எம். எல். – அத்தியாயம் 19

“அதனால என்ன?… நடந்தது நடந்து போச்சு… அவன் வந்தான்னா அவனுக்குப் புத்தி சொல்லு…”
“நாஞ்சொல்லி எங்க கேக்கப் போவுது?… நீங்கள்ளாம் சொல்லியே திருந்தாத ஆளு, நாஞ்சொல்லியா கேக்கப் போவுது?… கட்டையில போற வரைக்கும் அது மாறாது…”

“சரி… சரி… காபி குடிச்சியா?…”
“குடிச்சிட்டேன். இந்த ஒரு தடவ மட்டும் அத காப்பாத்தண்ணே… நாளயும் பின்னயும் அது சீட்டாடப் போச்சுன்னா… அதத் தலை முளுகிட்டு நானும் எம் பிள்ளையும் எங்கயாவது போயிப் பொழச்சுக்கிடுவோம்…”
சுப்பிரமணிய பிள்ளை பாக்கியத்தையே பார்த்துக்கொண்டு நின்றார். அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “ஏதாவது ஒன்னக் கெடக்க ஒண்ணு பேசாத… பொட்டப் புள்ளய வச்சிருக்க… மனசுவிட்டுப் போயிராத…”

பகிரும் காற்று

அந்தக் காலத்து மனுசங்க ஒருத்தர் மத்தவரின் காற்றையே பகிர்ந்துக்கிட்டாங்க, என்ன மாதிரிக் கொடுமை அது!!  ஒவ்வொருத்தரின் கிருமிங்களையும், எல்லாரோட கழிவுப் பொருட்களையும், தங்கள் முச்சுக்குழாய் அழற்சியிலிருந்து விடுபட்ட சளியையும், பலரின் உடல் கழிவுகள் பலதையும் காத்து மூலமா வாங்கிக்கிட்டு மூச்சில் கலக்க விட்டார்கள். தண்ணீரோ கிருமி அழிப்பு செய்து சுத்தமாகாத குழாய்கள் வழியாப் பல மைல்கள் தாண்டி வந்து எங்கேயிருந்தோ கொண்டு வந்து அவங்களுக்குக் கொடுக்கப்பட்டது.  சில நேரம் மாசுபட்ட பூமியிலிருந்தே கூட நீர் எடுத்துக் கொடுக்கப்பட்டது. சக்தி தேவைப்பட்டதுக்கு, அதை எங்கிருந்தெல்லாம் பெற முடியுமோ அங்கேயிருந்தெல்லாம் அவங்க அதை எடுத்துக்கிட்டாங்க. அவங்களோட கருவிங்க அத்தனை நுட்பமெல்லாம் இல்லாத, மொண்ணையான கருவிங்களா, உயிர்த்துடிப்பே இல்லாம இருந்தது…

இந்திய அடுக்கு – நிதிப் புரட்சியின் அடுத்த கட்டம்

பல நூறு ஆண்டுகளாக இங்கிலாந்து உருவாக்கிய உலகத்தர அமைப்புகள் (world class institutions) அந்த நாட்டை உலக அளவில் முக்கியமானதாக்குகிறது. பிரிட்டிஷ் உடல்நல முறைகள், பல்கலைக் கழகங்கள், அவர்களது சக்தி வாய்ந்த கப்பல்துறை, விஞ்ஞான ஆராய்ச்சி கழகங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். சுதந்திர இந்தியாவில், பல உலகத் தர அமைப்புகள் உருவாகியது உணமை. ஆனால், பெருவாரியான இந்தியர்களை பயனடைய இவை உதவவில்லை. என் பார்வையில் ‘இந்திய அடுக்கு’ நாம் உருவாக்கிய உலகத்தர அமைப்பு. நம்முடைய அரசியல் நோக்குகளை அதன் மேல் பூசாமல், தொடர்ந்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அதன் குறைகளை நீக்குவது மிகவும் முக்கியம். ஏனென்றால், இந்த இந்திய அடுக்கு முயற்சி, சாதாரண இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்

