கண்ணியமான கடைசிக் காலம்

இந்தியா வெகுவேகமாக மூப்படைந்து கொண்டு இருக்கிறது. அடுத்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் ஐந்து இந்தியர்களில் ஒருவர் அறுபது வயதிற்கு மேலானவராக இருப்பார். தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களில் ஆயுள் எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதாலும், குடும்பங்களில் சிறிதாகிக் கொண்டே போவதாலும் மூப்பின் பாதிப்பு அதிகம் இருக்கப் போகிறது.

மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்

பூமி, வளிமண்டலம், சொர்க்கம் (நரகம்) என்று அண்டத்தை மூன்று பெரும் பிரிவுகளாகச் சொன்னது. மண்ணிற்கு கீழே அதிலேயே நாட்டம் கொண்டுள்ள உலகமொன்று, மண்ணில் ஒரு காலும், விண்ணில் ஓரு காலும் பதிக்க ஆசைப்படும் நம் உலகம், தேவர்கள் வாழும் விண்ணுலகம்; நாம் 14 உலகங்களை அறிந்திருக்கிறோம். சத்வம், ரஜஸ், தமஸ் என்று மூன்று குணங்கள்; வாதம், பித்தம், கபம் இவை மூன்றின் ஆதிக்கத்தைப் பொறுத்து உடலில் வரும் நோய்கள், ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள்.

போதும் என்ற மனமே…

நம்மிடையே மிகச் சிறந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எப்பொழுதுமே சரி செய்ய வேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறார்களே தவிர, சமயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம் என்று அவர்களுக்குத் தோன்றுவதில்லை. எதைக் கட்டாயம் சரி செய்ய வேண்டுமோ அவற்றை சரி செய்து, மற்றவற்றைக் கொஞ்சம் பாராமுகமாகக் கடந்து, வயதில் மூத்தோருக்கு எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பதை விட அவர்கள் சௌகரியமாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். 

கலையும் வணிகமும் மோதிக்கொண்ட கதை – கிறிஸ்துமஸ் ரிப்பன் 

ஈடன் சென்டரினுள் நுழைந்து பறந்து செல்லும் பறவைகள் போலத் தோற்றம் அளிக்கும் அந்தச் சிற்பங்கள் மக்களைக் பெரிதும் கவர்ந்தன.  “Flight Stop “ என்று பெயரிடப்பட்ட அந்த நாரைக் கூட்டத்தின் சிற்பம்  மைக்கேல் ஸ்னோ (Michael Snow ) என்ற சிற்பியின் படைப்பு. கிறிஸ்துமஸ் விடுமுறை வியாபார  உத்திக்கும், சிற்பி மைக்கேல் ஸ்னோவின் படைப்புரிமைக்கும் மோதல் உருவானது.  

எங்கே செல்லும் இந்தப் பாதை?

இருக்கும் முதியோர் இல்லங்களில் கூட அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதில்தான் கவனம் இருக்கிறதே தவிர அவர்களுக்கு ஒரு தரமான வாழ்வுமுறையை அமைத்துத் தர வேண்டும் என்ற முனைப்பு இருப்பதில்லை. இந்நிறுவனங்கள் தாங்கள் வசூலிக்கும் கட்டணங்களைப் பொறுத்து சாப்பாடு, உறைவிடம், மருத்துவத் தேவைகள் போன்ற அடிப்படை வசதிகளை ஓரளவு நன்றாகச் செய்து தருகின்றன. இந்நிறுவனங்களில் நல்ல முறையில் கவனிப்பு இருந்தாலும் இவை இங்கிருப்பவர்களின் வாழ்க்கையை எவ்வளவு தூரம் அர்த்தமுள்ளதாகச் செய்கின்றன என்பது கேள்விக்குரியதே

சுழியத்தின் காரணியம்

சுழியமே காரணம், அதன் காரணியமே ஒன்று. சுழியம் எனும் சாரமற்ற ரூபம், ஒன்று அதன் நாமம். சட்டென அலுவலகத்தில் கண்முன் இருந்த கணினிகளெல்லாம் சுழியங்களும் ஒன்றுகளும் சேர்ந்த நாமரூபங்களின் தொகுப்பாகத் தெரிந்தது. அலுவலகத் தோழர்களும் அவ்வாறே தோன்றினர். ’அது’ சாரமற்றதெனில் அதனைக் காணும், உணரும், உற்றறியும், ’இது’? 

