றெக்கை – அத்தியாயம் 19

This entry is part 19 of 19 in the series றெக்கை

அவசரமாக இங்கே வரும்போது இடுப்பில் வளைத்துக் கட்டி இருந்த கீசை இருக்கிறதா என்று தேடினேன். காணவில்லை. எனக்கு ஆச்சரியமில்லை.. நானும்  லெவியும் மதுவோ மாதுவோ மாந்தி கண்ணுக்கு மேல் போதை ஏறி இருந்தால் ஆப்பிரிக்க கடவுள் யெபுருவை வந்தித்தால் தொலைந்து போன மனுஷர், பொருள், உடுதுணி எல்லாம் அரை மணி நேரத்தில் திரும்பக் கிட்டும்.வேர்க்கடலை அச்சு ரெண்டு நைவேத்தியமாக கொடுத்தால் போதும்

ஓவர்கோட்டுக்கும் பார்டெல்பீக்கும் இடையே:  விமலாதித்த மாமல்லன் சில குறிப்புகள்

அவனிடம் ஏதோ ஒன்று நம்மை வசீகரிக்கிறது. அவன் அணிந்திருக்கும் ஓவர்கோட் மீது அவன் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை. அது அபூர்வமானது, இந்நூற்றாண்டில் அனேகமாக காலாவதியாகி விட்டதென்றே நினைக்கிறேன். அரிதாகிவிட்டதும் அதன் வசீகரத்தை அதிகரித்துக் காட்டுவதாக இருக்கலாம். தன் அவலத்தைப் பொதுமைப்படுத்த நாம் அனைவருமே குமாஸ்தாக்கள்தான் என்று அவன் கைகொட்டிச் சிரிக்கிறான். உண்மைதான், நமக்கும் ஒரு ஓவர்கோட் தேவையாக இருக்கிறது. அதை இவ்வளவு இறுக்கமாக, சருமமாகிவிடும் அளவுக்குப் பற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கைக்காகவே நாம் அக்கயவனுடன் பயணிக்கிறோம். இதுவே ஆபீஸின் வெற்றியும்கூட.

றெக்கை அத்தியாயம் 14

This entry is part 16 of 19 in the series றெக்கை

இந்த வகைப்படுத்தல் யாருக்காக செஞ்சிட்டிருக்கேன்? லெவி இருந்தால் வாங்கி படிச்சுட்டு, பாத்ரூம் எங்கேன்னு பகடி பண்ணுவான். ஆல்பீ இருந்தால் படிக்கறதுக்கு முன்னாலேயே இதிலும் ஒரு ரசம் உண்டு என்று குறும்புச் சிரிப்போடு சொல்வான். ரெண்டு பேரையும் நான் இழந்துட்டேன். ரெண்டு பேரோடு உறவு வச்சுக்கறது   குடும்பப் பொண்ணுக்கு அதென்ன சொல்றா இழுக்கு தான். ரெண்டு பேரோடு எங்கே உறவு கொண்டாடினேன்? ஆல்பீ போய்ச் சேர்ந்து ஆறு மாதம் கழிச்சுத்தானே லெவியை கல்யாணம் செஞ்சது.

அதிஜனநாயகம் -2

This entry is part 2 of 2 in the series அதிஜனநாயகம்

குரல் கேட்கக்கேட்க என் முகத்தருகே எதோ கரிய அமிலம் படர்வதைப் போல உணர்ந்தேன். முகத்தில் வியர்வை கொட்டியது. என் கதையில் எழுதியது போல வான்குடியினராக இவர்கள் இருக்கக்கூடாதா என ஒரு கணம் எண்ணினேன். அப்படியிருந்தால் இவர்களை நாம் அழித்திருப்போம். மனிதர்களுக்கு என முடிவெடுக்க ஒரு பேரரசு அமைந்திருக்கும். அவர்கள் சொல்வதைக் கேட்டு நாம் நடக்கலாம். முடிவெடுக்கும் அதிகாரம் நமக்கு இல்லாதது எத்தனை பெரிய விடுதலை

றெக்கை – அத்தியாயம் 13

This entry is part 13 of 19 in the series றெக்கை

maidin mhaith dochtúir  அய்ரிஷ் மொழியில் காலை வணக்கம் சொல்லி சிரித்தபடி இருக்கையிலிருந்து எழ முயல, தலை குப்புற விழுந்தாள் -பள்ளிக்கூடம் ஹெட்மிஸ்ட்ரஸ் பிள்ளை மாதிரி. நிர்மலா பதறிப்போய் விரைந்து ஒநெல்லி பாட்டியம்மாளைத் தூக்கி நிறுத்தப் பார்த்தாள். கிழவி நல்ல கனமான உடம்பு கொண்டவள் என்பதால் அவள் தரைக்கு வழுக்கிக் கொண்டு போனாள். இதெல்லாம் அவளுக்கு   வேடிக்கை காட்ட நடத்தப்படும் நிகழ்ச்சி என்று தோன்ற, நிறுத்தாமல் சிரிக்கத் தொடங்கினாள்.

றெக்கை– அத்தியாயம் 7

This entry is part 7 of 19 in the series றெக்கை

நிர்மலாவின் அருகே மிக அருகே நெருங்கி உட்கார்ந்து கேட்டாள் –பசங்க கர்ப்ப காலத்திலேயே இந்த மந்திரவாதம் எல்லாம் தெரிஞ்சு வச்சிருந்தாங்களா?  ஏன் கேக்கறேன்னா, வலநாடுலே கருவிலே இருக்கறது ஆண் பிள்ளைன்னா தினம் ஒரு மணி நேரம் கர்ப்ப ஸ்திரியை உட்கார வச்சு சுற்றி நின்னு வரிசையா இங்க்லீஷ் பாட்டு  பாடி ஆடுவாங்க, டிங் டாங் பெல், மேரி ஹேட் அ லிட்டில் லாம்ப் லிட்டில் லாம்ப் லிட்டில் லாம்ப் .. 

