“நிக், உன் மூளை இப்போது ஒரு குறிப்பிட்ட முடிவை எடுக்க மறுக்கிறது,” என்றார் பேராசிரியர் மெதுவாக, ஒவ்வொரு வார்த்தையையும் எடைபோட்டு. “சாதாரணமாக, நமது உணர்வு நிலை கோடிக்கணக்கான சாத்தியக்கூறுகளை ஒரு கணத்தில் வடிகட்டி, ஒரே ஒரு யதார்த்தத்தை மட்டும் உருவாக்குகிறது. கண் திறந்ததும் நாம் “இங்கே இருக்கிறோம்” என்று உணர்கிறோம். அந்த வடிகட்டுதல் நிகழவில்லை என்றால், எல்லா சாத்தியக்கூறுகளும் ஒரே நேரத்தில் காட்சி தரும். அதுதான் இப்போது உன் நிலை.
சாதாரண நாள்
பரபரப்பான சாலையில்
உக்கிரமான
சிவப்பு விளக்கு,
வீடிலியின்
பதாகையில்
கலைந்த சொற்கள்,
அனிச்சையாய்
கைகளில் தென்பட்ட
இருபது பணம்
சில ஒற்றைகளாய்
இல்லாமலிருப்பதன்
கனம்,
வாகனக் கண்ணாடி
கீழிறங்கி
வெளிவருகிறது
புனிதக் கை
பலநூறு கைகளின்
பிரதிநிதியாய்
சாகசக்காரிகளின் ஆலங்காடு
இத்தொகுப்பு காரைக்கால் அம்மையாரையும் அவர் ஜயபாஸ்கரன் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் பாடுகிறதென்றாலும் அம்மையாரையும் விஞ்சிவிடும் ஓர் ஆளுமை இத்தொகுப்பில் ஆச்சரியமான விதத்தில் பதிவாகி இருக்கும் விதமே இத்தொகுப்பின் மணிமகுடம் எனலாம். கவிஞரின் பெரியம்மா ஒரு அழகான சிறுகதைப் பாத்திரத்தின் ஆழத்துடன் தொகுப்பின் இரண்டாம் பகுதியில் பரிணமிக்கிறார். சமயோஜிதர், அனுபவத்திலிருந்து வாழ்வதற்குத் தேவையான ஞானத்தை மட்டுமே இயல்பாக வடிகட்டிக் கொண்டவர்.
துயர மேலாண்மை
எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கும் மகள். கனடா நாட்டுப் பையன்களுடன் ஊர் சுற்றுவாள், மால்களில் உடலை இறுகப் பிடிக்கும் ஸ்வெட்டர்களை வாங்குவாள். இளைய மகள், பேமின் கூற்றுப்படி, நல்ல மகள், எத்தியோப்பியாவுக்காக நிவாரண நிதி திரட்டிய போது தன் இனிய குரலில் பஜன் பாடல்களை இளைய மகள் பாடியதில், என் சிக்கனக்கார கணவர் கூட நூறு டாலருக்கு காசோலையை கையெழுத்திட்டு கொடுத்தார். அவளும் அந்த விமானத்தில் தான் இருந்தாள். பேம் போகாததால், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களை அவள் தன் தாத்தா பாட்டியுடன் கழிக்க இருந்தாள். பேமுக்கு போக விருப்பமில்லை. மெக்டோனால்டில் தன் வேலையை தொடரவே விரும்பினாள். பம்பாயா அல்லது ஒண்டர்லேண்டா என்றால் நான் ஒண்டர்லாண்டையே தேர்ந்தெடுப்பேன்” என்றாள்.
ஜரிகையற்ற வாழ்வின் கதைகள்
ஐம்பது வயது முதியவர் சிறு கதையின் நாயகன். மணமாகாதவர்.மனம் விட்டுப்பேசவும் ஒரு ஆறுதல் கூறவும் அவருக்கு ஒரு துணை வேண்டும். அப்படி ஒரு பெண்ணும் அமைந்து விடுகிறாள். ஊரார் ஆயிரம் பேசுவர்தான். ஈவிரக்கமற்றது காலம். அவள் இறந்தும் விடுகிறாள். அம்முதியவர் அவளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு ஊர் திரும்புகிறார். அவரின் மன வலி யாருக்குத்தான் புரியும். அக்களூர் இரவி தத்ரூபமாக அந்த பாத்திரத்தை நம்மோடு அமர்ந்து பேச வைக்கிறார்.
