சற்றென்று பெய்யும் கோடை மழையென
நொறுங்கிப் பொலபொலத்துப் போனது
நான் என்னும் வாழ்க்கைஉயிரை மறந்த உடலென என்னால் அவளோடு பொய்யாகச் சிரிக்க முடியவில்லை
Author: பதிப்புக் குழு
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
வாசக அன்பர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள். சுபகிருது எனப்படும் இந்த ஆண்டில் இந்திய மக்களும், தமிழகத்து மக்களும் கடந்த ஈராண்டுகளாக அனுபவித்த பெரும் தொல்லைகள் முற்றிலும் நீங்கி, சமூகத்தின் பொதுநலம், அன்றாட வாழ்க்கை, மேலும் பண்பாட்டு இயக்கங்களில் சிறந்த அனுபவங்களையும், மேம்பட்ட வளங்களையும் பெறவேண்டும் என்பது எங்கள் விருப்பம்.
நவம்பர் கவிதைகள்
பூக்கள் உதிரா சமவெளியில்
வெயில் மேயும் கோடையில்
யாருக்கும் தெரியாமல்
சருகை மென்று
அக்டோபர் கவிதைகள்
சிறு அகலின் சுடர் தாங்கும் நேசத்தின் நினைவென
கனவின் தலைகீழ் உலகில்
தலை இல்லா மனிதனாக
இத்தனை பெரிய உலகையும் அணைத்துக் கொண்டு நடந்து போகும்
குருவியின் கால்கள் கொண்ட ஒருவனாக
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
காடும்..
கூடும்..
பெருந்தேடலானதால்
பறத்தல் மறந்து
போயிருந்தது
நினைவில்
காடுள்ள பறவைக்கு
புக்கர் பரிசு – பரிந்துரைகள்
சொல்வனம் வழங்கும்… கிண்டில் புத்தக வெளியீடு
சொல்வனம் வெளியீடாக “வீடும் வெளியும்” நூல் கிடைக்கிறது. இது அமேசான் கிண்டில் மூலமாகக் கிடைக்கும் சொல்வனம்.காம்-இன் மூன்றாவது புத்தகம். முந்தைய இரண்டும் சிறப்பிதழ்கள் என்றால், இந்தப் பதிப்பு எங்கள் ஆசிரியர் குழுவில் ஒருவரான ச. அனுகிரஹாவின் படைப்புத் தொகுப்பு.
கவிதைகள்
வாழ்நாளில் உங்களுக்கு ஏற்பட்ட துயர சம்பவங்களை மனதில் இருத்தி
ஒரு சொட்டு மாறாமல்
அப்படியே கண்களில் கொண்டு வந்து உட்கார வையுங்களென்றதும்
எல்லாருக்கும் கண்கள் சிவீரென்று ஆனது
என் சிவப்பினை அந்தச் சிவப்புகளோடு ஒப்பு செய்து பார்த்தேன்
அன்புள்ள வாசகர்களுக்கு… சிறப்பிதழ் அறிவிப்பு
உங்கள் வாசிப்பில், கவனிப்பில், சிந்தனையில் எந்த எழுத்தாளர்களை நீங்கள் பாராட்டிப் படிக்கிறீர்கள், அவர்களால் உங்களுக்குக் கிட்டிய மேன்மைகள் என்னவென்று நினைக்கிறீர்கள் என்று யோசித்து, ஒரு சுருக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்.
இந்தச் சிறப்பிதழ் புதுப் புனலாக வந்த எழுத்தாளர்கள் பற்றியது என்பதால் சமீபத்தில் எழுத வந்துள்ளவர்களைப் பற்றி இந்த யோசனைகள் இருக்க வேண்டும்.
2000த்துக்கு அப்புறம் எழுத வந்தவர்களைப் பற்றி இருக்கட்டும் என்று தற்காலிகமாக முடிவு செய்திருக்கிறோம்.
