தமிழ் இசை மரபு – இறுதிப் பகுதி

தெற்குக்கு அதன் சரித்திரம் முழுவதிலும் நீடித்து இருந்த ஒரு விஷயம் அதன் அறுபடாத மரபு, அம்மரபின் மேல் அது கட்டி எழுப்பிக் கொண்டு போக முடிந்தது, அதற்கு சாதகமாக இருந்தது வட இந்தியாவை ஒப்பிட்டு நோக்கும் போது, இங்கு நிலவிய அமைதி. கோவிலிலிருந்து பிரவாஹித்த பாடகர்களின், நாட்டிய கலைஞர்களின் இனிமையான இசை மற்றும் லயத்துடனான தாள சப்தங்கள் அப்பிரதேசம் முழுவதுமே எதிரொலித்தது. நாயக்கர்களுக்குப் பின்வந்த மராத்தா மன்னர்களும் இன்னும் அதிக அளவில் இம்மரபைத் தொடர்ந்தனர். சாலைகளிலும், கோவில்களின் நடைபாதைகளிலும் நிரம்பியிருந்த இசைக்கு பாமர மக்களும் (hoi polloi), நூற்றாண்டுகள் பலவாகத் தொடர்ந்து நிலவும் இத்தகைய சூழலில் இதற்கு அன்னியப்பட்ட பாமர மக்கள் இருந்திருப்பாராயின், அப்பாமர மக்களும் இச்சுழலில் மூழ்கி மகிழ்ந்தனர்.

தமிழ் இசை மரபு – பகுதி 2

சரித்திரத்தின் ஒரு சுருக்கமான, வேகப் பார்வையில், தொல்காப்பியர் காலத்திலிருந்து ஒரு தொடர்ந்த பிரவாஹத்தை நாம் பார்க்கிறோம். தொல்காப்பியம், ‘ஆற்றுப்படை” என்ற இலக்கிய வகையின் குணங்களைத் தொகுத்துக் கூறுகிறதென்றால் இந்த பிரவாஹம் கிருஸ்துவுக்கு எத்தனை நூற்றாண்டுகள் முற்பட்டது என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும். தொல்காப்பியத்திலிருந்து 12 – ம் நூற்றாண்டின் பக்தி சகாப்தத்தின் முடிவு வரை, இடையில் அது கடந்த பக்தி சகாப்த சிலப்பதிகாரக்காலத்தில் இசையும் கவிதையும் ஒருங்கிணைந்தன: செவ்வியல் இசை மற்றும் கவிதையின் இணைவு, செவ்வியல் கலை மற்றும் நாட்டார் கலையின் இணைவு, இவற்றுடன் பொதுமக்களிடம் கலை அமிழ்ந்தது. 12 – ம் நூற்றாண்டு வரையேனும், 1500 ஆண்டுகள் அறுபடாமல் நீடித்த பாரம்பரியம் இது. சரித்திரத்தின் துவக்கத்திலிருந்து நூற்றாண்டுகளாய், இசையுடன் இணைந்த சாகித்யம், பொதுமக்களின் தளத்தில் அதன் மரபைத் தியாகம் செய்யாமல், தொடர்ந்திருப்பது நாம் அறிந்தவரையில் எங்குமே இணையில்லாத தமிழ்மண்ணுக்கே உரிய அதிசயமான நிகழ்வு.

தமிழ் இசை மரபு

ரமா மாத்யா இயற்றிய (கி.பி. 1550, ஆந்திரம்) ஸ்வரமேள கலாநிதி ‘ஏக ராக வீணா’ (ஒரு ராக வீணை) ’சர்வ ராக வீணா’ (எல்லா ராகங்களுக்குமான வீணை) என்பனவற்றைப் பற்றிப் பேசுகிறது. இதிலிருந்து சங்க காலத்தில் பல யாழ்கள் இருந்தன, ஒவ்வொன்றும் ஒரு ராகத்தை மட்டும் இசைப்பதற்காக வடிவமைக்கப் பட்டிருந்தது என்பதை நாம் அறியலாம். இது காலப்போக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட தந்திகளை பயன்படுத்தி வீணை உருவாக்கும் வேலைப்பாட்டில் ஏற்பட்ட வளர்ச்சியினால் மாறி, இறுதியில் பலவகைகளில் இயங்கககூடிய வீணையின் வடிவமைப்புக்கு வழி வகுத்தது, ஆயினும் அத்தகைய யாழ்கள் பலகாலம் நீடித்திருந்தன. இன்றைய வீணை ’சர்வராக’ வீணையாகும்.

வெண்முரசு பிள்ளைத்தமிழ்

”ஞாலப்பெருவிசையே, ஞானப்பெருவெளியே, யோகப்பெருநிலையே இங்கெழுந்தருள்வாயே” என விண்ணிலிருந்து உடலிலியாக எழும் கமலஹாசனின் குரல்; மடியில் முலையுண்ணும் சிசுவின் உடலில் விதிர்க்கும் அசைவை  ஒரு அன்னை மட்டுமே அண்மையில் அறியக்கூடிய அவதானமாக ’விரிமலர் முதலிதழோ எனத்தோன்றும் பெருவிரலே’ என சைந்தவியின் குரலில் வரும் சரணம்; ‘சொல்லுரைத்து செயல் காட்டி சென்ற அரசே’ ‘இப்புடவியின் மேல் உன் நோக்கு ஒரு கணமும் அணையாதாகுக – என ஆணையும் விழைவும் வேண்டலுமான உச்ச ஸ்தாயில் உயர்ந்து ஒலிக்கும் சரணத்திற்கு ஸ்ரீராமின் குரல்…

பாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்

1980இல் நடத்தப்பட்ட பட்டறைக்குப் பிறகு இரண்டு முறை தமிழகத்தில் நாடகப் பட்டறைகள் நடத்துவதற்காகப் பாதல் சர்க்கார் வந்தார். ஒன்று லயோலா கல்லூரியிலும், இன்னொன்று மதுரையில் ஐடியாஸ்- ஐக்கப் என்ற கிறித்தவத் தன்னார்வக் குழுக்களின் ஏற்பாட்டிலும் நடந்தது. அந்தப் பட்டறைகளில் பங்கெடுத்தவர்கள் பின்னாளில் நாடகக்காரர்களாக மாறவில்லை. மதுரையில் நடந்த பட்டறையின்போதுதான் நான் நேரடியாக அவரைப் பார்த்தேன். நாடகக்காரர்களை உருவாக்கும் நோக்கமில்லாமல் விழிப்புணர்வுப் பிரசாரகர்களை உருவாக்கும் நோக்கம்கொண்ட அப்பட்டறைகளின் பின்விளைவுகள் பற்றிக் குறிப்புகள் எவையும் இல்லை.

