கன்னட அரசன் சிக்க தேவராஜன். இவனும் நரசிம்மனைப்போல புதிய நீர்தேக்கங்களை ஏற்படுத்தி தமிழ்நாட்டுக்கு நீர் கிடைக்காமல் செய்தான். அப்போது தஞ்சையை ஆண்டுகொண்டிருந்த சரபோஜியும் மதுரையை ஆண்டுகொண்டிருந்த ராணி மங்கம்மாளும் அந்த நீர்தேக்கங்களை உடைக்க கூட்டாகப் படையை அனுப்பிவைத்தனர். ஆனால் படை அங்கு போய்ச்சேருவதற்கு முன்னாலேயே பெருவெள்ளம் ஏற்பட்டு நீர்த்தேக்கங்கள் தாமாகவே உடைந்துபோயின.
எதிர்மறை சோதனை வழக்கு
ஒரு கிரகத்தால் உருவாக்கப்படும் உயிர், மற்றொரு கிரகத்தால் உருவாக்கப்படும் உயிராவது எதைக் குறிக்கிறது? ஒரு கிரகம், தன் சாத்தியங்களுக்குள் ஒரு உயிரை உருவாக்க எத்தனை காலமெடுத்துக்கொள்கிறது? அந்தத் தயாரிப்பை, அந்த முனைப்பை, அதில் செலுத்தப்படும் உழைப்பை ஒரு தழுவு கருவி ஒரு நொடியில் கடப்பது என்பது எதைக்குறிக்கிறது? இதன் பொருள் என்ன?
காலமும் வெளியும் கடந்து – ஐன்ஸ்டைனைச் சந்திக்கும் பிக்காஸோ
1905-ஆம் ஆண்டு ஐன்ஸ்டைனின் பேரற்புத ஆண்டு (Annus mirabilis) என்று போற்றப்படுகிறது. அந்த வருடத்தில் மார்ச்சு மாதம் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு ஒரு ஆய்வுக் கட்டுரையாக நான்கு கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். முதலாவது கட்டுரை ஒளிமின் விளைவை (photoelectric effect) விளக்கியது. இது ஒளியன் (photon) என்ற அடிப்படைக் கருத்துருவாக்கத்திற்கு வித்திட்டது. இது அவருக்கு நோபெல் பரிசைப் பெற்றுத்தந்தது. இரண்டாவது கட்டுரை அணுக்களின் ஓய்வில்லாத அலைச்சலான ப்ரொனியன் இயக்கத்தை (Brownian motion) விளக்கியது. இது அணுக்களின் இருப்பைக் கருத்தியல் ரீதியாக உறுதி செய்தது.
தூண்டில் மீன்கள்
மீன் கிடைக்காத கோபமும் சேர்ந்துகொள்ள அவன் சாப்பிட உட்கார்ந்ததும், “புள்ளைக்கு வயசு ஏறிட்டே போவுதுங்க. இன்னும் எத்தன நாளுக்கு இப்பிடியே மீன் புடிச்சுட்டே வாழ்க்கய ஓட்டிட்டு இரிக்கலாம்னு நெனச்சுட்டு இரிக்கீங்க? கல்யாணம் காச்சினு நாலு பக்கம் பொண்ணக் கூட்டிட்டுப் போவும்போது இப்பிடி மூளியாட்டம் கூட்டிக்கிட்டுப் போனா பாக்குறவங்க என்ன நெனப்பாங்க? யாராச்சும் பொண்ணு கேட்டு வருவங்களக்கும்? கொஞ்சமாச்சும் நகநட்டு பொண்ணு கழுத்துல வேணுமில்ல? செயிக்கிள் கடைலதா வருமானம் இல்லேனு தெரியுதுல்ல வேற ஏதாச்சும் வேலை பாக்கலாமல்ல? எவ்வளவுதா நாஞ்சொல்றது.
