பித்தனோ பேதையோ!

பைத்தியக்காரனின் பெண்பால் பைத்தியக்காரி என்பர். அவ்விதம் பித்தனின் பெண்பால் பித்தி என்று இல்லை. புலவனின் பெண்பால் புலவி இல்லை. செய்யுள், பாடல், பாட்டு என்பதைக் குறித்த வடசொல் கவி. ‘சான்றோர் கவி எனக்கிடந்த கோதாவரி’ என்பான் கம்பன். கவி கவிதை ஆகி, கவி எழுதுபவன் கவிஞர் ஆனார். இமாலயக் கவி, நயாகரா கவி என்மனார் வேறு இனம். கவிதாயினி எனும் சொல் புனையப்பட்டு இருபது ஆண்டுகள் இருக்கலாம்.

‘பேராண்மை’ – விதியும் விளக்கமும்

அறத்தின் குரலாய் ஒலிக்கும் திருக்குறள் வகுத்த விதிகள் பலவற்றுக்குக் கம்பராமாயணம் விளக்கம் தர முற்பட்டிருப்பதை இரு நூல்களையும் இணைத்துச் சிந்தித்தால் விளங்கிக் கொள்ள முடியும்.இன்னொரு வகையில் சொன்னால் திருக்குறள் இலக்கணம் எனில் கம்பராமாயணம் இலக்கியம் எனலாம்.

மூலமும் உரைகளும்

வள்ளுவர் கூற்றை முந்தைய இலக்கியங்களும் பிந்திய நூல்களும் முன்மொழிந்துள்ளன அல்லது பின்மொழிந்துள்ளன என்பது. இது நாலு சீட்டும் நானூறு கோடியும் கையடையாகப் பெற்றுக்கொண்டு கூட்டணியின் தலைமைக் கட்சி செய்யும் சிறுமைகளை இதர உறுப்புக் கட்சிகள் ஆதரிப்பதைப் போன்ற இழிதகைமை அல்ல.

வெங்காயக் கண்ணீர்

இன்று பாரத மணித் திருநாட்டின் பெருந்துன்பம் என்பது மரணம் ஏற்படுத்தும் டெங்கு முதலாய நோய்கள் அல்ல, ஓராண்டில் இரயில்வே லெவல் கிராசிங்குகளில் எண்ணூறு பேர் செத்துப் போனதல்ல. பல லட்சம் கோடிப் பணம் அரசு வங்கிகளில் வாராக்கடனாக இழந்து நிற்பதல்ல. கொலை, கொள்ளை, கள்ளநோட்டு, ஆள் கடத்தல், வன்புணர்வுத் தீனங்கள் அல்ல. காசு வாங்கி வாக்களிப்பதல்ல. சாதி அரசியல் அல்ல. …..அவற்றைவிட எல்லாம் பெரிய இனமானச் சிக்கல் – வெங்காய விலை உயர்வு.