இந்தியத் தொன்மத்தின் மனவெளியில்

This entry is part 2 of 3 in the series ரொபெர்ட்டோ கலாஸ்ஸோ

அனைத்திற்கும் முன்னே வருவது “மனஸ்”. அதற்கோ தான் இருக்கிறோமா இல்லையா என்பதுகூட தெரியாது. ஆதித்தருணத்தின் கடவுள், அதற்கு முதலில் பெயர் கூட கிடையாது, வெறும் “பிரஜைகளுக்கெல்லாம் அதிபதி” என்ற பட்டம் மட்டுமே. ஆனால் இதைக்கூட இந்திரன் பிற்காலத்தில் அதனிடம் “உங்களைப் போல் நான் ஆவதெப்படி” என்று கேட்கையில்தான் அது உணர்ந்து கொள்கிறது.
“ஆனால் நான் யார் (க)” என்ற கேள்வியுடன் பிரஜாபதி பதிலளிகிறார்.
“அதேதான், தாங்கள் தங்களை எவ்வாறு அழைத்துக் கொள்கிறீர்களோ அதுதான் நீங்கள், நீங்கள்தான் யார் (க) ” இந்திரன் பதிலளிக்கிறான். ஆக, பிரஜாபதி “க” வாகிறார்.

காவிய ஆத்மாவைத் தேடி…

This entry is part 1 of 3 in the series காவிய ஆத்மாவைத் தேடி

எதற்குத் தகுதியாக எதைச் செய்தல்? கவிஞன், காட்டும் கற்பனை உலகுக்குத் தக்கதாக மொழியைச் செய்கிறான். தான் கண்ட காட்சியை ரசிகனும் துய்க்க வேண்டிய அளவு அணிகளைச் செய்கிறான். சொல்லவந்த கருத்துக்கும், துய்க்கவந்த ரசிகனுக்கும், மனத்தில் காணும் தனக்கும் தகுந்தபடி மொழியை அவன் செய்யும் பொழுது அங்கு அலங்காரம் பிறக்கிறது. காவிய உலகில் கவிஞனே பிரம்மா. அவன் இஷ்டப்படிதான் படைப்பு. வெளி உலகின் மூல தத்துவங்களையும், முற்ற முடிந்த சித்தாந்தங்களையும் அவன் தன் காவிய உலகைப் படைக்கும் பொழுது…

மான மாத்ரு மேயே மாயே

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான திரு. முத்துஸ்வாமி தீக்ஷிதர் பல அபூர்வ இராகங்களைக் கையாண்டு முத்தான கீர்த்தனைகள் படைத்தவர். மும்மூர்த்திகளில் பாரதத்தில் பெரும்பாலான இடங்களுக்குப் பயணித்தவரும் அவர்தான். அந்தந்தப் பிரதேசத்தின் சிறப்பு இராகங்களைக் கையாண்டு கர்னாடக இசைக்கு ஏற்றவாறு கீர்த்தனைகளை இயற்றினார். அவரது பாடல்களில் ‘குருகுஹ’ என்ற முத்திரையும், பாடப்படும் தெய்வத்தின் மூர்த்தியும், கீர்த்தியும், அந்தத் தலத்தின் வரலாறும், அதன் பூகோள அமைப்பும், அதன் முக்கிய பீஜாக்ஷரமந்திரமும் இடம் பெறும். மேலும், அந்தக் கீர்த்தனை எந்த இராகத்தில் பாடப்பட்டுள்ளது என்பதும் தெளிவாக வந்துவிடும். 

தார்மீக விழிப்புணர்வு யாருக்குத் தேவை – ஹிந்துக்களுக்கா? பா.ஜ.க.வினருக்கா?

ஓ! நாட்டின் வளர்ச்சி முதல் தேவை!. மற்றவையெல்லாம் பிறகுதான் என்றால் நான் கேட்கிறேன்! பாகுபாடுகளை நிவர்த்திப்பது எவ்வாறு வளர்ச்சியைத் தடைசெய்யும்? சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பாகுபாடுகளை நிவர்த்தி செய்வதும் வளர்ச்சியோடு சேர்ந்ததுதானே.

சதி எனும் சதி

சதியைப் பற்றிய காலனிக் கால விவரங்களை அறிய இந்நூல் உறுதுணையாக உள்ளது. அதிலும், இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு எடுத்துச்செல்லும் கிருத்துவ மதத்திற்கு ஹிந்துக்களை கூட்டங்கூட்டமாக மாற்றுவதற்கு எவ்வாறு பாதிரிமார்கள் சதியை உபயோகப்படுத்தினர் என்பது நன்கு விவரமாகிறது.