“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”

மிகச் சிறிய இடத்தில் எழுத்தாளர் திலீப் குமாரும் ராமகிருஷ்ணனும் சிகரெட் புகைசூழ வேலை செய்துகொண்டிருப்பார்கள், நானும் என் மாமாவும் அடுத்த அறையில் புத்தகங்களை மேய்ந்து கொண்டிருப்போம். க்ரியா ஒரு கண் திறப்பு அனுபவமாய் இருந்தது. அங்குதான் நான் சுந்தர ராமசாமியின் புத்தகங்களையும் ஸ்ரீராமின் மொழியாக்கங்களையும் அறிந்துகொண்டேன். தார்கோவ்ஸ்கியின் Sculpting in Time என்ற புத்தகத்தின் தமிழாக்கமும் அங்கேதான் கிடைத்தது.

இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல்

பிறந்து வளர்ந்ததெல்லாம் திருவாரூரில். திருவாரூர் இசையும், குறிப்பாக லயமும் என்னைச் சுற்றி எப்போதும் முயங்கிய அற்புதமான ஊர். கண் விழித்ததிலிருந்து உறங்கச் செல்வது வரை வெவ்வேறு வகையான தாளங்கள் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். தியாகராஜர் உற்சவ மூர்த்தியாய் வலம் வரும் போது ஆடப்படும் அஜபா நடத்திற்கொரு லயம்; சிவன் மயானம் நோக்கி செல்கையில் ‘மசான பத்திரம்’ என்று வேறொரு லயம்; ஊர்வலங்களில் வாசிக்கப்படும் வெவ்வேறு வகையான மேள வாசிப்புகள், இறப்பின் போது கேட்கும் பறை, காளி கோயிலில் கேட்கும் உடுக்கை என வெவ்வேறு தாளங்கள் என்னைச் சுற்றிக் கேட்டுக்கொண்டே இருக்கும்.

முறுக்குக்கம்பிகளும் ஷாம்புக்களும் கோ ஸ்பான்ஸர்ட் பை தருணங்களும் – கவிஞர் இசையின் கவிதை குறித்து.

கவிதையாக்கம் குறித்து நமக்கிருக்கும் மயக்கங்களைத் தாண்டி கவிஞர் இசையின் வரிகளைப் பார்க்க வேண்டியுள்ளது. இவை வார்த்தைகளின் வரிசை மீதும், கவிதை இலக்கணம் மீதும் மதிப்புள்ள கவிதைகள அல்ல. இயல்புக்கும் கற்பனைக்கும இடையே சஞ்சரிக்கும் வேடிக்கை உலகத்தைப் பற்றிப்பேசுபன. மரபு வழி மனது கொண்டவர் என்றாலும் அதை மறுதலித்து சற்றேனும் தளர்த்திக்கொள் என எதிர் தரப்பிலிருந்து தன் கவிதை உலகை அமைத்துக்கொள்பவராகக் கவிஞர் தெரிகிறார். அவர் மனம் இயங்கும் முறை அப்படி இருக்க வேண்டும், இல்லாவிட்டால் ஏதேனும் ஒரு சொல்லேனும் நீ எங்கள் உலகவாசி அல்ல எனத் தள்ளிவிட்டுவிடக்கூடும்.

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 5

என் எண்ணம் என்னவாக இருந்ததென்றால் அவனுடைய திறமையின் மேன்மை எப்படியாவது உலகம் அறியும் படிச் செய்து விட்டால் அவன் நடத்தையின் விநோதங்களை உலகம் பொருட்படுத்தாமல் இருக்கப் பழகிக் கொள்ளும் என்று நம்பினேன். புல்லாங்குழல் கலைஞர் டி ஆர் மகாலிங்கம் விஷயத்தில் உலகம் முதலில் அவர் வாசிப்பில் இருந்த மேன்மையை அங்கீகரித்தது. பின்னர் தான் அவர் குணாதிசயங்களில் இருந்த விநோதங்களை உள் வாங்கிக் கொண்டது. அப்போதெல்லாம் அவர் மேதைமையின் காரணமாக உலகம் அவர் குணாதிசயக் கூறுகளை சகிக்கக் கற்றுக்கொண்டது. இதே போல் ஆதித்யா விஷயத்திலும் நடந்தால் தேவலை என்று நான் நினைத்தேன். இதில் இன்னொரு விஷயமும் அடங்கி இருந்தது. அவன் பாடல்களைக் கேட்டுக் கேட்டு தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி வருகிறான். இதைப் போய் நான்கு சுவர் உள்ள ஒரு கட்டுமானத்தில் போட்டோம் என்றால் இதனால் அவன் இயற்கையான இசை மேதைமை அதில் தீய்ந்து விட்டால் என்ன செய்வது?

செந்தமிழ்க் காப்பியங்கள்

தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம். தமிழின் ஒரிஜினல் காப்பியம். ஒரிஜினல் என்று அழுத்திச் சொல்வதன் காரணம், மற்றெல்லாம் வடமொழியில் இருந்து பெயர்க்கப்பட்டவை, தழுவப்பட்டவை அல்லது மூலமாகக் கொண்டவை, பிற காப்பியங்கள். அரும்பத உரையாசிரியர், அடியார்க்கு நல்லார் எனத் தொடங்கி சுஜாதாவின் எளிய அறிமுகம் வரை வந்து சேர்ந்தது சிலப்பதிகாரம். சிலம்புச் செல்வர் என அறியப்பட்ட ம.பொ.சிவஞான கிராமணியாரால் சிலப்பதிகாரம் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது. சிலப்பதிகாரத்துக்கு ம.பொ.சி. அற்புதமான விளக்கத் தெளிவுரை ஒன்று எழுதியுள்ளார். 2008-ல் முதற்பதிப்பு வெளிவந்தது. தமிழ்நாடு முழுக்க, சிலம்பைப் பரவலாக்கிய பெருமை ம.பொ.சி.க்கு உண்டு. 1942-ல் ஆகஸ்ட் போரில் ஈடுபட்டுச் சிறையில் கிடந்த போது சிலம்பைப் பயிலத் தொடங்கியதாக ம.பொ.சி. எழுதுகிறார் முன்னுரையில். ஆசிரியரின் உதவியின்றி, திரும்பத் திரும்பப் பயின்றிருக்கிறார். ம.பொ.சி.யின் சிலப்பதிகாரச் சொற்பொழிவு கேளாதார் செவியென்ன செவியே என்ற கேட்டவர் துணிந்து சொல்ல இயலும்.

