முதற்பனி

This entry is part 13 of 11 in the series ஹைக்கூ

புதிய தொடக்கத்தைக் கவித்துவமாகக் குறிப்பிடும் வார்த்தையாக மொழியிலும், கடந்த கால நிகழ்வுகளுக்கு மன்னிப்புக்கேட்டுப் புதிதாகத் தொடங்குவதற்கு ஏற்ற பருவகாலமாகக் கலாசாரத்திலும் ஹட்சுயுகி என்னும் முதல் பனிப் பனிப்பொழிவு இணைகிறது. ஹைக்கூவின் முதல் அடி பருவகாலத்தின் முதற்பனியை மட்டும் குறிப்பிடாமல் உள்ளுறையாக ஒரு புதிய தொடக்கத்தைச் சொல்வதாகவும் பார்க்கப்படுகிறது.

பிள்ளையின்மை

This entry is part 12 of 11 in the series ஹைக்கூ

குழந்தையற்றவள்பொம்மை விற்கிறாள்விதி கவிஞர்: ரென்செண்ட்சு (1654 – 1707) உமஸுமெனொஹினாகஷிட்சுகுசொஅவரெனரு 石女の雛かしづくぞ哀れなる கிரிகோரியன் நாட்காட்டியின்படி ஒரு மார்ச் 3ம் தேதி, பழைய ஜப்பானிய நாட்காட்டியின்படி மூன்றாம் மாதத்தின் மூன்றாம் தேதி பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அதே நாள் ஹினா மட்சுரி என்னும் பெயரில் பொம்மைகள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. “பிள்ளையின்மை”

படுக்கை வரையில் பனி

This entry is part 11 of 11 in the series ஹைக்கூ

அறைக்குள் போர்வையில் பனி பொழிந்திருப்பது கூரையின் வழியாகவும் இருக்கலாம் எனக் காட்சியமைப்பு விரிவதை நுட்பமாக மூன்றாம் அடியின் திருப்பம் தடுக்கிறது. மேலிருந்து கீழே பனி வீழ்வதைச் சொல்லாமல், புனிதபூமியிலிருந்து எனச் சொல்லி பௌத்த மடாலயம் இருக்கும் புனிதபூமியின் திசையிலிருந்து வீசுகின்ற காற்று பனித்துகளை அறைக்குள் நிறைப்பதைச் சொல்கிறது.

கிளைக்கு உயரும் மலர்

This entry is part 10 of 11 in the series ஹைக்கூ

தமிழில் ‘கறந்த பால் மடி புகாது’ எனப் பழமொழி உள்ளதைப் போல ஜப்பானிய மொழியில் ‘உதிர்ந்த மலர் கிளை திரும்பாது’ எனப் பழமொழி உள்ளது. ‘ஓச்சி ஹனா யெதானி கயேராசு’ என அதனைச் சொல்வர். ஓச்சி – விழுந்த, ஹனா – மலர், யெதா_னி – கிளை_க்கு, கயேராசு – திரும்பாது. இந்தப் பழமொழியின் ஒரு பாதியை முதலடியில் கொண்டது இக்கவிதையின் முதற்சிறப்பு.

அறுந்த பட்டம்

This entry is part 9 of 11 in the series ஹைக்கூ

காற்றாடியும் தன்னைச் சுற்றியிருக்கும் காற்றாலும், தான் இணைக்கப்பட்டிருக்கும் நூலாலும் உயரே பறக்கிறது. காற்றின் விசையால் உயர்கிறது, பறக்கிறது. நூலின் இணைப்பால் நிலைத்து நிற்கிறது. காற்றாடிக்கு நூலுடன் உள்ள இணைப்பு துண்டிக்கப்படுகையில் காற்றின் விசையால் அதற்கு எந்தப் பலனும் கிடைக்காமல் வீழ்கிறது.

நடவுப் பாடல்

This entry is part 8 of 11 in the series ஹைக்கூ

ஹஜிமே என்னும் இந்தச் சொல் ஜப்பானிய உரையாடலில் இடம்பெறும். ‘முதன்முறையாக சந்திப்பதில் மகிழ்கிறேன்’ என்னும் சொற்றொடர் ஜப்பானிய உரையாடல்களில் ஒருவரை முதலில் சந்திக்கும்போது அவசியம் சொல்லப்படும் வாக்கியம். ஜப்பானிய மொழியில் ‘ஹஜிமேமாஷிதா’.