பரிணாம வளர்ச்சியும் தொல்லெச்சச் சான்றுகளும்

மயசீன் (Miocene) சகாப்தம் கிட்டத்தட்ட முடிவுறும் சமயத்தில், அதாவது, 9.3 மில்லியன் மற்றும் 6.5 மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் நாம், குறிப்பாகச் சிம்பன்ஸி வகைக் குரங்குகளிடமிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கலாம்.

தேகயாத்திரை

Soul – Movie Review வாழ விருப்பமில்லாத ஆன்மாவும் சாக விருப்பமில்லாத உயிரும் சந்தித்துக் கொண்டால்? இறுவாய் குறித்த செவ்விந்தியர்களின் கர்ண பரம்பரைக் கதைகள் எல்லாமே இருவரின் உரையாடலாக அமைந்திருக்கும். அவர்கள் இருவருக்கும் நடுவே வாக்குவாதம் நடக்கும். அதன் வழியே இறுவாயின் எழுபவத்தைச் சொல்வார்கள். கீழே வரும் சம்பவம் “தேகயாத்திரை”

அத்வைதம் மறைந்து கொண்டிருக்கும் வேதாந்தமா?

ரமண மஹரிஷி அவருடைய சீடர்களை விசார சாகரத்தைப் படிக்கவேண்டும் என்று அடிக்கடி சொல்வாராம். அதனுடைய தமிழாக்கத்தை அனுசரித்து ஒரு சிறிய புத்தகத்தையும் அவரே எழுதியுள்ளார்.
பரமாச்சார்யாள் என்று அன்போடு அழைக்கப்படும் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி இப்புத்தகத்தின்மேல் பெருமதிப்பு வைத்திருந்தார் 1964ல் இதனுடைய சம்ஸ்க்ருத மொழிபெயர்ப்பிற்கு முழு ஆதரவளித்தார்.

…என்றார் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி

அவர் குறிப்பாக எதையும் சொல்லவந்தாரில்லை. தன் வார்த்தைகளின் மூலம் யாரிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவோ, எவரையும் மாற்றவோ, நம்பவைக்கவோ முயன்றதில்லை. ”நாயின் மீது கல்லெறிவதுபோல என்மீது கேள்விகளை எறிகிறார்கள். நாய் குரைக்கிறது. நானும் குரைக்கிறேன்! அவர்களோ என் குரைப்பிலிருந்தும் ஏதேதோ அர்த்தம் காண்கிறார்கள்’ என்கிறார்.

தத்வமஸி: புத்தக அறிமுகம்

This entry is part 13 of 72 in the series நூறு நூல்கள்

நடுவுநிலைமையாக இருக்கவேண்டுமானால் வேத காலம் என்பது கி மு 2000 – 2500 என்று கொள்ள வேண்டியிருக்கிறது. பாலகங்காதரத் திலகர் கி மு 4500 என்று கூறுகிறார். அதற்கு முன்பு என்று கூறும் ஆராய்ச்சியாளர்களும் பலர் உள்ளனர்.இந்தியாவில் உருவான அளவு சிந்தனையாளர்களான ஆச்சார்யர்களின் திருக்கூட்டப்பெருக்கம் வேறொரு நாட்டில் இருந்திருக்கவேண்டும் என்று கருதினால், அது கிரேக்கம் மட்டுமே. ஆனால் கிரேக்கத்தில் தேல்ஸ், ஹெராக்ளிட்டஸ் போன்றவர்கள் உண்டாவதற்கு எவ்வளவோ முன்னதாக இந்தியாவில் வாமதேவரும், யாக்ஞவல்கியரும் தோன்றி முடிந்திருந்தார்கள்.

யோகாப்பியாசம்: நன்மை, தீமைகள்

ஆஸ்டியோபதி மருத்துவ மன்றத்தின் யோகத்தைப் பற்றிய அறிக்கையில் குடும்பநல மருத்துவரும் குந்தலினி யோகத்தில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளருமான நெவின் சொல்வதாவது யோகப்பயிற்சியின் முக்கிய அம்சம் உடலைத் திடப்படுத்துவதும் உடலையும் மனதையும் ஒருங்கிணைப்பதுதான் என்கிறார். மேலும் ஆஸ்டியோபதி மருத்துவத்தில் வியாதி வருமுன் தடுக்கும் முறைகளுக்கே முக்கியத்துவம் என்றும் யோகப்பயிற்சியும் அதையே வலியுறுத்துகிறது என்கிறார்.

ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது

தத்துவ ஞானி ஜே கிருஷ்ணமூர்த்தியுடனான தன் அனுபவங்களை விவரிக்கிறார் ஏகாந்தன்

அகவல், அறிவியல், அக உடல்

அவரின் ‘வினாயகர் அகவல்’ ஒரு யோக நூலாகக் கருதப்படுகிறது. 72 வாக்கியங்களுள்ள அது, உடலின் ஒன்பது வாயில்களைக்(7+2=9) குறிப்பிடுவதாக யோக மரபினர் சொல்கிறார்கள். மயில் அகவும்;குயில் கூவும். ஆனால், யோகியருக்கோ ‘வானத்தின் மீது மயிலாடக் கண்டேன், மயில் குயிலாச்சுதடி’எனும் அனுபவம் வாய்க்கிறது. கீழே இணைத்துள்ள பேரா தைராய்டின் அறிவியல் படத்தினை கவனிக்கவும். ‘வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்’. இந்த முகம் காட்டும் குறியீடுகள் பல-கம்பீரம், ஞானம். அதில் சித்தம் கனிந்து செந்தூரமாய்த் திகழ்கிறது.மனிதன் கையால் எடுத்து பின்னர் வாய்க்குள் இட்டு உண்பதைப் போல்,யானையும் தும்பிக்கையால் எடுத்து பின்னர் வாய்க்குள் செலுத்தும்.

உத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்!

சில பேராசிரியர்களிடம் கேட்ட போது, அவர்கள் திருவள்ளுவர் தூக்கம் எனும் சொல்லையும் கையாண்டிருக்கிறாரே என்றனர். அவர்கள் சொன்னது உண்மைதான். ‘வினைத் திட்பம்’ அதிகாரத்துக் குறள் பேசுகிறது,
‘கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்’
என்று. சரிதானே! பிறகென்ன வழக்கு, வியாச்சியம், உச்ச நீதிமன்றத் தலையீடு என்று நீங்கள் கேட்கலாம்! ஆனால் இங்கு தூங்காது என்ற சொல்லுக்கு தாமதிக்காது, கால நீட்டிப்பு செய்யாது, தொங்கிக் கொண்டு கிடக்காமல் எனும் பொருளே தரப்படுகிறது. மனக் கலக்கம் இல்லாமல், தளர்வடையாமல், கால தாமதம் செய்யாமல், வினையாற்றுவதே செம்மையானது என்று பொருள் தருகிறார்கள். …நாஞ்சில் நாட்டுக்காரனும், மலையாளியும் உறக்கம் என்று இன்றும் பயன்படுத்தும் சொல், பிற தமிழ்த் திருநாட்டுப் பகுதிகளில் தூக்கம் என்று பயன்படுத்தப்படுகிறது.

தமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்

இராமன் தான் பாரதத்தின் அடையாளம். பாரத பண்பாட்டின் திருக்கோலம். பாரதம் புகட்டும் ஒழுக்கநெறியின் சிகரம். இராமன் நேபாளம் முதல் இலங்கை வரை நடந்ததால் மொத்த இந்தியாவே புண்ணிய பூமியாக பாரத நாட்டவர்களால் போற்றப்படுகிறது. இராமனின் வரலாற்றை மனித குலம் உள்ளவரை மறைக்கவோ மாற்றவோ மறுக்கவோ முடியாதபடி அவன் திருப்பாதம் பட்ட புண்ணிய தலங்கள் இந்தியா முழுவதும் வரலாற்றுச் சின்னங்களாக பரவிக் கிடக்கின்றன. இராமாயணக் கதை தமிழ் நாட்டில் சங்க காலத்திலேயே அறியப்பட்டிருந்தது என்பதை புறநானுறு 378ஆம் பாடலும், அகநானுறு 70ஆம் பாடலும் நினைவூட்டுகின்றன. பல்லவர்கால பக்தி இயக்கத்தினபோது மாலடியார்கள் மாலவன் மீதான பக்தியைப் பரப்ப இராமகதையினை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர். இராமகாதையில் சித்தரிக்கப்பட்ட நிகழ்வுகள் தமிழ்மக்களின் நினைவுகளில் ரீங்காரமிட்டு, அவர்கள்தம் ஊர்களின் பெயர்களில்- இறை வடிவங்களில்- இறை நாமங்களில்- அவர்கள் காணும் இயற்கை வடிவங்களில் நாள்தோறும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அந்த எதிரொலியின் நாதமே இக்கட்டுரையில் உணரப்படுகிறது.

