தரவு ஏக்கம்!

This entry is part 1 of 4 in the series தரவு ஏக்கம்

புறநகர் ரயில் நிறுவனம் போல, இன்னொரு அமைப்பு, நான் வசிக்கும் ஊரின் அரசாங்கம். இவர்களது ஒரே குறிக்கோள், வருடம் ஒரு முறை சொத்து வரியை உயர்த்துவது. அதுவும் சில வருடங்கள், முந்தைய வருடத்தை விட 10% -க்கு மேல் உயர்த்துவது. ரயில் நிறுவனம் போல, இவர்களிடம் என்னைப் பற்றிய அனைத்து விவரங்களும் உண்டு. வருடம் ஒரு முறை ஒரு அறிக்கையை அனுப்புவார்கள். அந்த அறிக்கை வருவது, வயிற்றில் புளியைக் கரைக்கும் விஷயம். இதுவரை நான் கட்டிய வரிக்கு நன்றி என்று ஒரு வருடம் கூடச் சொன்னதில்லை.

தகவல் இளக்காரம்

This entry is part 2 of 4 in the series தரவு ஏக்கம்

இவர்கள் சொல்வது என்னவென்றால், இரண்டு வருட ஒப்பந்தம் என்று இருந்தால், ஒப்பந்தத்தின் கடைசி 6 மாதங்களில், தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இவர்களை அழைத்து, புதுச் சலுகைகள் ஏதாவது உள்ளதா என்று நச்சரிக்க வேண்டும். இல்லையேல் உங்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால், மறக்காமல், மாதா மாதம் பில்லை மட்டும் கட்டி விடுங்கள். பில்லைக் கட்ட அவர்களது இணையதளத்திற்குச் சென்றால், உங்களது மின்னஞ்லைக் கொடுத்தவுடன், அனைத்து விஷயங்களும் மாயமாக, உங்கள் முன் நொடிகளில் காட்டப்படும்.

மார்க் & ஜெஃப்: தரவின் தோழர்கள்

This entry is part 3 of 4 in the series தரவு ஏக்கம்

அதே போல, என்னைப் பற்றிக் கவலைப்படும் இன்னொரு நபர் ஜெஃப். முதலில் இணையத்தில் புத்தகக்கடையைத் திறந்த ஜெஃப், மெதுவாக, அதை ஒரு பல்சரக்குக் கடையாக மாற்றினார். அவர், எந்த நாட்டில் வியாபாரத்தை விரிவுபடுத்த நினைத்தாலும், ஒரே எதிர்ப்புதான். நான் அமேஸான் பற்றிதான் சொல்கிறேன். எனக்கு ஜெஃபை தெரியாது. ஆனால், அவருக்கு என்னை நன்றாகத் தெரியும்! சற்று தலைகீழாக இருப்பது போலத் தெரியும் – இளையராஜாவுக்கு என்னைத் தெரியும், ஆனால் எனக்கு அவரைத் தெரியாது என்பதைப் போல!

திறன்பேசி என் சிறந்த நண்பன்

This entry is part 4 of 4 in the series தரவு ஏக்கம்

பொறுப்பற்ற வாழ்க்கை நடத்தும் இளம் பெண் என்று கடிந்து கொள்ள வந்த என்னை, ‘தனியாக, பல விஷயங்களையும் எப்படித்தான் சமாளிக்கிறாளோ’ என்று நினைக்க வைத்து விட்டது. ஒருவருடன் பேசி அவர்களை மாற்ற முயற்சிக்கலாம். ஆனால், என் திறன்பேசியோ பேச வந்த என்னையே மாற்றிவிட்டது. நான் ஒரு கருவியைப் பயன்படுத்தும் மனிதன் என்பதைத் தாண்டி, என் உறவுகள், என் கோபங்கள், என் குறைகள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் நண்பனாக மாறுவது ஒரு விந்தை. இத்தனைக்கும், என்னுடைய மனதில் உள்ள ஆதங்கம், என்னுடைய கோபம் எதையும் என் திறன்பேசியிடம் சொல்லவில்லை