திருவையாறு – காவிரிக்கரையிலிருந்து சில இசை நினைவுகள்

திருவையாறு இசைக்கல்லூரியின் ஓய்வுபெற்ற முதல்வரான Dr.ராம.கெளசல்யா தான் இசைக்கல்லூரியில் பயின்ற அனுபவங்களையும், அக்கால இசைச்சூழலையும் சொல்வனம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். “எல்லா ராகமும் இப்படித்தான். ஸ்வரஸ்தானம் என்பது ஒரு அடையாளம்தான். ராகம் தேவதை. அதன் ஸ்வரூபத்தை நினைத்துப் பாடவேண்டும். எந்த ஸ்வரஸ்தானத்திற்கும் ஒரு ராகத்தில் நிரந்தரமாக இடம் கிடையாது.”

வாசகர் மறுவினை

தமிழ் இசை மரபு கட்டுரை சிறப்பாக இருக்கிறது. நல்ல மொழி பெயர்ப்பு. பல சொல்லாக்கங்கள் பல பத்தாண்டுகளுக்கு முந்தைய மொழிப் புழக்கத்திலிருந்து வந்தவை, அதெல்லாம் மொழிபெயர்ப்பாளர் உஷா வைத்யநாதனின் பிரக்ஞையில் இன்னும் இருக்கின்றன என்பதே எனக்கு அதிசயமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. ‘பாரிய மனோவசியம்’ என்பது அப்படி ஒரு சொல். திரு.வெ.சா இதை எல்லாம் என்றோ தமிழுக்கு மாற்றி இருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அவருக்குக் கிட்டி இருக்கும் பிம்பமே மாறி இருக்கும்.

சிலப்பதிகாரக்கதை – எனது புரிதல்

கண்ணகி, மாதவி ஆகிய பாத்திரப் படைப்புகளை விமரிசனக் கண்ணோட்டத்தில் அணுகும் ஸ்வர்ணமால்யாவின் முயற்சி குறித்தும் குறிப்பிடவேண்டிய தேவை உள்ளது. கண்ணகியைத் தமிழ்த்தேசிய ஆன்மாவின் அடையாளமாகக் காண்கிற முயற்சி, உலக அனுபவமற்ற எளியவளாக இருப்பினும் தார்மிக ஆவேசங் கொண்டு நீதி கேட்டு அரசாட்சியையே வீழ்த்திய ஒரு பெண்மணியாகக் கண்ணகியைச் சித்திரிக்கும் முயற்சி இவ்வாறு பல கோணங்களில் கண்ணகியைக் கண்டுணர்ந்து பல அறிஞர்கள் பேசியும் எழுதியும் வந்துள்ளனர். சிலம்புக்ச் செல்வர் ம.பொ.சி. அவர்கஷீமீ தொடங்கி, மா.ரா.போ. குருசாமி, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், தற்கால அறிஞர் சிலம்பு நா.செல்வராசு…

சிலையும், கல்லும் – நூல் விமர்சனம்

தங்கத்தின் மாற்றினை அறிவதற்கு. ஆசாரி. உரைகல் என்று ஒன்று வைத்திருப்பார். கிரிதரனின் வசம் அந்தக் கல் வந்திருக்கும் போலிருக்கிறது. முதல் கட்டுரை நாம் கொண்டாடும் ஜெயகாந்தன் எழுதிய ஒரு மனிதன் ஒரு வீடு, ஒரு உலகம். வாசனையைக் கொண்டு, பூவை அறிவது போல, நம்மை நேரடியாக பாதிப்பது, ஒரு எழுத்தின் மூலம் எழுத்தாளனை நாம் அறிந்துகொள்வதே. ஹென்றி என்ற. கதாபாத்திரம், புனைவின் பிடிகளுக்குள் கட்டுப்படாதவன். அவனது சமநிலை. ஆச்சரியப்படுத்தும் ஒன்று. ஜெயகாந்தன் சொல்லும் மிகச்சிறப்பான ஒரு அவதானிப்பை கிரி சொல்கிறார். மனிதன் என்பவன், சமூகத்தின் விளைச்சல் இல்லை. அவன் சுயமான எண்ணங்களைக் கொண்டவன்

புத்தகக் கண்காட்சியில் பை நிறைய கதைகள்

போரையும் இனப்படுகொலையையும் பின்னணியாகக் கொண்டிருக்கும் புத்தகங்களை விமர்சிப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. குருதி தோய்ந்த அதன் பக்கங்களை எப்போதுமே சொகுசாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், என்ன அழகியல் நுணுக்கங்களைக் கொண்டு நொட்டுவது என்ற தார்மிகச் சிக்கல். இந்தத் தயக்கத்தையும் மீறி சில படைப்புகள் அவற்றின் கழிவிரக்கத்தைத் தவிர்த்து கொடூரங்கள் விரவியிருக்கும் சூழலையும் அதில் சிக்குண்டிருக்கும் சாமான்யர்களின் அவலத்தையும், நிரந்தரத் துக்கத்தையும், தோல்வி நிச்சயமென்றாலும் செயலாற்ற வேண்டிய கட்டாயத்தையும், அக்கட்டாயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் அறச் சிக்கல்களையும் உடனடித் தன்மையுடன் கவித்துவத்துமாகக் கைப்பற்றும் விதத்தால் அவற்றின் அழகியலைப் பற்றியும் சிந்திக்க வைக்கின்றன. மாபெரும் தாய் கதைத் தொகுப்பு அம்மாதிரிப் படைப்புகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

சீர்மையின் நுதல் விழி – சித்ரனின் சிறுகதைகள் முன்வைத்து

சித்ரனின் கதைகள் அறிமுக எழுத்தாளர்களுக்கான எந்த தடையையோ தடுமாற்றத்தையோ பெரிய அளவில் எதிர்கொள்ளவில்லை. அவரது தொடக்கக்கால கதைகளில் சில நெருடலான/ பொருத்தமற்ற உவமானங்கள் வெளிப்படுகிறது. உதாரணமாக “செதில்களால் நெய்யப்பட்ட சட்டையை உரிக்கும் அரவமாய் எனது வெறுமையை என்னிலிருந்து அகற்ற அண்ணா நகர் பூங்காவிற்கு கிளம்பினேன்.” “கூட்டத்தால் கைவிடப்பட்ட கழுதைப்புலி ஒரு வலிமையான இரையை தாக்க வழியில்லாது வெறித்திருப்பதைப் போல் அவளை கவனித்தவாறிருந்தேன்” (தூண்டில்). இரண்டு மூன்று கதைகளுக்கு பிறகு இவ்வகையான பயன்பாடும் மறைந்து நேர்த்தி

அன்று செயலழிந்தல மருபொழுது

இன்று இந்தியாவில் தான் உலக அளவில் இளைஞர்கள் அதிகம். மூன்றில் ஒருவர் இளைஞர் என்கிறார்கள்.  ஜப்பான் போன்ற நாடுகளில் குழந்தைப்பிறப்பு விகிதம் பல ஆண்டுகளாக குறைவாக இருந்துவருகிறது. வளரும் அறிவியல் சூழலில், சராசரி வயது உலகெங்கும் ஏறிக்கொண்டே வருகிறது. நான் வாழும் சிங்கப்பூரில், சராசரியாக முதியவர்கள் தொண்ணூறு வயது “அன்று செயலழிந்தல மருபொழுது”

