இந்தச் சிறப்பிதழ் பயணத்தில் பல சுவாரசியமான தகவல்களும் கிடைத்தன. எங்கள் கும்பகோணம் பகுதியில் கல்யாணம் ஆக வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் காவிரியாற்றின் அருகிலிருக்கும் திருமணஞ்சேரிக்குச் சென்று வழிபடுவார்கள். லண்டன் பாலேந்திராவுடன் பேசிக்கொண்டிருந்தபோது உடனடி கல்யாணத்திற்கு இன்னொரு வழியும் இருக்கிறது என்று தெரியவந்தது. தான் நடத்திய ‘மழை’-யின் (இ.பா எழுதிய முதல் நாடகம்) இணை நடிகையாக வந்த ஆனந்தராணியைக் கைப்பிடித்த கதையைச் சொன்னார். இதேபோல தில்லியில் பாரதி மணியும் க.நா.சுவின் மகள் ஜமுனாவும் மழை நாடகத்தின் வழியே இணைந்ததும் பாலேந்திராவின் உரையாடல் வழியே தெரிந்தது. கோவிலுக்குச் செல்ல ஆர்வமில்லாதவர்கள் கட்டாயம் இ.பாவின் மழை நாடகத்தைக் முயலலாம்.
Category: ஆளுமை
இ.பா சார்
ஆபத்பாந்தவன் அனாதை ரட்சகனாக அன்றைய தினம் சுஜாதா தடுத்தாட்கொண்டபோது இ.பா சார் மௌனமாக வாழ்த்து சொன்னது – குட் லக் – நினைவில் திரும்ப திரும்ப வந்தது. நான் சந்திக்கப் போன இ.பா இவரில்லை. அவர் இருக்கும் இடத்தை கலகலவென்று மாற்றும் நகைச்சுவை உணர்வு மிகுந்தவர். நான் சந்தித்த தினத்தில் அவர் பகடியை இல்லத்திலேயே விட்டுவிட்டு வந்திருப்பார். ச்விட்ச் போட்டதும் விளக்கு எரிவது போல் நிமிடத்துக்கு ஒரு நய்யாண்டியோ பகடியோ உதிர்த்துக் கொள்ளாமல் கல்லூரியில் தத்துவம், நுண்கலை, இலக்கியம் என்று கற்பிக்கும் வித்வத்கர்வம் சற்றே நனைத்த பேராளுமை.
இ.பா என்றொரு நண்பர்
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்த அந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரோடு எனக்குத் தொடர்பு எதுவும் கிடையாது. எம்.ஏ முதல் வகுப்பில் தேறியிருந்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. பம்பாய் போய் அங்கே ‘Free Press Joumal’ என்ற ஆங்கிலத் தினசரியில் உதவி ஆசிரியராகச் சேர்வதாக இருந்தேன். அப்பொழுது திருச்சியிலிருந்து என் அண்ணனிடமிருந்து ஒரு தந்தி வந்தது. திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகச் சேர விருப்பமிருந்தால் உடனே வரலாமென்று.
இந்திரா பார்த்தசாரதியின் சிந்தனைகளைப் பற்றி சில சிந்தனைகள்
திராவிட இயக்கங்கள் பிம்ப கவர்ச்சியை முன்னிறுத்தி அதிகாரத்தை அடைந்தன எனும் பார்வைக்கு மாற்றாக ஏற்கனவே இங்கு செல்வாக்கோடு இருந்த வழமையைத் தனக்கு சாதகமாக்கிக்கொண்டது. கோவில் விளைவுகள் (விழாக்கள்??), உற்சவங்களோடு தேர்தல் அரசியலுக்கு உள்ள ஒப்புமையை அளிக்கிறார். ‘ஒரு சமுதாயப் புரட்சி ஏற்பட்டிருந்தால் உண்மையாகவே அச்சமுதாயப் புரட்சிக்கு காரணமானவர்கள் புத்தரைப் போலவோ அல்லது இயேசுநாதர் போலவோ அல்லது லெனினை போலவோ மிகப்பெரிய சிந்தனையாளர்களாக இருந்திருந்தால் நம்முடைய இலக்கியம் இப்பொழுது இருக்கக்கூடிய இந்நிலையில் இருக்காது என்று உறுதியாக கூறலாம்.
தமிழ் இலக்கியங்களில் வைணவம் – நூல் அறிமுகம்
ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் வாழ்ந்த காலத்தை பக்தி காலகட்டத்துக்கு (கிபி ஏழாம் நூற்றாண்டு) ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் அமைத்திருப்பதாக குரு பரம்பரை வைபவம் தெரிவிக்கிறது. தமிழ் இலக்கிய ஆய்வாளர்களின் கூற்றுப்படியும், மொழியியல் ஆய்வு வழியாகவும் வைணவ பிரபந்தங்கள் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்கும் பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் என வகைப்படுத்தியுள்ளனர். ஆனாலும், ஆழ்வார்கள் கால வரிசை, அவர்களது பிறப்பிடம், பாடல் பெற்ற கோயில்களின் வரலாறு, நித்திய கைங்கர்யங்களை தொகுத்து வைக்கும் கோயிலொழுகு போன்றவற்றை ஆவணமாகக் கொள்ளமுடியும்.