சுற்றுச்சூழல் ஆர்வலர், பெண்ணியவாதி, அறிவியல் புனைவு எழுத்தாளர் – ஷெரி எஸ். டெப்பரை நினைவுகூரல்

டெப்பர் நாவல்களில் அடிக்கடி, மக்கள் தொகை மிகுந்திருப்பது ஒரு பிரச்சினையாகிறது. கொள்ளை நோய் தாக்குகிறது. …புத்திசாலி பெண்கள் சமூகத்தாலும் சூழ்நிலையாலும் தோற்கடிக்கப்படுவார்கள். ஒடுக்குமுறை மதம் அரசை ஆட்டுவிக்கும்.  பாத்திரங்களின்பார்வைகளாக அரை டஜன் இருக்கும். அந்தரங்கத்துக்கு துரோகம் இழைக்கும் தொழில்நுட்பம், பாதுகாப்புக் கவசம் என்று சந்தைப்படுத்தப்படும். .. இனப் பிரச்சினைகள் முழுக்க முழுக்க வேற்று கிரகத்துக்கு உரியவை, அல்லது, கொஞ்சம் கூட இல்லாதவை. பூச்சிக்கடி போல் அரிக்கும் காதல், பாத்திரங்கள் அதைவிட முக்கியமானவற்றில் ஈடுபட்டிருப்பார்கள். பாலினப் பிரிவு அடிப்படையாகக் காட்டப்பட முடியுமென்றால், அது செய்யப்படும். தாவர இனங்கள் திருப்பித் தாக்க முடியுமென்றால், அதைச்  செய்யும்.

வெற்றிட நிலைகள்

பெருவெடிப்புக்கு முன்னால் பேரண்டத்தில் அறிவுள்ள ஜீவன்கள் இருந்தனவோ என்னவோ. அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை நாம் கற்பனை கூடச் செய்ய முடியாது. அவர்களின் உலகம் பெரும் திணிவும், உயர்ந்த உஷ்ணமும் கொண்டு, மிகச் சிறியதாக இருந்தது; அவர்களின் மொத்தப் பேரண்டமும் ஒரு ஊசியின் கூர்முனையை விடச் சிறிய புள்ளியாக இருந்திருக்க வேண்டும், அவர்கள், நமக்குச் சாத்தியமாகியிருக்கிற கால அளவைகளிலேயே மிகக் குறைந்த நேரத்திற்குள், நூறாயிரம் கோடி (1ட்ரில்லியன்) தலைமுறைகள் வாழ்ந்திருக்கக் கூடும். ஒரு வேளை அவர்களில் ஒருவர், தாம் வாழ்கிற வெற்றிடம் ஒரு போலி வெற்றிடம் என்று உணர்ந்திருக்கக் கூடும், அதனால் அந்த வெற்றிலிருந்து சக்தியை உருவாக்க முடியும் என்று புரிந்து கொண்டிருக்கக் கூடும். ஒரு வேளை ஒருவர் அதை முயன்றாரோ என்னவோ.

உத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்!

சில பேராசிரியர்களிடம் கேட்ட போது, அவர்கள் திருவள்ளுவர் தூக்கம் எனும் சொல்லையும் கையாண்டிருக்கிறாரே என்றனர். அவர்கள் சொன்னது உண்மைதான். ‘வினைத் திட்பம்’ அதிகாரத்துக் குறள் பேசுகிறது,
‘கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்’
என்று. சரிதானே! பிறகென்ன வழக்கு, வியாச்சியம், உச்ச நீதிமன்றத் தலையீடு என்று நீங்கள் கேட்கலாம்! ஆனால் இங்கு தூங்காது என்ற சொல்லுக்கு தாமதிக்காது, கால நீட்டிப்பு செய்யாது, தொங்கிக் கொண்டு கிடக்காமல் எனும் பொருளே தரப்படுகிறது. மனக் கலக்கம் இல்லாமல், தளர்வடையாமல், கால தாமதம் செய்யாமல், வினையாற்றுவதே செம்மையானது என்று பொருள் தருகிறார்கள். …நாஞ்சில் நாட்டுக்காரனும், மலையாளியும் உறக்கம் என்று இன்றும் பயன்படுத்தும் சொல், பிற தமிழ்த் திருநாட்டுப் பகுதிகளில் தூக்கம் என்று பயன்படுத்தப்படுகிறது.

