வர்க்கப் பேதங்களுடைய சமூகத்தில், தொழில் வளர்ச்சிகளின் காரணமாகச் சமூகச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. பொருளாதாரக் காரணங்களினால் குடும்ப வாழ்க்கை நிலை குலைகின்றது. அடிப்படையில், பிரபுத்துவ சமூக அமைப்பை உடைய ஒரு சமுதாயத்தின் மீது, தொழில் யுக வாழ்க்கைக்குரிய மதிப்புக்கள் சுமத்தப்படும்போது, முரண்பாடுகள் மேலோங்குகின்றன. வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுவதிலும், போலிப் பரவசங்களிலும், விளையாட்டுக்காகச் செய்யும் வன்முறைகளிலுந்தான் தங்களை நிரூபித்துக் கொள்ள முடியுமென்று இளைஞர்கள் கருதுகிறார்கள். அவர்களுக்கு நிறையக் கோபம் இருக்கிறது. யார் மீது என்றுதான் அவர்களுக்குப் புரியவில்லை; ‘
Author: இந்திரா பார்த்தசாரதி
பஞ்ச் லைன்
இரவு நேரங்களில் படுத்ததும், அவள் அவன் முகத்தைப் பார்த்ததேயில்லை. விளக்கை அணைத்து விட்டுத்தான் அவன் படுக்க வருவான். அவன் அவளை நெருங்கும் நேரம் அநேகமாய், புலர்ந்தும் அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது கூட அவளுக்குத் புலராத விடியற்காலை தான். அவள் பாதித் தூக்கத்தில் இருப்பாள். தெரியாது. ஒரு மூட்டையாய் அவன் பக்கத்தில் மல்லாந்த பிறகுதான், என்ன நடந்தது என்பது அவளுக்குத் தெரியும். இந்த விஷயங்களில் அவளுடைய விருப்பு, வெறுப்புகளைப் பற்றி அவனுக்குக் கவலையே கிடையாது.
கன்னி
‘எனக்கு அய்யங்கார் தெரு, ஒரிஜனல் அய்யங்கார். இந்த மடிசார் வேஷமில்லே. நான் எப்பொவும் கட்ற கட்டு. அதோ நடிக்கிறாளே உங்க கதாநாயகி, அவ மடிசார் கட்டி விடறதுக்குன்னே ஒருத்தியைக் கூட்டிண்டு வரா. அவ, அவளுடைய சிநேகிதி… பெரிய்ய அய்யங்கார் குடும்பந்தான். சினிமாக்காரிக்கு மடிசார் கட்டி விடறதிலே அவளுக்கு அலாதி பெருமை…! அவ போட்டோ வார பத்திரிகையிலே வருமே! அவளையும் எவனாவது ஒரு மடையன் பேட்டி கண்டு அசட்டு பிசட்டுன்னு எழுதமாட்டானா? இதை படிக்கன்னு காத்திண்டிருக்கே ஒரு கூட்டம்…”
மீண்ட தெய்வம்
”நம் நாட்டின் பழம் புலவர்கள் ஆண்-பெண் உறவுகளைப் பற்றி எந்தவிதக் கூச்சமுமின்றிக் கூறியிருப்பது ‘ஆபாசமாக’ நமக்கு இப்பொழுதுபடுகிறதென்றால், அதற்குக் காரணம், மேல்நாட்டு மரபை ஒட்டிய ‘குற்றமனப்பான்மை’ நம்மையும் பாதித்திருப்பது தான் ஈடன் தோட்டத்தில் மனிதன் செய்த குற்றத்தினால் விளைந்தது மனித சமுதாயம் என்ற பாவ உணர்ச்சியை, பாரம்பரியமாக தாங்கிவரும் மேல்நாட்டுப் பழம்பெரும் இலக்கியங்களில் இந்தக் ‘குற்ற மனோபாவம்’ பிரதிபலிக்கக் காணலாம்.
சூசைம்மாவும் அத்வைதமும்
மூன்று நிமிஷம் நாற்பது வினாடிக்குள் அவ்வறையை விட்டு வெளியே அலறிக் கொண்டு ஓடி வந்தாள், கதவைப் படீரென்று சாத்திக் கொண்டே. அவள் போட்ட கூப்பாடு, நீண்ட தாழ்வாரம் வழியாகச் சென்று கொண்டிருந்த மூன்று நர்ஸ்கள், சிகிச்சை பெற்று வந்தவர்களை பார்க்க வந்த நாலு பார்வையாளர்கள், இரண்டு டாக்டர்கள் ஆகியோரை ஸ்டில் புகைப்படங்களாக்கியது.
