அவனிடம் ஏதோ ஒன்று நம்மை வசீகரிக்கிறது. அவன் அணிந்திருக்கும் ஓவர்கோட் மீது அவன் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை. அது அபூர்வமானது, இந்நூற்றாண்டில் அனேகமாக காலாவதியாகி விட்டதென்றே நினைக்கிறேன். அரிதாகிவிட்டதும் அதன் வசீகரத்தை அதிகரித்துக் காட்டுவதாக இருக்கலாம். தன் அவலத்தைப் பொதுமைப்படுத்த நாம் அனைவருமே குமாஸ்தாக்கள்தான் என்று அவன் கைகொட்டிச் சிரிக்கிறான். உண்மைதான், நமக்கும் ஒரு ஓவர்கோட் தேவையாக இருக்கிறது. அதை இவ்வளவு இறுக்கமாக, சருமமாகிவிடும் அளவுக்குப் பற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கைக்காகவே நாம் அக்கயவனுடன் பயணிக்கிறோம். இதுவே ஆபீஸின் வெற்றியும்கூட.
Category: இலக்கியக் கட்டுரை
கீடம்
நமது அவதானிப்பு, கீடம் எனும் சொல்லை மாணிக்கவாசகர் ஆண்டுள்ளார் என்பதில் நிலை கொள்கிறது. சேக்கிழார் அருளிய பெரியபுராணம் நூலில் 4286 பாடல்கள். அதாவது 17,144 அடிகள். அங்கு எங்கும் கீடம் இல்லை. கம்பன் கீடம் எனும் சொல்லைப் பயன்படுத்தியிருப்பானே எனும் வினா நமக்கு எழாமல் இராது. 10,368 பாடல்களில் இரு இடங்களில் கீடம் கண்ணில் பட்டது.
பீட்டரும் பக்கிரியும் : டேக் 5 புத்தக வெளியீடு – ஏற்புரை
சில சமயங்களில் புறத்தின் நிதர்சனங்களே கட்டுரையின் முடிவை நிர்ணயிக்கிறது. பெல்லோ கட்டுரை இறுதியில் அமெரிக்கத் தேர்தல் மிக மூர்க்கமாக தன்னை இருத்திக் கொள்கிறது, ஹெர்சாக் பாணியில் அமைந்தருக்கும். பெல்லோ வாசகி ஒருவள், அவருக்கு எழுதும் காத்திரமான கடிதத்தின் வழியே. க்ரஸ்நஹொர்கையின் சேடன் டாங்கோவப் பத்திப் பேசறச்சே பெய்லா டாரோடா படத்தையும் பேசறது இயல்பாகவே கட்டுரையின் போக்கே நிர்ணயிக்கிறது.
அசுரகணத்தின் 66வது அத்தியாயம் முதலிய இழப்புகள்
நாட்டுடைமையாக்கம் க.நா.சு.வின் படைப்புகள் மறுமதிப்பு காணவும் அதிக வாசகர்களைச் சென்றடையவும் வழிகோலியது என்றாலும், இவ்வழியில் மீண்டும் புழக்கத்துக்கு வந்த க.நா.சு.வின் படைப்புகளில் சகட்டுமேனிக்குப் பிழைகள் மிகுந்துள்ளன. பதிப்புணர்வு இல்லாத தமிழ் வாசகர் கூட்டம் அந்தப் புத்தகங்களை வாங்கிக் குவித்திருக்கிறது. அந்த நூல்களில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி அறியும் முன்பாக க.நா.சு.வின் காலத்தில் அவரது படைப்புகள் வெளியான வரலாற்றை நெட்டோட்டமாகப் பார்க்கலாம்.
அசோகமித்திரனின் கதையுலகம்
மகத்தான ஆக்கங்களில் பொங்கியெழும் அறச்சீற்றமாகவும், மானுடர் மேல் கொண்ட கருணையாகவும் வெளிப்படும் அதே கனிவு மறுபுறம் அவர்கள் கொண்ட துயராகவும் அதன் விளைவான கசப்பாகவும் கூட வெளிபடக்கூடும் என்கிறார். இருத்தலியல் காலத்தில் எழுதப்பெற்ற பல படைப்புகள் இன்று காலாவதியாகிப் போய்விட்டாலும் கூட, இன்றளவும் அசோகமித்திரனின் கதைகள் நமக்கு நெருக்கமாக இருப்பதன் காரணம் அவர் கதைகளில் அத்தனை கதாப்பாத்திரங்களின் ஊடாகவும் வெளிப்படும் அவரது கனிவுதான்!
மூலமும் உரைகளும்
வள்ளுவர் கூற்றை முந்தைய இலக்கியங்களும் பிந்திய நூல்களும் முன்மொழிந்துள்ளன அல்லது பின்மொழிந்துள்ளன என்பது. இது நாலு சீட்டும் நானூறு கோடியும் கையடையாகப் பெற்றுக்கொண்டு கூட்டணியின் தலைமைக் கட்சி செய்யும் சிறுமைகளை இதர உறுப்புக் கட்சிகள் ஆதரிப்பதைப் போன்ற இழிதகைமை அல்ல.