இந்தியாவுடன் பேசுவது
A Selection of English Language Broadcasts to India. Edited and with an Introduction by George Orwell. – நூலில் இருந்து சில புகைப்படங்கள்
பத்மா அர்விந்த் – பேட்டி
படைப்பதனால் அவன் இறைவன் என்றாலும், பிறப்பையும் இறப்பையும் நிறுத்தும் வல்லமை கொண்ட இறைவன்/இயற்கை இல்லை. எழுத்தாளர்களும் மனிதர்கள்தாம், அவர்களுக்கு தொழில் எழுத்து, எனக்கு மேலாண்மை போல. என் துறையிலும் திட்டமிடலும், எழுதுதல், நுட்பமாகவும், விவேகமாகவும், இன்னமும் நூதனமாகவும், சில சமயம் படைக்கும் திறனுடனும் சிந்திக்க வேண்டும். என்னைப்போல, என்னைவிடவும் மேலாக, இன்னும் உயர் பதவிகளில் இருப்பவர்கள் கூட பலர் இருப்பார்கள். நாங்கள் சந்திப்பவர்கள் உண்மையான மாந்தர்கள், தீர்ப்பது உண்மையான பிரச்சினைகள். ஆனால், இதுதான் உயர்ந்தது என்று மற்றதைப் புறந்தள்ள முடியாது. மற்றவர்களை ஒதுக்கித்தள்ளவும் இயலாது. எல்லாவற்றிற்கும் பொது விதியும் இல்லை….
அந்தக் காலப் பாடல்களும் இக்கால கலைகளும்
அஜய் கர் – திரைப்பட பாடல்கள் தொகுப்பு, சத்யஜித் ரேவின் பின்னணி இசை, கொல்கத்தாவின் இக்காலக் கலைஞர்கள் குறித்த ஆவணப்படம்,
20ஆம் நூற்றாண்டின் வங்காளப் பத்திரிகை உலகம்
சூரபுத்திகாரர்களின் புண்ணியத்தால், இந்த உலகத்தில் நிறைய பெரும் ஏரிகள் இருக்கின்றன. அந்தத் தடாகங்களில் குளித்தும் குடித்தும், சிந்தைக்கான நம் தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம். எனினும், அன்றாடத் தேவைக்கு குழாய்த் தண்ணீர் வசதியாக இருக்கிறது… செய்தித் தாள்கள், துணுக்கு விமர்சனக்கள் போன்ற க்ஷண சாஹித்யங்கள் — குழாய்த் தண்ணீரின் வேலையை செய்கின்றன.
புத்தகக்குறி
இலக்கிய பத்திரிகைகளின் சமீபத்திய வெளியீடுகள் குறித்த சிறு அறிமுகம்: n+1 – Death Wish https://nplusonemag.com/magazine/issue-38/ Stuart Schrader, Lizzie Feidelson, Jeremy O. Harris, Mark Doten, Nan Z. Da, Caleb Crain, Christina Nichol, Mattilda Bernstein Sycamore, Ida Lødemel Tvedt, William “புத்தகக்குறி”
நாஞ்சில் நாடன் கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்
நாஞ்சில் நாடனின் இந்தக் கட்டுரைக்குள் ஒவ்வொரு பாட்டையும் சொல்வனம் இணையதளத்தார் இடைச் சொருகியே தந்திருக்கிறார்கள். இசை கேட்கக் கேட்க மயிர் சிலிர்க்கிறது. பத்தாததுக்கு கட்டுரையில் நாஞ்சில் நாடன் திரட்டித் தருகிற புலனனுபவம். அது ஒரு களவுச் சொப்பனம் போல ஆளை ஆழ்த்தும். கூடவே யாழ்பாணத்துச் சித்தர் யோகரின் பத்து கண்ணியில் வரும் பவனம், பருதி, பரவை ஆழி எல்லாமும் தாண்டி அதிலுள்ள ‘எடி’ என்கிற தொனியையும் விட்டுவிடாமல் ஒரு பிடி பிடித்து வைக்கிறார்…
இ-கொலு
( நன்றி: ஓவியர் ஆர்.செ. )
வங்கச் சிறப்பிதழ் அறிவிப்பு
சொல்வனம் தன் 12 ஆண்டுக் கால இயக்கத்தில் பல மொழிபெயர்ப்புகளைக் கொடுத்திருக்கிறது. ஒரு பருந்துப் பார்வையில் கவனித்தால், அவற்றில் பெருமளவும் இங்கிலிஷிலிருந்து பெறப்பட்டவையாகவே இருப்பது தெரியும். இந்தியாவைப் போன்ற முன்னாள் காலனிய நாடுகளின் ஒரு பேரவதி என்ன என்றால், அவற்றின் நெடுங்கால காலனியாதிக்கத்தின் சுவடுகள் வரலாற்றில் துவங்கி சமூகத்தின் “வங்கச் சிறப்பிதழ் அறிவிப்பு”
