இந்திரா பார்த்தசாரதியைக் கொண்டாடுதல்

இந்தச் சிறப்பிதழ் பயணத்தில் பல சுவாரசியமான தகவல்களும் கிடைத்தன. எங்கள் கும்பகோணம் பகுதியில் கல்யாணம் ஆக வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் காவிரியாற்றின் அருகிலிருக்கும் திருமணஞ்சேரிக்குச் சென்று வழிபடுவார்கள். லண்டன் பாலேந்திராவுடன் பேசிக்கொண்டிருந்தபோது உடனடி கல்யாணத்திற்கு இன்னொரு வழியும் இருக்கிறது என்று தெரியவந்தது. தான் நடத்திய ‘மழை’-யின் (இ.பா எழுதிய முதல் நாடகம்) இணை நடிகையாக வந்த ஆனந்தராணியைக் கைப்பிடித்த கதையைச் சொன்னார். இதேபோல தில்லியில் பாரதி மணியும் க.நா.சுவின் மகள் ஜமுனாவும் மழை நாடகத்தின் வழியே இணைந்ததும் பாலேந்திராவின் உரையாடல் வழியே தெரிந்தது. கோவிலுக்குச் செல்ல ஆர்வமில்லாதவர்கள் கட்டாயம் இ.பாவின் மழை நாடகத்தைக் முயலலாம். 

இ.பா சார் 

ஆபத்பாந்தவன் அனாதை ரட்சகனாக அன்றைய தினம் சுஜாதா தடுத்தாட்கொண்டபோது இ.பா சார் மௌனமாக வாழ்த்து சொன்னது – குட் லக் – நினைவில் திரும்ப திரும்ப வந்தது. நான் சந்திக்கப் போன இ.பா இவரில்லை. அவர் இருக்கும் இடத்தை கலகலவென்று மாற்றும் நகைச்சுவை உணர்வு மிகுந்தவர். நான் சந்தித்த தினத்தில் அவர் பகடியை இல்லத்திலேயே விட்டுவிட்டு வந்திருப்பார். ச்விட்ச் போட்டதும் விளக்கு எரிவது போல் நிமிடத்துக்கு ஒரு நய்யாண்டியோ பகடியோ உதிர்த்துக் கொள்ளாமல் கல்லூரியில் தத்துவம், நுண்கலை, இலக்கியம் என்று கற்பிக்கும் வித்வத்கர்வம் சற்றே நனைத்த பேராளுமை.

இ.பா என்றொரு நண்பர்

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்த அந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரோடு எனக்குத் தொடர்பு எதுவும் கிடையாது. எம்.ஏ முதல் வகுப்பில் தேறியிருந்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. பம்பாய் போய் அங்கே ‘Free Press Joumal’ என்ற ஆங்கிலத் தினசரியில் உதவி ஆசிரியராகச் சேர்வதாக இருந்தேன். அப்பொழுது திருச்சியிலிருந்து என் அண்ணனிடமிருந்து ஒரு தந்தி வந்தது. திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகச் சேர விருப்பமிருந்தால் உடனே வரலாமென்று.

இந்திரா பார்த்தசாரதியின் சிந்தனைகளைப் பற்றி சில சிந்தனைகள்

திராவிட இயக்கங்கள் பிம்ப கவர்ச்சியை முன்னிறுத்தி அதிகாரத்தை அடைந்தன எனும் பார்வைக்கு மாற்றாக ஏற்கனவே இங்கு செல்வாக்கோடு இருந்த வழமையைத் தனக்கு சாதகமாக்கிக்கொண்டது. கோவில் விளைவுகள் (விழாக்கள்??), உற்சவங்களோடு தேர்தல் அரசியலுக்கு உள்ள ஒப்புமையை அளிக்கிறார். ‘ஒரு சமுதாயப் புரட்சி ஏற்பட்டிருந்தால் உண்மையாகவே அச்சமுதாயப் புரட்சிக்கு காரணமானவர்கள் புத்தரைப் போலவோ அல்லது இயேசுநாதர் போலவோ அல்லது லெனினை போலவோ மிகப்பெரிய சிந்தனையாளர்களாக இருந்திருந்தால் நம்முடைய இலக்கியம் இப்பொழுது இருக்கக்கூடிய இந்நிலையில் இருக்காது என்று உறுதியாக கூறலாம்.

தமிழ் இலக்கியங்களில் வைணவம் – நூல் அறிமுகம்

ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் வாழ்ந்த காலத்தை பக்தி காலகட்டத்துக்கு (கிபி ஏழாம் நூற்றாண்டு) ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் அமைத்திருப்பதாக குரு பரம்பரை வைபவம் தெரிவிக்கிறது. தமிழ் இலக்கிய ஆய்வாளர்களின் கூற்றுப்படியும், மொழியியல் ஆய்வு வழியாகவும் வைணவ பிரபந்தங்கள் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்கும் பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் என வகைப்படுத்தியுள்ளனர். ஆனாலும், ஆழ்வார்கள் கால வரிசை, அவர்களது பிறப்பிடம், பாடல் பெற்ற கோயில்களின் வரலாறு, நித்திய கைங்கர்யங்களை தொகுத்து வைக்கும் கோயிலொழுகு போன்றவற்றை ஆவணமாகக் கொள்ளமுடியும்.

இந்திரா பார்த்தசாரதியின் மாயமான் வேட்டை: இலட்சியவாதமும் சந்தர்ப்பவாதமும்

இந்திரா பார்த்தசாரதி தன் நாவலில் ஆட்சி அமைப்பில் அதிகாரம் அடங்கியிருக்கும் ஒவ்வொரு அடுக்கையும் அதன் நடிப்பையும் செயலின்மையும் ஒவ்வொரு காட்சியிலும் நேரிடையாகவும் மறைமுகமாகவும் ’அக்குவேறு ஆணிவேறாக’ சுட்டிக் காட்டுகிறார். இறுதியாக, நாவல் முடிவடையும் தருணத்தில், மாயமான் வேட்டைக்கும் த ஆப்பிள் கார்ட்டுக்கும் உள்ள நெருக்கத்தை நாமே புரிந்துகொள்கிறோம். 