ஈழத்தின் தமிழ்த்திரைப்படங்கள் வர்த்தக ரீதியில் வெற்றி சார்பான பார்வை
தாண்டி ஒரு படைப்பை தயாரித்து வெளியிட்டால் அதற்காக செலவிடப்பட்ட முதலீட்டில் குறிப்பிட்ட தொகையை த்தானும் பெறமுடியாத இக்கட்டான தோல்வி நிலையை பல படைப்புகள் சந்தித்து விடுகின்றன. இவ்வாறான தோல்விகள் படைப்பாளர்களை மீளவும் தலை தூக்கமுடியாத நிலைக்கும் கொண்டு சேர்த்துவிடுகின்றன். அப்படியான நிலைமையிருந்தும் பலர் துணிவுடன் அடுத்தடுத்த படைப்புகளை உருவாக்கும் முயற்சியில் துணிகரமாக ஈடுபடுவதை நாம் எம் கண்முன்னே காணக்கூடியதாக இருக்கின்றது.
வேண்டத்தக்கது
அலசிப் பிழிந்து, சட்டத்தில் ஒரு பக்கம் புடவையின் முனையில் முடிச்சிட்டு உலர்த்திய மடிசார் புடவை திண்ணையின் சட்டம் போட்ட மறைப்பில் காய்ந்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு காற்று அசைவிற்கும் அழுத்தமான வெந்தய நிறமும், சிவப்புக்கரையும், நடுவில் இடதும் வலதுமான வரிகளும் கொண்ட தேவேந்திரா ஒன்பது கஜம் புடவை கொடியைப்போல படபடத்தது.
ஸ்டேஷனர்ஸ் கம்பெனி
“பாரடைஸ் லாஸ்ட்” என்ற பெரும் காவியத்தைப் பின்னாட்களில் இயற்றிய ஜான் மில்டன் என்ற கவிஞர், 1644 ஆண்டு அவர் கம்பெனியின் அனுமதி பெறாமல், தனது பெயரில், கருத்துச் சுதந்திரம் குறித்த ஒரு பதிப்பை (Areopagitica) வெளியிட்டார். பண்டைய ஏதென்ஸ் நகரில் நிகழ்ந்த பேருரை ஒன்றின் பெயரையே தலைப்பாகப் பயன்படுத்தி இருந்தார். ஒரு உண்மை, பொய் ஒன்றை போட்டியில் வெல்லும். உண்மையை நிலைநாட்ட தணிக்கை தேவையில்லை என்றும், தணிக்கை செய்வது, அதிகாரத்தைக் குவிப்பதைத் தவிர வெறும் ஒரு பலனையும் கொடுக்காது என்று வாதாடினார்.
இலக்கிய ஏஜெண்டுடன் ஒரு சந்திப்பு
கதாநாயகன் யாரு? அனாதயா சென்னைக்கு வந்து, பாத்திரக்கடைல வேலை பாத்து, அடி ஒதயெல்லாம்பட்டு, துபாய் போய் சம்பாரிச்சி, பெரிய ஆளாகி, சிங்கப்பூர்ல போய்ப் பாத்திரக்கடை வைக்கிறாரா? அப்புறம் பெங்களூர்ல கம்ப்யூட்டர் கம்பெனி ஆரம்பிக்கிறாரா? தமிழ் மீடியத்துல படிச்சவங்களுக்கு மட்டுந்தான் வேல குடுக்கிறாரா? தீம் ரொம்ப நல்லாருக்கே! இப்டில்லாம் பாசிட்டிவ்வா எழுதினாத்தான் இளைஞர்க படிக்கிறாங்க.
கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே
இந்த அரைத்தூக்க நிலை அல்லது தூக்க மயக்கம் பல சுவையான விவாதங்களுக்கும் இட்டுச் சென்றிருக்கிறது; புதிர் நிறைந்த ஒன்று இது, சட்டமும், தத்துவமும் இதை எப்படிப் பார்க்கின்றன? தூக்கத்தில் நடப்பவர்களுக்கு, பகல் நேர ‘தான்’ என்பது விடுபட்டு இரவு நேர ‘தான்’ என்று சுயேச்சையாக மாறுகிறதோ? ஆயினும் பகல் நேர ‘தான்’ முழுவதும் விடுபட்டுப் போய்விடுவதில்லை அல்லவா? தூக்க நடையாளரைப் பற்றி கலைக்களஞ்சியங்கள் பதிவு செய்துள்ளன. அதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று திருச்சபையின் இளைய குருவைப் பற்றியது. அவர் தன் இசையையும், பிரசங்கங்களையும் உறக்கத்தில் இருக்கும்போதே உண்டாக்கியுள்ளார்.
றெக்கை அத்தியாயம் 16
ஊட்டுபுரயிலே பிராந்தியா செருப்பாலே அடிப்பேன். ஊட்டுபொரன்னா என்ன தெரியுமா? தினம் நூல்காரங்களை உக்கார வச்சு சோறும் சாம்பாரும் ஊட்டற இடம். அரண்மனைக்குள்ளே இருக்கும் இல்லை கோவில்லே இருக்கும். பஞ்சகாலத்திலே ராஜா, ஜமிந்தார் மூணு வேளை சோறு உண்ண முடியாது இதிலே நூல் காரருக்கு சோறு கொடுக்க எங்கே முடியுது.
எண்களின் மாயக்காரி ஏடா லவ்லேஸ்
படுக்கையின் ஓரத்தில் அமர்ந்து ஏடாவின் கையைப்பற்றிக் கொண்டிருந்த வில்லியமின் கண்களை நேராகப் பார்த்து, குதிரைப்பந்தயத்தின் வெற்றியை கணிதவியலின்படி தீர்மானிக்க முடியும் என்று நம்பி தான் செய்த பிழையான கணக்கீடுகளால் உண்டாகிய பெரும் நஷ்டத்தையும், அதை மறைக்க லவ்லேஸ் குடும்பத்தின் பாரம்பரிய வைரங்களை அடகு வைத்ததையும் பதிலுக்கு போலி வைரங்களை அந்த இடத்தில் மாற்றியதையும் ஏடா சொன்னபோது வில்லியம் அதிர்ந்தார்.
நெஞ்சம் நிமலமாய் நிலைபெறின்…
மனம் அமைதியாக இருக்கும்போதும், புலன்கள் நமது கட்டுக்குள் இருக்கும்போதும்தான் மனம் தன்னைப் பற்றிய அறிவில் ஆழ்ந்திருக்க இயலும். எல்லாவற்றிலிருந்தும் விட்டு விடுதலையாகியிருக்கிற அந்த உணர்வை அனுபவிக்க இயலும். இந்த நிலையை அடைவதற்குத் திதிக்ஷா என்ற சகிப்புத் தன்மை மிக அவசியம். இந்தப் பண்பு இல்லையெனில் மனம் ஒவ்வொரு சிறு நிகழ்வுக்கும் அசைந்து எதிர்வினை அளிக்கத் துவங்கும்.
உலக நிகழ்வுகளும் ஊகச் சந்தையும்
உதாரணமாக இந்த நேரத்தில் இந்தியா வெல்லும் என்று நூறு டாலர் பந்தயம் கட்டி இந்தியா வென்றால் உங்களுக்கு கட்டிய நூறு டாலரோடு இன்னும் 125 டாலர் சேர்த்து 225 டாலர் கிடைக்கும் என்று சொல்வார்கள். நாம் 100 டாலர் பந்தயம் கட்டலாம். நாளைக்கு இந்தியா வென்றால் 100 டாலருக்கு 150 டாலர் கிடைக்கும் என்று விலை மாறலாம். ஆனால் நாம் கட்டிய பந்தயம் அதனால் பாதிப்புக்குள்ளாகாது. அது போல நாம் ஒரு முறை பந்தயம் கட்டினால் கட்டியதுதான். அதிலிருந்து பின்வாங்க முடியாது. வாங்கி விற்கவும் வழி கிடையாது
பறவைகளும் பாலூட்டிகளும்: நுண்ணறிவின் பரிணாமப் பாதைகள்
பறவைகளின் மூளையில் நரம்பணுக்கள் மிகவும் நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் அமைந்துள்ளன. அவை மனித மூளையின் நியோகார்டெக்ஸுக்குச் சமமான பணிகளை மேற்கொள்கின்றன. சில பறவைகளில் நரம்பணு அடர்த்தி குரங்குகளை விட அதிகமாக உள்ளது. உதாரணமாக, ஒரு காகத்தின் நெல்லிக்காய் அளவிலான மூளையில் சுமார் 1.5 பில்லியன் நரம்பணுக்கள் இருக்கின்றன. இந்த சிறிய, திறமையான வடிவமைப்பு நுண்ணறிவுக்கு எடை அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கிறது.
