அவனிடம் ஏதோ ஒன்று நம்மை வசீகரிக்கிறது. அவன் அணிந்திருக்கும் ஓவர்கோட் மீது அவன் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை. அது அபூர்வமானது, இந்நூற்றாண்டில் அனேகமாக காலாவதியாகி விட்டதென்றே நினைக்கிறேன். அரிதாகிவிட்டதும் அதன் வசீகரத்தை அதிகரித்துக் காட்டுவதாக இருக்கலாம். தன் அவலத்தைப் பொதுமைப்படுத்த நாம் அனைவருமே குமாஸ்தாக்கள்தான் என்று அவன் கைகொட்டிச் சிரிக்கிறான். உண்மைதான், நமக்கும் ஒரு ஓவர்கோட் தேவையாக இருக்கிறது. அதை இவ்வளவு இறுக்கமாக, சருமமாகிவிடும் அளவுக்குப் பற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கைக்காகவே நாம் அக்கயவனுடன் பயணிக்கிறோம். இதுவே ஆபீஸின் வெற்றியும்கூட.
அவரவர் அடிசில்
சுவரோரம் கிடந்த சூரல் நாற்காலியில் சாய்ந்து, தெருவை மேய்ந்தவாறு அமர்ந்திருந்தார் கும்பமுனி. கால்களிரண்டும் படிப்புரையின் மூன்றடி உயர காப்புச் சுவர் மீது கிடந்தன. பாம்பணையில் துயில்கின்ற அரங்கன் எனும் மிதப்பு மனதில். அரைவேட்டி முட்டுக்குக் கீழே முழு சுதந்திரத்துடன் கற்பழிக்காத கனவான்கள் கழகத்தின் கட்சிக் கொடிபோல் அசைந்து கொண்டிருந்தது “அவரவர் அடிசில்”
வினோத் குமார் சுக்லாவின் கவிதைகள்
ஒரு சுவரில் வாழ்ந்து வந்த ஒரு ஜன்னலிருந்தது.
அந்த ஜன்னலால் வாழ்ந்து வந்தது ஒரு காட்சி:
ஒரு குடில், இரு நடைபாதைகள், ஒரு நதி,
குளங்களிரண்டு.
ஒரே ஒரு வானம் அவற்றுக்கு போதுமாயிருந்தது.
மனிதர்கள் வந்து போயினர்.
மரங்களும், பறவைகளும் அங்கிருந்தன.
ஒவ்வொன்றும் ஜன்னலில் வாழ்ந்து வந்தது.
‘பாலை இறக்கலையோ… பாலகனைத் தூக்கலையோ…’
எந்த ஒரு நல்ல படைப்பினை நாம் ருசித்து அனுபவிக்கிற போதும் நம் வாழ்வின் அனுபவத்தோடு எங்கேனும் அது பொருந்திவிட்டால் நமக்கு இன்னும் மேலான ஒட்டுதலை அது தந்துவிடுவது இயல்பு. அப்படித்தான் ‘நிலம் + நீதி = கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்’ என்ற தலைப்பில் அண்ணன் ரவிசுப்பிரமணியன் இயக்கிய ஆவணப்படத்தைக் கண்டபோது, “‘பாலை இறக்கலையோ… பாலகனைத் தூக்கலையோ…’”
JANUS
முதல் கணம், தாம் எங்கிருக்கிறோம் என்பதே அமருக்கு நினைவிற்கு வரவில்லை. கண் விழித்துவிட்டோமோ? இது பணகுடியா…இல்லை. மடிப்பாக்கம் வீடா, இல்லை… மெல்ல புரண்டு படுத்தார். ஒற்றைப் படுக்கையறை க்ரீச் சத்தம்… எங்கோ வெகு தொலைவில், அடிவானத்தில் மங்கித்தெரியும் ஓர் மலை உச்சியில் ஒரு 0 வாட்ஸ் பல்ப் ஒளிப்புள்ளி “JANUS”
வனத்தின் மடியில் — ஓர் அழிப்பின் வாசிப்பு
ச. பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ – புத்தக வாசிப்பனுபவம் ‘ சோளகர் ’ என்பார் தமிழக மற்றும் கர்நாடக எல்லை வனப்பகுதிகளில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவர் ஆவர். அம்மக்களின் தாய் மொழியான சோளகர் மொழியில் இச்சொல்லிற்கு “ வனத்தைச் சார்ந்தவர்கள் ” என்பது பொருள். மேலும், அம்மக்கள் “வனத்தின் மடியில் — ஓர் அழிப்பின் வாசிப்பு”
அறுந்துவிடாத நூல்
