நுண்ணுணர்வும் கற்பனை விரிவும் உள்ள இலக்கியவாசகர்கள் எப்போதுமே பற்றிக்கொள்ளக் காத்திருக்கும் சருகு போன்றவர்கள். அப்படி சிலரையேனும் இந்த இதழின் கவிதைகள் ஈர்த்தால், அதன் வாயிலாக கவிதைகளுடனும் கவிஞர்களுடனும் அவர்கள் தொடர்ந்து பயணிக்கும் வாய்ப்பு அமைந்தால் சொல்வனத்தின் இந்த முயற்சி சிறு பலனை எட்டியது என்று கொள்ளலாம். இது இரு இதழ்களால் மட்டுமே சாத்தியமாகக்கூடுவதல்ல, தொடர் முயற்சிகள் வாயிலாகவே அடையக்கூடுவது.
Category: இதழ்-341
மதார் கவிதைகள்
கடந்த பஸ்ஸின்
சன்னல் வழி
நீராட்டு விழாவைப் பார்த்த
ஏராளம் பேரில்
JK வும் ஒருவர்
கரானா – மறையும் சுவடுகள் – ஹிந்துஸ்தானி இசை உலகம்
சிறுவனான சந்திரகாந்தின் பயிற்சியிலிருந்து கதை முஸ்தபாவின் நாட்குறிப்புக்குள் சென்று சேரும் இடம் கரானாவின் வரலாற்றை சொல்லத் தொடங்கும் இடம். ஜாபர் கான் என்பவர் யார்? அவரது இசையின் தொடக்கம் என்ன எனும் கேள்விகளிலிருந்து கரானாவின் ஆரம்ப காலங்களுக்குள் கதை செல்கிறது. சுதந்திரத்துக்கு முன்னான காலத்தில் அமைந்திருப்பதால் வரலாற்றின் சிறு பின்னல்களும் கதையினூடாகச் சொல்லப்படுகிறது. நம் கவனத்தைச் சிதறடிக்கக்கூடிய வகையில் வரலாற்றுப் பாடம் இல்லை. அது இந்த நாவலின் வேகத்துக்கு உதவியிருக்கிறது என்றாலும் நாவலின் பலகீனமும் இதுதான். பல தலைமுறைகளின் கதையைச் சொல்ல முற்படும்போது நாம் கால மாற்றத்தையும், மனிதர்களின் எழுச்சி வீழ்ச்சிகளை மட்டும் எதிர்பார்ப்பதில்லை.
பாட்ரிசியா கவாலி கவிதைகள்
இழக்கப்பட்டது திருப்பியளிக்கப்பட்டு விட்டது எனக்கு
தொலைவாயுள்ளது எனக்கருகில் உள்ளது இன்று.
இங்கிருக்கிறாயா நீ, எப்படி இருந்தாலும் நீ,
எனக்கு பொருட்டல்ல இன்று.
இன்று சப்தங்களின் பொங்கும் சுருள்களைத்
தணிவித்துக் கலந்திடும்
இனிமையான கவிகை மாடத்திற்குள்
பிடித்து வைக்கப்பட்டுள்ளேன்.