றெக்கை – அத்தியாயம் 2

This entry is part 2 of 19 in the series றெக்கை

கடந்த இரண்டு மாதமாக இப்படி மாலையும் இரவும் சந்திக்கும் நேரத்தில் திடீரென அந்தச் சிறுமிக்கு வெண்சிறகுகள் முளைத்து விடுகின்றன. லேசான சூட்டில் ஒரு கோப்பை வெந்நீர் குடிக்கக் கொடுத்தால், அடுத்த ஒரு மணி நேரத்தில் அவை உதிர்ந்து விடுகின்றன. விழுந்த வெண் இறகுக் குவியலைத் தலையணைக்குள் பஞ்சுக்குப் பதிலாக அடைத்தால் நேர்த்தியான தலையணை தயார். நல்ல உறக்கம் தரும்.

ராவண நிழல் – புதினம்

சிவராவின் அப்பா காலத்தில் தோலின் விலை கடுமையாகக் கூடிவிட்டது. மேலும் வெளிநாடுகளுக்கு தோல் ஏற்றுமதியாக ஆரம்பித்தது. பற்றாக்குறைக்கு ஏஜெண்டுகள் எல்லாக் கிராமங்களுக்கும் சென்று தேடிப் பிடித்து ஆட்டுத்தோல்களை வாங்கிச் சென்று விடுவர். கடைசியில் கணிகர்களுக்கு நோஞ்சான் ஆட்டுத்தோல் மட்டும்தான் கிடைத்தது. இதனால் கணிகர்கள் பலர் மிகவும் துன்பப்பட்டனர்.

மனிதர்களின் கதை: நிழல்  நிஜம்

ஒரு புதினத்துக்கு காலப் பின்னணி மிக முக்கியமானது; ஏனெனில் அதை சார்ந்தே பாத்திரங்களின் மொழி, மற்றும் வர்ணனைகள் அமையும். மட்டுமன்றி, சமகாலத்தை படைப்பாக்குதல் ஒரு சவால்! நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் முகங்களும், முகமூடிகளுமே அவர்தம் வாழ்வியலும்,பண்பாட்டு,பொருளாதாரச் சிக்கல்களுமே ’ராவணநிழல்’ எனும் படைப்பிலக்கியத்திற்கு அடிப்படையாய் அமைகின்றன என்பதை எவருமே மறுக்கவியலாது.

ஐன்ஸ்டீனுடன் பயணித்தபோது

“ இவர்கள் இருவரையும் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் தமிழில் தோன்றிய பக்தி இலக்கியம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் கணேசா. பக்தி இலக்கியம் ஆரம்பித்தது பல்லவர் காலத்தில் இருந்து தான் என்று நான் நினைக்கிறேன். வேறு எம்மொழியிலும் தமிழில் தோன்றிய அளவு பக்தி இலக்கியம் தோன்றவில்லை. இலக்கியத்தின் மூலம் சமய மறு மலர்ச்சி ஏற்பட்டது. சமண, புத்த மத தாக்கங்களில் இருந்து, சைவ, வைணவ மதத்தை மறுமலர்ச்சி செய்ததில் தமிழ் பக்தி இலக்கியங்கள் முக்கிய பங்கு வகித்தன. அதில் முன்னோடியாக இருந்து ஆரம்பித்து வைத்தவர் அப்பர் என்று அழைக்கப் பட்ட இந்த திருநாவுக்கரசர் சுவாமிகள் தான்.

“அதிரியன் நினைவுகள்” –  குறிப்புகள் – 2

This entry is part 46 of 48 in the series அதிரியன் நினைவுகள்

எனது கதையின் அச்சாக,  அதிரியனுக்குப் பதிலாக புளோட்டினாவைக் கையாளுவது எனக்கு இயலாது. தவிர பெண்கள் வாழ்க்கையென்பது வரையறைக்குட்பட்டது; இரகசியம் காக்கவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகக் கூடியது.  ஆணைப்பற்றி எழுதுகிறபோதே  சில உண்மைகளை அவனுடைய வாயால் சொல்வதற்கு யோசிக்க வேண்டியுள்ளது.

மிளகு அத்தியாயம் எண்பத்தொன்று 

சொல்லிக்கொண்டிருக்கும்போதே  பஸதி வாசலில் அப்பா அப்பா என்று குழந்தை மஞ்சுநாத் அழைக்கும் ஒலி. மஞ்சு என் குழந்தே வந்துட்டேண்டா என்றபடி இந்த பரமன் வாசலுக்குப் போக அடியெடுத்து வைக்கும்போது காட்சி மறுபடியும் குழம்பி தாதர் ரயில் நிலையத்தில் கூட்டம் குறைந்த ஒரு மழைநாள் காலை. கல்யாண் டோம்பிவிலி லோக்கல் கூட்டமே இல்லாமல் வந்து நிற்கிறது. 

தெய்வநல்லூர் கதைகள்

This entry is part 22 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

ன்று மாலையே வசந்தம் சந்திப்பில் டிரிப்பிள் எஸ்  சார் இதில் ஏதோ விஷமமான வேலை நடந்திருப்பதாக தோழர் குருசாமியிடம் ஐயப்பட்டார். ஆகவே மறுநாளே இருவருமாக கிளம்பி திருனவேலிக்கு சென்றார்கள். கட்சி மற்றும் சங்க ஆட்கள் மூலமாக பல தகவல்கள் கிடைத்தன. அன்று இரவு நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை கட்சி அலுவலகத்தில் தங்கிய இருவரும் மறுநாள் தெய்வநல்லூர் திரும்பினார்கள். கைவசம் உள்ள தகவல்களை உறுதிப்படுத்த வேண்டி உடனே குருசாமியண்ணனால் அழைக்கப்பட்ட உள்ளூரின் ஒரே வக்கீல் குமாஸ்தாவான நயினா(ர்)ப்பிள்ளை வரவும் பேசியதில் ஒரு விஷயம் தெளிவானது

மிளகு அத்தியாயம் எழுபத்தாறு

போர்த்துகல் படைகள் வருவதை துரிதப்படுத்த அவர்களின் ஒரு பகுதியை கோவாவில் இருக்கும் போர்த்துகல் காவல்படையில் இருந்தும். டையூவில் இருந்தும், டாமனில் இருந்தும் உடனடியாக ஷராவதி நதியில் பயணம் செய்வித்து அனுப்பவும், அவர்களுக்கு இரண்டு மடங்கு ஊதியம் தரப்படும் என்றும்   வேண்டும் கடிதத்தை உடனே பெத்ரோ பிரபு மூலம் அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. பெத்ரோ இதற்கான உத்தரவை கோவா பிரதிநிதி ப்ரகான்ஸாவுக்கு அனுப்பி உடன்பட வைத்ததாகப் பகிரப்பட்டது. 