தமிழ் நாடகப் படைப்புலகில் இந்திரா பார்த்தசாரதியின் புதிய தடம்

இலக்கிய வாசிப்பு பழக்கம் இல்லாத நானும் அம்மாவும் இந்திரா பார்த்தசாரதி ஒரு ‘அம்மா ‘ என்றே நினைத்திருந்தோம். ஆனால் கதவைத் திறந்த அந்தப் பெரியவர், ‘ இந்திரா பார்த்தசாரதி அம்மா இல்லை, அப்பா ! ‘ என்று சற்றே கடுமையான அன்போடு சொன்னார். மேலும் புதுவைப்பல்கலைக்கழகத்தின் நூலகம் ராம் இன்டர்நேஷனல் கட்டிடத்தில் இருப்பதாகவும் அங்குதான் உன் ஆசிரியர் இருக்கிறார், உங்களுக்கு அங்குதான் நேர்முகத் தேர்வு நடக்கப் போகிறது என்று வழிகாட்டினார். அந்த பெரியவர் புகழ்பெற்ற இலக்கிய மேதை ஒருவரான க.நா. சுப்பிரமணியம் என்பதை பின்னாளில்தான் தெரிந்து கொண்டேன்.

இந்தியத்தனம் நிரம்பிய நவீன நாடகங்கள்: இந்திரா பார்த்தசாரதி, கிரிஷ் கர்னாட் ஓர் ஒப்பீடு

இந்திய நாடக முயற்சிகள் தொடங்கியபோதே அதற்குப் பலவிதமான எதிர்ப்புகள் இருந்தன. பல்வேறு மொழிகள் பேசும் இந்திய துணைக் கண்டத்தில், ஒவ்வொரு மொழி பேசும் மாநில எல்லைக்குள்ளேயே பல்வேறு மரபுக் கலை வடிவங்களின் செல்வாக்கு நிரம்பிய ஒரு தேசத்தில் -எல்லா மரபுக்கலை வடிவங்களின் அடையாளங்களோடும் கூடிய ஒரு அரங்கியல் வடிவத்தை உருவாக்குவது என்பது சாத்தியமில்லை என்பது முக்கிய காரணமாக முன் வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்தவர்களும் தங்களின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடும் கால கட்டத்தில் அனைவருக்கும் பொதுவான ஒரு வடிவத்தை உருவாக்குவது ஒரு ஒட்டுப் போட்ட ஆடையை உருவாக்குவதைப் போன்றதே தவிர பயன்படுத்தத் தக்க ஆடையைத் தயாரிப்பதாக அமையாது என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்திரா பார்த்தசாரதி எனும் பேராளுமை

‘மழை’ நாடகத்தில் நடிப்பவர்களுக்குத் திருமணம் ஆகிவிடும் என்று ‘இபா’ அவர்கள் நகைச்சுவையாகக் கூறுவார். இது டெல்கியிலும் இலங்கையிலும் நடந்தது. ‘மழை’ நாடகத்தில் நடித்த நானும் ஆனந்தராணியும் பின்னர் திருமணம் செய்து கொண்டோம். இது குறித்து ‘இபா’ கூறியதை அண்மையில் சென்னையில் நடந்த எனது நூல் வெளியீட்டு வைபவத்தில் உரையாற்றிய ஆவணத் திரைப்பட இயக்குநர் திரு.  அம்ஷன் குமார் நினைவுபடுத்தினார்.

தத்துவத்தின் மீதான வரலாற்றின் நகைப்பு (அல்லது) இரண்டாவது நசிகேதன் வழி நான்காவதாக ஒரு கேள்வி

ஒரு சமூகம் எதைக் கைவிடுகிறது? எதற்காகக் கைவிடுகிறது? எந்த விதிகளைத் தளர்த்திக் கொள்கிறது? இக்கேள்விகள் சமூக மாற்றத்தைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமானவை. உதாரணமாக, பிராமணர்களுக்குக் கடல் தாண்டிச் செல்வது என்பது தடைசெய்யப்பட்ட ஒன்று. மூன்று கால சந்த்யாவந்தனமும் கட்டாயமானதாகக் கருதப்பட்டது. ஆனால் நவீனக் கல்வியையும் வேலைவாய்ப்புகளையும் ஏற்றுக்கொண்ட பிராமண சமூகம் இவ்விரு விதிகளையும் கணிசமாகத் தளர்த்திக் கொண்டதைக் காண்கிறோம். அங்கு  பழமைக்கும் நவீனத்துக்குமான ஒரு மோதல் உருவாகிறது. தலைமுறைகளுக்கிடையே விவாதம் எழுகிறது. இதேபோன்ற உரையாடல்கள் ஜைன சமூகத்திலும் நிகழ்ந்துள்ளன. இம்மாற்றங்களின் அடிப்படையில் பொருளாதார முன்னேற்றத்திற்கான தேவை உள்ளது.

நினைவில் மேவும் உரையாடல்கள்

இ.பா.வுடனான உரையாடல்கள் எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் செல்லாது; அது பல தளங்களில் விரிந்து செல்லும் அனுபவம். இலக்கியம், சமூகம், அரசியல், லெளகீக வாழ்க்கையெனச் சென்ற அந்த உரையாடல்கள் என்னை மெதுவாகச் செழுமைப்படுத்தின. அவர் பேச்சு சில சமயம் திக்கி வரும். ஒரு வரியின் மீது இன்னொரு வரி படிந்தபடியே செல்லும். கவனத்துடன் அதைக் கேட்க வேண்டும். ஆனால், அதற்குள் ஓடும் சிந்தனை ஓட்டம் தீவிரமானது.

