இந்த ஸ்லோகங்கள் ஜகன்னாதர் தம் வாழ்வின் இறுதிக்காலத்தில் எழுதினவையாக இருக்கக்கூடும். ஏனெனில் இதில்
தம் வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்;
தாமியற்றிய செய்யுள்களின் இனிமையை, நயத்தை, உயர்வாகப் பெருமிதத்துடன் பேசுகிறார்;
Author: மீனாக்ஷி பாலகணேஷ்
ஜகன்னாத பண்டித ராஜா -2
இளம் மனைவியுடன் கருத்தொருமித்து வாழும் / வாழ்ந்த ஒருவனின் நினைவலைகளாகப் பெருக்கெடுத்து ஓடுகின்றன இந்தக் கவிதைகள். இவற்றை ஆழ்ந்து படிக்கும்போது நமது சங்கக் கவிதைகளான அகநானூறு, எட்டுத்தொகை நூல்களின் சாயல் மிகுதியாகத் தெரிகின்றது. ஊடலும் கூடலும் பெருக்கெடுத்து ஓடுகின்றன. பிரிவின் வாட்டம் கனலெனச் சுடுகின்றது
ஜகன்னாத பண்டித ராஜா
இந்த நூலை ஜகன்னாத பண்டிதர் இயற்றியது குறித்து சில கதைகள் உலவுகின்றன. இதில் காணப்படும் சில பாடல்கள் இளம்வயதிலேயே இறந்துவிட்ட மனைவியை எண்ணிப்பாடியதாகக் கொள்ளப்படலாம். எது எப்படியோ நமக்கு வேண்டியது இவற்றின் நயமும் சுவையும் கவிதையழகும் தான். சில பண்டிதர்கள் எழுதிய ஆங்கில விளக்கத்தின்1,2,3 துணைகொண்டு நான் இதனைத் தமிழாக்கம் செய்துள்ளேன்.
மாறாத பேரானந்தம்
புரூரவஸ் எனில் நீர் கொண்ட மேகம், அதிக முழக்கம் செய்வது. நீர் ஆவியாகி மேகங்களாகும்போது மழையின் அறிகுறியாக இடிமுழக்கம் எழும். ஊர்வசி எனும் பெயர் மின்சாரம் பாய்வது போன்ற மின்னல் எனவும் பொருள்படும். ரிக்வேதத்தில் கூறப்பட்டுள்ள பாடலின்படி ஊர்வசி என்பது இடையிடையே தோன்றிமறையும் மின்னல் எனப் பொருள் கொள்ளப்படும்.
புரூரவஸ் செய்த பாவம் – அழகு, காதல்
புரூரவஸும் அதுபோன்றே ஊர்வசியைத் திரும்ப அடைவதையே தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு காடு, மலை, நாடு, நகரம், நதி எனச் சுற்றியலைகிறான். அவளுடன் கழித்த இன்ப வாழ்வின் எண்ணங்கள் திரும்பத் திரும்ப வந்து அவனை அலைக்கழிக்கின்றன. ஒரு உயர்ந்த பதவியை அடைவதும், கல்வியிலோ, கலையிலோ சாதனைகள் செய்வதும், தான் விரும்பிய பெண்ணுடன் இன்பமாக வாழ்வதும் சமமாகவே நோக்கப்பட வேண்டும். இதைப் பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
தனிமையின் பிடியில் புரூரவஸ்
ஒருவர்மீது எல்லையற்ற காதல் கொண்டுவிட்டால் ஒருவன் எத்தகைய பலவானானாலும், அவனுடைய புகழ், பதவி எதுவுமே அவனுக்கு ஒரு பொருட்டல்ல எனக் காண்கிறது. இத்தனைக்கும் அவனை திலோத்தமை முதலிலேயே எச்சரிக்கை செய்துள்ளாள். காதல் அவன் சிந்தனையைக் குருடாக்கி விட்டதே!
அதிர்ஷ்டம் வாய்ந்த சுவர்க்கத்தின் துரதிர்ஷ்டம்!
இடையில் இங்கு ‘அதிர்ஷ்டம் வாய்ந்த சுவர்க்கத்தின் துரதிர்ஷ்டம்!’ எனும் முரண்தொடையான (oxymoronic) ஒரு பிரயோகத்தை அரவிந்தர் அறிமுகப்படுத்துகிறார். தெய்வங்களுக்குமே அழகின் உச்சமான ஒரு பொருள் – இங்கு ஊர்வசி – அவர்களது பேரதிர்ஷ்டமாகக் கொள்ளப்படுகிறது! அதனால் அவளுடைய பிரிவை, இனிமேலும் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவள் சுவர்க்கத்தில் இல்லாத நாட்கள் துரதிர்ஷ்டம் வாய்ந்தவை என் உணர்கின்றனர் சுவர்க்கவாசிகள்!
இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம்
காளிதாசனின் ‘விக்ரமோர்வசீயம்’ நாடகமானதால் நாடகத்தின் அவசியம் கருதி பல பாத்திரங்கள் இதில் படைக்கப்பட்டுள்ளனர். பலபேர் உள்ள மேடை ஒன்றுதான் சுவாரசியமானதாக இருக்கும் அல்லவா? மன்னன் புரூரவஸுடன் ஒரு விதூஷகன் – ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் உள்ளதுபோல ஒரு Jester. அரசிக்கு ஒரு தோழி. யாரிடமாவது இவர்கள் (பாத்திரங்கள்) உரையாடினால்தானே இவர்கள் “இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம்”
‘ஊர்வசியின் களிப்பு- புரூரவஸின் சலிப்பு’
இரு காதலர்களின் பிரிவு அவர்கள் உள்ளங்களிலும் வாழ்விலும் ஏற்படுத்தும் வெறுமை, தனிமை, வாழ்க்கையின் மீதான வெறுப்பு, சலிப்பு, பற்றின்மை என அனைத்தும் இத்தனை நுட்பமாக, பொறுமையாக வேறெந்தக் கவிஞனாலும் விவரிக்கப்பட்டுள்ளதா என நான் அறியேன். முன்பே கூறியபடி, கம்பன் அழகாக சீதை, இராமன் இவர்களின் தாபத்தையும், சேக்கிழார் பெருமான்
ஊர்வசி காதலில் கண்விழித்தாள்!