ஆமரில்லிஸ் – 2 (இறுதிப் பாகம்)
அவர் வீட்டுக்குத் திரும்பி வரும்போது அவருடைய முதுகுப் பை கனமாக இருக்கும், அதுவும் அவர் அரிசியோ, சோயா பருப்போ வாங்கி இருந்தால் சுமக்க முடியாத அளவு கூட இருக்கலாம் என்று தாரா எச்சரித்திருந்தாள். சில வாரங்களில் அவர் தடுமாறி விழுந்து விடுவார் என்று கூட ஆமரில்லிஸ் அச்சப்பட்டிருந்தாள். அதையும் விடக் கவலை தருவதாக ஒன்று இருந்தது, சமீபத்தில் அவ்வப்போது அவருக்குத் தான் எங்கே இருக்கிறோம் என்பது புரிபடாததாக ஆகியிருந்தது. ஒரு வாரம் நிலவறை ரயில் நிலையத்திலிருந்து தன் அடுக்ககத்துக்கு வரும்போது அவர் வழி தவறித் தொலைந்து போயிருந்தார்
புலங்களும் துகள்களும் ஒன்றே
நுண் துளிம நிகழ்வுகளின் தொடர்ச்சியே இவ்வுலகம். இவை உதிரியான, தனித்த, நுண்ணிய நிகழ்வுகள்; பொருள்வய அமைப்புகளுக்கு இடையே நிகழும் தனித்த உள்வினைகள் அவை. எதிர்மின்மமோ, ஒரு புலத்தின் துளிமமோ, ஒளிமமோ வெட்டவெளியில் எந்தவொரு எறிபாதையையும் பின்பற்றுவதில்லை. மாறாக, வேறொன்றுடன் மோதுகையில் , குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் தோன்றுகிறது. அது எங்கு எப்போது தோன்றும் என்பதை உறுதியாக அறிவதற்கு வழியே இல்லை. உலகின் மையத்தில் ஒரு அடிப்படை அறுதியின்மையை துளிம இயற்பியல் அறிமுகப்படுத்தியுள்ளது
குழந்தைகளுக்குக் கீதை
பலரும் இதை ஒரு பழைய மத புத்தகம் என்றே நினைக்கிறார்கள். ஏதோ ஒரு தீவிரமான, சிக்கலான பெரியவர்கள் கூட புரிந்துகொள்ளச் சிரமப்படும் விஷயம் என்று நினைக்கிறார்கள். ஆனால் கீதை மிகவும் எளிமையான ஒன்றிலிருந்து தொடங்குகிறது: அர்ஜுனன், மிகத்திறமையான எதிரிகள் அஞ்சி ஓடும் ஒரு போர்வீரன். ஒரு போர்க்களத்தில் மிகுந்த குழப்பங்களுடன் நிற்கிறான். அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பயம், குழப்பம், சுய சந்தேகம், தர்மம் என்று பலவித மனச்சிக்கல்களுக்கு ஆளானவனாக தனது உறவுகளே பகையாக நிற்கும் களத்தில் கலங்கி நிற்கும் மாவீரன்.
