கூடுதுறை

கணிதக் கோட்பாடான ‘பை’ இயற்கையில் உள்ளது. அது மனிதன் உற்பத்தி செய்ததல்ல. ஆனால், அதன் கணித விளக்கங்கள் அவன் மூலம் வருகின்றன. அதன் வகுத்தலும், அந்தக் கணக்கீடுகளும் நாம் அறிந்து கொண்டவை, ஏற்படுத்தியவை அல்ல. கணக்கீடுகள் அதை விளக்குகின்றன. அவைகளை அவற்றின் இயல்பான கணிதக் கட்டமைப்பிலே புரிந்து கொள்ளலாம், இந்தச் சிந்தனையில் ப்ளாடோவின் மெய்யியல் ஆர்வத்தைக் காட்டிலும், அவரது உள்ளுணர்வின் வீச்சு தெரிகிறது. இவர்களைப் போன்றவர்களுக்கு கணிதத்தின் தொடர் உறுதி நிலையே உண்மையக் காட்ட வல்லது.