நீலமலையில் வாழ்பவனே……..!- சாலபேகா – ஒடியா கவிஞர்
அவ்வாறே ரத யாத்திரையின்போது, ஜகந்நாதர், பலபத்ரா, சுபத்ரா ஆகியோரின் தேர்கள் சாலபேகாவின் குடிசையின் முன்பு நின்றுவிட்டன. அங்கிருந்து நகரவேயில்லை. சாலபேகா வந்து தேர்க்கயிறுகளைத் தானே இழுத்தபின்னரே அவை அங்கிருந்து நகர்ந்தன. அவனுடைய தாய் லலிதா இறந்தபின்னர் கோவில் பூசாரிகள் அவளை இந்துமுறையில் தகனம் செய்யவும் அனுமதி மறுத்தனர்.
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
நுணுக்கங்கள் தெரியாமல், இசையை ரசிக்க மட்டுமே தெரிந்த என்னைப் போன்றவர்களுக்கும் உணர்வின் உச்சத்தை அடைய இசையைக் கட்டமைத்துக் கொடுத்தது அவரின் பெரும் கருணையே. ஒவ்வொரு பாடலுக்கும் வேறு வேறு உணர்வுகள் இருப்பதை அதற்குரிய ராக தளங்கள் வழியே ராஜன் அவர்கள் கட்டமைத்து, ஒரு பாடலுக்கும் மற்றொரு பாடலுக்கும் வித்தியாசத்தைக் காண்பித்திருந்ததுவே இந்த இசைக் கச்சேரியின் சிறப்பு எனலாம்.
தடுமாற்றத்தின் குரல்
ஒரு கால கட்டத்தின் கதைகளை எழுதத் தொடங்கி, என்றைக்குமான பிரச்சனைகள் சிலவற்றைத் தொட்டுச் செல்வதால் ஆதவன் ஒரு முக்கியமான எழுத்தாளர் ஆகிறார். ஆனாலும், பல சமயங்களில் ஆதவன் சிறு சிறு விஷயங்களிலேயே முட்டி மோதி கொண்டிருப்பதாக படுகிறது. பல நுட்பமான விஷயங்களைத் தொட்டு சென்றவர், ஒரு பெரிய தீர்வை நோக்கி சென்றதாக தெரியவில்லை. ஒருவேளை மனிதனின் வெவ்வேறு பாவனைகளை அப்படியே பதிவு செய்தாலே போதுமானதென்று அவர் நின்று விட்டது போல தெரிகிறது.
கலைச் செல்வம் சேர்க்கும் பணியில் ஒரு கை
இரண்டாவதாக, நான் கவனப்படுத்த எண்ணியது தமிழில் நாடகங்களின் நிலையைப் பற்றி. தமிழில் நவீன நாடகங்களின் நிலை என்ன? என்ற கேள்வியை எழுப்பும் ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. மிகச் சில வருடங்களுக்கு முன்பு அறிமுகமாகி, நெருக்கமான இளம் நண்பராக வாய்த்திருக்கும் விக்னேஷ் ஹரிஹரன் கட்டுரையை எழுதியிருக்கிறார். ஆழமான வாசிப்புக்கும் தேடலுக்கும் பிறகு தீவிரமான கேள்விகளை எழுப்பும் விதமாக இந்தக் கட்டுரையை தந்திருக்கிறார் விக்னேஷ்.
ஆறு மொழிபெயர்ப்பாளர்கள், மூன்று கேள்விகள்
மொழிபெயர்ப்பு என்பது வெறும் மொழி மாற்றம் அல்ல, அது ஒரு பண்பாட்டு பரிமாற்றம். ஒவ்வொரு மொழிபெயர்ப்பு நூலின் வாயிலாக நாம் புதிய உலகங்களை கண்டுபிடிக்கிறோம்; புதிய யூகங்களை அணுகுகிறோம்;புதிய மனிதர்களை அறிந்தும் புரிந்தும் கொள்கிறோம்.
தாய்மையின் தவிப்பும், தனிமையின் துயரமும்
எல்லாக் கதைகளும் அதன் மையக்கதாபாத்திரம் ஒன்று ஏதோ ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள தீவிரமாக விரும்புவதிலிருந்து துவங்குகின்றன. அந்தச் செயலுக்குத் வெளி சூழ்நிலைகளிலிருந்தும், மைய மாந்தரின் அகத்திலிருந்துமே தடைகள் வருகின்றன. அத்தடைகள் முரண்களை உருவாக்குகின்றன. அந்த முரண்களை தான் இருக்கும் சூழ் நிலையிலிருந்து வெற்றிகொள்ள இயலாமல் மையக் கதாபாத்திரம் முதலில் தடுமாறுகிறது. தான் நினைத்ததை அடைய முடியாதோ என்று மயங்குகிறது.