வாளைத் துறந்த சாமுராய்

This entry is part 7 of 11 in the series ஹைக்கூ

ஒரு சாமுராய்க்கு முக்கியம் வாள். வாளைத் தீட்டுவதும், கூர் பார்ப்பதும், இமைக்கும் நேரத்தில் அதை உறையிலிருந்து எடுத்து வீசுவதும், பின்னர் உறையைக் கண்ணால் பார்க்காமல் கைகளால் உணர்ந்து வாளை மீண்டும் உறையில் செருகுவதும், சாமுராய் மேற்கொள்ளும் பயிற்சிகள். வாளின் திறனைப் பின்னிறுத்தி அறிவால் ஆளுமையை நிரூபித்த சாமுராய் உண்டென்றாலும், அது விதிவிலக்கு.

காகமும் அழகு

This entry is part 6 of 11 in the series ஹைக்கூ

வீதிகளில், கூரைகளில், நிலத்தில் வெண்பனி போர்த்தப்பட்டிருக்கிறது. கண்ணுக்கு எட்டியவரையில் எங்கும் வெண்மை தெரியும் அந்தப் பனிக்காலத்தின் காலையில், அந்த வெள்ளைப் பரப்பின் மேல் கருமை நிறக்காகம் அமர்ந்திருப்பது பாஷோவுக்கு அழகாகத் தோன்றுகிறது. காகம் வெள்ளை நிறப் பின்னணியில் அமர்ந்திருக்கையில் கருப்பு வெள்ளை நிறபேதம் காட்சியழகைக் கூட்டுகிறது. பொதுவாக விரும்பப்படாத காகமும், அந்தக் காலையில் காட்சியழகுக்காக விரும்பப்படுகிறது.

புறாவின் அழைப்பு

This entry is part 3 of 11 in the series ஹைக்கூ

வசந்தகாலத்தில் மழை பொழிகிறது. எப்போதும் பொந்துக்குள் இருக்கும் ஆந்தைக்கு மழை பொழிவது பிடிக்கவில்லை, தன்னுடைய முகத்தில் சலிப்பைக்காட்டுகிறது. ஆந்தை இப்படி மழையைப் பார்த்துச் சலிப்பை வெளிப்படுத்துவது புறாவுக்குப் பிடிக்கவில்லை. ஆந்தையை அழைத்துத் தன் பார்வையை வெளிப்படுத்துகிறது.

ஹைக்கூ – ‘அ’ (あ) முதல் ‘ன்’ (ん) வரை – 2

This entry is part 2 of 11 in the series ஹைக்கூ

அவள் தன்னை அலங்கரித்துக்கொண்டு வெளியே புறப்படுகிறாள். வழியில் காற்று வீசுகிறது, அதன் வேகம் அவளைத் தள்ளுகிறது. அவளுடைய உடை காற்றில் படபடத்தும் மேனியில் ஒட்டியும் அவள் வீட்டிலிருந்து அணிந்த கோலத்திலிருந்து மாறுகிறது, கூந்தல் கலைகிறது. காற்று வீசுவது வசந்தகாலத்தில் நடப்பதுதான் என்றாலும் அவளுக்கு அந்த நேரத்தில் வீசிய காற்று தன் அலங்காரத்தைக் குலைத்தது பிடிக்கவில்லை, கோபப்பட்டு முகம் சுளிக்கிறாள்.

ஹைக்கூ – ‘அ’ (あ) முதல் ‘ன்’ (ん) வரை

This entry is part 1 of 11 in the series ஹைக்கூ

ஹைக்கூ இலக்கணத்தின் பார்வையில் இக்கவிதையை அணுகினால், ஹைக்கூவின் அசையெண்ணிக்கையான முதலடியில் ஐந்து அசைகளும், இரண்டாம் அடியில் ஏழு அசைகளும், மூன்றாம் அடியில் ஐந்து அசைகளும் இக்கவிதையில் இருக்கின்றன. புதிய ஹைக்கூக்களில்தான் ஜப்பானியர் அசையெண்ணிக்கை இலக்கணத்தை மீறுகிறார்கள்.