மிங்ஹுன் (Minghun)
மகனின் மரணத்தையும் தாயின் சங்கடத்தையும் கேட்டறிந்த துறவி, கொஞ்ச நேரம் தியானத்தில் ஆழ்ந்தார். காதலியுடன் திருமணத்தில் இணைய முடியாமல் ஏங்கித் தவிக்கும் மகனின் ஆவியால்தான் தாயிற்கு இவ்வளவு தொல்லைகளும் என்பதை விளக்கி, ‘மிங்ஹுன்’ செய்து, தனித்து அலையும் ஆவிகளை தம்பதிகளாக மேலுலகில் இணைத்து வைத்தால் இந்தத் தொல்லைகள் நீங்கும் என்ற தாவோயிச நம்பிக்கையை எடுத்துச் சொன்னார்.
சநாதனச் சர்ச்சை – ஒழிக்க வேண்டியது எது?
சாதி சார்ந்த ஏற்றத்தாழ்வு என்பது பிராமணர்களால் மட்டுமே கடைபிடித்துத் திணிக்கப்படுகின்ற ஒன்றா என்றால் அக்கேள்விக்குப் பதில் இல்லை என்பதுதான். இன்றைக்குக் கேள்விப்படும் செய்திகளில் பெரும்பாலும் மற்ற உயர் வகுப்புகளைச் சார்ந்தவர்கள் தமக்குக் கீழ் இருப்பவர்கள் மேல் கட்டவிழ்த்துவிடும் வன்முறைகளாகத்தான் இவை இருக்கின்றன. அதனால் இந்த ஏற்றத்தாழ்வுக்கான போராட்டத்தை இன்னும் பிராமண எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் நிறுத்துவது எந்த விதத்தில் சரியாகும்?
நிலவின் நிழல்
அப்போது அவனுக்கு இருபத்திரண்டு வயசு இருக்கும்போலும்! சம்பங்கி நறுமணம் நிறைந்த நிலவின் ஒளி போன்று மயக்கத்தை தருகின்ற அழகு அவனுடையது. வட்டமான முகத்தில் எனக்கென்ன வேலை என்று பின்னால் ஓடி ஒளிந்துகொண்ட கிராப்பு. எடுப்பாகத் தெரியும் மூக்கு. நடுவில் குழி விழுந்த மோவாய்க்கட்டை. பெயருக்கேற்றபடி மனோகரமாக இருக்கிறான் என்று தான் நினைத்தது, பார்த்தது தனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. “பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையை அப்படி கண்ணிமைக்காமல் பார்த்தால் அவன் என்னவாகிப் போவான்?” என்று தாய் மாமன் கிண்டல் செய்தபோது, பத்து பேருக்கு நடுவில் சொல்ல முடியாத வெட்கம் சூழ்த்து கொண்டது.
காத்திருப்பின் கலை: கிரிதரனின் திறனாய்வுலகம்
விமர்சகர் கிரிதரன் இப்படி சடங்காக அன்றி விமர்சனத்துக்குறிய இலக்கணங்களோடு நூல்கள் எதுவாயினும், எழுதியவர் எவராயினும் மொழிபேதமின்றி வாசித்து மகிழ்ந்ததை உணர்வுக்கொப்ப தீர்ப்பளித்துள்ளது ஒரு பக்கமெனில், ஒவ்வொரு நூலைக்குறித்தும் திறனாய்வு செய்கிறபோது முனைகிறபோது அந்நூல் அவர் எப்போதோ எங்கோ வாசித்த நூல்களை, நூலாசிரியர்களை நினைவுகூர அப்பகுதி நண்பர் கிரிதரனின் பரந்த வாசிப்புக்கு மட்டுமல்ல அவர் விமர்சனத்திற்கு எடுத்துக்கொண்டுள்ள நூல்களுக்கும் பெருமை சேர்க்கின்றன.
தனதல்லாத வாழ்க்கை
வீட்டில் வம்சியின் மனைவியோ, பிள்ளைகளே இருக்கும் சந்தடியே இல்லை. என் பார்வையை கவனித்த பணிப்பெண், வம்சி, மனைவியை பிறந்தவீட்டுக்கு அனுப்பி விட்டான் என்றும், வீட்டுக்கு எப்போதாவதுதான் வருவான் என்றும், கடைக்குக் கூடப் போகாததால் வேலையிலிருந்து நீக்கி விட்டார்கள் என்றும் தெரிவித்தாள். அவனுடைய மாமாவும் ஊரில் இல்லையாம். அவர்தான் உடன்பிறந்தவளை கவனித்துக் கொள்வதற்காக இந்தப் பெண்மணியை ஏற்பாடு செய்தாராம்.