மூலத்தில் காண்பதுபோல் ஸ்ரீ அரவிந்தரின் கவிதையில் தேர்ப்பாகன் இல்லை; புரூரவஸே தேரைச் செலுத்துகிறான். வெளிப்படையாக பாகனைப் பற்றிய பேச்சில்லை! அவனைக் கண்ட கேசி, தான் வெல்லப்படுவோம் என உணர்ந்து, ஊர்வசியைப் பனியின்மீது போட்டுவிட்டு ஓடோடி மறைகிறான். உணர்விழந்து கிடக்கும் அவளை அள்ளியெடுத்துத் தேரில் இருத்திக்கொண்டு புரூரவஸ் விரைகிறான். அத்தனை பேரழகை அருகாமையில் கண்டவனின் உள்ளம்…
‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’
காளிதாசனின் விக்ரமோர்வசீயம் எனும் படைப்பு புரூரவஸ்- ஊர்வசி ஆகியோரது காதல்கதையைக் கூறுவதாக அமைந்தது. அதற்கு ஏன் காளிதாசன் விக்ரம- ஊர்வசீயம் எனப் பெயரிட்டான் என்பதற்குக் காரணங்கள் கூறப்படுகின்றன. அது இங்கே இப்போது நமக்குத் தேவையில்லை. விக்ரமன் என்பது புரூரவஸின் மற்றொரு பெயர் எனும் கூற்றை மட்டும் நினைவில் கொள்ளலாம். “‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’”
ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில்
தேவலோகத்தில் நடைபெற்ற ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் ஊர்வசி ‘லக்ஷ்மி’யின் வேடத்தை ஏற்று நடனமாடுகிறாள். அவளுடைய எண்ணமெல்லாம் புரூரவஸைப் பற்றியே இருந்தது. அதனால் ‘புருஷோத்தமா’ (விஷ்ணு) எனக் கூறுவதற்குப் பதிலாக புரூரவஸ் என அழைக்கிறாள். இதனால் அவளுடைய நாட்டிய குருவான பரதமுனிவர் சினமடைந்து அவளைச் சபிக்கிறார். “நீ யாரை நினைத்துக் கொண்டிருக்கிறாயோ, அவனுடன் வாழக் கடவாய். உனக்கு ஒரு மகன் பிறப்பான். தந்தையும் மகனும் சந்தித்துக் கொள்ளும்போது நீ அவர்களிருவரையும் விட்டு விலகி தேவலோகத்திற்குத் திரும்ப வேண்டும்.”
ஸ்ரீ அரவிந்தரின் நெருப்புப் பறவை – ஒரு பார்வை
பறவை என்பது ஆத்மாவின் அடையாளம் அன்றி வேறொன்றல்ல! பெரும்பான்மையான பொழுதுகளில் இவை மனோ-சக்தியையும் ஆத்ம சக்தியையும் குறிக்கின்றன. இங்கிவை ஸ்ரீ அரவிந்தரின் எழுச்சியடைந்த ஆன்மீக அறிவை வெள்ளிய நீலநிறம் கொண்ட தீயினால் உருவகித்து உலகிற்கு உணர்த்துகின்றன. அது ஒரு மரத்திலமர்ந்துள்ள பறவை போன்றது; சந்திரனிலிருந்து ஒழுகும் சோமரசம் குளிப்பாட்டும் சோமா எனும் செடி; அலைகளுடன் கொந்தளிக்கும் கடல்; அபரிமிதமான பலம்கொண்டவனும், தான் செய்யும் காரியங்களில் வெகு சாமர்த்தியமானவனுமான ஒருவன் தனது வாயில் நெருப்பை ஏந்திக்கொண்டு வேகமாகச் செல்வது போன்றதாம். வேறு உவமைகள் இன்னும் தேவையா? பிரமிக்கிறோம்.
ஒரு கோப்பை தேநீரில் சுழலும் உலகம்
காபியைப் பற்றிய சுவைபொங்கும் கட்டுரைகளைப் படித்திருக்கிறோம். ஆனால் நான் காஃபிப்பிரியை அல்ல! தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும், குடும்பமே காஃபிப் பிரியர்களானாலும் எங்கள் பெற்றோர் என்னவோ குழந்தைகளை அவர்களுக்குப் பதினைந்து வயதுவரை போர்ன்விட்டா அல்லது ஓவல்டின் கொடுத்துத்தான் சமர்த்தாக வளர்த்தார்கள். பின் கல்லூரிக்கும் ஹாஸ்டல் எனப்படும் விடுதிகளிலும் தங்கிப்படித்தபோதும்கூட ஏனோ காஃபிமீது “ஒரு கோப்பை தேநீரில் சுழலும் உலகம்”
யசோதராவின் புன்னகை
என்னையறியாமலே அனிச்சையாய் எழுந்த என் முகத்தின் கேள்விக்குறியைக் கண்டுகொண்ட அந்த சுட்டிப்பெண் சொன்னாள்: “ஆன்ட்டி! எனக்கு எட்டு வயசாக இருக்கும்போது எங்கப்பா திடீர்னு வீட்டை விட்டுப்போய் சன்யாசம் வாங்கிண்டுட்டார். என் தங்கைக்கு அப்போ ஆறு வயசு. அவர் இப்போ எங்கே என்று யாருக்கும் தெரியாது.”
