இந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு சந்திப்பு

‘அஞ்சிறைய மட நாராய்’ என்று திருவாய்மொழியில் ஒரு பாட்டு வரும். தலைவி தலைவனிடம் சொல்கிறாள். அவர்கள் களவொழுக்கத்தில்தானே ஈடுபடுகிறார்கள்!? பராங்குச நாயகி என்று சொல்வார்கள். ‘நாயிக பாவம்’ என்று சொல்வார்கள் அல்லவா? இது பக்தி வெளிப்பாட்டின் இன்னொரு அம்சம். கடவுள்தான் நாயகன். பக்தர்கள் எல்லோரும் நாயகிகள். சங்க இலக்கியத்தில் இருந்து (பிரபந்தத்தில்) இது தொடர்கிறது. இந்தப்பாடலில் இறைவனுக்கு தூது அனுப்புகிறாள் தலைவி.

எண்மக் காலத்தில் பெண்ணிய ஆவணப்படுத்தலும் நெறிமுறைகளும்

புகைப்படங்கள், வாய்வழி வரலாறு, நேர்காணல்கள், கதைகள், மேடைப் பேச்சுகள், டயரிக் குறிப்புகள், கடிதங்கள் இப்படிப்பட்டவைகளால் சித்திரிக்கப்பட்ட சமூகச் சரித்திரம். இவற்றைச் சேகரிக்கும்போது நான் பெண்களிடம் செய்த நேர்காணல்களை ஒலிப்பேழையில் பதிவு செய்தேன். என் நெருங்கிய தோழி ஒருத்தி, டாக்டர் ஜெரால்டின் ஃபோர்ப்ஸ் என்றிருக்கிறார். அவரும் அமெரிக்காவிலிருந்து இந்தியப் பெண்களைக் குறித்து இத்தகைய ஆராய்ச்சி செய்து வருகிறார். அவரை நான் 1972 வாக்கில் சந்தித்தேன். இந்தத் தரவுகளை எப்படி ஒழுங்குபடுத்துவது, எங்கே வைப்பது என்பது பற்றிப் பேச ஆரம்பித்தோம்.