தமிழ்க் கவிதை சில குறிப்புகள்
வீரை வெளியனாரின் புறநானூற்றுக் கவிதையில் வேட்டுவப் பெண் ஒருத்தியின் நடைத் தயக்கம் நுட்பமாகப் பதிவாகியிருக்கிறது. முன்னைக் கொடியும், முசுண்டைக் கொடியும் பிணைந்த பந்தலின் கீழ், யானை வேட்டுவன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறான், அருகே பெண்மானைத் தழுவி விளையாடி அயர்ந்திருக்கிறது ஆண்மான். அவற்றின் புணர்ச்சி நிலையைக் கண்ட வேட்டுவன் மனைவி, தன் கணவன் உறக்கம் நீங்கி எழக் கூடும் என்று அஞ்சியும், கலைமான் பிணைமானை விட்டு அகன்று விடும் என்று அஞ்சியும் மனையிடத்தே நடமாடாமல் ஒதுங்கி நிற்கிறாள்
ரவிசுப்பிரமணியன் கவிதைகள், இசை வடிவம்
மலரின் இருப்பு மணத்தை சொல்லுகையில்
மரத்தின் அசைவு காற்றை சொல்லுகையில்
பறவையின் பாடல் இசையை சொல்லுகையில்
வாலின் அசைவு வாஞ்சையை சொல்லுகையில்
இஸுரு சாமர சோமவீர கவிதைகள்
உடைந்த சிறகுடைய
பளிங்கு வெண்மை நிறம் மங்கிய
தேவ தூதனாகிறேன்
தெய்வங்களே மறந்து போன
வெப்பவலயத் தோட்டமொன்றில்
இரண்டாம் அடுக்கு பிழைத்தல் விதிகள்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சூழலைக் கணக்கில் கொண்டால், அந்தக் காலத்தின் குரங்குகளுக்கு, இன்றிருக்கும் மனித இனம் என்பது இந்த A2B கூண்டில் உள்ள எலிகள் போலத்தான். இல்லையா? இன்று இருக்கும் மனிதனை, அந்தக் குரங்குகள் எதிர்கொண்டிருந்தால், மனித இனம் இனவிருத்திக்கான வாய்ப்பின்றி அழிந்து போயிருக்கும், இல்லையா? ஒருவகையில், மனித இனத்தின் ஆண்களை புத்திசாலிகள் எனலாம். செயற்கையாகக் கருத்தரிக்கும் இடத்திற்கு நகரும் வரை, அக்காலக் குரங்குகளுடன் இணைந்து பல்கிப் பெறுகி பொறுத்திருந்ததை, வேறெப்படித்தான் சொல்வது? இப்படி யோசித்துப் பார்.
கண்ணீரில் சிரித்து வாழ்தல்
நகைச்சுவைக்காக மட்டுமே படைக்கப்படாத படைப்புகளில், நகைச்சுவை என்பது ஒரு கம்பீரமான விருந்தில் அழைப்பில்லாமல் நுழையும் விருந்தாளியைப் போன்றது – ஓரளவு குழப்பத்தை ஏற்படுத்தினாலும், அது ஒரு வகையில் அவசியமானதாகவே இருக்கிறது. இது ஒரு பதற்றமான சூழலில் ஒரு பாத்திரம் நேரம் காலம் புரியாமல் வைக்கும் சங்கடமான குறிப்பாகவோ, அல்லது கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் சூழ்நிலையின் நகைமுரணாகவோ இருக்கலாம்
மெய்கண்டவன்
மந்திரித்துவிட்டதுபோல் தன் புலன்களுக்கு ஆளாகி சந்திப்பதற்கு ஒத்துக்கொண்டது தவறோ என்று நினைத்தான். அவ்வாறு நினைத்துக்கொண்டிருக்கும்பொழுதே, உடல் மெதுவாக எழுந்து உடை மாற்றிக்கொண்டது. டியோ இரண்டு அழுத்தும், தலையை சரியாக அமைத்துக்கொண்டும், பாக்கெட்டில் வாலட்டும் திறன்பேசியும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டும், அறையின் மின்விசிறியை அணைக்காமல் மெதுவாக கதவைத் திறந்துகொண்டு மண்டபத்தைவிட்டு வெளியேறி இருபது நிமிடத்தில் சொன்ன இடத்தில் இருந்தான்.
சமூக உணர்ச்சிக் கற்றல்
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது ஆடை, கேளிக்கைகள், விளையாட்டு, உணவு இரசனை சார்ந்தது மட்டும் அல்ல. நாம் கற்கும் முறைகளில் கூட மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. கற்கும் முறை, என்ன கற்கிறோம், எதைக் கற்கிறோம், எப்போது கற்கிறோம் என்பது தொடங்கி எல்லாவற்றிலுமே மாறுதல்கள். அதிலும் இப்போது பள்ளியில் படிக்கிற குழந்தைகளின் மனதில் அரசு இயந்திரங்களால் உருவான அச்சமும் நிலவுகிறது.