வங்க இலக்கியத்தின் சிலமுகங்கள்
எந்த மொழியிலும் இலக்கியத்திற்குப் பலமுகங்கள் உண்டு. வங்க இலக்கியமும் இதற்கு விலக்கல்ல. ஒரு நாகரிகத்தை, கலாச்சாரத்தை, அதன் சரித்திரத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், அந்த மொழியிலுள்ள இலக்கியங்கள் என்றென்றும் அதற்குத் துணைநிற்கும். எத்தனை மொழிகள் நமது இத்தேசத்தில், எத்தனை அரிய எழுத்துக்கள், அற்புதமான படைப்பாளிகள், நேற்றும், இன்றும், நாளையும் “வங்க இலக்கியத்தின் சிலமுகங்கள்”
சாவித்ரி- ஓர் இசை
ராகம் சாவித்ரி, ஓர் அதிசயமான அபூர்வ ராகம்…. அதன் மாயமான ராக அலைகள் இழையிழையாக வேகத்துடனும், உறுதியுடனும் பெருகிப் பிரவகிக்கும்போது, நாம் காண்பது சூரிய பகவானால் ஆசிர்வதிக்கப்பட்ட இளம்குழந்தை சாவித்ரியை; அவள் யாகத்தீயினின்று வெளிப்படும்போது, உலகின் அனைத்து நற்குணங்களும் பொருந்திய ஒரு முழுமையான சிறு பெண் வடிவத்தை உணர்ந்து மெய்சிலிர்க்கிறோம். சாவித்ரியின் சுஸ்வரங்கள் உள்ளத்தை நிறைக்கின்றன. குழந்தை குதூகலமாக வளர்கிறாள்.
ஆற்றுப்படுத்தல்!
எவ்வாறு முருகப்பெருமானை வணங்குவது என இறையருள் பெற்ற ஒருவன் மற்றொருவனுக்குச் சொன்னான்: ‘இன்னிசை முழங்க வெறியாட்டயர்ந்து, அந்த வெறியாடிய களத்தில் ஆரவாரமாகப்பாடி, வாயில்வைத்துக் கொம்புகளை ஊதி முழக்கி, முருகப்பெருமானின் பிணிமுகம் எனும் யானையை வாழ்த்தி வணங்குவர்.
கறங்குமணி நெடுந்தேர் வரும்!
கருப்பொருளும் மயங்கி அமைய இயலும் என்பர். அவ்வத்திணைகளுக்குரிய கருப்பொருள்கள் அந்தந்தத் திணைகளுக்கே உரியதாக அமையின் சிறப்பாக இருக்கும்; அவ்வாறு அமையாவிடினும், அவை அமைந்த நிலத்திற்குரியனவாகவே கருதப்பட வேண்டும் என்பது நியதி. ஒரு நிலத்திற்கே உரியதான பூக்கள் மற்ற நிலங்களிலும் பூக்க வாய்ப்புண்டு. நெய்தற்பூ மருத நிலத்திலும் பூக்கலாம்; குறிஞ்சிக்குரிய பறவை வேறுநிலத்திலும் பறக்கலாம். இவ்வாறு வரும்பொழுது அந்தந்தப் பூவையும் பறவையையும் அவை உள்ள வேறுநிலங்களுடன் பொருத்திப் பொருள்உணர்ந்து கொள்ளவேண்டும். காலமும் அவ்வாறே; குறிஞ்சி நிலப்பொழுதான யாமம் என்னும் சிறு பொழுதும் முல்லை நிலத்தின் பெரும் பொழுதான கார்காலமும் மற்ற நிலங்களிலும் வரும் வாய்ப்புகள் உள்ளன! இது தான் திணை மயக்கம் எனப்படும்.
தோள்வலி வீரமே பாடிப்பற!
பெரியாழ்வார் தமது நான்காம் பத்தில், குழந்தைகளுக்குப் பெயர்வைப்பது சம்பந்தமான ஒரு கருத்தினை வெளியிடுகிறார். .. .. .. ‘காசுக்கும் துணிக்கும் ஆசைப்பட்டு கண்டகண்ட பொருளற்ற பெயர்களைப் பிள்ளைகளுக்கு வைக்காதீர்கள். கேசவன் எனும் அந்த இறைவனின் பெயரை இடுங்கள். .. .. .. ‘அழிகின்ற மனிதனுக்கு, சிவந்த கண்களையுடைய திருமாலின் என்றுமே அழியாத பெயரான ஸ்ரீதரன் எனும் பெயரை இட்டு மகிழுங்கள். .. .. .. ‘மண்ணாகப் போகும் மனிதனுக்கு கருமுகில் வண்ணனின் நாமத்தை வைத்து அழைத்தால் நல்லது,’ எனவெல்லாம் கூறுகிறார்.
கானமழை பொழிகின்றான்…
வாசிப்பில் ஆழ்ந்தவனின் சிவந்தகண்கள் தன் இசையில் இணைந்து இயைந்து மயங்கிக் கிறங்கிக் கோணி எங்கோ நோக்குகின்றன; சிவந்தவாய் குழலை ஊதுவதற்காகக் காற்றை உறிஞ்சுகிறது; புருவங்கள் வளைந்து காண்கின்றன. அவற்றில் வாசிப்பின் மும்முரத்தால் சிறுவியர்வை படர்ந்திருக்கிறது. இப்படி ஒரு குழலூதுபவனைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இத்துணை மும்முரமாக ஒருவன் குழல் இசைத்தால் என்னவாகும்? பிரபஞ்சமே தன் சுழற்சியை மறந்துநிற்கும். பறவைகள் குஞ்சுகளுக்கு உணவளிப்பதனையும் மறந்து, தமது கூடுகளைத்துறந்து வந்து காட்டில் பரவிக்கிடக்கின்றன. மேய்ச்சலுக்கு வந்த மாடுகள் தமது கால்களைப்பரப்பிக் கொண்டும், தலையைத் தாழ்த்திக்கொண்டும் காதுகளைக்கூட அசைக்காமல் அந்த இசையைக் கேட்டபடிக்கு நின்றனவாம்.