இந்திரா பார்த்தசாரதியின் மாயமான் வேட்டை: இலட்சியவாதமும் சந்தர்ப்பவாதமும்
இந்திரா பார்த்தசாரதி தன் நாவலில் ஆட்சி அமைப்பில் அதிகாரம் அடங்கியிருக்கும் ஒவ்வொரு அடுக்கையும் அதன் நடிப்பையும் செயலின்மையையும் ஒவ்வொரு காட்சியிலும் நேரிடையாகவும் மறைமுகமாகவும் ’அக்குவேறு ஆணிவேறாக’ சுட்டிக் காட்டுகிறார். இறுதியாக, நாவல் முடிவடையும் தருணத்தில், மாயமான் வேட்டைக்கும் த ஆப்பிள் கார்ட்டுக்கும் உள்ள நெருக்கத்தை நாமே புரிந்துகொள்கிறோம்.
தமிழ் நாடகப் படைப்புலகில் இந்திரா பார்த்தசாரதியின் புதிய தடம்
இலக்கிய வாசிப்பு பழக்கம் இல்லாத நானும் அம்மாவும் இந்திரா பார்த்தசாரதி ஒரு ‘அம்மா ‘ என்றே நினைத்திருந்தோம். ஆனால் கதவைத் திறந்த அந்தப் பெரியவர், ‘ இந்திரா பார்த்தசாரதி அம்மா இல்லை, அப்பா ! ‘ என்று சற்றே கடுமையான அன்போடு சொன்னார். மேலும் புதுவைப்பல்கலைக்கழகத்தின் நூலகம் ராம் இன்டர்நேஷனல் கட்டிடத்தில் இருப்பதாகவும் அங்குதான் உன் ஆசிரியர் இருக்கிறார், உங்களுக்கு அங்குதான் நேர்முகத் தேர்வு நடக்கப் போகிறது என்று வழிகாட்டினார். அந்த பெரியவர் புகழ்பெற்ற இலக்கிய மேதை ஒருவரான க.நா. சுப்பிரமணியம் என்பதை பின்னாளில்தான் தெரிந்து கொண்டேன்.
இந்தியத்தனம் நிரம்பிய நவீன நாடகங்கள்: இந்திரா பார்த்தசாரதி, கிரிஷ் கர்னாட் ஓர் ஒப்பீடு
இந்திய நாடக முயற்சிகள் தொடங்கியபோதே அதற்குப் பலவிதமான எதிர்ப்புகள் இருந்தன. பல்வேறு மொழிகள் பேசும் இந்திய துணைக் கண்டத்தில், ஒவ்வொரு மொழி பேசும் மாநில எல்லைக்குள்ளேயே பல்வேறு மரபுக் கலை வடிவங்களின் செல்வாக்கு நிரம்பிய ஒரு தேசத்தில் -எல்லா மரபுக்கலை வடிவங்களின் அடையாளங்களோடும் கூடிய ஒரு அரங்கியல் வடிவத்தை உருவாக்குவது என்பது சாத்தியமில்லை என்பது முக்கிய காரணமாக முன் வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்தவர்களும் தங்களின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடும் கால கட்டத்தில் அனைவருக்கும் பொதுவான ஒரு வடிவத்தை உருவாக்குவது ஒரு ஒட்டுப் போட்ட ஆடையை உருவாக்குவதைப் போன்றதே தவிர பயன்படுத்தத் தக்க ஆடையைத் தயாரிப்பதாக அமையாது என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்திரா பார்த்தசாரதி எனும் பேராளுமை
‘மழை’ நாடகத்தில் நடிப்பவர்களுக்குத் திருமணம் ஆகிவிடும் என்று ‘இபா’ அவர்கள் நகைச்சுவையாகக் கூறுவார். இது டெல்கியிலும் இலங்கையிலும் நடந்தது. ‘மழை’ நாடகத்தில் நடித்த நானும் ஆனந்தராணியும் பின்னர் திருமணம் செய்து கொண்டோம். இது குறித்து ‘இபா’ கூறியதை அண்மையில் சென்னையில் நடந்த எனது நூல் வெளியீட்டு வைபவத்தில் உரையாற்றிய ஆவணத் திரைப்பட இயக்குநர் திரு. அம்ஷன் குமார் நினைவுபடுத்தினார்.
தத்துவத்தின் மீதான வரலாற்றின் நகைப்பு (அல்லது) இரண்டாவது நசிகேதன் வழி நான்காவதாக ஒரு கேள்வி
ஒரு சமூகம் எதைக் கைவிடுகிறது? எதற்காகக் கைவிடுகிறது? எந்த விதிகளைத் தளர்த்திக் கொள்கிறது? இக்கேள்விகள் சமூக மாற்றத்தைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமானவை. உதாரணமாக, பிராமணர்களுக்குக் கடல் தாண்டிச் செல்வது என்பது தடைசெய்யப்பட்ட ஒன்று. மூன்று கால சந்த்யாவந்தனமும் கட்டாயமானதாகக் கருதப்பட்டது. ஆனால் நவீனக் கல்வியையும் வேலைவாய்ப்புகளையும் ஏற்றுக்கொண்ட பிராமண சமூகம் இவ்விரு விதிகளையும் கணிசமாகத் தளர்த்திக் கொண்டதைக் காண்கிறோம். அங்கு பழமைக்கும் நவீனத்துக்குமான ஒரு மோதல் உருவாகிறது. தலைமுறைகளுக்கிடையே விவாதம் எழுகிறது. இதேபோன்ற உரையாடல்கள் ஜைன சமூகத்திலும் நிகழ்ந்துள்ளன. இம்மாற்றங்களின் அடிப்படையில் பொருளாதார முன்னேற்றத்திற்கான தேவை உள்ளது.