காடுகள் மலைகள் தேவன் கலைகள்

 காதல் காட்சிகளில் கூட ’’அடடே இந்த  மால்வாவிஸ்கஸ் மலர்ச்செடிகள் பின்னால் இன்னும் கொஞ்ச நேரம் அவர்கள் காதல் மொழி பேசிக்கொண்டிருந்திருக்கலாம், செடியை பார்த்தே ரொம்ப நாளாச்சு ’’என்று அங்கலாய்ப்பது,  காதலர்கள் பெயர் பொறித்திருக்கும்  மரப்பட்டைகளை கண்டவுடன் ’’இது முதலை மரப்பட்டை அப்படின்னா இது மருத மரம்தான்’’ என்று கூவுவது, ’’என்னதிது  பாட்டில் தாமரைன்னு வருது,  இவங்க என்னமோ அல்லிக்குளத்தில் நீந்தறாங்களே’’ என்று கொதிப்பது,

காசி

This entry is part 12 of 12 in the series கங்கா தேசத்தை நோக்கி

காசியில் இறந்து கங்கையில் எரியூட்டப்பட்டால் சொர்கத்திற்குச் செல்லலாம் என்ற நம்பிக்கை உள்ளது. “மணிகர்ணிகா படித்துறையில் இறந்தவர்களின் சடலம் வந்து கொண்டே இருக்கும். சதா பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கும். ஆற்றில் சடலங்கள் மிதக்கும்” என்று முன்பு கதை கதையாகச் சொல்வார்கள். இப்பொழுது அப்படியில்லை. மின்சார எரியூட்டி வந்தபிறகு படித்துறைகள் சுத்தமாகி உள்ளது. ஆனாலும் படிகளில் மரக்கட்டைகள் குவிந்திருந்தன.

அஞ்சலி: பேராசிரியர் பசுபதி

பேரா. பசுபதி சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் (தற்பொழுதைய அண்ணா பல்கலைக் கழகம்) BE பட்டமும், சென்னை ஐஐடியில் M.Tech பட்டமும் பெற்றார். தொடர்ந்து அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழத்தில் M.Phil, Ph.D  ஆய்வுப் பட்டங்களைப் பெற்றார்.  அதன்பின் கனடாவில் டொராண்டோ பல்கலைக்கழகத்திற்கு வந்த பசுபதி, 35 வருடங்களுக்கு டொராண்டோ பல்கலைக்கழகத்தில் அரும்பணி ஆற்றியிருக்கிறார்.  மூன்று தலைமுறைக்கு மேற்பட்ட அர்ப்பணிப்பு மிக்க ஆராய்ச்சிக் காலத்தில் அவர் தகவல் நுட்பத்துறை பேராளுமைகளான க்ளாட் ஷாணன், ஹாரி நைக்வ்ஸ்ட் போன்றவர்களின் ஆராய்சிகளை நேரடியாக முன்னெடுத்துச் சென்றிருக்கிறார். 

’தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள் நேர்காணல்கள்’ – புத்தக அறிமுகம்

’ என் நண்பர்களில் தனித்தன்மை கொண்ட நண்பர் தஞ்சை ப்ரகாஷ்’ என்கிறார் வல்லிக்கண்ணன். கரமுண்டார் வூடு நாவலில் ப்ரகாஷ் பாலியல் பிரச்சனைகள்பற்றி மிகையாக விவரித்து இருப்பதாக வல்லிக்கண்ணன் அபிப்ராயப்படுகிறார். அதற்கு விடைஅளிக்கும் முகத்தான் எழுதும் ப்ரகாஷ்’ ’ஒரே ஒரு கீழ் வெண்மணியைத்தெரியும் உங்களுக்கு. ஒவ்வொரு எலக்‌ஷன் நேரத்திலும் முப்பது கீழ் வெண்மணிகள் எரிவது தெரியாது உங்களுக்கு. காமவிவகாரம் அற்ற பரிசுத்தம் நிறைந்த முதலாளித்துவம் உங்கள் நாடக உலகில்தான் இருக்கும். வாழ்வில் அல்ல’ இதுதான் எழுத்தாளர் ப்ரகாஷ் என்கிறார் வல்லிக்கண்ணன்.

மன்னார்குடி சாவித்ரி அம்மாள்

மற்ற பத்திரிகைக் களஞ்சியங்கள், இணைய தேடல்கள், மூத்த ரசிகர்களுடன் உரையாடல்கள் மூலம் கடந்த ஒரு வருட காலமாக சாவித்ரி அம்மாளைப் பற்றி தகவல்கள் சேகரிக்க முயன்றேன். அந்த மேம்போக்கான தேடலில் அதிகம் ஒன்றும் கிடைக்கவில்லை. நான் வேறு வேலைகளில் கவனத்தைத் திருப்பினேன். சில வாரங்களில் தற்செயலாக மிருதங்க வித்வான் கே.எஸ்.காளிதாஸ், அவருடைய யூடியூப் சானலில் சாவித்ரி அம்மாளின் பதிவு ஒன்றை வலையேற்றினார். அந்தப் பதிவைக் கேட்ட போது கல்கி குறிப்பில் உள்ள ‘நிதானம்’, ‘அழுத்தம்’ என்ற வார்த்தைகளின் பொருத்தத்தை உணர முடிந்தது.

ரா. கிரிதரனின் “ராக மாலிகை”

This entry is part 6 of 48 in the series நூறு நூல்கள்

அவரது சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையும், முதல் கதையுமான “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” இரண்டாம் உலகப்போர் பின்னணியில் ஜெர்மனி வதைமுகாமில் நிகழ்கிறது. சிறையில் சிக்க நேர்ந்த பொதுஜனங்கள், வாழ்வுக்கும் சாவுக்குமிடையே போராடும் அவலங்களை விவரித்தபடி துவங்குகிறது கதை.

நந்தனாரைத் தொழுத கைகள் நம்மைத் தொழுமா?

ஏதாவது ஒரு நூலின் வரிகள் திரித்துக் கூறப்படுவது வரலாற்றில் தொடர்ந்து நிகழ்கிறது. இதற்கு நவீன அறிவுத்துறை நூல்களும் தப்புவதில்லை எனும்போது இலக்கியம் விதிவிலக்கில்லை. இலக்கியப் படைப்புகள் இயல்பாகவே ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் கொள்ளலுக்கு இடம் கொடுக்கிறது. குறிப்பாக சுருக்கமான படைப்புகள், செய்யுள் வடிவில் எழுதப்பட்டவை அல்லது கவித்துவமான மொழிநடையைக் “நந்தனாரைத் தொழுத கைகள் நம்மைத் தொழுமா?”