மிளகு அத்தியாயம் எழுபத்தைந்து

இவர்களுக்கு ஆடி ஓடி சாடும்போது உடலில் தடை செய்யாமல் எப்படி வஸ்திரம் அணியத் தருவது?   ஒரே நிறத்தில், நீலக் குப்பாயத்தை ஹொன்னாவரிலும் ஜெருஸூப்பாவிலும் கோகர்ணத்திலும், மீர்ஜான் கோட்டையிலும் தையல்காரர்கள் தைத்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். ஆளுக்கு குறைந்தது இரண்டு குப்பாயமாவது தரவேண்டும். அப்படிக் கொடுத்தால் அதில் ஒன்றை வீட்டில் பிள்ளைகளுக்குத் தரப் பத்திரமாக எடுத்து வைத்து விட்டு, ஜீவித்திருந்தால் ஒரே குப்பாயத்தோடு நாள் கணக்காக வியர்வை மணக்க ஓடியாடுவார்கள்.

அதிரியன் நினைவுகள் – 38

This entry is part 37 of 48 in the series அதிரியன் நினைவுகள்

ஒரு சராசரி மனிதனாக இருந்த காலத்தில்,  சேபைன்ஸ்(Sabines) மலைகளின் அடிவாரத்தில், நீர்க்கரையோரம் பரந்துகிடக்கும் இந்நிலங்களை ஒன்றன் பின்னொன்றாக வாங்கிச் சேர்த்தேன்,  விவசாயி ஒருவன் தளராத பொறுமையுடன் தனது திராட்சைத் தோட்டத்திற்கு வேண்டிய நிலத்தை வாங்கி முடித்ததுபோல; பின்னர், இராச்சிய விவகாரங்கள் தொடர்பான  இரு பயணங்களுக்கிடையில் கொத்தனார்கள்,  கட்டிடக்கலைஞர்கள் ஆகியோர் பிடியில் சிக்கி இச்சிறியகாட்டில் நான் தங்க நேர்ந்தது; ஆசியக் கண்டத்தின் அனைத்துவகையான மூடநம்பிக்கைகளிலும் திளைத்திருந்த ஓர் இளைஞன்  பயபக்தியுடன், மரங்களைக் காப்பாற்றக் கேட்டுக்கொண்டான்.

மிளகு அத்தியாயம் எழுபது

வசம்பு இடித்துப் போடச் சொன்னது  சித்தர் வாக்கைத் தவறாகப் பொருள் கொள்வதாகும். சிவசம்பு ஒரு அலங்கார விளி, அதற்குள் வசம்பைத் தேடக்கூடாது’ என்று பாடபேதம், பெயர்ப்புப் பிழை பற்றிய சுவடியின் இறுதி ஏட்டில் எழுதியிருந்தது கண்ணில் பட்டது. சிவசம்பு-வுக்கு விசும்பு என்று இன்னொரு பாடமும் உண்டாம்.  

சர்க்கரை கசக்குமா கசமாடா? தமிழ் வையுமா அடி மூடா?

This entry is part 18 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

ஒரே ஆறுதலாக அமைந்த வகுப்பு தமிழ் வகுப்பு. ராயகிரியிலிருந்து வரும் ஜெயராஜ் சார்தான் தமிழ் எடுத்தார். அவர் வகுப்பில் மட்டும்தான் எல்லோரும் சிரிக்க முடிந்தது. செய்யுள் பகுதி என்றாள் எவர் தனி உற்சாகம் அடைவார். புத்தகத்தில் உள்ள பாடல்களைத் தாண்டியும் அவர் சொல்லிக் கொண்டே போவார். வகுப்பில் 3 முறைகளுக்கு மேல் சந்தேகம் கேட்கக்கூடாது என பிற ஆசிரியர்களால் நிறுத்தப்பட்டிருந்த பிரேமுக்கு ஜெயராஜ் சார் வகுப்பில் எந்தத் தடையுமில்லை.

மிளகு அத்தியாயம் அறுபத்தேழு

அது பேய் மிளகை நானூறு வருடத்துக்கு அப்புறம் கர்னாடகத்தில் இருந்து கேரளத்துக்குக் கொண்டு வருகின்றது. மிளகு சம்பந்தமாக எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ நடத்திப் போகிறது. ஒரு குழந்தைக் குரலில் அப்பா அப்பா என்று அழைக்கிறது. அந்தக் குழந்தை வீட்டில் இருந்து கடைவீதிக்குத் தனியாக போகிறான்.  சின்னப் பையன், மஞ்சுநாத், ரோகிணியின் மகனா? அப்பா அப்பா என்று பரமனைக் கூப்பிடுகிறானா?

தெய்வநல்லூர் கதைகள்

This entry is part 17 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

பண்டப் பரிமாற்றங்களில் அவர் முன்பு காட்டிய நாசூக்கான நனி நாகரிகத்தன்மை குறைந்து இயல்பான போக்கு தென்பட ஆரம்பித்தது. சில பண்டங்களை அவரே கேட்டு வாங்கி உண்டு மகிழ்ந்தார் ( டொம்ப்ளீ, கருவடாம்ல வெங்காயம் சேர்க்க மாட்டா எங்க ஆத்துல, நீ அன்னைக்கு எடுத்துண்டு வந்த வடாத்துல வெங்காயம்லாம் போட்டு நல்லாருந்தது. நாளைக்கு எடுத்துண்டு வர்றியா? – பிரேம்). நோன்பு காலங்களில் மாலை நேரம் பெரிய பள்ளிவாசல் போனால் பாட்ஷா எங்களுக்காக போணி ஒன்றில் நோன்பு கஞ்சியுடன் காத்திருப்பார்.