நினைவில் மேவும் உரையாடல்கள்
இ.பா.வுடனான உரையாடல்கள் எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் செல்லாது; அது பல தளங்களில் விரிந்து செல்லும் அனுபவம். இலக்கியம், சமூகம், அரசியல், லெளகீக வாழ்க்கையெனச் சென்ற அந்த உரையாடல்கள் என்னை மெதுவாகச் செழுமைப்படுத்தின. அவர் பேச்சு சில சமயம் திக்கி வரும். ஒரு வரியின் மீது இன்னொரு வரி படிந்தபடியே செல்லும். கவனத்துடன் அதைக் கேட்க வேண்டும். ஆனால், அதற்குள் ஓடும் சிந்தனை ஓட்டம் தீவிரமானது.
இந்திரா பார்த்தசாரதி – வரலாற்றின் மறுவாசிப்பு
பிராம்மணநெறிச் சடங்குகள், கடவுள் பற்றிய கருத்து, பிறவித் தொடர்ச்சி, ஆத்மாவின் இருப்பு போன்றவைகளை கேள்விக்குட்படுத்திய லோகாயவாதமும், சார்வாகக் கோட்பாடுகளும் இந்திய சிந்தனை மரபின் பகுதியாகவே கொள்ளப்பட்டதையும், நிறுவனங்களுக்கும் அவைகளை எதிர்ப்பவர்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டங்கள் தொன்றுதொட்டு நடந்துவ்ருவதையும், இந்திய தத்துவ வரலாற்றில் பெரும்பாலான தத்துவப் போர்கள் தென்னாட்டில் நடைபெற்றதையும் தன்னுடைய கட்டுரைகளில் குறிப்பிடுகிறார்.
ஆசாரத்தை உடைத்த அறிவுஜீவி
இந்த வரிகளைப் படிக்கிற ஒரு தலைமுறை எளிதாக இ.பா.வை சங்கி என்று முத்திரை குத்திவிட முயலும். ஒரு காலத்தில் அவருக்கு திமுக மீது கடும் விமர்சனங்கள் இருந்தன என்பதற்கு கணையாழியில் அவர் ‘பரகால ஜீயர்’ என்ற பெயரில் எழுதிய அரசியல் கட்டுரைகளே சாட்சி. அந்த நாள்களில் அவர் எழுதிய நாடகம் ஒன்றில் தோளிலிருந்து தரையைத் தொடும் அளவிற்கு துண்டணிந்த ஒரு பாத்திரத்தின் பெயர் இளவழகன். ஆனால் அவரைக் கூப்பிடுபவர்கள் எல்லோரும் இளவு, இளவு என்றுதான் கூப்பிடுவார்கள்.
அருமணிகளின் அழகியல் தேர்ந்த ஆபரணச்சிற்பி
இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களில் அளவில் பெரியதான உடையவர் ராமானுஜர் நாடகம், சமயம் சார்ந்த ஆவணங்களில் இருந்து உருவாக்கப்பட்ட சமகால பிரதிக்கான சிறந்த உதாரணம் எனலாம். காட்சிகளாக நிகழும் இந்த நாடகத்தின் தொடர்ச்சி என்பது ஒரு பாவனை என்கிற முன்னெச்சரிக்கையோடு இந்த நாடகத்தை அணுக வேண்டுகிறார் ஆசிரியர். ராமானுஜர் யாதவ பிரகாசரிடன் சீடராக இருந்து, வேதாந்த சர்ச்சைகளின்பால் கருத்து வேற்றுமை கொண்டு பிரிந்த பிறகு, திருக்கச்சி நம்பியை குருவாக ஏற்றுக் கொள்ளும்போது, வைணவ குரு பரம்பரையின் ஆச்சாரியரான ஆளவந்தாரின் அறிமுகம் ஏற்படுகிறது என்கிறது ராமானுஜ திவ்ய சரிதம்.
வரலாற்றின் நிழலில் அதிகாரத்தின் தனிமை
இங்கு தோல்வியடைந்தவன் தாரா ஷிகோ அல்ல; வெற்றி பெற்ற அவுரங்கசீப்பே. ஏனெனில் வரலாற்றில் வென்றவன், வாழ்க்கையில் தோற்றுவிட்டான். இதுவே கிரேக்கத் துன்பியலின் அடிப்படை உண்மையாகும். மனிதன் தனது வெற்றியிலேயே தனது அழிவுக்கான விதையை விதைத்துக் கொள்கிறான். இந்திரா பார்த்தசாரதியின் மிகப்பெரிய கலைநயம், வரலாற்றை நிகழ்காலத்தோடு இணைக்கும் திறனில்தான் இருக்கிறது. நாடகத்தில் நேரடியாக எந்தச் சமகால அரசியல்வாதியையோ எந்த அரசியல் இயக்கத்தையோ அவர் குறிப்பிடுவதில்லை. ஆனால் நாடகத்தை வாசித்து முடிக்கும் ஒவ்வொருவருக்கும், அது தங்கள் காலத்தைப் பற்றியே பேசுகிறது என்ற உணர்வு இயல்பாக உருவாகிறது.