தங்கக் கூண்டு
இசையில் மெலடி என்ற ஆங்கிலச் சொல் ஒரு குறிப்பிட்ட பொருள் கொண்டது. ஒன்றை இழை அல்லது ஒற்றைக் குரல், என்று புரிந்து கொள்ளலாம். உதாரணமாக, ஒரு புல்லாங்குழல் மட்டும் வாசிக்கப்பட்டால் அது மெலடி. அதனுடன் ஒரு வயலினும் சேர்த்து வாசிக்கப்பட்டால்? அவை இரண்டும் ஒன்று போல இல்லாமல் தன்னிச்சையாக இருந்தால்? அவை இரண்டும் ஒன்றோடொன்று முரண்படாமல், ஒன்றை ஒன்று மெருகேற்ற வேண்டும்.
றெக்கை – அத்தியாயம் 21
இது தினசரி நடப்பு என்று தோன்றும் முகபாவத்தோடு பிருஷ்டத்தில் படிந்த மண்ணை தட்டி விட்டபடி மறுபடி வண்டி ஏறினாள் பிள்ளை மிஸ். வெகு வேகமாக சைக்கிள் செலுத்தி அவள் போக, ஜெசிக்கா தன் சைக்கிளை உருட்டிக் கொண்டு வந்தாள். ஜாஜா அத்தய் வண்டி ஓட்டறது கண்கொள்ளா காட்சிதானே? எங்கே கத்துக்கிட்டா தெரியுமா?
கடல் கடந்த முப்பத்தி மூன்று நாட்கள்
கேப்டன் மற்றும் அதிகாரிகளுக்கு மட்டுமே சிறிய அறைகள் இருந்தன. சாதாரண மாலுமிகளுக்கும் மற்ற பயணிகளுக்கும் தனி இடம் கிடையாது. அவர்கள் கப்பலின் தரைத்தளத்தில் (Deck) ஆங்காங்கே குளிரோ, கடுங்காற்றோ, பனியோ, உப்பு நீர் அறைதலோ எதுவானாலும் அங்கேயே படுத்துக்கொள்வார்கள். மழையின் போது மட்டுமே சரக்குகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஒடுங்கிக்கொள்வார்கள்,
ஞானம், ஞேயம், ஞானகம்யம்
ஞானயோகத்தைப் பயில்தல் என்றால் தன்னைப் பற்றிய உண்மையான அறிவை அடைதலை, ஆத்ம ஞானத்தை அடையும் அறிவைக் குறிக்கும். ஒரு ஆன்ம சாதகன் இறுதியில் அடைய வேண்டியதை கீதையில் கிருஷ்ணர் “ஞானம், ஞேயம், ஞானகம்யம்” என்று குறிப்பிடுகிறார். இங்கு ஞானம் என்றால் பரம்பொருளை அறிவதற்குக் கருவியாக இருக்கும் சாஸ்திர அறிவு மற்றும் சாதகனுக்கு இருக்க வேண்டிய மனப்பக்குவம், நற்பண்புகள் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றது. ஞேயம் என்ற சொல் இந்த ஞானத்தின் மூலம் அறியப்பட வேண்டிய இறுதிப் பொருளான பிரம்மம் அல்லது ஆத்மாவைக் குறிக்கிறது. ஞானகம்யம் என்ற சொல் அந்த இலக்கு ஞானயோகப் பயிற்சியின் மூலமாக மட்டுமே அடையக்கூடியது என்பதைக் காட்டுகிறது.
சமன்பாடுகளைத் தாண்டிய யதார்த்தம்
இன்றைய ஏ.ஐ என்பது முன்னறிவுக்கான அளவில் எவ்வளவு நிஜமானது என்பதே முக்கிய கேள்வி ஆகிறது. குறுகிய, கட்டமைக்கப்பட்ட, பெரும் தரவுள்ள சூழல்களில் ஏ.ஐ மிகப் பயனுள்ளதாக இருக்க முடியும். அது போக்குகளை முன்னறிவிக்கலாம், ஒழுங்கின்மைகளை கண்டறியலாம், அடையாளம் காண உதவலாம், தேர்வுமுறையை வழிநடத்தலாம். ஆனால் திறந்த, பலவகைச் சூழல்களில் அது அதீத நம்பிக்கை, மாயத் தோற்றம், பலவீனமான பொதுத் தோற்றம் போன்றவைகளுக்கு உட்படும்.