மிளகு – அத்தியாயம் 61 & 62

முதலை வெளியே வந்தால் அதன் ஆயுளை ஓய்த்து விடலாம் ஆனால் வருவேனா என்று அடம் பிடிக்கிறது என்கிறார் பிரமாணி. ஏரியில் மீன்பிடித்தமும் கடல்முகத்துக்கான போத்துவரத்தும் நான்கு நாட்களாக நடக்காமல் வர்த்தகம் நின்று போயிருக்கிறது என்று கிராமப் பெரிய மனிதர்கள் சிலர் என்னிடம் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். நான் என்ன செய்து முதலையை வெளியே கொண்டு வரவேண்டும்? அதனோடு பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமா? 

மிளகு :அத்தியாயம் ஐம்பத்தொன்பது

அவர் புன்சிரிப்பு மாறாமல் சொன்னார். அப்புறம் எனக்கு எதுக்கு சுற்றி வளைத்துப் பேசி நேரம் போக்குவது? சுருக்கமாக நிதிக்குழு, அரசுரிமை எனக்கு வர எடுத்த நடவடிக்கை, ஏன் வரணும் என்ற காரணகாரியம், மிளகுராணியோடு நான் எதிரெதிர் நின்று ஆட்சி மாற்றம் கேட்க இருக்கும் விரைவில் நிகழ இருக்கும் நடப்பு இதற்கு பில்ஜி அரசரின் ஆதரவு வேண்டுதல். எல்லாம் சொன்னேன். 

தெய்வநல்லூர் கதைகள் 13

This entry is part 13 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

பெரிய கோவில்  சந்திப்புக்குப் பிறகு மொத்த வகுப்புமே மாறிப்போனது. அன்றைய மாலை நாங்கள் எவ்வித காரணமுமின்றி சும்மா சிரிப்பதே அம்மா சுகமென சிரித்து பேசினோம்.  வெள்ளி மாலை கோவில் சந்திப்பு முடிந்து சங்கீதாவும், மெஜூராவும் உடன் வர நாங்கள் மூவரும் என அனைவரும் ஒன்றாக கோவிலிலிருந்து கிளம்பி தெற்கு “தெய்வநல்லூர் கதைகள் 13”

அதிரியன் நினைவுகள் -26

This entry is part 25 of 48 in the series அதிரியன் நினைவுகள்

மார்க்-ஆண்ட்டனிக்கு அவருடைய இறுதி  யுத்தத்திற்கு முன்பாக சில சகுனங்கள் தோன்றின அதுபோல அன்றைய இரவும், காவல் தெய்வங்கள் பணிநேரம் முடிந்து விடைபெறும்போது ஒலிப்பவை என சொல்லப்படுகிற  இசை மெல்லமெல்ல விலகிச்செல்வதைக் காதில் வாங்கினேன்… ஆனால் அதை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளத் தவறினேன்.

மிளகு   அத்தியாயம் ஐம்பத்தேழு

வரிசையாக மூன்று சாரட்டுகள் ஐந்து நிமிட இடைவேளையில் வந்து நிற்கின்றன. மிர்ஜான் கோட்டையில் மகாராணி வசிக்கிறார் என்பதோடு அவருடைய பிரியத்துக்குரிய வைத்தியரும் மனைவியும் கூட கோட்டைக்குள் வசிப்பதால், நடந்து கூட வந்திருக்கலாம். மொத்தம் பத்து நிமிடம் தான் பிடித்திருக்கும். ஆனால் பாதுகாப்பு வழிமுறைகள் அதை அனுமதிப்பதில்லை என்பதால் ரதங்கள் குதிரை பூட்டி வரவேண்டியிருக்கிறது. 

உபநதிகள் – பதினாறு

This entry is part 16 of 17 in the series உபநதிகள்

சரியா இருபத்தி இரண்டு வருஷத்துக்கு முன்னாடி. நான் ரயில்வேல சாதாரண சார்ஜ்மன். கல்யாணம் ஆகி குழந்தைகள் பிறந்திருந்தாங்க. ரிடைர் ஆன அப்பா கடன் வாங்கி இந்த வீட்டைக் கட்டியிருந்தார். அதனால வாடகை இல்ல, ஆனா குடும்பம்னா மத்த எத்தனையோ செலவுகள். மாசம் முடியும்போது கையில காசு மிஞ்சினது இல்ல. முதல் குறுக்குத்தெருவில இருக்கற அத்தனை வீடுகளும் மிடில் ஈஸ்ட் பணத்தில கட்டினது.

மிளகு-அத்தியாயம் ஐம்பத்திமூன்று 

Put புட் ஒப்பந்தத்தை  ஆப்ஷன் செல்லர் கிட்டே இருந்து நான் வாங்கினால்,  எதிர்காலத்துலே ஒப்பந்தப்படி ஒரு குறிப்பிட்ட தேதியிலே அல்லது அதுக்கு முந்தி, அவர் ஒப்பந்தம் போட்ட அதே விலைக்கு, அதே அளவு, அந்த பொருளை என்னிடம் இருந்து வாங்கச் சொல்லி அவரை நான் கேட்டால்,  வாங்கறது  அவர் கட்டாயம் செய்ய வேண்டிய கடமை. 

உபநதிகள் – 14

This entry is part 14 of 17 in the series உபநதிகள்

சில நாட்களாக அடுத்த வீட்டுக்குக் குழந்தைகள் நடந்தோ ஊர்தியிலோ வரவில்லை. சிறுபொழுதுக்குப் பிறகு அவர்களை அழைத்துப்போகவும் இல்லை. அந்த வீட்டில் நடமாட்டமும் இல்லை. அதன் பாதிப்பு அவனுடைய மாற்றத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஒரே நிசப்தம்! அவன் கூச்சலைக் கேட்பதற்கு யாரும் இல்லையே என்பதால் அதைச் செய்யப் பிடிக்கவில்லையா? அவனுக்குக் கத்த வேண்டும் என்கிற ஆசையே போய்விட்டதா? சேச்சே அப்படி இருக்காது.