சாண்ட்விச் தலைமுறையும் சொல்ல இயலா சங்கடங்களும்!

நம் பெற்றோருக்கு வயது கூடக் கூட அவர்களின் தேவை ஒரே மாதிரியாகவும், இதுதான் என்று எதிர்பார்க்கக்கூடியவையாகவும் இருப்பதில்லை. அவர்கள் தேவைகளுக்கெல்லாம் ஈடு கொடுக்க நம் வாழ்வுமுறைகளில் நாம் பெரும் சமரசத்தைச் செய்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது, நம்மைப் பல விதங்களில் பாதிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது. 

உண்மையைத் தேடி

ன் புரிதல்கள், நம்பிக்கைகள், இவற்றை அவன் சரி பார்த்துக் கொண்டேயிருக்கிறானே? அவன் சிந்தனை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த சீரற்ற குணத்தை சாதியா வெறுக்கிறாரோ, அதை நேர்மை என நான் உணர்கிறேன். கீழ்ப்படிதல் என்பது சிறந்த குணம் என்று மதங்கள் சொல்லக்கூடும்-ஆனால், அது அறிவுத் துறைக்குப் பொருந்துமா? ஏதோ ‘வெளிப்பாடுகளினால்/ உபதேசங்களால்’ சிந்தனை முன்னேறாது-அது கடவுளிடமிருந்து வந்தாலும், அது உனக்கு ஆன்ம விடுதலை தருவேன் என்று உறுதி கூறினாலும்.

பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்!

செத்ததற்குப் பின்னர் கடற்கரையில் ஐந்து ஏக்கர் நிலமும் சமாதியும் அழகிய மணிமண்டபமும் கேட்கவில்லை. பலான நடிகையுடன் ஓரிரவு படுத்து எழுந்துவர வேண்டவில்லை. பசிபிக் மகா சமுத்திரத்தில் இருநூறு ஏக்கர் பரப்புள்ள தீவும் ஆங்கோர் மாளிகையும் விசைப்படகும் கணிகையரும் சொந்த விமானமும் கேட்கவில்லை. சில லட்சம் கோடிகள் சொத்துக் கேட்கவில்லை. ஐந்து நட்சத்திர ஓட்டல் தரத்தில் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி விரும்பினார் இல்லை

கற்றுக்கொள்வதற்கு எல்லையே இல்லை

என்னைத் தடுப்பதிலேயே அவர் குறியாக இருந்தார். எனக்கும் குழப்பமாகத்தான் இருந்தது. ஆயினும்  ஆழ்மனத்தில் எங்கோ அந்தத் தாத்தாவுக்கு உதவி செய்யவேண்டும் போல இருந்தது. ஏதோ ஒரு சாயலில் அவர் என் தாத்தாவின் தோற்றத்தைக் கொண்டிருந்தார்.  என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் பேனா முனையையும் அவர் கண்களையும் சில கணங்கள் நான் மாறிமாறிப் பார்த்தேன். 

வயதுக்கேற்ற கல்வி முறை

This entry is part 7 of 12 in the series சமூக உணர்ச்சி

இந்த வயதில் மாணவர்கள் சிக்கலான உணர்ச்சிகரமான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறார்கள். மீராவின் கதையில் வெளிப்படுவது போல, அவர்கள் சவாலான சூழ்நிலைகளில் உதவக்கூடிய தனிப்பட்ட பலங்களையும் வளங்களையும் அடையாளம் காணுகிறார்கள். மன அழுத்தத்தை நிர்வகிக்கும் திறன்களையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.

வளரிளம் பருவத்தினர் எதிர்நோக்கும் சவால்கள்

இந்தப் பிரிவினரில் எவருடனாவது தாங்கள் சார்ந்திருக்கவில்லை என வளரிளம்பருவத்தினர் உணரும்போது குறிப்பிட்ட அந்தப் பிரிவினரின் கவனத்தைத் தங்கள்மீது ஈர்ப்பதற்கு அவர்கள் மிகுந்த பிரயத்தனப்படுவார்கள். அந்தக் கவன ஈர்ப்பு நடவடிக்கைகளுக்கு அவர்கள் விரும்பும்வகையில் எதிர்வினைகள் கிடைக்காதபோது, தங்களிடமும் அதிகாரம் இருக்கிறது எனக் காட்டுவதற்குச் சிலர் முயற்சிக்கிறார்கள். அது பெற்றோருடனும் ஆசிரியர்களுடனுமான அதிகார மோதலாக விஸ்வரூபம் எடுக்கிறது.

