கண்டறியாதன கண்டவர்

வருடக்கணக்காக ல.ச.வும், கு.அ.வும் ஒன்றாக இருந்து எத்தனையோ நுணுக்கமான கருத்துக்களை விவாதித்தும் ஆராய்ந்தும் அனுபவித்தும் இருந்திருக்கிறார்கள். இரண்டு, மூன்று நாட்களாகச் சாப்பிடாமல் ஒரு நாளைக்கு இரண்டு வேளை, ஒரு வேளை, பலகாரம் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு, பொழுது போவதே தெரியாமல் உயர்ந்த விஷயங்களைப் பற்றி விவாதித்திருக்கிறார்கள். சில நாட்கள், இரவு பதினோரு மணிக்கு மேல் பன்னிரண்டு மணிக்கு மேல் வாழைப்பழமாவது கிடைக்காதா, இல்லை வெற்றிலை பாக்காவது கிடைக்காதா என்று சென்னைப் பட்டிணத்துக் கடை வீதிகளில் தேடி அலைந்திருக்கிறார்கள்.

எலும்புச் சடங்கன்கள்

அவன் சதிஸ். காமாட்சி உயிரோடு இருந்திருந்தால், ’டேய், சதிஸ், பெரியவன் வீட்டுக்கு போனியா, எப்படிறான் இருக்கான்?, அவனுக்கு உடம்பும், கட்டினவளும் சரியில்லப்பா என்று சொல்லி அவனுக்கு காபிபோட்டு பெரியவன் வீட்டு சங்கதிகளைக் கேட்டிருப்பாள். சதிஸும், காபியோடு கலங்கியிருந்த பால் போல, சுவைத்துச் சொல்லியிருப்பான். சதிஸைப் பார்த்ததும், இங்கேயும் கோள் வைக்க வந்துவிட்டான் என்பதைப் போல், வண்டிக்கு ஒரு வெள்ளிக்கோள் வேகம் எடுக்கவைக்கப்பட்டது. 

கள்ளம் கரவு திருட்டு மோசணம்

சாபம் போலச் சொல்வது நான்காம் சொலவடை. ‘பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு, கள்ளனுக்குக் களவிலே சாவு’ என்பது. ‘அரவம் ஆடேல்’ என்பது ஆத்திசூடி. ‘அரவம் ஆட்டேல்’ என்றும் பாட பேதம் உண்டு. நாகப்பாம்பைச் சீண்டிப் படம் எடுக்கத் தூண்டி விளையாட்டுக் காட்டிப் பிழைப்பவனுக்கு பாம்பினால்தான் சாவு என்பது ஒன்று. களவாடப் போகிறவனுக்கு நடுநிசி இருட்டில் தடுமாறிக் கை தவறி வீழ்ந்தோ, பிடிபட்டு மக்களிடம் தர்ம அடி வாங்கியோ, காவல் நிலையங்களில் சரியாகப் பங்கிடப்படாத காரணத்தால் மிதிபட்டோதான் சாவு என்பது இரண்டு.

தீரத்தின் ஔி

This entry is part 7 of 11 in the series கவிதாயினி

வெள்ளரிகாயின் விதைபோன்ற அரிசி சோற்றை நீரிலிட்டு உண்டு,பரல்கற்கள் உள்ள வெறும்தரையில் படுத்துறங்குவதை விட எனக்கு அந்த பெருங்காட்டின்  ஈமப்படுக்கை தாமரை பூத்த குளம் போன்றது என்கிறாள். கண்கலங்காது கடந்து செல்ல முடியாத பாடல் இது. போரில் கொல்லப்படுவது வேறு. இது வேறு இல்லையா? 

நிழல்கள், நீட்சிகள்

அவர்கள் கூட யாரோ ஒருவரின் நிழலாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முற்றத்தில் படர்ந்த கொடி சம்பங்கியாக, மலைக் காட்டில் பூக்கும் பொன் கொன்றையாக, அடர்ந்த கிளைகளின் உள்ளே கூவும் குயில்களாக, அவர்களின் சிறப்புக்களை தங்கள் பெருமைகளாகக் கூவும் அதிகாரிகளின் ஆணவத் திமிரை சகித்துக் கொள்பவர்களாக….