மிளகு – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு

”நான் கூட நேத்தைக்கு தங்கம் வாங்கப் போயிருந்தேன். தனசேகரன் செட்டியார் வேண்டப்பட்ட ஆளாக இருக்கறதாலே நாலு பவுன் வாங்கினேன். மத்தவங்களுக்கு எல்லாம் ஆளுக்கு ரெண்டு பவுன் தான் கொடுத்தார். அதுவும் பவன் ஒண்ணு பத்து வராகன் பணத்துக்கு. எனக்கு பவுனுக்கு எட்டு வராகன்லே கொடுத்தார். அடுத்த வாரம் இன்னும் கொஞ்சம் வாங்கணும். வீட்டுலே பீவி போர்ச்சுகீசியப் பணம் ரியல் சேர்த்து வச்சிருக்கு. அதையும் தங்கமாக்கணும்” என்றபடி பால் குவளையை வைத்து விட்டு எழுந்தார் அபுசாலி ராவுத்தர். 

அதிரியன் நினைவுகள் -20

This entry is part 20 of 48 in the series அதிரியன் நினைவுகள்

நான் வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான், போரில் வாகைசூடிய நம்முடைய ஆறாவது படையணி பிரிட்டிஷ் பிரதேசத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. ஏற்கனவே இங்கிருந்த நம்முடைய ஒன்பதாவது படைப்பிரிவு வீரர்களில் அனேகர்,  பார்த்தியர்களோடு நாம் யுத்தத்தில் இருந்த முகாந்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டு வெடித்த கலவரத்தில் கலிடோனியர்களால்  வெட்டுண்டு மடிந்து அவல்நிலையில் இருக்க, இவர்கள் இடத்தில் ஆறாவது படையணி. இத்தகைய அசம்பாவிதங்கள்  மீண்டும் நிகழாமல் தடுக்க இரண்டு நடவடிக்கைகள் தேவைப்பட்டன.

ஜீவன ஸ்ரவந்தி: தெலுங்கு இலக்கியங்கள்

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன் 1960ல் வெளிவந்த ராகஜலதி நாவலின் உள்ளே, இந்த நாவலின் எழுத்தாளர் லதா எழுதிய இதர நாவல்கள் என்ற தலைப்பின் கீழ் ஆறு நாவல்களின் பெயர்களை    குறிப்பிட்டிருந்தார்கள். அவற்றில் ஒன்று ஜீவன ஸ்ரவந்தி. மூன்று தலைமுறை வாழ்க்கையைச் சுற்றி இந்த நாவலின் கதை நகருகிறது. “ஜீவன ஸ்ரவந்தி: தெலுங்கு இலக்கியங்கள்”

உபநதிகள் – 11

This entry is part 11 of 17 in the series உபநதிகள்

“ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் படித்து ரசித்திருக்கிறேன். அவருடைய ஒப்பற்ற கதாபாத்திரங்களுக்கு அக்காலத்து மேடை நடிகர்கள் எப்படி உயிர்கொடுத்தார்கள் என்று நமக்குத் தெரியாது. ஒளிப்பதிவு வரும்வரை அந்தக் கலைஞர்களின் சாதனைகள் நீரில் வரைந்த கோலங்கள். நான் எழுதிய வார்த்தைகளும் விவரித்த காட்சிகளும் வெறும் எலும்புக்கூடு. அவற்றை உயிருடன் பார்க்கும்போது நடிப்பு என்பது எப்படிப்பட்ட அருமையான கலை என்பதை உணர்கிறேன். நான் மந்தாகினியை சில மாதங்களுக்கு முன் சந்தித்து சிறிது நேரமே அவளுடன் பழகினாலும் அவள் என் தங்கை.

தெய்வநல்லூர் கதைகள் – 7

This entry is part 7 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

பிரேம் முதலில் செந்தில் அணியில் இணைவதாகவே இருந்திருக்கிறார். காரணம் அவர்கள் தெண்டில் தலைமையில் உமையொருபாகன் கோவிலுக்கு வெள்ளி தோறும் செல்லும் வழக்கத்தில் இருப்பதும், தெண்டில் கொண்டுவரும் திருநீறை அவர்கள் அணியினர் அனைவரும் தினமும் காலை நெற்றியில் அணிந்து கொள்வதும் அவரைக் கவர்ந்திருந்தது. ஆனால் ஓட்டக்கை அதன் காரணத்தை பறைசாற்றியதும் பிரேம் ஆர்வமிழந்து விட்டிருக்கிறார் – “அது பைரவர்ட்ட  வச்சி வாங்கிட்டு வந்த திருநாறு , அத வச்சிக்கிட்டோம்னா நம்மள எந்த நாயும்  வெரட்டாது,கடிக்காது.” அடுத்ததாக, சிங்கி சொன்ன நடுநிலை ஒப்பந்தத்துக்கான முக்கிய ஷரத்து பிரேமை விலக்கம் கொள்ள வைத்து விட்டிருக்கிறது – “பொம்பளப் புள்ளயள்ட்ட இருந்து எடுக்க பண்டத்துல ரெண்டுநாள் மட்டும் ஒனக்கும் பங்கு உண்டு.”

அதிரியன் நினைவுகள் – 16

This entry is part 16 of 48 in the series அதிரியன் நினைவுகள்

வெயில் காயும் நேரத்தில், வீதியொன்றின் திருப்பத்தில் நின்று கிரேக்கர்களின் மலைக்கோட்டையைக் காணும்போதெல்லாம், மிகக் கச்சித்தமாகவும் நேர்த்தியாகவும் அதனுள் கட்டி எழுப்பப்பட்ட   நகரம்  ஒரு பூத்த மலர்போலவும், அந்நகரத்துடன் இணைந்திருக்கும் மலை தண்டுடன் கூடிய புல்லிவட்டம் போலவும் தோற்றம் தரும். இழப்பீடற்ற அச் செடியை வரையறுக்க ‘ பூரணம்’ என்ற வார்த்தைமட்டுமே பொருத்தமானது. அப்பழுக்கற்ற  அவ்வடிவம் பெருவெளியின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில், கால அளவின் ஒரு குறிப்பிட்டத் தருணத்தில்…

உபநதிகள் – ஒன்பது

This entry is part 9 of 17 in the series உபநதிகள்

அமெரிக்க புறநகர் தனித்துவம் இல்லாத இடம். அதில் வேர் விடாத போராட்டங்கள், கொள்கை இல்லாத மனிதர்கள், ஆழமில்லாத உணர்ச்சிகள். அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த நான் அதன் எல்லைகளைத் தாண்டி கற்பனை செய்ய மிகவும் சிரமப்பட்டேன். நீயும் உன் எண்ணங்களின் கட்டை அவிழ்த்து அவற்றை மேலே பறக்கவிட வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத எத்தனையோ பெண் வயதுக்கு வரும் கதைகளில் இதுவும் ஒன்றாக ஆகிவிடும். கலாவதி வளர்ந்தது நமக்குத் தெரிந்த ப்ரென்ட்வுட் இல்லை. இலங்கைத் தமிழர்கள் ஒருவித பாசப்பிணைப்புடன் அமைத்துக்கொண்ட சமுதாயம். அதை நீ கதையில் கொண்டுவர வேண்டும்.