காலத் தடம் – அறிவியலில் முக்கிய நிகழ்வுகள் – 2021

தடுப்பூசிகளைத் தவிர வாய் வழி உட்கொள்ளும் மாத்திரையான ‘மோல்னுபிராவரை’ (Molnupiravir) ‘மெர்க்’ (Merck) அறிமுகம் செய்தது. அக்டோபரில் (2021) அது தாக்கல் செய்த அறிக்கையில், இந்த நோயின் தாக்கத்தால் மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சேர்ந்து சிகிட்சை பெற வேண்டிய அவசியம் பாதியாகக் குறையும் என்று சொன்னது. ….நவம்பர் மாத நடுவில், அமெரிக்காவை முந்திக் கொண்டு பிரிட்டிஷ் கூட்டரசு (U K) இந்த மருந்திற்கு அனுமதி வழங்கியது. அமெரிக்காவும் அந்த் மாத இறுதியில் அனுமதி வழங்கியது.
முன்னர் ‘மெர்க்’ அழுத்திச் சொன்னது போல். கிருமியோ, இறப்போ, சரி பாதியாகக் குறையவில்லை எனத் தரவுகள் சொல்கின்றன. ஆனால், 30% கட்டுப்பாட்டிற்குள் வந்தது. மெர்க் பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனம். அதற்கு அத்தனை அரசியல் தாக்கம் உள்ளது!

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம்

சதுரங்க ஆட்டம் விதிகளுக்கு உட்பட்டது. அதே போல் இஸ்லாமிய மதம் புத்தகத்தில் எழுதப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. கடவுளின் பேச்சை மொகமது நூலாக மொழிகிறார். குரான் என்றால் “ஒப்பித்தல்”. இந்தப் படத்தில் குருவின் வித்தையை சீடன் எப்படி புரிந்து கொள்கிறான் என்று காண்பிக்கிறார்கள். குருவின் குருவான மாயி எனப்படும் சரஸ்வதி கடாட்சம் பெற்ற மகாமேதையின் எண்ணங்களை “பாராயணம்” செய்கிறார் சீடர்.

மிளகு – அத்தியாயம் பனிரெண்டு

“மிளகுக் கொடி எல்லாம் வயசாகி நிக்குது கோழிக்கோடு தொடங்கி மலபார் வரை பதிமூன்று வயசான கொடி அவை எல்லாம். பூக்கத் தயாராக ஆறு வருஷம், பூத்தது அடுத்த ஆறு வருஷம்னு பந்த்ரெண்டு வருஷம் போயாச்சு. இன்னும் ஒரு வருஷம் அந்த மிளகு சாகுபடி ஆகும். அப்புறம் சாகுபடிக்கு புதுக்கொடிகளை பதியன் பண்ணி வச்சிருக்காங்களான்னு கேட்டால், கார்பரேட் தோட்டங்களிலே மட்டும் செஞ்சிருக்காங்க அதுவும் ரொம்ப பந்தோபஸ்தோடு கூட. இனி குறைஞ்சது அடுத்த ஏழு வருஷம் மிளகு வித்துக் காசு பார்க்கறதை மறந்துடலாம்”.

பெருமன்னர்கள் காலம் பொற்காலமா?

மன்னர்கள் இரண்டுவகையிலாக நினைவு கூறப்படுகிறார்கள். முதலாவதாக, பல இராச்சியங்களை வென்று பெரும் நிலப்பரப்பை தன் குடைக்கீழ் கொண்டு, பன்னெடுங்காலம் ஆண்டவர்கள். இரண்டாவதாக, குறைந்த காலமே, குறுகிய நிலப்பரப்பையே ஆண்டாலும் கல்வியிலும், அருங்கலைகளிலும் பல தலைமுறைகளாகத் தொடரும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திச் சென்றவர்கள். கரிகாற் பெருவளத்தான், முதலாம் இராசராசன், முதலாம் “பெருமன்னர்கள் காலம் பொற்காலமா?”

“பசுக்களும் காளைகளும்” : என். கல்யாண் ராமனின் வாடிவாசல் மொழிபெயர்ப்பு

Threw, grab, push, rear, stand, held, stumble, bend, slide…குறுநாவலின் இட நெருக்கடியில் அபரிமிதமான வினையாற்றல்கள் மிகுந்த கவனத்துடன் சிக்கனமாகக் கையாளப் பட்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பின் பலம் அதன் உண்மையான மகோன்னதத்தில் இங்கு நமக்குக் காணக் கிடைகிறது. விவரங்களில் அது செலுத்தும் கவனம், மனிதனும் மிருகமும் ஒன்றை மற்றொன்று விஞ்ச முனையும் விளையாட்டில் முக்கியம் பெறும் அசைவுகளின் வரிசை முறையைத் தாளம்தப்பாமல், நிகழ்வை அது நிகழும் கணத்தில் விவரித்து வாசகருக்கு காட்சியும் ஒசையும் பிணையும் ஒரு காட்சி அனுபவமாகக் கடத்துவதில் வெற்றிபெரும் வியக்கத்தக்க அந்தக் கவனத்தை நம்மால் இங்கு இனங்காண முடிகிறது. நிதானித்து அந்த வரிசை முறையை அனுபவியுங்கள்…

எதிர்ப்பை

பேரகராதியிலும் வேறு சிலவற்றினுள்ளும் தேடியபோது என் பார்வையில் ‘எதிரும் புதிரும்’ எனும் சொற்றொடர் தட்டுப்படவில்லை. எதிர் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. புதிர் எனும் சொல்லுக்கும் அதுவேயாம். புதிர் என்றால் புதிது, புதிய கதிர், விடுகதை என்று பொருள் சொல்கிறார்கள். பிதிர் எனும் சொல்லின் திரிபாகவும் புதிர் கொள்ளப்பட்டுள்ளது.

தேர்ந்த வாசகருக்கான ஒப்பீட்டு அறிமுறை பற்றிய படப் புத்தகம்

அண்டவெளியின் பெரும்பரப்பில் ரேடியோ அலைகள் வெகு வேகமாக க்ஷீணிக்கின்றன, அவள் விளக்கினாள். தொலைதூர நட்சத்திரங்களின் சுற்றுப் பகுதியில் உள்ள கோள்களிலிருந்து அண்டவெளியின் பாழில் யாராவது தொடர்புக்கான செய்திகளை விநியோகித்துக் கொண்டிருந்தால், அவர்களுடைய அண்மையில் உள்ளவர்களைத் தவிர வேறு யாரும் அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”

ஆங்கிலம் நம்மீது ஏற்படுத்தியிருந்த தாக்கத்தினால், மேலை இலக்கியத்தை ஆங்கிலப் படைப்புகளாகவே எதிர்கொள்வதற்கு நாம் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம். ஆனால் அவை உண்மையில் ஆங்கிலப் படைப்புகள் அல்ல; நம்மை நெகிழ்த்திய, நாம் ஒருவருக்கொருவர் மேற்கோள் காட்டிக்கொண்டிருந்த வார்த்தைகள் ஆசிரியரின் வார்த்தைகளே அல்ல, அவர் ஆகிருதிக்குப் பின் மறைவாக நிற்கும் மொழிபெயர்ப்பாளருடையது. இக்கண்டுபிடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவை மூலவடிவங்கள் அல்ல என்ற பிரக்ஞையுடன் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கினேன்.