‘நவீனக் கண்ணன்’ – இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா, கிருஷ்ணா.

கிருஷ்ணாவதாரத்தின் முடிவு, ஜரா என்ற வேடன் எய்யும் அம்பால்  நிகழ்கிறது. அந்த இறுதிக் கட்டத்தில் அவன் கேட்கும் கேள்விகளுக்கு விடையாகக் கண்ணன் பல தன்னிலை விளக்கங்களை அளிக்கிறான். அதை நாரதர், தனக்கே உரிய பாணியில் விவரிப்பதாக இந்த நூல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தொடக்கம், நடு, முடிவு என்ற வழக்கமான நேர்கோட்டுக் கதைப்பாணியைத் தவிர்த்து விட்டுப் பாரதத்திலும் பாகவதத்திலும் கண்ணன் ஆற்றும் பங்கோடு அவனது தனிப்பட்ட வாழ்க்கையையும் இணைத்து,  ‘நான்லீனியர்’ முறையில் முன்னும் பின்னுமாய்த் தாவித் தாவிச் செல்லும் வகையில்  கதைப்பின்னலை அமைத்திருப்பது இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கதைக்கூறு உத்தியின் உச்சம், ‘கிருஷ்ணா கிருஷ்ணா’-வின் தனித்துவமும் அதுவே. 

இந்திரா பார்த்தசாரதி – வரலாற்றின் மறுவாசிப்பு

பிராம்மணநெறிச் சடங்குகள், கடவுள் பற்றிய கருத்து, பிறவித் தொடர்ச்சி, ஆத்மாவின் இருப்பு போன்றவைகளை கேள்விக்குட்படுத்திய லோகாயவாதமும், சார்வாகக் கோட்பாடுகளும் இந்திய சிந்தனை மரபின் பகுதியாகவே கொள்ளப்பட்டதையும், நிறுவனங்களுக்கும் அவைகளை எதிர்ப்பவர்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டங்கள் தொன்றுதொட்டு நடந்துவ்ருவதையும், இந்திய தத்துவ வரலாற்றில் பெரும்பாலான தத்துவப் போர்கள் தென்னாட்டில் நடைபெற்றதையும் தன்னுடைய கட்டுரைகளில் குறிப்பிடுகிறார்.

இந்திரா பார்த்தசாரதியும் நாடகங்களும்

தொன்மம் இன்றைய நூற்றாண்டில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் புதுப் பரிமாணம் பெற்று சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  கொங்கைத் தீயில் கண்ணகியின் கதையைச் சொல்வதன் மூலம் இன்றைய பெண்ணியச் சிந்தனைகளைத் தட்டி எழுப்புகிறார். மரபு வழிப்பட்ட சிலப்பதிகாரக் கதையில் இன்றைய பெண்ணியக் கருத்துகளுக்கான வேர்களைக் காண்கிறார் இ.பா. அவரது படைப்பு மனம் கண்ணகியை வேறுவகைப்பட்ட கண்ணோட்டத்தில் கண்டு தற்காலத்திற்குப் பொருத்தமான பல நவீனச் சிந்தனைகளை உள்ளடக்கி `கொங்கைத் தீ` என்ற புத்தம் புதிய நாடகத்தைப் படைக்கிறது.

ஆசாரத்தை உடைத்த அறிவுஜீவி

இந்த வரிகளைப் படிக்கிற ஒரு தலைமுறை எளிதாக இ.பா.வை சங்கி என்று முத்திரை குத்திவிட முயலும். ஒரு காலத்தில் அவருக்கு திமுக மீது கடும் விமர்சனங்கள் இருந்தன என்பதற்கு கணையாழியில் அவர் ‘பரகால ஜீயர்’ என்ற பெயரில் எழுதிய அரசியல் கட்டுரைகளே சாட்சி. அந்த நாள்களில் அவர் எழுதிய நாடகம் ஒன்றில் தோளிலிருந்து தரையைத் தொடும் அளவிற்கு துண்டணிந்த ஒரு பாத்திரத்தின் பெயர் இளவழகன். ஆனால் அவரைக் கூப்பிடுபவர்கள் எல்லோரும் இளவு, இளவு என்றுதான் கூப்பிடுவார்கள்.

எனக்குத் தெரிந்த இந்திரா பார்த்தசாரதி

நாடகங்கள் மேல் தமிழ் இலக்கியவாதிகள் நம்பிக்கையற்று இருந்த போது அந்த படைப்பு வடிவத்தினால் ஈர்க்கப்பட்டவர் இ.பா. இ.பா.வின் முதல் நாடகம் ‘மழை’. பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே டில்லியில் இருந்த தஷிண பாரத நாடக சங்கத்தைச் சேர்ந்த பாரதி மணி என்பவரால் இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த ஊக்கத்தினால் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரம்பித்தார். போர்வை போர்த்திய உடல்கள் இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களில் முதன்மையானது. இது இருத்தலியல் பார்வையை முன்வைக்கும் நாடகம். அவசரநிலைக் காலத்துப் பின்னணியில் வெளிவந்தமையால் இந்நாடகம் பெரிதும் விவாதிக்கப்பட்டது.