பெட்டைப் புலம்பல்

ஆனால் உருகி இறைஞ்சி இரந்து நின்ற ஒரு மகாகவிக்கு, அவன் கேட்ட எதுவும் தரவில்லை பராசக்தி. அஃதோர் வரலாற்றுச் சோகம். குறைந்தபட்சம் மேலும் சில பத்தாண்டுகள் ஆயுள் தந்திருக்கலாம் பராசக்தி. துஷ்ட நிக்ரகம், இஷ்ட பரிபாலனம் என்பர் பண்டு. இன்று இஷ்ட நிக்ரகம், துஷ்ட பரிபாலனம் ஆகிப்போயிற்று

பொறுப்புணர்வோடு முடிவுகளை எடுத்தல்

This entry is part 3 of 12 in the series சமூக உணர்ச்சி

இங்கேதான் பெற்றோர்கள், ஆசிரியர்களின் தேவை இருக்கிறது. மாணவர்கள், இளம் வயதினர்களை உணர்ச்சியால் எடுக்கும் முடிவின் பின்விளைவுகள், மாறுபட்டு எடுக்கும் முடிவுகளின் பின்விளைவுகள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளைப் பட்டியிலிட்டுக் காட்டி சிந்திக்க கற்றுத் தர வேண்டும். நல்லது என்ன அல்லது என்ன அவர்களே புரிந்து கொள்வார்கள்.

சமூக உணர்ச்சிக் கற்றல்

This entry is part 1 of 12 in the series சமூக உணர்ச்சி

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது ஆடை, கேளிக்கைகள், விளையாட்டு, உணவு இரசனை சார்ந்தது மட்டும் அல்ல. நாம் கற்கும் முறைகளில் கூட மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. கற்கும் முறை, என்ன கற்கிறோம், எதைக் கற்கிறோம், எப்போது கற்கிறோம் என்பது தொடங்கி எல்லாவற்றிலுமே மாறுதல்கள். அதிலும் இப்போது பள்ளியில் படிக்கிற குழந்தைகளின் மனதில் அரசு இயந்திரங்களால் உருவான அச்சமும் நிலவுகிறது.

நகைப்பாடம் – பார்கின்சனின் விதி

பணம் படைத்தவர்கள் எல்லோராலும்  ‘பணக்காரன்’ என்ற பட்டத்தை அடைந்துவிட முடியாது. ‘பணக்காரன்’ என்பது ஒரு தனித்துவ வட்டத்தின் உறுப்பினர்களுடைய பெயர், அதில் இடம் பிடிப்பது கடினம் என்கிறார் பார்கின்சன். ஒரு சீன கோடீஸ்வரரை சந்தித்த போது அந்த சீனர், “கூலிக்காரன் பணம் சம்பாதிக்க முடியும் ஆனால் ஒரு பணக்காரனால்தான் பணக்காரனைப்போல வாழ முடியும்” என விளக்கங்கள் கொடுக்காமல் சொல்கிறார்

மிதப்புக்கட்டை

அதுவும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தொழில் நுட்பம் மென்மேலும் தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கும் இந்த நவீன காலகட்டத்தில் ஓர் புதிய உலகைப்படைக்க, காட்ட, ஓரிரு நிமிடங்களில் சிற்சில ப்ரேம்களில், ஒலியமைப்பில் காண்போரின் aweவை எளிதில் அடைந்துவிட முடியும் விஷயத்தை எழுத்தில் காட்ட பத்து, இருபது பக்கங்களும், அதிக வாசக கவனமும் தேவைப்படும்.

உலகளாவிய இசையின் உணர்ச்சித் தாக்கம், கலாச்சார எல்லைகளுக்கு அப்பால்

இசைக்கான சில உலகளாவிய பதில்கள் குழந்தைப் பருவத்திலேயே வெளிப்படுகின்றன, இதில் நகரும் கால் தட்டுதல் மற்றும் தலையசைத்தல் ஆகியவை அடங்கும். இயக்கம் இல்லாமல் கூட உணர்ச்சி-மோட்டார் பதில்களைக் கட்டுப்படுத்தும். மூளைப் பகுதிகளைச் செயல்படுத்த இசை அறியப்படுகிறது.

மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி…

இயற்கையான உறவில் மலரும் மகவு என்ற அமைப்பை நீர்த்துப் போகச் செய்து, அந்த உறவு தரும் கடமை, பொறுப்பு, அன்பு, வம்சம் என்று காலம்காலமாய் மனித இனமும், சட்டமும் பணிந்து கொண்டாடிய ஒன்றை, ஒப்பந்தங்களால் அடைவதில், சட்டச் சிக்கல்கள் எழத்தானே செய்யும்? யாருக்குச் சொந்தம் என்ற கேள்வியை எடுத்துக் கொள்ளுங்கள். பணத்திற்காக கருவை சுமந்தவர்களென்றாலும், அத்தகைய அனைத்துப் பெண்களும், தாங்கள் கற்பனை செய்தபடி, அந்தக் குழந்தையிடமிருந்து உடலால் பிரிந்திருப்பது எளிதல்ல என்ற இடத்திற்கு வந்து சேர்ந்து மனச் சோர்விற்கும் ஏக்கத்திற்கும் உள்ளாகிறார்கள்.

மூன்று அறிஞர்கள்

மூவரும் அவர்கள் காலகட்டத்தைய இந்தியாவை (கால்ட்வெல்லைப் பொறுத்தவரை தமிழ்நாட்டை) புரிந்து கொள்ள முயன்றவர்கள். இவர்களின் புரிதல் முற்றிலும் தவறானது என்பதால் இவர்களை அவதூறு செய்வது முட்டாள்தனமானது. மூவரும் அன்றைய ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகள். அதே சமயத்தில் தாங்கள் எடுத்துக் கொண்ட பணிகளை மிகச் சிறப்பாகச் செய்ய முயன்று அவற்றில் ஓரளவு வெற்றியும் கண்டவர்கள்.

பிறப்பு எனும் அதிசயம்

மொத்தத்தில் பிறப்பு என்பது ஒரு அதிசயம்தான்; வாழ்க்கையும், இறப்பும் கூட அதிசயங்களே. பிறப்பு என்பது ஒருவர் வேண்டும்போது, வேண்டும் நிலையில், வேண்டும் பிறவியை அடையுமாறு நிகழ்வதல்ல. ஒவ்வொன்றும் முன்னரே நிச்சயிக்கப்பட்டபடி (pre-determined / ordained) நிகழ்வதாகும். ஆனால் இதனை நாமறிய இயலாது. ஆகவேதான் பிறப்பும் இறப்பும் நம் வசத்திலில்லை.

நேற்றைய மனிதர்கள் – புராண முறைகளின் மரணம்

மீண்டும் கட்டமைத்து ஆரம்பிக்கக்கூடிய சில அடித்தளம் எப்போதும் மீதமிருக்கும். அத்தகைய நேரங்களில், அரசியலின் முக்கிய சவால் என்பது தவிர்க்க முடியாத வீழ்ச்சிகளின் பாதிப்பை குறைப்பதும், காட்டுமிராண்டித்தனத்தின் எல்லையை குறுக்குவதும், படிப்படியாக முன்னேற்றத்திற்கான நம்பிக்கையை உண்டாக்குவது தான். இத்தகைய நம்பிக்கை, பிற காரணங்களுக்காக இல்லாவிட்டாலும், சமய காரணங்களுக்காக அவசியமானது என அவர் கருதுகிறார்

கண்டறியாதன

நமக்கு சிலது தெரிவதில்லை, என்ன தெரியவில்லை என்பதை உணர்வதற்கும் வழி தெரியவில்லை. சில கேள்விகளுக்கு உள்ளார்ந்த விடை இல்லை. பொதுப் புரிதலுக்குள் அடங்காத அதை ஈஷா உபனிஷத் இவ்வாறு சொல்கிறது : ‘அது அசைகிறது, அசைவதில்லை; தொலைவிலும், அருகிலுமாக இருக்கிறது; உள்ளேயும் இருக்கிறது, வெளியேயும்’

சகுனங்களும் சம்பவங்களும்-3

ஆண் நாத்திகர்களை முகக் குறிப்புகளின் அடிப்படையில் கிறிஸ்தவர்களிடமிருந்து வேறுபடுத்தலாம். ஈரானிய ஆண்களை விட ஹிஸ்பானிக் ஆண்கள் அனைத்து நீள் தாடிகளையும் சாதகமாகப் பார்க்கிறார்கள். பாரசீக வெறுப்புப் பேச்சைக் கண்டறியும் இயந்திரக் கற்றல் மாதிரியை அறிஞர்கள் வெளியிட்டனர். எதிர்பாலினத்தவரை விரும்பும் பெண்களை விட தற்பால் உறவுகளில் உள்ள டச்சுப் பெண்கள் குற்றங்களில் சந்தேகிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தன்னை அறியும் தாலாட்டு!