தேள்

“உன்னுடைய விஷ ஆராய்ச்சிக்கு நீ இங்குத் தேள்களை வைத்திருக்கிறாய் அல்லவா? எனக்கு ஒரு தேளை தொட்டுப்பார்க்கவேண்டும். அதை என் மீது ஏற விட்டுப்பார்க்க வேண்டும்.”
லூசிஃப் திடுக்கிட்டான். “ஏன்?”
“பயத்தை வெல்ல அதுதான் ஒரே வழி. போர்க்களத்தில் நாங்கள் இதைத்தான் செய்வோம். நிணம், குருதி, சித்ரவதை இதை எந்த ஒரு போர் வீரனும் முதல் நாள் காணும் போது அஞ்சத்தான் செய்வான். அதனால் அவனைப் போருக்கு அனுப்புவதற்கு முன்னாலேயே காயத்துக்கும் வலிக்கும் போரின் நிதர்சனங்களுக்கும் முழுவதுமாகப் பழக்கப்படுத்தி விடுவோம்.”

அதிபுனை ஒளிப்பட போட்டி

அதிபுனை கதைகள் என்றால் கொஞ்சம் அறிவியலும் நிறைய கற்பனையும் வேண்டும். அதிபுனை புகைப்படங்கள் எப்படி இருக்க வேண்டும்? கொஞ்சம் கற்பனையும் நிறைய வருங்காலமும் கொண்டிருக்க வேண்டும் எனலாமா? போட்டியில் கலந்துகொண்ட ஒருவரின் படம் இங்கே. மற்ற ஆக்கங்களை இங்கே பார்க்கலாம்.

தானாக உய்த்தறியும் எர்க் எப்படி ஒரு வெள்ளையனை ஒழித்தான்

ஹோமோஸ் வெகு சீக்கிரம் அறிவுள்ள பேச்சைக் கற்றுக் கொண்டு விட்டது, எனவே தைரியமாக எலெக்ட்ரீனாவிடம் பேசியது.
ராஜகுமாரி அதனிடம் ஒரு தடவை கேட்டாள், அதன் முகத் துவாரத்தில் மின்னுகிற வெள்ளைப் பொருள் என்னவென்று.
 “அதை நான் பல் என்று அழைப்பேன்,” அது சொன்னது.
 “ஓ, எனக்கு அதில் ஒன்றைக் கொடேன்!” என்று வேண்டினாள் அரசகுமாரி.
 “அதுக்குப் பதிலாக நீ எனக்கு என்ன கொடுப்பாய்?” அது கேட்டது.
 “நான் என்னோட சின்ன தங்கச் சாவியைத் தருவேன். ஆனால் ஒரு கணம்தான்.”
“அது என்ன சாவி?”
“என் சொந்தச் சாவி. தினம் மாலையில் அதை வச்சு என் மூளைக்கு நான் சாவி கொடுப்பேன். உனக்கும் ஒண்ணு இருக்கணுமே.”

