மெய் பதுங்கும் மெய்யற்ற வெளியின் உள்ளும் வெளியும்

This entry is part 51 of 72 in the series நூறு நூல்கள்

இப்படி மேற்கிலக்கிய அழகியலில் ஒரு கால், தமிழ்/இந்திய இலக்கிய அழகியலில் மறு கால் எனக் கட்டுரைகளில் நம்பியுடன் நாம் பயணிக்க ஏதுவாக அவரது கட்டுரையின் அடி நாதம் அமைந்திருக்கிறது. Cape Cod Noir புத்தகத்தைப் பற்றிய கட்டுரை (பயணக்கட்டுரை போலவும், தன்மையக்கட்டுரை போலவும் இருப்பதால் இந்த நூலிலேயே செபால்டியத் தனமான கட்டுரை இதுதான்) முடிக்கும் போது feeling good was good enough என்பது சித்தரைப் போல இழப்பதற்கு எதுவுமில்லாத மோன நிலை என்பதிலும் இந்த மேலை கீழை தொட்டு மீட்டல் நடக்கிறது

கப்பை – கதையை முன்வைத்து…

மார்த்தாண்டத்துக்காரி தன்னுடைய இன்ஸடா பக்கத்துக்கு ஸ்டைலிஷ் சோல் எனப் பெயரிட்டு  ஒரு மாய உலகை அமைத்துக்கொள்ள முடியும். அங்கு ஹார்டினும், லைக்கும், கிஸ்ஸும் அளிப்பவர்கள் அவளது / அவனது உசிரு. அதற்கு வெளியே இருக்கும் உலகம் அவர்களை பொறுத்தவரை பொய்யான ஓர் உலகம் மட்டுமல்ல, அது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் ஒரு மாய உலகம். அங்கு தோல்விகளுக்கும், ஏமாற்றங்களுக்கும், உதாசீனங்களுக்கும் மாற்று இல்லை என நினைக்கிறார்கள்.

அனைத்துக்கும் சாட்சியாக நாம் 

This entry is part 71 of 72 in the series நூறு நூல்கள்

ஒவ்வொரு காலகட்டமும் ஏதோரு விதத்தில் அதன் சாராம்சத்தை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது. பாரதியாரின் படைப்புகளை வாசிக்கும் ஒருவர் அரசர் காலத்தில் இருந்து ஜனநாயகக் காலம் அடைந்த தாவலின் சித்திரத்தை கண்டு கொள்ள முடியும். உலகலாவிய புது சிந்தனைகளை முன்வைத்துப் பேசிய முதல் தமிழரின் படைப்புகள் என்பதையும் உணர முடியும். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் எழுதிய வ.வே.சு ஐயர் அவர்கள் காலனிய ஆட்சியால் தொலைந்து போன பண்பாட்டுச் செல்வங்களை மீட்டுப் பேசத் தேவையான சிந்தனைகளை முன்வைக்கும் படைப்புகளை உருவாக்கினார். இருவரும் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் ஒரு வேளை தமிழில் நவீனத்துவமும் பின்நவீன நவ காலனிய யுகமும் ஒரே சமயத்தில் முதிர்ச்சி அடைந்திருக்கும்

நாற்கூற்று மருத்துவம் – இல.மகாதேவன் நேர்காணல் நூல்

குருவிடம் சென்று பயிலும் ஆர்வமோ வாய்ப்போ இல்லாமை போன்ற பல காரணங்களால் கல்லூரிப்படிப்பில் முழுமையான பயனை மாணவர்களால் பெற முடியாது என்கிறார் மகாதேவன். பொறியியல் போன்ற துறையிலும் இப்படிப்பட்ட போதாமைகளை நம்மால் பார்க்க முடிகிறது. விஞ்ஞானப் படிப்பின் அடிப்படைகள் பற்றி ஆர்வம் இல்லாததும், பயிற்சியாக எதையும் செய்யாமல் ஏட்டுப்படிப்பாக மட்டுமே இருக்கும் கல்வி அமைப்பின் சிக்கல்கள் இதோடு ஒத்துப்போகின்றன. ஆயுர்வேத மூல நூல்கள் சமஸ்கிருதத்தில் இருப்பது கூடுதல் சிக்கல். ஆனாலும் அது கடக்க முடியாத சிக்கல் அல்ல என்பதே மகாதேவனின் வாதம். ஆயுர்வேதம் போன்ற பன்முக ஞானத் தேவை இருக்கும் துறை, பிற அறிவுத் துறையிலிருந்து பலவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது அவரது அனுபவ அறிவு.

சாம்பனின் பாடல்

மிதக்காமல் நிலத்தில் விழுந்த இலைகள்

அரூ போட்டியில் அறிபுனைப் பரிசை வென்ற “ஒழிவில் காலெமெல்லாம் உடனாய் மன்னி” இத்தொகுப்பின் முக்கியமான கதைகளில் ஒன்று. அறிவியல் புனைவுகள் தமிழுக்குப் புதிய வகை எழுத்தாகும்….பொதுவாக நாம் அறியாத எதிர்கால உலகை வடிவமைத்து அதில் மனிதர்களின் சமூகக் கட்டமைப்பை சித்தரிப்பது அறிபுனையின் ஒரு வகை மாதிரி. அதே போல, எதிர்காலத்தில் மனிதர்கள் வேறு கோள்களுக்கு இடம் பெறும்போது அச்சூழல்களுக்கு ஏற்ப தங்களையும் சமூகத்தையும் தகவமைத்துக்கொள்ளும் கதைகளும் சுவாரஸ்யமானவை.

முடிவுறாத போலிப் பிரதிகள் – ராஸ லீலா நாவல் விமர்சனம்

ஜீரோ டிகிரியைப் போல ராச லீலா நாவலை முதலில் படிக்கும் வாசகர்களுக்கு அதன் பல்குரல்களைப் பின் தொடர்வதினால் கதையோட்டத்தைத் தொடர முடியாமல் போய்விடும். பொதுவாக இருவேறு அடையாளங்களின் கண்ணோட்டத்தின் வழியாகக் கதை சொல்லப்படுவதைத் தெளிவுபடுத்திக்கொண்டால் நாவல் காட்டும் உலகை எளிதில் புரிந்துகொண்டுவிடலாம். பெருமாள் பாத்திரமாக சாருவே கதைக்குள் புகுந்து “முடிவுறாத போலிப் பிரதிகள் – ராஸ லீலா நாவல் விமர்சனம்”

“பான்சுரிக்குப்பின் வேறு ஒரு கருவி மீதும் ஆர்வம் வரவில்லை” : கிளைவ் பெல் பேட்டி

ஹம்ஸத்வனியில் நான் இயற்றிய ஒரு பான்சுரி பாடல் என் மனதுக்கு நெருக்கமானது. அது தவிர பூபாளி, கேதார் போன்ற ராகங்கள் எனக்குப் பிடிக்கும். இந்திய இசையை எழுதிவைத்துக் கற்றுக்கொள்ள முடியாது என்பதால், ஸ்வரக் கோவையை மட்டும்கொண்டு நான் ‘தான்’ களையும், ஆலாபனையையும் கற்பனை மூலம் சேர்ப்பேன். என் மாணவர்களுக்கும் அதையே சொல்வேன். இசை என்பது நீங்கள் வைத்திருக்கும் காகிதத்தில் இல்லை. அது ஒரு வழிகாட்டி மட்டுமே. நீங்கள்தான் அதில் பயணம் செய்ய வேண்டும். இசை வேறெங்கோ உள்ளது.