மனிதனின் தனிப்பட்ட குணம் என்னவென்றால் அவன் மனத்தால் இயக்கப்படுகிறவன்.” ஆகவே தன்னைப் பற்றிய ஆராய்ச்சியை அவனால் மனத்தில் செய்துகொள்ள முடிகிறது. நீண்ட பயிற்சிக்குப் பின்னரே ஒருவனால் தன்னைப் பற்றிய பல பிம்பங்களையும் தன்னுடன் தொடர்பு கொண்டிருப்பவை பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. இவற்றிற்குண்டான பெயர்களையும் வைத்து அவற்றின் பல இயல்புகளையும் பகுத்தறிய இயல்கிறது.

சகுனங்களும் சம்பவங்களும் – 2

அவர் கங்காரு போலவும், நீர் தெளிப்பான் போலவும் ஆடுகிறார். அந்த ஆட்டத்தை நேரலையில் பார்த்தபோது எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இதைவிடக் கொடுமையான ஆட்டங்களை ஹிந்தி, தெலுங்கு, தமிழப் பட குத்தாட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

என்னைப் போல் ஒருவன்?

நம் அத்வைத வேதாந்தம், உணர்வு என்பது ஒன்றே, பல மனிதர்கள், பல மனதுகள், பல உயிரிகள் என்று கண்டாலும், எல்லாவற்றிலும் இருப்பது ஒரு உணர்வே; அதை ப்ரக்ஞை, சைதன்யம் என்றெல்லாம் பெயரிட்டு நாம் அழைக்கிறோம் எனச் சொல்கிறது. மூளை பௌதீக வடிவம் கொண்ட ஒரு கருவி, மனம் என்பது எங்கும் பயணிக்கும் ஒரு செயல், இவ்விரண்டும் பொருள் என எதால் அறியப்படுகிறதோ அதுவே உணர்வு

டச்சு ஆங்கில இந்திய நாகரீகங்களின் வணிகவியம்

17 ஆம் நூற்றாண்டின் போது, ஐரோப்பாவில் அரசுகள் தங்கள் கால்களை அழுத்தமாக ஊன்றி கரங்களை உலகை நோக்கி விரித்தன, அதிகாரம் மையத்தில் குவிதல் விசை கொண்டது.  அதன் செயல்பாட்டிற்கு இரண்டு வகுப்புகள் முக்கியமானவையாக மாறின.  ஐரோப்பாவில் அக்காலத்தில் பெரும்பாலும் முடியாட்சிகளே இருந்தன. அதிகாரம் முடியாட்சியில் இருந்தே வழங்கப்பட்டது.

நசையறு மனமும், விசையுறு உடலும்

இன்று வயதில் மூத்தவர்களில் உங்களுக்குத் தெரிந்து ஆரோக்கியமாகவும், பயனுள்ளவர்களாகவும் வாழ்பவர்களை அவதானியுங்கள். அவர்கள் தங்களின் நாற்பது வயது கடந்தபருவத்தில் போட்ட விதை தான் இன்று அவர்களின் முதுமையில் இளைப்பாறும் நிழல் தரும் பெருமரமாக அவர்களுக்குப் பற்றுக்கோடாக இருக்கிறது.

தாவிதின் திருப்பாடல்கள் அல்லது சங்கீதங்கள்

பல காலகட்டங்களில் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாக சங்கீதங்கள் புத்தகம் அமைந்துள்ளது. ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்ட150 பாடல்களைக் கொண்டது சங்கீதங்கள் புத்தகம். இப்பாடல்கள் யூதர்களின் சடங்குகளில் பாடப்பட்ட பாடல்கள் என்பதால் இவை நீண்ட காலங்களாக புழக்கத்தில் இருந்தன.