அதிரியன் நினைவுகள் -15

This entry is part 15 of 48 in the series அதிரியன் நினைவுகள்

தங்கள் உயிருக்கு இனி ஆபத்தில்லை என்பதால் மகிழ்ச்சியுற்ற ஒவ்வொருவரும் இறந்தவர்களை விரைவாக மறந்தார்கள். எனது இரக்கக் குணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது, காரணம் ஒவ்வொருநாளும் வன்போக்கு என்கிற எனது இயல்பான குணத்திலிருந்து விலகி, விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் மென்போக்கை நான் கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதை  புரிந்துகொண்டிருந்தார்கள். எனது எளிமையைப் பாராட்டிய அதேவேளை, அதற்கென்று  ஒரு கணக்கீடு இருப்பதாகவும்  நினைத்தார்கள். இறந்த மன்னர் திராயானுடைய பெரும்பாலான  நற்பண்புகள் அடக்கமானவை; என்னுடையவையோ  பலரையும் மிகுந்த வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தன; கூடுதலாக பலரும் எனது குற்றத்தில்  ஒருவித செய் நேர்த்தியைப் பார்த்தனர். 

உபநதிகள் – ஏழு

This entry is part 7 of 17 in the series உபநதிகள்

நீ படித்திருப்பாய், என் அப்பாவால் குனிந்து நிமிர்ந்து நீண்டநேரம் நின்று தொழிற்சாலையில் வேலைசெய்ய முடியாது. தினம் எதிரில் தாத்தா வீட்டிற்கு மெதுவாக நடந்து சிரமப்பட்டு மாடிக்கு ஏறுவார். அங்கே கணினியின் முன் அவர் நேரம் போகும். ஆலோசனை என்ற பெயரில் ஓரளவு வருமானம். வெளிவேலை எல்லாவற்றையும் என் அம்மாவே செய்வாள். அதை அடிக்கடி கவனித்த ஒரு ஆள் என் பெற்றோருக்கு இடையில் நெருக்கமான உறவு இல்லை என்று கணக்குப் போட்டுவிட்டான். அவனுடைய பையனுக்கு ட்யுஷன் பற்றிப்பேச என் அம்மாவை ஒரு விடுதிக்கு வரச்சொல்லி அங்கே சந்தித்தான்.” 

மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு

வணிகக் கவிதைகள் தலைப்பை பார்த்ததுமே அவை வர்த்தக கவுன்சிலுக்கு அனுப்பப் பெறும். வர்த்தகக் கவுன்சில் ஏதாவது அனுப்ப வேண்டுமென்றால் கவிதை மன்றம் மூலமாக வணிகக் கவிதை தலைப்பில் நேமிநாதனுக்கும் ரோகிணிக்கும் பூடகமான உருவத்தில் வந்து சேர்ந்து விடலாம். யார் கண்டது? வர்த்தகத் தகவல்கள் பற்றி எழுதிய, வேறு யாருக்கும் புரியாத வணிகக் கவிதைகள் சிறந்த கவிதைகளாகக் கொண்டாடப்பட்டு விருது வழங்கப்படலாம். புரிந்தால் அதென்ன கவிதை? 

அதிரியன் நினைவுகள் -14

This entry is part 14 of 48 in the series அதிரியன் நினைவுகள்

சமாதான நடவடிக்கைகளுக்குப் பிறகு  கிளர்ச்சியின் காய்ச்சல்களைத் தணிக்க வேண்டிய அவசியம். எகிப்தில் அதன் வீரியம் மிகவும் அதிகமாக தெரியவர, கூடுதல் துருப்புகள் வரும்வரைக் காத்திராமல் விவசாய போராட்டக்காரர்களுக்கு அவசரகதியில் வரிவிதித்து அவர்களை அடக்க முயற்சித்தேன்.  எனது தோழர் மார்சியஸ் டர்போவிடம், அங்கு ஒழுங்கை நிலைநாட்டும்படி கேட்டுக்கொண்டேன், அவரும் அப்பிரச்சனையைச் சற்று கடுமையான சாதுர்யத்துடன் கையாண்டு இட்ட பணியை நிறைவேற்றினார். 

தெய்வநல்லூர் கதைகள் – 1

This entry is part 1 of 34 in the series தெய்வநல்லூர் கதைகள்

பரணி அவர்கள் பள்ளி என்பதை விளையாட்டு மைதானமென கருதுபவர். விசித்திரமான விளையாட்டுகளை நிதமும் அரங்கேற்றி மகிழ்வார். பின்னாளில் கிளாடியேட்டர் படம் எனக்கு எந்த வியப்பையும் தராமல் போனதற்கு காரணம் தரணி புகழ் பரணி தான். வகுப்பில் இருவரைத் தேர்வு செய்வார். இருவரும் சண்டை போட வேண்டும். விழும் அடிகளை பரணி கணக்கெடுப்பார். யார் அதிக அடிகள் கொடுக்கிறாரோ அவரே வெற்றியாளர். அவருக்கு பரணியால் பச்சைக் காகிதம் சுற்றிய பத்து பைசா ந்யூட்றின் சாக்லேட்டின் பாதி மனமுவந்து அளிக்கப்படும். 