புலி வேட்டை
‘நமது பிரதிநிதி மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமெரிக்கர்களின் தூண்டுதல் தான் காரணம் என்று ஒரு குற்றச்சாட்டு வந்திருக்கிறது . இதுபற்றிப் பார்லிமென்டில் கேள்விகள் எழலாம். நாம் முன்ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும். ஆப்பிரிக்கப் புலியைக் கொல்லுவதற்கு இந்தியாவுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று பாகிஸ்தான் வேறு பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டது. இதனால் கொதித்தெழுந்த மற்றைய ஆப்பிரிக்க நாடுகள் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடங்கி விட்டன. கன்யாவில் இருந்து இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். மோஷ்லாமே நாட்டோடு நமக்கு உணவு ஒப்பந்தமொன்று கையெழுத்தாக இருக்கிறது . “
வாசகர் பொறுப்பு
கம்பனுடைய காலத்துக்குப் பிறகு ஏற்பட்ட உரையாசிரியர்களை, சிருஷ்டி நூல்கள் ஒன்றும் இயற்றவில்லை என்ற காரணத்துக்காக ஒதுக்கிவிட முடியாது. வைஷ்ணவ நூல்களுக்கு (பிரபந்தம்) வியாக்கி யானம் செய்தவர்களைக் காட்டிலும், அவர்கள் காலத்துக்கு முன்னாலும் யாரும் ஒன்றும் சாதிக்கவில்லை; இனிமேலும் சாதிக்க முடியாது. தங்களுடைய பரந்த சமஸ்கிருத அறிவைத் தமிழின் எல்லை கண்ட புலமையோடு இணைத்து இவர்கள் ஆற்றியுள்ள அற்புதங்களுக்கு ஈடு உலக இலக்கியத்திலும் காணமுடியாது.
‘ககனப் பெரு வீதியில்’
சந்திரனில் முதல் மனிதனை இறக்குவது என்பது இப்பொழுது பிரச்னை அல்ல, அகண்ட வெளியில் ஆங்காங்கு ‘ஸ்பேஸ் நிலையங்கள்’ நிறுவி, இன்னும் பல வெற்றிகளைக் காண வேண்டும் என்பதுதான் விஞ்ஞானிகளுடைய லட்சியம். சந்திரனுக்கு அப்பால் செவ்வாய் சுற்றிவர இரண்டு ‘மாரினர்கள்’ அனுப்ப திட்டம் வகுத்திருக்கிறார்கள். செவ்வாயில் ஒரு வகையான தாவர உயிர் வர்க்கம் இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். செவ்வாயின் சுற்றளவும் பூமியில் பாதி. அதன் புவியிர்ப்பு சக்தி பூமியைக் காட்டிலும் மிகவும் குறைவு. பூமியில் ஆறடி உயரம் தாண்ட முடிந்தவன், செவ்வாயில் 16 அடி தாண்டலாம். பூமியில் 220 பவுண்டு எடை உள்ளவன், செவ்வாயில் 80 பவுண்டுதான் இருப்பான். செவ்வாயில் சராசரி சீதோஷ்ண நிலை எப்பொழுதும் பூஜ்யத்துக்குக் கீழேதான் இருக்கும்.
காலம் வென்ற கவிஞர்கள்
வியக்கத்தக்க செயல் புரியும் எவரைப் பற்றியும் கற்பனைக் கதைகளும் கருத்துக்களும் எழுவது இயல்புதான் என்பது உலக வரலாற்றுச் செய்தி. நம்நாட்டிலும் காளிதாசனைப் பற்றியும், கம்பனைப் பற்றியும் எத்தனை கட்டுக்கதைகள் உள்ளன! மேல் நாடுகளில் அதீத கற்பனையில் நம்பிக்கை இல்லாத காரணத்தால், ஷேக்ஸ்பியர் நாடகங்களை இன்னொருவர் எழுதியிருக்கக் கூடுமென்று கூறுகிறார்கள்; அதீத கற்பனைகள் நிறைந்த நம்நாட்டில் கல்வியறிவில்லாத காளிதாசனுக்குக் காளியின் அருள் கிடைத்ததென்று கூறுகிறோம்.
தோற்காத கடவுள்
அம்பையைப் பற்றி இந்திரா பார்த்தசாரதி எழுதிய குறிப்பு
