மாறாக, தாரா திருமணம் செய்து கொள்வதில் சற்றும் ஈடுபாடு கொள்ளவில்லை. பலரோடு பாலுறவு கொள்வது என்பது வெளிப்படையாகவே மனிதர்களின் இயல்பாக இருக்கையில், திருமணம் செய்வது என்பது தெளிவாக அதற்கு எதிரானது என்பதால் அது ஒரு மரித்துப் போன கருத்து என்று அவள் சொன்னாள். ஆமரில்லிஸின் மரியாதைக்குரிய வயதை எட்டும்போது அவள் வேறுமாதிரி யோசிக்க ஆரம்பிப்பாளோ என்னவோ. ஆனால் இப்போது அவள் இருபத்தி ஐந்து வயதுக்காரி, ஜாம்பியாவுக்குப் பயணம் போய் அங்கு விருந்தினருக்கான விடுதி ஒன்றில் குடியிருப்பதைத் திட்டமிட்டுக் கொண்டிருந்தாள். (இதைச் சொன்னபடி) அவள் கண்ணடித்தாள்.
இயற்பியல் எனும் அழகும் மந்தணமும்
ஏழாவது பகுதி மனிதர்களாக நம்மையும் அறிவியல் பாய்ச்சல்களையும் ஒன்று சேர்த்துவிடுகிறது. நம்மைச் சுற்றி இருக்கும் உலகை முழுமையாக விளக்கிவிட முடியுமா? பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் நாம் இந்த உலகின் மையம் அல்ல எனும் அறிதலுக்கு வந்திருக்கிறோம். ஒரு ஆக்டோபஸ் மூளையை விட மனிதர்களின் சிந்தனைத் திறன் ஒற்றைப்படைத்தன்மையக் கொண்டிருக்கிறது என நாம் உணர்ந்திருக்கிறோம். விண்ணிலிருந்து மழை போல துகள்களும், கதிர்களும், தூரக்கோள்களின் கார்பன் துகள்களும் நம் மண்ணோடும் நீரோடும் கலக்காவிட்டால் இன்று உயிர் எனும் அமைப்பு உருவாகி இருக்காது.
துளிமம்
உப்பு வெண்மையிலும், மிளகு கருப்பிலும், மிளகாய் செந்நிறத்திலும் இருக்கிறது. ஏன்? பொருட்களுக்கு தனித்த நிறங்கள் இருக்கின்றன என்பது அணுக்களின் ஒளி உமிழ்வை ஆராய்கையில் தெரிய வருகிறது. நிறம் என்பது ஒளியின் அதிர்வெண் என்பதால், பொருட்கள் குறிப்பிட்ட சில அதிர்வெண்களிலேயே ஒளியை உமிழ்கின்றன. ஒரு பொருளை அவ்வாறு வகைப்படுத்த உதவும் அந்த சில அதிர்வெண்கள் – அதிர்வெண்களின் தொகை அப்பொருளின் நிறமாலை (Spectrum) எனப்படுகிறது.
ஏழு ஸ்வரங்களுக்குள்..
திரு. அரவிந்த் நீலகண்டன், அவர் சிறு வயதில் படித்த மிர் பதிப்பக கதைகளைப் பற்றி மிக அழகாக எழுதுவார். அதைப் போலவே கிரியும் சொல்கிறார். அறிவியல், அவருக்கு கதைகளின் வழியே சுவையான அனுபவமாக ஆகியிருக்கிறது. அறிவியலும், அறிதல் முறைகளும், அவர், தன் முன்னுரையில் சொல்வதைப் போலவே, இந்தக் கதைகளில் காணக் கிடைக்கின்றன. குறிப்பாக விஞ்ஞான ஆய்வுகளுக்காக, தொழில்நுட்பத்துறையும், கச்சிதத்திற்காக விஞ்ஞானமும் ஒன்றை ஒன்று உந்தியபடி வளர்வது சுவாரஸ்யமான போட்டி.