கோவர்த்தனமென்னும் கொற்றக்குடை
‘தேனினும் இனிய சொற்களால் நீ உன் தந்தையிடம் கூறினாய்: “இந்திரன்தான் இதற்குக் காரணம் என்பது உண்மையல்ல; அனைத்தும் விதிவசமே! மழைபெய்வதும் மனிதர்களின் அதிர்ஷ்டத்தினால்தான். காட்டுமரங்கள் தங்கள் வளர்ச்சிக்காக இந்திரனைப் பூசை செய்கின்றனவா என்ன?” என்று கேட்டாய். “மாடுகள் ஆயர்களான நமது செல்வம். அவற்றை நன்கு பராமரிக்க வேண்டும். ஆனால் இந்த கோவர்த்தனமலையல்லவா அவைகளுக்கு நல்ல புல்லையும் நீரையும் அளிக்கிறது? பூமியில் வாழும் நல்ல புனிதமான மனிதர்களே பூசைக்கு உகந்தவர்கள்; இந்திரன் போன்ற தேவர்களல்ல,” என்றாய் நீ கிருஷ்ணா!
பவளவாய் முறுவல் காண்போம்
நாரயணீயத்தை இயற்றிய நாராயண பட்டத்ரி, உபநிடதங்களே கோபகன்னிகைகளின் வடிவில் கிருஷ்ணனைச் சூழ்ந்து நிற்கின்றன எனக்கூறுகிறார். ‘அக்ரே பச்யாமி,’ எனத்துவங்கும் நாரயணீயத்தின் கடைசி தசகம். … குழந்தைகள் பாலப்பருவத்திலிருந்து யௌவனப்பருவத்தில் அடியெடுத்து வைக்கும்போது அலாதிஅழகு படைத்தவர்களாகக் காணப்படுவர். குழந்தை கிருஷ்ணனும் அதற்கு விதிவிலக்கில்லை! இந்தப்புதிய எழில் தோற்றத்தை ‘ஆர்த்ர யௌவனவனம்’- புதியதான இளமை எழில் எனப்போற்றுகிறார். ‘அது மன்மதனை வெல்லக்கூடிய அழகுடையது; மேகக்கூட்டங்களின் தொகுப்பு போன்றது; பிருந்தாவனப் பெண்களிடத்தில் அன்புபூண்டு விளங்குவது; ஆபரணங்களை அணிந்து புன்முறுவல்கொண்ட தாமரைபோன்ற முகத்தையுடையது; கோவைப்பழம்போன்ற உதட்டை உடையது; அதனை நான் வணங்குகிறேன்,’ என்கிறார்.
கன்றின்பின் போக்கினேன் எல்லே பாவமே!
‘மைபோல நிறம்கொண்டவன் என் பிள்ளை. இந்த ஆயர்குலத்துக்கே அவன் கொழுந்தாக விளங்குபவன். அவனை அழகாக நீராட்டி, அவன் விருப்பப்படி வீடுவீடாகச் சென்று குறும்புகள்செய்து விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்க எனக்கு ஆகவில்லையோ? கம்சனை அழித்த வீரக்கழல் அணிந்த அந்தத் திருவடிகள் நடந்து நடந்து வலிக்குமே! மாடுகளை ஓட்டி ஓட்டிக் களைத்திடுமே! இவ்வாறு சிறிதும் சிந்தியாமல் அவனை கன்றுகாலிகள் பின் அவன் கெஞ்சினான் என்று அனுப்பிவிட்டேனே! ஏன்தான் இப்படிச் செய்தேனோ? சிறுகுழந்தையை இவ்வாறு அனுப்பியது நான் செய்த பாவமே,’ என மனம்பதைக்கிறாள் அவள். கம்சனை அழித்த செயல் ஆய்ப்பாடியினின்று கண்ணன் சென்றபிறகே நிகழ்ந்தது. யசோதைக்கு இப்போது இதனைப்பற்றித் தெரிந்திருக்க வழியில்லை. பெரியாழ்வாரின் ஆர்வத்தில் எழுந்த பாடல்கள் இவை; அவ்வாறே படித்துப் பொருள்கொள்ள வேண்டும்
அப்பா! உன்னை அறிந்துகொண்டேன்
தன் சின்னக்குழந்தையை வாசனைத்தைலத்தைப் பூசி, நறுமணப்பொடியால் தேய்த்து நீராட்டினாள் யசோதை; அவனுடைய பசியால் குழைந்த வயிறுநிரம்பப் பாலையும் ஊட்டிவிட்டுத் தொட்டிலில் கண்வளர்த்தினாள்; குடத்தை எடுத்துக்கொண்டாள்; பக்கத்து மனைப்பெண்டிருடன் யமுனைநதியில் போய் நீராடிவரலாம் என்று சென்றுவிட்டாள். வெகுநேரம் ஒன்றும் ஆகவில்லை; அவள் திரும்பிவந்து பார்த்தபோது, பாரம் மிகுந்த வண்டி ஒன்றினை முறியுமாறு- சகடாசுரனை- கால்களால் உதைத்துக் கொன்றிருக்கிறான் இக்குழந்தை. இதென்ன, சின்னக்குழந்தை செய்யக்கூடிய செயலா? விக்கித்து நிற்கிறாள் யசோதை. அக்கம்பக்கத்தவர்களின் வியப்பொலிகளும், மகிழ்ச்சியும் ஆச்சரியமும் தோய்ந்த கூக்குரல்களும் அவள் உள்ளத்தில் எழுச்சியையும், இனமறியாத பயத்தையும் எழுப்பிவிட, ‘அட! இவன் தெய்வாம்சம் பொருந்தியவன்,’ என்று புளகாங்கிதம் கொண்ட நினைப்பினூடேயும், ‘நல்லவேளை! குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லையே!’ எனும் தாய்ப்பாசம்தான் தலைதூக்குகின்றது. ‘என் கண்ணா! தெய்வமே!’ என உடனடியாகக் குழந்தையை -தன் நெஞ்சில் வைத்துக் காப்பாற்றுவதுபோல- வாரியணைத்துக்கொண்டு விசும்பச் செய்கிறது!