ஆடல்

பாலசரஸ்வதி, மயிலாப்பூர் கௌரி அம்மாள் போன்ற பல மகத்தான நடனக் கலைஞர்கள் நடனத்தின் ஆன்மிக உச்சத்துக்கு அதைக் கொண்டுபோயிருந்தாலும், அது “கௌரவ” ஸ்திதியை அடைந்தது ருக்மணிதேவி, கிருஷ்ணய்யர் போன்றவர்களால்தான் என்றுதான் கூறப்பட்டது.  கௌரவமான பெண்கள் என்று கருதப்பட்ட தாசி குடும்பத்தைச் சேராத பெண்களும் ஆடலாம் என்ற அளவுக்கு அது மெருகேறியதே தவிர, ஆடலின் அமைப்போ, வெளிப்பாடோ சிறிதும் மாறவில்லை. கடவுள் என்ற மூலம் ஆட்டம் காணவில்லை. “நடனம் ஆடினார்”, “தெருவில் வரானோ”, “கிருஷ்ணா நீ பேகனே பாரோ”, “ஸாமி நின்னே”(வர்ணம்) போன்ற பாடல்கள்தாம் இன்றும் உணர்ச்சிகளை வெளியிடப் பயன்படுபவை. காதலை வெளியிடும் பெண் இன்றும் பால் குடித்தால் வாந்தி வருவதாகவும், குயிலின் கூவல் நாராசமாய் ஒலிப்பதாகவும், ஹம்ஸதூளிகா மெத்தை குத்துவதாகவுமே விரகத்தை வெளியிடுகிறாள். அன்று ஆடப்பட்ட தாசி ஆட்டம் அன்றைய சமூக வர்க்கபேதங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தினருக்காக ஆடப்பட்டது. இன்றைய தாசி ஆட்டம் அல்லது பரதநாட்டியம் சிறிது மாறுதலுடன் குறிப்பிட்ட மேல் வர்க்கத்தினராலேயே ஆடப்பட்டு, அவர்களாலேயே ஆளப்பட்டு, அவர்களாலேயே போற்றப்பட்டும் வருகிறது. சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களுக்கும், பாதிப்புகளுக்கும் உட்படாத ஒரு நபரே இன்றைய ஆடலின் வெளிப்பாட்டுப் பிரதிநிதி. இதனால்தான் இவர்கள் பாதிப்புகள் அற்ற வெறும் ஆட்டக்காரர்களாக (Performers) மட்டும் இருந்து வருகிறார்கள்.

சுயமும் சூர்யோதயமும்

மேற்கத்திய தத்துவத்தின்படி நாம் சுயம் என்னும் தனிப்பட்ட குணத்தோடு பிறப்பதில்லை. தன்னியல்பு என்பது நம்முடைய முதல் இரண்டாண்டுகளில் உருவாகி ’சுயம்’ என்னும் பிம்பத்தை எழுப்புகிறோம். நாம் பார்ப்பது, கேட்பது எல்லாம் நம் கற்பிதமே. இதனால் நம் அறிதலை சுருக்கிக் கொள்கிறோமா? புத்தரின் வழியில் யோசித்தால் தற்சார்பற்ற உண்மைகளை இன்னும் “சுயமும் சூர்யோதயமும்”

பருவம், படம், பீஷ்மர் & போப்

துரியோதனன் கேள்வி ரொம்பவே விசித்திரமானது. அவனுடைய அப்பாவே குரு வம்சம் இல்லையே? திருதராஷ்ட்ரனே விசித்திர வீர்யனின் பிள்ளை இல்லை. வேத வியாசரும் அம்பிகாவும் கூடித்தான் திருதராஷ்ட்ரன் பிறக்கிறான். வேத வியாசர் குரு வம்சத்தினரா என்ன? அம்பிகாவுமே குரு வம்சம் இல்லை. பின் பாண்டவர்களை அவன் கேள்வி கேட்பதில் என்ன நியாயம் இருக்கும்? இதை பைரப்பா கவனிக்கவில்லையா? பைரப்பா பொதுவானதோர் விடையை/ விடைகளைக் கொடுத்தாலும், துரியோதனன் இப்படிக் கேட்பதாக எழுதுகிறவர் வேறு பாத்திரங்கள் அவனுக்கு என்ன விடை கொடுத்தன என்று எழுதுகிறார் எனத் தெரிந்துகொள்ள கேட்கிறேன். இதே துரியோதனன், சுதன் வளர்த்த கர்ணனுக்கு ராஜ்யத்தைத் தத்தம் செய்கிறான் ஆனால் தன்னுடன் வளர்ந்தவர்களுக்கு ஐந்து கிராமம் கூடக் கொடுக்க மாட்டேனென்று பிடிவாதம் பிடித்தான்.

