‘எந்தக் காரணத்தை முன்னிட்டும் (குறிப்பாக அரசியல் காரணம்) சங்க இலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள் போன்றவை தமிழனுக்கு மட்டும்தான் சொந்தமானவை என்கிற ரீதியில் பிரச்சாரம் செய்வதை நாம் நிறுத்த வேண்டும் என்கிறார். ‘அவைகளை உலக இலக்கியமாகக் கொண்டு கிளாஸிக்கல் மொழியாக தமிழை அடையாளம் காட்டி லத்தீன் கிரேக்க இலக்கியங்கள் போல உலக பொதுச் சொத்தாக ஆக்குவதற்கு தற்காலத் தமிழையும் சங்ககாலத் தமிழையும் தனித் தனியாக பாகுபடுத்த வேண்டும்’ என்கிறார். மிகவும் சிந்திக்க வைக்கிறது இந்தக் கட்டுரை.
Tag: சுஜாதா
சுஜாதாவின் “நகரம்”- ஒரு வாசிப்பனுபவம்
“Patient பேரு என்ன?” என்ற கேள்விக்குத் தன் கணவனின் பெயரைக் கேட்கிறார்கள் என நினைத்துக்கொண்டு அவர் இறந்துவிட்டதாகக் கூறும் இடத்திலும், “எத்தன ரூபா மாசம் சம்பாதிப்பே?” எனும் கேள்விக்கு “அறுப்புக்குப் போனா நெல்லாக் கிடைக்கும், அப்புறம் கம்பு, கேழ்வரகு!” என்று கூறும் இடத்திலும் வள்ளியம்மாளின் அப்பாவித்தனத்தையும், அறியாமையையும், அன்றாடங்காய்ச்சி நிலைமையையும் எளிதில் உணர்த்தி விடுகிறார் சுஜாதா.
சென்னையில் அட(டை) மழை!
இருபது அடிக்கு ஒரு குடையை கவுத்துவைத்து அதில் குடை வியாபாரம் செய்துக்கொண்டிருந்தார்கள். “அறுபது, எழுபது” என்று விற்ற குடைவியாபாரிகள் எல்லோரும் சொட்ட சொட்ட நனைந்திருந்தர்கள். அந்த மழையிலும் “அதோ அந்த பச்சை கலர் கொடுங்க” என்று மக்கள் வாங்கிக்கொண்டிருதார்கள். குடை அன்று சென்னை மக்களின் கை, கால் மாதிரி ஒரு புதிய உறுப்பானது.