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – பாகம்-11

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்கிற கதையாக முகநூல் வாட்ஸப்பும் பெரிய தொல்லையாகத் தொடர்ந்தன. என் மனைவி போடுகிற படங்களை சூசகமாக எடுத்துக் கொண்டு ஏதாவது செய்வது என்று ஆரம்பித்திருந்தார்கள். திருவள்ளுவர் படம் போட்டால் திருக்குறளைப் பாடுவது, தஞ்சாவூர்க் கோயில் படம் போட்டால் தஞ்சாவூரில் போய்க் கச்சேரி செய்வது என்று ஆரம்பித்திருந்தார்கள். ஒரு முறை என் மனைவி மண்டை ஓட்டு மாலையுடன் கையில் அசுரனின் கொய்த தலையைப் பிடித்தவாறு நிற்கும் பத்ர காளியின் படத்தைப் போட்டிருந்தாள். உடனே அங்கிருந்து ‘தாயே! நான் என்ன குற்றம் செய்தேன்?’ என்று பொருள் படும் படியாக பதில்.

ப்ளாக் செயின் – ஓர் எளிய அறிமுகம்

தொகுப்புச் சங்கிலி மிக மிக பாதுகாப்பானது. இது கட்டாயம் மோசடி மற்றும் கையாடலைக் கணிசமாகக் குறைக்கும். தரவுகளில் திருத்தம் செய்வது மிகக் கடினம். மேலும் எல்லா பரிமாற்றங்களும் ஒரே பேரேட்டில் சேமிக்கப்படுகிறது. பரிமாற்றங்கள் இடைத் தரகர்கள் மற்றும் மூன்றாம் தரப்புகளின் தேவையை முழுவதும் இல்லாமல் செய்துவிடும்.
தொகுப்புச் சங்கிலி தொழில்நுட்பம் இன்றுள்ள தொழில்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். உதாரணமாக நிதித் துறை, நீதித் துறை, கல்வித்துறை, இசைத்துறை என பல துறைகளில் மாற்றமும் முன்னேற்றமும் வருவதைத் தடுக்க முடியாது.

மொழியின் இயல்பு

மனிதர் இடையீடு இல்லாமல்  கணினிகள் தாமாக தமக்கிடையே தொடர்பு ஏற்படுத்திக்  கொள்ள முடிகிற அளவுக்கு செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வரும் இன்றைய நிலையில் , மொழியின் வரையறுப்பும் விஸ்தரிக்கப்பட வேண்டிய நிலை வரக்கூடும். அப்போதும் மனிதனை ஆக்குவது மொழிதான்.  ஆனால் அவ்வாறு விஸ்தரிக்கப்பட்ட வரையறுப்பு,  எந்திரங்கள் தம் சொந்த மொழியில் தமக்குள்ளே தொடர்பு வைக்க, தேவைகளையும் விருப்பங்களையும் தெரிவிக்க, ஆணையிட, உருவாக்க, உற்பத்தி செய்ய வழி வகுக்கும். ஆதியில் மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட மொழி, தன் மனித இணைப்புகளைத் துறந்த, ஒரு புது  தொடர்பு அமைப்பாக வெளிப்படும்.

அறிவியல் புனைவுச் சிறப்பிதழ் பற்றி…

அறிவியல் புனைவிலக்கியம், சில நாடுகளிலிருந்துதான் பெருமளவும் வெளிப்படுகிறது. அவை அனேகமாக யூரோப்பிய, மேலை நாடுகள் என்பது தெளிவு. சமீபத்துப் பத்தாண்டுகளில் சீனா, இந்தியா மற்றும் சில ஆஃப்ரிக்க நாடுகள் இந்த வகை இலக்கிய முயற்சியில் இறங்கி இருக்கின்றன. இந்த விஷயங்களில் அகழ்வாராய்ச்சி செய்பவர்கள் எங்கும் உண்டு. அந்தந்த நாட்டு அறிவியல் புனைவிலக்கியம் பற்றி ஆய்வு செய்பவர்கள் அனேகமாக 18 ஆம் நூற்றாண்டிலிருந்தே இத்தகைய முயற்சிகள் துவங்கி விடுவதைச் சொல்கிறார்கள். பற்பல யூரோப்பிய நாடுகளிலும், சீனாவிலும் இப்படி வேர் மூலம் காட்டும் ஆய்வுகள் உண்டு.