அருமணிகளின் அழகியல் தேர்ந்த ஆபரணச்சிற்பி

இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களில் அளவில் பெரியதான உடையவர் ராமானுஜர் நாடகம், சமயம் சார்ந்த ஆவணங்களில் இருந்து உருவாக்கப்பட்ட சமகால பிரதிக்கான சிறந்த உதாரணம் எனலாம். காட்சிகளாக நிகழும் இந்த நாடகத்தின் தொடர்ச்சி என்பது ஒரு பாவனை என்கிற முன்னெச்சரிக்கையோடு இந்த நாடகத்தை அணுக வேண்டுகிறார் ஆசிரியர். ராமானுஜர் யாதவ பிரகாசரிடன் சீடராக இருந்து, வேதாந்த சர்ச்சைகளின்பால் கருத்து வேற்றுமை கொண்டு பிரிந்த பிறகு, திருக்கச்சி நம்பியை குருவாக ஏற்றுக் கொள்ளும்போது, வைணவ குரு பரம்பரையின் ஆச்சாரியரான ஆளவந்தாரின் அறிமுகம் ஏற்படுகிறது என்கிறது ராமானுஜ திவ்ய சரிதம்.

ஒரு கப் காபியிலிருந்து தொடங்கிய வாசிப்பு

பிறர் முன் தன் மரியாதையை இறக்கி வைக்கத் தயங்கும் மனித மனத்தை இந்தக் கதை அமைதியாக வெளிப்படுத்துகிறது. பொருளாதாரச் சரிவு என்பது வெறும் பணக்குறைவாக அல்லாமல் அந்த வீட்டில் உள்ள உறவுகளின் தொனியையும் மாற்றி விடுகிறது என்பதை இக்கதையில் காணலாம். இக்கதை ராஜப்பாவின் தனிப்பட்ட நிலையை எடுத்துரைத்திருந்தாலும், அவர் சார்ந்த சமூகத்தின் கடந்தகால வரலாறு மற்றும் இன்றைய நிலைப்பாடு புலப்படுகின்றது. 

வரலாற்றின் நிழலில் அதிகாரத்தின் தனிமை

இங்கு தோல்வியடைந்தவன் தாரா ஷிகோ அல்ல; வெற்றி பெற்ற அவுரங்கசீப்பே. ஏனெனில் வரலாற்றில் வென்றவன், வாழ்க்கையில் தோற்றுவிட்டான். இதுவே கிரேக்கத் துன்பியலின் அடிப்படை உண்மையாகும். மனிதன் தனது வெற்றியிலேயே தனது அழிவுக்கான விதையை விதைத்துக் கொள்கிறான். இந்திரா பார்த்தசாரதியின் மிகப்பெரிய கலைநயம், வரலாற்றை நிகழ்காலத்தோடு இணைக்கும் திறனில்தான் இருக்கிறது. நாடகத்தில் நேரடியாக எந்தச் சமகால அரசியல்வாதியையோ எந்த அரசியல் இயக்கத்தையோ அவர் குறிப்பிடுவதில்லை. ஆனால் நாடகத்தை வாசித்து முடிக்கும் ஒவ்வொருவருக்கும், அது தங்கள் காலத்தைப் பற்றியே பேசுகிறது என்ற உணர்வு இயல்பாக உருவாகிறது.

வேரை மறந்தவன், விலை கொடுத்தவன் – குற்றமும் மன்னிப்பும், போலந்தும் தமிழும்

இன்று நினைத்துப் பார்த்தால், அந்த நாவல் எனக்கு ஒரு இலக்கிய அனுபவமாக மட்டுமல்ல, உலகத்தைப் பார்க்க ஒரு புதிய சாளரமாகவும் அமைந்தது. போலந்து என்ற நாடு, கிழக்கு ஐரோப்பாவின் சோசலிச அரசியல், யூதர்களின் வரலாறு, இந்தியத் தூதரகத்தின் செயல்பாடுகள், வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் வாழ்க்கை, மனித உறவுகளின் சிக்கல்கள்—இவற்றையெல்லாம் முதன்முதலில் இந்த நாவலின் வழியாகத்தான் அறிந்தேன். இணையமும் சமூக ஊடகங்களும் இல்லாத அந்தக் காலத்தில், நல்ல இலக்கியங்கள்தான் உலகத்தின் பல கதவுகளை நமக்காகத் திறந்து வைத்தன.

இ .பா. ஒரு அறிவுக்கேணி

இந்திரா  பார்த்தசாரதி ஒரு பன்முகக் கலைஞர்.  அவர் தொட்ட இலக்கிய வகைமைகள் எல்லாம் துலங்குகின்றன. சிறுகதை, நாவல், நாடகம், இலக்கிய விமர்சனம் . எதுவாயினும். தமிழிலும் பழந்தமிழ் இலக்கியம் முதல் நவீன தமிழ் வரை ஆழங்கால் பதித்தவர் அவர். ஆங்கில, மேற்கத்திய இலக்கியங்களில் கரை கண்டவர். அவர் எழுதுவதை எப்படி வகைப்படுத்தலாம்? இலக்கியம் ஒரு சமூகச் செயல்பாடு. ஏன் எல்லாக் கலைவடிவங்களுமே சமூகச் செயல்பாடு தான் என்பதே இ. பா.வின் கோட்பாடு. நகைச்சுவை. அங்கதம். உணர்ச்சி வெளிப்பாடு.

இந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு சந்திப்பு

‘அஞ்சிறைய மட நாராய்’ என்று திருவாய்மொழியில் ஒரு பாட்டு வரும். தலைவி தலைவனிடம் சொல்கிறாள். அவர்கள் களவொழுக்கத்தில்தானே ஈடுபடுகிறார்கள்!? பராங்குச நாயகி என்று சொல்வார்கள். ‘நாயிக பாவம்’ என்று சொல்வார்கள் அல்லவா? இது பக்தி வெளிப்பாட்டின் இன்னொரு அம்சம். கடவுள்தான் நாயகன். பக்தர்கள் எல்லோரும் நாயகிகள். சங்க இலக்கியத்தில் இருந்து (பிரபந்தத்தில்) இது தொடர்கிறது. இந்தப்பாடலில் இறைவனுக்கு தூது அனுப்புகிறாள் தலைவி.