கோபக்கார இளைஞர்கள் (ஆங்க்ரி யங் மென், சலீம் – ஜாவீத்)

இந்தோரிலிருந்து சலீமும் குவாலியரிலிருந்து ஜாவீதும் மும்பைக்கு வந்து, சலீம் திரைப்படத்தில் நடிக்கவும் ஜாவீத் திரைப்படங்களுக்கு எழுதவும் தொடங்கிய தொடக்க நாள்களில், அங்கும் இங்குமாகச் சில வாய்ப்புகளுக்குப் பின் சிப்பி தயாரிப்பு அலுவலகத்தில் வெலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். சிப்பி தயாரிப்பு அலுவலகத்தில் அவர்கள் இருவருக்கும் மாதச்சம்பளம் ஆளுக்கு 750 ரூபாய்

பர்வீன் ஷாகிர் கவிதைகள்

காதலர்களின் பிரிவும் சேர்தலும் தமிழ் இலக்கியத்தில் பாடப்பட்டிருப்பதைப் போல உருதுக் கவிதைகளிலும் பாடப்பட்டிருக்கின்றன. வஸ்ல் (wasl) என்னும் உருது வார்த்தை இணைவதையும், ஹிஜ்ர் (hijr) என்னும் உருது வார்த்தை பிரிவையும் குறிக்கின்றன. ஹஸ்ரத் மோகானி எழுதி, குலாம் அலியால் பாடப்பட்டு கஜல் ரசிகர்களை இன்றும் ஈர்க்கும்

மூத்த அகதி – நாவல் – வாசு முருகவேல்

This entry is part 65 of 72 in the series நூறு நூல்கள்

சென்னையில் அடுக்குமாடிக் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து, மெல்ல அதை விருந்தினர் விடுதியாக மாற்றிய விளக்கத்திலிருந்து கதை துவங்குகிறது. அந்த விடுதியில் தங்கிச் செல்வோர் அனைவரும் வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்கள். இந்த விளக்கத்தினிடையே வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்களால் நிறைந்து காணப்படும் அந்த விடுதியில், அவர்களில் இலங்கைத் தமிழர்களும் இருப்பார்கள் என வார்த்தைகளில் சிறிய வேறுபாட்டைக் காட்டிக் கடக்கிறார். 

ஜாவீத் அக்தர்

This entry is part 12 of 12 in the series கவிதை காண்பது

‘யுகாந்தர்’, மிதுன் சக்ரபோர்த்தி – சங்கீதா பிஜ்லானி நடித்து, என். சந்த்ரா எழுதி இயக்கிய திரைப்படத்துக்குப் பாடல் எழுத ஜாவீத் அக்தர் அழைக்கப்படுகிறார். இசையமைப்பாளர்கள் லக்ஷ்மிகாந்த்-பியாரிலால் தயக்கத்துடன் ஒரு பாடலில் கண்ணபிரானின் ‘ஆரத்தி’ படமாக்கப்படும், பாடல் வரிகளும் அதற்கு ஏற்றாற்போல் அமையவேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்கள். இதை ஏன் தயங்கித் தயங்கிச் சொல்கிறீர்கள் எனக் கேட்டுப் பாடலின் மெட்டை வாசிக்கச் சொல்லியிருக்கிறார்.

ஷகீல் பதாயுனி

This entry is part 11 of 12 in the series கவிதை காண்பது

இஸ்லாமியர் ஒருவர் திரைப்படத்தில் இந்து சமய பக்திப் பாடல்களை எழுதியது தொடர்பான கருத்து வேறுபாடுகள் ‘திருவிளையாடல்’ திரைப்படக் காலத்தில் தமிழ்த் திரையில் இருந்ததைப் போல, வடக்கிலும் பைஜு பாவ்ரா (1952) திரைப்படக் காலத்தில் இருந்துள்ளது.பைஜு பாவ்ராவில் பக்திப் பாடல்கள் நிறைய எழுதப்படவேண்டியதால் இயக்குநர் விஜய் பட் கவிஞர் கவி ப்ரதீப்பைப் பரிந்துரைத்துள்ளார். ஒருமுறை ஷகீலின் பாடல்களைப் பார்த்துவிடும்படி இசையமைப்பாளர் நௌஷாத் விஜய் பட்டிடம் விண்ணப்பம் வைக்க, ஷகீலின் பாடலைப் பார்த்த விஜய் அவருக்கு பைஜு பாவ்ராவில் பக்திப்பாடல்களை எழுத வாய்ப்பு அளிக்கிறார்.