சகுனம்
எனக்கு முன்னால், நடைபாதையில்,ஓர் இளம் ஜோடி. அந்த இளைஞன் பேசிக் கொண்டிருந்தான். அவன் நல்ல உயரம். அவளுடைய நீண்ட கழுத்து.. வட்டமான கழுத்து, அவன் உதடுகளால் அதை எட்ட முடியவில்லை. அவன் என்ன சொல்கிறானென்று அவள் கவனிக்கவில்லை. பஸ் இன்னும் கொஞ்சம் முன்னால் நின்றிருக்கலாம். அவர்களால் இன்னும் கொஞ்சம் இந்தப் பக்கம் நகர்ந்திருக்க முடியும். அப்படியிருந்திருந்தால், அவன் என்ன பேசினான் என்பதை நானும் கேட்டிருக்க முடியும்
வ. அதியமான் கவிதைகள்
உன்னிடம்
இரண்டு உள்ளங்கைகள் இருக்கின்றன
என்னிடமும்
இரண்டு உள்ளங்கைகள் இருக்கின்றன
குறுக்கும் நெடுக்குமாய் கோர்த்து
உயர தூக்கிப் பிடித்திருக்கும்
நான்கு உள்ளங்கைகள்
போதாதா?
ஊழிப் பெருவெள்ளம்
ஒரு கட்டத்தில் எங்களுக்கு இந்த இரவே கடைசி என்றுதான் தோன்றியது. மழை நின்றுவிட்டபோதும் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே இருந்தது. நாங்கள் நின்றுகொணடிருந்த தண்ணீர்த் தொட்டி இப்போது பாதிக்குமேல் மூழ்கியிருந்தது. “நாம செத்துடுவமா சுகு” என்று கேட்டு கார்த்திக் சிறிது நேரம் மெளனமாக இருந்தான். பிறகு திடீரென்று என் தோள்களைப் பற்றிக்கொண்டுக் குலுங்கி அழுதான்
குறிச்சொற்களின்* கவிதைகள்
ஒரு அனுப்பப்படாத செய்தியில்
வரப் போகும் அந்தப் புதுப் பிரபஞ்சம்
நிலவுகள் அதன் வரைவு நகல்கள்
கருந்துளைகள் ரத்து செய்யும்
மாற்றங்கள் மட்டும்
எப்போதும் மாறுவதில்லை
முகம் அலம்பும் பூனை
மறுநாள் ஞயிற்றுக்கிழமை என்றாலும் கூட அதிகாலையிலயே எழுந்து பூனைக்கு முன்னால் பற்பொடியை தட்டி ஒரு பேப்பரில் வைத்துவிட்டு மூவரும் அமர்ந்திருந்தோம். பூனை பேப்பரில் வெள்ளையாக இருந்த பற்பொடியை எதோ உணவுப்பொருள் என்று நினைத்து மோந்து பார்த்துவிட்டு நெல் மூட்டைகளுக்கு இடையில் சென்று ஒழிந்து கொண்டது. “பூனை நம்மளப் பார்த்து பயப்படுது.” என்றான் பெரிய அண்ணன். அவன் அவ்வாறு சொன்னதும் எல்லாரும் மறைந்து நின்று கவனிக்க ஆரம்பித்தோம். ஒன்பது மணி ஆகியும் பூனை பல் துலக்கவே இல்லை. நெல் முட்டைகளுக்கு இடையில் சென்று ஒழிந்துகொண்டு வெளியே வரவும் இல்லை.
ஒளியும் விழியும்
ஆழ்ந்த உறக்கத்தில்
சங்கினுள் அடங்கும்
கடலைப் போல
நிலவினுள் சுருண்டு
விழிக்கிறேன்.
உடைந்த கண்ணாடிச்
சில்லென, நிலவை
மனதில் அளக்கிறேன்.
செ.புனிதஜோதி கவிதைகள்
வழிநெடுங்கிலும்
காயங்கள் ..,.
காயங்கள் மீது
மின்மினியென
பறந்து கொண்டிருக்கின்றன…
நிறைவேறிய
நிறைவேறா
பல கனவுகள்….