நார்டிக் மர்ம இலக்கியத்தைக் கொன்றது யார்?

விற்பனை என்று பார்த்தால் லார்ஷொன் விதிவிலக்கான ஆனால் பிரும்மாண்டமான ஓர் அளவை அடைந்திருந்தார், அவருடைய (லிஸ்பெத்) ஸாலாண்டெர் வரிசைப் புத்தகங்கள் உலகெங்கும் 10 கோடி (1000 லட்சம்) பிரதிகள் போல விற்றிருக்கின்றன. ஒப்பீட்டில் யோ நெஸ்போ, இந்த வகை இலக்கியத்தின் எழுத்தாளர்களில் உயிரோடிருப்பவர்களில், மிக்க வெற்றி பெற்ற ஒருவர், அவர் தன் ஒரு டஜன் நாவல்களின் மூலம் 400 லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறார்- மாங்கெல்லோடு ஒப்பிடத் தக்க அளவு விற்பனை இவருடையது…

புத்தகக்குறி

இலக்கிய பத்திரிகைகளின் சமீபத்திய வெளியீடுகள் குறித்த சிறு அறிமுகம்: n+1 – Death Wish https://nplusonemag.com/magazine/issue-38/ Stuart Schrader, Lizzie Feidelson, Jeremy O. Harris, Mark Doten, Nan Z. Da, Caleb Crain, Christina Nichol, Mattilda Bernstein Sycamore, Ida Lødemel Tvedt, William “புத்தகக்குறி”

இராஜேந்திரனின் காதலி

பனங்காடுகள் நிறைந்த அந்த இடத்தின் ஒரு பகுதியில் சம்பந்தப் பெருமானால் பாடப்பெற்ற பனங்காட்டேஸ்வரர் என்ற பெயர் கொண்ட சிவபெருமான் கோவில் கொண்டிருந்தார். ஒரு காலத்தில் பாடல் பெற்று புகழ் கொண்டு விளங்கிய அந்தத் தலத்தின் தற்போதைய நிலை கண்டு ராஜேந்திரன் இதயம் கலங்கியது. கோவிலைப் புனர்நிர்மாணம் செய்ய உத்தரவிட்டான். தவிர அந்தப் பணியை தன்னுடைய அணுக்கியான பரவையே முன்னின்று நடத்தவேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தான். பனங்காட்டேஸ்வரரான ஈசன் ‘பரவை ஈஸ்வரமுடையார் மகாதேவர்’ என்ற பெயராலும் அந்த ஊர் பரவை புரம் என்ற பெயராலும் அழைக்கப்படட்டும் என்று ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

பலகை அடித்த ஜன்னல்

மர்லாக், மர வீட்டைக் கட்டி முடித்தபின், வலிமையுடன் மரங்களைக் கோடரியால் வெட்டி வீழ்த்திப் பயிரிடும் நிலத்தை உருவாக்கிக் கொண்டான்- துணைக் கருவியாகத் துப்பாக்கியும் வைத்திருந்தான். அப்போது அவன் இளமையும் கட்டுடலும் நம்பிக்கை மிக்க எதிர்பார்ப்பும் கொண்டிருந்தான். கிழக்கு தேசத்திலிருந்து வந்தபோதே அவ்வூர் வழக்கப்படி அவனுக்குத் திருமணம் ஆகிவிட்டது.

பாண்டி(த்ய)ஆட்டம்

எதை உன்னதம் என்போம்? அது மனதிற்கினிய உயர்ந்த பொருளா அல்லது எட்மண்ட் பர்க் சொல்வதுபோல் இருண்மையான, நிலையற்ற பயங்கரமா? அது ஃபிராய்டின் உளப்பகுப்பாய்வியலில் ‘உன்னதமயமாக்கம்’ என்று ஆகிவிட்டதா? இந்த கேள்விகளுடன் நம்பி கிருஷ்ணன் பாரதியை ‘பேயவள் காண் எங்கள் அன்னை’ என்று இணைக்கிறார். அப்படியாகப்பட்ட உன்னதம் ஸ்டீவென்ஸ்சுக்கு ஆத்மாவில் இறங்கி வருகிறது.
‘தன்னளவில் ஒன்றுமில்லாதவன், சொற்ப இலைகளின் ஓசையில் எந்தத் துயரையும் நினையாதொழிய, அங்கில்லாதது ஒன்றுமில்லை, உள்ளது இல்லாதது’. வாலஸ் ஸ்டீவென்ஸ் கட்டுரையில் பாரதி, ஷெல்லி, கீட்ஸ், விட்மன், குறுந்தொகை, ரிக் வேதம் அனைவரும் பொருத்தமாக இடம்பெறுகிறார்கள். விதியின் இயற்கைச் சுழற்சியைத் தலைகீழாக்கும் உன்னதம் காணக்கிடைக்கிறது.

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் தெளிவான குரல்

‘நான் சங்கீதத்தை முறையாகப் படிக்கவில்லை’ என்பது எஸ்.பி.பி.யின் பணிவின் அடையாளமாக மட்டுமல்லாமல் சங்கீதத்தை இலக்கணமாகப் பார்க்காதவர்களின் பிரகடனமாகவும் வெளிப்பட்டது. ஒரு கலை வடிவத்தை இலக்கணத்துக்குள் அடைக்கக்கூடாது என்பதற்குக் காரணம் இலக்கணத்துக்குள் அடைக்கப்படும்போது அதன் படைப்பாற்றலின் சக்தி குறைபட்டுப் போகக்கூடும் என்பதுதான்.