ஓம் மணி பத்மே ஹூம்

இந்தக் கதையில் குரங்குதான் முக்கிய நாயகர். இப்பொழுதெல்லாம் எதற்கெடுத்தாலும் குரங்கின் நினைவு வருகிறது. இந்தப் ஜர்னி டு தி வெஸ்ட் புத்தகமும் குரங்கு ராஜாவும் அவரின் எஜமானன் ‘த்ரிபீடக’ (त्रिपिटक) குறித்த பயணமும் பற்றிய கதை. புத்த மதக் கொள்கைகளில் முரண்பாடுகள் இருந்தததைக் கண்டு, அதன் உண்மைகளைக் கண்டறிய இந்தியாவில் 17 வருடங்கள் பயணம் மேற்கொண்ட பின், தான் கற்றவற்றை, சீன மொழியில் பெயர்த்துக் கொடுத்தவரின் பெயர் த்ரிபீடகா. திரிபீடகா என்பது புத்த மதச் சூத்திரங்களைக் கொண்ட ஏடுகளைக் கொண்டு வருவது. அது சாகசங்களும் அறிவின் ரகசியங்களும் வாழ்க்கையின் விளங்கொண்ணா வினாக்களும் அடங்கிய புத்தகம். கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் புரியிலி தத்துவம் கொஞ்சம் காமம் என எல்லாமும் கலந்து கட்டி ஊட்டும் புத்தகம்.

அமுதசுரபியும் சத்துணவுத் திட்டமும் மலிவு விலை உணவகங்களும்

நமது தமிழ்க் காப்பியங்கள் பசிப்பிணி பற்றி என்ன கூறியிருக்கிறது என்று பார்த்தால் முதலில் நமக்குக் கிடைக்கும் பாடலின் காலம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகும். கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வடமோதங்கிழார் என்ற புலவர் நாட்டில் நிலவிய பசிப்பிணியை இரண்டு பாணர்கள் வாயிலாக வெளிப்படுத்துகிறார். புறநானூற்றில் இடம் பெறும் பாடல் இது.

ஆழி, அக்னி, அரவிந்தன் நீலகண்டன்

This entry is part 39 of 72 in the series நூறு நூல்கள்

இன்னாரை நேரில் கண்டு உரையாடப் போகிறோம் என்றால், அவர்களின் எழுத்தில் மூழ்கி அமிழ்தலைத் துவங்குவேன். ஒருவரைக் குறித்து நான் ஆராய ஆரம்பித்தால் ஒரு வாரத்திற்குள் அவரின் பெரும்பாலான புத்தகங்களையும், இணையத்தில் எழுதிக் குவித்ததையும், விமர்சனங்களையும், வம்புகளையும் படித்து முடித்துவிடுவேன். சுந்தர ராமசாமி, ஜெயமோகன் என்று எழுதிக் குவித்த வஸ்தாதுகளைக் கூட இந்த சட்டகத்தினுள் அடக்கி, ஒரு பருந்துப் பார்வை பார்த்து, அந்த ஒரு துளி அரிசியில் இருந்து முழு சோறும் எப்படி வெந்து இருக்கும் என்பதை உணர்ந்தாவது விடுவேன். எல்லோருக்கும் ‘கற்றது கைம்மண்ணளவு’ என்று உணரும் நேரம் வரும். அது அரவிந்தன் நீலகண்டன் அமெரிக்கா வருகிறார் என்றவுடன், அவரின் எல்லா எழுத்துக்களையும் வாசிக்கவும் தேடவும் அவர் கொடுக்கும் மேலதிக விபரங்களுக்குக்கான குறிப்புகளின் …

ஆயுர்வேதமும் அறிவியலும் – 1

ஆயுஷ் மருத்துவர்களை நவீன மருத்துவம் புரிய அனுமதிப்பதால் என்ன சிக்கல் வரும்? நவீன மருத்துவர்கள் ‘மருத்துவ தரம்’ இழிந்து போவதை குறித்து எழுப்பும் சிக்கல்கள் ஒரு புறமிருக்கட்டும், மிக முக்கியமாக அது ஆயுஷ் மருத்துவ முறைகளை மொத்தமாக அழிக்கும். நவீன மருத்துவம் புரிய அரசாங்க அனுமதியுள்ள மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இதுவே நிகழ்கிறது. நவீன மருத்துவத்திற்குச் செல்ல செலவற்ற பின்வாசல் வழியாக இவை மாறிவிடும். உண்மையிலேயே ஆர்வம் உள்ள மருத்துவர்கள் சிறுபான்மையினராக எங்கோ ஒடுங்கிப் போயிருப்பார்கள்.

