சிறு சிறு நகாசுகளுடன் ஸ்திரமான காலபிரமாணத்தில், ஆங்காங்கே கார்வை குடுத்தபடி நாட்டைக்குறிஞ்சியின் வளைவுகளை வெவ்வேறு ஸ்தாயியில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் வைத்தியநாதன். நங்கூரம் போல நடேசப் பிள்ளையின் நடைச் சொற்கள் உடன் ஒலித்துக் கொண்டிந்தன. நாட்டைக்குறிஞ்சியின் மென் பிரயோகங்கள் அழுந்திவிடக் கூடாது என்று சிரத்தை எடுத்து மிருதங்கத்தின் ஒலி அளவை மட்டுப்படுத்தி வாசித்துக் கொண்டிருந்தார் நடேசன். நடேசனின் நடைச் சொற்களைக் கேட்க வேண்டுமென்பதற்காகவே சில சதுஸ்ரங்களை மௌனங்களாக்கிக் கொண்டார் வைத்தியநாதன்.
சிந்தனைச் சோதனைகளின் நவீன வடிவமைப்பு
தேனீக்கள் இந்த சோதனையில் மிகச்சிறப்பாக வெற்றி பெற்றன. காட்சி அமைப்பு, அடர்த்தி ஆகியவை முற்றிலும் மாற்றப்பட்டபோதும், தேனீக்கள் தங்களின் குறைவானது என்ற விதியை புதிய வடிவங்களுக்கும் வெற்றிகரமாகப் பயன்படுத்தின. மிகவும் வியக்கத்தக்க வகையில், முற்றிலும் வெற்று அட்டை, அதாவது பூஜ்யம் என்ற எண் மதிப்பு கொண்ட கார்டு காட்டப்பட்டபோது, தேனீக்கள் அதை வடிவம் கொண்ட கார்டை விடக் குறைவானது என்று சரியாக அடையாளம் கண்டன. எண்கணித அறிவாற்றல் என்பது வெறும் காட்சி குழப்பத்தின் பக்கவிளைவு அல்ல; அது பூச்சியின் சிறிய மூளைக்குள் நடக்கும் உண்மையான எண்கள் பற்றிய பகுப்பாய்வையும் புரிதல்களையும் பிரதிபலிக்கிறது என்பதை இது நிரூபித்தது.
எது சனாதனம்?
சமுதாயத்தில் நிலவும் அனைத்து தீமைகளுக்குமான ஒரு பெயர் சனாதன தருமம் என்று இவர்கள் சொல்கிறார்கள். எனவே ’சனாதனத அழிப்பு’ என்கிற வெறுப்பு நிலைபாட்டை இப்படி சொல்லித்தான் நியாயப்படுத்துகிறார்கள்.இதன் எதிர் நிலைபாடு என்னவாக இருக்க வேண்டும்?
ஹிக்கூரி
அவள் மணலை விரலால் மெதுவாக மூடினாள். அப்போதுதான் சேவியர் அவள் கைகளைக் கவனித்தான். விரல் நுனிகளில் ஒரு பழைய ஆழமான வெட்டுக்காயம் . காயத்தின் தழும்பு வெண்மையாக இருந்தது . அவன் தன் கைகளைப் பார்த்தான். நடுங்கிய விரல்கள், இறுக்கிய கைகள். அவளுடைய காயத்துக்கும் அவனுடைய கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் ஒரு கணம் அப்படி நினைத்தான்.
