பஞ்சவர்ணம்

இளமை நெடுக இயற்றிய கொடும்பாவங்கள் தனக்கு மிகக்குரூரமான மரணத்தை விளைவிக்குமோ என்கிற ஆழ்மன அச்சத்தைப் போக்கும்பொருட்டு ஆன்மீகக் கடலில் கழுத்துவரை மூழ்கியிருந்த அவர் இதுபோன்ற உலகியல் சச்சரவுகளை அறவே வெறுப்பவராக அப்போது மாறியிருந்தார். அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டுவிட்டதை உணர்ந்துகொண்ட சிதம்பரநாதனின் இளமனம், எஞ்சியிருந்த ஒரே வாசலினுள் தன்னைச் சுருட்டிக்கொண்டு நிரந்தரமாக முடங்கியது.

கூடடைதல்

புழுக்கம் மிகுதியாக இருந்ததால் அப்பா அன்று சட்டை அணிந்திருக்கவில்லை. திண்ணை விளிம்பில் மடித்துவைக்கப்பட்டிருந்த தினசரி அருகே உள்ளங்கையளவு ரேடியோவில் இருந்து சன்னமான இசை கேட்டுக்கொண்டிருந்தது. அவருடன் அமர்ந்திருந்த அம்மா வெந்த பனங்கிழங்கை சிறு சிறுத் துண்டுகளாக நொடித்து அவர் கையில் வைத்துக்கொண்டிருந்தாள். மெனோபாஸை நெருங்கிக்கொண்டிருந்த அவளது வலதுமூட்டில் நிரந்தமான “கூடடைதல்”

பலூன்

சாந்தியின் கவனம் முழுவதும் கீழே அனாமத்தாய் கிடந்த அந்த பொம்மை வாகனத்தின் மீதே இருந்தது. மேசைமேல் வைத்திருந்த செல்போன் திடீரென அதிர்ந்ததும் ஒருவித ஆர்வத்துடன் அதை எடுத்தாள். ஆனால் திரையில் கடம்பூர் சித்தியின் பெயரைப் பார்த்ததும் உச்சுக்கொட்டிவிட்டு அதை அப்படியே கீழே வைத்தாள்.

ஜீவநதி

தனிமைக்கூட்டினுள் உடல் ஒடுக்கி வாழும் நோயுற்ற  பட்சியென பின்வந்த நாட்களில் மாறிப்போனாள் சிவகாமி கிழவி. தெருவாசிகளும் அவள் விழிகளைச் சந்திப்பதை ஏனோ தவிர்க்கத் துவங்கினர். ஆனாலும் கிழவி இறப்பது வரை அங்கு நடந்தேறிய அனைத்து சுபநிகழ்வுகளும் அவளது ஆசியுடனே துவங்கியது. அவளும் ஒவ்வொருவரையும் கண்களில் நீர் வழிய மனதார வாழ்த்தி வந்தாள்.

நிழல்களின் ஓலம்

முகப்புக் கண்ணாடியில் படர்ந்திருந்த நீர்திவலைகளின் நிழல்கள் தனது புறங்கைமேல் புள்ளிகளாய் அதிர்வதை, புழுக்களாய் நெளிவதைக் கண்ட முத்தப்பன் அரைக்கணம் விழிமூடி பெருமூச்செடுத்தான். பிறகு அவர் யாராக இருந்தாலும், அவரது நோக்கம் எத்தனை இருண்டதாக இருந்தாலும், இந்த சில நிமிடங்களை சகித்துக்கொள்வதே உகந்தது என்கிற முடிவை நிர்மாணித்து ஸ்திரப்படுத்திக் கொண்டான். இவரையும், இச்சூழலையும் விட்டு அகன்ற கணமே அகத்தின் அனைத்து நமைச்சலும் மறைந்துவிடும்.

சிறகடிப்பு

கொஞ்சம் தேறிக்கொண்டு வந்த குழந்தை மீண்டும் பிரமை பிடித்ததைப்போல் ஒடுங்கிக்கொண்டு வெடவெடக்க ஆரம்பித்தது. சிஸ்டர் ஒருத்தி அதை எழுப்பி தன்னோடு அணைத்துக்கொண்டு ஓரமாக நின்றுகொண்டாள். நானும் தோழியும் சேர்ந்து மூக்காண்டியை சமாதானப்படுத்தி அமர்த்தி விஷயத்தை எடுத்துச் சொன்னோம். ஆனால் எதுவும் அவருக்குள் நுழையவேயில்லை. வரம்பை மீறிய வசைச்சொற்களை முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்.