பொடுவா கலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள்

காலப்போக்கில் பொடுவா இனத்தினர் பாடுவதைக் குறைத்துக்கொண்டு ஓவியங்கள் வழியே மட்டும் கதை சொல்பவர்களாக மாறினார்கள். காலிகட் பொடுவா ஓவியர்கள் மெதினிபூர் தாலுகாவிலிருந்து வரும் இந்துக்கள். இன்று பல முஸ்லிம் மதத்தினரும் ஓவியர்களாக இருக்கிறார்கள். ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைளை வரைந்தாலும், முன்னதே பிரதானமாகக் காட்சிக்குக் கிடைக்கிறது. பாம்புகளின் அரசியான மானசா தேவி, யமன், காளி, சீதா, ஜடாயு, சூர்பனகை போன்றவை அதிகம் வரையப்படுகின்றன.

சத்யஜித் ரேயின் ரவிஷங்கர் – இரு கலைஞர்கள்

ஓர் இசை மேதைக்கு ஒரு திரை மேதை செலுத்திய உச்சகட்ட மரியாதை இது. திரைப்படமாக வெளிவந்திருந்தால் ஒருவேளை ரவிஷங்கரின் மேதைமைக்கு நிகர் செய்ய இயலாமல் போயிருக்கலாம். ஒரு சாதாரண ரசிகராக நமக்குத் தோன்றியது ரேவுக்குத் தெரியாமல் இருந்திருக்குமா?

முதற்கனல் – விளைநிலத்தின் கண்ணீர் துளிகள்

வெண்முரசின் தொடக்கமான முதற்கனல் யுகசந்தி எனும் சொல்லுக்கு ஏற்ப குல தர்மத்தை மீறி எழும் அறத்தைப் பேசுகிறது. மஹாபாரதம் எனும் விதைநிலம் வேதத்துக்கும், மேலான மானுட அறத்துக்கும், அசுர வேதத்திலிருந்து கிருஷ்ண வேதத்துக்கு ஏறிச்செல்லும் வழியாக அமைகிறது. அதற்கு மானுட இச்சையே ஒரு காரணம் எனவும் அதற்கான சமானமான சக்திகளின் உருவாக்கமும் அழிவுமே மஹாபாரதத்தின் விளைநிலம் என்பதை முன்வைக்கும் நாவலாக முதற்கனல் உருவாகியுள்ளது.

“கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்”

ரா கிரிதரன் பேட்டி ரா. கிரிதரனின் அம்மா ஊர் திண்டிவனம். அப்பாவுக்கு புதுச்சேரி. புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பட்டப்படிப்பு. அதன்பின் தகவல் தொழில்நுட்பத்தில் எம்.டெக். படிப்பு. சென்னை, பெங்களூர், பூனா போன்ற நகரங்களில் வேலை செய்தபின் 2006 ஆண்டு முதல் இங்கிலாந்து வாசம். ““கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்””

யதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல்

This entry is part 46 of 72 in the series நூறு நூல்கள்

சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம் நாவலை ஒவ்வோர் அத்தியாயமாக அவர் அனுப்பும்போது படித்திருந்தேன். முழு நாவலாக வெளியான பின்னர், ஒரு முறை முழுவதாகவும் சில பகுதிகளைத் தனித்தனியேயும் படித்திருக்கிறேன். சுனிலின் சிறுகதைகளையும் தொடர்ந்து படித்துவந்ததிலிருந்து அவரது கதைசொல்லும் பாணி எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக ஆகியிருக்கிறது. அதற்கான அடுத்தகட்டச் சாட்சியாக “யதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல்”

இருளின் விசும்பல்கள் – By Night in Chile

ஏமாற்றும் கலையின் உச்சகட்டத்தை சீலே அடைந்துவிட்டது. நாடு எதிர்காலமற்ற பாதையில் செல்லும் பயணத்தில் உள்ளது. உச்சகட்ட பயம், அதிகாரத்தின் பிடியில் சிக்கியிருக்கும் ஆட்சியாளர்கள் மக்களிடையே பரப்ப நினைத்த உச்சகட்ட பயம். ஒரு தீவிரமான விமர்சகரான உரோசியாவுக்கு இதுபோன்ற வகுப்புகள் எடுப்பது என்பது மரணத்துக்கு ஒப்பானது. இதை செய்ய வேண்டிய அவசியம் தான் என்ன என ஃபேர்வெல் கேட்டபோது அது மிக அவசியம் என ஆவேசத்துடன் சொல்ல முடிந்தது. யாருக்கும் கவலை இல்லை. எல்லாருக்கும் ஆட்சி அதிகாரத்தில் சிறு துளியை ஸ்பரிசிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

நெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet

கதையைக் கூறத் தொடங்கும்போது மெக்ஸிகோ நாட்டுப் பல்கலைக்கழகம் மீண்டும் தொடங்கிவிட்டிருந்தது. அவள் இன்னமும் நான்காம் மாடி கழிப்பறையில் அடைபட்டுக்கிடக்கிறாள். அவளது உடல் அங்கு கிடந்தாலும், மனம் தொன்மங்களிலும் வரலாற்றின் இருண்ட சொதிகளிலும் விழுந்து கிடக்கிறது. வரலாற்றின் பக்கங்களிலிருந்து பிய்த்து எடுக்கப்பட்டதாக அவளது கதைகூறல் இருந்தாலும், அரூபமான விவரங்கள் நிகழ்வுகளை வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்கின்றன.