கோபியர் கொஞ்சும் சல்லாபன்
தாழ்மையும் பணிவுமே அனைவருக்கும் முக்கியமான பெருங்குணம் என உணர்த்த கிருஷ்ணன் செய்த விளையாட்டு இது என்பர் பெரியோர். கிருஷ்ணன் காளியன்தலைமீது நடனமாடி அவனை அடக்கியதும், கழுதை உருவில் வந்த அசுரனைக்கொன்றதும் இந்தப்பெண்கள் எல்லாம் கண்டும் கேட்டும் நடந்த நிகழ்வுகள்தாம். அவன் அசகாயசூரன் என்பதில் அவர்களுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் நிலைக்கு இறங்கிவந்து அவன் ஆடியும்பாடியும் விளையாடிக்களித்ததால், அவனிடம் அளவுக்குமீறி உரிமை எடுத்துக்கொண்டு என்னவேண்டுமாயினும் செய்யலாம் என எண்ணிவிட்டார்கள். அதனால்தான் அவர்களுக்குக் கிருஷ்ணன் ஒருபாடம் கற்பிக்க முயன்றான்
அசோதை நங்காய்! உன் மகனைக் கூவாய்!
யசோதையின் கூற்றாகத் திருவெள்ளறையில் உறையும் பிரானைப்பாடுகிறார் பெரியாழ்வார். ‘சந்திரன் மாளிகைசேரும் சதுரர்கள் வெள்ளறை,’ என்றும், ‘மதிள்திரு வெள்ளறை’ என்றும், ‘முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை,’ என்றும் அவ்வூரைப் புகழ்கிறார். …“காடுகளிலிருந்து நாவல்பழங்களைக் கொண்டுவந்து விற்ற ஒருபெண்ணிடம் அவ்வளைகளைக் கொடுத்து அவற்றிற்குப் பதிலாக நாவல்பழங்களை வாங்கித்தின்கிறான். நான் அந்தப்பெண் கையில் என் மகளின் வளைகளைப் பார்த்து, ஏனடா கிருஷ்ணா என் மகளின் வளையைக்கொடுத்தாய் எனக்கேட்டால்…
கன்று மேய்க்க ஒரு கோல் கொண்டுவா!
மலர்களில் மிக உயர்ந்தவை என மனிதர்கள் கொண்டாடும் சிலவகை மலர்களைக் குழந்தைக்குச் சூட்டி அழகுபார்க்க எண்ணுகிறாள் அன்னை. அவன் தன்னுடைய அழைப்புக்கும் ஆசைகாட்டுவதற்கும் மயங்கிவருவான் என எதிர்பார்ப்பது எதனால்? குழந்தை வளரும்பொழுதில், “இப்பொருள் உயர்ந்தது; இது அழகுமிக்கது; இது உனக்கு நல்லது,” என்பதெல்லாம் தாய் கூறித்தான் குழந்தை அறிந்துகொள்கின்றது. இல்லாவிடில், தெருவோரச் செடியில் பூத்துக்குலுங்கும் வண்ணமயமான அந்திமந்தாரையும், அரிதாகக் கிட்டும் செண்பகமலரும் அவனுக்கு ஒன்றுதான். தாய் கூறித்தான் இம்மலர்கள் உயர்ந்தவை, மணமிக்கவை, மிக அரியவை, விலைமதிப்பற்றவை என அறிந்துகொள்கிறான். அவளும் இவற்றையெல்லாம் கூறி அவனை ஆசையாக அழைத்துத் தன் உள்ளப்படி அவன் நடந்துகொள்ளுமாறு செய்கிறாள்!
‘மேகங்கள் போலக் கருத்தநிறம் கொண்டு, அவற்றின் குளிர்ந்த தன்மையையும் உடையவன் நீயல்லவோ குழந்தாய்! ஏழுலகும் உய்ய எங்கள் ஆய்ப்பாடியில் வந்து பிறந்தாய். உனக்கு மணம்மிக்க மல்லிகைப்பூவைச் சூட்டுவேன், வருவாயாக,” என அன்போடு விளிக்கிறாள்.
கோவிந்தன் குழல்வாராய் அக்காக்காய்!