கோபியர் கொஞ்சும் சல்லாபன்

தாழ்மையும் பணிவுமே அனைவருக்கும் முக்கியமான பெருங்குணம் என உணர்த்த கிருஷ்ணன் செய்த விளையாட்டு இது என்பர் பெரியோர். கிருஷ்ணன் காளியன்தலைமீது நடனமாடி அவனை அடக்கியதும், கழுதை உருவில் வந்த அசுரனைக்கொன்றதும் இந்தப்பெண்கள் எல்லாம் கண்டும் கேட்டும் நடந்த நிகழ்வுகள்தாம். அவன் அசகாயசூரன் என்பதில் அவர்களுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் நிலைக்கு இறங்கிவந்து அவன் ஆடியும்பாடியும் விளையாடிக்களித்ததால், அவனிடம் அளவுக்குமீறி உரிமை எடுத்துக்கொண்டு என்னவேண்டுமாயினும் செய்யலாம் என எண்ணிவிட்டார்கள். அதனால்தான் அவர்களுக்குக் கிருஷ்ணன் ஒருபாடம் கற்பிக்க முயன்றான்

வெய்யோன் வரை

வெண் முரசு மீது இதுவரை அதன் வடிவம், உள்ளடக்கம் ஆகியவற்றைப் பற்றி பேசும் விமரிசனப்பூர்வமான மதிப்பீடுகள் (critical review ) வரவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. முதல் நூலான முதற் கனல் ஓரளவு இத்தகைய கவனம் பெற்றது. ஆனால் அடுத்தடுத்த நூல்கள் இன்னமும் நல்ல விமர்சனங்களை எதிர்பார்த்துக் காத்துக் கிடப்பதாகவே படுகிறது. இந்திராபார்த்தசாரதி,நாஞ்சில் நாடன், மற்றும் பி.ஏ கிருஷ்ணன் ஆகியோர், முதற் கனல் குறித்து கருத்து கூறியிருக்கிறார்கள். மற்ற புத்தகங்கள் குறித்து ஏதும் கூறியதாகத் தெரியவில்லை.

அசோதை நங்காய்! உன் மகனைக் கூவாய்!

யசோதையின் கூற்றாகத் திருவெள்ளறையில் உறையும் பிரானைப்பாடுகிறார் பெரியாழ்வார். ‘சந்திரன் மாளிகைசேரும் சதுரர்கள் வெள்ளறை,’ என்றும், ‘மதிள்திரு வெள்ளறை’ என்றும், ‘முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை,’ என்றும் அவ்வூரைப் புகழ்கிறார். …“காடுகளிலிருந்து நாவல்பழங்களைக் கொண்டுவந்து விற்ற ஒருபெண்ணிடம் அவ்வளைகளைக் கொடுத்து அவற்றிற்குப் பதிலாக நாவல்பழங்களை வாங்கித்தின்கிறான். நான் அந்தப்பெண் கையில் என் மகளின் வளைகளைப் பார்த்து, ஏனடா கிருஷ்ணா என் மகளின் வளையைக்கொடுத்தாய் எனக்கேட்டால்…

கிருஷ்ணனுக்குப் பன்னிரு நாமங்கள்

அன்னை யசோதைக்கும் தன் செல்லக்குழந்தை கிருஷ்ணனின் காதுகளில் துளையிட்டு, மற்றச் சிறுவர்களைப்போல் அழகழகான காதணிகளை அணிவித்துப் பார்க்க ஆசை இராதா? பெரியாழ்வாரின் திருவாய்மொழியாக நாம் இங்கு காணப்போவது வெகுசுவாரசியமான இந்த நிகழ்ச்சியைத்தான்! யசோதையின் ஒருதலைக்கூற்றாகப் (monologue) பாசுரங்களாக்கி இந்தக் காதுகுத்தும் நிகழ்ச்சியைக் கதைப்போக்கில் அளித்துள்ள அழகும் நயமும் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிடுகின்றன. இதில் இன்னும் ஒரு அழகான விஷயம் என்னவென்றால் திருமாலடியார்கள் உயர்வாகக்கருதும் கிருஷ்ணனின் பன்னிரு திருநாமங்களைக் கொண்டு இப்பாடல்களை அமைத்துள்ளதுதான்!