திருப்பரங்குன்றம்- திருக்கோயில்

மதுரை ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட போது கி.பி. 1792 ஆம் ஆண்டில் திருப்பரங்குன்றம் கோயிலையும் தங்கள் ஆதிக்கத்துள் கொண்டுவர முயற்சித்தனர். ‘வெள்ளைக்காரர் பாளையம் வந்து இறங்கி சொக்கநாதர் கோயிலையும் இடித்து, பழனி யாண்டவர் கோவிலையும் இடித்து ஊரையும் ஒப்புக்கொண்டு, ஆஸ்தான மண்டபங் கைக்கொண்டு அட்சகோபுர வாசல் கதவையும் வெட்டி, கலியாண மண்டபத்துக்கு வருகிற பக்குவத்தில், திருவிழாவும் நின்று தலமும் ஊரும் எடுபட்டுப் போராதாயிருக்கிறது என்று… வயிராவி முத்துக்கருப்பன் மகன் குட்டியைக் கோபுரத்தில் ஏறிவிழச் சொல்லி, அவன் விழுந்து பாளையம் வாங்கிப்போனபடியினாலே, அவனுக்கு ரத்தக் காணிக்கையாகப் பட்டயம் எழுதிக் கொடுத்தோம்’ என்ற கல்வெட்டின் மூலம் கோயில் ஊழியம் செய்யும் கடை நிலைப் பணியாளர் கோயிலைக் காப்பதற்காகத் தன் இன்னுயிரை நீத்தமை அறியப் படும். குட்டியின் செயகையால் ஆங்கிலேயர் படை பின் வாங்கிச் சென்றது என்று கூறப் படுகிறது.

கைச்சிட்டா – 4

This entry is part 4 of 8 in the series கைச்சிட்டா

வீட்டில் இருந்து வேலை பார்ப்பதில் ஜன்னலோர வாசமும் அண்டை அயல் நடப்புகளும் நிறையக் காணக் கிடைக்கின்றன. நான் உட்காரும் இடத்திற்கு வெளியே உள்ள கொல்லைப் புறத்தில் இரண்டு தனித்தனி ஜோடிப் பறவைகள் கூடு வேறு கட்டியிருக்கிறது. ‘கபாலி’ படத்தில் சிறையில் இருந்து வெளியே வரும் ரஜினி கதாபாத்திரம் சொல்வது போல், “அதப் பறக்க விடுங்கடா… அதுதான் அதன் இயல்பு” என மரக்கிளைகளுக்கு நடுவே கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கும். அந்தக் குருவிகளும் பட்சிகளும் உட்கார்ந்து கூட்டம் கூடி இரையைக் கொத்திக் கொண்டு காணாமல் போவது நாள் முழுக்க கணினி சந்திப்புகளில் அடைபட்டிருக்கும் எனக்கு உவகையைத் தரும். சிறகடிக்கும் ஜீவன்கள் குறித்த நூல்களைத் தேடினேன். சற்றே இன்ப ஆச்சரியம். அமெரிக்காவில் அதிகமாக விற்கும் நூல்..

மூதாதையின் கவிதை

நம்மிடையே உள்ள இரண்டாயிரம் வருடங்களின் புகழ் பெற்ற கவிதைகள் இசைவடிவம் அடையாத நிலையில் முதல் முறையாக ஆறு சங்கப்பாடல்கள் இசைவடிவம் பெற்று ’சந்தம்’ (Sandham: Symphony Meets Classical Tamil) என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருப்பது இசையுலகின் ஒரு குறிப்பிடத்தக்க நகர்வு. இப்பாடலகளுக்கு இசையமைத்தவர் திருவாரூரில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் இசையமைப்பாளர். ராஜன் சோமசுந்தரம். மேஸ்ட்ரோ வில்லியம் ஹென்றி கர்ரியின் தலைமையில் அமெரிக்காவின் வடக்கு கரொலினா மாகாணத்தில் உள்ள டர்ஹாம் சிம்பொனியின் 68 வாத்திய இசைக் கலைஞர்களின் குழு இத்தொகுப்புக்கு பின்ணனி இசை அளித்துள்ளது.

ஆகப் பெரிதின் அறிவிப்புகள் – ரா.கிரிதரனின் புனைவிசை

“நீர் பிம்பத்துடன் ஓர் உரையாடல்” மிகப் பெரும் நோக்கு கொண்டது. ஓர் ஓவியத்தின் பார்வையில் உலகளாவிய ஏகாதிபத்திய வரலாற்றையும் வெவ்வேறு காலனிய தூரதேசங்களில் அதன் சமூக தாக்கங்களையும் சித்தரிக்கிறது. புத்தகத்தின் சிறந்த வாக்கியம் இந்தக் கதையில்தான் இருக்கிறது – “கண்கள் மட்டும் பக்கவாட்டில் துடுப்பு போட்டபடி இருந்தது”. சால் பெல்லோ எழுதியிருக்க வேண்டியது.

சிலப்பதிகாரத்தின் காலம்

சிலப்பதிகாரம் ஒரு முழுமையான கட்டுக்கதை என்று சொல்லிவிட இயலாது. சிலப்பதிகாரக் கதைக்கு அடிப்படையான சில நிகழ்வுகள் உண்மையில் நிகழ்ந்தேறி இருக்கவேண்டும். பூம்புகாரைச் சேர்ந்த கண்ணகி என்ற வணிகர் குலப்பெண் ஒட்டுமொத்தத் தமிழ்ப் பெண் இனத்தின் அடையாளமாக உருவாகி இருக்கிறாள். கற்பின் அடையாளமாகவும், பத்தினித் தன்மையின் அடையாளமாகவும் அவளை முன்னிறுத்துகிற காவியமே சிலப்பதிகாரம் ஆகும்.

அடவியும் அந்தேரி மேம்பாலமும்..

சுய புலம்பல்களும்,தன்னிரக்க வெளிப்பாடுகளும் மட்டுமே பெண் எழுத்துக்கள் என்ற போக்கை மாற்றிப் பெண் தனது உண்மையான சுயத்தை உணருவதே பெண்ணியம் என்பதைத் தன் புனைவுகள்,மற்றும் கூரிய சமூக ஆய்வுகள் வழியே முன்வைத்து நவீன பெண்ணியத் தமிழ்ப்படைப்புக்களின் திசைதிருப்பியாக விளங்கியவர் அம்பை

ப. கல்பனாவின் குரல்: பார்வையிலிருந்து சொல்லுக்கு

This entry is part 27 of 48 in the series நூறு நூல்கள்

படைப்பு மொழி நிமிர்ந்து நிற்கும் மொழி, பிறர் பரிவுக்காக காத்திருக்கும் மொழியல்ல, பசிவயிற்றில் இருந்தாலும், யாசித்து அல்ல உழைத்து அப்பசியைப் போக்கிக்கொள்ளத் தெரிந்த தன்மான மொழி. அவ்வை முதல் ப. கல்பனாவரை இப்பெண்கவிஞர்களின் கவிதைமொழி காலம் காலமாய் மானுடத்திற்கு தெரிவிப்பது இச்செய்தியை த்தான். எனவே எழுதியவர், பெண்ணா ஆணா. எந்த சாதி, எந்தகுலம் என்பதெல்லாம் முக்கியமல்ல அவர்களின் படைப்பே முக்கியம். வலிமை என்பது உடல் சார்ந்த து அல்ல மனம் சார்ந்தது.