நூல் அறிமுகங்கள்
டேனியல் டென்னெட். மதிக்கக் கூடிய சிந்தனையாளர். அவர் இந்த மதிப்புரையில் கவனமாக கருத்தியல் சிதைப்புகளையும், திரிப்புகளையும் தாண்டி மானுடவியல், வரலாற்றியல், உளவியல், மதவியல், சமூகவியல் போன்றன இயங்கக் கற்க வேண்டும் என்று சுட்டுகிறார். அதற்குப் புள்ளியியல் ஒன்றே வழி என்று நினைப்பதும் மடமை என்றும் சுட்டுகிறார். ஆனால் புள்ளியியலின் உதவி தேவை, அதன் எல்லைகளும், அதன் வழிமுறைகளில் உள்ள புதைகுழிகளையும் பற்றிய தீர்க்கமான கவனம் தேவை என்று சொல்கிறார்.
மகரந்தம்
விண்ணில் ஓர் நெடுஞ் சுவர் ‘தாரகையென்ற மணித்திரள் யாவையும் சார்ந்திடப் போ மனமே! சீர விருஞ்சுடர் மீனொடு வானத்துத் திங்களையுஞ் சமைத்தே…’ – பாரதியார் முப்பரிமாண வரைபடம் ஒன்றின் உதவியுடன், அண்டவியலாளர்கள் மிகச் சமீபத்தில், வானில் அதி அற்புதமான தென் துருவச் சுவர் (South Pole Wall) ஒன்றைக் “மகரந்தம்”
லக்ஷ்மி எழுதிய “ஸ்ரீமதி மைதிலி” நாவல்
லக்ஷ்மியின் படைப்புக்களில் குடும்ப அமைப்பும் அதில் குடும்பப் பெண்களுக்குத் தரப்படும் முக்கியத்துவமும் மையப்பொருளாக அமைந்துள்ளன. இவரது கதை முடிவு நல்லதொரு குடும்பம் உருவாவதையே கூறுகிறது; நலமாக முடிகிறது. தவறு செய்தவர் மனம் திருந்தி மீண்டும் நல்வாழ்வை மேற்கொள்வதாக அமைகிறது…
வாசகர் மறுவினைகள்
கதையின் முதல் மற்றும் நிறைவு வரிகளை, “சாமியே…ய், சரணம் ஐயப்பா!” என்று அமைத்தது மிகச் சிறப்பு!
இந்த வரிகளுக்கிடையில், எதார்த்தமான நடையில், எவ்வளவு நாசூக்காக வண்டி ஓட்டுநர்களின் சிரமத்தை விவரித்திருக்கிறீர்கள்!
நான் பள்ளியில் படிக்கும் போது எங்கள் ஊர் மானாமதுரையிலிருந்து குருசாமிகள், மார்கழி மாதத்தில் விரதம் இருந்து மகரதீபம் காண இருமுடி கட்டி் குழுவாகக் கூண்டு உந்துகளில் சபரிமலைக்குக் கிளம்புவார்கள்….
225: ரொபெர்த்தோ பொலான்யோ சிறப்பிதழ் குறித்து
நம்பி கிருஷ்ணனையே இந்த இதழுக்குச் சிறப்புப் பதிப்பாசிரியராக இருக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தோம். இந்த இதழில் பிரசுரிக்கப்படும் 30+ கட்டுரை, கதைகள் அனைத்தையும் அவர் கவனித்திருக்கிறார். தவிர அவரே பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
ரொபெர்த்தோ பொலான்யோ – 2666: மேடை நாடகம்
ரொபெர்த்தோ பொலான்யோவின் 2666 குறித்த அறிமுகங்களையும், விமர்சனங்களையும் வாசித்து இருப்பீர்கள். கீழே அதை மேடை நாடகமாகக் காணலாம். ஐரோப்பாவின் மேற்கல்வி, ஆய்வு முதலியவற்றில் ஈடுபடும் அறிவியல், பண்பாட்டு ஆராய்ச்சியாளர் சமூகம், ஓர் எழுத்தாளரைத் தேடியலைகிறார்கள். அந்தத் தேடல் மெக்ஸிகோ நாட்டின் எல்லையோர நகரத்திற்கு அவர்களைக் கொணர்கிறது. அங்கே நூற்றுக்கணக்கான “ரொபெர்த்தோ பொலான்யோ – 2666: மேடை நாடகம்”
உணர்ச்சி வசப்படல் எவ்வாறு மூளையால் உருவாகிறது?
