இத்தி மரத்தடி எஞ்சுவது: மண்ணின்றி நிலைகொள்ளா வாழ்வுகள் 

படைப்பு உள்நாட்டுப் போரின் சிங்களத் தரப்பை பற்றிப் பேசுவதில்லை. அதன் மறு தரப்பான இயக்கத்தைப் பற்றியும் விரிவாகப் பேசுவதில்லை. இந்தப் போரில் அகப்பட்ட மலையக மற்றும் ஈழத்தமிழர்களின் போர்க்கால வாழ்வை, அவர்களின் தரவுகளை, கண்ணீரை, வாழத்துடிக்கும் விழைவை, இழந்தவற்றை,  போர் அன்றாடம் ஆவதன் நிதர்சனத்தை, குரூரத்தை, சாகவும் தயார் என்ற அர்ப்பணிப்பைச் சொல்கிறது.  ஈழத்தமிழர்களின் அனுபவம் வேறுபட்டது.