தமிழ் நாடகப் படைப்புலகில் இந்திரா பார்த்தசாரதியின் புதிய தடம்

இலக்கிய வாசிப்பு பழக்கம் இல்லாத நானும் அம்மாவும் இந்திரா பார்த்தசாரதி ஒரு ‘அம்மா ‘ என்றே நினைத்திருந்தோம். ஆனால் கதவைத் திறந்த அந்தப் பெரியவர், ‘ இந்திரா பார்த்தசாரதி அம்மா இல்லை, அப்பா ! ‘ என்று சற்றே கடுமையான அன்போடு சொன்னார். மேலும் புதுவைப்பல்கலைக்கழகத்தின் நூலகம் ராம் இன்டர்நேஷனல் கட்டிடத்தில் இருப்பதாகவும் அங்குதான் உன் ஆசிரியர் இருக்கிறார், உங்களுக்கு அங்குதான் நேர்முகத் தேர்வு நடக்கப் போகிறது என்று வழிகாட்டினார். அந்த பெரியவர் புகழ்பெற்ற இலக்கிய மேதை ஒருவரான க.நா. சுப்பிரமணியம் என்பதை பின்னாளில்தான் தெரிந்து கொண்டேன்.