வளர்ப்புப் பிராணி
நான் நாயின் மூச்சை எண்ணிக்கொண்டிருந்தேன். ஒன்று. இரண்டு. மூன்று. ஒரு கட்டத்தில் எண்ணுவதை விட்டுவிட்டேன். எண்ணுவது பயமாக இருந்தது. அடுத்த நாள் காலை நாய் எழவில்லை. அப்பா தூக்கினார். எடை இல்லை. உயிர் போன உடலுக்கு எடை இருக்காது. அப்பா அதைத் தோட்டத்தின் பின்புறம் புதைத்தார். பெரிய குழி இல்லை. நாய்க்கு பெரிய இடம் தேவையில்லை. அம்மா அருகே வரவில்லை.
தான் வாழ்ந்தால் போதாதா?
ஆட்சி எனப்படுவது –
மதம் இனம் காசு பரத்தமை
பாம்பின் விடமாய்ச் சீறும் தேறல்!
தொழில் எனக் கொள்வதோ –
சினிமா அரசியல் கனிமம் கடத்தல்
கஞ்சா அபின் ரசாயன போதைப் பொருள்கள் விற்பனை
மது உற்பத்தி கலப்படம் தரகு!
தெஹ்ரானில்
சாலையின் ஓரத்தில் ஒரு சிறுவன் கிடந்தான்; அவன்மேல் ஒரு சாதாரண உடை அணிந்த அதிகாரி அமர்ந்திருந்தார். அந்த அதிகாரியிடம் லத்தி எதுவும் இல்லை ஆனால் அவருடைய கை கீழே மேலே என்று நகர்ந்துகொண்டிருந்தது. நான் சற்றே அருகே சென்றேன். அவர் கத்தியால் அந்த சிறுவனை குத்திக் கொண்டிருந்தார். அங்கிருந்து உடனடியாக ஓட தொடங்கினேன்.
பொய்
‘இப்ப இந்த அறுவது கல்யாணம் அவசியமா. எனக்கும் தான் அறுவது வந்துது. நானும் ஆச்சியும் திருக்கடையூர் பஸ் பிடித்துப் போனோம். காதும் காதும் வச்சமாதிரி சுப காரியத்த முடிச்சிகிட்டு வூட்டுக்கு வந்தம்.ஒரு பாயசம் வச்சம் வாழ எல போட்டு சாப்டம். பெரிய செலவு எதுவும் இல்ல. ஆனா கடன் வாங்கியாவது இப்ப இந்த மணிவிழாவை செஞ்சிகிணுமா’
ஜார் ஒழிக – சாம்ராஜின் சிறுகதைத் தொகுப்பு
மார்க்சிய இலட்சியத் தோழர்கள், சிறு வியாபாரிகளைக் கடுமையாகப் பாதிக்கும் புதிய வரிகளுக்கு எதிராக ‘தொழிலாளர் புரட்சி’ செய்யக் களத்துக்குத் தயாராகி வருகின்றனர். ஆனால் புரட்சி பரிதாபமாக நாய்க்கடியில் பிசுபிசுத்துப் போகிறது. கடைசியில், களத்தெருவில் காய் விற்பனை செய்யும் கிழவிகளும், கை வண்டியில் உணவு விற்றுக்கொண்டு இருந்த பாயும் துரத்தப்படுகிறார்கள்.
எது தர்மம்?
அந்தச் சந்தோஷத்தை அனுபவிக்க விடாமல் தடுப்பதற்கு என்றே பேருந்து நிலையங்களில் அலையும் விசித்திரமான மனிதர்களுள் ஒருவகையான ” பர்ஸ் தொலைஞ்சு போச்சு நூறு ரூபாய் குடுங்க. உங்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுவேன்” என்று போதை வீச்சம் அடிக்க உங்கள் தோள்களைச் சுரண்டும் மனிதன் என்னையும் சுரண்டினான். ஏதோ ஒரு பெண்ணின் தோளையும் சுரண்டியதால் அவனைக் கழுத்தில் ஒரு போடு போட்டுப் பேருந்திலிருந்து இறக்கிவிட்டனர்.