மரிலின் ராபின்சனின் 'ஹவுஸ்கீப்பிங்' அல்லது வீடு பேறடைதல்

அம்மாவின் தற்கொலை ரூத் மற்றும் அவளது சகோதரி லூசில்லில் அக மையத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை விட்டுச் செல்கிறது. நாவல் அடுத்தடுத்த கட்டங்களை அடையும்போது இவர்கள் இருவரும் தம் உள்ளத்தின் வெறுமையை இட்டு நிரப்பிக் கொள்ள தமக்கேற்ற  வெவ்வேறு உத்திகளை மேற்கொள்கின்றனர். ஒரு வகையில், இழப்பின் மீதான தியானமாய் ‘ஹவுஸ்கீப்பிங்’கை நினைத்துக் கொள்ளலாம், அதிலும் குறிப்பாய், அம்மாவின் இழப்பு மீதான தியானம், என்று. மேற்குலக இலக்கிய மரபு அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான பிளவை (‘கிங் லியர்’), மகனுக்கு அம்மாவுக்கும் இடையிலான பேதத்தை (‘ஹாம்லட்’/ ‘ஈடிபஸ்’) மகத்தான துன்பியல் நாடகங்களாகத் தொகுத்துக் கொண்டிருக்கின்றது என்றாலும், “அம்மா-மகள் நேசம் மற்றும் ஆனந்தத்துக்கு, நிலையான அங்கீகாரம் எதுவும் இதுவரை அளிக்கப்படவில்லை”, என்று (அட்ரியன் ரிச் சொற்களில்) சொல்லலாம் என்பதால் ‘ஹவுஸ்கீப்பிங்’கின் இந்தக் கூறு விமரிசகர்களால் முன்னோடியான ஒன்றாய் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.

பொய்யுலகை அளிக்கும் தீயசக்தி

This entry is part 4 of 6 in the series உலக தத்துவம்

அறிவின் தேடலில் ஈடுபடுபவர்கள் தங்களின் தேடலில் தெளிவு பெற அவர்கள் ஆராயும் விஷயத்தை ஒரு புனைவு தருணத்திற்குள் வைத்துப்பார்ப்பது வழக்கம். Thought experiment என்ற இந்த முறை நாம் வழக்கமாக அடைந்திருக்கும் பழக்கப்பட்ட பார்வைகளை உதறிவிட்டு புதிய பார்வைகளைப் பெற உதவுகிறது. பல சிந்தனைச் சோதனைகள் அதைப் படைத்தவருக்கு புதுப்பார்வைகளைப் பெற உதவுவதுடன் காலத்திலும் புதிராக நிலைத்துவிடுகின்றன. இவ்வகைச் சிந்தனைச் சோதனைகள் புனைவை படைப்பவர்களுக்குப் புனைவிற்கான விதையாக அமைகின்றன்.

மூவர் கவிதைகள்

அண்ணன் புத்தாடையும்
முகப்பூச்சுமாய்
உள்ளேயும்வெளியேயும்நடக்க,
திருந்தா நடையோடும்
இடை உள்ளாடையோடும்,
ஊருக்கு செல்லும் பிடியில்
வாசலில் இருந்த வாளியில்

கணிப்புக்குடில்

பூஜ்ஜியத்துக்கு இருக்கிற சிறப்பு யாருக்கும் இல்லை எனும் கர்வம் இருந்தாலும், பல சமயங்களில் தான் ஒரு பூஜ்ஜியம் தானே எனும் மனக்குறையும் அதற்கு உண்டு. பெரியவள் எனும் பொறுப்பைக் கொண்டதால் கணிப்புக்குடிலின் எந்த விதியையும் அது மீறாது. யார் என்ன சொன்னாலும் கேட்கும். செக்கு மாடு எனும் கிண்டலையும் மீறி அவளோடு நட்போடு இருப்பது ரெண்டு மட்டுமே. கணிப்புக்குடிலின் விதிக்கு ஏற்றவாறு ஒன்றோடு சேர்ந்து சுற்றும் என்றாலும் அவளுக்குப் பிடித்தது ரெண்டு தான். ஏனோ எண்களிலிலேயே அழகானது ரெண்டு மட்டுமே எனும் ரகசிய மையல் அதற்கு உண்டு.