ஒதுங்குதல்
உறவுகள் சூழ வாழ்கிறார். ஆனால், உண்மையில் அவர் தனியன்தான். எப்படி? கதை தொடங்குவதே ஒரு தற்காப்புடன்தான்! ஒரு பழைய தோழி சந்திக்க வருகிறார் என்று தெரிந்ததும், “நான் இல்லைன்னு சொல்லிடுமா” என்று கூறி மாடி அறைக்குள் விரைந்து கதவைத் தாழிட்டுக் கொள்கிறார்.
சொல்வனம் கவிதைகள் சிறப்பிதழ்
நுண்ணுணர்வும் கற்பனை விரிவும் உள்ள இலக்கியவாசகர்கள் எப்போதுமே பற்றிக்கொள்ளக் காத்திருக்கும் சருகு போன்றவர்கள். அப்படி சிலரையேனும் இந்த இதழின் கவிதைகள் ஈர்த்தால், அதன் வாயிலாக கவிதைகளுடனும் கவிஞர்களுடனும் அவர்கள் தொடர்ந்து பயணிக்கும் வாய்ப்பு அமைந்தால் சொல்வனத்தின் இந்த முயற்சி சிறு பலனை எட்டியது என்று கொள்ளலாம். இது இரு இதழ்களால் மட்டுமே சாத்தியமாகக்கூடுவதல்ல, தொடர் முயற்சிகள் வாயிலாகவே அடையக்கூடுவது.
தமிழ்க் கவிதை சில குறிப்புகள்
வீரை வெளியனாரின் புறநானூற்றுக் கவிதையில் வேட்டுவப் பெண் ஒருத்தியின் நடைத் தயக்கம் நுட்பமாகப் பதிவாகியிருக்கிறது. முன்னைக் கொடியும், முசுண்டைக் கொடியும் பிணைந்த பந்தலின் கீழ், யானை வேட்டுவன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறான், அருகே பெண்மானைத் தழுவி விளையாடி அயர்ந்திருக்கிறது ஆண்மான். அவற்றின் புணர்ச்சி நிலையைக் கண்ட வேட்டுவன் மனைவி, தன் கணவன் உறக்கம் நீங்கி எழக் கூடும் என்று அஞ்சியும், கலைமான் பிணைமானை விட்டு அகன்று விடும் என்று அஞ்சியும் மனையிடத்தே நடமாடாமல் ஒதுங்கி நிற்கிறாள்
தேவதச்சனின் கவியுலகம்
வெம்மை இருந்தாலும் கவிகள் மழையை விடுவதே இல்லை. மேலிருந்து வீழும் மழைக்கு போட்டியாக கவிஞர்களும் கவிதைகளை மேலே அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். ஊரில் நம்ம வீட்டில் இருக்கிற கதவு, கைப்பிடி கிரிலில் நாம பாத்திருக்கலாம் – மழை பெய்யும் போதோ, இல்ல அது நின்ற கொஞ்ச நேரத்திற்கு பிறகோ, நிறைய துளிகள் ஒரு நத்தையோட முதுகு போல உண்டாகிருப்பதை, அதை தொட்டால் உடைந்துவிடும்.
கவிதை என்ன செய்யும்
எல்லோருக்கும் எப்போதும் நேசிப்பவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு காலமோ சூழ்நிலையோ நல்லூழோ அமைந்துவிடுவதில்லை. கல்வியின் பொருட்டோ பணியின் பொருட்டோ அல்லது வாழ்வின் அழுத்தத்தினாலோ பிரிவு அமைகிறது. இதில் பேரன்பும் பெருங்காதலும் பிரிவின்றி நிறைவு கொள்ளாத தெய்வங்கள். தொலைத்தூர உறவில் காதலில் இருப்பவர்கள் சாலையில் பயணிக்கும் போது எல்லை பலகையில் தெரியும் ஊரும் அவற்றின் கிலோ மீட்டர்களும் அளிக்கும் கிளர்ச்சியையும் துயரையும் நன்கு அறிவார்கள்.