ஆதவன் சிறுகதைகள்

வர்க்கப் பேதங்களுடைய சமூகத்தில், தொழில் வளர்ச்சிகளின் காரணமாகச் சமூகச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. பொருளாதாரக் காரணங்களினால் குடும்ப வாழ்க்கை நிலை குலைகின்றது. அடிப்படையில், பிரபுத்துவ சமூக அமைப்பை உடைய ஒரு சமுதாயத்தின் மீது, தொழில் யுக வாழ்க்கைக்குரிய மதிப்புக்கள் சுமத்தப்படும்போது, முரண்பாடுகள் மேலோங்குகின்றன. வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுவதிலும், போலிப் பரவசங்களிலும், விளையாட்டுக்காகச் செய்யும் வன்முறைகளிலுந்தான் தங்களை நிரூபித்துக் கொள்ள முடியுமென்று இளைஞர்கள் கருதுகிறார்கள். அவர்களுக்கு நிறையக் கோபம் இருக்கிறது. யார் மீது என்றுதான் அவர்களுக்குப் புரியவில்லை; ‘

‘என்றுமுள தமிழும் இன்று உள்ள தமிழும்’ – இந்திரா பார்த்தசாரதி

‘எந்தக் காரணத்தை முன்னிட்டும் (குறிப்பாக அரசியல் காரணம்) சங்க இலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள் போன்றவை தமிழனுக்கு மட்டும்தான் சொந்தமானவை என்கிற ரீதியில் பிரச்சாரம் செய்வதை நாம் நிறுத்த வேண்டும் என்கிறார். ‘அவைகளை உலக இலக்கியமாகக் கொண்டு கிளாஸிக்கல் மொழியாக தமிழை அடையாளம் காட்டி லத்தீன் கிரேக்க இலக்கியங்கள் போல உலக பொதுச் சொத்தாக ஆக்குவதற்கு தற்காலத் தமிழையும் சங்ககாலத் தமிழையும் தனித் தனியாக பாகுபடுத்த வேண்டும்’ என்கிறார். மிகவும் சிந்திக்க வைக்கிறது இந்தக் கட்டுரை.

நவீன தமிழ் இலக்கியத்தில் நிகழ்காலத்தின் வெளிப்பாடாக இறந்தகாலம்

இந்திரா பார்த்தசாரதியின் இலக்கியப் படைப்புகள் பெருமளவு புத்தெழும் இந்தியக் குடியரசின் குடிமக்கள் எதிர்கொள்ளும் சமகால சமூகப் பிரச்சினைகளைக் கையாள்கின்றன, மேலும் கதைக்களம் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினரின் பிரதிநிதிகள் — முக்கியமாக அறிவுஜீவிகள் மற்றும் அதிகாரிகள் — மத்தியில், ஆசிரியர் தாமே வாழ்ந்து பணியாற்றிய துடிப்பான தலைநகர் புது டெல்லியில் நிகழ்கிறது என்பதைத் தாண்டி, அவரது பல படைப்புகளில் விரிவாகப் புரிந்துகொள்ளப்பட்ட வரலாற்று நிகழ்வுகள் மற்றும் தெளிவாக முன்வைக்கப்பட்ட (அரை)வரலாற்றுப் பொருண்மைகள் பற்றிய வெளிப்படையான குறிப்புகளும் உள்ளன; இவை அவரது தனிப்பட்ட உலகக் கண்ணோட்டத்தின்படி மீள்-எழுதப்பட்டவை.

கம்பனின் கவித் தீண்டலில் இராம காதை  

இறக்கும் தருவாயில், கம்பனின் கும்பகர்ணன் இராமனிடம், “உன்னிடம் இரண்டு வாக்குறுதிகளை கோருகிறேன். முதலாவதாக, சிதைந்துபோன என் உடலை என் எதிரிகள் பார்த்து எள்ளி நகையாடுவதை நான் விரும்பவில்லை; எனவே, உன்னுடைய அம்பால் என் உடலை அப்படியே கடலுக்குள் தள்ளிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இரண்டாவதாக, என் அன்பிற்குரிய தம்பி விபீஷணனை உன்னுடைய பொறுப்பில் ஒப்படைக்கிறேன்; ஏனெனில், உன்னோடு போரிட இராவணன் போர்க்களத்திற்கு வரும்போது, அவனுடைய முதல் இலக்கு விபீஷணனாகத்தான் இருக்கும் என்பதை நான் அறிவேன்.” என்று உரைத்தான்.[3]

இந்திரா பார்த்தசாரதி – குறிப்புகள்

அக்னி
ஆகாசத்தாமரை (1991 – கல்கி இதழில் வெளிவந்த தொடர்)
ஏசுவின் தோழர்கள்
காலவெள்ளம்
கிருஷ்ணா கிருஷ்ணா
குருதிப்புனல்; 1975; தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.[4]
சத்திய சோதனை
சுதந்தர பூமி
தந்திர பூமி
திரைகளுக்கு அப்பால்

பஞ்ச் லைன்

இரவு நேரங்களில் படுத்ததும், அவள் அவன் முகத்தைப் பார்த்ததேயில்லை. விளக்கை அணைத்து விட்டுத்தான் அவன் படுக்க வருவான். அவன் அவளை நெருங்கும் நேரம் அநேகமாய், புலர்ந்தும் அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது கூட அவளுக்குத் புலராத விடியற்காலை தான். அவள் பாதித் தூக்கத்தில் இருப்பாள். தெரியாது. ஒரு மூட்டையாய் அவன் பக்கத்தில் மல்லாந்த பிறகுதான், என்ன நடந்தது என்பது அவளுக்குத் தெரியும். இந்த விஷயங்களில் அவளுடைய விருப்பு, வெறுப்புகளைப் பற்றி அவனுக்குக் கவலையே கிடையாது.