சாஹிர் லூதியான்வி

This entry is part 10 of 12 in the series கவிதை காண்பது

திரைப்பாடல்களில் இசைக்கு வரிகளா வரிகளுக்கு இசையா என்னும் பட்டிமன்றம் காலங்காலமாக நிகழ்கிறது. சாஹிர் தனது வரிகளுக்கு இசை அமைக்கப்படுவதில் பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால் எஸ்.டி. பர்மனுக்குக்கும் அவருடன் மனக்கசப்பு உண்டானது. ஒரு காலகட்டத்தில் தனது பாடலைப் பாடும் லதா மங்கேஷ்கருக்குத் தரப்படும் தொகையைவிட தனக்கு ஒரு ரூபாய் அதிகமாகத் தரவேண்டும் எனப் பிடிவாதமாகச் சொல்லியுள்ளார்.

 ரஹ்பர் ஜவ்ன்பூரி

This entry is part 9 of 12 in the series கவிதை காண்பது

ரஹ்பர் ஜவ்ன்பூரியின் ‘என் நாடு’ (மேரா வதன்) என்னும் நாட்டுப்பற்றுப் பாடலில் மதநல்லிணக்கம்
முதன்மையாக ஒலிக்கும். ஜான்சி ராணி, ரஸியா சுல்தான், அவாதி, இராஜபுத்திரர், வங்காளம், பனாரஸ்
என இந்தியாவின் பெருமைகளைப் பாடும் பாடலில் மதநல்லிணக்கத்தை முன்னிறுத்திப் பாடியது சிறப்பு.
ஷேக் மின்ஹாஜ் அன்சாரி (எ) ரஹ்பர் ஜவ்ன்பூரி உத்தரப்பிரதேசத்திலுள்ள ஜவ்னபூரில் பிறந்தவர். ஆரம்பக்
கல்வியையும் பயிற்சியையும் அங்கு பெற்றார். புகழ்பெற்ற உருது ஆசிரியர் ஷஃபா குவாலியரின்
மாணவர்களுள் முக்கியமானவராக அவர் அறியப்பட்டார்.

வலி மொஹம்மத் வலி

This entry is part 8 of 12 in the series கவிதை காண்பது

வலி தக்கனி குறித்து எழுத்தாளர் இரா. முருகன் ‘கஜல்’ புத்தகத்தின் முன்னுரையில், //கஜலில் மகாகவியாக விளங்கிய மீர்ஸா காலிப்கூட்த் தன் முக்கியமான இருபது வருடங்களில் உருதுவில் எழுதுவதைத் தவிர்த்து, பாரசீக மொழியிலேயே படைப்பதில் ஈடுபட்டிருந்தார் என்றும், வட இந்தியாவில் உருது கஜல் செழிக்க தென்னிந்தியக் கவிஞர் வலி தக்கனியின் முயற்சிகளும் காரணம் என்று அறியும்போது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒருங்கே ஏற்படுகின்றன// எனக் குறிப்பிடுகின்றார்.

இன்ஷா அல்லாஹ் கான் இன்ஷா

This entry is part 7 of 12 in the series கவிதை காண்பது

இன்ஷா அல்லாஹ் கான் (1752 – 1817) வங்காளத்தின் நவாப் சிராஜ்-உத்-தௌலாவின் ஆட்சிக்காலத்தில் பிறந்தவர். இரண்டாம் ஷா ஆலம் காலத்தில் குழப்பமான அரசியல் சூழல் நிலவிய காலகட்டத்தில் டில்லிக்கு இன்ஷாவின் குடும்பம் குடிபெயர்ந்த்து.முதலில் ராணுவத்தில் பணிபுரிந்து, பின்னர் தன்னுடைய மொழித் திறனாலும், கவிதை எழுதும் ஆற்றலாலும், யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் உள்ளதை உள்ளபடி நகைச்சுவையாக்க் கவிதையில் சொல்லும் திறனாலும் அரசவையில் இடம் பெற்றார்.