காயம் கசியும் வையகம்
வெனிஸ், பெர்லின், லோகார்னோ போன்ற புகழ்பெற்ற சர்வதேசத் திரைப்பட விழாக்களில் உயரிய விருதுகளை அள்ளிய அதே வேளையில், அவரது படங்கள் சித்தரிப்பின் அறநெறிகள், பாலின அரசியல் மற்றும் ஓர் இயக்குநரின் அறம் குறித்த கடுமையான விவாதங்களையும் கிளப்பின. இக்கட்டுரை கிம்மின் திரை உலகை முழுமையான விமர்சனப் பார்வையின் வழி மதிப்பிட முயல்கிறது. அவரது படங்களில் இழையோடும் தத்துவ மற்றும் அழகியல் கோட்பாடுகளை—குறிப்பாகத் துன்பம், ஆசை, மீட்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பௌத்த பிரபஞ்சவியல்; விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மனிதர்கள் மீதான தொடர் கவனம்; கொரிய நவீனத்துவம், அரசியல் வரலாறு மற்றும் தேசத்தின் வடுக்கள் குறித்த ஆழமான வெளிப்பாடு; உடல்ரீதியான தூண்டுதல்களிலிருந்து வார்த்தைகளற்ற, உறைந்துபோன மௌனக் கவிதையாக உருவெடுத்த அவரது வன்முறை மிகுந்த காட்சி மொழி போன்றவற்றை—இக்கட்டுரை ஆராய்கிறது.
பால் மாறிய பாறைகள்
சிஸ்கின்ஸ் பறவையின்
அழகிய கோப்பை வடிவக் கூடு
பைன் மரத்திலிருந்து
காற்றில் நழுவி
கீழே விழுந்து விட்டது
எடையின்மையின் துயரம்
மனதை உடைத்திட
தாமிர வயல்களில் மலரும்
எஃகு பூக்களை
அசைத்துக் கொண்டிருக்கக் கடவது
என்று காற்றை சாபமிடுகின்றன
சலசலக்கும் இலைகள்
கண்ணாடிச்சுவரின் இந்தப்புறம்: ஐந்து நிலப்பரப்புகளில் பெண்
நாவலின் தொடக்கத்தில் நாற்பதை நெருங்கும் பெண்ணாக அறிமுகமாகும் லீலா தன் கடந்த காலத்தை நினைவுகூறுவதன் வழியாக, அவளது குழந்தைப் பிராயம், பதின்ம வயது மாற்றம் பின் இளவயதிலேயே திருமணம் எனத் தன் வாழ்வை மீண்டும் மீண்டும் கனவுகளாலேயே அர்த்தப்படுத்திக் கொள்ள முயல்வதாக இந்தக் குறுநாவல் அமைந்திருக்கிறது. லீலா தனது நினைவுகளை மீட்டெடுக்கும் விதம், அவளுக்கு கடந்தகாலம் என்பது நினைவுகள் அல்ல; காலத்தின் முன் எப்போதும் பதினாறு வயதுப் பெண்ணாகத் துள்ளிக்குதிக்க விரும்புகின்ற அவளால், இயல்பாக சுவாசிக்க முடிகின்ற ஒரே உலகம் எனக் காட்டுகிறது.
பழத்தோட்டத்தில் ஒரு காவல்
கங்குவின் பேச்சு உற்சாகமானதாக இருந்தது. பணம் இரட்டிப்பாகும் போது யாரும் எதுவும் சொல்வதில்லை. ஆனால் முதியவர் மனம் நிறைந்திருந்தது. தன்னோடு ஒட்டிக் கொண்டிருந்த முதுமையால் அவர் சிலவற்றை இழந்திருந்தாலும், மிக வேகமாக மரங்களை நோக்கி நடந்தார்.கங்கு திரும்பவும் படுத்துக் கொண்டான். தாப்பியின் ஞாபகங்கள் அவனுக்குள் படர்ந்து அவனை இறுக்கமாகக் கட்டிக் கொண்டன. ஒரு எலும்பு, ஒரே ஒரு விலா எலும்பு உடைந்திருந்தாலும், தாப்பி பக்கத்தில் உட்கார்ந்து அந்தக் கட்டை நீவிக் கொண்டிருந்திருப்பாள்
புதிய லண்டன்
புதிய லண்டன் மாறுபட்டிருந்தது. பாரம்பரிய மரபுப்படியான அமைப்பிற்குப் பதிலாக, வாணிபப் பொருளாதாரத்திற்கு நோக்கம் கொண்டு வணிகப் பகுதிகள் வடிவமைக்கப்பட்டன. இப்போது அரசின் வர்த்தக மையம் பெரிதாகக் கட்டப் பட்டிருந்தது. 1694 ல் உருவான இங்கிலாந்து வங்கி வணிக நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்யத் தொடங்கியது. காப்பீட்டுத் தொழில் உருவாகியிருந்தது. வியாபாரிகள் சந்தித்துப் பேசும் வாய்ப்பை புதிய காபிக் கடைகள் உருவாக்கின.