அதிரியன் நினைவுகள் – 12

This entry is part 12 of 48 in the series அதிரியன் நினைவுகள்

மத்தியகிழக்கு பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பு எல்லா இடங்களிலும் திடீரென ஒரேநேரத்தில் பரவியது. யூதவணிகர்கள் செலூசியா(Séluicie)வில் வரி செலுத்த மறுத்தனர். சைரீன்(Cyrène) மக்களும் கிளர்ச்சியில் இறங்கினர்.  விளைவாக கிழைக்கூறுகள் கிரேக்க கூறுகளை துவம்சம் செய்தன. எங்கள் படைதுருப்புகள் முகாமிட்டிருந்த பகுதிவரை எகிப்து கோதுமையைக் கொண்டுவர சாலைகள் இருந்தன, அவற்றை ஜெருசலத்தைச் சேர்ந்த ஜெலட்ஸ்(Zélotes) என்ற கும்பல் துண்டித்தனர்.  சைப்ரஸில் குடியிருந்த  கிரேக்க மற்றும் உரோமானிய குடிகள் பாமர யூதர்களின் பிடிக்குள் சிக்கி, கிளாடியேட்டர் சண்டைகளில் ஒருவரையொருவர் வெட்டிமடியவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர்.

அதிரியன் நினைவுகள் – 11

This entry is part 11 of 48 in the series அதிரியன் நினைவுகள்

எனது கணிப்புகள் பொய்த்துவிடும் போலிருந்தன.  யூத மற்றும் அரேபிய  தரப்ப்பினர் போருக்கு விரோதமாக இருந்தனர்; மாகாணச் செலவதர்களான பெரும் நிலவுடமையாளர்கள்  தங்கள் பகுதியைத்  துருப்புக்கள் கடந்து செல்வதால் ஏற்படும் செலவினங்களால் எரிச்சலுற்றனர்; படையெடுப்பு காரணமாக விதிக்கப்பட்ட புதிய வரிகளை நகரங்களால் சமாளிக்க முடியவில்லை. பேரரசர் திரும்பிய மறுகணம், இவை அனைத்தையும் தெரிவிக்கின்றவகையில் பேரழிவு ஒன்று நிகழ்ந்தது: டிசம்பர் மாத  நடுநிசியொன்றில் ஏற்பட்ட நிலநடுக்கம், அந்தியோக்கியாவின் கால்வாசிப் பகுதியை ஒரு சில நிமிடங்களில் நாசமாக்கியது. ஒர் உத்திரமொன்று விழுந்ததில் திராயான் காயமுற்றிருந்தார்,  இருந்தபோதும் பேரிடரில் காயமுற்ற பிறருக்கு உதவுவதில் அவர் காட்டிய ஆர்வம் போற்றுதலுக்குரிய அபாரமான செயல்.   மன்னருடன் இருந்தவர்களில் சிலரும்  விபத்தில் மாண்டிருந்தனர்

உபநதிகள் – மூன்று

This entry is part 3 of 17 in the series உபநதிகள்

என் தங்கை என்னைவிட இரண்டரை வயது சிறியவள். மற்றவர்கள் தாத்தாவின் கவனத்தைப் பிடித்துவைத்ததைப் பார்த்து, தன் பங்குக்கு அவரிடம் என்ன காட்டலாம் என்று யோசித்தாள். மாடியில் தன்னறைக்குப் போய் அவளுடைய கைப்பையை எடுத்துவந்தாள். அதில் ஒரு சிறிய பர்ஸ். அதைத்திறந்து அவள் சேர்த்துவைத்திருந்த டாலர் நோட்டுகளைப் பெருமையுடன் காண்பித்தாள்.

அதிரியன் நினைவுகள் – 8

This entry is part 8 of 48 in the series அதிரியன் நினைவுகள்

எனது இராணுவ வெற்றிகள்  மன்னர் திராயானைப் போன்ற மாவீரர்களிடத்தில்  பகை உணர்வை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. துணிவென்ற மொழியை மட்டுமே உடனடியாகப் புரிந்துகொள்ளக்கூடியவராக அவர் இருந்தார். அதன் சொற்கள் நேரிடையாக அவர் நெஞ்சத்தைத் தொட்டன. என்னைத் தம்முடைய வலதுகையாக, ஏன்  கிட்டத்தட்ட ஒரு மகனாகவே கருதினார். அதன் பின்னர் எங்கள் இருவரையும் முழுமையாக பிரிக்கின்ற வகையில் எந்தச் சம்பவமும் குறுக்கிடவில்லை.  என்னைப் பொறுத்தவரை, அவரது கருத்துக்களைப் பற்றிய  எனது ஆரம்பகால ஆட்சேபணைகளை அவர் இராணுவத்தில் வெளிப்படுத்திய போற்றத்தக்க மேதமையை அறிந்தமாத்திரத்தில் குறைந்த பட்சம் தற்காலிகமாக ஒதுக்கிவைக்க ஆரம்பித்து, பின்னர் மறக்கவும் செய்தேன். கைதேர்ந்த நிபுணர்கள்  செயல்படும் விதத்தைக் காண்பதில் எனகெப்போதும் மகிழ்ச்சி.

மித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 5

This entry is part 5 of 9 in the series மித்ரோ மர்ஜானி

மகளின் தலையை அன்போடு தடவி, குர்தாஸ், பேரனை மடிமீது அமர்த்தி, கொஞ்சி மகிழ்ந்தார். ஜன்கோ அம்மாவை அணைத்துக் கொண்டாள். தனவந்தியும், மகளை ஆரத் தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டாள். தனவந்தி நீண்ட நேரம் மகளை அணைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து மித்ரோ, “கொஞ்சம் அன்பை மருமகள்களுக்கும் மீதி வையுங்கள் அம்மா” என்று கேலி செய்து சிரித்தாள்.ஜன்கோ சந்தோஷமாக அண்ணிகளையும் தழுவிக் கொண்டாள். சின்ன அண்ணி கண்ணில் படாததைப் பார்த்த ஜன்கோ, “அண்ணி நன்றாகத் தானே இருக்கிறாள் அம்மா? அண்ணியும் கண்ணில் படவில்லை, அண்ணன் குல்ஜாரியும் கண்ணில் படவில்லையே என்று கேட்டாள்.