திணைக்கோட்பாடு – பெண்மையம்

இந்து மதத்தில் தொன்மக்கதைகள் வெறும் கதைகள் மட்டுமல்ல, அவை சமூக மாற்றங்களின் பிரதிபலிப்புகள். பரசுராமனின் கதை, ஆண் தலைமையை அதிகாரத்தை ஏற்கும் சந்ததிகளைப் பற்றிப் பேசுகிறது. அத்துடன் எல்லாம்மா உடம்பில் ரேணுகாதேவியையும் ரேணுகாதேவி உடம்பில் எல்லம்மா தலையையும் பொருத்தி, பண்பாட்டு தளத்தில் பெண்ணுடலை கட்டமைத்திருக்கும் அனைத்தையும் கேள்விக்குட்படுத்தி இருக்கிறது.

கிரேக்கத்து ஸிஸிபஸும் கேரளத்துப் ப்ராந்தனும் – அல்பேர் கமூவின் அபத்தவாதம்

This entry is part 4 of 14 in the series குடாகாயம்

ஸிஸிபஸின் தண்டனையைப் பலரும் ஓவியமாக வடித்திருக்கிறார்கள்.  இவைகளுக்குள்ளே முன் பொதுயுகம் 530-ல் சுட்ட களிமண் பானையில் வரையப்பட்டதே நமக்குக் கிடைத்தவற்றில் மிகப் பழமையானது.   பொதுயுகம் 1549-ல் இத்தாலியஓவிய மேதை டிஷியன் என்பவரால் திரைச்சீலையில் தைலவண்ணம் கொண்டு வரையப்பட்ட ஸிஸிபஸ் ஓவியங்களுக்குளே மிகச் சிறப்பானதாக அறியப்படுகிறது.

ஹலோ, யாரேனும் இருக்கிறீர்களா?

பிரபஞ்சத்தில் எங்கேயாவது எப்போதாவது யாராவது தன்னை சந்தித்தால், அவர்களிடம் தெரிவிப்பதற்காகவே, மனிதகுலத்தைப் பற்றிய பல விவரங்களை ஒரு தங்கத்தட்டில் பதித்து ஏந்திக்கொண்டு, நமது சூரியக் குடும்பத்தையே தாண்டி வெளியே செல்லும் நிச்சயமான குறிக்கோளுடன் பயணத்தை துவக்கிய முதல் விண்வெளிப் பயணி

இமானுவல் கன்ட்டின்  உணர்வோங்குப் பெருநிலை

This entry is part 3 of 14 in the series குடாகாயம்

தமிழில் உன்னதத்திலிருந்து வேறுபடுத்திக்காட்ட நான் இறையுணர்வு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன்.  பேரழகின் ஊடாக இணைந்திருக்கும் முடிவின்மையை அதன் முக்கிய வரையறையாகக் கொள்ளலாம். ஊடாக, அது எழுப்பும் அச்சம், இயலாமை, விந்தை எனப் பல்வேறு உணர்வுகளையும் ஒட்டுமொத்தமாகக் கொண்டது இறையுணர்வு.

கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை

This entry is part 1 of 14 in the series குடாகாயம்

அவருடைய ஓவியங்கள் academicism என்று சொல்லப்படும் பயில்முறையைச் சார்ந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்தியக் கலையுலகில் பயில்முறைக் கலைகள் கோலோச்சிக் கொண்டிருந்ததன. இது ஓவியம், சிற்பம், இசை போன்று பலவற்றுக்கும் பொருந்தும். இவ்வழிக் கலைஞர்கள் பல வருடங்கள் – அதாவது பத்து ஆண்டுகளுக்கும் மேலாக – தங்கள் கலையைப் பயிற்சிக்கூடங்களில் ஆழ்ந்து கற்றார்கள்

சீர்மையற்ற சீர்மை

கூகுளை நாம் அத்தகைய ஒரு சீர்மையற்ற இலக்கத்தை உருவாக்க சொல்லி கேட்டால் அது தூய்மையான சீர்மையற்ற கணித மாதிரிகளைக் கொண்டு முடிவுகளை கொடுப்பதில்லை. அது சீர்மையைக் கொண்டு சீர்மையற்ற இலக்கத்தைத் தருவதாக நம்மை நம்பச் செய்துவிடும். அதன் வழிமுறையோ, அதற்கான உள்ளீடுகளோ, எவையுமே நாம் அறியாதவை. இவ்விதத்தில் கிடைக்கப்பெற்ற எண்களும் போலிச் சீர்மைகளே.

