ஜோஸ் முஜிகா – எளிய வாழ்க்கையின்  ஒரு குறியீடு  

பொதுவாக, உலக நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் தங்களுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்தவர்களின் வாழ்க்கை  தரத்திலிருந்து பெரிதும் விலகிச் சென்று,  ஆடம்பரமான அரசு பங்களாவில், அரசு பணத்தைக் கோடிக்கணக்காகச் செலவு செய்து சுகபோகமாக வாழ்வதே இயல்பாக உள்ளது.  இந்நிலைக்கு மாறாக,  தனது வாழ்க்கை தரத்தை  பிற நாடுகளின்  அதிபர்களுடைய வாழ்க்கைத்  தரத்தோடு எவ்விதத்திலும் ஒப்பிட முடியாத அளவிற்கு, எளிய வாழ்வை இன்முகத்துடன் ஏற்றுத் தனது நாட்டின் சாதாரண மக்களைப் போன்று வாழ்ந்து வழிகாட்டியவர் ஜோஸ் முஜிகா.

திருப்பூர் குமரன் என்றொரு தியாக உரு

திருப்பூரில் தொடர்வண்டி நிலையத்திற்கு முன்பக்கம் குமரன் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. 1991 ஏப்ரல் 7ஆம் நாள் ஸ்தூபியின் பின்புறம் குமரன் நினைவு மண்டபம் ஒன்றும் கட்டப்பெற்றுள்ளது. அதனுள், இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 1997 ஆகஸ்ட் 15 அன்று இந்திய விடுதலைப் பொன்விழாவின்போது குமரன் அடிபட்டு வீழ்ந்த நினைவிடம் சீரமைக்கப்பெற்றது.

திருக்கோயில்களில் நவக்கிரகங்களின் அமைப்பு

கோள்களை வழிபடுவது பழைய மரபாயினும் கோள்கள் ஒன்பதையும் ஒருங்கே பீடமேற்றி, ஒன்றாக வழிபடும் முறைமை பிற்கால சோழர்கள் காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்து ஆலயங்களில், குறிப்பாக சிவாலயங்களில் நவக்கிரக சன்னதிகள் பல்வேறு நிலைகளில், வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக, வைதீக மற்றும் ஆகம விதிப்படி இரு வடிவங்களில் நவக்கிரகங்களின் வரிசைகள் அமைக்கப்படுகிறது. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி முதலான ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாகச் சுற்றுகின்றன…