நிலவை நோக்கி – கனவுப்பயணம்

படக்கதை நூலுக்கு ஒரு தனி மொழி அமைந்துள்ளதை இந்த நூலில் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. சாதாரண கார்டூன் போல வரும் பல கிரஃபிக் நாவல்களுக்கு மத்தியில் பல கோணங்களை ஒன்றாகத் தொடர்புறுத்தும் இது போன்ற நூல்கள் திரைப்படம், கதைபுத்தகம் போன்றவற்றைத் தாண்டி மற்றொரு பரிணாமத்தை அளிக்கிறது.

தப்பித்தல் நிமித்தம்

This entry is part 28 of 72 in the series நூறு நூல்கள்

முக்கியமான கதையான கன்னியாகுமரி, மனிதனின் ஆழ்மனதுக்கும் மேல்மனத்துக்கு இடையிலான போராட்டத்தை இயல்பு மீறாவண்ணம் காட்டுகிறது. காமமும் மரணமும் தொடர்ந்து ஒன்றை ஒன்று நிரப்பும் இரு வேறு விசைகளாக மனித மனதை அலைக்கழிக்க வைத்தாலும் ஒன்று திரும்பவியலா நிகழ்தகவைக் கொண்டது என்பதால் மற்றொன்றின் அலைகழிப்பு மனிதனின் கீழ்நிலையின் முடிவுறா ஆழத்தைக் காட்டும் படிமமமாக என்றும் அமைந்துவிடுகிறது.

கணிப்புக்குடில்

பூஜ்ஜியத்துக்கு இருக்கிற சிறப்பு யாருக்கும் இல்லை எனும் கர்வம் இருந்தாலும், பல சமயங்களில் தான் ஒரு பூஜ்ஜியம் தானே எனும் மனக்குறையும் அதற்கு உண்டு. பெரியவள் எனும் பொறுப்பைக் கொண்டதால் கணிப்புக்குடிலின் எந்த விதியையும் அது மீறாது. யார் என்ன சொன்னாலும் கேட்கும். செக்கு மாடு எனும் கிண்டலையும் மீறி அவளோடு நட்போடு இருப்பது ரெண்டு மட்டுமே. கணிப்புக்குடிலின் விதிக்கு ஏற்றவாறு ஒன்றோடு சேர்ந்து சுற்றும் என்றாலும் அவளுக்குப் பிடித்தது ரெண்டு தான். ஏனோ எண்களிலிலேயே அழகானது ரெண்டு மட்டுமே எனும் ரகசிய மையல் அதற்கு உண்டு.

முறுக்குக்கம்பிகளும் ஷாம்புக்களும் கோ ஸ்பான்ஸர்ட் பை தருணங்களும் – கவிஞர் இசையின் கவிதை குறித்து.

கவிதையாக்கம் குறித்து நமக்கிருக்கும் மயக்கங்களைத் தாண்டி கவிஞர் இசையின் வரிகளைப் பார்க்க வேண்டியுள்ளது. இவை வார்த்தைகளின் வரிசை மீதும், கவிதை இலக்கணம் மீதும் மதிப்புள்ள கவிதைகள அல்ல. இயல்புக்கும் கற்பனைக்கும இடையே சஞ்சரிக்கும் வேடிக்கை உலகத்தைப் பற்றிப்பேசுபன. மரபு வழி மனது கொண்டவர் என்றாலும் அதை மறுதலித்து சற்றேனும் தளர்த்திக்கொள் என எதிர் தரப்பிலிருந்து தன் கவிதை உலகை அமைத்துக்கொள்பவராகக் கவிஞர் தெரிகிறார். அவர் மனம் இயங்கும் முறை அப்படி இருக்க வேண்டும், இல்லாவிட்டால் ஏதேனும் ஒரு சொல்லேனும் நீ எங்கள் உலகவாசி அல்ல எனத் தள்ளிவிட்டுவிடக்கூடும்.

காடு – சூழியல் சிற்றிதழ் அறிமுகம்

ஏ.சண்முகானந்தம் ஆசிரியராக அமைந்திருக்கும் இந்த சிற்றிதழில் சூழலியல் பற்றி தொடர்ந்து தமிழில் கவனத்தை ஏற்படுத்தும்  சு.தியடோர் பாஸ்கரன், ச.முகமது அலி, முனைவர் வே.தட்சிணாமூர்த்தி, முனைவர் ஆ.குமரகுரு, சு.பாரதிதாசன் போன்றோர் ஆலோசகர்களாக உள்ளனர். இதழின் ஒவ்வொரு வார்த்தையையும் சூழலியலின் முக்கியத்துவம் உணர்ந்த ஆர்வலர்கள் மட்டுமே எழுதுவது ஆத்மார்த்தமான வெளியீட்டுக்கு உறுதியாக அமைகிறது.

கு.ப.ரா.வின் ‘சிறிது வெளிச்சம்’ – ஒரு குறிப்பு

நமது அன்றாட அனுபவத்தை மீறிய ஒரு கணம் கண்டடைய முடிவதே புனைவை விசேசமாக்குகிறது. அதில் நாம் அறிந்ததைத் தாண்டிய ஒரு அறிதல் இருக்கிறது. நம் தின வாழ்வில் சல்லிசாகத் தெரிகிற முடிவுகள் அங்கு புது அர்த்தத்தை அளிக்கும். அப்படி ஒரு முடிவை ஒருவர் எடுக்க நேர்ந்தால் அவரை விட மூடன் யாருமில்லை என நாம் சொல்லக்கூடும். ஆனால் மொழியும், புனைவு தருக்கமும் நம்முன் திறக்கும் உண்மையைவிட அக்கணத்தில் எதுவும் அழகு கிடையாது. அதை நாம் அறியும்போது வேறொரு அனுபவமாக மாற்றி நம்முடையது என சொந்தம் கொண்டாடத் தொடங்குகிறோம்.

ஒளிர்நிழல் – கரிப்பின் விசாரணை

This entry is part 30 of 72 in the series நூறு நூல்கள்

வெறுப்பின் பலவித அலகுகளைச் சோதித்துப்பார்க்கும் களமாக இந்த நாவலை நான் காண்கிறேன். தனிப்பட்ட உறவுகள் மீதான கசப்பும், தன் சமூகம் மீதான சுய எள்ளலும் (இது அடுத்த கட்டத்துக்கு நகர்த்த உந்தும் விமர்சனமாக அமையவில்லை. பள்ளர் சமூகம் எட்டிப்பிடிக்க வேண்டிய காலத்தைப் பற்றி உரையாற்றிய சக்தி, காரில் ஏறியதும் தாங்கமாட்டாது சிரிக்கிறான்; அதனால் இது கரிப்பாகவே மிஞ்சுகிறது), ஒழுங்கில்லாத எளிய வரலாற்றின் மீதான கோபமும் ஆகிய மூன்றும் நாவலின் அடியோட்டமாக மிஞ்சுகின்றன.