உடைபட்ட ஊன்றுகோல்
வேகமாக வீசிய இலையுதிர் காலக் காற்று மல்பெரி மரக்கிளை ஊன்றுகோலை உடைத்துப் பெருந்துயரத்தைத் தந்தது என்னும் பொருளில் இந்த ஹைக்கூ ஊன்றுகோல் இழந்த ஒரு மனிதனைக் காட்சிப்படுத்துகிறது. இது ஹைக்கூ எழுதப்பட்ட காலகட்டத்தில் கவிஞனுடைய வாழ்வில் நடந்த எதுவும் வாசகனுக்குத் தெரியாமற்போனாலும், கவிதை அதனளவில் முழுமையாகப் பொருளை உணர்த்துகிறது.
கோலமும் குணங்களும் அற்ப மாயைகளோ?
நம்முடைய உடலும், மனம் அல்லது மூளை அல்லது தன்னுணர்வு எப்படி செயல்படுகின்றது என்பதைப் பற்றி நாம் அறிந்துள்ளது மிகவும் குறைவு. ஆனால் அதைப் பற்றி அறிய மிகுந்த ஆவலும் கொண்டிருக்கிறோம். அறிதல் குறைந்து ஆர்வம் மிகுந்து இருக்கும் இந்த நிலைதான் ‘தன் உணர்வின் சிக்கல்கள்’ என்ற கருத்தைப் பற்றி பேசுவதற்கு ஏற்ற அறிவுத்தளத்தை சிலருக்குத் தருகிறது. அதாவது இடி மின்னல்களை அறிந்து கொள்வது எவ்வளவு கடினமோ அதைப்போலத்தான் தன்னுணர்வை புரிந்து கொள்வதும் என்ற கருத்து இதிலிருந்து தான் எழுந்து வருகிறது.
ராமச்சந்திரம்
நகரத்தில் வளர்ந்த பெண்ணான 18 வயது மாயாவிற்கு, கேட்டவரம்பாளையத்தின் இயற்கை அழகு மிகப் பிடித்து விடுகிறது. ஆனால் கிராமத்தின் பழக்க வழக்கங்கள் சில அவளுக்கு வியப்பையும், மெல்லிய அசூயையும் அளிக்கின்றன. கிராமத்து மனிதர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள். வாசுவிற்கு ஊரில் நல்ல மரியாதை. பட்டணத்துப் பெண்ணான மாயாவின் நடை, உடை, பாவனைகள்/நடத்தைகள் கிராம மக்களுக்கு புதிதாக இருக்கின்றன. கேட்டவரம்பாளையம் ஊருக்கு வந்த புதிதில், கிராமத்து மனிதர்கள், பெண்களின் சில கட்டுப்பெட்டித்தனங்கள் மேல் மனதுக்குள் சிறிய கேலியும், எள்ளலும் கொண்டிருக்கிறாள் மாயா.
பொய்யாய், வெறுங்கனவாய்ப் போனவன்
அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் எந்த அளவுக்கு நம்பிக்கையோ அதற்குச் சற்றும் குறையாத இறைநம்பிக்கையும் அவனுக்கிருந்தது. பிரபஞ்சம் முழுவதையும் கிருஷ்ணனின் லீலையாகத்தான் புரிந்துகொண்டான். இறைவனின் அளப்பறிய ஆற்றலையும் அளவில்லா பெருங்கருணையையும் கூட அவன் கணிததின் முடிவிலியைக் (infinity) கொண்டுதான் வரையறுப்பான். சக்தி சிவத்தில் பாதியென்றாலும் இருவரும் அறுதியில்லா வல்லமை கொண்டவர்கள்தான், ஏனெனில் முடிவிலியை எப்படிப் பங்கிட்டாலும் கிடைப்பது முடிவிலிதானே என்று சொல்வான். ஏன் தன் அம்மாவின் அதிதிறமைகளை ஒரு கணிதச் சமன்பாடாக வரையறுத்துப் புரிந்துகொள்ள முற்பட்டான். வயதாக ஆக, கணிதத்தையும் இயற்பியலையும் இறையைக் கொண்டு புரிந்துகொள்ளத் தலைப்பட்டான்.