”ஆசை” திரைப்படத்தில் வரும் வசனம் நினைவுக்கு வருகிறது: “ஒருவரின் முகத்தைப் பார்த்தே அவர் நல்லவரா, கெட்டவனா என்று தெரிந்து கொண்டு விடுவேன்.” அவ்வாறு அறிய முடியுமா? அகத்தின் அழகை முகத்தில் பார்க்கலாமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை உங்களின் முகபாவங்கள் காட்டிக் கொடுத்துவிடுமா? சந்தோஷத்தையும் துக்கத்தையும் கோபத்தையும் கவலையையும் “உணர்ச்சி வசப்படல் எவ்வாறு மூளையால் உருவாகிறது?”
நிறமும் நடிப்பும்
எந்தெந்த நடிகர்கள் முகத்தை வெள்ளையடிக்கும் களிம்புகளைப் பரிந்துரை செய்து கொண்டே, “எல்லா நிறமும் ஒன்றே” என்று முழக்கமும் இடுகிறார்கள் என்னும் பட்டியலை இங்கே காணலாம். “கருப்பு நிறம், வெள்ளை நிறம் எல்லாம் ஓர் உயிர்!” என சொல்பவர்களால் எப்படி முகப்பூச்சுப் பொருட்களை உபயோகிக்கவும் சொல்லமுடிகிறது என்னும் வினாவை எழுப்புகிறது “நிறமும் நடிப்பும்”
கைச்சிட்டா – 4
வீட்டில் இருந்து வேலை பார்ப்பதில் ஜன்னலோர வாசமும் அண்டை அயல் நடப்புகளும் நிறையக் காணக் கிடைக்கின்றன. நான் உட்காரும் இடத்திற்கு வெளியே உள்ள கொல்லைப் புறத்தில் இரண்டு தனித்தனி ஜோடிப் பறவைகள் கூடு வேறு கட்டியிருக்கிறது. ‘கபாலி’ படத்தில் சிறையில் இருந்து வெளியே வரும் ரஜினி கதாபாத்திரம் சொல்வது போல், “அதப் பறக்க விடுங்கடா… அதுதான் அதன் இயல்பு” என மரக்கிளைகளுக்கு நடுவே கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கும். அந்தக் குருவிகளும் பட்சிகளும் உட்கார்ந்து கூட்டம் கூடி இரையைக் கொத்திக் கொண்டு காணாமல் போவது நாள் முழுக்க கணினி சந்திப்புகளில் அடைபட்டிருக்கும் எனக்கு உவகையைத் தரும். சிறகடிக்கும் ஜீவன்கள் குறித்த நூல்களைத் தேடினேன். சற்றே இன்ப ஆச்சரியம். அமெரிக்காவில் அதிகமாக விற்கும் நூல்..
இந்த இதழ்- ஒரு முன்னோட்டம்
சொல்வனம் மொழி பெயர்ப்புகளுக்கு வரவேற்பு கொடுக்கும் பத்திரிகை. நிறைய இங்கிலிஷிலிருந்துதான் இங்கு வந்திருக்கின்றன என்றாலும், இந்திய மொழிகளிலிருந்தே நேராகத் தமிழுக்கு மொழி பெயர்க்கப்படும் விஷயங்களுக்கே பிரதான இடம் கொடுக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்.