பாரதியின் இறுதிக்காலம்

This entry is part 17 of 72 in the series நூறு நூல்கள்

பாரதியின் இறுதிக்காலம் அத்தனை சுலபத்தில் முடிந்த ஒன்றா? இக்கேள்வியைத் தொடர்ந்த மணிகண்டன், யானை சம்பவத்துக்குப் பின்னரும் பாரதி இலக்கிய விசாரங்களில் நிறைய ஈடுபட்டிருக்கிறார் என்பதைக் கண்டடைந்ததோடு மட்டுமல்லாது “கோவில் யானை” எனும் படைப்பையும் தந்துள்ளதாக அறிகிறார். மணிகண்டனின் ஆய்வுப்படி, தனக்கு நடந்த சம்பவத்தைக் கொண்டு கோவில் யானை எனும் நாடகத்தை எழுதிய பாரதி அதை முதலில் 1920களில் சுதேசமித்திரன் இதழில் வெளியிட்டார். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1951ஆம் ஆண்டு கலைமகள் பத்திரிக்கையில் ஸி.சுப்ரமணிய பாரதி எனும் பெயரில் மீண்டும் வெளியிடப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 63 ஆண்டுகளுக்குப் பிறகு கலைமகள் இதழிலிருந்த நாடகம் இவர் கைக்குக் கிட்டியிருக்கிறது.

நீர் பிம்பத்துடன் ஓர் உரையாடல்

புதுச்சேரி லே போர்த் வீதியின் மத்தியில் கிரேக்க நாட்டு அதீனாவின் முழு உருவச்சிலையை நிறுவி அவளது தலை, இடுப்பு மற்றும் கணுக்கால் பகுதியிலிருந்து அழகிய நீரூற்று வருமாறு வடிவமைத்த பிரெஞ்சு குதிரைப்படையின் முன்னாள் தலைவர் அலக்ஸான்றா தெப்போனேவின் முன்னறையில் கடற்காற்று கடுமையாக வீசினாலும் ஆடாது நிற்பதற்கான கனமான இரும்பு நாதங்கிகளையும் அதைவிட கனமான பர்மா தேக்கு மரச் சட்டகத்தையும் ராணுவ மெடல் போலத் தாங்கி கம்பீரமாக வீற்றிருந்தேன். அப்போது ராபர்ட் க்ளைவ் ஆட்டத்தைத் தாங்கமுடியாது வெர்சயி மாளிகையில் புதுச்சேரி மெத்ராஸ் பட்டிணங்களைக் கூறுபோட்டு பத்து ஆண்டுகள் கூட ஆகியிருக்கவில்லை. 1820ஆக இருக்கலாம். பிரெஞ்சுக்காரர்கள் சொல்வது தான் சட்டமாக ஆகியிருந்தது. நான் பெருமிதத்தின் உச்சியில் இருந்தேன். காரணமில்லாமல் இல்லை. கவர்னர் மாளிகை, ஆண்டனியட் ராணி கோபுர மாளிகை, துறைமுக சுங்கவரி காரியாலயம், பாகூர் அடைவைத் தாண்டி இருந்த கோடை வாசஸ்தலமாகிய பெத்தி மேசான் மாளிகை என எங்குமே என்னை விட அழகான ஓவியங்கள் கிடையாது. எனக்கெப்படி தெரியும்? என்னைத் தூரத்திலிருந்து பார்பவர்கள் காண்பவர்கள் நானென்னவோ பலாச்சுளை போல தங்கள் பெரிய விழிகளால் விழுங்குவது போலப் பார்க்கும்போது அவர்களது வாய் தன்னிச்சையாக சொல்வதைத்தான் நானும் உங்களிடம் திரும்பச் சொல்கிறேன்.

பிரெஞ்சு இந்திய காலனி இலக்கியம் – பகுதி 3

பொருளியல் மாற்றங்களால் நடக்கும் இடப்பெயர்வும், சமூக அடுக்கு மாற்றங்களும் நவீன வரலாற்று ஆய்வுக்கு அத்தியாவசியமான ஒன்று. அன்றாட உணவு மற்றும் வாழ்வாதாரத் தேவைக்காக இடப்பெயர்வு நடக்கும்போது மக்கள் திரள் அடிமை வாழ்வுக்கும் தயாராக இருக்கிற அவலம் என்பதை மனித வரலாற்றின் கதையாகப் பார்க்கலாம். அப்படிப்பட்ட புது பொருளாதார மாற்றங்கள் சமூக அடுக்குகளைக் கலைத்துப்போடும். லே மிராப்ளே நாவலில் பிரெஞ்சுப் புரட்சி காலகட்டத்தில் எப்படி மக்கள் எலிகளைப் போல வாழ்ந்துவந்ததனர் என்பதைக் காட்டுகிறது.

வானம் வசப்படும், நீலக்கடல்

அடிமை வணிகத்தைப் பற்றி விரிவான வரலாற்றைத் தந்திருப்பதன் மூலம் இந்தியப்பெருங்கடல் நிலங்களின் வணிக மூலதனங்களையும், கரும்பு, வெல்லம், பனங்கட்டி, மல்லாட்டை போன்ற உற்பத்தி பொருட்களின் சந்தையும், உபரிகளின் மூலம் வணிக வளர்ச்சிக்குத் தேவையான நகர்புற கட்டுமானப்பெருக்கங்களையும் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் புனைவுனூடாக நமக்குக் கிடைக்கிறது. இதன் ஊடாட்டம் மக்களின் வாழ்க்கையிலும், அவர்களது திரளான பயணம் மூலம் வளர்ச்சியடையும் நிலங்களின் வளமையிலும் நடத்தும் நாடகம் உயிர்ப்போடு காணப்படுகிறது. ஒரு கதவைத் திறந்து அடுத்த அறைக்குச் செல்லும் தூரத்தில் அந்த நிலம் இருக்கிறது. கற்பனை பாத்திரங்களும் வரலாற்று மாந்தர்களைப் போல ரத்தமும் சதையுமாக வளர்கிறார்கள், தேய்கிறார்கள், மறைகிறார்கள்.