பெண்களின் கீழ்படிதல்

பெண்களது கீழ்படிவே ஆண்களுக்கு பெண்கள் மீதான ஈர்ப்பை உருவாக்குகிறது. பெண்கள் அழகாகவும், சாந்தமாகவும், பணிவாகவும், தமது சுதந்திரத்தை விட்டுக்கொடுப்பவர்களாக இருக்கும்போதே ஆண்களுக்கு பெண்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கிறது எனவும் கூறப்படுகிறது. ஆண் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் அதனை சட்டமாக வரைகிறது. இந்த சட்டங்களினாலான சமூக அமைப்பை பெண்களும் சுவீகாரம் செய்கிறார்கள்.

கொடை

கண்ணன் தனது பாதத்தை தூக்கி அர்ஜூனன் மடியில் வைத்துக்கொண்டு “அர்ஜூனா! கர்ணன் கொடை வழங்கும்போது சொல் பொருள் அறிவு உணர்வு என்ற நான்கு படிகளில் நகர்ந்து நகர்ந்து ஏறுவதில்லை. உணர்வு என்ற நான்காவது   படியில் துள்ளி ஏறி அக்கணத்திலே சென்று நின்று வழங்குகின்றான். நீ சொல் பொருள் அறிவு என்று மூன்று படிகளை நகர்ந்து நகர்ந்து கடக்கிறாய். அதனால் அறிவு படியில் களைத்து நின்று விடுகின்றாய். சரியா? தவறா? அதிகமா? குறைவா? என்ற கேள்வியின் கொக்கியில் மாட்டி துடிக்கிறாய். பின் எப்படி நீ உணர்வுப்படியை தொடுவாய்

புனர்ஜென்மத்தின் நெருப்பில் எரியும் வாழ்வு

This entry is part 6 of 6 in the series ஜகன்னாத பண்டித ராஜா

ஸ்லோகங்கள் 46, 47, 48-ல் இதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. -அமைதியை எங்கும் பெறவில்லை, உன் மடியில் நீண்ட உறக்கம் கொள்ள வேண்டும்; ஜகன்னாதனை விடுவிக்கும் தருணம்; கங்கையின் அழகான தெய்வ வடிவம் – என இவைகள் பண்டிதராஜரின் இறுதி விருப்பங்களை நமக்கு உணர்த்துகின்றன.

மிளகு – அத்தியாயம் 61 & 62

முதலை வெளியே வந்தால் அதன் ஆயுளை ஓய்த்து விடலாம் ஆனால் வருவேனா என்று அடம் பிடிக்கிறது என்கிறார் பிரமாணி. ஏரியில் மீன்பிடித்தமும் கடல்முகத்துக்கான போத்துவரத்தும் நான்கு நாட்களாக நடக்காமல் வர்த்தகம் நின்று போயிருக்கிறது என்று கிராமப் பெரிய மனிதர்கள் சிலர் என்னிடம் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். நான் என்ன செய்து முதலையை வெளியே கொண்டு வரவேண்டும்? அதனோடு பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமா? 

அறிந்திடாத பெருநகர விதைகள்

எல்லோருக்குமே
தெரிந்தவர்கள்
அழைக்க வந்திருந்தால்
எத்தனை இனிமையானதாக மாறியிருக்கும்
யாவும்.

அரிசியில் ஆர்சனிக்

 கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள்  6 பேரை உணவில் சயனைடு கலந்தளித்து கொலை செய்த கேரளாவின் ஜோலி ஜோசப் 2019 ல் கைது செய்யப்பட்டார் .வழக்கு விசாரணையில் இருக்கிறது. கடந்த 2023 டிசம்பர் 22ல்  நெட்ஃப்ளிக்ஸில் இதுகுறித்த ’’கறியும் சயனைடும்’’ என்ற ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. “அரிசியில் ஆர்சனிக்”

தனிப்படர்மிகுதி

எந்த செயலிக்கும்
என் அலைபேசியில் இடமில்லை
மீன் இல்லா குளத்திற்கு
தூண்டில் எதற்கு.
இப்படியான
எந்த ஒரு பாசாங்குமற்று
என் மேஜைக்கு வரும் ரசீதை
நான் எழாமல்
எனக்கு முன்பே பெற்றுக்கொள்ளும்
அவளிடம் மட்டுமே
வெளிப்படையாக அறிவித்தேன்
என் வறுமையை…