ஜாய் வில்லியம்ஸின் “கடவுளைப் பற்றிய 99 கதைகள்”

தற்செயலான துப்பாக்கிச் சூட்டிற்கு ஊரின் தென்பகுதியில் உள்ள ஒரு குழந்தை பலியானது. ஏழே வயதான அவன் பலியாகியிருக்கத் தேவையில்லை. சொல்லப்போனால் யாருமே பலியாகியிருக்கக்கூடாது. துப்பாக்கி வைத்திருந்தவன் அந்த குறிப்பிட்ட வீட்டில் உள்ளவர்களுக்கு பயம் காட்ட நினைத்தான்.

தீதின் உணவுச் சங்கிலி: ஒடிய மொழிப் புத்தக அறிமுகம்

நாவலின் ஆழம் அதன் கூறுமொழியால் வருவது. கதைசொல்லி எல்லாம் தெரிந்தவர். நடப்பது அத்தனையையும் ஒவ்வொரு காட்சியாக தன் கருத்துக்களோடு விவரிக்கிறார். ஆனால் என்ன நடக்கிறதோ, அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது போல் பட்டுக்கொள்ளாமல் கதை சொல்கிறார். இது நம் ஆர்வத்தைத் தூண்டுகிறது என்பது ஒன்று என்றால், இந்த நடுநிலைமை நம்மை உறுத்தவும் செய்கிறது. கதைசொல்லியின் நகைமுரண் பார்வையும் கச்சிதமான நகைச்சுவை கூடிய அவரது கருத்துக்களும் பாத்திரங்கள் எதிர்கொள்ளும் அபத்தங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

ஆட்டோஃபாக்

மூன்றாவது நபர் எதுவும் சொல்லவில்லை. ஓ’நீல் வேறொரு குடியிருப்பிலிருந்து இங்கு பார்வையாளராக வந்தவர்; அவர்களோடு வாதிடும் அளவுக்கு அவருக்குப் பெரீனையோ, மோரிஸனையோ அவருக்கு அதிகம் தெரியாது. மாறாக அவர் கீழே குனிந்தமர்ந்து, தன் அலுமினம் சோதிப்பு அட்டையில் இருந்த காகிதங்களைத் திருத்தி அமைத்தார். எரிக்கும் சூரியனில், ஓ’நீலின் கைகள் பழுப்பாகி, ரோமமடர்ந்து, வியர்வையால் மின்னின.

ஒரு ட்ராகனோடு போரிட்ட கணினியின் கதை

“என்னோட பழம் கணினியே! என் நல்ல கணினியே! அப்படி இப்படி, இந்த ட்ராகன் என் சிம்மாசனத்தைப் பிடுங்க உத்தேசிக்கிறது, என்னைத் துரத்தப் போகிறது, உதவி செய், பேசு, நான் எப்படி அதைத் தோற்கடிப்பது?”
“ஓ-ஓ,” என்றது கணினி. “முதலாவது நீங்கள் முந்தைய விஷயத்தில் நான் சொன்னதுதான் சரி என்று ஒத்துக் கொள்ளுங்கள். இரண்டாவது, நீங்கள் என்னை டிஜிடல் பிரதம மந்திரியே என்றுதான் அழைக்க வேண்டும், ஆனால் நீங்கள் என்னை ’மாண்பு மிகு இரும்புகாந்த்’ அவர்களே என்று வேண்டுமானாலும் அழைக்கலாம்! “
“நல்லது, நல்லது. உன்னை நான் பிரதம மந்திரி என்று நியமிக்கிறேன். நீ எது சொன்னாலும் ஏற்கிறேன், என்னைக் காப்பாற்றுவதை முதலில் செய்!”
எந்திரம் விர்ரிட்டது, சிர்ரிட்டது, ஹம்மியது, ஹெம்மியது, பிறகு சொன்னது.

