சிந்தனையின் சுருக்கமான வரலாறு

புத்தகம் அறிவோம்: வாழ்வதற்கான ஒரு தத்துவ வழிகாட்டி அறிமுகம்  “சிந்தனையின் சுருக்கமான வரலாறு: வாழ்வதற்கான ஒரு தத்துவ வழிகாட்டி(A Brief History of Thought: A Philosophical Guide to Living (Learning to Live))” என்ற இந்த புத்தகத்தினை சமகால ப்ரெஞ்ச் தத்துவ ஆசிரியர் லூக் பெரி “சிந்தனையின் சுருக்கமான வரலாறு”

ஆண்மை

தன் மாளிகையின் உப்பரிகையில் குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டிருந்தார் பீஷ்மர். நதியின் அலைகள் காற்றில் அலைபாய்ந்து கரைகளைத் தொட்டுச் சென்றன. அவைகளின் மேல் ஆதவனின் பொன்னிறக் கிரணங்கள் ஆசையுடன் படிந்தன. இவைகளெல்லாம் தன் இயல்பில் இருக்கையில் ஏன் மனிதன் மட்டும் இயல்புகளைக் கட்டுப்படுத்தும் நெறிமுறைகளை வகுத்தான்? வாய் பேச “ஆண்மை”

தமிழ் நாவலின் விரியும் எல்லைகள்

ஆவணப்படுத்துதல் நாகரிக வரலாற்றின் பிரிக்க முடியாத அம்சம்.  சினம், வன்மம், வீரம் முதலியவை மனித வரலாற்றில் தேவையான அளவு ஆவணப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளன. பகைவரை வெற்றி கொள்வதற்கான கருவிகளாக இவை கருதப்பட்டன. இதற்கு மாறாக  ஒத்துழையாமையைக் கருவியாகக் கொண்டு பகைவரை வென்றெடுக்கும் முறையை மகாத்மா காந்தி இருபதாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தினார். எங்கோ நடப்பதாக நினைத்துக்கொண்டிருந்த  மெய் காக்கும் போராட்டம் என்னும் இந்த ஒத்துழையாமைத் தத்துவப் போராட்டம் தமிழ்நாட்டில் எவ்வாறு நிகழ்ந்தது என்பதைத் தன் சொந்த அனுபவமாக அமைத்து மூன்று பாகங்களாக சி.சு.செல்லப்பா எழுதிய  சுதந்திர தாகம் (1997) நாவல் ஒட்டு மொத்த மனித நாகரிகத்தின் புதியதொரு பகுதியை ஆவணப்படுத்தியிருக்கிறது.

ராமகிருஷ்ணர் பல மதங்களைக் கையாண்டவரா?

பிற மத ஸ்தாபகர்களைப்போல் இயேசுவும் தம்மைத் தீர்க்கதரிசியாகவும் கடவுளின் வாக்குறுதியை மக்களுக்கு அறிவிப்பவராகவும் நினைத்தவர். நான் மறுபடியும் உங்கள் ஆயுட்காலம் முடிவதற்குள்ளேயே இறந்துபின் திரும்புவேன் என பலமுறை கேட்போரிடம் கூறியுள்ளார். நடந்தது என்ன? 2000 வருடங்கள் கழிந்தபின்னும் திரும்பிவரவில்லை.

உணர்ச்சி வசப்படல் எவ்வாறு மூளையால் உருவாகிறது?

”ஆசை” திரைப்படத்தில் வரும் வசனம் நினைவுக்கு வருகிறது: “ஒருவரின் முகத்தைப் பார்த்தே அவர் நல்லவரா, கெட்டவனா என்று தெரிந்து கொண்டு விடுவேன்.” அவ்வாறு அறிய முடியுமா? அகத்தின் அழகை முகத்தில் பார்க்கலாமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை உங்களின் முகபாவங்கள் காட்டிக் கொடுத்துவிடுமா? சந்தோஷத்தையும் துக்கத்தையும் கோபத்தையும் கவலையையும் “உணர்ச்சி வசப்படல் எவ்வாறு மூளையால் உருவாகிறது?”

காண்பவை எல்லாம் கருத்துகளே

This entry is part 1 of 6 in the series உலக தத்துவம்

பெர்க்லியின் தத்துவமே முதலாவதும் முழுமையானதுமான கருத்து முதல்வாதப் பார்வை கொண்டது என்று கருதப்படுகிறது. இவர் புறத்தில் காண்பது எல்லாமே நம்மில் எழும் கருத்துக்களையே என்கிறார். இப்படிச் சொல்வதினால் ஐயவாதிகளால் நாம் காணும் காட்சியை ஐயத்திற்குள்ளாக்க முடியாது என்கிறார். காணும் காட்சி நம்மைத் தாண்டிய பொருளாக இருக்கும்போதே அதன் மீது ஐயம் எழுப்பமுடியும். காணும் காட்சி நம்முடைய கருத்துக்களாக இருக்கும்பட்சத்தில் அவற்றின் உண்மை நிலையைப் பற்றியும் அவற்றின் இருப்பைப் பற்றியும் ஐயப்படவே முடியாது என்கிறார். இருப்பதால் தான் காண்கிறோம். இருப்பு உடையது காண்பதற்குரியது – Esse est percipi என்பது பெர்க்லியின் பிரபல கூற்று.

வரலாறு குறித்து ஹேகல்

This entry is part 6 of 6 in the series உலக தத்துவம்

ஹேகல் இவ்வளர்ச்சியை மேலும் பல விவரங்களுடன் நான்கு வகையாக வகுத்துக்காட்டுகிறார். கிழக்கத்திய உலகில் அரசனே விடுதலையுடையவன் என்று அறிந்திருந்தனர். விடுதலையின் ஆன்மா ஒரே ஒரு மனிதனில் தோற்றம் பெற்றிருப்பதால், அம்மனிதனின் விடுதலையானது பிறப்பெனும் ஒர் எதர்ச்சை நிகழ்வால் நிர்ணயிக்கபட்டதால், அவ்வகை விடுதலையானது முற்றிலும் தற்செயலானது. மேலும், மக்கள் தங்களுக்குள் இருக்கும் அகவய விடுதலையை அறியாதிருந்தனர். அதனால் ஹேகல் இதை ஆன்மாவின் வளர்ச்சியின் பிள்ளைபருவம் எனக் கருதினார்.

ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது

தத்துவ ஞானி ஜே கிருஷ்ணமூர்த்தியுடனான தன் அனுபவங்களை விவரிக்கிறார் ஏகாந்தன்

பிப்பல மரம்…

அண்டவெடிப்பின் ஆதி நொடி துவங்கி, யாதொரு இயக்க நேர்தலின் நிமித்தம் நிலைகுலைவா ஒழுங்கமைவா என்று ஆராய்வது அறிவியல். அதையும் கடந்து உயிர்களின் உருபுகளில் மேல் காலத்தின் திரிபுகளால் ஊழ் வந்தமர்ந்து உலா போவதன் ரகசியம் உணர முயல்வது ஆன்மீகம். ஆன்மீக ஊஞ்சலில் முன்னும் பின்னுமாய் ஊனை இயக்குகிறது வயது. அந்த ஆட்டத்தில் அனுபவம் பெறுகிறது மனது. அனுபவங்களை ஒன்றன் மீது ஒன்றாய் அகத்தின் மீது அடுக்கி வைத்துக் கொண்டே போவதனால் தான் வயதுக்கு அகவை என்ற சொல் ஏற்பட்டதோ?

ரோபாட்களுக்கு விருப்பு வருமா?- ஜூடேயா பேர்ல்:நேர்காணல்

பேர்ல்: ரோபோட்டுகள் நிகழ்வுச் சான்றுகளுக்கு மாறாக, “நீ இன்னும் நன்றாகச் செய்திருக்க வேண்டும்,” என்பதுபோல், ஒன்றுடனொன்று தகவல் பரிமாறிக் கொண்டால், அப்போது அது முதல் தடயமாக இருக்கும். கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கும் ரோபோட் அணி ஒன்று இந்த மொழியில் பேசிக் கொள்ளத் துவங்கினால் அப்போது அவற்றுக்கு சுய இச்சை உணர்வு இருக்கிறது என்பது நமக்குத் தெரிய வரும். “ நீ பந்தை எனக்கு பாஸ் செய்திருக்க வேண்டும்- உனக்காகக் காத்திருந்தேன், ஆனால் நீ பாஸ் செய்யவில்லை!”. “நீ செய்திருக்க வேண்டும்,” என்று சொன்னால், நீ என்ன செய்தாயோ, உன்னை அப்படிச் செய்யச் செய்த உந்துதல் எதுவாக இருந்தாலும் அதை நீ கட்டுப்படுத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று பொருள். ஆனால் நீ கட்டுப்படுத்தத் தவறிவிட்டாய் என்று சொல்வது, எனவே முதல் அறிகுறி உரையாடலாய் இருக்கும்; அடுத்தது, இன்னும் நல்ல கால்பந்தாட்டம்.

விதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி?

ஏன் இவ்வாறு நடந்தது? எப்படி இந்த நிலை உருவானது? உண்மையான ஆதார நிமித்தன் எது? இவ்வாறு நிழந்ததற்கான மூலப் பொறுப்பை எங்ஙனம் கண்டு கொள்வது?
தூண்டு காரணம் என்ன என்பதையும், எப்படி ஒரு வினை நடந்தது என்பதையும் The Book of Why: The New Science of Cause and Effect புத்தகத்தில் ஜூடேயா பெர்ல் என்பவரும் & டானா மாக்கென்ஸி என்பவரும் விரிவாக அலசுகிறார்கள். மனித சிந்தனையில் மூலாதாரத்தை கணினிக்குப் புரியுமாறு விளக்குவது எப்படி என்பதற்கு பாதை போடுகிறார்கள்.

பொய்யுலகை அளிக்கும் தீயசக்தி

This entry is part 4 of 6 in the series உலக தத்துவம்

அறிவின் தேடலில் ஈடுபடுபவர்கள் தங்களின் தேடலில் தெளிவு பெற அவர்கள் ஆராயும் விஷயத்தை ஒரு புனைவு தருணத்திற்குள் வைத்துப்பார்ப்பது வழக்கம். Thought experiment என்ற இந்த முறை நாம் வழக்கமாக அடைந்திருக்கும் பழக்கப்பட்ட பார்வைகளை உதறிவிட்டு புதிய பார்வைகளைப் பெற உதவுகிறது. பல சிந்தனைச் சோதனைகள் அதைப் படைத்தவருக்கு புதுப்பார்வைகளைப் பெற உதவுவதுடன் காலத்திலும் புதிராக நிலைத்துவிடுகின்றன. இவ்வகைச் சிந்தனைச் சோதனைகள் புனைவை படைப்பவர்களுக்குப் புனைவிற்கான விதையாக அமைகின்றன்.

மேலை தத்துவம் பகுத்தறிந்த கடவுள்

This entry is part 5 of 6 in the series உலக தத்துவம்

கடவுள் இருப்புக்கான வெவ்வேறு வகையில் வெளிப்பட்டாலும் அடிப்படையில் இவ்வாதங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. இருப்பியல்வாதம்(ontological argument), பிரபஞ்சவியல்வாதம்(cosmological argument), இலக்கியல்வாதம்(teleological argument. இருப்பியல்வாதம் கடவுளின் வரையறையைக் கொண்டு கடவுள் இருப்புக்கு வாதங்களை முன் வைக்கும் முறை. இரண்டாவது இயற்கையின் பொது அம்சங்களைக் கொண்டு கடவுளை அதன் அவசிய காரணமாக முன் வைக்கும் முறை. இதன் பெயர் பிரபஞ்சவியல்வாதம். மூன்றாவது இயற்கையின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தைக் கொண்டு கடவுளின் இருப்புக்கான வாதத்தை முன் வைப்பது இலக்கியல்வாதம்.

கண்கள் செவிக்க மறுக்குமோ? வில்லியம் காஸின் ஐம்பது தூண்கள்

எனவே, மீண்டும் இக்கேள்வி, ஏன் எழுத வேண்டும். காஸின் கனத்த பதில்: “அவன் செய்வது அனைத்தும் எந்தப் பொறுப்புமற்ற ஓர் உள்ளார்ந்த தேவையிலிருந்து எழ வேண்டும்.” பின்விளைவுகள் குறித்து கவலைப்படாத காஸின் இத்தகைய உந்துதலுக்கு நாம் கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்- இனி கோழிக்குஞ்சுகள் கொட்டகைக்கும் வேலிக்கும் இடையில், “ட்யூபிலிருந்து பற்பசை போல்” பிதுங்கிச் செல்லலாம், மரமொன்றால் ” உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றாய் அழுக்கை” மாற்ற முடியும் (வாழ்க்கையின் அழுக்கில் வேர்கொண்டுள்ள எழுத்தாளன் அதன் கசடுகளை கலையின் பொன்மூச்சாய் மாற்றும் ரசவாதம் போல்), ஆங்கில மொழியின் இரண்டாம் எழுத்தான பி, “இண்டியானாவில் உள்ள ஒரு வயலோடு பிணைக்கப்பட்ட சிற்றூர்” ஆகலாம், ஊறுகாய்கள் “முதலைகள் போல் உறங்க”லாம், “ரப்பர் ஷூக்கள் அல்லது யாரோ ஒருவனின் இருமல் போன்ற தனிமை” மானுட உணர்வாகலாம். “பளபளக்கும் சிறுமணிகள்” போல் உவமைகள் திரு. காஸில் ஊஞ்சலாடுகின்றன என்பதைச் சொன்னேனா?