காலத்தின் சுமையை அறிதல் அல்லது ராபர்ட் பென் வாரனின் ஆல் த கிங்ஸ் மென்
ஆல் த கிங்ஸ்மென்-இன் கதைசொல்லியான ஜாக் பர்டனின் (Jack Burden) குரல் கிரேட் காட்ஸ்பி-இன் அற்புதமான ஏக்கமும் விரக்தியும் தோய்ந்த குரலின் வாரிசுதான் (அந்த முன்னோடி நாவலைப் படித்திருப்பவர்களுக்குப் புரியும் இது எவ்வளவு பெரிய புகழாரமென்று). காட்ஸ்பி நாவலின் கடைசி வரியை நினைவுகூரும் வகையில் ஜாக் அவன் கடந்தகாலத்துக்குள் “இடையறாது சுமந்து செல்லப்படுகிறான்”
ஒர் எழுத்தாளனின் தர்மமும், கர்மமும், இருப்பும்
கேரள வள்ளுவ நாட்டிலும், நிளா நதிக்கரையிலும் உலவிய மனிதர்களே அவரது அனைத்துப் படைப்புகளிலும் கதைமாந்தர். ஒரு கதையையோ அல்லது அதன் மாந்தரையோ வேறெங்கும் தேடவேண்டிய அவசியம் அவருக்கு இருந்ததில்லை. ஒருகூட்டுக்குடும்பத்தில் அன்னையரின் வளர்ப்பில் வளர்ந்த எம்டி, நலிந்த நடுத்தரக்குடும்பங்களின் ஆண்கள் வழியறியாது தவித்து நின்றபோது தைரியமாக நின்று சவால்களை எதிர்கொண்ட பெண்களைக் கண்டும் அவர்களின் கதைகளை அறிந்துமிருந்தார்.
உள்ளம் தாங்கா வெள்ளம்
உவமைகள் அந்த தீவிரத்தை உணர்த்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. மலர்களும் பருவகாலங்களும் மனதை உணர்த்த கையாளப்படுகின்றன.இந்தப்பாடல்களில் ஒருசில பாடல்களைத் தவிர பெரும்பான்மை பாடல்கள் தலைவி தோழி கூற்றாக வருபவை. இல்லத்திற்குள் இருந்து பாடும் பாடல்கள். சங்கப்பாடல்கள் நிகழ்த்து கலைக்காக எழுதப்பட்ட பாடல்கள் என்ற கருத்தும் உண்டு. எப்படியெனினும் வாழ்வின் சாரத்தை கைக்கொண்ட பாடல்கள்.
நினைவோடையின் படிமம் – ஜெயந்த மஹாபாத்ரா
வறுமையில் தவிக்கும் தகப்பன் தன் சொந்த பெண்ணையே விற்பதற்கு தள்ளப்பட்ட நிலைமையை விளக்க “வெறும் நுரையைத்தான் சுரண்டியது அவன் பழைய வலை” என்பதிலும் பனங்கீற்று குடுசையில் காற்று நுழைவதுபோல அந்த குடுசைக்குள் பல பேர் நுழைந்திருக்கிறார்கள் என்பதிலும் ஜெயந்தாவின் மெல்லிய உணர்ச்சி பார்வை வெளிவருகிறது
மிதப்புக்கட்டை
அதுவும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தொழில் நுட்பம் மென்மேலும் தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கும் இந்த நவீன காலகட்டத்தில் ஓர் புதிய உலகைப்படைக்க, காட்ட, ஓரிரு நிமிடங்களில் சிற்சில ப்ரேம்களில், ஒலியமைப்பில் காண்போரின் aweவை எளிதில் அடைந்துவிட முடியும் விஷயத்தை எழுத்தில் காட்ட பத்து, இருபது பக்கங்களும், அதிக வாசக கவனமும் தேவைப்படும்.
இரு முனைக் கத்தி – அருண் கோலட்கர்
இருள்-ஒளி, அறியாமை-பகுத்தறிவு இருமையை அருணின் எளிய நடை வெளிக் கொண்டுவருகிறது. மேலோட்டத்தில் நாத்திகம் போல அமைந்திருப்பினும் உள்நோக்கத்தில் அருணின் சமுதாய அர்த்தத் தேடலைப் பிரதிபலிக்கிறது. அறிவு எனும் ஒளியை கையில் கொடுத்தும் அறியாமையில் துயிலும் பூசாரியை உதாசீனப்படுத்தும் விதம் கடைசி இரு வரிகள் அமைகின்றன.
கனடா! கனடா!
“எந்த கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?” என்ற கவிதை நூலுக்காக இளவாலை விஜயேந்திரன் பரிசு பெற்றார். இலங்கையின் மலையக நகரான நுவுரேலியாவில் பிறந்தவருக்கும் கங்கை என்ற நதியின் குறியீட்டுப் பாதிப்பு இருப்பதைக் கண்டு வியந்தேன். புனித நதிகள் என்ற கோட்பாடு இந்தியாவுக்கு மட்டும்தானா? பிற ஆசிய நாடுகளுக்குக் கூட இல்லையா? இவரும் தன் உரையாற்றும்போது மிகுந்த மனவெழுச்சியுடன் காணப்பட்டார்.
நீ இவ்வாறு இருப்பதனால் / ஏனெனில் நீவிர்
நம்மில் உயிர்க்கும் இறைமையை நாமே நமது உடலைவிட்டுத் தள்ளிநின்று பார்ப்பது போன்ற உணர்வு. உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து ஊற்றெடுக்கும் பொருள் செறிந்த சொல்நயம்!