கன்னி

‘எனக்கு அய்யங்கார் தெரு, ஒரிஜனல் அய்யங்கார். இந்த மடிசார் வேஷமில்லே. நான் எப்பொவும் கட்ற கட்டு. அதோ நடிக்கிறாளே உங்க கதாநாயகி, அவ மடிசார் கட்டி விடறதுக்குன்னே ஒருத்தியைக் கூட்டிண்டு வரா. அவ, அவளுடைய சிநேகிதி… பெரிய்ய அய்யங்கார் குடும்பந்தான். சினிமாக்காரிக்கு மடிசார் கட்டி விடறதிலே அவளுக்கு அலாதி பெருமை…! அவ போட்டோ வார பத்திரிகையிலே வருமே! அவளையும் எவனாவது ஒரு மடையன் பேட்டி கண்டு அசட்டு பிசட்டுன்னு எழுதமாட்டானா? இதை படிக்கன்னு காத்திண்டிருக்கே ஒரு கூட்டம்…”

மீண்ட தெய்வம்

”நம் நாட்டின் பழம் புலவர்கள் ஆண்-பெண் உறவுகளைப் பற்றி எந்தவிதக் கூச்சமுமின்றிக் கூறியிருப்பது ‘ஆபாசமாக’ நமக்கு இப்பொழுதுபடுகிறதென்றால், அதற்குக் காரணம், மேல்நாட்டு மரபை ஒட்டிய ‘குற்றமனப்பான்மை’ நம்மையும் பாதித்திருப்பது தான் ஈடன் தோட்டத்தில் மனிதன் செய்த குற்றத்தினால் விளைந்தது மனித சமுதாயம் என்ற பாவ உணர்ச்சியை, பாரம்பரியமாக தாங்கிவரும் மேல்நாட்டுப் பழம்பெரும் இலக்கியங்களில் இந்தக் ‘குற்ற மனோபாவம்’ பிரதிபலிக்கக் காணலாம்.

சூசைம்மாவும் அத்வைதமும்

மூன்று நிமிஷம் நாற்பது வினாடிக்குள் அவ்வறையை விட்டு வெளியே அலறிக் கொண்டு ஓடி வந்தாள், கதவைப் படீரென்று சாத்திக் கொண்டே. அவள் போட்ட கூப்பாடு, நீண்ட தாழ்வாரம் வழியாகச் சென்று கொண்டிருந்த மூன்று நர்ஸ்கள், சிகிச்சை பெற்று வந்தவர்களை பார்க்க வந்த நாலு பார்வையாளர்கள், இரண்டு டாக்டர்கள் ஆகியோரை ஸ்டில் புகைப்படங்களாக்கியது.

புலி வேட்டை

‘நமது பிரதிநிதி மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமெரிக்கர்களின் தூண்டுதல் தான் காரணம் என்று ஒரு குற்றச்சாட்டு வந்திருக்கிறது . இதுபற்றிப் பார்லிமென்டில் கேள்விகள் எழலாம். நாம் முன்ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும். ஆப்பிரிக்கப் புலியைக் கொல்லுவதற்கு இந்தியாவுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று பாகிஸ்தான் வேறு பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டது. இதனால் கொதித்தெழுந்த மற்றைய ஆப்பிரிக்க நாடுகள் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடங்கி விட்டன. கன்யாவில் இருந்து இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். மோஷ்லாமே நாட்டோடு நமக்கு உணவு ஒப்பந்தமொன்று கையெழுத்தாக இருக்கிறது . “

வாசகர் பொறுப்பு

கம்பனுடைய காலத்துக்குப் பிறகு ஏற்பட்ட உரையாசிரியர்களை, சிருஷ்டி நூல்கள் ஒன்றும் இயற்றவில்லை என்ற காரணத்துக்காக ஒதுக்கிவிட முடியாது. வைஷ்ணவ நூல்களுக்கு (பிரபந்தம்) வியாக்கி யானம் செய்தவர்களைக் காட்டிலும், அவர்கள் காலத்துக்கு முன்னாலும் யாரும் ஒன்றும் சாதிக்கவில்லை; இனிமேலும் சாதிக்க முடியாது. தங்களுடைய பரந்த சமஸ்கிருத அறிவைத் தமிழின் எல்லை கண்ட புலமையோடு இணைத்து இவர்கள் ஆற்றியுள்ள அற்புதங்களுக்கு ஈடு உலக இலக்கியத்திலும் காணமுடியாது.

‘ககனப் பெரு வீதியில்’

சந்திரனில் முதல் மனிதனை இறக்குவது என்பது இப்பொழுது பிரச்னை அல்ல, அகண்ட வெளியில் ஆங்காங்கு ‘ஸ்பேஸ் நிலையங்கள்’ நிறுவி, இன்னும் பல வெற்றிகளைக் காண வேண்டும் என்பதுதான் விஞ்ஞானிகளுடைய லட்சியம். சந்திரனுக்கு அப்பால் செவ்வாய் சுற்றிவர இரண்டு ‘மாரினர்கள்’ அனுப்ப திட்டம்  வகுத்திருக்கிறார்கள். செவ்வாயில் ஒரு வகையான தாவர உயிர் வர்க்கம் இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். செவ்வாயின் சுற்றளவும் பூமியில் பாதி. அதன் புவியிர்ப்பு சக்தி பூமியைக் காட்டிலும் மிகவும் குறைவு. பூமியில் ஆறடி உயரம் தாண்ட முடிந்தவன், செவ்வாயில் 16 அடி தாண்டலாம். பூமியில் 220 பவுண்டு எடை உள்ளவன், செவ்வாயில் 80 பவுண்டுதான் இருப்பான். செவ்வாயில் சராசரி சீதோஷ்ண நிலை எப்பொழுதும் பூஜ்யத்துக்குக் கீழேதான் இருக்கும்.

