கம்பனின் கவித் தீண்டலில் இராம காதை  

இறக்கும் தருவாயில், கம்பனின் கும்பகர்ணன் இராமனிடம், “உன்னிடம் இரண்டு வாக்குறுதிகளை கோருகிறேன். முதலாவதாக, சிதைந்துபோன என் உடலை என் எதிரிகள் பார்த்து எள்ளி நகையாடுவதை நான் விரும்பவில்லை; எனவே, உன்னுடைய அம்பால் என் உடலை அப்படியே கடலுக்குள் தள்ளிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இரண்டாவதாக, என் அன்பிற்குரிய தம்பி விபீஷணனை உன்னுடைய பொறுப்பில் ஒப்படைக்கிறேன்; ஏனெனில், உன்னோடு போரிட இராவணன் போர்க்களத்திற்கு வரும்போது, அவனுடைய முதல் இலக்கு விபீஷணனாகத்தான் இருக்கும் என்பதை நான் அறிவேன்.” என்று உரைத்தான்.[3]