செல்வசங்கரன் கவிதைகள்
ஒரு மலைப் பயணம் மேற்கொள்ளலாம் எனக்
கிளம்பிக் கொண்டிருக்க
மலையே இறங்கி வந்து கைகளில் என்னை
ஏந்திக் கொள்ளுகிற அதிசயம் நிகழ்ந்தால் கூட
எதுவும் மாறாதென்று தோன்றியது
ந.சிவநேசன் கவிதைகள்
நல்லவனாக மாறும் கெட்டவனின் சாகசம்
நல்லவனாக இருந்து
நல்லவனாக மடிபவனின்
வாளை விடவும்
கூர்மையாயிருக்கிறது
இரைகளின் பிரார்த்தனைக் குறிப்பு
திசை காட்டும் நட்சத்திரங்கள் வழி தவறச் செய்துவிட்டதால்
வதைக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் அந்நிய நாட்டு ஜீவன்களின்
குருதியாலும் கண்ணீராலும் நிரம்பி
அலையடிக்கும் இச் செங்கடலுக்குள்
எப்போதும் போல இக் கணத்திலும்
மிகச் சாதுவாகவே நகர்கின்றன பெருந்திமிங்கிலங்கள்
மா. காளிதாஸ் கவிதைகள்
கேமராவை பார்க்காமல்
இன்னொரு பக்கம்
பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அந்தக் காட்சி
தெளிவாகப் புலனாகிவிட்டதா எனத் தெரியவில்லை.
செந்தி கவிதைகள்
ஓர் அதிகாலையில் ஆறுகண் பாலத்தில்
அவ்வழி வந்த உலகாணி பால்க்காரன்
முன்பு நிர்வாணமாக நின்று இரண்டு
கைகளால் வழி மறிக்க
மூன்று வாரங்கள் காய்ச்சலில் படுத்து
எழுந்திருக்காரன் என்பதை அறிந்ததால்
இம்முறையும் அவளிடம் பேசாது வந்துவிட்டேன்.
தும்ரி
அவளிடம் அப்படியெல்லாம் தனது மனதில் உள்ளதைக் கேட்க தயக்கமெல்லாம் தேவையில்லை என்று ஒரு பக்கம் உணரும் போதே மறுபக்கம் அவள் அதன் பிறகு தன்னை இப்படியே விட்டுச் சென்றாள் அதை எப்படி தாங்குவது? என்றும் அச்சமாயிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை தேவநாயப் பாவணார் நூலகத்தில் ஒரு எழுத்தாளரின் நூல் வெளியீட்டு விழா அதற்கு போகலாம் என்று ஏற்கனவே இருவரும் பேசியிருந்தார்கள்.
4. புனிதத்திலிருந்து அறிவை நோக்கி
அஸ்கிளெப்பியஸ், ஆறுதல் (soothing) அளிக்கும் கடவுளான Epione ஐ மணந்து குழந்தைகளைப் பெற்றான். சுத்தத்தின் கடவுளான ஹைஜியா (Hygeia), சர்வரோகநிவாரணி கடவுளாகிய பணசியா (Panacea), நலத்திற்கு அசோ (Aceso) நோயிலிருந்து மீள லாசோ (Laso), ஒளி அல்லது ஆரோக்கிய உடல் அழகின் ஈக்ள் (Aegle) ஆகிய மகள்களையும், திறமையான மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை செய்யும் Machaon, Podaleirios மற்றும் நோயில் இருந்து மீண்டும் முழுமைக்கு என்ற பொருளுடைய குள்ளமான டெலஸ்போரஸ் (Telesphoros) என்று மூன்று மகன்களையும் பெற்றனர்.