வேரை மறந்தவன், விலை கொடுத்தவன் – குற்றமும் மன்னிப்பும், போலந்தும் தமிழும்
இன்று நினைத்துப் பார்த்தால், அந்த நாவல் எனக்கு ஒரு இலக்கிய அனுபவமாக மட்டுமல்ல, உலகத்தைப் பார்க்க ஒரு புதிய சாளரமாகவும் அமைந்தது. போலந்து என்ற நாடு, கிழக்கு ஐரோப்பாவின் சோசலிச அரசியல், யூதர்களின் வரலாறு, இந்தியத் தூதரகத்தின் செயல்பாடுகள், வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் வாழ்க்கை, மனித உறவுகளின் சிக்கல்கள்—இவற்றையெல்லாம் முதன்முதலில் இந்த நாவலின் வழியாகத்தான் அறிந்தேன். இணையமும் சமூக ஊடகங்களும் இல்லாத அந்தக் காலத்தில், நல்ல இலக்கியங்கள்தான் உலகத்தின் பல கதவுகளை நமக்காகத் திறந்து வைத்தன.
இந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு சந்திப்பு
‘அஞ்சிறைய மட நாராய்’ என்று திருவாய்மொழியில் ஒரு பாட்டு வரும். தலைவி தலைவனிடம் சொல்கிறாள். அவர்கள் களவொழுக்கத்தில்தானே ஈடுபடுகிறார்கள்!? பராங்குச நாயகி என்று சொல்வார்கள். ‘நாயிக பாவம்’ என்று சொல்வார்கள் அல்லவா? இது பக்தி வெளிப்பாட்டின் இன்னொரு அம்சம். கடவுள்தான் நாயகன். பக்தர்கள் எல்லோரும் நாயகிகள். சங்க இலக்கியத்தில் இருந்து (பிரபந்தத்தில்) இது தொடர்கிறது. இந்தப்பாடலில் இறைவனுக்கு தூது அனுப்புகிறாள் தலைவி.
ஆதவன் சிறுகதைகள்
வர்க்கப் பேதங்களுடைய சமூகத்தில், தொழில் வளர்ச்சிகளின் காரணமாகச் சமூகச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. பொருளாதாரக் காரணங்களினால் குடும்ப வாழ்க்கை நிலை குலைகின்றது. அடிப்படையில், பிரபுத்துவ சமூக அமைப்பை உடைய ஒரு சமுதாயத்தின் மீது, தொழில் யுக வாழ்க்கைக்குரிய மதிப்புக்கள் சுமத்தப்படும்போது, முரண்பாடுகள் மேலோங்குகின்றன. வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுவதிலும், போலிப் பரவசங்களிலும், விளையாட்டுக்காகச் செய்யும் வன்முறைகளிலுந்தான் தங்களை நிரூபித்துக் கொள்ள முடியுமென்று இளைஞர்கள் கருதுகிறார்கள். அவர்களுக்கு நிறையக் கோபம் இருக்கிறது. யார் மீது என்றுதான் அவர்களுக்குப் புரியவில்லை; ‘
‘என்றுமுள தமிழும் இன்று உள்ள தமிழும்’ – இந்திரா பார்த்தசாரதி
‘எந்தக் காரணத்தை முன்னிட்டும் (குறிப்பாக அரசியல் காரணம்) சங்க இலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள் போன்றவை தமிழனுக்கு மட்டும்தான் சொந்தமானவை என்கிற ரீதியில் பிரச்சாரம் செய்வதை நாம் நிறுத்த வேண்டும் என்கிறார். ‘அவைகளை உலக இலக்கியமாகக் கொண்டு கிளாஸிக்கல் மொழியாக தமிழை அடையாளம் காட்டி லத்தீன் கிரேக்க இலக்கியங்கள் போல உலக பொதுச் சொத்தாக ஆக்குவதற்கு தற்காலத் தமிழையும் சங்ககாலத் தமிழையும் தனித் தனியாக பாகுபடுத்த வேண்டும்’ என்கிறார். மிகவும் சிந்திக்க வைக்கிறது இந்தக் கட்டுரை.
நவீன தமிழ் இலக்கியத்தில் நிகழ்காலத்தின் வெளிப்பாடாக இறந்தகாலம்
இந்திரா பார்த்தசாரதியின் இலக்கியப் படைப்புகள் பெருமளவு புத்தெழும் இந்தியக் குடியரசின் குடிமக்கள் எதிர்கொள்ளும் சமகால சமூகப் பிரச்சினைகளைக் கையாள்கின்றன, மேலும் கதைக்களம் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினரின் பிரதிநிதிகள் — முக்கியமாக அறிவுஜீவிகள் மற்றும் அதிகாரிகள் — மத்தியில், ஆசிரியர் தாமே வாழ்ந்து பணியாற்றிய துடிப்பான தலைநகர் புது டெல்லியில் நிகழ்கிறது என்பதைத் தாண்டி, அவரது பல படைப்புகளில் விரிவாகப் புரிந்துகொள்ளப்பட்ட வரலாற்று நிகழ்வுகள் மற்றும் தெளிவாக முன்வைக்கப்பட்ட (அரை)வரலாற்றுப் பொருண்மைகள் பற்றிய வெளிப்படையான குறிப்புகளும் உள்ளன; இவை அவரது தனிப்பட்ட உலகக் கண்ணோட்டத்தின்படி மீள்-எழுதப்பட்டவை.