மதுரையின் வெயில் அந்திசாயும் நேரத்திலும் பிசுபிசுவென சட்டையை இழுத்தது. ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தின் இரைச்சலுக்கு நடுவே நின்றபோது, எண்பதுகளைக் கடந்த உஸ்மான் பாயின் முழங்கால் மூட்டுகள் லேசாகத் தாளம் தப்பின. ஆனாலும் நடை நின்றுவிடவில்லை. காலையில் நிலக்கோட்டையில் பார்த்த அந்த அடக்கஸ்தலத்தின் ஈரம் இன்னும் செருப்படியில் ஒட்டியிருப்பது போன்ற “அறுந்துவிடாத நூல்”
கர்மத்தின் வகையறிதல்
எனவே கிருஷ்ணரின் கூற்றுப்படி இருப்பது இரண்டே இரண்டு யோகங்கள்தாம். கர்மயோகம், மற்றும் ஞானயோகம். விளக்குவதற்கு வசதிக்காகவும், ஒரு குறிப்பிட்ட யோகம் எம்முறையில் பயிலப்படுகின்றது என்பதைப் பொறுத்தும் அவற்றுக்கு வெவ்வேறு பெயர்கள் கொடுப்பது வழக்கத்தில் இருந்து வருகின்றது. எனவேதான் ராஜயோகம், பக்தியோகம், உபாசனாயோகம் என்ற பிரிவுகளும் பேசப்படுகின்றன. ஆனால் சிந்தித்துப் பார்த்தால் மேற்கூறப்பட்ட மூன்று யோகங்களையும் கர்மயோகம் என்ற பிரிவுக்குள் அடக்கி விடலாம்.
றெக்கை – அத்தியாயம் 18
பேரிளம்பெண் நிர்மலாவையும் முத்தச்சியையும் கையெடுத்து வணங்கி, அக்கச்சி, முத்தச்சி ரெண்டு வியக்திகளும் என்னை காப்பாற்றணும்..என்று சொல்லியபோது சிறுமி றெக்கை விரித்தபடி நாலடி பறந்து தெருமுனைக்கு போக, தெருநாய்கள் பலமாக திட்டி அவளை கார் பக்கம் விரட்டின. அடுத்த வினாடி வெண்சிறகு மறைந்துபட அவளோர் ஓநாயாகி பற்களை வெளியே நீட்டி பக்கத்தில் குரைத்தபடி இருந்த தெருநெய் ஒன்றை கழுத்தில் கடித்து தட்சணம் உயிருண்டோ என்று அங்கே இருந்த மனுஷர்களும், நாய்களும் – பேரிளம்சிறகுப் பெண் தவிர – வியப்பும் பயமுமாக உறைந்து போக வைத்தன.
இந்தியத் தாவரவியலின் முன்னோடிகள் – அச்சுதனும் ரீடியும்
கொச்சியிலிருந்த பிரம்மாண்டமான அந்த டச்சுக்கோட்டை முழுக்க உப்புக் காற்றின் ஈரம் நிறைந்திருந்தது. கொச்சி ஆளுனரான வான் ரீடி மிகுந்த மனவருத்தத்துடன் ஒரு சாளரத்தின் அருகே அமர்ந்து வெளியே விரிந்திருந்த அரபிக்கடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அது 1674-ம் ஆண்டு. ஐரோப்பிய இறைப்பணியாளர் மேத்யூவின் உதவியுடன் மலபார் பகுதியின் தாவரங்களை ஆவணப்படுத்தும் “இந்தியத் தாவரவியலின் முன்னோடிகள் – அச்சுதனும் ரீடியும்”
தலைப்புச் செய்திகள்
பயங்கரமான கனவிலிருந்து திடுக்கிட்டு எழுவது போல்தான் இருந்தது, மொபைலில் படித்த செய்தி. சுந்தரேசன் இறந்து போய்விட்டான். மரியாதையுடன் சொல்லணும் இல்லையா? ‘…காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.’ வாட்சப் செய்தி. போன மாதம் வரை அவனது வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டிருந்தவன் இப்போ போயிட்டான். உடனே சுந்தரேசனின் மொபைலுக்கே போன் “தலைப்புச் செய்திகள்”
தோல்விகளைக் கடந்து எழுந்த தேசம்
அமெரிக்காவின் உணர்ச்சி நிறைந்த வரலாறு ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள அந்த நாட்டில் வாழ்ந்த அனுபவம் மட்டுமில்லாமல் அதன் வரலாறு, அங்கு நடக்கும் அரசியல், பொது நிகழ்வுகள், வாழ்க்கை முறை, மக்கள் என்று அனைத்தையும் வாசித்தும், கண்டும், கேட்டும் உணர்ந்துகொள்ள வேண்டும். என் குடும்பத்துடன் அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்து கிட்டத்தட்ட கால் “தோல்விகளைக் கடந்து எழுந்த தேசம்”