குழந்தைகளுக்கு நாயும், காக்கையும், நிலாவும் தான் முதல் தோழர்கள்; அன்னையால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்கள்; வேண்டியபொழுதெல்லாம் அவள் இவர்களை விளித்து, குழந்தையுடன் விளையாடவோ, அல்லது, அவனை மகிழ்விக்கவோ வேண்டுவாள். இவற்றுள் அண்டிப்பிழைக்கும் காக்கை குழந்தையின் வளர்ச்சியில் பெரும் இடம் வகிக்கிறது! குழந்தையின் கையிலுள்ள தின்பண்டத்தில் பங்குகோரியும், அவன் உண்ணாமல் மீந்த உணவை ஏற்றுக்கொள்ளவும் தயாராகக் காத்துக்கொண்டிருப்பது காக்கை. நாயும் இதில் சேர்த்திதான்! அதன் இந்தத் திருட்டுத்தனங்களைப் பொருட்படுத்தாது, குழந்தையும் காக்கையைத் தன் விளையாட்டுத் தோழனாக ஏற்றுக்கொண்டுவிடுவதால், இப்போது தாய் குழந்தைக்குத் தலைவாரிவிடக் காக்கையைக் கூப்பிடுகிறாள்!
கிருஷ்ணனுக்குப் பன்னிரு நாமங்கள்
அன்னை யசோதைக்கும் தன் செல்லக்குழந்தை கிருஷ்ணனின் காதுகளில் துளையிட்டு, மற்றச் சிறுவர்களைப்போல் அழகழகான காதணிகளை அணிவித்துப் பார்க்க ஆசை இராதா? பெரியாழ்வாரின் திருவாய்மொழியாக நாம் இங்கு காணப்போவது வெகுசுவாரசியமான இந்த நிகழ்ச்சியைத்தான்! யசோதையின் ஒருதலைக்கூற்றாகப் (monologue) பாசுரங்களாக்கி இந்தக் காதுகுத்தும் நிகழ்ச்சியைக் கதைப்போக்கில் அளித்துள்ள அழகும் நயமும் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிடுகின்றன. இதில் இன்னும் ஒரு அழகான விஷயம் என்னவென்றால் திருமாலடியார்கள் உயர்வாகக்கருதும் கிருஷ்ணனின் பன்னிரு திருநாமங்களைக் கொண்டு இப்பாடல்களை அமைத்துள்ளதுதான்!
ஆயன்வந்து அப்பூச்சிகாட்டுகிறான்….!
பார்த்துக்கொண்டிருக்கும் யசோதைக்குப் பெருமிதம் தாங்கவில்லை. ” ஆகா! இப்படிப்பட்ட குழந்தையைப் பெற்றவள் என்ன தவம் செய்தாள் என ஊர் உலகம் எல்லாம் பேசிக்கொள்கிறார்களடா என் கண்ணே! பா சருந்த வாடா,” எனப் பூரிக்கிறாள். இங்கு தாயாகத் தன்னை உருவகித்துக் கொள்ளும் பெரியாழ்வார் தன் குட்டன் கிருஷ்ணன் அமர்ந்துள்ள ஸ்ரீவில்லிப்புத்தூரின் பெருமையைப் போற்றும் சொற்களும் இப்பாசுரத்தில் இடம்பெறுகின்றன. “மின்னலைப்போன்ற இடைகொண்ட பெண்களின் விரிந்தகுழலின்கண் மலர்களைமொய்க்கும் வண்டுகள் நுழைந்து இன்னிசையை…
என் குட்டன் என்னைப் புறம்புல்குவான்!
சரியான சொல்லால் கூறவேண்டுமெனில் பாரதியாரின் பாடலைத்தான் துணைகாணவேண்டும். ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா,’ எனும் பாடலில் ‘உன்னைத்தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடீ,’ என்று கூறுவார். ‘உன்மத்தம்’ என்பதற்கு மதிமயக்கம் – அல்லது ஊமத்தம்பூவை உண்டநிலை போன்ற அனுபவம் எனலாம். குழந்தையைத் தழுவிக்கொண்ட அந்தத்தருணங்களில், உலகினையும், நம்மையும் மறந்து, நமது நிலையையும் இடம், ஏவல், பொருள் அனைத்தையுமே மறந்து தன்வயமிழந்து விடுகிறோம். இதனால்தான் குழந்தைகளை ‘மயக்குறு மழலை’ என்றார் புறநானூற்று…
கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்! – தளர்நடை நடவானோ!
“தேவர்கள் தொழுது வணங்கும் உனது திருவடியால் இரண்டடிவைத்து மூவுலகங்களையும் இருள்நீங்குமாறு செய்வித்து அளந்தாயே! அந்த அடிகளால் மேலும் பஞ்சபாண்டவர்களுக்காக துரியோதனாதிகளிடம் தூதுசென்றாயே! பின்பு நரசிங்கமாகிப் பகைவனை அழித்தனையே! இது என்ன மாயமோ! வியப்பினை உண்டுபண்ணுகின்றதே!”
கார்முகில் வண்ணனே! சப்பாணி!
“மகாபலிச்சக்கரவர்த்தியிடமிருந்து அவன் நீரைவிட்டு தாரைவார்த்துக் கொடுத்த பூமியைப் பெற்றுக்கொண்ட கைகளால் நீ சப்பாணிகொட்டுவாயாக! நீ சப்பாணிகொட்டும்போது உனது காலில் அணிந்த மாணிக்கக் கிண்கிணிச் சதங்கையும், ஆணிப்பொன்னால் ஆன அரைச்சதங்கையும் அசைந்து இனிமையாக ஒலிக்கின்றன. கருங்குழல் குட்டனே! சப்பாணி கொட்டுக!” எனத் தாய் வேண்டுகிறாள்.
ஆயர்கள் போரேறே! ஆடுக செங்கீரை!