கிளைக்கு உயரும் மலர்
தமிழில் ‘கறந்த பால் மடி புகாது’ எனப் பழமொழி உள்ளதைப் போல ஜப்பானிய மொழியில் ‘உதிர்ந்த மலர் கிளை திரும்பாது’ எனப் பழமொழி உள்ளது. ‘ஓச்சி ஹனா யெதானி கயேராசு’ என அதனைச் சொல்வர். ஓச்சி – விழுந்த, ஹனா – மலர், யெதா_னி – கிளை_க்கு, கயேராசு – திரும்பாது. இந்தப் பழமொழியின் ஒரு பாதியை முதலடியில் கொண்டது இக்கவிதையின் முதற்சிறப்பு.
கிருதுமால் நன்செய் – மதுரை மக்களின் வாழ்வியல் சித்திரம்
துணைஇல் தொடங்கி சில்லறைக் காசுகள் வரையான 16 கதைகளும் நாம் அன்றாடம் சந்திக்கும் எளிய மனிதர்களின் வாழ்வியலைச் சொல்கின்றன. தூக்குச் சட்டியில் (துணைஇல்) தொடங்கும் கதை சாப்பாட்டுப் பொட்டலத்துடன்(சில்லறைக் காசுகள்) முடிகிறது. இரண்டும் உணவுதான். தானொரு விவசாயி என்பதால் கூட அவரையறியாமலே இப்படி அமைந்திருக்கலாம்.
புதிய நூல்களுடன் சொல்வனம் எழுத்தாளர்கள்
இவர்களின் படைப்புகளில் தனித்துவமான அம்சம் என்னவென்றால், ஒவ்வொரு ஆக்கமும் புதிய பல எண்ணங்களை விதைக்கிறது; ஒவ்வொரு கட்டுரையும் பற்பல கோணங்களைத் திறக்கிறது. பெண்களின் உள்ளுணர்வுகளை சூழலோடு பின்னிப் படைக்கும் திறன், அறிவியலையும் இலக்கியத்தையும் இணைக்கும் அதிர்ஷ்டமான சேர்க்கை, வரலாற்றை புனைவில் புதைக்காமல் ஒளிர வைக்கும் கலை — இவை இந்த எழுத்தாளர்களை சொல்வனம் குடும்பத்தில் தனித்துவமாக்குகின்றன.
உடல்நலம் — ஒரு உலகளாவிய கேள்வி
ஒரு நிலையான வேலையில் இருப்பவர்களுக்கு நிறுவனக் காப்பீடு கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு அரசு காப்பீடு இருக்கும். ஆனால் கட்டடத் தொழிலாளர்கள், தெரு வியாபாரிகள், விவசாயிகள், வீட்டு வேலை செய்வோர் — இவர்களுக்குப் பெரும்பாலும் எந்தக் காப்பீடும் இல்லை. இவர்களுக்கு நோய் வந்தால் என்னவாகும்? சேமிப்பு காலியாகும். நகைகள் விற்கப்படும். கடன் வாங்கப்படும். அல்லது வலி தாங்கி வேலைக்குச் செல்வார்கள்.
சொல்வனம் சிறப்பிதழ்: இந்திரா பார்த்தசாரதிஅவர்களின் படைப்புலகம்
தில்லி, போலந்து என்று உலகின் பல்வேறு கல்விச் சூழல்களில் ஆய்வாளராகவும் பேராசிரியராவும் பணியாற்றிய இ.பா., கல்விச் சூழலில் வாழ்ந்தாலும் எப்போதும் இலக்கியத்தோடும் வாசகர்களோடும் நேரடி நாடி தொடர்பை வைத்திருந்தார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில், புதிய குரல்களை அடையாளம் கண்டு களத்தில் நிறுத்துவதில் அவர் காட்டிய தன்னல மறுப்பு, தமிழ் இலக்கிய வரலாற்றில் பதிவாக வேண்டிய ஒன்று.