நீலக்கடல் – பிரெஞ்சு இந்தியக் காலனி – மொர்ரீஸியஸ்

நாட்குறிப்பு எழுதி தன் எழுத்தின் மூலம் புதுவை பிரஞ்சு ஆட்சிக்கு நீங்காத இடம் தந்த துய்ப்பளே துபாஷி ஆனந்தரங்கப்பிள்ளை பாத்திரத்தை இரு எழுத்தாளர்களும் வெவ்வேறு வரலாற்றுப் பார்வையில் அணுகியுள்ளனர். மானுடம் வெல்லும் பிரபஞ்சன் ஆனந்தரங்கப்பிள்ளையை தனது காலத்தின் விதிகளுக்கேற்ப பிரெஞ்சு கவர்னரிடம் விசுவாசமாக நடந்துகொள்பவராக மட்டுமல்லாது புதுவை ஹிந்துக்கள் மீது பரிவு கொண்டவராகவும் சித்திரிக்கிறார். நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக்கடலைப் பொருத்தவரை ஆனந்தரங்கப்பிள்ளை பிரெஞ்சு அராஜகத்துக்கு ஊமைச்சாட்சியாக நின்ற மற்றொரு உயர்மட்ட ஹிந்துவாக சித்திரிக்கிறார். பிள்ளை ஒரு நேரடியான கதாபாத்திரமாக வராவிட்டாலும், மொர்ரீஸியஸ் தீவிலுள்ள தமிழரின் நிலையையும் அடிமை வாழ்வையும் ஆட்டிவைக்கும் பாவைகளாக விளங்கும் பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் அச்சாணியாக உயர்மட்ட வணிகர்களைக் குறிப்பிடுகிறார்.

அகதி

என் சிறுவயது மிகவும் சந்தோஷம் நிரம்பிய நாட்களைக் கொண்டது. என் இன்றைய நிலைமைக்கு எவ்விதமான காரணத்தையும் அதில் தேடமுடியாது. சொல்லப்போனால் அந்த நினைவுகளில்லாமல் ஒரு நாளையும் என்னால் கடத்திவிட முடியாது. ரயில் டிப்போக்களில் இருள் வேளைகளில் திறந்திருக்கும் பெட்டிகளில் அடுக்கிவைக்கப்பட்ட சரக்கு மூட்டைகளுக்கு இடையே என்னைப் பொருத்திக்கொண்டு அந்த நினைவுகளை அசைபோடும் பல இரவுகள் உணவை மறக்க உதவியிருக்கின்றன. பதின்மவயது முடியும்வரை அன்னையின் கருப்பையைப் போல என்னைப் பாதுகாத்ததும் அவைதான். ப்ரிக் லேனுக்கு வந்த நாட்கள் முதலே கரித்துண்டும், வண்ணம் தோய்ந்த மரத்தூரிகையும்…

கணங்களில் தளிர்க்கின்ற ஜீவிதம் – சுப்பிரமணியன் ரமேஷ் கவிதைகள்

குழந்தைகளின் உலகம் கவிஞர்களுக்கு பிரமாதமான கச்சாப்பொருள். சிறு சொப்புச்சாமான்களோடு விளையாடிய குழந்தை பிரபஞ்சத்தை உருவாக்கிவிட்டதாக ப்ளே திங்க்ஸ் கவிபாடிய தாகூரின் உலகம் ஒரு பக்கம். அவை அன்றாட நிகழ்வுகளிலிருந்து உருவாகும் அசாத்திய தரிசனங்களை நமக்குக் காட்டுபவை. அதில் ஒரு ஆன்மிக அனுபவம் உள்ளது. கவிஞர் ரமேஷ் எதிர்கொள்ளும் குழந்தை உலகம் ஆச்சர்யத்தை அடக்கிய அதே வேளையில் அக ஸ்தம்பிப்பையும் உருவாக்கிவிடுகிறது.

'டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்' சிறுகதைத் தொகுப்பு மதிப்புரை

மிகச் சுலபமாக நீதி போதனைக்கதையாக மாறியிருக்க வேண்டிய கதையை கணேஷ் வெங்கட்ராமன் மனித மனதை அலசும் வழியைக் கொண்டு இலக்கிய ஆக்கமாக மாற்றியிருக்கிறார். மனதின் விநோதங்களைப் பேசும்போது அவர் இயல்பாக அதில் அதிகாரத்தின் தேவையையும், அதிகாரத்தைக் கைகொள்ள செய்ய வேண்டிய வித்தைகளையும், அதிகாரத்துக்கு முன் எந்தளவு குறுக்கிக்கொள்ள வேண்டும் என்பதை முடிவெடுக்கும் மனதின் ஊசலாட்டத்தையும் அவர் கையாள்கிறார். மிக இயல்பாக அதிகார வேடங்கள் நாய்களாகவும் பூனைகளாகவும் சுப்பு, அஷுவோடு அமைந்திருப்பதே இக்கதையின் வெற்றி.

அம்பையின் சிறுகதை-"அம்மா ஒரு கொலை செய்தாள்"

இக்கதையில் நாம் அறிந்த அம்மா, அப்பெண் எதிர்பார்ப்பது போல ராணி போல அவளது பருவமடைந்த செய்தியை எதிர்கொள்வாள் என்றோ பெண்ணுக்கு ஒரே ஆதரவாக இருப்பாள் என்றோ நாம் நினைப்பதுக்கு மாறாக, “அவள் என்னடீ அவசரம்?” எனத் திட்டுகிறாள்….மெல்லுணர்வுகளைத் தாங்கி இருப்பவர்கள் கூட அதை நெருப்பில் அவிசாகப் போடும் நேரமும் உண்டு. … இதன் தீவிரத்தை உணர்ந்தாலும் நாமும் இப்படிப்பட்ட கொலையில் பங்கு கொள்பவர்களே”. … தன்ராஜ் அசந்துவிட்டார்.

ஆலவித்தில் ஆல் ஒடுங்குதல்: ’இந்திய அறிதல் முறைகள்’

“வலியது வாழும்” எனும் டார்வினின் கொள்கையைப் புரிந்துகொள்ள இந்த இணைய பரிணாமம் எனும் அமைப்பு உதவும். இன்னும் சொல்லப்போனால் இது டார்வினின் கொள்கையை இன்னும் விரிவான தளத்தில் பேசி முன்னகர்த்தியுள்ளது. “குதிரையின் பரிணாம வளர்ச்சியையும் அது தின்னும் புல்லின் பரிணாம வளர்ச்சியையும் எடுத்துக்கொள்ளுங்கள். பரிணாம அடைந்தது குதிரையோ அது தின்னும் புல்லோ அல்ல. அவை இரண்டுக்கும் இடையில் இருந்த உறவே பரிணாம மாற்றம் அடைந்தது”… ஒட்டுமொத்த பூமியே ஒரு கூட்டு உயிரினம் எனும்போது வலியவை, எளியவை என்பதன் எல்லைகள் நெகிழ்ந்துவிடுகின்றன. ஆலவித்தில் ஆல் ஒடுங்கி இருப்பதைப் போல காரண-காரியத்தொடர்பில் இரு பக்கங்கள் ஒன்றுக்குள் ஒன்று தொடர்புடையதாக இருக்கின்றன. காரணமில்லாமல் காரியமில்லை. ஆனால் காரணத்தில் செயலுக்கான விதை உறங்குவதாக நாம் சிந்திக்கும்போது காரியத்தின் விசாலம் நம் கற்பனையையும் தாண்டுகிறது. இப்படிப்பட்ட சிந்தனையில் நம்மால் தொடர்பில்லாத பல விளைவுகளைத் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது. நமது மரபில் இப்படிப்பட்ட சிந்தனையினாலேயே நம்மால் அண்டத்தையும் பிண்டத்தையும் இணைக்க முடிகிறது.