இந்திரா பார்த்தசாரதி – குறிப்புகள்
அக்னி
ஆகாசத்தாமரை (1991 – கல்கி இதழில் வெளிவந்த தொடர்)
ஏசுவின் தோழர்கள்
காலவெள்ளம்
கிருஷ்ணா கிருஷ்ணா
குருதிப்புனல்; 1975; தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.[4]
சத்திய சோதனை
சுதந்தர பூமி
தந்திர பூமி
திரைகளுக்கு அப்பால்
இந்திரா பார்த்தசாரதி நிழற்படங்கள்
புகைப்பட ஆல்பம் – படத்தொகுப்பு
சொல்வனம் சிறப்பிதழ்: இந்திரா பார்த்தசாரதிஅவர்களின் படைப்புலகம்
தில்லி, போலந்து என்று உலகின் பல்வேறு கல்விச் சூழல்களில் ஆய்வாளராகவும் பேராசிரியராவும் பணியாற்றிய இ.பா., கல்விச் சூழலில் வாழ்ந்தாலும் எப்போதும் இலக்கியத்தோடும் வாசகர்களோடும் நேரடி நாடி தொடர்பை வைத்திருந்தார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில், புதிய குரல்களை அடையாளம் கண்டு களத்தில் நிறுத்துவதில் அவர் காட்டிய தன்னல மறுப்பு, தமிழ் இலக்கிய வரலாற்றில் பதிவாக வேண்டிய ஒன்று.
ஜேம்ஸ் வாட்சன் (1928 –2025)
கேம்பிரிட்ஜில் வாட்சன், க்ரிக் என்ற ஆராய்ச்சியாளருடன் இணைந்து, DNA வின் அமைப்பை கண்டறிவதில் ஈடுபட்டார். DNA-வின் சரியான அமைப்பை ரோசலின்ட் ப்ராங்ளின் மற்றும் வில்கின்ஸ் வழங்கிய எக்ஸ்-கதிர் விளிம்பு வளைவுப் படங்கள் (X-ray diffraction photographs) மூலம் கண்டறிந்தனர். பாஸ்பேட் முதுகெலும்புகள் மூலக்கூறின் வெளிப்புறத்தில் உள்ளது மற்றும் அது ஒரு இரட்டைச் சுருள் என்றும் ரோசலிண்ட் சுட்டிக் காட்டினார். இந்த முக்கிய நுண்ணறிவு, இரண்டு இழைகளும் எதிரெதிர் இணையானவை என்பதை உணர்ந்துகொள்ளவும், சரியான இரட்டைச் சுருள் அமைப்பைக் கண்டுபிடிப்பதற்கும் ஏதுவானது.
🕊️ 2025 நோபல் அமைதி பரிசு — கேள்வி & பதில் தொகுப்பு (FAQ)
மரியா கொரினா மச்சாடோ யார்? அவருக்கு ஏன் நோபல் அமைதி பரிசு வழங்கப்பட்டது?
தகவல்: வெனிசுலாவில் ஆட்சிக்கு எதிராக ஜனநாயகப் போராட்டத்தை நடத்தும் முக்கிய தலைவி.
கிண்டல்: மேற்குலகத்திற்கு பிடிக்காத ஆட்சிக்கு எதிராக நின்றதால் பதக்கம் கிடைத்தது.
2025 அமைதிக்கான நோபல் பரிசு
சிதைந்த ஜனநாயகத்தின் மத்தியில் எழுந்த நம்பிக்கை இந்த 2025 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோ அவர்களுக்கு வழங்கப்பட்டது. சில நேரங்களில் அமைதிக்கான பரிசு அமைதியின் நிறைவேற்றமல்ல; மாறாக அது அறத்திற்கான போராட்டத்தின் அங்கீகாரம். அதன் குரலாக இம்முறை வெள்ளையாடை அணிந்த ஒரு பெண்ணின் “2025 அமைதிக்கான நோபல் பரிசு”
ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்றுமில்லாததற்குள்
பேரழிவின் கலை இந்த ஆண்டு (2025) இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரியைச் சேர்ந்த நாவலாசிரியர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய் (László Krasznahorkai)க்கு அளிக்கப்பட்டுள்ளது. அமைதியின்மையின் அடர்த்தி மற்றும் இருண்மையின் அதிசயம் ஆகியவற்றின் மீதான அவரது படைப்புகளின் தனித்துவமான பார்வைக்காக அளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி குறிப்பிடுகிறது. அவரது படைப்புகள் நேர்த்தியான முடிவுகளை “ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்றுமில்லாததற்குள்”
வாசிப்பின் நிலப்பரப்பு: ஜாய்ஸின் டப்ளின்
கதைகள் சாதாரண வாழ்க்கையின் பல்வேறு அடுக்குகளைத் தாண்டிச் செல்கின்றன, நிச்சயமாக அவை அந்தச் சாதாரணத்துவதையும் அது ஏற்படுத்தும் விரக்திகளின் பட்டியல்கள் மட்டுமே அல்ல. ஜாய்ஸ் குறிப்பிட்ட “scruplously mean” மொழி , கட்டுப்பாடு, துல்லியம், நடையின் சிக்கனம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது, அழகியலும் தார்மீகத் துல்லியமும் அவற்றில் பொதிந்திருந்தன. ‘எபிஃபனீஸ்’ (epiphanies) என்ற விஷயத்தைப் பேசிவிட்டு, இந்த உரைநடை பாணிக்கு வருகிறேன். இது ‘டப்ளினர்ஸ் -இன் புகழ்பெற்ற அடையாளமாக மாறிவிட்டது
பார்த்து விட்டீர்களா? – 10 விழியங்கள்
அமெரிக்காவும் இந்தியாவும் 1. ஸ்டீபன் கோல்பெர்ட் கேன்சல் – ஒடுக்கப்படுகிறதா அமெரிக்க பேச்சுரிமை? தினேஷ் ஜெயபாலன் | பாஸ்டன் பாலாஜி வரி, வட்டி, கிஸ்தி – அமெரிக்க இந்திய உறவு? தினேஷ் ஜெயபாலன் | பத்ரி சேஷாத்ரி | ஶ்ரீகாந்த் மீனாக்க்ஷி சினிமா – மிகை நாடும் கலை “பார்த்து விட்டீர்களா? – 10 விழியங்கள்”
கருவியில் கிடைத்த சுநாதம்
வேதமூர்த்தி என்றதும் முதலில் மனத்தில் எழுவது அவர் கருவியில் கிடைத்த சுநாதம். ஸ்ருதி பத்திரிக்கையில் தொடர்ந்து கலைஞர்களைப் பற்றி எழுதிய சங்கரநாராயணன் ஒருமுறை சொன்னார், “பகவான் எதுக்கு ரெண்டு காதைக் கொடுத்திருக்கான் தெரியுமா? ஒரு காதுல காருகுறிச்சி அருணாசலத்தோட நாதத்தை நிரப்பிக்கணும். இன்னொரு காதுல வேதாரண்யம் வேதமூர்த்தியோட நாதத்தை நிரப்பிக்கணும்.”. பொதுவாக நாகஸ்வர கலைஞரின் நாதத்தை, பாடகரின் குரல்வளம் போல, இயற்கையில் அமைந்தது என்று கருதுவதுண்டு.
தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் ஒற்றுமை
ஒவ்வொரு ஆண்டும் இவர் நடத்தும் விருது நிகழ்ச்சியைக் கண்டு களிக்க ஆயிரம் கண்களோடு பெண்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். இரு தெலுங்கு மாநிலங்களிலும் இந்த விருதுக்கு அத்தனை முக்கியத்துவம் உள்ளது. டாக்டர் அமிர்தலதா, ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினத்தன்று மூன்று பெண்மணிகளுக்கு ‘அமிர்தலதா வாழ்நாள் சாதனையாளர் விருதும், பன்னிரண்டு பெண்மணிகளுக்கு ‘அபுரூப விருதும்’ பெருமையோடு வழங்குகிறார். பல்வேறு துறைகளில் தம் திறமையை வெளிப்படுத்தும் பெண்மணிகளைத் தேடி அடையாளம் கண்டு நேரில் சென்று அழைத்து கௌரவிக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
குகே வா தியாங்கோ
தன்னுடைய எளிமையான கேள்விகளால் குகே உங்களை உடைத்து விடுவார். மிக மென்மையான வழிகளில் தூண்டி, ஆப்பிரிக்க இலக்கியம் மொழி, உண்மையின் நம்பகத்தன்மை குறித்த தன்னுடைய கூர்மையான கருத்துக்களுக்கு நம்முடைய தெளிவான பதிலை கொண்டு வர முயல்வார். அவரருகில் இருக்கையில் நம்மால் மந்தமாக இருக்க முடியாது.
எம். கோபாலகிருஷ்ணன்: சித்திரகூடம்
எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் சிறப்பாசிரியர் இதழ்
எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் சிறப்பிதழ் வெளியாகி இருக்கிறது.
வேலியண்ட் – ஐரோப்பிய செவ்வியல் இசையின் புது தொடக்கம்
பல இந்திய வாத்தியங்களை தனது பாடல்களில் நல்ல முறையில் அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாது அவற்றைக் கொண்டு தேவையான உணர்வுகளை ரசிகர்களிடையே உண்டாக்க முடியும் என உணர்ந்த ஒரு ஞானவான் அவர். அடுத்தடுத்த வரும் சிம்பொனிகளில் இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என ரசிகர்களாக நமது வேண்டுகோளாக இருக்க வேண்டும். இந்திய இசைக்கும், இளைஞர்களிடையே செவ்வியல் இசைக்கலையில் எதிர்காலம் பற்றி அவை பல புதிய திறப்புகளை அளிக்க முடியும். அது மட்டுமல்லாது, ஐரோப்பிய இசை வடிவங்களுக்கு அவை நமது பெரும் கொடையாக இருக்க முடியும்.