அஜீஸ் பானு தாராப் வஃபா

This entry is part 6 of 12 in the series கவிதை காண்பது

அஜீஸ் பானுவின் முன்னோர்கள் ஸ்ரீநகரிலிருந்து லக்னோவிற்குக் குடிபெயர்ந்தவர்கள். தங்களுடைய குடும்ப வழமைக்கு மாறாக அஜீஸ் பானுவை மேற்படிப்புக்கு அனுப்பினார்கள். 1929இல் அஜீஸ் பானு லக்னோ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன் பின்னர் பெண்கள் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

ஹஃபீஸ் ஜலந்தரி

This entry is part 5 of 12 in the series கவிதை காண்பது

மௌலானா நவாபுத்தீன் ராம்தாஸி என்னும் அறிஞரை ஹஃபீஸ் ஜலந்தரி சந்திக்கும்போது நபிகள் நாயகத்தின் புகழைப் பாடுகிறார். மௌலானா ஹஃபீஸின் படிப்பு குறித்துக் கேட்கையில், ஹஃபீஸ் பள்ளிப்படிப்பையும் முடிக்காதவர் என்று தெரியவருகிறது. பக்திப் பாடல்களின் மீது ஹஃபீஸ் ஜலந்தரிக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்த மௌலானா, அவரைத் தன் சீடனாக ஏற்றுக்கொள்கிறார்.

சீமாப் அக்பராபாதி

This entry is part 4 of 12 in the series கவிதை காண்பது

புத்தரைக் குறிப்பிடும்போது ‘இந்தியத் திருநாட்டின் முதல் ஒளி’ (சர்-ஜமீன்-ஏ-ஹிந்த் கா இர்ஃபானி-ஏ-அவ்வல் ஹை து) என்கிறார். இந்தியாவில் உன் ‘நினைவுகள் இன்னும் புதிதாக உள்ளன / சீனம் ஜப்பான் திபெத் வரை உன் குரல் எட்டியுள்ளது’ என்பது அந்தக் கவிதையில் இருக்கும் இன்னொரு அடி. தன்னுடைய ஹோலி கவிதையில் சீமாப் விடுதலை வேட்கையையும் இணைத்து எழுதியுள்ளார். ‘என் மடியில் முன்னேற்றம் தன் வண்ணங்களை நிறைக்கட்டும் / என்னுடைய ஹோலியின் வருகையைப் போல் விடுதலையும் வரட்டும்’ (இர்த்திகா கே ரங்க் சே லப்ரீஸ் ஜோலி ஹோ மேரி / இங்குலாப் ஐசா கோயி ஆயே தோ ஹோலி ஹோ மேரி).

மௌலானா ஸஃபர் அலி கான்

This entry is part 3 of 12 in the series கவிதை காண்பது

இந்திய விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸ் ஆதரவாளராகவும், பிறகு முஸ்லிம் லீக் ஆதரவாளராகவும் இருந்தவர் மௌலானா ஸஃபர் அலி கான். தன்னுடைய பத்திரிகை ஜமீன்தாரில் விடுதலை வேட்கைக் கருத்துகளை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக எழுதியதால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர். இஸ்லாமிய அடையாளங்களுடன், கொள்கைகளுடன் வாழ்ந்த ஸஃபர் அலி கான் இராமனின் புகழ் பாடும் கவிதைகளை எழுதியுள்ளார். அக்கவிதைகள் இஸ்லாத்துக்கு முரண்பட்டவை அல்ல என்னும் கருத்து கொண்டவர்.

அல்லாமா இக்பால்

This entry is part 2 of 12 in the series கவிதை காண்பது

இக்பாலின் ‘இறைவனுக்கு ஒரு கேள்வி’ (ஷிக்வா, புகார்) கவிதை வெளியானபோது அதில் நாத்திகம் ஒலித்தததைக் கண்டு மார்க்க அறிஞர்கள் குழம்பினர். இக்பாலுக்கு இறைவனை நோக்கிக் கேள்வியெழுப்பும் தைரியத்தைக் கொடுத்து எது? எதனால் இக்பால் இப்படி எழுதினார்? என ஐயத்துடன் ‘ஷிக்வா’வை அணுகினர். இக்பாலை இறை எதிர்ப்பாளராகவும் பேசத் தயங்கவில்லை. அதன் பின்னர் ‘கேள்விக்கு பதில்’ (ஜவாப்-ஏ-ஷிக்வா, புகாருக்கு விளக்கம்) கவிதையில் முன்னம் தான் இறைவனை நோக்கிக் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் இறைவன் பதில் அளிக்கும் வகையில் எழுதினார். அந்தக் கவிதைக்குப் பிறகு, இக்பாலின் ஷிக்வா, ஜவாப்-ஏ-ஷிக்வா இரண்டும் இஸ்லாமிய இலக்கியத்தில் சிறந்த படைப்புகளுள் ஒன்றாகப் பார்க்கப்பட்டது