மா.அரங்கநாதனின் "சித்தி"

சுத்த சைவமே சிவம் எனக்கொள், ஆடலும் ஆடுபவனும் வேறல்ல (கடவுளும் கந்தசாமிப்பிள்ளை) என சைவத்தின் முக்கியமான தத்துவம் செய்யும் செயலும், செய்பவனும் ஒன்றாக ஆகிவிடும் தருணம். கதையில் கருப்பனும் அப்படியே ஓட்டமாகவே இருக்கிறான். இடம் பொருள் தெரியாது ஓட்டத்தின் விதிகளைப் பற்றிய அக்கறையற்று ஓடுகிறான். அவனுக்கானப் பெயர், அவன் புழங்கும் ஊர் எதையும் ஆசிரியர் குறிப்பிடுவதில்லை. அவன் ஒரு செயலாக மட்டுமே இருக்கிறான்.

அ.முத்துலிங்கம்: "மஹராஜாவின் ரயில் வண்டி"

“கவிதை என்பதை அனுபவங்களில் இருந்து பழக்கத்தின் பாசியை அகற்றும் ஒரு செயல் என்று சொல்வார்கள். முதன் முறையாக ஒன்றை அனுபவிக்கும் போது நமது அகம் அதை முழுவதும் உள்வாங்கிக் கொள்கிறது. பின் வரும் ஒவ்வொரு அனுபவத்திலும் நமக்கும் அதற்கும் நடுவில் ஞாபத்தின் திரை விழுகிறது. அதை விலக்கி மீண்டும் அந்த அனுபவத்தைப் புதிதாக அடைவது இயல்வதில்லை. ஆனால் முதன்முறை அடைந்த அந்த அனுபவத்தின் பரவசம் மனதில் தங்கி விடுகிறது”

இந்திரா பார்த்தசாரதியின் "ஒரு கப் காப்பி"

இக்கதையில் ஊரை ஏமாற்றிப் பிழைப்பவனுக்கும், சூழ்நிலை காரணமாக பித்ருகளின் ஸ்தானத்தை ஏற்பவனுக்கும் உள்ள அற வித்தியாசங்கள் என்று ஒரு கேள்வி வருகிறது, இல்லை? நாயகனின் அற ஸ்தானம் உயர்ந்தது என்று அவனின் உள்மனம் வாதிடுகிறது. ஆனால் கதை படிப்பவர்கள் மனதில் ஒரு சோம்பேறி கட்டும் சப்பு கதையாகவே அது படுகிறது. கிட்டதட்ட ஐம்பது வயது வரை எதுவும் செய்யாமல், அம்மாவின் மறைவுக்கு பின் வேறு வழியில்லாமல் செய்யும் வேலை, எனவே…

காஃப்காவின் நாய்க்குட்டி – மஜ்ஜையின் ருசி

ஒன்றுடன் ஒன்று முற்றிலும் வேறுபட்ட கதையாக அமைந்தாலும் அவர்களது வாழ்க்கை லட்சியம் ஓருடலாக்குகிறது. அவர்களது வாழ்விலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பக்கங்களை அடுத்தடுத்த பகுதிகளாகப் படிக்கும்போது நமக்கு எந்தவிதமான குழப்பமும் ஏற்படுவதில்லை. சொல்லப்போனால் நித்திலா வாழ்வில் வரும் சிறு வெளிச்சம் ஹரிணியின் வாழ்வைக் காட்டுகிறது. நித்திலாவுக்காக மொழிபெயர்ப்பாளராக வரும் ஹரிணியின் போராட்டம் அவளது அம்மாவுடனான சங்கமத்துக்கு உதவுகிறது. அம்மாவிடம் கொஞ்சமும் உதவி கேட்கக்கூடாது எனும் வீறாப்புடன் வாழ்ந்து வருபவள் நித்திலாவின் விசா சிக்கலுக்காக நாடு கடத்துவதைத் தவிர்ப்பதற்காக எலிஸெபத்துடன் பேசத்தொடங்குகிறார். ஹரிணியின் அம்மாவோடு ஒரு புது பிணைப்பு உருவாகிறது.

வெங்கட் சாமிநாதன் – தொடரும் பயணம்

This entry is part 34 of 72 in the series நூறு நூல்கள்

சில விமர்சகர்கள் போல வெ.சா. எந்த காலத்திலும் தனது கருத்துகளை மாற்றிக்கொள்ளவில்லை என்பது அவரை இறுகிய சட்டகத்துக்குள் அடைக்கும் முயற்சி. மரபார்ந்த அணுமுறையில் சென்றதால் தனது இறுதி காலத்தில் இந்துத்துவத் தரப்பை முன்வைப்பவராக சிலரால் அடையாளம் காணப்படுகிறார். இது ஒரு குறுக்கல்வாதமாகத் தோன்றுகிறது. தனது காலத்தில் வெ.சா. அடையாளப்படுத்திய விழுமியங்களைத் தொடர்ந்து கவனிக்கும்போது இது எத்தனை மேலோட்டமானப் பார்வை என்பது தெளிவாகிறது. தெருக்கூத்து மற்றும் பாவைக்கூத்தின் மாற்றங்களின் கலை அனுபவம் ஐரோப்பிய நவீனத்துவ பாணியில் தொடங்கி பார்ஸி நாடகக் கூறுகளை ஒத்திருப்பதை அவதானித்து ஒரு மரபுத் தொடர்ச்சியைச் சுட்டிக்காட்டுகிறார்

எமர்ஜென்சி நாட்குறிப்புகள் – பி.என்.டாண்டன்

பிஷன் நாராயண் டாண்டன் எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி அலுவலகத்தில் துணை செயலாளராகப் பணியாற்றியவர். அக்காலகட்டத்தில் பிரதமரின் செயலாளர் குழு (Prime Minister’s Secretariat (PMS)) எனும் அமைப்பாக இது இயங்கி வந்தது. அக்குழுவின் துணை செயலாளராகக் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் அரசியல் துறையில் ஈடுபட்டு வந்தார் டாண்டன். ஆகஸ்ட் 16, 1975 முதல் ஜூலை 24, 1976 வரை கிட்டத்தட்ட அன்றாடம் நாட்குறிப்பு எழுதி வந்திருக்கிறார்.

