இ.பா.வுடனான உரையாடல்கள் எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் செல்லாது; அது பல தளங்களில் விரிந்து செல்லும் அனுபவம். இலக்கியம், சமூகம், அரசியல், லெளகீக வாழ்க்கையெனச் சென்ற அந்த உரையாடல்கள் என்னை மெதுவாகச் செழுமைப்படுத்தின. அவர் பேச்சு சில சமயம் திக்கி வரும். ஒரு வரியின் மீது இன்னொரு வரி படிந்தபடியே செல்லும். கவனத்துடன் அதைக் கேட்க வேண்டும். ஆனால், அதற்குள் ஓடும் சிந்தனை ஓட்டம் தீவிரமானது.