நிற(ப்)பிரிகை
வன்முறையும், அழகும் கலந்திருக்கும் இவ்வுலகில் அப்பாவித்தனத்தின் சாத்தியம்/சாத்தியமற்ற தன்மை பற்றிய அவரது புரிதல்களைக் காட்டிய நாவல் என்று 2016ல் மேன்புக்கர் பரிசு பெற்ற அவரது ‘வெஜிடேரியனைச்’ சொல்லலாம். முப்பாகமாக வெளியான இதில், குடும்ப நெறிமுறைகள், பெண் உடல் மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறைகள், அவளைப் புரிந்து கொள்ளாமல் அவள் மனசிதைவிற்கு ஆளானவள் என்று சிகிச்சை செய்வது போன்றவை காட்சிப்படுத்தப்படுகின்றன
எரியும் மரங்கள்
ஹான் காங்கின் எழுத்துக்கள், உடல் மற்றும் மன வேதனையின் இணைப்பை, அவற்றின் வெளிப்பாட்டை. கிழக்கிய சிந்தனைகளை ஒட்டி வெளிப்படுத்துகின்றன. Convalescence 2013, நாவலில் காலில் உள்ள புண் உருவகமாக வருகிறது. அது குணமாவதில்லை. அதைப் போல முக்கியக் கதாபாத்திரத்திற்கும் அவரது இறந்து விட்ட சகோதரிக்குமான உறவு சொல்லப்படுகிறது. ஆறாத அந்தப் புண், அடிப்படையான இருத்தலின் அனுபவமாக உருவெடுக்கிறதே தவிர கடந்து செல்லும் இரணமாக இருக்கவில்லை.
சந்திப்பு- யுவன்
அடுத்த நாள் கொஞ்சம் நிதானமாக எழுந்து, கிளம்பி, சிறிய காபி வித் யுவன் நிகழ்வு. அப்போது தான் கவனித்தேன் – கண்ணாடி குவளையின் கைப்பிடியை நான்கு விரல்களை மட்டும் பயன்படுத்தி பிடித்து, கட்டை விரலை தனியாக வைத்து குடிக்கும் காட்சியை. பின் தங்கி இருந்த இடத்தில் இருந்து புறப்பட்டோம். “காலம்” செல்வம் அவர்கள் – யுவனோடு ஒரு உரையாடல் சந்திப்பை ஒருங்கிணைத்திருந்தார்.
குமார சம்பவம் மஹா காவ்யம் – 6
மனதால் எண்ணிக் கூட பார்க்க முடியாத எதிர் பாராத அனுபவம். மேகமே இன்றி திடுமென மழை பெய்தால் வரும் சந்தோஷம் இவைகளை இந்த இடத்திற்கு வந்த ரிஷிகள் அனுபவித்தனர். அதே போல இமவானும் உங்கள் வரவும், தரிசனமும் எங்களுக்கு பூத்த உடனேயே மரங்களில் பழங்கள் வந்தது போன்ற அதிசயமான சற்றும் எதிர்பாராத அனுபவம் என்றார்.
மலை தெய்வம்
காதல் கொண்டப் பின் தலைவனை பிரிந்திருக்கும் தலைவி பசலை உற்று உடல் அழகு குறைய மெலிகிறாள். காத்திருப்பு என்பது காலத்தை நீளவும் குறுகவும் செய்யும் மாயம் கொண்டது தானே. மகளின் உடல் நலிவை கண்ட கண்ட அன்னை வயதில் மூத்த பெண்களிடம் தன் கவலையை சொல்கிறாள். அவர்கள் வெறியாட்டு நடத்துமாறு கூறுகிறார்கள்.
நம்பிக்கையா அல்லது ஆறுதலா? – சஸ்கியா ஹாமில்டன்
லோவல் கடிதங்களின் பதிப்பாசிரியராக இருந்த, மறைந்த அமெரிக்க கவிஞர் சஸ்கியா ஹாமில்டனின் இறுதி தொகுப்பான “அனைத்து ஆன்மாக்கள்” நூலில் துல்லியம், விவரித்தல், நிரந்திரமின்மை என்றே அதே பாடுபொருளை (அல்லது) கவலைகளை கையாண்டிருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ஹாமில்டன் தன்னுடைய கடைசி கவிதையில், லோவலின் “நிறைவுரை” கவிதையை மேற்கோள் காட்டியிருக்கிறார். லோவெலின் கடைசி கவிதை தொகுப்பை போலவே, ஹாமில்டன் இறந்த பின்பே அவருடைய கவிதை தொகுப்பு வெளியாகியிருக்கிறது.