பீமாயணம் – தீண்டாமையின் அனுபவங்கள்

ரயில் பாம்பாகிறது. அச்சுறுத்தும் கோட்டை சிங்கமாகிறது. பாபா சாஹேப் அம்பேத்கரை வரவேற்கும் மக்களுடைய மகிழ்ச்சியானது சிரிக்கும் முகங்களாக அல்லாமல் நடனமாடும் மயிலாக இருக்கின்றன. ஒரு தலித், ஒரு கிணற்றைத் தோண்டியதற்காக கொலை செய்யப்பட்டதும், இரண்டு பசுக்கள் சாட்சியாக இருக்க அவன் பயன்படுத்திய புல்டோசர் அழுகிறது. வீடு வாசலற்ற அம்பேத்கர் பரோடாவின் தோட்டத்தில் தன் தலைவிதியை ஆழ்ந்து யோசித்துக்கொண்டிருக்கையயில் அவர் தோட்டமாக ஆகிவிடுகிறார்.

'அருந்தவப்பன்றி' – சுப்பிரமணிய பாரதி

1896ஆம் ஆண்டு எட்டையபுர சமஸ்தானத்தின் ஆசுகவியாக இருந்த பாரதி தனது பதவியிலிருந்து விலக நேர்கிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்றாலும், சின்ன சங்கரன் கதையில் பாரதியே விளக்குவதுபோல, ஜமீனின் சின்னத்தனமான வாழ்வின் மீதான ஒவ்வாத்தன்மையே அவரை அங்கிருந்து துரத்தியிருக்கிறது. சரசப் பாட்டுகளும், விடலை துணுக்குகளும், சித்தம் கலங்கச் செய்யும் லேகியங்களும் தன்னை கீழ்மையை நோக்கித்தள்ளுவதை பாரதி உணர்ந்திருக்கிறார். தேச விடுதலை, மனித சமத்துவம், பெண்ணுரிமை எனும் உயரிய சிந்தனைகளைப் பேணுவதற்கு ஜமீன் சரியான இடமல்ல என்பதால் நிரந்தர ஊதியத்துக்கு உத்தரவில்லாத ஆசிரியர் பணியை ஏற்றுக்கொண்டார். தனது முழுமையை அங்கும் அவர் அடையவில்லை என்பதனால் மனவிரக்தியுடன் காசிக்குச் சென்றார்.

சுமித்ரா – அந்தம் இல் மனம்

சுமித்ரா தனது வாழ்வைப் பற்றி ஒரு கதையோ கடிதமோ எழுதியிருந்தால் அது “மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்” போலத்தான் இருக்கும் எனவும் தோன்றியது. சுமித்ராவை விட சற்று கறாரான தர்க்கப் பார்வை கொண்டவள் மறியா. மற்றபடி சுமித்ரா தனது வாழ்வின் பக்கங்களை எழுதப்புகுந்தால் அது மறியாவின் அக உலகோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும். மறியா கலிஃபோர்னியாவில் வேறுவித சமூக யதார்த்தத்தோடு வாழ்வதால் தன்முனைப்போடு அவளது உலகோடு போராடுகிறாள். சுந்தர ராமசாமியும் தீவிரமான தர்க்கத்தோடு அதை ஆராய்கிறார். ஈரம் மிகுந்த வயநாட்டுப்பகுதியில் வாழும் சுமித்ராவுக்கு தடைகள் சமூக யதார்த்தத்தளத்தைச் சார்ந்தவை. கல்பட்டா நாராயணன் அதை கதை நெடுக உணர்த்திச் செல்கிறார். சுமித்ரா மற்றும் மறியாவின் அகப்போராட்டங்களை கவனிக்கும்போது பெண்களின் கருணையும் கனிவும் காலத்தையும் இடத்தையும் மீறிச் சென்று எல்லையற்ற அந்தரங்க உலத்தைத் தம்முள் கொள்ளும் சக்தி படைத்தனவாகத் தெரிகின்றன.

பி.கே.எஸ். ஐயங்காரின் அதிமானுட யோகா முறைகள்

யோகா பயிற்சிகளை அமெரிக்காவுக்கு ஏற்றவாறு மாற்றினார். “குரு ஒரு மாணாக்கருக்கு பல வருடங்கள் சொல்லிக்கொடுக்கும் பயிற்சியாக இருந்ததை ஒரு வகுப்பின் பல மாணவர்களுக்கு ஒரே சமயத்தில் சொல்லிக்கொடுக்கும் பயிற்சி மையமாக மாற்றியவர் ஐயங்கார்”, என்றார் ஷுமாக்கர். வளைய சிரமப்பட்ட மாணவர்களுக்கென நவீன முறை பயில் சாதனங்களாக பட்டா, தட்டைகட்டை, கயிறுகள், கற்கள், சின்ன மரத்துண்டுகள் போன்றவற்றைக் கொண்டு சுலபமாக்கினார். ஹிப்பிக்கள் நிரம்பிய 1970களில் கூட அவர் பொது ஜனங்களுக்கான பயிற்சிகளை மட்டுமே சொல்லிக்கொடுத்தார்.

குட்டி ரேவதி சந்திப்பு – பிரிவினை கோஷங்களும் முற்போக்கு அரசியலும்

லண்டன், பெர்லின் போன்ற இடங்களில் வாழும் தமிழர்கள் இந்திய மூலப்பண்பாடு பற்றிய அவதூறு கோஷங்களை மட்டுமே எழுப்பும் இப்படிப்பட்ட கூட்டங்களினால் குழம்பிப்போகிறார்கள். ஐரோப்பிய நாகரிகத்தையும் தழுவிக்கொள்ள முடியாது எனும் நிதர்சனம் ஒரு புறம், சொந்தப் பண்பாடு பற்றி அறிவிலிக் கருத்துரைகள் மறுபுறம் என கொஞ்சம் கலை இலக்கிய ஆர்வம் இருப்பவர்களையும் இப்படிப்பட்ட கூட்டங்கள் துரத்திவிடுகின்றன.