றெக்கை – அத்தியாயம் 22
வலனாடு ஊரில் செம்பாதி ஆண்களும் அபூர்வமாக பெண்களும் கடந்த ரெண்டு வருஷத்தில் தான் சைக்கிள் வாங்கி ஓட்டி சவட்டிப் போகிறார்கள். பக்கத்து ஊர் முழுக்க எஸ்பானிய கலாசாரத்துக்கு பங்கம் வராமல் ஆண்டு தோறும் கார்னிவால் என்ற கலைவிழா நடத்துவதில் மும்முரமாகி விக்ஞான முன்னேற்றத்தைக் கைவிட்டு விடுகிறார்கள். பெலன் என்ன என்றால் ஓபரா, பேலட், கொல்லேர் தழுவும் மாட்டை அடக்கும் விளையாட்டு என்று நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து விட்டு வேலை செய்கிற கரும்பு ஆலைக்கு கால் தேய நடந்து போகிறார்கள்
இல்லை என்பதும் வாழ்க்கையின் அங்கம்: சட்டிச்சாமியிலிருந்து சார்லு வரை
அங்கம்மாவின் கடி தவரிகளோ வேண்டுகோளோ மட்டும் அவன் ஊருக்குத் திரும்பி வருவதற்கான காரணமல்ல. அங்கம்மாவின் சொற்களுக்கு அப்பால் அவன் எழுதிய கூடுதல் சொற்களே முக்கியக் காரணம். அதன் கூர்மையும் அழுத்தமும் தாங்காமல்தான் அவன் வெளி நாட்டிலிருந்து வேக வேகமாகத் திரும்பிவிட்டான். அது தெளிவாகத் தெரிகிறது.ஆனால் அவனை வரவழைக்கும் வகையில் என்ன எழுதியிருப்பான் என்பது புதிராகவே இருக்கிறது.’ கதையில் புதிராகவே விடப்பட்டுள்ளது என்பதுதான் கதையின் வெற்றி. அந்த மெளனமே விட்டல்ராவின் சிறுகதைக்கலை என்கிறார் பாவண்ணன்.
குற்றலைகள்
வீட்டைவிட்டு நான் வெளியேறும்போது புழக்கடையில் டெய்சி இருந்திருக்கிறது. பந்தை தனது மூக்கினால் தள்ளியபடியும், பின்னர் அதை தானே துரத்தி எடுத்து மிதித்து விளையாடியபடியும் அது ஆனந்தமாகத்தான் இருந்தது. நான்கு கால்களையும் பரப்பி அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த மனோவை அது ரொம்ப நேரத்திற்கு சட்டைசெய்யவேயில்லை. பந்து விளையாட்டு சலித்ததும் நட்புடன் வாலை ஆட்டியபடியே அது மனோவை நெருங்கியதும், ஒரே பாய்ச்சலில் பாய்ந்த மனோ அதன் மெல்லிய கழுத்தைக் கவ்வி, வெறியுடன் பலமுறை ஆட்டி வீசியது. பிளவுபட்ட டெய்சியின் கழுத்திலிருந்து ரத்தம் கருநிறமாய் கசிவது அந்தக் காட்சியில் அத்தனை துல்லியமாய் தெரிந்தது.
பிழைகளும் கொலைமுயற்சியும்!