பதனிடப்படாத தோல்

அது அப்போது அவளிடம் பேசியது, அதன் குரல் தாலாட்டை ஒத்திருக்கும் செல்லோ வாத்தியங்களின் ஆழ்ந்த மரமரப்பான நாதத்தைப் போலக் கேட்டது. அது தன் அடர்ந்த முடியடர்ந்த கையால் சைகை செய்தது. அது ஏதோ உறுதி அளித்தது, கொடுத்தது, பின் கேட்டது; அவள் அப்போது செவி கொடுத்துக் கேட்டாள், புரிந்தவளாகவும், புரியாதவளாகவும் இருந்தபடி.
சொற்கள் மெள்ளமாக வந்தன. இது…. …உலகம்.
இங்கே வானம், பூமி, பனிக்கட்டி. அந்த கனத்த கரங்கள் அசைந்தன. கைவிரல்கள் சுட்டின.
குட்டி அடிமையே, நாங்கள் உன்னைக் கண்காணித்து வந்திருக்கிறோம். சுதந்திரமாக நீ என்ன செய்திருக்கிறாய் இன்று? உரிமை எடுத்துக் கொள். உன்னுடைய காலணி உள்ள நான்கு கால்களுக்கான தரை, நட்சத்திரங்களுள்ள வானம், குடிப்பதற்குப் பனிக்கட்டி. இன்று ஏதாவது சுதந்திரமாகச் செய். செய்வாய், செய்வாய்.

ஆடும் மனிதனும்

பிறகு ஆடே தொடர்ந்தது,
“சரி நானே விசயத்துக்கு வரன். நான் உங்களுக்கெல்லாம் ஒரு வாய்ப்பு தரலாம்னு இருக்கன். நீங்க உங்க பாதையில இருந்து விலகிட்டீங்க. மத்த எல்ல உயிரினமும் இயற்கைக்கும், மத்த உயிர்களுக்கும் மதிப்பளிக்குது.”
சற்று இடைவெளி விட்டு,
“ஒத்துக்கறன், சில உயிரினங்கள் மத்ததை சாப்பிடுதுங்க தான், ஆனா அது உங்க அளவுக்கு இல்ல. நீங்க தேவைக்கு ரொம்ப அதிகமா கொலை செய்யறீங்க. நீங்க செய்றதுக்கு பலனை அனுபவிக்கலனா எப்படி. அதுக்கு முன்னாடி உங்களுக்குத் தர கடைசி வாய்ப்பு இது. இத நீங்க பயன்படுத்திக்கிட்டா சரி. இல்லனா அதன் விளைவுகள் மோசமானதா இருக்கும்,”

உயிரெச்சம்

“பிரியப் பெற்றோரின் பெற்றோர்களே,  
எத்தனை பெரிய இழப்பு நமக்கு.  அவர்கள் இருவரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.  நீங்களாவது வர மாட்டீர்களா? எலும்புகள் வளரத் தொடங்கிவிட்டன,  ஜெனிடல்ஸ் அமைந்துவிட்டன, கண்களை மூடித் திறக்கப் பயிலுகிறேன்.  நுரையீரலும் தசைகளும் வலுவாக ஆரம்பித்திருக்கின்றன. யுகந்தராவும் நானும் ஏங்குகிறோம்.  எங்கள் உணவை நாங்களே தயாரித்துக் கொண்டிருக்கிறோம், ப்ரசன்னாவின் உதவியோடு. ஆனால் எவ்வளவு நாள்?”