வாழ்த்துகள் – வினோத் குமார் சுக்லா
திரு வினோத்குமார் சுக்லா ராஜ் நந்த் காவ் (சத்தீஸ்கர்) இன்னும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு 1971 ஆம் ஆண்டு வெளிவந்தது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து 1981 இல் இவரது இரண்டாம் கவிதை தொகுப்பு வெளியானது. வேளாண்மையில் முதுகலை பட்டம் பெற்ற இவர் ராய்ப்பூர் வேளாண்மைக் கல்லூரியில் சில காலம் ஆசிரியராக பணியாற்றினார். இவருடைய கவிதை தொகுப்புகள் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
வினோத்குமார் சுக்லா கவிதைகள்
ஞானபீட விருதைப் பெறவிருக்கும், வினோத்குமார் சுக்லா 2024_ஆம் ஆண்டுக்கான, இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருதினை தனது 88_ஆவது வயதில் பெறவிருக்கிறார் இந்தி எழுத்தாளரும், கவிஞரும், நாவலாசிரியருமான வினோத்குமார் சுக்லா (1 ஜனவரி 1937). யதார்த்தத்தில் இருந்து மாயத்தை வெளிக் கொண்டு வரும் நவீன பாணி எழுத்துக்காகப் “வினோத்குமார் சுக்லா கவிதைகள்”
எம்.டி.வாசுதேவன் நாயர் – அஞ்சலி
வீழ்ச்சியடைந்த தரவாடுகளின் கதைசொல்லி என்று சொல்லப்படும் எம்.டி.யின் முதல் நாவலான “நாலுகெட்டு” 1958ல் கேரள சாகித்ய அகாடமி விருது பெற்றது. மருமக்கத்தாயத்தின் சிதைவை விவரிக்கும் கதை அது. கேரளத்தின் வள்ளுவநாட்டுப்பகுதியில் ஒரு பழமையான நாயர் தறவாட்டு குடும்பத்தில் தந்தையின்றி வளரும் அப்புண்ணியையும், வயதான நம்பூதிரிக்கு வாழ்க்கைப்பட்டு அந்த நாலுகட்டு வீட்டில் வாழ வரும் யசோதராவையும் பற்றிய நாவல்
ஜிம்மி கார்ட்டர் தனது வேலையை இழந்து தனது பணியை எவ்வாறு கண்டுபிடித்தார்
ஈரானிய அரசாங்கத்துடனான நேரடி மோதலைத் தவிர்த்து, பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்ற கார்ட்டரின் செயல் வெற்றி பெறவில்லை. ஒரு வருடத்திற்கும் மேலாக பணயக்கைதிகளாக இருந்த அமெரிக்கர்களை மீட்டு வருவது ஒரு முக்கிய அரசியல் கடமையாக மாறியது. 1980ல் பணயக்கைதிகளை மீட்பதற்கான ரகசிய அமெரிக்க ராணுவப் பணியின் தோல்வி (விமானம் மற்றும் ஹெலிகாப்டரின் பாலைவன விபத்து) கார்ட்டர் நிர்வாகத்தின் திறமையின்மை மற்றும் துரதிர்ஷ்டத்தைப் பிரதிபலித்தது.
ஒழுங்கைக் குலைக்கும் மனிதன் – ஜாக் டாட்டி
இதனைக் கண்ட டாட்டி திருவாளர். ஹ்யூலோ கதாபாத்திரத்தை உருவாக்குகிறார். R K லஷ்மணின் திருவாளர் பொதுஜனம் (Common Man) போன்ற ஒரு மனிதன். வட்டத்தொப்பி, நீள் மேலங்கி, குதிகாலுக்கு மேல்வரை மட்டும் நீண்ட பேண்ட், வாயில் புகைகுழாயுடன் சற்றே முன் சாய்ந்து குதிகாலை உந்தி நடக்கும் ஒரு கனவான். ஹ்யூலோவுக்கு என்ன வேலை எங்கு வசிக்கிறார் என்று ஒருவருக்கும் தெரியாது. ஆனால், எந்த ஒரு காட்சியிலும் அவர் நுழையும்போது ஏற்கனவே அறிமுகமாகியவரென்றே பார்வையாளருக்குத் தோன்றும்.
கனடா! கனடா!
“எந்த கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?” என்ற கவிதை நூலுக்காக இளவாலை விஜயேந்திரன் பரிசு பெற்றார். இலங்கையின் மலையக நகரான நுவுரேலியாவில் பிறந்தவருக்கும் கங்கை என்ற நதியின் குறியீட்டுப் பாதிப்பு இருப்பதைக் கண்டு வியந்தேன். புனித நதிகள் என்ற கோட்பாடு இந்தியாவுக்கு மட்டும்தானா? பிற ஆசிய நாடுகளுக்குக் கூட இல்லையா? இவரும் தன் உரையாற்றும்போது மிகுந்த மனவெழுச்சியுடன் காணப்பட்டார்.
மூன்று அறிஞர்கள்
மூவரும் அவர்கள் காலகட்டத்தைய இந்தியாவை (கால்ட்வெல்லைப் பொறுத்தவரை தமிழ்நாட்டை) புரிந்து கொள்ள முயன்றவர்கள். இவர்களின் புரிதல் முற்றிலும் தவறானது என்பதால் இவர்களை அவதூறு செய்வது முட்டாள்தனமானது. மூவரும் அன்றைய ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகள். அதே சமயத்தில் தாங்கள் எடுத்துக் கொண்ட பணிகளை மிகச் சிறப்பாகச் செய்ய முயன்று அவற்றில் ஓரளவு வெற்றியும் கண்டவர்கள்.
பிபேக் தேபராய் (1955-2024)
‘(Requiem) ‘கோரிக்கை’ என்ற இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பத்தியில், தன்னைத்தானே உள்விசாரணை செய்யும் விதத்தில், அவர் கடைசியாக எழுதியது வாழ்வின் நிதர்சனம், இயற்கையின் இயக்கம், தத்துவ விசாரங்களைத் தொட்டுச் செல்லும் ஒன்று. அவர் எழுதுகிறார் “முன்னர், யயாதி, புலனின்பத்திற்காகத்தான் இளமையைக் கேட்டான் என நினைத்தேன். இப்போது தோன்றுகிறது- தன் உடலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் ஏக்கம் அது.