கைச்சிட்டா – 3
அ) A Case of Exploding Mangoes ராஜ்ஜியங்களின் தலைவர்கள் கொல்லப்படுவது என்பது எண்பதுகளில் சர்வ சாதாரணம். எகிப்து நாட்டின் ஜனாதிபதி அன்வர் சதத் 1981இல் தீர்த்துக் கட்டப்பட்டார். அதே ஆண்டில் பங்களாதேஷ் நாட்டின் ஜனாதிபதி ஜியா உர் ரெஹ்மான் அரசியல் காரணங்களுக்காக ஆட்கொலை செய்யப்பட்டார். 1984ல் இந்திரா “கைச்சிட்டா – 3”
மகரந்தம்
அண்டக்கதிர்களைக் கண்டறியும் பரிசோதனையில், 2006 மற்றும் 2014-லில், பனியிலிருந்து அதிக சக்தி வாய்ந்த அண்டக்கதிர்களின் தலைகீழ் அருவியைக் கண்டறிந்தார்கள். முதலில் அதைப் பின்னணி ஓசை என்றே நினைத்தாலும், 2016-லில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அது தலைகீழ் அண்டக் கதிர்ப் பொழிவு எனச் சொன்னது. இது ஓர் இணை உலகம் இருக்கலாம் என்ற ஐயத்தினை ஏற்படுத்தியது.
கைச்சிட்டா – 2
அமெரிக்காவில் பாதகமான விஷயங்களைச் சொல்வதற்கு முன் இரண்டு நல்ல நடவடிக்கைகளைச் சொல்லிவிடுவார்கள்; அதன்பின் மாற்றம் தேவைப்படும் விஷயத்தை நாசூக்காக முன் வைப்பார்கள்; அதன் பின் முத்தாய்ப்பாக “நன்றாக வேலை செய்கிறாய்!” என்னும் சம்பிரதாயச் சொற்றொடரோடு பேச்சை முடிப்பார்கள். இதற்கு பர்கர் அணுகுமுறை எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இரண்டு ரொட்டிக்கு நடுவே கோழிக்கறி அடைபட்டிருப்பது போல் இரண்டு பக்கமும் அசத்தல் குணநலன்களைச் சொல்லி, நடுவில் குற்றங்களைச் சொல்லுதல் மாண்பு. பிரான்ஸில் இப்படி எல்லாம் சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கோழிக்கறியில் இறங்குகிறார்கள். “இது உன்னிடம் சரியில்ல! இப்படி நடந்தால் வேலை போயிடும்!” எனச் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்.
மகரந்தம்
மனிதனை பற்றிப் பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் “மனிதன் மகத்தான சல்லிப் பயல்”என்றுதான் சொல்வேன் – இந்த எதிர்மறை வார்த்தைகளை உதிர்த்தவர் ஜி. நாகராஜன் (1929-1981) என்னும் தமிழ் எழுத்தாளர். மெத்தப் படித்த மேதைகள் சிலரும்கூட மனிதனைப் பற்றிய எதிர்மறைக் கருத்துக் கொண்டவர்கள்தாம்.
குளக்கரை
ஃப்ளோரிடா வழக்கம்போல் இந்த ஆண்டும் குளிர்கால காய்கறி சாகுபடியில் முதலிடம் பிடித்தது. மார்ச் – 2020 கொரோனா தாக்குதலைத் தொடர்ந்த லாக்-டவுனின் முதல் பலியும் அதுவே. உணவு விடுதிகள், உல்லாசக் கப்பல் பயணம், பள்ளிக்கூட சிற்றுண்டிச்சாலைகள், விமான நிறுவனங்கள், தீம் பார்க்குகள் அனைத்தும் மூடப்பட்டதால் உற்பத்தியாளர்கள், “கடை விரித்தேன்; கொள்வாரில்லை” என்ற ராமலிங்க வள்ளலாரின் நிலைக்கு வந்துவிட்டார்கள்.
கைச்சிட்டா
இந்தப் பகுதியின் குறிக்கோள்கள்:
1. சுருக்கமாகச் சில புத்தகங்களை அறிமுகம் செய்வது; அறிமுகம் செய்த பதிவுகளைப் பகிர்வது.
2. ஆங்கிலமோ, தமிழோ, மொழியாக்கமோ (அல்லது) கதையோ அபுனைவோ கிளாசிக்கோ – எல்லாவற்றிலும் ஒன்றைப் படித்தீர்களா எனக் கேட்டுப் பதறச் செய்வது.