பெண்களின் கீழ்படிதல்

பெண்களது கீழ்படிவே ஆண்களுக்கு பெண்கள் மீதான ஈர்ப்பை உருவாக்குகிறது. பெண்கள் அழகாகவும், சாந்தமாகவும், பணிவாகவும், தமது சுதந்திரத்தை விட்டுக்கொடுப்பவர்களாக இருக்கும்போதே ஆண்களுக்கு பெண்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கிறது எனவும் கூறப்படுகிறது. ஆண் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் அதனை சட்டமாக வரைகிறது. இந்த சட்டங்களினாலான சமூக அமைப்பை பெண்களும் சுவீகாரம் செய்கிறார்கள்.

பைசாசத் திருமணமும் ராக்ஷசத் திருமணமும்: கொடியது எது? – ஒரு சிந்தனை

சமீப காலமாக, இந்து காரணங்களுக்காக உழைப்பதாக உண்மையாகவே நினைப்பவர்கள்-இந்து வெறியாளர்கள் என மதச்சார்பற்ற சக ஊழியர்களால் சீட்டு ஒட்டப்பட்டவர்கள்-கூட இக்கருத்தை உபயோகிப்பதை  பார்க்கிறேன். சென்ற வார ஸ்வராஜ்யா இதழில், முஸ்லீம் மக்கள் தொகை அதி வேகப் பாய்ச்சலில் முன்னேறுவதிற்கு ( 26 விழுக்காடுள்ள முஸ்லீம் சமூகம் 42 விழுக்காடு புதிய பிறப்புகளை அடைந்துள்ளது) பதிலடியாக இந்துக்கள் தங்கள் மனைவியை அதிகக் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கட்டாயப் படுத்துவது தந்தையாட்சி முறையாகும் என்கிறது.

நோக்கு அரிய நோக்கே, நுணுக்கு அரிய நுண்ணுர்வே

இந்திய வேதாங்களின்படி, நம்மைச் சுற்றி நாம் காணும் அனைத்தும் சக்தியின் மாறுபட்ட வடிவங்களே. பார்ப்பவர், பார்க்கும் பொருளை, அதன் உண்மை வடிவத்தில் பார்ப்பதாக நினைத்துக் கொள்கிறார், அவ்வளவே!ஹைஸென்பர்க் தன் ‘அன்செர்னிடியில்’, ஒன்றை நிறுவுகிறார். துகள் மின்னணுக்களை நீங்கள் ஆராய்கையில், ஒன்று அதன் நிலையைப் பார்ப்பீர்கள் அல்லது அதன் வேகத்தை. அவரது இந்த ஆய்வுதான் குவாண்டக் கணினி, குறியாக்கம் போன்றவற்றில் பயன்படுத்தப் படுகிறது

ஒரே ஒரு முத்தம்

உங்கள் அப்பாவை நீங்கள் முத்தமிட்டது உண்டா? இதென்ன அசட்டுத்தனமான ஒரு கேள்வி என்று தோன்றலாம். குழந்தைப் பிராயத்தில் உண்டு என்பது நாம் தரக்கூடிய சிறுபிள்ளைத்தனமான பதிலாக இருக்கலாம். எனவே கேள்வியை இன்னும் சற்று தெளிவாக்கலாம்…உங்கள் பால்யத்திற்குப் பின் எப்போதேனும் அப்பாவை முத்தமிட்டுருக்கிறீர்களா? நான் ஏன் இக்கேள்வியை கேட்கிறேன் என்பதை விளக்குவதற்கு முன், உங்கள் தந்தை இப்போது உங்களுடன் இருந்தால் உடனே சென்று முத்தமிட்டு வாருங்கள்.

சகோதரி  நிவேதிதையின் பார்வையில் இந்தியா                

தொடக்க கால வைணவத்தில் இலக்குமி என்னும் கடவுள் ஏது? வரலாறு கொண்டு சேர்த்ததே அப்பெண்கடவுள். வாசகச் சிந்தனையைக் கிளறிவிடுகிறார் நிவேதிதா. ராஜபுதனத்தப்பெண்  கிருஷ்ணப்ரேமி  மீராபாய்க்கும் வங்காளத்திற்கும் ஒரு தொடர்பு இருந்திருக்கிறது. இஸ்லாமியர்களின்  வசமிருந்த கயாவை மீட்க ராஜபுதனத்து இளவரசர்கள் விரும்பினார்கள்.சைதன்யரைப்போல் கிருஷ்ணனை பிரேமித்த மீரா வங்களாத்து கிருஷ்ண வழிபாட்டை கையிலெடுத்தார்.வைணவ வரலாறு  வங்கத்து மகான் சைதன்யரோடு பிணைந்ததே. சுடலைக்கு உறவான  சிவபெருமான் அர்த்தநாரி ஆனார். சிவனே மஹாதேவர் ஆனார்.ஆதிசங்கரருக்கு இதனில் பங்கில்லாமல் இல்லை.