ஹான் காங் – இலக்கியத்திற்கான நோபல் பரிசு
1970ஆம் ஆண்டு தென் கொரிய நகரான Gwanjuவில் பிறந்த ஹான் காங்க்குக்கு இலக்கியத்துக்கான 2024 ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. அவரது தந்தை ஹான் சியூங் வோனும் புகழ் பெற்ற நாவலாசிரியர். காங் தனது 23ஆம் வயதில் ‘இலக்கியமும் சமூகமும்’ என்ற பத்திரிக்கையில் கவிதைகள் எழுதி தனது இலக்கிய “ஹான் காங் – இலக்கியத்திற்கான நோபல் பரிசு”
எல்லா நேரத்திலும் அதிகபட்ச முயற்சியைக் கொடுங்கள் – பால் ஆஸ்டர்
மேலாக நகைச்சுவையாக அறியப்படும் இது, அவரின் சிந்தனை முறையையும், எழுதும் முறையையும் காட்டுவது எனப் பல எழுத்தாளர்கள் சொல்கிறார்கள். 34 அபாரமான நூல்களை எழுதியிருக்கிறார். அதைவிட முக்கியமாக அபாரமான வாசகர். “படைப்பாளியின் வார்த்தைகள் எதிரொலியாக உங்கள் சிந்தையில் கேட்கும்போது உங்களைச் சுற்றியுள்ள இரம்மியமான அமைதி”க்காக வாசிப்பின்பமாக பிறரின் கதைகளை விரும்பினார்.
வாழ்நாள் சாதனையாளருடன் நேர்காணல்
அங்கு பள்ளியில் தவில் படிப்பு என்பது என்பது மூன்று ஆண்டுப் பயிற்சி. என் குருநாதருக்கு என்னை இன்னும் கூட அவருடன் வைத்து நிறையச் சொல்லித் தர வேண்டுமென்று ஆசை இருந்திருக்கும் போல. எனக்கு அந்த வயதில் அது புரியாமல் போனது. மற்ற பிள்ளைகள் மூன்றாண்டுப் படிப்பை முடித்துக் கிளம்பும்போது நானும் பெட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டேன். நான் அப்படிச் செய்ததைப் பார்த்ததும் அவருக்குக் கடும் கோபம். “போ! போ! இனி என் முகத்திலேயே விழிக்காதே.”, என்று திட்டினார்.
கதைகளை ரசிப்பது எப்படி?
புதிய வாசகனுக்கு புத்தகத்தின் மொழி என்ன, அதை எவ்வாறு வாசித்தால் உதவியாக இருக்கும், கதையின் உத்தேசம் என்ன, கதை ஏதேனும் தத்துவ பின்புலத்தில் உலக பார்வை உள்ளவரால் எழுதப்பட்டதா, அது சொல்லும் கதையில் உள்ள புதுமை என்ன என்றெல்லாம் புதிதாக வாசிக்க இருப்பவருக்கு ஒரு உரையாடலை உருவாக்கி அளிக்க இடம் உள்ளது.
கருஞ்சாந்து நிற ஆற்றலாளர்கள்
ஈரம் கசியாத, சுகாதாரப் பட்டியுடன், அணையாடையும் இருக்கும், பெண்கள் பாதுகாப்பாக சங்கடமில்லாமல் உணரும். ‘அட்ஜெஸ்டபில் பெல்ட்டை’ இவர் வடிவமைத்தார். முதலில் இந்த சாதனத்தை வரவேற்ற ஒரு குழுமம், இவர் ஒரு கறுப்பினத்தவர் என்று அறிய வந்ததும் சந்தைப் படுத்த மறுத்து விட்டது. காப்புரிமைக் காலம் முடிந்து விட, எவரும் இந்த சாதனத்தை வடிவமைக்கலாம், சந்தைப் படுத்தலாம் என்ற விதி முறையின் படி, இவரது இந்தக் கண்டுபிடிப்பு, இவருக்கு அழியாப் புகழை தந்ததே தவிர, பணம் தரவில்லை.
வண்ணதாசனின் வரிகள் வரைந்து செல்கின்ற அழியாச் சித்திரங்கள்
மே 1974இல் தலைஞாயிறு இலக்கிய அமைப்பு பதிப்பித்த, 32 கவிஞர்களின் 42 கவிதைகளை உள்ளடக்கிய ‘நாற்றங்கால்’ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த வண்ணதாசனின் (கல்யாண்ஜி) இரண்டு கவிதைகளில், ‘குரங்கின் குரங்குகளால் குரங்குகளுக்காக‘ என்கிற தலைப்பில் வெளியான கவிதை இது. பயத்துடன் விடியும் காலைகுரங்குகள் வருமோ என்றுமதில் சுவர் ஓரம் “வண்ணதாசனின் வரிகள் வரைந்து செல்கின்ற அழியாச் சித்திரங்கள்”
பெருங்கரடி: கிரெக் பேர் பற்றிய நினைவுகள்
கிரெக் பேரை நான் முதன் முதலில் எப்போது சந்தித்தேன் என்று நினைவில்லை, ஆனால் எங்கள் ஆரம்பகால சந்திப்புகளில் ஒன்று இருபது ஆண்டுகளுக்கு முன், மெதினா நகரிலிருந்த ஒரு கோடீஸ்வரரின் அடக்கமான ஆனால் உச்ச நிலை தொழில் நுட்பம் கொண்டிருந்த வீட்டில் (இதற்கான பாராட்டுகள் அவர் மனைவிக்கே சேரும்) நேர்ந்தது. (அந்தக் கோடீஸ்வரரின் பெயர் இங்கு தேவையில்லை.) கிரெக்கும் நானும் புத்தகங்களைப் பற்றி உரையாடினோம்.