3. உங்களிடமிருந்து இலவசமாக நூல்களைப் பெறுவது (அல்லது) பழைய விமர்சனங்களைப் புதுப்பிப்பது.
அறிவிப்பு: ரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ்
சொல்வனம் இதழ்-225, “ரொபெர்டோ பொலான்யோ” சிறப்பிதழாக வரவிருக்கிறது. பொலான்யோ-வின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகளை வரவேற்கிறோம். ஆர்வமுள்ள வாசகர்கள், தங்கள் கட்டுரைகளை ஜூன் 10 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மகரந்தம்
நெடிய பாரம்பரியம் கொண்ட பறை (drum), தாளம் (Cymbal) வகை வாத்தியங்கள் பண்டைய கலாச்சாரங்கள் அனைத்திலும் இருந்தன . அவற்றை உள்வாங்கி, ஒருவரே பறையடித்து தாளமிடும் வகையில் அமெரிக்காவில் உருவானது டிரம் செட் (Drum செட்).
குளக்கரை
கடந்த 40 ஆண்டுகளில் மறுசுழற்சியில் தயாரிக்கப் பட்ட பிளாஸ்டிக்கின் அளவு 10% க்கும் குறைவானது .
….அமெரிக்க நெகிழிக் கழிவுகளை பெருமளவில் இறக்குமதி செய்துகொண்டிருந்த சீனா , தற்போது அதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது . சீனத்தைத் தொடர்ந்து மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் தைவான் நாடுகளும் கட்டுப்பாடுகள் விதித்தன. இறக்குமதி அனுமதிகள் புதுப்பிக்கப்படாததால் அமெரிக்க நெகிழிக் கழிவுகள் இந்தியா வரவும் வாய்ப்பில்லை . இதனால் மறுசுழற்சி வேலைகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குடியேறின. அங்கே பல மில்லியன் டன் நெகிழிக்கழிவுகளின் மறுசுழற்சிக்குத் தேவையான ஆதார கட்டமைப்புகள் இல்லாததால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மகரந்தம்
1811-ல் வெளியான பிரபலமான புதினம் Sense and Sensibility. ஆசிரியர் ஜேன் ஆஸ்டின். மூன்று பகுதிகள் கொண்ட இப்புதினம் 19-ஆம் நூற்றாண்டின் செவ்விலக்கியமாகக் கருதப்படுகிறது . அன்றிருந்த நடுத்தர மக்களின் வாழ்க்கையையும் காதலையும் அங்கதமும் நகைச்சுவையும் கலந்து விவரிக்கிறது. இப்புதினத்தின் ஒரு பாத்திரமான எட்வர்ட் பெர்ரார்ஸ் ஒரு வேலை இல்லாப் பட்டதாரி . வேலைக்குப் போகும் அவசியமும் இல்லாதவர். அவர் ஒரு பெரும் பணக்காரரின் தலைமகன். இருந்தாலும் வேலைக்குப் போகாமல் இருந்து விட்டதற்கு வருந்துபவர். காலம் கடந்தபின், தான் சேர்ந்திக்கக் கூடிய வேலைகளை நினைத்துப் பார்க்கிறார். தரைப்படை, கடற்படை, தேவாலயம், வக்கீல் என்கிற நான்கு வேலைகளில் ஏதாவது ஒன்று கிடைத்திருக்கலாம் என்றும், எதுவுமே அவருக்கு திருப்தி தந்திருக்காது என்றும்
சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி
கதைகள் ஏதேனும் ஒரு சங்க இலக்கியப் பாடலின் செய்தியை மையக் கருத்தாகக் கொண்டு சமகால வாழ்வைச் சித்தரிக்கும் கதைகளாக இருக்க வேண்டும்.