பொன்கழங்குகள்
குளிர்ந்த அதிகாலையில் பூக்களையும் ,அதன் தாதுக்களையும் ஈரமான மண்ணில் சேர்த்து உனக்காக நானொரு பாவை செய்தேன். அது வெயிலில் வாடும் வரை நீ வரவில்லை என்று தலைவி பாடுகிறாள். முந்தைய பாடலில் காத்திருப்பு கோடையில் பொன்னாய் மலரும் போது, இந்தப்பாடலில் ஈரம் காய்ந்து வாடுகிறது
சிறுகோட்டுப் பெருங்குளம்
மல்லர் போர் என்பது எதிர்ப்பவரை குறிப்பிட்ட பொழுது தாக்குதல் நடத்தவிடாது செயலிழக்க செய்தல். அந்த மல்லனின் வீரத்தில் திகைப்புற்று மையல் கொண்ட ஊர், வெளியூரில் இருந்து வந்த மல்லனை வென்றவனாக ஏற்றுக்கொள்வதா.. வேண்டாமா என்று தடுமாறுகிறது. அங்கே கூட்டத்தில் மற்பார் காண வந்த ஒருத்திக்கு அவன் மீது மையல் உண்டாகிறது. அவளும் அவனை காதலிப்பதா? வேண்டாமா? என்று இருநிலைகளில் அலைகழிகிறாள்.
உதிரும் வண்ண இலைகள் !
துள்ளுகின்ற மீன்களாகிய மேகலையை அணிந்து, நீர்நிலைகளின் கரையோரங்களில் அமர்ந்திருக்கும் அன்னப்பறவைகள் முத்துமாலைகள் போலக் காட்சியளிக்க, பரந்த மணல் பிரதேசம் எனும் நிதம்பத்தையுடைய நதிகள், தம் இளமையாலும் அழகாலும் செருக்குற்ற இளமங்கையர் போல் தளர்நடையிட்டுக் கொஞ்சிக் குழைந்து, மெதுவாக ஆடி அசைந்து செல்கின்றன.
மாடலென்களும் டீயும் அல்லது ப்ரூஸ்டின் “In Search of Lost Time”
சரி,செர்ச்சில் இன்னமும் குதிப்பதற்குத் தயங்கும் வாசகருக்கு வருவோம். அதன் மூவாயிரத்து சொச்சம் பக்கங்களே அவரை முதலில் மாய்ப்பில் ஆழ்துகிறது. ஒருக்கால் கால் நனைப்பதற்காக, அதன் ஹாதார்ன் மற்றும் லைலாக் பூக்கள் அடர்ந்த பாதைகளில் பயணித்தபடி செர்ச்சின் முதல் நாவலான The Way by Swann’s-ஐ மட்டும் படித்துவிட்டு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சப்புக்கட்டிவிட்டு ஓடிவிடலாம் என்று அவர் நினைக்கலாம். அவர் மட்டுமே அப்படி நினைக்கவில்லை, அதே கவலைதான் தயங்கும் கட்டுரையாளனுக்கும். கடந்த சில ஆண்டுகளாகப் பல சிறுபத்திரிகை நண்பர்களிடமிருந்து வரும் கோரிக்கைகளையும் மீறி அவன் இன்னமும், சுருக்கமுடியா ப்ரூஸ்டைச் சுருக்கமாக அறிமுகப்படுத்தும் கட்டுரை(களை) முயன்று பார்க்கலாமா வேண்டாமா என்று யோசித்தபடி மதில்மேல் அம்ர்ந்திருக்கிறான்.
வசந்தகாலம் வருமோ?….
வசந்தா என்றே ஒரு அழகான ராகம் – உள்ளங்களில் நம்பிக்கையையும் நல்ல எண்ணங்களையும் வளர்ப்பது. வசந்த காலத்துக்கு உரியதா எனில், இல்லை; அவ்வாறு எந்தப் பகுப்புகளும் இல்லை. நளினகாந்தி, கர்ணரஞ்சனி போன்ற ராகங்களையும் வசந்தத்தின் ஓர் அழகான மனோநிலைக்குச் சேர்த்துக் கொள்ளலாம் என எங்கேயோ படித்த நினைவு!!
சந்தனம் வாடும் பெருங்காடு
சங்ககாலத்தில் இளம் பெண்கள் முருகு பிடித்து விட்டது என்று முருகனுக்கு பலி கொடுத்து குறிகேட்பது வழக்கமாக இருந்திருக்கிறது. அதற்கு முருகு அயர்தல் என்று பெயர். வழக்கத்துக்கு மாறாக தலைவி சோர்வும் தனிமையும் கொள்வதை அன்னை கவனிக்கிறாள். அவள் உள்ளம் திடுக்கிட்டு விழித்து குழந்தை பெண்ணானதை உணர்ந்திருக்கும். அவள் அதை ஏற்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் தத்தளிக்கிறாள். வழிபாடு மூலம் எதையோ அறிவிக்கிறாள்.