இங்கிலாந்திற்கு வந்த அச்சகம் – வில்லியம் காக்ஸ்டன்
ஒருவகையில் காக்ஸ்டன் ஒரு பதிப்பாளர் மட்டுமல்ல. ஒரு வாசகன் எதை விரும்புவான் என்பதைத் தெரிந்து கொண்டு, அதைத் தேடிச் சேர்த்து, எளிமையாகப் புத்தக வடிவில் அச்சாக்கி அதை சந்தைப்படுத்தும் ஒரு தொழிலை உருவாக்கினார். ஒவ்வொரு புத்தகமும் ஏன் முக்கியமானது என்பதை விளக்க, அவற்றுக்கு முன்னுரைகள் எழுதினார். பதிப்புத் தொழிலை ஆதரிக்கும் புரவலர்களை உருவாக்கினார். வாசகன் தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக புத்தகங்களைக் கடைவிரித்தார்.
கார்த்திக் திலகன் கவிதைகள்
ஓம் வடிவ பட்டமரத்தில்
கந்தப்பிரகாசமுடைய
வேல் முகமாக
தளிர் விட்டிருந்தது ஒற்றை இலை
உடலெல்லாம் பச்சை வேலால்
அலகு குத்திய ஆயிரம் மரங்களுக்கு இல்லாத அழகு அதற்கு
சாமுண்டியின் குழி
அவன் கற்படிகளில் ஏறி நடந்து கோயிலின் முற்றத்தில் மறைந்தான். விதியைப் போல பயமுறுத்தித் தன் முன்னால் நின்ற செங்குத்தான சுவர்களை ருக்மிணி வெறித்தாள். அந்தச் சுவர்கள் பாறைகளிலிருந்து வடிக்கப் பட்டவை ; கீழே ஒரு சிறையைப் போல சிறிது உயர்த்தப்பட்ட பகுதி. யாருமே, காற்று கூட அவளுடைய வேய்ந்த சிறிய குடிசையைப் பார்க்க முடிந்ததில்லை
ஒருமையுள் ஆமைபோல்
எனவே வைராக்யம் என்பது உலகை நிராகரிப்பது அல்ல. உலகத்தினின்றும் ஓடிப்போவது அல்ல. எனக்கு உளவியல் ரீதியான பாதுகாப்பு அல்லது மகிழ்ச்சி தேவைப்படும்போது நான் அவற்றுக்காக உலகைச் சார்ந்திருக்காமல், நிலையான ஒன்றையே சார்ந்திருப்பேன் என்ற தெளிவுதான் பற்றின்மை என்று அழைக்கப்படுகின்றது.
றெக்கை – அத்தியாயம் 15
அவள் தலை திருப்பி நோக்க, பின் இருக்கைகள் வெறுமையாக இருந்தன. மெல்லச் சூழும் இருட்டில் எங்கேயோ சில்வண்டுகள் இரண்டு மாறிமாறிக் கிரீச்சிட்டன. கிட்டா வயதுப் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடத்தில் கிடைக்கும் மொழியறிவும், கணித, வரலாற்று, புவியியல் அறிவும் போக வகுப்புத் தோழர்கள் மூலம் கிடைக்கும் பயங்கள் அறிவு முக்கியமானது. பெரியவர்கள் மூட நம்பிக்கை என்று தள்ளும் இந்த வகை அறிவில் பாம்பு, தேள், சிலந்தி, வண்டு குறித்து பயங்களும் உண்டு.
ரம்யா மனோகரன் கவிதைகள்
ஆடி காற்று அவள் உவகைக்கு இதமாய்
தென்னையின் மூச்சினை அவள் மேல் இறக்குகிறது;
அச்சமயம் அவள் தென்னைகளையும், அதனொன்றில் இருக்கும் என்னையும் பார்ப்பதுண்டு; நான் பார்ப்பது அவளுக்கு தெரியாது..
அவள் என்னை பார்த்து கொண்டே இருப்பாள்
நான் யார் என்று தெரியுமா? தெரியாதா? என்று எனக்குத் தெரியாது..