அதிரியன் நினைவுகள் – 5

This entry is part 5 of 48 in the series அதிரியன் நினைவுகள்

ஏதன்ஸ் நகரை அடைந்த மறுகணம் என்னுடைய மனதைப் பறிகொடுத்திருந்தேன்; நானோ, பிறர் சந்தேகிக்கிற விரும்பத்தகாத தோற்றம்கொண்ட மாணவன், அங்கு நிலவிய கலகலப்பான சூழல், வேகமாக பரிமாறிக்கொள்ளப்பட்ட உரையாடல்கள், நீண்ட ரம்மியமான மாலைப்பொழுதுகளில் காலாற நடக்கும் தருணம், வேறெங்கும் அறிந்திராத விவாதங்கள், தர்க்கங்கள், ..அனைத்தையும் முதன்முறையாக அங்குதான் சுவைத்தேன். கணிதம், கலை இரண்டுமே சுழற்சிமுறையில் எனது தேடலுகேற்ப தங்கள்பால் அக்கறை கொள்ளவைத்தன. …மருத்துவர் தொழில் எனக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும்; அப்பணியின் அடிப்படை அணுகுமுறை, எனது சக்கரவர்த்தி தொழிலுக்கென முயற்சித்துப் பெற்ற அணுகுமுறையை ஒத்திருந்தது.

மிளகு அத்தியாயம் முப்பத்தாறு

வெடியுப்பை வைத்து விளையாடியிருக்கிறார்கள் அவர்கள். தீபாவளி முடிந்து சுவதேசி பட்டாசு தயாரிக்கிற முயற்சியாம். எக்குத்தப்பாக ஒரு சிறு கரண்டி வெடியுப்பை நகக்கண் அளவு இத்தனூண்டு கந்தகத்தோடு கலந்து எரிய விட்டத்தில் ஏதோ வெடிப்பு உண்டாச்சாம். விரல் பிழைத்தது பகவான் கருணை. காயம் சீக்கிரம் ஆற மூலிகைச் சாறு தடவணும். அதுக்குத்தான் பறிச்சுட்டுப் போறேன். ஏற்கனவே நாலைந்து வருஷம் முந்தி இதே மாதிரி வெடியுப்போட விளையாடினாங்க. மூலிகை அரைச்சுப் பத்து போட்டு குணமாக்கினேன். இப்போ அதைவிட அதிகமா வெடியுப்பு. தேவையில்லாத இதர சேர்மானம். அதிகம் மூலிகை. அதிகம் நாள் எடுத்து குணமாகறது”. வைத்தியர் விளக்கினார்.

அதிரியன் நினைவுகள் – 4

This entry is part 4 of 48 in the series அதிரியன் நினைவுகள்

என் தந்தை, ஏலியஸ் அஃபர் அத்ரியானுஸ்(Aelius Afer Hadrianus) நல்லொழுக்கங்கள் நிறைந்த  மனிதர்.  தேசம், அரசாங்கம் என அவர்  உழைத்தபோதும், பலனடைந்தவரில்லை.  செனெட் அவையில், அவர் குரல் எடுபட்டதில்லை. வழக்கமாக நம்முடைய ஆதிக்கத்தின் கீழிருக்கும் ஆப்ரிக்க பகுதி நிர்வாகிகள் செல்வத்தில் கொழிப்பதுண்டு, ஆனால் இவர் அங்கும் எதையும்  சம்பாதித்தவரில்லை. திரும்பிய பின் இங்கும் ஸ்பெயின் நாட்டில் நமது கைவசமிருந்த    இட்டாலிகா (Italica) நகராட்சியில் ஓயாமல் உள்ளூர் சர்ச்சைகளைத் தீர்த்துவைத்து சோர்வுற்றதுதான்  அவர் கண்ட பலன். இலட்சியங்களற்ற மனிதர், வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் பெரிதாக அனுபவித்தவரில்லை. பெரும்பாலான மனிதர்களைப்போலவே  ஆண்டுதோறும் மேலும்மேலும் நிறமிழந்து, இறுதியில் அற்பவிஷயங்களில் வெறித்தனமாக ஒரு முறைமையைக் கையாண்டு தம்மை சிறுமைபடுத்திக்கொண்டார்.

மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து

கிட்டத்தட்ட இருபது வருஷமாக வந்து போவதால் கொஞ்சம் போல மலையாளம் அவர் நாவில் படிந்து வரும். அது ரெண்டாம் பட்சம். ஒரிஜினல் மலையாளியாக வேட்டியை முழங்காலுக்கு மடித்துக் கட்டியபடி நடக்கவும், தேவையான இடங்களில் மடித்ததை இறக்கி காலில் தடுக்காமல் நடக்கவும் அவருக்குப் பழகி இருந்தது.. தமிழ் நாட்டில் சுற்றுவேட்டி வலது பக்கத்தின் மேல் இடப்பக்கம் படிந்து வரும். கேரளத்திலோ இடப்பக்கத்தின் மேல் வலப்பக்கம் படிந்து வரும். இரண்டு வகையிலும் வேட்டி கட்ட மோதக்குக்குத் தெரியும். வேட்டி மடித்துக் கட்டியபடி ஓடவும் இறக்கி விட்டு முழங்காலில் இருந்து கணுக்காலுக்கு மூட மெல்ல ஓடவும் அடுத்துப் பயிற்சி எடுக்க வேண்டும். இந்தப் பயணத்தில் அதைப் பழகி விடலாம் என்ற நம்பிக்கை உண்டு அவருக்கு.

மித்ரோ மர்ஜானி-அத்தியாயம் 3

This entry is part 3 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தனவந்தியின் நெஞ்சம் நிறைந்து தளும்பியது. எந்நேரமும் யாரைத் திட்டிக் கொண்டும் குறை கூறிக்கொண்டும் இருந்தாளோ, அந்த மருமகள் தான், மாமியாரை விட்டுக் கொடுக்காமல் பக்கபலமாக நிற்கிறாள். தனவந்தி தலையை அசைத்து, ” மருமகள்களே, நான் தவறாக ஏதாவது சொல்லி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நான் இந்த வீட்டுப் பிள்ளைகளின் அம்மா என்று என்னைத் தவறாகக் நினைத்துக்கொண்டு விட்டேன். நான் வெறும் வேலைக்காரி தான் என்பதை மறந்து விட்டேன். நான் வெறும் வேலைக்காரி மட்டுமே.”