கனவின் சிறை, கதையின் ஊர்தி
காண்டீபத்தின் மாலினி தேவி மற்றும் சுபகையின் உரையாடல்களில் முரண் ஒன்று உள்ளது. நாவல் முழுக்க கதைகள் சொல்லப்படுவதும், சில நேரங்களில் கேள்விக்குள்ளாக்கப்படுவதும் இந்த இரு பெண்களின் குரல்களில் தான் எனலாம். சந்தேகத்துடன் பேசும் சுபகை மகாபாரதம் கூறும் நகரங்களின் ஆண்டுகளைச் சேர்த்தால், அர்ஜுனன் நூறு வயதாக இருக்க வேண்டும் என்று ஓர் இடத்தில் சொல்வாள். மாலினி சிரிப்பினை அதற்குப் பதிலாக வைப்பாள். புராணத்தில் இடைவெளிகள் இருந்தே ஆக வேண்டும்; அதன் உண்மை தேதி என நகரும் நாட்களில் இல்லை என்று அவள் சொல்கிறாள். இந்த உரையாடல் வாசகனுக்கு ஒருவகை சுதந்திரத்தை அளிக்கிறது: நம்பாமலும், அதே நேரம் மறுக்காமலும் கதைகளை அனுபவிக்கலாம்
மனிதகுலத்திற்கான கனவா? பணத்திற்கான பேராசையா?
சில சமயங்களில் இந்த வழக்கு விசாரணை ஒரு சட்ட நடவடிக்கையாகத் தோன்றாமல், தொழில்நுட்பம், பிரபல கலாச்சாரம், பெருநிறுவனப் போர் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு மோதலைப் போலவே இருந்ததாகக் கூறப்படுகிறது. சட்டரீதியான வாதங்களுக்கு அடியில் இது வெறும் ஒரு நிறுவனப் பிரச்சினை மட்டுமல்ல. ஒரு காலத்தில் மிக நெருக்கமாக இருந்த எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் கூட்டணியின் சரிவாகவும் பார்க்கப்பட்டது.
பூட்டும் பாலையும்
துயரத்தைப் பாதுகாத்து
யாரிடம்
கையளிக்கக் காத்திருக்கிறது
இந்தப் பூட்டென
அறியும் ஆவலில்
அனிச்சையாக திரும்புகிறது
என் பார்வைகள்
எப்பொழுதும்
அமெரிக்கக் காப்பீடுகளின் வரலாறு
1993 செப்டம்பர் 22 அன்று, கிளிண்டன் நாடாளுமன்றத்தில் உரையாற்றித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். சுகாதாரப் பாதுகாப்புச் சட்டம் என்று அழைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: அனைத்து அமெரிக்கர்களுக்கும் கட்டாயக் காப்பீடு; வேலையளிப்பவர்கள் அனைவரும் தங்கள் ஊழியர்களின் காப்பீட்டு செலவில் 80 சதவீதம் பொறுப்பேற்றல்; மாநில அளவில் காப்பீட்டுச் சந்தைகளை ஒருங்கிணைக்கும் பிராந்தியக் கூட்டமைப்புகள்; நோயாளியின் வயது அல்லது உடல்நிலையைப் பொறுத்து அதிக விலை வசூலிக்கத் தடை; மற்றும் காப்பீட்டுக் கட்டண உயர்வைக் கட்டுப்படுத்தும் வரம்புகள்.
தனி மனிதனும் முழுப் படையும்
துருபர் சொல்வதில் உள்ள நியாயத்தை நான் முழுவதும் ஆதரிக்கிறேன். நானும், பலராமாரும் இரு தரப்புக்கும் சொந்தக்காரர்கள். எனவே , எந்த ஒரு முடிவெடுப்பதாக இருந்தாலும் பலவற்றையும் சீர்தூக்கி பார்த்தே முடிவெடுக்க வேண்டும். நீங்கள் அனைவரும் அனுபவசாலிகள் மட்டுமல்ல , அறிவிலும் சிறந்தவர்கள். யுத்தத்திற்கு தயாராவீர்களாக! துரியோதனனுக்கு கடைசி நேரத்தில் நல்புத்தி வந்தால் சமாதானத்திற்கு உடன்படுவான்
மாடி வரை வளர்ந்து
அவ்வியற்கையின் துளியோடு
ஏகாந்தத்தில் இசைந்தபடி
எதிர்பாராத ஒரு கணத்தில்
என் புத்தியில் விரிகிறது
படித்தவையும்… படிந்தவையும்…
மலர்ந்து நிற்பது மட்டுமே
என் இறையடியின் தருணம்
என காற்றில் அசைகின்றன
பறிக்க இயலாத எட்டாத பூக்கள்.