கேள்வி-பதில்
நான் கண்விழித்தபோது, விண்களனிற்குள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தேன். விண்களன் எந்த வித அசைவுமின்றி நிற்பது போல் இருந்தாலும் அது வேகமாக வெற்றிடத்தின் ஆழத்திற்குள் சீறிப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது. குறுகிய ஜன்னல் வழியே பார்த்தேன். அகண்ட கருமை நிற பிரபஞ்சத்தில் விண்வெளியின் எந்தப் பகுதி அது என்பதை என்னால் “கேள்வி-பதில்”
காப்பீட்டின் பிறப்பிடம்: ஐரோப்பா
ஒரு அரசியல்வாதியின் கணக்கும், ஒரு கனவாளியின் போராட்டமும் சுகாதாரக் கொள்கைகளில் முக்கியமானது காப்பீடு. வாகனங்கள், வீடு எல்லாவற்றுக்குமே காப்பீடு உண்டு. அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மிக குறைந்த அளவில் காப்பீடு இல்லாவிட்டால், ஒருவர் வாகனமே வாங்கக் கூட இயலாது. வீட்டுக்கான காப்பீடு தீ, வெள்ளம் போன்றவற்றால் நஷ்டமடையும் “காப்பீட்டின் பிறப்பிடம்: ஐரோப்பா”
மதியம்
மதிய நேரக் குட்டித் தூக்கத்திலிருந்து, அம்மா ஓர் உந்துதல் உணர்வோடு கண் விழித்த போது, ஜன்னலினருகே கிடந்த அழுக்கான, கசங்கிப் போயிருந்த ஒரு துண்டுச் சீட்டைப் பார்த்தாள். மதியச் சூரியனின் புழுதி படர்ந்த காற்றின் வேகத்தில் ஒரு கடிதம் துருப்பிடித்த ஜன்னல் கம்பிகளினூடே உள்ளே வந்து விழுந்திருந்தது. ஹரிதாசன் வீட்டிற்கு வருகிறான். அந்தச் சீட்டின் “மதியம்”
சிவப்பில் ஒளிரும் மண்ணின் நினைவும் மனதின் மொழியும்
சிவப்பு என்பது வெறும் நிறமல்ல; அது கற்கால மனிதன் தன் உள்ளுக்குள் புதைந்திருந்த உணர்வுகளை ஒளியின் மூலம் வெளியில் கொண்டு வந்ததற்கான முதல் சாட்சி. நிறங்களில் சிவப்பு மட்டும் கண்ணில் விழும் முன்பே இதயத்தில் பதிந்துவிடும். அதனால்தான் என்னவோ மனித வரலாற்றின் அனைத்து காலங்களிலும் ரத்தத்தின் சுமை, “சிவப்பில் ஒளிரும் மண்ணின் நினைவும் மனதின் மொழியும்”
பெதும்பை
அத்துவானக் காட்டைப் போல் நீண்டு பரந்து விரிந்திருந்தது வயல். சுஜித்தாவும் தாயார் தெய்வானையும் நடு வயலிற்குள் நின்று களை பிடுங்கிக்கொண்டு நிற்கின்றார்கள். அவர்களைப் போலவே வேறு சிலரும், அங்கே தலை தெரியும் தூரத்தில் நின்று வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். வயல் அவர்களுடையது அல்ல. வறுமை அவர்களை அங்கே கொண்டுவந்து “பெதும்பை”
துளிம வெளியும் சார்பான காலமும்
இதுவரை என்னைப் பின்தொடர்ந்திருந்தாலே, அடிப்படை இயற்பியலின் வழி உலகின் தற்போதைய காட்சியை அறிவதற்கான அனைத்து விஷயங்களையும் – அதன் வலிமை, பலவீனம், எல்லைகள் உட்பட – தெரிந்து கொண்டிருப்பீர்கள். 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வளைந்த காலவெளி, எப்படி என்று தெரியாமலே தொடர்ந்து விரிவடைந்து கொண்டிருக்கிறது. வெளி “துளிம வெளியும் சார்பான காலமும்”
தில தானம்