பிள்ளைத்தமிழ் என விளங்கும் சிற்றிலக்கியத்தில் செங்கீரைப் பருவம் அருமையான பத்துப் பாடல்களைக் கொண்டு விளங்கும். சென்ற நூற்றாண்டில் திருமேனிக் கவிராயர் என்ற புலவரால் எழுதப்பெற்ற மகர நெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ் எனும் நூலானது சொல்நயமும் பொருள்நயமும் மிகுந்து விளங்குகின்றது. அதிலிருந்து ஒரு செங்கீரைப் பருவப் பாடலைக் காண்போமே! இந்தப் பிள்ளைத்தமிழ் நூலானது திருப்பேரை எனும் ஊரில் விளங்கும் திருமால் மீது பாடப்பட்டது…
மாமதீ! மகிழ்ந்தோடி வா!
பிற்காலத்தில் எழுந்த பிள்ளைத்தமிழ் நூல்களில் ஏழாம் பருவமான அம்புலிப்பருவத்தில் இத்தகைய உபாயங்களால் அம்புலியை அழைப்பது அழகுறப் பாடப்பட்டது. பெரியாழ்வார் பாசுரங்களிலும் இந்த உபாயங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன. இவை இலக்கிய இன்பத்தை, அதன் சுவையை மேலும் இனிதாக்குகின்றன……
மாணிக்குறளனே தாலேலோ!
கிருஷ்ணனைக் குழந்தையாக்கி அவனுடைய பால லீலைகளில் ஆழ்ந்து விடுவது பக்தி செலுத்துவதில் ஒரு அழகான வகை. பக்தி செய்ய வேண்டும் என்பதற்காக யாரும் இறைவனைக் குழந்தையாக எண்ணிக் கொஞ்சுவதில்லை. குழந்தையாகக் கொஞ்சும் போது இறைவன்- அடியார் என்ற நிலையைக் கடந்து, இவன், இந்தக் குழந்தை என்னுடையவன், என அவனிடம், இறைவனிடம் (அவனை இறைவன் என்று உணர்ந்தும் உணராத நிலையில்) எல்லையற்ற அன்பும் பாசமும் பிணைப்பும் ஏற்படுகிறதே, இது பக்திக்கும் மேல் ஒருபடி உயர்ந்த உறவல்லவா?
வடிவழகு- மதுராதிபதேர் அகிலம் மதுரம்!
ஒரு குழந்தையைப் பார்க்கும் போது ‘இவனுடைய கண் இவன் தந்தையுடையதைப் போலுள்ளது,’ எனவோ, ‘இவனுடைய சுருட்டைத் தலைமயிர் தாயினுடையதைப் போலுள்ளதே,’ என்றோ வியந்து மகிழ்கின்றோம். அது போன்றே, சிறு மகவிற்கு, அது ஆணோ பெண்ணோ, விதம்விதமாக ஆடை அணிமணிகள் புனைவித்து, அலங்காரம் செய்து அழகு படுத்திக் கண்டு களி கொள்கிறோம். அப்படிப்பட்ட குழந்தை, ஆண்டவனாகவே, ஸ்ரீ கிருஷ்ணனாகவே இருந்து விட்டால் என்ன செய்வோம்?
கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!-2
நங்காய்! இந்த என் குழந்தையைத் தொட்டிலில் இட்டால் அத்தொட்டில் கிழிந்து போய்விடுமோ என்னும் படியாக உதைக்கிறான்; சிறிது நாழி எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டால், நழுவி இறங்கி, என் இடுப்பை முறித்து விடுகிறான்; சிறிது நேரம் ஒன்றும் செய்யாமலிருப்பானாக என்று இறுக மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டால் குட்டிக் கால்களால் வயிற்றில் உதைக்கிறான். இப்படி இவன் தனது பருவத்துக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதனால் நான் மிகவும் மெலிந்து களைத்துப் போய் விட்டேன்…
கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்
பாலில் தயிர் ஊற்றி உறவு ஊற்றுகிறோம். உறவு ஊற்றுதல் என்பது யாரிடம்? கிருஷ்ணனிடம் தானே? அவ்வாறு அவனிடம் உறவு கொள்ளுதலே முடிவு நிலை. அதுவே பேரானந்தம். தயிர் (ததி) ஆகும் நிலை. தத்யோன்னம் என்பது வைஷ்ணவ சம்பிரதாயத்தில் மிக முக்கியமானது. அதனைப் பெருமாள் கோவிலில் விநியோகிப்பதன் நோக்கமே இந்தப் பேரானந்த முடிவு நிலை பெறுவதை உணர்த்துவதற்காகவே தான்.
வில்லினை எடு லட்சுமணா!
யசோதை குழந்தை கிருஷ்ணனைத் தொட்டிலில் இட்டுத் தூங்க வைக்க முயல்கிறாள்; எந்தக் குழந்தைக்குத் தான் கதை கேட்க ஆசை இருக்காது? கிருஷ்ணன் மட்டும் இதற்கு விதிவிலக்கா? “கதை சொல்லு,” என முரண்டு பிடிக்கும் தன் சுட்டிக் குட்டனுக்கு ஒரு கதை சொல்கிறாள் அன்னை யசோதை…
பாடுதும் காண் அம்மானை-2
பழங்காலந் தொட்டு வாய்மொழி இலக்கியமாகவே இருந்த இந்தப் பழமையான அம்மானை விளையாட்டை கி. பி. 2ம் நூற்றாண்டில் முதன்முதலாக எழுத்தில்- சிலப்பதிகாரத்தில் பதிவு செய்தவர் இளங்கோவடிகள் என்கிறது தமிழ் விக்கிபீடியா. சிலப்பதிகாரத்தில் வாழ்த்துக் காதையில் இளங்கோவடிகள் ‘அம்மானை வரி’ என நான்கு பாடல்களைப் பாடியுள்ளார். இவை சோழ வம்சாவளி வழிவந்த மன்னர்களின் பெருமையை விளக்கிக் கூறி, அத்தகையதொரு சோழ மன்னனை அடைய விழையும் பெண்களின் விருப்பமாகப் பாடப்படுகின்றன.