பொன்முட்டை

இரண்டு முறை அதே தெருவில்  வீட்டைத் தேடி தவறவிட்டாகிவிட்டது. செல்போனில் அழைத்தால் “ பச்சை பெயிண்ட் அடிச்ச கேட் சார்.. சின்னதா இருக்கும். இப்ப தெருக்கோடியில குப்பை லாரி தெரியுதா? அதுலேர்ந்து நாலாவது வீடு” நான் தெருக்கோடியில் திரும்பவதற்குள் குப்பை லாரி போய்விட்டிருந்தது. மீண்டும் “பச்சை கேட்” என “பொன்முட்டை”

எழுச்சியூட்டும் நம்பிக்கை

இளைஞர் சமுதாயம் தீய வழிகளில் செல்லாமல் தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க இப்படிப்பட்ட வடிகால்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. பல குடும்பங்களில் விளையாட்டு, இசை, கைவேலை என்று சிறு வயது முதலே ஓய்வு நேரப் பழக்கங்களாகப் பழக்கப் படுத்திவிடுவார்கள். இன்னும் சில குடும்பங்களில் கலையார்வங்களை வளர்ப்பார்கள். ஆண் பெண் பேதங்கள் இல்லாமல் பலவிதக்கலைகளிலும், விளையாட்டிலும் ஆர்வங்கள் பலவிதங்களில் வளர்க்கப்படும். இவையெல்லாமே இளம் வயது ஆர்வங்களுக்கு ஒரு வடிகால் வகுக்கும் வழிமுறைகள்தாம்.

பண்பாட்டு விமர்சனம்: வெ.சா.வை சாக்காக வைத்து சில சிந்தனைகள்

இங்கே சமூக விமர்சனம் என்பது சாதி விமர்சனம் என்ற அளவிலேயே குறுகிப் போனதுதான். சாதி விமர்சனம் என்பது அந்தந்த சாதியைச் சார்ந்த அறிவுஜீவிகளாலேயே செய்யப்படும்போது அதன் நம்பகத்தன்மை அதிகமாகும். உண்மையில் வெ.சா. ‘வசனம்’ எழுதிய ‘அக்கிரகாரத்தில் கழுதை’ சம்ஸ்காராவை விட வீச்சு அதிகம் கொண்டது. ஆனால் நாடகமா, திரைக்கதை வசனமா, புனைகதையா என்ற உருவத்தெளிவு இல்லாததாலும், வெ.சா.வுக்கே அப்படைப்புக் குறித்துப் பெருமிதம் இல்லாமலிருந்ததாலும் அது வெகுமக்கள் தளத்திற்கு போய்ச்சேரவில்லை. பெரியாரின் தத்துவவெளி சிறிதாக இருந்தாலும் அவரது தீவிரமான பிரச்சாரம் மூலமும், விசுவாசமான தொண்டர்கள் மூலமும் மக்களை வேகமாகச் சென்றடைந்தார் என்பதை கவனிக்க வேண்டும். இதில் இன்னும் சில விஷயங்கள் இருக்கின்றன. மொழி இங்கே அரசியல்வாதிகளின் கைப்பாவையாக இருக்கிறது. இரண்டாவது பொதுவெளி அறிவுஜீவிகளுக்கும், கல்விப்புல அறிவு ஜீவிகளுக்கும் இடையே காணப்படும் மிகப்பெரிய இடைவெளி.

மண்டாலா ஓவியங்கள்

மண்டாலா என்றால் சமஸ்கிருதத்தில் “வட்டம்” என்று அர்த்தமாகும். காலச்சக்கரம் என்றும் மண்டாலா ஓவியங்களை அழைக்கிறார்கள். இந்து மதத்திலும் பௌத்தத்திலும் இவை வழிபாட்டு முக்கியத்துவம் பெற்றவை. மிகுந்த பொறுமையுடன் கணித சாஸ்திரங்களையும் தியான நியமங்ளையும் பின்பற்றி பத்து நாள்களில் இவை முழுமையடைகின்றன. காலை முதல் மாலை வரை ஏழு புத்த “மண்டாலா ஓவியங்கள்”

