுபவிப்பான் // என்னும் பொருளுடைய வரிகளைப் படிக்கையில் அரக்கர்களின் அரசனாக இருப்பினும் மகனை இழப்பின் அத்துயரத்திலிருந்து ஒரு தந்தை தப்ப முடியாது என்பது தெளிவு.

உலகக் (கோப்பை) கொண்டாட்டம்

அரசியல் இந்தியாவில் மட்டுமா? அமெரிக்காவும் ஈரானும் மத்திய கிழக்கில் முட்டிக் கொண்டு இருக்கும் பொழுது ஈரான் அணி அமெரிக்காவில் விளையாட வேண்டும். தங்களுக்கு தேவையில்லாத அழுத்தங்கள், தொந்தரவுகள் வருவதாக அந்த அணியினர் புலம்புகின்றனர். ஈராக்கிற்கும் அதே கதிதான். விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் இந்தப் பிரச்னை இல்லை. ஒரு நடுவருக்குக் கூட விசா கிடைக்காமல் போனது பெரிய பிரச்னையானது. விளையாட்டில் அரசியல் கூடாது என்பதெல்லாம் சொல்ல அழகாக இருந்தாலும் செயல்முறையில் எல்லாம் பின்னிப் பிணைந்துதான் இருக்கிறது. 

கட்டில்- அலமாரி

மாநாட்டில் எல்லோராலும் கவனிக்கப்பட்டு , மிகப் பெரிய பாராட்டுகளுடன் சிவனேறு என்ற பட்டம் பெற்றிருந்தாலும் பிள்ளை அவர்கள் மாநாட்டு தீர்மானங்கள் பலவற்றுடன் ஒத்துப்போவதில்லை. குறிப்பாக முதலாவது தீர்மானமான “சைவ உணவு உண்ணும் தொண்டை மண்டல முதலியார், கார்காத்தார், சைவ செட்டியார் , தேசிகர்,  ஓதுவார் , ஓமநல்லூர் , பட்டர்புரம் சீமைச்சம்பிரதி வேளாளர் , சோழபுரம் வேளாளர் என்பவர்கள் அனைவரும் இனி சைவ வேளாளர் என்று அழைக்கப்படுவர்’ என்று குறிப்பிட்டது பிள்ளை அவர்களுக்கு தங்க முடியாத  வருத்தத்தை அளித்தது. ‘அது எப்படில  நமக்கு இணையா’ என்று குமுறுவர்

அமெரிக்கக் காப்பீடுகளின் வரலாறு: விருப்பமான மருத்துவர் அமைப்பு

This entry is part 25 of 14 in the series பொது நலம்

உடல்நல பாதுகாப்பு நிறுவனங்களில் (HMO) இருப்பது போல PPO-வில் ஒரு கட்டாய முதன்மை மருத்துவர் (Primary Care Physician – PCP) தேவையில்லை. நீங்கள் நேரடியாக ஒரு தோல் நிபுணரையோ, இதய நிபுணரையோ, எலும்பு நிபுணரையோ — யாரையும் நேரடியாகச் சந்திக்கலாம். குறிப்பாக ஏற்கனவே உங்களுக்குப் பிடித்த மருத்துவர் ஒருவர் வலையமைப்பில் இருந்தால், இடையில் யாரும் பரிந்துரைக்க வேண்டியதில்லை.

இழையும் இசை; இணையும் இயல்;கசியும் கண்கள்

ஏன் அவன் விடை கூறாமல் நாட்களைக் கழிக்கிறான்? ‘வருகிறேன், வர இயலாது’ என்றோ, தனது எண்ணத்தைச் சொல்லிவிட்டால், பின் எனக்குத் தோன்றுவது என்னவோ அதைச் செய்து கொள்வேனே என எண்ணி அதனையும் தோழியிடம் கூறுகிறாள். ‘அவன் வராவிடில் யாருக்கும் சுயம்வர மாலையை அணிவிக்க மாட்டேன்; கன்னிகையாக இருந்தே காலத்தைக் கழித்து விடுவேன்’ என்று சூளுரைக்கிறாள்; இருப்பினும் அடிமனதில் பயம். மற்ற அரசர்கள், அவர்களுடைய இளவரசர்கள் பூமியில் உள்ளனர்; இவர்களில் எவரையாவது மணந்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தப் படுவேனோ எனப் பரிதவிக்கிறாள் ருக்மிணி.

கூழாங்கல்

முன்பு எப்போதோ
சென்று வந்த காட்டை
இப்போது நினைத்து
என் அறைக்குள்
கூட்டிக் கொண்டு வந்தேன் –
ஒரு விலங்காய்
அதற்குள் திரிய-
ஒரு பறவையாய்
அதற்குள் பறக்க

வெள்ளை மாளிகைக்குள் என்ன நடக்கிறது? வெளியேறும் முக்கிய அதிகாரிகள்

குறிப்பாக ஈரானில் அமெரிக்க ராணுவத் தலையீடு தொடர்பான தனது சுதந்திரமான கருத்துக்களுக்காக காபார்ட் விமர்சனங்களை எதிர்கொண்டார். உளவுத்துறை மதிப்பீடுகள், தேசியப் பாதுகாப்புக் கொள்கை தொடர்பாக நிர்வாகத்திற்குள் பதட்டங்கள் நிலவியதாகவும் சில அறிக்கைகள் விவரித்தன. இருப்பினும் இந்தக் கருத்து வேறுபாடுகளே அவரது ராஜினாமாவுக்குக் காரணம் என்பதற்கு அதிகாரப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை. அவர் வெளியேறுவதற்கு முன்பு ஒரு இந்து மத அமைப்புடன் அவருக்கு இருந்த கடந்தகாலத் தொடர்புகள் குறித்த ஆய்வை ஊடக அறிக்கைகள் மீண்டும் தொடங்கின. இந்தக் குற்றச்சாட்டுகளை காபார்ட்டும் அவரது ஆதரவாளர்களும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் இந்துக்களுக்கு எதிரானவை என்றும் நிராகரித்தனர்.

ரதநிலைதனை தருவாயே!

அலையின் அலைக்கழிப்பில்
பிடிமானக் கயிற்றின்
ஒரு முனைத்
தொக்கி நிற்கிறது!
அலைகளுக்கோ ஓய்வில்லை!
மூழ்கி முத்தெடுக்கும்
தன்முனைப்பும்
குறைவதாய்த் தோன்றவில்லை
கொஞ்சேமேனும்
கருணை காட்டுங்கள்
அலைகளே!