கண்டறியாதன கண்டவர்
வருடக்கணக்காக ல.ச.வும், கு.அ.வும் ஒன்றாக இருந்து எத்தனையோ நுணுக்கமான கருத்துக்களை விவாதித்தும் ஆராய்ந்தும் அனுபவித்தும் இருந்திருக்கிறார்கள். இரண்டு, மூன்று நாட்களாகச் சாப்பிடாமல் ஒரு நாளைக்கு இரண்டு வேளை, ஒரு வேளை, பலகாரம் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு, பொழுது போவதே தெரியாமல் உயர்ந்த விஷயங்களைப் பற்றி விவாதித்திருக்கிறார்கள். சில நாட்கள், இரவு பதினோரு மணிக்கு மேல் பன்னிரண்டு மணிக்கு மேல் வாழைப்பழமாவது கிடைக்காதா, இல்லை வெற்றிலை பாக்காவது கிடைக்காதா என்று சென்னைப் பட்டிணத்துக் கடை வீதிகளில் தேடி அலைந்திருக்கிறார்கள்.
கள்ளம் கரவு திருட்டு மோசணம்
சாபம் போலச் சொல்வது நான்காம் சொலவடை. ‘பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு, கள்ளனுக்குக் களவிலே சாவு’ என்பது. ‘அரவம் ஆடேல்’ என்பது ஆத்திசூடி. ‘அரவம் ஆட்டேல்’ என்றும் பாட பேதம் உண்டு. நாகப்பாம்பைச் சீண்டிப் படம் எடுக்கத் தூண்டி விளையாட்டுக் காட்டிப் பிழைப்பவனுக்கு பாம்பினால்தான் சாவு என்பது ஒன்று. களவாடப் போகிறவனுக்கு நடுநிசி இருட்டில் தடுமாறிக் கை தவறி வீழ்ந்தோ, பிடிபட்டு மக்களிடம் தர்ம அடி வாங்கியோ, காவல் நிலையங்களில் சரியாகப் பங்கிடப்படாத காரணத்தால் மிதிபட்டோதான் சாவு என்பது இரண்டு.
தீரத்தின் ஔி
வெள்ளரிகாயின் விதைபோன்ற அரிசி சோற்றை நீரிலிட்டு உண்டு,பரல்கற்கள் உள்ள வெறும்தரையில் படுத்துறங்குவதை விட எனக்கு அந்த பெருங்காட்டின் ஈமப்படுக்கை தாமரை பூத்த குளம் போன்றது என்கிறாள். கண்கலங்காது கடந்து செல்ல முடியாத பாடல் இது. போரில் கொல்லப்படுவது வேறு. இது வேறு இல்லையா?
புனர்ஜென்மத்தின் நெருப்பில் எரியும் வாழ்வு
ஸ்லோகங்கள் 46, 47, 48-ல் இதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. -அமைதியை எங்கும் பெறவில்லை, உன் மடியில் நீண்ட உறக்கம் கொள்ள வேண்டும்; ஜகன்னாதனை விடுவிக்கும் தருணம்; கங்கையின் அழகான தெய்வ வடிவம் – என இவைகள் பண்டிதராஜரின் இறுதி விருப்பங்களை நமக்கு உணர்த்துகின்றன.
வீழ்ச்சியடைந்தவர்களால் ஒதுக்கப்பட வேண்டியவை! வீழ்ந்தவர்களால் உரக்கக் கூறப்படாதவை!!
இவ்வுலகில், தாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய
இயலாதவர்களையும்கூட உயர்ந்த நிலைக்குச் சேர்க்கும்
புனிதத் தலங்கள் பல, மூன்று உலகங்களிலும் உள்ளன.
ஆனால் நினைக்கவும் கூடாத நடத்தைகொண்டு
தவறிழைத்த மக்களையும் உயர்நிலைக்குக் கொண்டுசெல்ல
உனது ஒப்பற்ற புனித நீரே அனைத்துப்
புனிதத் தலங்களையும்விட உயர்வானதாகிறது.
ஜகன்னாத பண்டித ராஜா – 4
இந்த கங்கா லஹரியின் ஸ்லோகங்களைத்தான் நாம் காணப்போகிறோம். நான் அறிந்தவரை இதுவரை தமிழ் மொழிபெயர்ப்பைக் கண்டதில்லை. என்னைப்போலும் சம்ஸ்க்ருதம் அறியாதவர்கள் அறிந்து போற்றும் வகையில் (ஒரு ஆங்கில மொழியாக்கத்தின் துணைகொண்டு) இதனைச் செய்யத் துணிந்தேன். அன்னை கங்கைக்கு எனது காணிக்கை இதுவே. தீபாவளி சமயம் இதனைச் செய்யத் துவங்கியது எத்தனை பொருத்தம்!
ஜகன்னாத பண்டித ராஜா -3
இந்த ஸ்லோகங்கள் ஜகன்னாதர் தம் வாழ்வின் இறுதிக்காலத்தில் எழுதினவையாக இருக்கக்கூடும். ஏனெனில் இதில்
தம் வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்;
தாமியற்றிய செய்யுள்களின் இனிமையை, நயத்தை, உயர்வாகப் பெருமிதத்துடன் பேசுகிறார்;
காத்திருப்பின் கனல்
இந்தப்பாடலும் நீண்ட நாள் பிரிவைப் பாடும் பாடல். மாமரத்தின் கிளையில் மின்னும் கரியநிறத்தில் குயில் அமர்ந்திருக்கிறது. அந்தக்குயிலை பார்த்தபடி தென்னம் நெய்யிட்டு வாரப்படாத தன் கூந்தலை வருடிய தலைவி பிரிவை நினைத்து கலங்குகிறாள். மாம்பூக்களின் மஞ்சள் நிற மகரந்ததுகள்கள் கரியகுயில் மீது படிந்திருக்கிறது.