செப்டம்பர் 13 லிருந்து 17ம் தேதி வரையில், அட்லாண்டிக் கடலின் மத்தியில் கப்பல்கள் இருந்தபோது, மாலுமிகளின் காம்பஸ் ஒவ்வொரு நாள் மாலையிலும் நேராக வடக்குத் திசையைக் காண்பிக்காமல் சற்றே விலகி வடமேற்கைக் காண்பித்தது. அக்காலத்தில் காம்பஸ் எனும் திசைகாட்டும் கருவி கடவுளின் அருளால் செயல்படும் ஒரு மந்திரக் கருவியாகவே மாலுமிகளால் நம்பப்பட்டது. அது திசையை மாற்றிக் காண்பித்ததால், கப்பல்கள் இயற்கையின் விதிகளுக்கு உட்படாத, கடவுளின் ஆளுகைக்கு அப்பாற்பட்ட, மனிதர்கள் வசிக்க முடியாத ஒரு பிரதேசத்தை நோக்கிச் செல்வதாக அனைவரும் அச்சமுற்றனர்.
நானாகிய
பூங்காவை விட்டு வெளியேறும் போது அழகான அரிவை என் முன் தோன்றினாள், அன்று நான் பார்த்ததில் கடைசி முகம் அதுதான் என்ற அளவிற்கு அந்த முகம் என்னுள் பதிந்துள்ளது. அவள் அணிந்திருந்த உடை எனக்கு சிந்தையில் இல்லை, கருமையான அவளது முகத்தின் சிறப்புகளை மட்டுமே மீட்க முடிகிறது-கடுமையான செயல் ஒன்றும் இல்லை இப்போதும் என்னால் எளிமையாக அந்த முகத்தை விவரிக்க இயலும்- புருவம் குறைவாக இருந்தது; உதடுகளுக்கு அரக்கும் சிவப்பும் கலந்த ‘பால்ம்’ பயன்படுத்தியிருப்பாள்போல, தண்ணீர் போன்ற அந்த உதடுகள் அவளது அழகென்ற சேனைக்கு அணு ஆயுதம்போல வலு சேர்த்தது. இருப்பினும், என்னை பெரிதாக கவர்ந்தது அவளது தாடைதான்.
கனவுக்கென்ன விலை?
இந்தப் பங்குச் சந்தை நுழைவினால் இந்நிறுவனத்தில் வேலை பார்த்த / பார்க்கும் ஊழியர்களில் 4,400 பேர் மில்லியனர்களாகவும் 400 பேர் நூறு மில்லியன் டாலர்களுக்கு மேல் சம்பாதிப்பார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. மற்ற நிறுவனங்களில் தலைமைப் பதவிகளில் இருப்பவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் கிடைக்கும் இத்தகைய வளர்ச்சி இங்கு ராக்கெட் வடிவமைப்பாளர்கள், தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்கள், அங்குள்ள உணவகங்களில் பணிபுரிபவர், ராக்கெட் கடலில் விழும் பொழுது அதை எடுத்துக் கரை சேர்பவர் என்று மிகப் பரவலாக இந்த மதிப்புக்கூட்டு நடந்திருப்பது பெரிய ஆச்சரியம். இத்தனை பேர் ஒரே நிகழ்வின் மூலம் பெரும் செல்வந்தர்களாக மாறுவது அரிதான ஒன்று. அதை ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்திக் காட்டி இருக்கிறது.
உடல்நலக் காப்பீடுகளின் விற்பனை சந்தை
அரசாங்க விதிகளின்படி, காப்பீட்டுச் சந்தையில் மானியம் பெற வறுமைக்கோட்டின் 100% மேல் வருமானம் இருக்க வேண்டும். ஆனால், இந்த 10 மாநிலங்களிலோ மெடிகெய்ட் பெற வருமானம் மிக மிகக் குறைவாக இருக்க வேண்டும் (எ.கா: அலபாமாவில் 18% மத்திய அரசின் வறுமைக்கோட்டின் கீழே வருமானம் இருக்க வேண்டும் என்அ (FPL) என்ற வரம்பு. ஆனால் சந்தையில் காப்பீடு கிடைக்க ஊதியம் கஒரு குறிப்பிட்ட அளவாவது இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் பிரிமியம் கட்ட இயலும்.