தந்தையின் மறைவும் தமையனை தேடுதலும்
ஒரு நாள் காட்டுத் தீ ஜுவாலையாக பரவி வருவதைக் கண்டு திடுக்கிட்டான். உண்மையா கனவா? ஒரு பெரிய சிங்கமே அந்த ஜுவாலையில் மாட்டிக் கொண்டு தவிப்பதைக் கண்டான். அதே சமயம் குட்டியை காக்க பெண் சிங்கம் வேகமாக வந்து அதனுள் குதித்து குட்டியை தூக்கி வெளியில் போட்டது. குட்டி பிழைத்து எழுந்து நின்றது. ஆனால் தாயான பெண் சிங்கம் தன்னை காத்துக் கொள்ள இயலாமல் தீயின் ஜுவாலையில் மடிந்தது. ஹர்ஷன் திகைத்தான்
பறவைகள் ஈர்க்கும் தொழில்நுட்பம் மற்றும் கட்டிடங்கள்
ஒரு பறவையின் வடிவம், அது தன் இறக்கைகளைப் பயன்படுத்தி எவ்வாறு மேல் எழும்புகிறது, காற்றில் எவ்வாறு சறுக்குகிறது என்ற விவரங்கள் அனைத்தும் நவீன விமானத்தில் உன்னிப்பாக ஆய்வு செய்யப்பட்டு மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளன. “V” உருவாக்கத்தில் பறக்கும் வாத்துக்கள், தனது முன் செல்லும் பறவையின் மேல்நோக்கி இழுக்கப்படுவதைப் பிடிப்பதன் மூலம் ஆற்றலைச் சேமிக்கிறது. இந்த குறிப்பைப் பயன்படுத்தி இராணுவப் படை அமைப்புகள் உருவானது.
ஸ்வப்ன வாசவ தத்தா – 9
‘என் மகள் வாசவதத்தா மறைந்து விட்டாள். எனக்கும், மகா சேனருக்கும் எங்கள் மகன்கள் கோபால, காபாலிகர்கள் போலவே தான் நீங்களும். நாங்களே முன்னால் தீர்மானித்து விட்டிருந்தோம். எங்கள் மருமகன் உதயணன் தான் என்று. உஜ்ஜயினிக்கு உங்களை அழைத்து வந்த காரணமும் அதுவே. அக்னி சாக்ஷியாக விவாக நடை முறைகள் இன்றி வீணை கற்றுக் கொள்ள என்று உங்களிடம் அனுமதித்த பொழுதே உங்களுக்கு என்றே கையளித்து கொடுக்கப் பட்டவள் போலத்தான்.
ஈர்ப்பு அலைகள் – பகுதி 7
லேசர்களின் தன்மை, வெப்ப நிலைக்கு ஏற்றார் போல, சற்று மாறுபடும். அணுவிலும் குறைந்த அளவு அளவீடல் என்று வந்துவிட்டால், இந்த வெப்ப மாற்றங்கள் பூதாகாரமாகத் தோன்றும் விஷயம். லைகோவில், அணு அளவு வெப்ப மாற்றங்களைக் கையாளும் முழு அமைப்பும் உள்ளது. இதை Thermal compensation system என்று அழைக்கப்படுகிறது. இது இரு கரங்களிலும் தனியாக இயங்கும் அமைப்பு.
டேவிட் லிஞ்ச் (David Lynch) – ஆழ்மன நினைவுகள்
இரு பெண் கதாபாத்திரங்களை முன் வைத்து எடுக்கப்பட்ட பெர்சோனா, அவர்களிடையே நடக்கும் உளவியல் ரீதியான போராட்டத்தைத் திரைக் காவியமாக்கியது. பெர்சோனா தீவிர உளவியல் தேடல். இரு பாத்திரங்களில் ஒருவர் உடலில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் திடீரெனப் பேச்சுத்திறன் இழந்தவர் இன்னொருவர் அவருக்குப் பேணுகை செய்யவந்த பெண் செவிலியர். இவர்களுக்குள் ஒரு தீவில் நடக்கும் கலந்துரையாடல், செயல்கள், சிந்தனைகள் போன்றைவையே கதை. இரு பாத்திரங்களை மட்டும் ஒரு கண்ணாடிக்கூண்டில் அடைத்துக் கேமரா மூலம் புலன்விசாரணை கோணலிலிருந்து உருவாக்கப்பட்டது பெர்சோனா.
நண்டுப்பிடி – பாகம் – 1
மருத்துவர் மேகன் க்ரான்ட்டை ஆண்டுக்கு ஒரு முறை ரேவதி பார்ப்பது வழக்கம். மேலோட்டமாக ஒரு சோதனை. வெறும் வயிற்றுடன் மூன்று குப்பி இரத்தம். சந்திப்பிற்கு சில தினங்கள் கழித்து அவளிடம் இருந்து ஒரு மின்னஞ்சல். அளவுகள் ஆரோக்கிய எல்லைகளுக்குள் என்ற தகவலுடன் விளக்கங்கள். முதல் வரிக்கு மேல் படித்தது கிடையாது.