மார்ஷ்லேண்ட் புத்தக விமர்சனம்

அவர் நினைவுகள் மெல்ல அவரின் கடந்தகால குற்ற சரித்திரத்தை வெளிக்கொணர்கிறது. 1968 மற்றும் 1969 ல் டோக்கியோ மற்றும் ஜப்பானின் இதர பகுதிகளில் நடந்த மாணவ கலவரம் நாவலின் மூன்றில் ஒரு பகுதியாக அமைகிறது.ஒரு ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு அட்சுவோ, வாக்காகோ, அவர்களுக்கு அறிமுகமானவர்கள் மற்றும் தீவிர மாணவப் பிரிவினை சேர்ந்த மாணவர்கள் குழுவான ‘கியூ- செக்ட்ஐ’  சேர்ந்தவர்கள் கைதாகும் பொழுது கதையின் போக்கு தீவிரமடைகிறது.

துகள்கள்

துளிம இயக்கவியல் மற்றும் துகள் கொள்கை விவரிக்கும் உலகம் இதுவே.  லாப்லாஸூம் நியூட்டனுடையதுமான, நிரந்தர வடிவமைப்புடைய‌ வெளியில், ஒரு மிகச்சிறிய கூழாங்கல்  நீளமான துல்லிய எறிபாதையில் முடிவின்றி பயணிக்கும் இயந்திர உலகிலிருந்து வெகுதூரம் சென்று விட்டோம். நுண்துகள் பரிசோதனைகளும் துளிம இயக்கவியலும் பிரபஞ்சம் என்பது இடைவிடாத, ஓய்வற்று அசையும் பொருட்களால் ஆன ஒன்று ;   தொடர்ச்சியாக பார்வைக்குத் தோன்றி மறையக்கூடிய அற்பாயுளுடைய பொருட்கள் என்று கற்பிக்கின்றன

அடையாளம் 

கடைகளும் தெரு வியாபாரங்களுமாக ஜேஜேயென்றிருந்தது. இன்னும் இரண்டு வாரங்களில் நடக்கவிருக்கும் நாட்டியாஞ்சலி விழாவுக்கென்று இப்போதே ஊர் விழாக் கோலம் பூண்டு கொள்ள ஆரம்பித்து விட்டது என்று சென்னையில் இருந்த போதே ஜெயராமன் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. சுற்று வட்டாரத்திலிருந்து வந்து அப்பும் கடை கண்ணிகள் இல்லாத விழா ஏது?

யார்க் , கிராஸ் ஹேட்ரியன்ஸ் வால் பயணக்குறிப்புகள்

This entry is part 2 of 9 in the series பயணங்கள்- லண்டன்

எங்களுடைய பெரும்பாலான பயணங்களில் குறிப்பாக, ஐரோப்பாவில் தம்பதியர் சமேதமாக ஊரைச்சுற்றிப் பார்க்க வருபவர்கள் பலரும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருந்தார்கள். நாம் ஐம்பதிலும் ஆசை வரும் என்று பாடினால் அவர்கள் அறுபதிலும் ஆசை வரும் என்று பாடுகிறார்கள். பொறாமையாக இருக்கிறது! “வயசான அக்காடான்னு ஒரு இடத்தில உட்காரணும்”என்று சொல்லாத ஆட்கள் இருக்கும் வரையில் இவர்கள் உலகம் சுற்றும் வாலிபர்களாக இருக்கிறார்கள்.

இருகால் கொண்டெழும் பீமத் துணைவன்

அமெசானுக்காகச் சோதனை செய்யப்படும் இந்த ரோபோவில், ‘டிஜிட்’ என்ற பாட் (மென் பொருள்) பயன்படுத்தப்படுவதாக ‘அஜிலிடி ரோபோடிக்ஸ்’ தலைமை நிர்வாக அதிகாரி டேமியன் ஷெல்டன் சொல்கிறார். இக்கட்டுரை வெளியாகும் நேரத்தில் அனேகமாக தொழிற்சாலைப் பணிகள் துவங்கியிருக்கக்கூடும். பயன்பாட்டு நோக்கத்துடன் அமைக்கப்படும் உலகின் முதல் ரோபோ தொழிலகம் என்று அவர் பெருமிதப்படுகிறார்.