புராணங்கள்

புராணம் என்ற சொல், கடந்த காலம் என்று பொருள்படும். கடந்தகாலத்துக்குரிய பல்வேறு நிகழ்வுகளைப் பேசுவதாலேயே இப்பெயர். பண்டைய மற்றும் இடைக்கால இந்து சமய வழக்கங்கள், தொன்மங்கள், வரலாறு, புவியியல், அரசவம்சங்கள், அண்டவியல் மற்றும் இலக்கியம் குறித்து அறிஞர்களுக்கும் பாமரர்களுக்கும் விரிவான தகவல்கள் கொண்ட கலைக்களஞ்சியங்களே புராணங்கள். புராணங்களின் நோக்கம் மற்றும் நிகழ்காலத் தேவை குறித்து இருவகை பார்வைகள் உள்ளன. வேதங்களில் உள்ள உயர்ந்த தத்துவங்களை கதைகளைக் கொண்டும் சம்பவங்களைக் கொண்டும் விளக்குவதுதான் புராணங்களின் ஒரே நோக்கம் என்று சொல்பவர்கள் உண்டு. புராணங்கள் பாமரர்களுக்கே உரியன என்று இவர்கள் கருதுகின்றனர்.

வேதாங்கங்களும் உபவேதங்களும்

வேதாங்கங்களின் முதல் உறுப்பான சீக்ஷா, ஓசை நயம் மற்றும் உச்சரிப்பு முறையை நெறிப்படுத்துகிறது. சீக்ஷா வேதங்களின் நாசியாகக் கருதப்படுகிறது. நாம் சுவாசிக்கவும் நம் பிராணனைக் காத்துக் கொள்ளவும் நம் நாசி உதவுவதுபோல் சீக்ஷா வேத மந்திரங்களின் ஜீவ சக்தியைக் கட்டிக் காக்கிறது. வேத மந்திரங்களின் பலனை முழுமையாய்ப் பெற அவற்றை முறைப்படி சரியாக உச்சரித்தாக வேண்டும். அசைகளின் ஓசை மற்றும் ஒலிப்பைத் தூய முறையில் காத்துக் கொள்வதற்கான விதிமுறைகளை வரையறை செய்வதால் சீக்ஷா முக்கியத்துவம் பெறுகிறது. உச்சரிப்பில் எழும் எந்த ஒரு சிறு பிழையும் விரும்பத்தகாத, அல்லது எதிர்மறை பலன் கொடுக்கக்கூடும். எனவே வேத புருஷனின் ஆறு உறுப்புகளில் வேதாங்கமே பிரதானமாக மதிக்கப்படுகிறது. ஒவ்வொரு அக்ஷரமும் எவ்வளவு உயர்ந்து அல்லது தாழ்ந்து ஒலிக்கப்பட வேண்டும்…

வேதங்கள்

ஒருபுறம், வேதங்கள் புனிதமான ஞான நூல் என்று பெருமைப்படுத்தப்படுகின்றன- மிகப் பெரும் படைப்பூக்க நிலையில் இயற்றப்பட்ட கவிதைகள் என்றும் எண்ணற்ற ரிஷிகளின் வாக்கு என்றும் போற்றப்படுகின்றன. இந்த ரிஷிகள் ஞானத்தால் பிரகாசம் பெற்ற தம் மதியில், அனைத்து தெய்வீக சிருஷ்டிக்கும் ஆதாரம் என்றும், பிரபஞ்ச ரகசியத்தை வெளிப்படுத்துபவை என்றும் போற்றப்படும் மந்திர உருவம் தரித்த வேத நாதங்களை அடைந்து, அவற்றை உலகுக்கு அளித்தவர்கள் என்று போற்றப்படுகின்றனர்.
இதற்கு மாறுபட்ட புரிதலில் வேதங்கள் இன்னும் பண்பாட்டை அடைந்திராத புராதன காலத்தவர்களின் மூடநம்பிக்கைகளும் கற்பனைகளும் மட்டுமே- மிக மேலோட்டமான லாபங்கள், போகங்களில் நாட்டம் கொண்டவை, அறம் சார்ந்த மிகவும் துவக்கநிலைப் புரிதல்களும் சமய வேட்கைகளும் கொண்டவை. இவர்களைப் பொறுத்தவரை, மிகவும் கொண்டாடப்படும் பேரண்ட விவரணைகளும் நுண்மைகளற்ற அரிச்சுவடி நிலைப் பிதற்றல்கள் மட்டுமே.