ஆலிஸ் பால்
தொழுநோய் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு ஆலிஸ் மருந்தைக் கொடுத்துவிட்டிருந்தாலும், தனது ஆய்வு முடிவை அவள் பிரசுரிக்காமலிருந்தாள். அப்போதுதான் வந்தார் ஆர்தர் டீன் (Arthur Dean) எனும் அறமற்ற ஒருவர். ஆலிஸ் அங்கு பணிபுரிகையில் ஆர்தர் டீன் ஹவாய் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார். மிக மதிக்கப்பட்ட விஞ்ஞானியான அவர், பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைகளையும் ஆய்வகங்களையும் அவரது மொத்தக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
பூஜ்யத்திற்கு உள்ளிருந்து
அழிவு என்பது மாற்றம்; அழிவு என்பதற்கு ‘இல்லாமல் போவது’ என்ற பொருளில்லை. ஒன்றிலிருந்து மற்றொன்றாக, பொருள்- ஆற்றல்- சக்தி என்று வடிவங்கள் அமைகின்றன.
ஈரநிலம்
அதற்குள் இரும்பு கழி கோபுர சிப்பியை உடைத்திருந்தது. அதன் உள்ளில் இருந்து நண்டு போன்ற ஏதோ ஒரு ஜீவராசி சூரியனில் பள பளக்கும் மஞ்சள் நிறக் கல் ஒன்றை அதன் துடிக்கும் கால்களால் நகர்த்திக் கொண்டிருந்தது. கல்லை, உடைந்த ஓட்டில் இருந்து, எடுத்து ஆள்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையே பிடித்து, சூரியனை நோக்கி காண்பித்து, ‘கலர் பாத்தீங்களா? புஷ்பராகக் கல். அதிர்ஷ்ட கல். மோதரம் செஞ்சு விரல்ல மாட்டுனீங்கன்னா மனசுக்கு ரொம்ப அமைதி கிடைக்கும். அவ்வளவு சக்தி’ என்று நிமிடத்தில் ஜோதிடராக உரு மாறினான் இளைஞன்.
உயிரின் மூலக்கூறு சமச்சீரின்மையை எது தூண்டியது?
பண்டைய பூமியில், காந்தமயமான கனிமங்கள் எலக்ட்ரான் ஸ்பின்னிற்கும் மூலக்கூறின் வடிவத்திற்கும் இடையில் மூலமொழி ஒன்றை பேச வைத்திருக்கலாம். சமச்சீரின்மை சமநிலையிலான சிறிய வேறுபாட்டை தன்னைத்தானே வலுப்படுத்தும் உறுதியான வடிவமைப்புகளாக மாற்ற உதவியிருக்கலாம். அத்தகைய வடிவங்கள், ஆர்.ஏ.ஓ போன்றவற்றின் தொடர்ச்சியிலும் உருவெடுத்து, அவற்றின் உருவாக்கத்திற்கும், பின்னர் புரதங்களுக்கும், செல்களுக்கும் வழி வகுத்தன.
தோழமை
“உன்னோடு இப்படிப் பேசினா மனசு லேசானா மாதிரி இருக்கு கிஷன்” கொஞ்சம் சாதாரண நிலைக்கு வந்து சொன்னாள். திரும்பிச் செல்ல வேண்டும் என்பதால் சற்று நேரம் அமர்ந்திருந்து விட்டு கிஷன் வீட்டுக்குத் திரும்பினான். வீட்டுக்கு வரும் வழியில் கெளரி ஆத்தாவின் பார்வை அவனுடைய முதுகில் குத்துவது போல உணர்ந்தான்.
அமைதி நடந்த அகண்ட நிலம்
சமூக ஊடகங்களில் இந்தப் பயணம் பரவலாகப் பகிரப்பட்டு பல இடங்களில் எதிர்பாராத அளவுக்கு வரவேற்பைப் பெற்றது. சிறிய நகரங்களிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாலையோரங்களில் காத்திருந்தனர். பூங்கொத்துகள், பழங்கள், தண்ணீர், கம்பளிகள், வாழ்த்து அட்டைகளைக் கொடுத்து வணங்கி நின்றனர். தினமும் பல படங்களை சமூக வலைதளங்களில் போட்டு கண்ணீர் உருகினர். மிசிசிப்பி, அலபாமா, கரோலினா பகுதிகளில் குளிர்கால மழை, காற்று, பனி என்றிருந்தாலும் வழக்கமான தியான ஒழுங்கைத் தளர்த்தாமல் அவர்கள் நடையை மேற்கொண்ட மனஉறுதியைக் கண்டு விக்கித்து நின்றது அமெரிக்கா!