மனம், மூளை மற்றும் பிரக்ஞை

உள்ளபடிக்கு,பிரக்ஞை என்பது உயிரிய நிகழ்வே என்ற புரிதலை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். மூளை எப்படிச் செயல்படுகிறது என்பது நமக்கு பெரும்பாலும் இன்னமும் புரிபடாமல் இருப்பதே இது பிரச்னையை மேலும் தீவிரப்படுத்துகிறது. மூளை அளவுக்கு மீறிச் சிக்கலான அவயம். நாம் இன்னமும் மூளைச் செயல்பாட்டின் மிக ஆதாரக் கொள்கைகளைப் பரிசீலிக்கும் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறோம். மூளையின் அடிப்படைச் செயல்பாட்டு அலகு (functional unit ) நியூரான் என்று யூகித்துள்ளது கூட தவறாக இருக்கக்கூடும். நியூரான் மூளையின் அடிப்படை அலகென நினைப்பது, ஒரு காரின் அடிப்படை அலகு மாலிக்யூல் (molecule ) என்று எண்ணுவதை ஒத்த சகித்துக் கொள்ள முடியாத தவறு. எனவே மூளையைப் புரிந்து கொள்ள இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டும் ; அது ஒன்றே சரியான வழி

பருவம், படம், பீஷ்மர் & போப்

துரியோதனன் கேள்வி ரொம்பவே விசித்திரமானது. அவனுடைய அப்பாவே குரு வம்சம் இல்லையே? திருதராஷ்ட்ரனே விசித்திர வீர்யனின் பிள்ளை இல்லை. வேத வியாசரும் அம்பிகாவும் கூடித்தான் திருதராஷ்ட்ரன் பிறக்கிறான். வேத வியாசர் குரு வம்சத்தினரா என்ன? அம்பிகாவுமே குரு வம்சம் இல்லை. பின் பாண்டவர்களை அவன் கேள்வி கேட்பதில் என்ன நியாயம் இருக்கும்? இதை பைரப்பா கவனிக்கவில்லையா? பைரப்பா பொதுவானதோர் விடையை/ விடைகளைக் கொடுத்தாலும், துரியோதனன் இப்படிக் கேட்பதாக எழுதுகிறவர் வேறு பாத்திரங்கள் அவனுக்கு என்ன விடை கொடுத்தன என்று எழுதுகிறார் எனத் தெரிந்துகொள்ள கேட்கிறேன். இதே துரியோதனன், சுதன் வளர்த்த கர்ணனுக்கு ராஜ்யத்தைத் தத்தம் செய்கிறான் ஆனால் தன்னுடன் வளர்ந்தவர்களுக்கு ஐந்து கிராமம் கூடக் கொடுக்க மாட்டேனென்று பிடிவாதம் பிடித்தான்.

அளறுதல்

செக்ஸை வைத்து இலக்கியம் படைத்தால் மட்டும் என்ன சாதித்து விடுவாராம்? எந்தப் பொருளிலும் மலிவுப் பொருள்தான் மனித புத்திக்கு உடனே சென்று சேர்கிறது. ஏனெனில் உழைப்பை, முயற்சியைக் கேட்கும் எதுவும் மனிதருக்கு அத்தனை உவப்பானவை அல்ல. கட்டுப்பாட்டோடு குடிக்கச் சொல்லும் உயர் அளவு ஆல்கஹால் உள்ள சாராயங்கள் – விஸ்கி இத்தியாதி- அனேகருக்கு ஏற்பில்லை, காரணம் விலை மட்டுமல்ல. மறக்கவும், மரத்துப் போகவும் குடிப்பவர்களே அதிகம். அது எத்தனை தூரம் தன்னைத் தானே மேன்மேலும் தோற்கடிப்பது என்பதை அவர்கள் அறியாமலா இருப்பார்கள்? அதே போல மேலை இலக்கியர்களுக்கு இந்த செக்ஸ் பற்றி எழுதுவது என்பது ஒரு உளைச்சல். முயன்று முயன்று எழுதி அதில் என்ன சாதிப்பார்களாம்?

வன்னி

எக்காரணம் பற்றியும் இஃதோர் ஆன்மீகப் பயணக்கட்டுரை அல்ல. நாம் இங்கு தீ பற்றிப் பேசப்போகிறோம். ஐம்பெரும் பூதங்களில் மூன்றாம் இடத்தில் இருப்பது தீ. ஆகவே தான் முக்கண்ணனின் மூன்றாவது கண்ணில் தீ என்றார் போலும். கிரேக்க இதிகாசங்களில் எவ்வினைக்கும் ஒரு கடவுள் உண்டு. எடுத்துக்காட்டுக்கு Morpheus. தமிழில் மார்ஃபியஸ் என்று எழுதுவோமா? இருபுறமும் இறகுடைய கடவுள். கனவுகளின் கடவுள். அப்பெயரில் ஒரு Blended Premium Brandy இருக்கிறதே என்று கேட்கலாம். அதற்கு நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.

‘தீபரவட்டும் என்றொரு நூலுண்டு தமிழில். அறிஞர், பேறரிஞர், கவிஞர், பெருங்கவிஞர் எனும் பட்டங்கள் கோமாளிகள் அணியும் சட்டை போல் ஆகிவிட்டது. பெரியவர் என்றாலே அது பெரிய சொல். அதன் மேல் பல்லடுக்குகளாக மகா என்ற பட்டம் ஏற்றி கனம் கூட்டுகிறார்கள். அது போன்றே அமிர்தம் மகா-அமிர்தம் ஆகிறது. பிரசாதம் மகாபிரசாதம் ஆகிறது. தகுதியினால் கனம் சேர்ப்பதை துறந்துவிட்டு, சொற்களால் கனம் ஏற்றுகிறார்கள். தீயை மகாத்தீ என்று எதற்காக சொல்ல வேண்டும்?

