மேரியின் காலத்தில், நோய்கள் பற்றிய பல தவறான நம்பிக்கைகள் இருந்தன. பழைய நம்பிக்கைகளின்படி, நோய்கள் “மோசமான காற்று” அல்லது “மியாஸ்மா”வால் ஏற்படுகின்றன என்று மக்கள் கருதினர். நோய்கள் தெய்வீக தண்டனை அல்லது பாவத்தின் விளைவு என்றும் நம்பினர். சில மக்கள் “சபிக்கப்பட்டவர்கள்” அல்லது “அசுத்தமானவர்கள்” என்று முத்திரை குத்தப்பட்டனர்.
Series: பொது நலம்
தடுப்பூசிகளின் வரலாறு
எட்வர்ட் ஜென்னரின் பங்களிப்பு ஒரு நோய்க்கான சிகிச்சையைக் கண்டுபிடித்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவர் நோய்த் தடுப்பு என்ற முற்றிலும் புதிய அணுகுமுறையை உருவாக்கினார். அவரது முறை பிற்காலத்தில் லூயி பாஸ்டர் போன்ற விஞ்ஞானிகளுக்கு வழி காட்டியது. பாஸ்டர் ரேபீஸ் மற்றும் ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்களுக்குத் தடுப்பூசி உருவாக்கினார்.
தடுப்பூசிகளின் அலை
வெற்றியின் மகிழ்ச்சி நீடிப்பதற்குள், கட்டர் ஆய்வகம் தயாரித்த தடுப்பூசியால் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. கட்டர் தடுப்பூசியில் உயிருள்ள, வலிமையான போலியோ வைரஸ் இருந்தது. அந்த ஆய்வகத்தின் தடுப்பூசியால் 120,000 குழந்தைகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர்; 200 குழந்தைகள் நிரந்தரமாக முடங்கினர்; 15 பேர் இறந்தனர் (குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள்).
தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன?
ஃப்ளூ வைரஸ்கள் தங்களை மிக வேகமாக மாற்றிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் புதிய வடிவில் இவை வருவதால், பழைய தடுப்பூசியால் உருவான ஆன்டிபாடிகளால் புதிய வைரஸை அடையாளம் காண முடியாது.சில தடுப்பூசிகள் வாழ்நாள் முழுதும் பாதுகாக்கும் போது, ஃப்ளூ போன்ற தடுப்பூசிகளை ஆண்டுதோறும் ஏன் போட வேண்டும் என்பதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.
தடுப்பூசிகளின் துணைச்சேர்க்கைகளால் பாதிப்பு உண்டா?
ஒரு தடுப்பூசியில் அதன் முதன்மைப் பொருளான ஆன்டிஜென் (Antigen) தவிர, அதன் செயல்பாட்டைத் தீர்மானிக்கும் ‘துணைச் சேர்க்கைகள்’ (Adjuvants & Excipients) மிக முக்கியமானவை. குறிப்பாக, தொற்றுநோய்களைத் தாண்டி இன்று புற்றுநோய் சிகிச்சையிலும் இவை புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன.
பொதுநலக் கொள்கைகள்- 101
பொதுநலத் துறையின் அடிப்படைப் பணி என்பது சமூகத்தின் சுகாதார நிலையைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதாகும். ஒரு பகுதியில் வாழும் மக்களின் உடல் மற்றும் மனநலத்தை அறிந்து கொள்வதுடன், அவர்களின் நல்வாழ்வைப் பாதிக்கும் காரணிகளை முன்கூட்டியே கண்டறிய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் புதிய காரணிகளைத் தேடி கருத்துக்கணிப்புகளையும் ஆய்வுகளையும் நடத்துவது அவசியம்.
உடல்நலக் கல்வி
சமூகக் கூட்டுக் கற்றல்: ஒரு சமூகத்தையே மாற்றும் வல்லமை கொண்டது. நீண்ட கால மாற்றத்தைத் தரும். ஒரு மாற்றத்தைத் தொடங்க அதிக நேரமும், பெரும் சமூக முயற்சியும் தேவைப்படும். புகைப்பிடித்தல், போதைப் பொருள் பயன்பாடு போன்ற பழக்கங்களைக் குறைக்கவும், தடுக்கவும் இந்த மாதிரி பயன்படும். இதன் பலன் உடனடியாகத் தெரியாவிடினும், நீண்ட காலப் பலன்களையும் சமூக மாற்றங்களையும் ஏற்படுத்த வல்லது.
கூட்டு முயற்சியும் பொது நலமும்
ஒரு மனிதனின் ஆரோக்கியம் மருத்துவச் சேவையால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. ஆராய்ச்சிகள் சொல்வது என்னவெனில், ஒரு நபரின் உடல் நலனில் 80 சதவீதம் வரை மருத்துவமனை சார்பற்றக் காரணிகளால் — அதாவது சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் காரணிகளால் — தீர்மானிக்கப்படுகின்றன.
உடல்நலம் — ஒரு உலகளாவிய கேள்வி
ஒரு நிலையான வேலையில் இருப்பவர்களுக்கு நிறுவனக் காப்பீடு கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு அரசு காப்பீடு இருக்கும். ஆனால் கட்டடத் தொழிலாளர்கள், தெரு வியாபாரிகள், விவசாயிகள், வீட்டு வேலை செய்வோர் — இவர்களுக்குப் பெரும்பாலும் எந்தக் காப்பீடும் இல்லை. இவர்களுக்கு நோய் வந்தால் என்னவாகும்? சேமிப்பு காலியாகும். நகைகள் விற்கப்படும். கடன் வாங்கப்படும். அல்லது வலி தாங்கி வேலைக்குச் செல்வார்கள்.
காப்பீட்டின் பிறப்பிடம்: ஐரோப்பா
ஒரு அரசியல்வாதியின் கணக்கும், ஒரு கனவாளியின் போராட்டமும் சுகாதாரக் கொள்கைகளில் முக்கியமானது காப்பீடு. வாகனங்கள், வீடு எல்லாவற்றுக்குமே காப்பீடு உண்டு. அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மிக குறைந்த அளவில் காப்பீடு இல்லாவிட்டால், ஒருவர் வாகனமே வாங்கக் கூட இயலாது. வீட்டுக்கான காப்பீடு தீ, வெள்ளம் போன்றவற்றால் நஷ்டமடையும் “காப்பீட்டின் பிறப்பிடம்: ஐரோப்பா”