விழியின் சேல் உகள் வால் நிற வெள்ளத்து முழுகி

‘கொற்றவர், முனிவர், மற்றும் குவலயத்து உள்ளார், உன்னைப்
பெற்றவன் தன்னைப் போல பெரும் பரிவு இயற்றிநின்றார்;
சிற்றவை தானும் ஆங்கே கொணர்க எனச் செப்பினாள்; அப்
பொன் தட மகுடம் சூடப் போதுதி விரைவின் ‘என்றான். (1664)
”மன்னர், முனிவர், மற்றும் உலகத்தவர் யாவரும் மகிழ்ந்திருக்கின்றனர். தசரதன் அடையும் மகிழ்ச்சியை அனைவரும் அடைகின்றனர். சிற்றன்னை கைகேயி தங்களை அழைத்து வரச் சொன்னார்’’ சுமந்திரர் இராமனிடம் தெரிவித்தார்.
‘ஆழி சூழ் உலகம்

யானை பிழைத்த வேல் – பகுதி ஒன்று

இராமனும் சீதையும் பார்த்துக் கொண்ட போது விழிகள் சந்தித்தன. இருவரின் உணர்வும் ஒன்றென ஆனது.
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணைத்து……..
இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார் (600)
விழிகளில் உருவான காதல் இராமனின் இதயத்தில் சீதையையும் சீதையின் இதயத்தில் இராமனையும் இடம்பெறச் செய்தது.
இந்திரநீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரைத் தோலுமே அல
முந்தி எம்உயிரை அம்முறுவல் உண்டதே (619)
இராமனின் மென்முறுவல் தன் உயிரை உண்டது என்கிறாள் சீதை. இராமனின் மென்முறுவலிடம் சென்று சேர்கிறது சீதையின் அகமும் உயிரும்.
இந்திர நீலம் போன்ற சிகையும் பிரகாசிக்கும் சந்திரனைப் போன்ற முகமும் நீண்ட கைகளும் மலை போன்ற தோள்களும் முதலில் என் உயிரைக் கவரவில்லை; மாறாக இராமனின் புன்னகையே தன் உயிரைக் கவர்ந்தது என்கிறாள் சீதை.

வாலஸ் ஸ்டீவென்ஸின் உன்னதத் தேடல்

சமய உணர்வு மற்றும் சுதந்திர வேட்கை வெளிப்படும் மனநிலையில், அவற்றுக்கு அர்த்தம் இருக்கும் சூழலில், இது போன்ற உன்னத ஏக்கங்கள் இயல்பாகவும் பொருத்தமாகவும் தோன்றுகின்றன. ஆனால் அவ்விதமான பரவசங்கள் இல்லாத நிலையில், நம் காலம் போன்ற வறிய காலத்தில், புலப்பாட்டு எல்லைக்குக் கிட்டாத புலப்படாத் தூண்டுதல்களை நிகழ்த்தும் ‘சப்லிமினல்’ விளம்பரங்கள் மனதை மாற்ற யத்தனிக்கும் யுகத்தில், ஒருவன் உன்னத நாட்டத்தை ஆற்றிக் கொள்வதோ, அதை எதிர்கொள்வதோ எவ்வாறு? ‘நவீன காலத்துக்கான உன்னத நாட்டம்” என்று நான் அழைக்கவிருக்கும் உணர்வு நிலையின் ஒரு சன்னலை மகத்தான அமெரிக்க கவிஞர் வாலஸ் ஸ்டீவென்ஸ் கவிதைகளில் நாம் காண இயல்கிறது.

தமிழக அரசியலும் ரஜினிகாந்தின் முடிவும்

தமிழகத்தில் பிற துறைகளில் மக்களுக்காக உழைத்த, வெற்றி பெற்ற சாதனையாளர்கள் ஏராளமாக உள்ளனர். அப்துல் கலாம், கேன்சர் மருத்துவர் டாக்டர் சாந்தா, ராக்கெட் சயிண்டிஸ்டுகள், பொறியாளர்கள், மக்களிடம் சிந்தனை மாற்றத்தை எற்படுத்த விரும்பிய எம்.எஸ்.உதயமூர்த்தி போன்ற சிந்தனையாளர்கள், நீர் ஆதாரத்தை இணைக்கத் திட்டமிடும் ஏ.சி.காமராஜ் போன்ற பொறியாளர்கள் இன்னும் பல நூறு திறமையான நிர்வாகிகள் சமூக சேவகர்கள் எவருமே மக்களிடம் ஓரளவுக்கு பிரபலமடைந்திருந்த போதிலும் தேர்தல் என்று வரும் பொழுது அவர்களை எந்நாளும் மதித்துத் தமிழர்கள் ஓட்டுப் போட்டதில்லை. எம்.எஸ்.உதயமூர்த்தி ஒரு சோதனை முயற்சியாக…

அகவெளியில் உலவும் குரல் – மௌனி

காலம் அவள் உருவில் அந்த சந்நிதியில் சமைந்து நின்றுவிட்டது”, “கொத்து விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும், அதன் பிரகாரத்தில் நடமாடும் பக்தர்களுக்கும், அவர்கள் நிழலுக்கும் வித்தியாசம் காணக்கூடாத நினைப்பைக் கொடுக்கும் அச்சந்நிதானம், எந்த உண்மையை உணர்த்த ஏற்பட்டது? நாம் சாயைகள்தானா? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?” என்ற வரிகளில் நம் இருப்பை தெளித்து வைத்து ஆட்டும் அப்பாலான சக்தி என்பதான மரபான கோணம்கூட கதைக்கு அற்புதமாகப் பொருந்தி பெரும் மனக்கிளர்ச்சிக்கும் விடை காண முடியாத அவஸ்தைக்கும் உள்ளாக்குகிறது.

சாதாரண சொற்களைக் கொண்டு அசாதாரணமான, திகைப்பிற்குரிய சந்திப்பை நிகழ்த்துவதுதான் மௌனியின் எழுத்துக்கலையாக இருக்கிறது. காரண காரியங்களால் நிரூபிக்க முடியாத ஒரு உலகு கைக்குச் சிக்காமல் இயங்குவதைக் காட்டுகிறார். “மாறி மாறித்தானோ, நான் என்னுடைய என்பதெல்லாம் மறுப்பில் மறுதலையாக உண்மையெனத் தோன்றும்”, “இருளில் உடலை விட்டகன்ற நிழல், ஒளி கண்டவுடன் சரியெனத்தானா, பிரிந்த தன்னுடல் எனக்கண்டு மறுபடியும் உடலுடன் ஒட்டிக் கொள்கிறது? சுசிலா பெயரெனத் தன்னைக் களைந்து கொண்டதில், சேகரன் மனைவி சுசீலா எனவா மனதில் உருக்கொண்டாள்?” (‘பிரக்ஞை வெளியில்’).