தீப்பந்தம், தீச்சட்டி, தீநாக்கு, தீக்கொழுந்து, தீமிதி, தீக்கனல், தீப்பிழம்பு, தீக்கொள்ளி, தீவட்டி, தீக்காயம் என்று எத்தனை எத்தனை சொற்கள்? தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா’ என்றார் பாரதி. சற்று விரல்விட்டு பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

மகரந்தம்

விமானியில்லாத விமானங்களை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது இந்த எண்ணம் உதித்து இருக்கிறது: அவற்றை உண்ண ஏற்றவையாக மாற்றி அமைத்திருக்கிறார்கள். எங்கெல்லாம் பேரழிவு தாக்குகிறதோ, எங்கு பசி வாட்டுகிறதோ, எப்பொழுது போர் மூள்கிறதோ, அப்போது இந்த விமானியில்லா விமானம் விண்ணில் செலுத்தப்படும். பஞ்சப் பகுதிகளில் தானாகவே இறங்கும். உடனை அதற்குள் இருப்பதையும் அந்த விமானத்தையும் பிய்த்து பங்கு போட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். இறைச்சியும் தேனடைகளும் உலர் காய்கறிகளும் கொண்டு இந்த விமானம் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. களப் பணியாளர்கள் இந்த டிரோன் வெறும் கண்துடைப்பு என்று…

அறிதெளிவின் எழுச்சியைக் குறித்து

மேற்கத்திய தத்துவம் இரண்டரை ஆயிரம் ஆண்டுகள் ஆன முதிர் துறை. ஆனால், அதில் பெரும்பாலானவை தொடர்பற்ற இரு பெரும் அலைகளாக ஆர்ப்பரிப்புகளாக எழுந்தவை. ஒவ்வொரு எழுச்சியும் நூற்றைம்பது ஆண்டுகள் நீடித்தது. அறிதல் என்னும் கனவு (The Dream of Reason) என்னும் நூலை ஆந்தனி காட்லீப் 2000ஆவது ஆண்டில் பிரசுரித்தபோது, அதில் கிரேக்க தத்துவவியலாளர்களான சாக்ரடீஸ், ப்ளேட்டோ, அரிஸ்டாடில் போன்றவர்களின் சிந்தனைகளைக் கொண்டு, மேற்கத்தியத் தத்துவத்தின் முதல் ஆர்ப்பரிப்பை விளக்குகிறார். சமீபத்தில் காட்லீப் அறிதெளிதல் என்னும் கனவு: நவீன தத்துவத்தின் எழுச்சி (The Dream of Enlightenment: The Rise of Modern Philosophy) என்னும் நூலை வெளியிட்டிருக்கிறார். அது வட யூரோப்பில் எழுந்த மதப்போர்களையும், கலிலியோவிய அறிவியலின் உதயத்தையும் முன்வைத்து மேற்கத்திய தத்துவத்தின் கதையைச் சொல்கிறது.

உலகம் இன்று நம் கையில்

ஒரு சாதுரியத் தொலை பேசி இருந்தால் ஏதாவது நாட்டில் நடக்கும் ஏதோ ஒரு வினோத சம்பவத்தையாவது பார்த்துக் கொண்டிருக்கலாம். ஓய்வாக அமர்ந்து யோசிப்பது என்பது இல்லாததாக, செய்ய முடியாததாகக் கூட ஆகி விட்டது. சிகரெட் குடிப்பவர்களுக்குக் கையில் அது இல்லாது நிற்கக்கூடத் தெரியாது என்று கிண்டல் செய்வார்கள், அதே போலக் கையில் ஏதோ ஒரு காட்சிக்கருவி இல்லாது நடக்க, இருக்க முடியாத மக்களாகிக் கொண்டிருக்கின்றனர் உலக மக்கள். அடுத்து மூச்சு விடக் கூட ஏதேனும் கருவி தேவைப்படும் நிலைக்கு வருவார்களோ என்னவோ. இப்படிப்பட்ட கருவிகளில் நாம் எல்லாரும் பார்க்கக் கூடிய உலக சம்பவங்களில், அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம் நேற்றைய வினோதம். அங்கு ஒரு புது அதிபர் நாடாளும் பதவியை நேற்று ஏற்றார். அவர் வழக்கமான அரசியல்வாதி இல்லை. திடீர் மழையில் முளைத்த காளானா என்றால் அத்தனை புது நபர் இல்லை, … டானல்ட் ட்ரம்ப் என்கிற ரியல் எஸ்டேட் அதிபர்.

காளி பிரசாத் எழுதிய பழனி சிறுகதை குறித்து

ஜெயகாந்தன் காலத்துலேருந்து அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை எழுதினவங்க எல்லாம் அப்படியே எதார்த்தத்தைக் கொடுக்க முயற்சி செய்தாலும், அந்தக் கதைகள் எல்லாத்திலயும் அவர்களிடம் இருந்த மனிதனாகும் முயற்சியைச் சுட்டி, அவர்களுக்கு எதிராக எத்தனை சக்திகள் இயங்குகின்றன என்று காட்டும் முயற்சிகளாக இருந்தன. லும்பன் வாழ்க்கையைத் தானே கூட வாழ முயன்று வாழ்விலும், தன் முயற்சிகளிலும் தோற்றுப் போன ஜி.நாகராஜன் கூட தன் வேசி/ கூட்டிக் கொடுக்கும் கந்தன் ஆகியோரினுள் இருக்கும் ஆழ்ந்த அன்பையே தொடர்ந்து குறைவான சொற்களில் கொடுத்துக் கொண்டிருந்தார். அது ஏதோ அவர்களை உய்வுக்கு இட்டுச் சென்று விடும் என்பது போலத்தான் அவருடைய அணுகல் இருந்தது. சா.கந்தசாமிதான் 60களின் இறுதியில் கதாசிரியன் இழிவைச் சித்திரிக்கும்போது ஒரு அற நிலைப்பாடும் எடுக்காமல் கொடுக்கலாம் என்ற நிலையில் இருந்து கதைகளை அளித்துப் பார்த்தார். ஆனால் அவராலும்…

மகரந்தம்

சிதார் மேதை ரவிஷங்கரின் மற்றொரு ஆபரா வெளியீடு அடுத்த வருடம் லெஸ்டர் நகரில் அரங்கேற்றமாகும் எனும் விவரத்தைக் குறிப்பிடும் இந்தக் கட்டுரை அவரது முதல் ஆபரா நிகழ்வு 2012 ஆம் வருடம் ராயல் ஃபெஸ்டிவல் ஹால் என்று வழங்கப்படும் லண்டனின் இடதுகரை வளாகத்தில் நிகழ்ந்ததைக் குறிப்பிடத் தவறியிருக்கிறது. அந்த நிகழ்வை நாம் சொல்வனத்திலும் கட்டுரையாக வெளியிட்டோம்.