காலம் வென்ற கவிஞர்கள்

வியக்கத்தக்க செயல் புரியும் எவரைப் பற்றியும் கற்பனைக் கதைகளும் கருத்துக்களும் எழுவது இயல்புதான் என்பது உலக வரலாற்றுச் செய்தி. நம்நாட்டிலும் காளிதாசனைப் பற்றியும், கம்பனைப் பற்றியும் எத்தனை கட்டுக்கதைகள் உள்ளன! மேல் நாடுகளில் அதீத கற்பனையில் நம்பிக்கை இல்லாத காரணத்தால், ஷேக்ஸ்பியர் நாடகங்களை இன்னொருவர் எழுதியிருக்கக் கூடுமென்று கூறுகிறார்கள்; அதீத கற்பனைகள் நிறைந்த நம்நாட்டில் கல்வியறிவில்லாத காளிதாசனுக்குக் காளியின் அருள் கிடைத்ததென்று கூறுகிறோம்.

றெக்கை –  அத்தியாயம் 24  

This entry is part 24 of 24 in the series றெக்கை

மாயா என்ற மாயசண்டிகை, விஞ்சையர் பூமியிலிருந்து வந்தவளாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட பேரிளம்பெண் . நிறைசூலியாக இங்கே வந்தாள். முத்தச்சன் பார்வையில் அவள் படாமலே இருந்திருக்கலாம். அவளை முத்தச்சன் எனக்கு பரிச்சயப்படுத்தாமலேயே போயிருக்கலாம். ஈன்று புறம் போடுதல் மட்டும் என் தலைக் கடனே என்று அவள் பிரசவித்து இருக்கலாம்.பிறப்பிலேயே ரெண்டு வயசுக் குழந்தை உயரத்தால் நாலு வயசுக்காரனாக இறக்கை கட்டிப்  பறக்காமல் இருக்கலாம்.கூடவே ஆறு     வயதில், றெக்கை அடர்ந்து எட்டு வயதுக்கான உயரத்தோடு அவன் சகோதரியையும்  மாயசண்டிகை என்னிடம் ரெண்டு நாள் மட்டும் ஒப்படைக்காமல் இருக்கலாம். திருவள்ளுவர் மஹரிஷி சொன்ன மாதிரி, யாதனில்  யாதனில் நீங்கியான் நோதல் அதனில் அதனில் இலன்,

கன்னித்தீவு

This entry is part 5 of 5 in the series கொலம்பஸ்

கொலம்பஸ் காலடி பட்ட 30 வருடங்களிலேயே, அந்த இனம் முற்றிலுமாக அழிந்தது. ஐரோப்பியர்களால் அறிமுகமான, அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாத, அம்மை (Smallpox) போன்ற நோய்களாலும், கட்டாயப்படுத்தப்பட்டுத் தங்கச் சுரங்கம் தோண்டுவது உள்ளிட்ட பலவிதமான கடின உழைப்புகளாலும், விவசாய வேலைகள் தடைப்பட்டு, ‘குடும்பம்’ என்னும் அமைப்பு உடைந்து, விளைச்சல் குறைந்து, உடல் நலிந்து, ஸ்பானிஷ் படையெடுப்பை எதிர்க்கும் திராணியற்றுப் பலரும் மடிந்தனர்.

சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?

இறைவனே பிரபஞ்சப் படைப்புக்கு நிமித்த காரணமாகவும், உபாதான காரணமாகவும் இருக்கிறார் என்ற இந்த கருத்தை துவைதம் மற்றும் விசிஷ்டாத்வைதப் பள்ளிகளும் ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் அவற்றுக்கும், அத்வைத வேதாந்தத்துக்கும் ஒரு குறிப்பிட்ட வேறுபாடு இருக்கின்றது. பிற பள்ளிகள் இறைவனே இந்த உலகமாக மாற்றமடைந்து நிற்கின்றார் என்று கொள்கின்றன. அதாவது எப்படி பால் உறைந்து தயிராக மாறுகின்றதோ அதுபோல இறைவனே பரிணாமமடைந்து இவ்வுலகமாக மாறி நிற்கின்றார் என்பது அவர்களது கருத்து. அதாவது இறைவனை அவர்கள் “பரிணாமி உபாதான காரணம்” என்கின்றனர்.

பைரஸி

This entry is part 6 of 6 in the series காப்பிரைட் கதைகள்

தன் தந்தையின் மரணத்திற்குப்பின் இத்தாலிக்குச் சென்றார் கிறிஸ்டியன் பாக். தொடர்ந்து இசை பயின்றார். ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்துவராக இருந்த அவர் கத்தோலிக்கராக மாறினார். இத்தாலிய பாணி ஆபரா நிகழ்ச்சிகளை நடத்தினார். மிலன் நகரில் புகழ் பெற்றார். அன்றைய இத்தாலி அவரைப் போன்ற பல திறமையான இசைக் கலைஞர்களைப் பெற்றிருந்தது. தேவாலயங்கள், அரசவைகளில் இசைக்கலைஞர் பதவிகளுக்குக் கடும் போட்டி நிலவியது. கிறிஸ்டியன் பாக், லண்டன் நகரம் வழங்கும் புதிய வாய்ப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்.