ஹஸ்ரத் மோஹானி

This entry is part 1 of 12 in the series கவிதை காண்பது

உருதுக் கவிதைகளை வாசிக்கையில் அங்கங்கே தென்படும் மதநல்லிணக்க வரிகளை எளிமையாகக் கடக்க இயலவில்லை. இன்னொரு மதத்தைப் பின்பற்றினாலும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக ஹஸ்ரத் மோஹானி, மகாகவி இக்பால், ஹாஃபீஸ் ஜலந்த்ரி, ஃபிராக் கரக்பூரி எனப் பல கவிஞர்கள் தங்களுடைய கவிதை வரிகளில் இராமனையும், கிருஷ்ணனையும் வடித்துள்ளனர்.

தேவை ஒரு தங்கம்

ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டிகள் பன்னாட்டுக் குத்துச்சண்டைக் கூட்டமைப்பில் நடந்த போட்டிகளில் ஆறு முறைகள் தங்கம் வென்ற மேரி கோமின் சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. அந்தப் போட்டிகளில் அதிகப் பதக்கங்களை வென்ற நாடுகளின் வரிசையில், ரஷ்யா சீனாவுக்கு அடுத்து இந்தியாவுக்கு மூன்றாம் இடம். ரஷ்யா 60 பதக்கங்களைம், சீனா “தேவை ஒரு தங்கம்”

முகமது அலி

இன்றைக்கு ‘கதம்பத் தற்காப்புக் கலை’களில் (Mixed Martial Art) வீரர்கள் வீசத் துடிக்கும் நங்கூரக் குத்தின் (Anchor punch) பிதாமகன் முகமது அலி. கிட்டத்தட்ட தலையில் கொட்டுவது போன்ற பாவனையில் நேராக வீசப்படும் குத்து. முதன்முதலில் இந்தக் குத்தினை முகமது அலியிடமிருந்து தாடையில் வாங்கி வீழ்ந்தவர் சன்னி லிஸ்டன். ஆண்டு 1965. எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதான தோற்றத்தை உண்டாக்கி எதிரியை அழைத்து, எதிரி தாக்குவதற்கு வந்தவுடன் அதிவேகமாக எதிரியைத் தாக்கி வீழ்த்தும் வியூகம் இது. இந்த வீச்சில் முகமது அலி, அவரேகூட தனது குத்து இத்தனை வேகத்தில் வீசப்பட்டிருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை, காரணம், தான் குத்தினை வலக்கரத்தால் வீசிய பின் தனது எதிராளி …

சேரிடம் அறிந்து சேர்

தான் இருப்பதை பழுதாகும் வரையில் உணர்த்தாத எந்த ஒரு இயக்கத்துடனும் மின்மாடத்தை (லிஃப்ட் அல்லது எலிவேட்டர்) ஒப்பிடலாம். மின்மாடங்கள் இல்லாத கட்டடங்கள் இன்றைக்கு இல்லை என்று சொல்லும் அளவிற்கு வணிக வளாகங்களிலும், வசிப்பிடங்களிலும், அலுவலகங்களிலும் மின்மாடங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. பார்ப்பதற்கு மேலே கீழே சென்று வரும் ஒரு கருவியாகத் தோன்றினாலும், விண்ணுயர் மாளிகைகளில் மின்மாடங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பயணிகளை அவரவர் இருக்கும் மாடிக்கு அனுப்பிவைக்கும் தலையாய பணியையும் செய்துகொண்டிருக்கின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு கட்டடத்தின் போக்குவரத்திற்காக செங்குத்தாகச் சென்றுவரும் வாகனங்கள்தான் மின்மாடங்கள்.