சத்யம், ஞானம், அனந்தம் பிரம்ம
பிரம்மத்தினுடைய இலக்கணத்தை “சத்யம்-ஞானம்-அனந்தம் பிரம்ம” என்று தைத்திரீய உபநிஷத் வரையறை செய்கிறது. இதுவே பிரம்மத்தின் ஸ்வரூப லக்ஷணம். மேலும் ஆத்மா மற்றும் பிரம்மத்துடைய இலக்கணமாக சத்-சித்-ஆனந்தம் என்பதையும் அத்வைத வேதாந்தம் வரையறை செய்கிறது. சத்-சித்-ஆனந்தம் ஆகிய மூன்று சொற்களும்தாம் பிரம்மத்தை அறிந்து கொள்வதற்காக துல்லியமான வரையறைகளை அளிக்கின்றன. பிரம்மம் என்பது இருக்கின்ற ஒரே உண்மையைக் குறிப்பதற்கான ஒற்றைச் சொல். அதை மூன்று சொற்களாக சத்-சித்-ஆனந்தம் என்றும் புரிந்து கொள்ளலாம்.
மரமேறும் தவளை
மழைப் பொழிவால் வாழை மரம் சாய்ந்து சாய்ந்து ஆடுகிறது. அதன் மேல் தவளை ஏறுகின்றது. வழுக்குவதற்குக் காட்டாகச் சொல்லப்படும் வாழையில், அதிலும் மழையிலும் காற்றிலும் ஆடிக்கொண்டிருக்கும் அம்மரத்தில் அது ஏறுவதும், ஜென் மரபின்படி நிலையாமையின் குறியீடாகக் கவிதையில் வெளிப்படுகின்றது.
மாறும் அமெரிக்கா, மாறும் கனவுகள்
அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறையில் இந்திய வல்லுநர்கள் எத்தகைய பங்களிப்பைக் கொண்டுள்ளனர் என்பதை உலகம் அறியும். மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் நிறுவனர்கள், பொறியாளர்கள், தயாரிப்பு மேலாளர்கள், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்களில் ஒரு விகிதாசாரமற்ற பங்கைக் கொண்டுள்ளனர். தற்போதைய இந்த அடக்குமுறையின் முரண் என்னவென்றால், அமெரிக்காவின் தொழில்நுட்ப ஆதிக்கத்திற்கு யார் அடித்தளமாக இருந்தார்களோ அவர்களையே குறிவைத்திருப்பது தான்.
ஒளியின் நதி
இன்பத்தின் வாயிலாக உள்
நுழைத்து நரகத்தின் எரி கற்களாய்
எரித்து நாளும்
கனன்று எரிந்து சாம்பலாய்
போகும் முன்னே பிதுக்கி
தள்ளியது காலம்
சுழற்சியின் தொடக்கத்தில் கண்
மூடியவன் முடிவில் புரண்டு படுத்தான்
புத்துயிர்ப்பின் கணத்தில்
வாயில் திறந்தது உந்திச்
சுழியில் தோன்றியது உலகம்
விண்மீனின் குழந்தைகள்
ன்மீகமும், அறிவியலும் இணைந்து சொல்வது ஒன்று. நம் வாழ்வு இந்தப் பரந்து விரிந்த விண்மண்டலத்துடன் ஒத்திசைய வேண்டும். கிரகங்கள் மெல்லிய அகச்சிவப்பு ஒளியை உமிழ்கின்றன. தானே ஒளிரும் சக்தி அவற்றிற்கில்லை. நட்சத்திரம் அவற்றிற்கு ஒளி தருகிறது. நம் எலும்பு, குருதி இவை நட்சத்திர தூசுகளிலிருந்து என்றால், நமக்கும், அகிலத்திற்கும் இடையே பிரிவினை இல்லாமலாகிறது அல்லவா? அதே நேரம் நம் உடல் என்பது அண்டத்தின் கூறு என்றாலும், பூமி ஒரு கிரகம் என்பதால், அதில் வாழும் அனைத்திற்கும் உள்ளொளியாக சைதன்யம் திகழ்கிறது.