தெய்வநல்லூர் கதைகள்-34
அன்றைய நாளின் மாலையில் பிரேம் தள்ளாட ஆரம்பித்ததும் நாங்கள் சற்று பயந்தோம். ஆனால் பிரேம் சமாளித்துக் கொண்டார். என்னை அழைத்து ஜெயராஜ் சார் மேசையில் இருக்கும் குறிப்பேட்டை கொண்டுவர முடியுமா எனக் கேட்டார். காளிமுத்து அண்ணன் கேட் அருகே வருகையில் நான் பாய்ந்தோடி என் பை உள்ளே இருப்பதாகவும், அதில்தான் வீட்டின் ‘தாக்கோல்’ இருப்பதாகவும் கெஞ்ச, ஒரே நிமிசத்துல ஓடி வந்துரணும் என அனுமதித்து வேறு எவரும் உள்ளே வராமல் நின்று கொண்டார். நான் பாய்ந்து ஓடி ஆசிரியர் ஓய்வறைக்கு சென்றபோது அங்கு அந்த குறிப்பேடும் இல்லை, ஜெயராஜ் சாரும் இல்லை.
அறுந்த பட்டம்
காற்றாடியும் தன்னைச் சுற்றியிருக்கும் காற்றாலும், தான் இணைக்கப்பட்டிருக்கும் நூலாலும் உயரே பறக்கிறது. காற்றின் விசையால் உயர்கிறது, பறக்கிறது. நூலின் இணைப்பால் நிலைத்து நிற்கிறது. காற்றாடிக்கு நூலுடன் உள்ள இணைப்பு துண்டிக்கப்படுகையில் காற்றின் விசையால் அதற்கு எந்தப் பலனும் கிடைக்காமல் வீழ்கிறது.
கூட்டு முயற்சியும் பொது நலமும்
ஒரு மனிதனின் ஆரோக்கியம் மருத்துவச் சேவையால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. ஆராய்ச்சிகள் சொல்வது என்னவெனில், ஒரு நபரின் உடல் நலனில் 80 சதவீதம் வரை மருத்துவமனை சார்பற்றக் காரணிகளால் — அதாவது சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் காரணிகளால் — தீர்மானிக்கப்படுகின்றன.
உலகக் கோப்பை உற்சவம்!
முதல் போட்டியில் நெதர்லாந்து அணி பாகிஸ்தானை கிட்டத்தட்ட தோற்கடித்துவிட்டனர். அதே போல அமெரிக்கா இந்தியாவையும், ஆப்கானிஸ்தான் நியூசிலாந்தையும், நேபால் இங்கிலாந்தையும் திணறச் செய்தனர். பெரிய போட்டிகளில் வெற்றி பெற்ற அனுபவம் இல்லாத காரணத்தினாலேயே கடைசிக் கணத்தில் அவர்கள் கோட்டை விட்டனர். அவர்கள் முக்கியமான சில கேட்சுகளைக் கோட்டை விட்டதும் கூட ஒரு காரணம். யாருக்கும் வெற்றி உறுதி இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
துள்ளுகின்ற எனது உள்ளம்
இந்தக்குழந்தை சிறுவயதிலிருந்தே இச்செய்கைகளை எதிர்கொண்டு அவற்றை எவ்வாறு கையாளவேண்டும் என்று தனக்கென ஒரு வழியை ஏற்படுத்திக் கொண்டவள். ஆகவே, அந்தப் பொறுமையும், விடாமுயற்சியும் இடைவிடாமல் தொடர்கின்றன. சிறுவனோ, விஷமங்கள் செய்தே வளர்ந்தவன். ஆகவே மற்றவர்களது பொருள்களை நாசம் செய்வதே அவன் குறிக்கோள். பொருள் இவ்வளவுதான். இதற்கு சமய, ஆன்மீக விளக்கங்களைப் பொருத்தியோ பொருத்தாமலோ பொருள்கொள்வதை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன்.