லண்டனில் ஒரு தமிழ் புத்தகக் கண்காட்சி
12 மார்ச் 20 (வியாழன்)
மாலை 4 மணி முதல் – மாலை 9 மணி வரை
Kerala House Hall
(Near the manor park Library )
671,Romford Road
Manor Park
E12 5AD
(Near the train Stations- Manor Park, Eastham, Stratford )
மகரந்தம்
உலகின் ஜனத்தொகையில் 17% கொண்டுள்ள நம் நாட்டிலுள்ள புதுப்பிக்கக் கூடிய நீர் வளங்கள் உலகில் உள்ளதில் வெறும் 4 விழுக்காடு. இங்கே ஒரு புதிரான முரண்பாட்டையும் சொல்லியாகவேண்டும். உண்மையில் இந்தியா நீர்ப்பிரச்னை இருக்கக் கூடாத நீர்-மிகை நாடு. இங்கே தேவைக்கு மேல் மழை பெய்கிறது. மத்திய நீர் ஆணையத் தகவல்படி, நம் தேவை ஆண்டுக்கு 3000 பில்லியன் கன மீட்டர் மழை ; ஆனால் தேவையை விட 1000 பில்லியன் கன மீட்டர் அதிகமாக (அதாவது ஆண்டுக்கு 4000 பில்லியன் கன மீட்டர் ) மழை பெய்கிறது . ஆனால் இதில் 8% மட்டுமே நேரடி உபயோகத்துக்குக் கிடைக்கிறது. மீதி நிலத்தடிக்கும் கடலுக்கும் ஓடி விடுகிறது.
வாசகர் கடிதம்
இறகுப் பந்து எனப்படும் ஷட்டில் பாட்மின்ட்டனின் பெரும் நுணுக்கங்களை வாசகன் மீது விட்டெறிந்து அவனைத் தெறித்து ஓடச் செய்யாமலும், பந்தடிப்பிலிருந்து அதிகம் விலகிச் சென்று தனி மனித அவலங்களில் – புலம் பெயர்ந்தவர்களின் அவலங்களில் உழன்று விடாமலும் நன்கு கட்டமைக்கப்பட்டுள்ள புனைவு.
குளக்கரை
‘மண்புழு குடியானவர்களின் நண்பன்’ என்பது பழைய தொடக்கப் பள்ளிகளில் ‘இயற்கைப் பாடமும் தோட்ட வேலையும்’ என்ற பாடப்பிரிவின் பாடப் புத்தகத்தில் நான் படித்த வாசகம். அதை விவசாயியான என் தாத்தாவிடம் காட்டி விளக்கம் கேட்டேன். அவர் ‘‘நாக்குப்பூச்சி தானே ? ஒரு பிரயோசனமும் இல்லை . அது நெல்வயலில் மண்டிப் போனால், வயல் நிறைய நீர் உறிஞ்சும். அதனால் நீர் இறைப்பு சிரமமாகி விடும்’ என்றார்.
மகரந்தம்
2012-ல் நடைபெற்ற உலகப் புகழ் பெற்ற சோதனையில் கண்டறிப்பட்ட ஹிக்ஸ்-போசான் துகளுக்குக் ‘கடவுள்-துகள்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஹிக்ஸ் என்பது பீடர் ஹிக்ஸ் என்பவரையும், போசான் என்பது நமது சத்யேந்த்ர நாத் போஸையும் குறிக்கும். போசான்களைப் பற்றி மிகத் தெளிவாக மிகவும் முன்னதாக ஆய்வு செய்து அடிப்படைகளை அமைத்தவரின் பெயர் பின்னர் வருகிறது-மேலும் குவாண்டம் துறையில் நடைபெற்ற ஆய்வுகளுக்காக நோபல் பரிசுகள் பலருக்குக் கிடைத்துள்ளன -ஆனால், இவருக்குக் கிடைக்கவில்லை.
கவிதைகள்
கணினியில் ஏதோ தட்டிக்கொண்டிருப்பான்
வாய்க்கு வராத பெயரிலிருப்பவற்றை
வாய்க்குள் திணித்து
நவநாகரிகத் தொட்டிலுக்குள்
சவப்பெட்டியாகக் கிடப்பான்
மகரந்தம்- குறிப்புகள்
எல்லாம் வானத்தில்தானா, பூமியில் இல்லையா என்பதற்கும் இராமானுஜனிடத்தில் விடை கிடைக்கிறது. இயந்திரக் கற்றல், தகவல் தேற்றங்கள், குறியீட்டு முறைகள், டிஜிடல் தொடர்புகள், அவற்றில் தவறுகளைத் திருத்தும் குறியீடுகள், தரவுகளை அடக்கிக் குறுக்கல், நெட்வொர்க், சமிக்ஞை வெளியீடுகளைப் படித்தல், கணிணியின் சங்கீதம் (ஐ ம்யூசிக்கில் அவரது உள்வெளித் துணையிடம்-சப்-ஸ்பேஸ்) டி. என். ஏ மற்றும் புரதங்களைத் தொகுத்தல் என எங்கும் எதிலும் இவர் கணிதம் செயல்படுகிறது.