ஃப்ரீட்ரிஷ் நீட்சா, இரும்புக்கரங்கொண்ட மாவீரன்

அடிமைமுறை பற்றிய நீட்சாவின் கருத்துகள் கொடுமையானவை என்பது ஒரு புறம் இருக்கையில், இனத்தூய்மை வாதம் குறித்து அவர் கொண்டிருந்த கருத்துகளும், ஜனநாயகம் உருவாகக் காரணிகள் என உடற்கூறுகளின் அடிப்படையில் அவர் முன்வைக்கும் கருத்துகளும் (ஆள்வோராக இருக்கும் “வெற்றி பெற்ற ஆரிய இனத்தின்” விழுமியங்களை வென்ற அடிமைகளின் விழுமியங்களாக- கருநிறம் கொண்ட, அதிலும் குறிப்பாகக் கருநிற முடிகொண்ட மனிதர்களின் வெற்றியாக- ஜனநாயகத்தை அவர் பார்க்கிறார்) அருவருப்பான கருத்தாக்கங்கள்.

ஸ்பினோஸா ஏன் இன்றும் பொருட்படுத்தக் கூடியவராக இருக்கிறார்?  

அப்ரஹாமிய மதங்களுக்குப் பொதுவாக உள்ள தேவபிதாவை மறுப்பதைத் தன் அடித்தளமாகக் கொண்டது ஸ்பினோஸாவின் தத்துவம். ஸ்பினோஸாவின் கடவுள், மனித அனுபவ உணர்தல்கள் அனைத்தையும் கடந்த, எல்லாப் பாதுகாப்பையும் கொடுக்கும் தேவதையின் உளநிலை, ஒழுக்க குணங்கள் எதுவும் இல்லாத ஒரு கருத்துரு. ஸ்பினோஸாவின் ‘அறம்’ (1677ஆம் வருடத்தியது) என்னும் தத்துவச் சாதனையான புத்தகத்தில் உள்ள ‘தேவன்’ அன்பு செலுத்தும் ஒரு நபர் அல்ல. அதற்கு நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், ஆசைகள் அல்லது உணர்ச்சிகள் எவையும் கிடையாது.

நெய்யும் சர்க்கரையும்

ஏழாவது வகுப்பு என நினைக்கிறேன். அறிவியலில் தனிமங்கள் பற்றிய பாடம். உலகின் அத்தனை பொருட்களும் தொண்ணூற்றியிரண்டு தனிமங்களால் ஆனவை. எல்லா பொருட்களுமா? மேஜை, செங்கல், மணல், நாய், நான், அமராவதி ஆறு, அணு குண்டு. எல்லாமுமா? ஆமாம். நம்பமுடியவில்லையே. சரி அது போகட்டும். அடுத்தது, சர்க்கரை நெய் இரண்டும் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகிய மூன்று மூலகங்களால் செய்தவை. இதை என்னால் கொஞ்சமும் ஏற்க முடியவில்லை. இரண்டும் எனக்கு அப்போது மிகவும் பிடிக்கும். (இப்போதும்தான், சாப்பிடத்தான் மனம் வருவதில்லை.) கார்பன் என்றால் கன்னங்கரேல் என்ற அடுப்புக்கரி, மீதி இரண்டும் கண்ணுக்கு தெரியாத வாயுக்கள். மூன்றும் சேர்ந்து எப்படி சர்க்கரையோ, நெய்யோ ஆக முடியும்? அப்படியே வைத்துக்கொண்டாலும், சர்க்கரை நெய் இரண்டும் ஏன் ஒன்றுபோல் இல்லை?

அறிவியல் பார்வை

பெரும் அறிவியல் திறனுடைய பல்கலை அறிவுடைய நகரத்தில் 250,000 மக்களின் உணர்ச்சிகரமான வரவேற்பின் நடுவில் ஹிட்லர் வியன்னாவுக்குள் நுழைந்தார். அவரை நகரம் தங்கள் காவிய தலைவனாகவே பார்த்தது. சிறு எதிர்ப்பு மட்டுமே இருந்தது. இத்தனை பெரிய அறிவுலக அறிவியல் பார்வையின் பங்களிப்பு இருந்தும் , இனவெறி உணர்ச்சி பெருக்கெடுத்து நின்றது. அறிவுலகம் பெரும்பாலான மக்களின் அகவுலகை தொடவில்லை. பிரபஞ்சம் பெரும் லீலைகளை கொண்டது. பிரபஞ்ச லீலைகளின் உள்ளசைவையும், அழகியலையும் கேள்விகளால் தொடர்வது அறிவியலையும், அழகியலையும் மனிதருக்கு அளிக்கிறது.

படிவமும் மனமும்

படிவம் – ஸ்கீமா என்பதை முன் அனுபவமென, முன் உணர்வு, முன் கற்றதின் கூட்டமைவு என்றே தத்துவஞானி இம்மானுவல் காண்ட் கருதினார். படிவத்தை டானியல் கோல்மன் தனது Vital Lies and Simple Truth என்ற புத்தகத்தில் விரிவாகக் கையாளுகிறார். எல்லாப் படிவமும் சம தளத்தில் மட்டும் இயங்குவதில்லை. ஒரு படிவத்தை ஆளும் மேலடுக்குத் தளத்தில் இருக்கும் படிவமும் தானாக இயங்கும் அல்லது இயக்கப்படும். ”கோபப்படு” என்று ஒரு படிவம் ஒரு எதிர்வினையை தன்வழியே வழுகி வர வைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். எந்த விதமான கோபம்? எப்படிப்பட்ட எதிர்வினை? கையா, வாயா? வாய் என்றால் நையாண்டியா, கண்டிப்பான சொற்களா அல்லது கெட்ட வார்த்தைகளா? இதனை முடிவு செய்வது மற்றொரு படிவக் கூட்டும், நினைவு ஆளுமை, உணர்வுப்பகுதி (awareness). சீதை அசோகவனத்தில், அனுமனுக்குச் சொல்கிறாள். எப்போதோ இவர்களை சுட்டெரித்து என்னால் வந்திருக்க முடியும். ஆனால் …

அறிதலின் பேரிடர்

இந்த அறிதல் முறைமையின் அடிப்படையில் அடுத்து வரும் இன்னொரு புதிய பறவையை கவனிக்க ஆரம்பிக்கிறோம். அது வாயிலின் வழியே பறந்துவந்து அமர்ந்து கூ..கூ..கூ என்று இனிமையாக கூவுகிறது. சிலர் அந்த இசையில் மெய்மறக்கிறார்கள். வேறு ஒரு கூட்டம் முன்பு வந்த காகத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். மரங்கள், விலங்குகள் என்று வரும் ஒவ்வொன்றையும் அவதானிக்கிறோம். இவ்வாறு சுவரின் அந்தப்புறம் இருந்து வரும் அனைத்து பொருட்களையும் இந்தப்புறம் அமர்ந்து அவதானிக்கிறோம். அந்த சிறுசிறு அவதானிப்பில் இருந்து கட்டி எழுப்பிய கோபுரங்கள்தான் இன்று நாம் காணும் ஒவ்வொரு அறிவுத்துறையும்.