வாழ்வென்ப அபத்தங்கள் கோர்த்த சரம்
மறக்க முடியாத எத்தனையோ இருக்கின்றன இந்தக் கதைகளில் – பழைய கிராமபோன் ரெக்கார்டுகளை அரைத்து சிரங்குக்குப் பத்துப் போட வாங்கிச் செல்வார்கள் எனும் குறிப்பு, முந்திரிக்காய் கூஜா, ஊறுகாய் பிரதானமாக உலவும் கதைக்கு ‘வினைத் தொகை’ என்ற தலைப்பு, பேச்சிலர் தங்குமிடத்தின் மாடியைப் பார்த்து, இருக்கிறானா இல்லையா என்ற எந்தக் கவலையும் இல்லாமல் ‘சடகோபா’ என்று எப்போதும் அழைக்கும் ஆழ்வார்
ஜகன்னாத பண்டித ராஜா
இந்த நூலை ஜகன்னாத பண்டிதர் இயற்றியது குறித்து சில கதைகள் உலவுகின்றன. இதில் காணப்படும் சில பாடல்கள் இளம்வயதிலேயே இறந்துவிட்ட மனைவியை எண்ணிப்பாடியதாகக் கொள்ளப்படலாம். எது எப்படியோ நமக்கு வேண்டியது இவற்றின் நயமும் சுவையும் கவிதையழகும் தான். சில பண்டிதர்கள் எழுதிய ஆங்கில விளக்கத்தின்1,2,3 துணைகொண்டு நான் இதனைத் தமிழாக்கம் செய்துள்ளேன்.
நாஞ்சில் நாடனின் சிறுகதை உலகம்
நாஞ்சில் நாடனின் புனைவுகளில் பெண்கள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதி இருக்கிறேன். சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன் 2012ல் மும்பை தமிழ்ச் சங்கத்தில் நாஞ்சில் நாடனுக்கு நடந்த பாராட்டுவிழாவில் நாஞ்சில் நாடனின் படைப்புலகில் கண்ட பசித்தவனின் பயணத்தைப் பேசி இருக்கிறேன். கொரொனா காலத்தில் மும்பை தமிழ்க் கூடலில் மும்பை படைப்புலகம் என்ற தொடர் சொற்பொழிவில் நாஞ்சில் நாடன் புனைவுலகத்தையும் ஏற்கனவே நான் பேசி எழுதி பதிவு செய்திருக்கிறேன்.
நவீனத் தமிழ் இலக்கியத்தில் அசோகமித்திரனின் பங்கு….
இதோ 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதையைப் படித்தப்போதும், இப்போது எழுதிய கதையைப் படித்த போதும் எனக்கு என்ன தோன்றுகிறது. முதலில் ஆச்சரியம். முதல் கதையைப் படித்தப்போது அவருடைய தனித்துவம் தெளிவாகத் தெரிகிறது. கதையில் அவர் பயன் படுத்திய வார்த்தைப் பிரயோகம் அபாரமாக இருக்கிறது. கதையில் அவர் கொண்டுவரும் மௌனம் குறைவாக இருக்கிறது.
புத்தகக் கண்காட்சியில் பை நிறைய கதைகள்
போரையும் இனப்படுகொலையையும் பின்னணியாகக் கொண்டிருக்கும் புத்தகங்களை விமர்சிப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. குருதி தோய்ந்த அதன் பக்கங்களை எப்போதுமே சொகுசாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், என்ன அழகியல் நுணுக்கங்களைக் கொண்டு நொட்டுவது என்ற தார்மிகச் சிக்கல். இந்தத் தயக்கத்தையும் மீறி சில படைப்புகள் அவற்றின் கழிவிரக்கத்தைத் தவிர்த்து கொடூரங்கள் விரவியிருக்கும் சூழலையும் அதில் சிக்குண்டிருக்கும் சாமான்யர்களின் அவலத்தையும், நிரந்தரத் துக்கத்தையும், தோல்வி நிச்சயமென்றாலும் செயலாற்ற வேண்டிய கட்டாயத்தையும், அக்கட்டாயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் அறச் சிக்கல்களையும் உடனடித் தன்மையுடன் கவித்துவத்துமாகக் கைப்பற்றும் விதத்தால் அவற்றின் அழகியலைப் பற்றியும் சிந்திக்க வைக்கின்றன. மாபெரும் தாய் கதைத் தொகுப்பு அம்மாதிரிப் படைப்புகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