பாளையக்காரரும் பறங்கியரும்

ஒரு வினாடி என் கண் முன்னே கி ரா வின் கோபல்ல கிராமத்து மக்கள் தோன்றி மறைந்தனர். நான் நிற்கும் கரிசல் பூமியில் அவர்களின் நினைவு எப்படி வராமல் போகும். ஐந்து கொட்டை பாக்குகளையும், அரை கட்டு வெற்றிலையும், வெள்ளை புகையிலையும் சேர்த்து வாயில் குதப்பும் கோவிந்தப்ப நாயக்கரும்; கருப்பட்டியும் தயிரும் மட்டும் உண்டு, சுவற்றில் சாய்ந்தவாறே கோபல்ல கிராமத்தின் கதை சொல்லும் மங்கத்தாயாரு அம்மாளும், எங்கோ பக்கத்தில் தான் இருப்பார்கள் என்று தோன்றியது.

பாறை, பனி, பனியாறு பகரும் காலங்களின் வரலாறு

ஹைதராபாதின் பண்டைய பாறைகள் பூமியின் ஆழ்ந்த காலத்தைப் பேசுகின்றன. இமயமலையில் வீற்றிருக்கும் லதாக் மலைகள் கண்டங்கள் மோதிய கதையைக் கூறுகின்றன. கீனாய் ஃபியோர்ட்ஸ் அதில் இன்னொரு அத்தியாயத்தைச் சேர்க்கிறது. மெதுவாக நகரும் பனிப்பாறைகள், மலைகளைச் செதுக்கும் பொறுமையிலும், நீரைச் சேமிக்கும் கருணையிலும், ஒளியையே நீலமாக மாற்றும் அற்புதத்திலும், புவியியல், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று தங்கள் திறனை வெளிப்படுத்துகின்றன!

சுய-நாடுகடத்தல், அரிராங் மற்றும் அக நெருக்கடி

கிம் கி-துக்கின் சிறந்த திரைப்படங்களைப் பார்ப்பது என்பது, இன்னும் அரிய தீவிரமும் உண்மையான அழகும் கொண்ட தூய சினிமாவை எதிர்கொள்வதாகும். அந்தச் சந்திப்பை நாம் நேர்மையுடன் நிகழ்த்த வேண்டும் என்றால், நாம் இப்போது அறிந்தவற்றின் முழு எடையையும் தார்மீகப் பொறுப்பையும் அதற்குள் கொண்டு வர வேண்டும். அதன் உருவாக்கச் சூழல்கள், அந்தப் படைப்புகளுக்காகப் பேச முடியாத அல்லது பேச அனுமதிக்கப்படாத விளிம்புநிலை பெண்கள்/மனிதர்கள் கொடுத்த விலை, மற்றும் யாருடைய மௌனத்தை நாம் திரையில் அழகாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பவற்றை நாம் உணர்ந்தாக வேண்டும்

வரலாறு மறக்காத நட்பு: வாஷிங்டனும் லஃபாயெட்டும்

1783ல் பாரிஸ் உடன்படிக்கையின் மூலம் பிரிட்டன் அமெரிக்காவை முறையாக அங்கீகரிப்பதற்கு முன்பு, பல ஆண்டுகள் கடுமையான போர்கள் தொடர்ந்தன. போர்க்களங்களில் லஃபாயெட்டின் தலைமைத்துவம், ஜார்ஜ் வாஷிங்டனுடனான அவரது நெருங்கிய கூட்டாண்மை, ஃபிரெஞ்சு அரசின் ஆதரவை வலுப்படுத்துவதில் அவர் பெற்ற வெற்றி ஆகியவை அமெரிக்கச் சுதந்திரக் கனவை நனவாக்க உதவின. அவரது சேவையைப் பாராட்டி, காங்கிரஸ் அவருக்குத் தாராளமான நிதி விருதையும் பொது நிலத்தையும் வழங்கி கௌரவித்தது. 2002ல் ஒரு சில தனிநபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சிறப்புரிமையான கௌரவ அமெரிக்கக் குடியுரிமையையும் வழங்கிச் சிறப்பித்தது

தகவல் இளக்காரம்

This entry is part 2 of 2 in the series தரவு ஏக்கம்

இவர்கள் சொல்வது என்னவென்றால், இரண்டு வருட ஒப்பந்தம் என்று இருந்தால், ஒப்பந்தத்தின் கடைசி 6 மாதங்களில், தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இவர்களை அழைத்து, புதுச் சலுகைகள் ஏதாவது உள்ளதா என்று நச்சரிக்க வேண்டும். இல்லையேல் உங்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால், மறக்காமல், மாதா மாதம் பில்லை மட்டும் கட்டி விடுங்கள். பில்லைக் கட்ட அவர்களது இணையதளத்திற்குச் சென்றால், உங்களது மின்னஞ்லைக் கொடுத்தவுடன், அனைத்து விஷயங்களும் மாயமாக, உங்கள் முன் நொடிகளில் காட்டப்படும்.

தனிமையும் அழைப்பொலியும்

This entry is part 18 of 16 in the series ஹைக்கூ

காவல் இல்லக் காப்பாளன் தனிமையில் இருக்கிறான். மான்களை விரட்டுவதற்காக நெருப்பு உண்டாக்கிப் புகை வெளியிட்டு அதன் மணத்தால் வயலிலிருந்து மான்களை விரட்டியும் அவை வயலுக்குள் நுழைந்துவிடாமலும் காக்கிறான். யாருமில்லாமல் அவன் மட்டும் வனத்தில் தனிமையில் காவல் காத்திருக்கையில் தனக்கு உறக்கம் வராமலிருப்பதற்காகக் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் தாமிர மணியைத் தானே அடித்து ஒலியை உண்டாக்குகிறான்.  

இந்திரா பார்த்தசாரதி நிழற்படங்கள்

புகைப்பட ஆல்பம் – படத்தொகுப்பு