உங்களைப் போல் கணினியை யோசிக்க வைப்பது எப்படி?

நிஜ உலகில் தற்சார்பற்ற உண்மை இருக்கிறது; அதற்கு மாற்றாக, எதிர்ப்பதமாக – உங்களுக்கு மட்டுமேயான உண்மைகளும் இருக்கிறது. உதாரணத்தில் இதைப் பார்ப்போம். தமிழில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பது தற்சார்பற்ற உண்மை. உலகிலேயே அதிசிறந்த இசையமைப்பாளர் என்றால் அது இசைஞானி இளையராஜா மட்டும்தான் என்பது எனக்கு மட்டுமே தோன்றும் நிதர்சனமான உண்மை. தோனி இன்றும் நன்றாக, ஆரோக்கியமாக இருக்கிறார் என்பது புறவய அணுகுமுறை.

எண்ணங்கள் சிந்தனைகள் – எதிர்வினைக்கான பதில்கள்

மனம் ஒரு தனித்த இருப்பு அல்ல. அது மூளையின் இயக்கம். மூளை ‘செல்’களின் (நியூரான்களின்) தொகுப்பை மூளையின் இருப்பு எனலாம். அவை தொடரந்து வேதிவினை அல்லது வேதிவினையின் விளைவான மின்இயக்கத்தால் இயங்குகிறது. அந்த இயக்கம், அதாவது ஒரு நியூரானின் வேதி இயக்கம் அடுத்த நியூரான்களை தூண்டுவதால் அங்கும் நிகழும் வேதிஇயக்கம் இவற்றின் தொடர் சங்கிலியை மனம் என்று கூறலாம். கணினியின் ப்ராஸஸர் வேலை செய்வது மின் இயக்கத்தை அதிவேகத்தில் அடுத்தடுத்த bits எனப்படும் நினைவுக் கண்ணிகளுக்குச் செலுத்துவதுதானே. அங்கு செல்வது என்ன? மென்பொருளால் வழிப்படுத்தப்பட்ட மின் இயக்கம்தானே? மின்இயக்கமாக மாறிய மெனபொருள்தானே?

எண்ணங்கள், சிந்தனைகள் கட்டுரையை முன்வைத்து…

Intelligence என்பதைப் புரிந்து கொள்ளும் திறன் என்று கொள்கையில் அது எண்ணங்களுக்கும், சிந்தனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது.
இக்கட்டுரையில் எண்ணம், சிந்தனை, அறிவு (Intelligence), தகவல் அறிவு (Knowledge), நுண்ணறிவு, நுண்ணுணர்வு, அதி நுண்ணுணர்வு ஆகியன பற்றி ஒரு தெளிவான பார்வை எனக்குக் கிட்டவில்லை. வார்த்தைகள் வெவ்வேறு விஷயங்களை மாற்றி மாற்றி சுட்டுகிற மாதிரி இருக்கிறது. வாஸனா, கர்மா பற்றி இக்கட்டுரை பேசவில்லை என்ற பிறகு…

எண்ணங்கள், சிந்தனைகள்

மனித சமூகத்தின் மேல் ஆர்வம் உடையவர்களாக இருந்தால், இன்னொரு மனித சிந்தனையின் உச்சம் பலிகளையும் இரத்தத்தையும் அல்லாமல் உன்னதத்தை அடித்தளமாகக் கொண்டு எழும்ப வேண்டும் என விரும்பினால், நாம் அனைவரும் தனிமனிதச் சிந்தனைக்கான விழைவுகளை நம் மனதில் உருவாக்கியாக வேண்டும். சிந்தனைகள் என்று நம்மை வந்தடையும் வெற்று எண்ணங்களை, மேலும் எண்ணங்களாக நம் மனதினுள் பெருக்கிக் கொள்ளாமல் சுய சிந்தனையின் மூலம் விழிப்புணர்வின் மூலம் நம் கருத்துருவாக்கங்களை அடைய வேண்டும். இந்த இயக்கம் ஒன்றினால் மட்டும்தான், இப்போதைய சூழ்நிலையில் அழிவை உருவாக்கும், பொதுவெளியில் சிந்தனைகளாகப் புழங்கும் எண்ணங்களின் அழிவு சக்தியை எதிர்கொள்ள முடியும். தனிமனித சிந்தனை குறைந்தப்பட்ச அளவை எட்டும்போது, பொதுவெளியில் உண்மையான சிந்தனைகள் தளிர்க்கத் தொடங்கும். அதன்பின் மனித இனம் உன்னதத்தின் மேல் எழும்பி நின்று கொண்டாடலாம்.

மனிதன், மனிதனாகவே இருக்க விரும்புகிறானா?

நோபல் பரிசு பெற்ற Konrad Lorenz ஒரு கருத்தைச் சொல்கிறார். பொது நலப்பண்பு கொண்ட சில உயிர்களாவது ஒரு இனத்தில் இல்லை எனில் அந்த இனம், பெருகுவதில்லை. இன உற்பத்தியில் வெற்றி பெறுவதில்லை. இந்த Altruism எனும் குணம் தனி உயிர்களைப் பாதிக்கும். அவைகளை அழிக்கும்; ஆனால், அந்த இனம் மொத்தத்தில் சுலபத்தில் அழிவதில்லை என்கிறார்.