நடீன் கோர்டிமர் [1923 – 2014]

காலனியாதிக்கத்தின் கோரப்பிடிப்பிலிருந்து விடுபட்ட கருப்பின மக்களின் சிக்கல்களைப் பேசுவதாகட்டும், ஆப்பிரிக்க நாட்டுப் பிரஜைகளிடம் எஞ்சியிருந்த பழக்கங்களையும் திரிபுகளையும் எதிர்கொண்ட நவீன மனிதனின் பார்வையைச் சித்தரிப்பதாகட்டும், காலனியச் சிறையில் தமது இறக்கைகளை இழந்த நவீன பெண்களின் நிலையை விவரிப்பதாகட்டும் நடீன் கோர்டிமர் ஒவ்வொரு வகையான வாழ்வைப் பற்றியும் மிக விரிவாகப் பதிந்துள்ளார்.

லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் நேர்காணல்

ஒரு புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு மொழியாக்கம் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. மூல ஆசிரியரின் சொற்சித்திரங்கள் எனக்குப் பழக வேண்டியது மிக அவசியம். எல்லாவிதமான படைப்புகளையும் ஆங்கிலத்து மொழிமாற்றம் செய்கிறேன் என்றாலும், மெளனியின் படைப்பு அமைதிக்கும், அம்பையின் படைப்பு ஆழத்துக்கும் வித்தியாசம் இருக்குதானே? ஆங்கிலத்தில் படிக்கும்போது இந்த வித்தியாசத்தை வாசகரிடம் கடத்த வேண்டியது அவசியம்.

நார்வே பயணம் – 2

ஐரோப்பாவின் ஒவ்வொரு ஊருக்குச் செல்லும்போது சரித்திரத்தின் நிழல் எந்தளவு நீண்டுள்ளது எனத் தெரிகிறது. கால்களுக்குக் கீழே நகரும் பூமித்தட்டுகள் போல ஒவ்வொரு மனித வளர்ச்சி யுகமும் பலவற்றை நினைவில் வைத்திருக்கும் அதே நேரத்தில் சிலதை மறக்க முயல்கிறது. ஆனால் மீண்டும் மீண்டும் நகரங்கள் புத்துயிர்ப்பு பெற்று எழும்போது, நமது ஞாபகங்கள் நம்மை ஏமாற்றுகின்றன என்றே தோன்றுகிறது. கண்ணுக்குள்ளே இருக்கும் குருட்டுப்புள்ளியைப் போல சில காட்சிகளை நம் நினைவு ஓரங்கட்டிவிடுகிறது போலும்.

நீலப்பனியைத் தேடி – 1

பக்கத்து வீடு ஐம்பது மைல்கள் என்பதைப் போல அருகில் மலைகளைத் தவிர எதுவும் இல்லை. அரைவிழிப்பு நிலையில் சத்தம் வந்த திசையைக் கண்டுபிடிக்கச் சிறிது நேரம் ஆனது. தூரத்தில் தெரிந்த மலையிலிருந்து கார் அளவிலான பனிப்பாளங்கள் உடைந்து விழுந்தபடி இருந்தன. நாங்கள் சென்றிருந்த பருவம் அப்படி. எங்குத் திரும்பினாலும் மண் நிறத்திலான மலைகள் பனிப்போர்வையை உதறியபடி இருந்தன.

ஷேமஸ் ஹீனி (Seamus Heaney:1939-2013) – மண் கரைசலின் வாசம்

அயர்லாந்து நாட்டுக் கவிஞர் ஷேமஸ் ஹீனி தனது சிறுவயது அனுபவங்களைப் பற்றி சொல்லும்போது, ` இக்காலகட்டத்து நவீன உலகுக்கு என்னுடைய சிறு ஊரின் அனுபவங்கள் பழசானவை, தேவையற்றவை என நினைத்திருந்தேன். நான் எழுதத்தொடங்கியபோது சிற்றூர்களின் அனுபவ அறிவு கவிதை உலகுக்குள் நுழையத் தொடங்கிய காலம். டெட் ஹ்யூஸ், ராபர்ட் ஃப்ராஸ்ட் ஆகியோரின் கவிதைகளிலிருந்து இந்த நம்பிக்கையை நான் பெற்றிருந்தேன். அந்த அனுபவங்கள் அளவிடமுடியாத சொத்து என்பதை பின்னர் உணர்ந்தேன், ` என்கிறார்.

கனவுகள் மீதூரும் பாதை

நாடகம் நடந்துகொண்டிருக்க என் மனம் மீண்டும் மீண்டும் அரங்கின் வடிவை வியந்தபடி இருந்தது. சுற்றிலும் பிரம்மாண்ட சுவர்கள் கிடையாது, தடுப்புகளும், விளம்பர பட்டிகளும், ஒலிப்பெருக்கிகளும் இல்லை. மலை உச்சியிலிருந்து கடலைப் பார்ப்பது போல நாங்கள் எல்லாரும் உட்கார்ந்திருக்கிறோம். மலையைச் சற்றே கவிழ்த்தால் போதும் நாங்கள் உருண்டு கடலில் கலந்துவிடுவோம். அப்படி வழித்தெடுக்கப்பட்ட இடத்தில் அரைவட்ட வடிவில் ஒரு அரங்கை அமைக்க ரொவீனாவுக்கு எப்படி எண்ணம் வந்தது?

தந்தியிசையில் புதிய பாய்ச்சல் – வி.எஸ்.நரசிம்மனுடன் ஓர் உரையாடல்

என்னைப் பொருத்தவரை, பல மேதைகள் உருவாக்கிய நமது கர்நாடக இசையின் அழகை நான் அப்படியே பின்பற்றுகிறேன். பாடல்களின் பாவத்திலோ, வரிகளின் அர்த்தத்திலோ நான் எதையும் மாற்றுவதில்லை. நமது இசையின் அழகை மெருகூட்டுவதற்காக அதே உணர்வுகளை மேம்படுத்தக்கூடிய வகையில் மேற்கிசைக் கூறுகளை இணைக்கிறேன். இதனால் நமது இசையின் அழகு கூடுகிறதே தவிர குறைவதில்லை.

நெடுங்காலமாகத் தொடரும் அரண் – ராபர்ட்டோ பொலானோ

ராபர்ட்டோ பொலானோவைப் பொறுத்தவரை கவிஞர்களது உலகம் என்பது ஒரு உயிருள்ள மிருகம் போன்றது. ஆயிரம் கைகளும், பல்லாயிரம் சிந்தனைகளும் ஒன்றாக இயங்கி ஒரே இலக்கை நோக்கி பயணம் செய்யும் இயந்திரம். கவிதையின் உள்ளடக்கமும் உருவமும் அதில் மட்டும் முடிவதில்லை. கவிஞனின் உலகத்துள்ளும் ரசனையின் மிச்சங்கள் அடங்கியுள்ளன.