வெளிவரும் ரகசியங்கள்: கென்னடியைக் கொன்றது யார்?
படுகொலை தொடர்பான அனைத்து கோப்புகளும் பொதுமக்களுக்கு கிடைக்கவும் பல வருட ரகசியத்தையும் ஊகங்களையும் முடிவுக்குக் கொண்டுவர உதவும் என்பதால் 1992ல் ‘ஜேஎஃப்கே பதிவுச் சட்ட’த்தை அமெரிக்க காங்கிரஸ் வடிவமைத்தது. கென்னடியின் படுகொலைக்கு வழிவகுத்த நிகழ்வுகள் குறித்த பல்வேறு ஆவணங்களின் தொகுப்புகள் வெளியிடப்பட்டன. CIA அறிக்கைகள், FBI கண்காணிப்பு கோப்புகள், படுகொலைக்கு முன்னர் ஆஸ்வால்டின் நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் இதில் அடங்கும். இருப்பினும், பல முக்கியமான தகவல்கள் மறைக்கப்பட்டன.
அரசர், அர்ச்சகர், இறைவாக்கினர்
ஐரோப்பிய அரசுகளுக்கு முதன்மை குருவாகவும் பல நேரங்களில் நேரடி அரசியல் முடிவுகளை எடுக்கவும் சக்தி கொண்டிருந்த போப் பதவி இன்று மதத் தலமை என்று சுருங்கிவிட்டது. எனவே அவரது செயல்களும் சொற்களும் அடையாளத் தன்மை (Symbolic) கொண்டவையாகவே அமைந்துவிட்டன. ஆனாலும் அவை முக்கிய அடையாளங்கள். பிரான்சிஸ் எனும் பெயரைத் தேர்ந்து கொண்டதிலிருந்தே அவர் எளிமையின் அடையாளத்தை ஏற்றுக்கொண்டார்.
‘சொல்வனம்’ எழுத்தாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
ஏப்ரல் 5 சனிக்கிழமை தரு பதிப்பகத்தாரால் ஐந்து நூல்கள் வெளியிடப்பட்டன. மொழியாக்கம் செய்யப்பட்ட சிறுகதை தொகுப்புகள் இரண்டு. மலையாளத்திலிருந்து தமிழில் அரவிந்த் வடசேரி மற்றும் வட இந்திய மொழிகளிலிருந்து தமிழில் அனுராதா க்ருஷ்ணஸ்வாமியால் மொழிபெயர்க்கப்பட்ட கதைகளடங்கிய தொகுப்புகள். ஆவநாழி மின்னிதழ் ஆசிரியர் சுதேச மித்திரனின் ‘கோபுரம் தாங்கி’ சிறுகதை தொகுப்பின் இரண்டாம் பதிப்பு, ஆவநாழி மின்னிதழில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு மற்றும் ஓவியர் ஜீவா அவர்களின் திரைப்படம் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு. இப்படியாக ஐந்து நூல்கள் வெளியிடப்பட்டன.
செயற்கை நுண்ணறிவு : இயற்றறிவு கவிதைகள்
நீ சொன்னாய்: “உன் தாய்நாட்டைப் பற்றிச் சொல்”
நான் என் நாக்கை கடித்தேன்.
எப்படி விவரிப்பது தீயில் மூழ்கும் வீட்டை?
எப்படி விவரிப்பது கடலில் மிதக்கும் பெயர்களை?
எனது தாத்தா கவிதை போல வாழ்ந்தார்,
வார்த்தைகள் அவரது உடலில் வடுக்களாக.
இங்கே, வெளிச்சத்தில், நான் நிழல் மட்டுமே,
அவரது கதையின் ஒரு துண்டு.
இந்தப் பழைய புகைப்படத்தில், அம்மா சிரிக்கிறாள்,
அவளது கண்களில் இன்னும் கனவுகள் இருக்கின்றன.
அப்போது அவள் தெரியவில்லை