சக்தி… மனசில் நிறையும்போது…

1970 களில் கிழக்கு ஆப்பிரிக்க நாடு ஒன்றில் நாங்கள் குடியிருந்தபோது நவராத்திரி சமயத்தில் நம் மண் பொம்மைகள் கிடைக்காமல் குழந்தையின் விளையாட்டு பொருட்களையும் பத்திரிகைகளிலிருந்து சில படங்களைக் கத்தரித்து அட்டையில் ஒட்டி, படிகளில் நிற்க வைத்து கொலு வைத்தேன் . அப்படி நான் கத்தரித்து ஒட்டிய படங்களுள், காஞ்சிப் பெரியவர், கடவுள் படங்கள் இவற்றுடன் மோனோலிஸா படமும் ( அழகாக இருந்ததே..!)என் கொலுவில் இருந்தன. தாம்பூலத்திற்கு அழைத்திருந்த பெண்களில் அக்கம் இருந்த ஐரோப்பியர் மற்றும் ஆப்பிரிக்க பெண்களும் உண்டு. வந்திருந்த பெண்களில் ஒருவர் கேட்டார்: “பூஜை என்றீர்கள். சரிதான். ஆனால் மோனோலிஸா படத்தையும் இந்த பஸ், விமானம் போன்ற பொம்மைகளையும் கடவுள் படங்களுடன் ஏன் வைத்துள்ளீர்கள்?” என்றார்.

குணம் நாடி, குறை தவிர்த்து

கற்றுகொள்வதும் உதவிகள் பெற்றுகொள்வதும் ஒரு கலை. கற்பது என்பது நம்மைவிட வயதானவர்களிடமிருந்துதான் என்றில்லை; நல்ல விஷயங்கள் யாரிடமிருந்தாலும் கற்றுகொள்வதில் தவறில்லை.
கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு என்பார்கள். இருந்தாலும் சிலருக்கு சட்டென்று உதவி கேட்கவோ அல்லது உதவி செய்யவோ தோன்றாது. உதவி கேட்பது சுய கௌரவத்திற்கு இழுக்கு என்பது இவர்கள் நினைப்பு. தெரியாததைத் தெரியாது ; ஆனால் கற்றுகொள்கிறேன் என்பதற்கும், தனக்கு உதவி தேவை படும் சமயத்தில் கௌரவம் பார்க்காது ஏற்றுகொள்வதற்கும், ஒரு விசாலமான மனம் வேண்டும். பிறரிடமிருந்து தேவைப்பட்டபோது உதவி பெறும்போது நமக்கும் சட்டென்று பிறருக்கு உதவும் மனப்பான்மை வரும். கொடுக்கல் வாங்கல்; பரிவர்த்தனைகள் இல்லாமல் இருந்தால் அங்கே வளர்ச்சிக்கு இடம் ஏது?

விடுதலையுணர்வு

இத்தனை சுதந்திரமாக இருந்தாலும், என் முகத்தில் நோயிலிருந்து மீண்ட களைப்பு தெரிகிறதா? அகத்தின் துள்ளல் முகத்தில் தெரியவில்லையா? மனதுக்கும் உடலுக்கும் இடையில் உணரமுடியாத திரை உள்ளதா? அவ்வாறு இருக்கும் எனில், என் உணர்திறன் இன்னும் தேவையான குறைந்தபட்ச அளவைக்கூட எட்டவில்லையோ? நான் உழைத்தாக வேண்டும். உணர்திறனை கூர்மைப்படுத்த வேண்டும். அல்லது அந்தக் கேள்வியை கேட்பவர்களுக்கு, முகத்தில் தெரியும் அக அழகைக் காண முடியவில்லையா? அவர்களை குறைகூற எனக்குத் தகுதியில்லை. தேவையும் இல்லை.

தத்துவத்தின் பெறுமானம் என்ன?

தத்துவப் படிப்பு நிச்சயமான விடைகளுக்காக மேற்கொள்ளப் படுவதில்லை, மாறாக அது எழுப்பும் கேள்விகளுக்காகவே பயிலப்படுகிறது. இந்த கேள்விகள், சாத்தியமானவற்றைக் குறித்த நம் கருத்தாக்கங்களை விரிவாக்குகிறது. நமது அறிவார்ந்த கற்பனையை வளப்படுத்துகிறது. மனதின் பரீசீலிக்கும் தன்மையை தடுக்கும் மூர்க்கமான தீர்மானங்களை குறைக்கிறது.எல்லாவற்றிற்க்கும் மேலாக பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தை சிந்தனை செய்யும் மனதை மேன்மை அடையச் செய்து அது பிரபஞ்சத்தினோடு ஒன்றாகும் தன்மையை நோக்கி நகர்த்துகிறது.

தற்கொலை செய்து கொள்வதா? வேண்டாமா?

தத்துவம் விடை கொடுக்கும் பல கேள்விகளில், தலையாயது என்னவென்றால், ‘நீங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா… இல்லையா?’ என்பதுதான் என்றார் ஆல்பர்ட் காம்யூ. அவரைப் பற்றிய குறும்படம்:

வர்ணமும் ஆஸ்ரமமும்

ஆஸ்ரம அமைப்பு மனிதன் வாழக்கூடிய நியாயமான நால்வகை வெவ்வேறு வாழ்நிலைகளை வரையறை செய்கிறது. வர்ண தர்மத்தோடு ஒப்பிடுகையில் ஆஸ்ரம அமைப்பு மிகக் குறைவான கவனமே பெற்றிருக்கிறது என்றும் அவ்வளவாக விவாதிக்கப்படவில்லை என்றும் கூற வேண்டும். எனினும், கடந்த இருபது ஆண்டுகளில் மிக அதிக அளவில் இதுகாறும் புறக்கணிக்கப்பட்டு வந்த இந்தக் கருத்துருவாக்கம் சமூக, தத்துவார்த்த, சமய விவாதங்களில் சொல்லத்தக்க அளவில் வேகம் பிடிப்பதைக் காண முடிகிறது.