தெலுங்கில்: மணி வட்லமானி మణి వడ్లమాని (Mani Vadallamani) தமிழில்: ராஜி ரகுநாதன் இரண்டு நாட்களாக ஜுரம் விட்டு விட்டு அடிக்கிறது. ஏதோ மாத்திரைகள் போட்டுக் கொண்டாலும் பெரிதாகப் பலன் தெரியவில்லை. “வரிசையாக மூன்று நாட்கள் வேலை இருக்கும். வேறு எங்கும் வேலை ஒப்புக்கொள்ள வேண்டாம்” என்று “தில தானம்”
பிள்ளையின்மை
குழந்தையற்றவள்பொம்மை விற்கிறாள்விதி கவிஞர்: ரென்செண்ட்சு (1654 – 1707) உமஸுமெனொஹினாகஷிட்சுகுசொஅவரெனரு 石女の雛かしづくぞ哀れなる கிரிகோரியன் நாட்காட்டியின்படி ஒரு மார்ச் 3ம் தேதி, பழைய ஜப்பானிய நாட்காட்டியின்படி மூன்றாம் மாதத்தின் மூன்றாம் தேதி பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அதே நாள் ஹினா மட்சுரி என்னும் பெயரில் பொம்மைகள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. “பிள்ளையின்மை”
நாய்வால்
என் வீட்டுப் பின்பக்கம் ஒரு காலி மனை இருந்தது.அதனை விலைக்கு வாங்க முடியுமா என்ன, அது எல்லாம் இப்போதைக்குச் சாத்தியமே இல்லை. நான் மாதச்சம்பளம் வாங்கி நாட்களை ஓட்டும் நடுத்தரக் குடும்பத்துக்காரன். அதற்குத்தான் பிராப்தம் இல்லை விடுங்கள் அந்த மனையை விலைக்கு வாங்கி வீடு கட்டிக்கொண்டு வரும் “நாய்வால்”
உடைந்த காலவரிசைகளும் நம்பகமற்ற சுயமும் (2)
இரு இயக்குநர்களும் பகுத்தறிவுக்கும் (Rationality) அதன் தோல்விகளுக்கும் இடையிலான உறவில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டுள்ளனர். தர்க்கம் மற்றும் கட்டுப்பாட்டை நோக்கிய அதீத முனைப்பு எவ்வாறு அபத்தமான அல்லது விபரீதமான விளைவுகளைத் தருகிறது என்பதை இவர்கள் ஆராய்கின்றனர். குப்ரிக்கின் 2001 படத்தில், HAL 9000 கணினி, மனிதர்களைக் காப்பதை விடத் தனது ‘பணிக்கு’ (Mission) முன்னுரிமை அளிப்பதன் மூலம், ஒரு உறைந்த பகுத்தறிவு மனித உயிர்களைப் பறிக்கத் துணிவதைக் காட்டுகிறார்.
கூடடைதல்
புழுக்கம் மிகுதியாக இருந்ததால் அப்பா அன்று சட்டை அணிந்திருக்கவில்லை. திண்ணை விளிம்பில் மடித்துவைக்கப்பட்டிருந்த தினசரி அருகே உள்ளங்கையளவு ரேடியோவில் இருந்து சன்னமான இசை கேட்டுக்கொண்டிருந்தது. அவருடன் அமர்ந்திருந்த அம்மா வெந்த பனங்கிழங்கை சிறு சிறுத் துண்டுகளாக நொடித்து அவர் கையில் வைத்துக்கொண்டிருந்தாள். மெனோபாஸை நெருங்கிக்கொண்டிருந்த அவளது வலதுமூட்டில் நிரந்தமான “கூடடைதல்”
தானே ஒளிர்வது தன்னில் ஒளிர்வது
புறவயமாக நமக்குத் தென்படும் உலகம் என்று ஒன்று இருக்கிறது அகமுகமாக நம்முள் ஒரு இயக்கம் இருக்கிறது. செயல்படு கருவிகளும், உணர்தல் தன்மை உள்ள கருவிகளும் மனிதனிடத்தே இருக்கின்றன. அக்கருவிகளும் கூட கண்கள் அறியாத ஒரு செயலை அல்லது செயல்களை நம் உள்ளே நடத்துகின்றன. முன்னொரு காலத்தில் அறிதல் என்பது “தானே ஒளிர்வது தன்னில் ஒளிர்வது”
ஒற்றைக் கண் பறவையின் வானம்
ஐம்பொன் விக்கிரகம் தீர்த்தமாடும்
சமுத்திரம்
ஒவ்வொரு காலடியாக எடுத்து வைத்து
குழந்தையைப்போல மணல் பரப்பில்
தவழ்ந்து விளையாடி,
உப்பு நீரில் பாதம் எடுத்து வைக்கையில்;
சமுத்திரத்தை ஒழித்த நிலவின் வெளிச்சத்தில்;
