தரவு ஏக்கம்!

This entry is part 1 of 1 in the series தரவு ஏக்கம்

புறநகர் ரயில் நிறுவனம் போல, இன்னொரு அமைப்பு, நான் வசிக்கும் ஊரின் அரசாங்கம். இவர்களது ஒரே குறிக்கோள், வருடம் ஒரு முறை சொத்து வரியை உயர்த்துவது. அதுவும் சில வருடங்கள், முந்தைய வருடத்தை விட 10% -க்கு மேல் உயர்த்துவது. ரயில் நிறுவனம் போல, இவர்களிடம் என்னைப் பற்றிய அனைத்து விவரங்களும் உண்டு. வருடம் ஒரு முறை ஒரு அறிக்கையை அனுப்புவார்கள். அந்த அறிக்கை வருவது, வயிற்றில் புளியைக் கரைக்கும் விஷயம். இதுவரை நான் கட்டிய வரிக்கு நன்றி என்று ஒரு வருடம் கூடச் சொன்னதில்லை.