பாடுதும் காண் அம்மானை!
அடுத்த பெண் இதற்கான மறுமொழியைத் தயாராக வைத்திருக்க வேண்டும்!! அவளும் சளைக்காமல் உடனே, “அழகான வில்லும் யானைத்தோல் போர்வையும் உடல் மாதின் அங்கமும் ஆனாலும், அடியே! ஆராய்ந்து பார்த்தால் அவர் எடுப்பது பிச்சை அல்லவோ, அம்மானை,” என்று ஏளனமாகக் கேட்டபடி அம்மானையை வீசுகிறாள்.
என்னுயிர் நீயல்லவோ!
கூரையைப் பிய்த்துக் கொண்டு போகும் அளவுக்கு ரசிகர்களிடமிருந்து உற்சாகக் குரல்கள் எழுகின்றன. பாடகியின் முகத்தில் மகிழ்ச்சி; ரசிகர்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் கம்பீரமான உருவம். மேடைத் தோற்றத்திற்கேற்ற நீண்ட அங்கி போன்ற உடை- கருப்புக் கண்ணாடி அணிந்தவர்; உயரமாக முடிந்த கொண்டை. காதில் தொங்கி ஊஞ்சலாடும் லோலாக்குகள். வலது கையில் ஒரு பெரிய பட்டுக் கைக்குட்டை. புன்சிரிப்பு தவழும் இன்முகம்.
நடியாவின் பாடல்: ஸொஹேர் கஷோக்கி
இந்தத் தலைப்பு கொண்ட ஆங்கிலப் புதினத்தை, நடியாவுக்கான பாடல் எனவும் பொருள் கொள்ளலாம். இதுதான் சரியான தலைப்பாக அமையும். இந்தப் புதினம் அரபு நாடுகளின் பண்பாட்டின், கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக, பெண்கள் வாழும், (வாழ அனுமதிக்கப்படும்) முறையை விவரித்து, கரிமா அஹமது எனும் ஒரு பெண்ணின் வாழ்வின் வெற்றிப் பெருமிதத்தையும் சோகக் கதையையும் வெகு அழகாக விவரிக்கின்றது. இதை எழுதியவரும் ஒரு பெண்ணே என்பது தான் இதன் கூடுதல் சுவாரசியம்.
கவிதைகள் சொல்லும் (சிறு)கதைகள்
கதை சொல்லுவதில் ஆர்வம் கொண்ட மனிதன் எவ்வாறு அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டான் என்று யோசிக்கிறோம். வாய்மொழியாகவே சிறுகதைகள் வெகுகாலத்திற்கு முன் வழங்கப்பட்டன. பாட்டிகள் சொல்லும் பல கதைகள் இன்றைக்கும் இதற்குச் சான்றாக உள்ளன! உலகில் எல்லா மொழிகளிலும் எழுத்தும் இலக்கியமும் வளரத் துவங்கியதும், கவிதை (அ) செய்யுள் ஒன்றே இலக்கிய வடிவமாகக் கருதப் பட்டிருந்தது. கதை சொல்லும் மனிதன் எவ்வாறு அதைச் சொன்னான்?
மோட்ஸார்ட்டும் ஒரு இலையுதிர்கால மாலைப் பொழுதும்
நான் அவளுடன் வேலை பார்த்த ஆரம்ப நாட்களில் குழந்தையைக் காப்பகத்தில் விட ஆரம்பித்திருந்தேன். அவன் அங்கு ‘அட்ஜஸ்ட்’ செய்து கொண்டு விட்டானா என விசாரிப்பாள். ஐந்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய தாய் ஆனதால், குழந்தை வளர்ப்பின் நுணுக்கங்களை மனோதத்துவ முறைப்படி எனக்கு விளக்குவாள். இரண்டு வயதுக் குழந்தை நான் சொன்னதையே கேட்க மாட்டேன் என்கிறான் என்று ஒருமுறை அவளிடம் பாதி அலுப்புடனும், பாதி ஒரு தாய்க்குரிய பெருமையுடனும் விவரித்தபோது, சொன்னாள்: “அவன் நீ சொல்லும் எல்லாவற்றிற்கும், ‘சரி அம்மா,’ ‘அப்படியே செய்கிறேன் அம்மா,’ என்று சொல்லிய வண்ணம் இருந்தால் அவனுடைய தனித்தன்மை எவ்வாறு வளர்ச்சி பெறும்? அவன் எவ்வாறு ஒரு முழு மனிதனாவான்?” என்று கரிசனத்துடன் கூறினாள்.
எதிர்பாராததை எதிர்பார்க்க வைக்கும் தாகூரின் சிறுகதைகள்
விதியின் விளையாட்டினால் அப்போது வங்கத்திலும், பிஹார், ஒரிஸ்ஸா ஆகிய இடங்களிலும் கொடும் பஞ்சம் தலை விரித்தாடி மக்களை எலும்பும் தோலுமாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. தாகூர் கிண்டலும் எகத்தாளமுமாக இவ்வாறு எழுதுகிறார்: ‘வைத்யநாத் நிறைந்து வழியும் தனது செல்வங்களின் நடுவில் அமர்ந்து கொண்டு யார் இதை ஒருநாள் உண்ணப் போகிறார்கள் எனக் கவலைப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கொலைப் பட்டினியிலும் பஞ்சத்திலும் வருந்திக் கொண்டிருந்த ஒரு பெரிய நாடு தனது காலித் தட்டைப் பார்த்தபடி, என்ன சாப்பிடக் கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டிருந்தது.’