இந்து திருவிழாக்கள், கொண்டாட்டங்கள்

நோன்பிருப்பது என்பது விரதத்தின் அங்கம்- இந்து திருவிழாக்களின் இரு முக்கியமான உறுப்புகளில் ஒன்று இது. மற்றொன்று எது என்றால், உற்சவம், அல்லது ஆனந்தக் கொண்டாட்டம் என்றாகும். இந்த இரண்டும் இந்து திருவிழாக்களுக்கு எளிய நளினத்தை, ஆழத்தை, ஆடம்பரமற்ற அலங்காரத்தை அளிக்கின்றன. தத்துவ நோக்கில் பார்க்கும்போது இந்து திருவிழாக்கள் அடிப்படையில் நான்கு புருஷார்த்தங்களின் வெளிப்பாடாக இருக்கின்றன என்பதைக் காணலாம். சாதாரண பூதவுடல் தரித்த பௌதிக இருப்பிலிருந்து மனிதரைக் காப்பாற்றி அனைத்து உழற்சிக்கும் அப்பாற்பட்ட …

இந்து சம்ஸ்காரங்கள்

எந்த ஒரு கடவுளையோ அல்லது குறிப்பிட்ட சில கடவுளரையோ திருப்தி செய்வதற்காக சம்ஸ்காரங்கள் செய்யப்படுவதில்லை. இன்னும் மேலான ஒரு வாழ்வை நோக்கிச் செல்லும் தகுதி பெரும் வகையில் மனிதனின் உடலையும் உள்ளத்தையும் சுத்திகரித்து புனிதப்படுத்தும் நோக்கத்தில் செய்யப்படும் சடங்குகள் இவை. உடலின் இயக்கத்தைக் கொண்டு உடலிலும் உள்ளத்திலும் தாக்கம் ஏற்படுத்தி, மனிதனுள் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தி, சமூகத்தில் அவனுக்குரிய இடத்தை அவன் வெற்றிகரமாக அடையச் செய்து, அவனுக்குச் சாத்தியப்படும் ஆன்மீக வளர்ச்சியையும் சம்ஸ்காரங்கள் அளிக்கின்றன. இவை ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு துணை நிற்கின்றன

மாதொருபாகன்

மாதொருபாகன், உமையொருபாகன், அர்த்தநாரீஸ்வரர் இந்தத் தெய்வங்களெல்லாம் ஏறத்தாழ ஒன்றே. சிவபெருமான் தன்னில் சரிபாதி இடத்தை இறைவிக்குக் கொடுத்ததான கருத்து அது என்றும் சொல்வோர் உண்டு. ஆண் பாதி பெண் பாதி என்றால். இரண்டும் சரிசமமான அளவில் இருக்கிறதென்றால் உமைக்கு இடம் கொடுத்ததாக வந்திருக்காது. இருவரும் ஒன்றானதாக அல்லது ஒன்றில் இடம்பிடித்ததாகவே வந்திருக்கும் அல்லவா?

முக்கடன்கள், ஐவகை வேள்விகள் மற்றும் தீர்த்த யாத்திரைகள்

பல சமயங்களிலும் தீர்த்த யாத்திரைகள் செல்லும் வழக்கம் உண்டு. ஆனால் இந்து சமயங்களில் மேற்கொள்ளப்படும் தீர்த்தயாத்திரையில் என்ன ஒரு தனித்தன்மை என்றால், இவர்கள் எந்த இடங்களைப் புனிதமான இடங்கள் என்று எடுத்துக்கொண்டு தீர்த்த யாத்திரை செல்கிறார்கள் என்பதுதான். பொதுவாக, பல சமயங்களில் அந்த அந்த சமயங்களை உருவாக்கியவரோடு தொடர்புடைய இடங்கள், அல்லது அந்த சமயத்தில் பிரதானமான முக்கியத்துவம் கொண்ட வழிபாட்டுத தலங்கள்தான் தீர்த்தயாத்திரை செல்லும் இடங்களாக இருக்கும். ஆனால் இந்து சம்பிரதாயங்களில்…

இந்து சமயங்களில் பாப புண்ணியங்கள்

இந்து பண்பாட்டிலும் சமயங்களிலும் பன்னிரெண்டு வயதுக்கு குறைவான குழந்தைகள் எந்த தவறு செய்தாலும் தண்டிக்க அனுமதி கிடையாது. தெரிந்து செய்தாலும் சரி, தெரியாமல் செய்தாலும் சரி, குழந்தைகள் தவறு செய்வதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. கள்ளமற்ற குழந்தைகளை எக்காரணம் கொண்டும் தண்டிப்பது இந்து சமூகத்தில் கண்டிக்கப்படுகிறது. தண்டிப்பதே தவறு என்று விதிப்பதால், இச்சமயங்கள் குழந்தைகளைக் கொலை செய்வது மாபாதகம் என்றும் விதிக்கின்றன.

இந்து சமயம் – ஓர் அறிமுகம் – 2

உலகெங்கும் உள்ள மற்ற தத்துவ, சமய அமைப்புகளோடு ஒப்பிட்டால், மனிதனை மையப்படுத்தும் அமைப்புகளில் இந்திய தத்துவ சம்பிரதாயங்கள் அல்லது இந்து சமய முறைமைகளை மட்டுமே முதன்மையாகச் சொல்ல முடியும் என்று சென்ற பகுதியில் எழுதியிருந்தேன். ஆனால் அதுதான் ஏன்? ஆணோ, பெண்ணோ, மனிதன் தன் வாழ்வில் சாதிக்கக்கூடியது என்ன, வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? மனிதனின் கவலை இதுவாகத்தானே இருக்கின்றது?

சின்னச்சின்ன சிந்தனைச்சோதனைகள்

ஒரு கிராமத்தில் சில நூறு ஆண்கள் வாழ்வதாகக்கொள்வோம். அதில் பலர் தங்கள் முகத்தை தாங்களே சவரம் செய்து கொண்டு விடுகிறார்கள். மற்றவர்கள் சவரம் செய்துகொள்ள அதே கிராமத்தில் வாழும் நாவிதரை நாடுகிறார்கள். கிராமத்தில் இருப்பவர் ஒரே ஒரு ஆண் நாவிதர்தான். அவர் தனக்குத்தானே சவரம் செய்து கொள்கிறார். இப்போது நாவிதரிடம் சவரம் செய்து கொள்பவர்களை ஒரு அணியாகவும், தாங்களே சவரம் செய்து கொள்பவர்களை ஒரு அணியாகவும் பிரித்தால், நாவிதரை எந்த அணியில் சேர்க்க வேண்டும்?

இந்து சமயம் – ஓர் அறிமுகம் – 1

இந்து சமயங்கள் வழிபாடுகளையும் சடங்குகளையும் காட்டிலும் தனி மனித வளர்ச்சி, பரிணாம மாற்றம், வீடுபேறு ஆகியவற்றுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றன. சடங்குகள் முக்கியம்தான், ஆனால் தனிமனித வளர்ச்சியை நோக்கி சிரத்தையுடன் சாதனை செய்வது அவசியம் என்று கருதப்படுகிறது. தனி மனித பரிணாம மாற்றத்துக்கு எட்டு ஆன்ம குணங்கள் இருக்க வேண்டியது அவசியம் என்று இந்த சமயங்கள் நம்புகின்றன. சமயத்தையும் சம்பத்தையும்விட இந்த எட்டு குணங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றன.