குளக்கரை
சோஷலிஸ்ட்ஸ் என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட சிலவற்றைப் பாதுகாக்க விழைகிறார்கள்.அரசியலும், பண்பாடும் களேபரமாகக் கலந்த இந்த நிலையில் லெனின் காப்பாற்ற விழைந்த அந்த ஜாரிஸ்ட் ரெயில்வே போல(!),புத்தகங்களும், சினிமாக்களும், புரட்சிக்கு முன் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே காப்பாற்றப்படவேண்டும்.அரசியல் செய்ய வேண்டிய வேலை வருமானத்தை சரிசமமாக்குவது,மாணவர்களின் கடனை நீக்குதல் போன்றவையாகும்.கலாச்சாரம் என்பது அரசியலிலிருந்து பிரிந்துதான் செயல்படவேண்டும்.
ரொன்றன்ரோப் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை
ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை தமிழ்மொழி ஆய்வுக்கு இடமளிக்கும். இரண்டு ஆண்டுகளுக்குள் மூன்று மில்லியன் டொலர் பணத்தை சேகரித்து பல்கலைக்கழகத்துக்கு கொடுக்க வேண்டும். இதுவரை தமிழர்களால் $700,000 நிதி சேர்க்கப்பட்டுவிட்டது. இப்பொழுது $2.3 மில்லியன் பணத் தொகையை இரண்டே ஆண்டுகளில் சேர்க்க வேண்டிய கடப்பாடு உள்ளது.
ஆஷ்விட்ஸை நோக்கி
எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலி நாட்டின் ஃப்ளோரென்ஸ் நகரத்தில் இருந்து நிர்மூலமாக அழிக்கப்படுவதற்காக ஆஷ்விட்ஸ் நகரத்திற்கு யூதர்கள் அனுப்பப்பட்டார்கள். அந்த நிகழ்வை மறக்கக் கூடாது என்பதற்காக இத்தாலிய அரசாங்கம் வருடந்தோறும் அதே ரயில் பயணத்தை நடத்துகிறது. இத்தாலிய மாணவன் இந்த வருடம் அந்தத் தொடர்வண்டியில் பயணித்து வரலாற்றின் சுவடுகளைப் “ஆஷ்விட்ஸை நோக்கி”
குளக்கரை
ஆபத்து அதிகமானதால் லாபம் அதிகமாவதில்லை. ஆபத்துகளைத் தாண்டி தப்பித்தால் சில சமயம் சிரஞ்சீவித்தனத்துக்கான குளிகை கிட்டுமோ என்னவோ. இந்த எழுத்தாளர் குழந்தை வளர்ப்பைப் பற்றித்தான் எழுதுகிறார். மிகச் சாதாரணமான தலைப்பு. ஆனால் எதிர்த் திக்கில் போய்ப் பார்க்கும் கட்டுரை இது. துவக்கத்திலிருந்தே
எதிர்.
மகரந்தம்
அகிலம் ஒரு பெட்டிக்குள் இல்லை பெட்டகத்தைத் தாண்டிச் சிந்தித்திருக்கிறார் ஜூலியன் பார்பர்.அவருடன் நடந்த உரையாடலை மேற்குறிப்பிட்ட சுட்டியில் விரிவாகப் பார்க்கலாம். காலம் முன்னோக்கித்தான் நகர்கிறது. குழந்தைகள்தான் பெரியவர்களாக ஆகிறார்கள். காலமும், இயக்கமும் மனித சிந்தனையில் இரசிக்கத்தக்க இடத்தைப் பிடித்துள்ளன. அறிவியல் சட்டங்களின் படி ஒரு நிகழ்வு காலத்தில் திரும்பிப்பார்க்கப்படுகையிலும் “மகரந்தம்”