காற்றில் கலக்கும் பேரோசை

கிரெடிட் சூயிஸ் மற்றும் யூ பி எஸ் யின் சங்கமம் சிறிய அளவில், அதுவும் சில அன்னிய வர்த்தகங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனச் செய்திகள் வந்தாலும், இந்தியாவின் பொருளாதார நிலை மோசமாக இல்லை. மார்ச் 2021ல் ரூ 9.6 ட்ரிலியனாக இருந்த வங்கிகளின் வைப்புத் தொகை ரூ.175.4 ட்ரில்லியனாக வளர்ந்துள்ளது- அதாவது, ஜி டி பியில் (GDP- Gross Domestic Product) 45% ஆக இருந்தது 67.6% ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்தியா பொறுப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். வர்த்தகங்கள் குறையும், வாடிக்கையாளர் அல்லது நுகர்வோரின் நம்பிக்கைகள் குறையும்

அன்று செயலழிந்தல மருபொழுது

இன்று இந்தியாவில் தான் உலக அளவில் இளைஞர்கள் அதிகம். மூன்றில் ஒருவர் இளைஞர் என்கிறார்கள்.  ஜப்பான் போன்ற நாடுகளில் குழந்தைப்பிறப்பு விகிதம் பல ஆண்டுகளாக குறைவாக இருந்துவருகிறது. வளரும் அறிவியல் சூழலில், சராசரி வயது உலகெங்கும் ஏறிக்கொண்டே வருகிறது. நான் வாழும் சிங்கப்பூரில், சராசரியாக முதியவர்கள் தொண்ணூறு வயது “அன்று செயலழிந்தல மருபொழுது”

காடுகள் மலைகள் தேவன் கலைகள்

 காதல் காட்சிகளில் கூட ’’அடடே இந்த  மால்வாவிஸ்கஸ் மலர்ச்செடிகள் பின்னால் இன்னும் கொஞ்ச நேரம் அவர்கள் காதல் மொழி பேசிக்கொண்டிருந்திருக்கலாம், செடியை பார்த்தே ரொம்ப நாளாச்சு ’’என்று அங்கலாய்ப்பது,  காதலர்கள் பெயர் பொறித்திருக்கும்  மரப்பட்டைகளை கண்டவுடன் ’’இது முதலை மரப்பட்டை அப்படின்னா இது மருத மரம்தான்’’ என்று கூவுவது, ’’என்னதிது  பாட்டில் தாமரைன்னு வருது,  இவங்க என்னமோ அல்லிக்குளத்தில் நீந்தறாங்களே’’ என்று கொதிப்பது,

அதிட்டம்

அதிர்ஷ்டம் எனும் சொல்லுக்கு அகராதிகள் தரும் பொருள்கள் 1. காண இயலாதது 2. நல் வாய்ப்பு 3. நல்லூழ் 4 ஆகூழ் என்பன. அதிருஷ்ட போக்கியம் என்றால் மறுமை, வினை, துய்த்தல் என்பன பொருளாம். அதிருஷ்ட யத்தினம் என்றால் பயன் – முயற்சி, பயன் தரு முயற்சி. யத்தினம் எனும் சொல்லையே நாமின்று யத்தனம் என்கிறோம். பிரயத்தனம் எனும் சொல்லும் அறிவோம். அதிருஷ்டானுகூலம் என்றால் ஆகூழ், நற்காலப் பயன், அதிருஷ்டத்தால் கிடைக்கும் அனுகூலம் என்பன பொருள்.

ஜோ ரோகன் – புதுயுகத்தின் கலாச்சார நிகழ்வு

முன் தயாரித்த கேள்விகள் இல்லாமல், பேட்டி கொடுப்பவரின் பதில்களில் இருந்து அடுத்த கேள்விகள் என மூன்று மணிநேரத்தில் இருந்து அதிகமாக நான்கைந்து மணி நேரம் வரைகூட நீளும் பேட்டிகள் தான் “ஜோ ரோகன் அனுபவம்”. முறைப்படுத்தப்பட்ட ஒழுங்கு இல்லாததனால் இப்பேட்டிகள் வானத்தின் கீழ் பூமிக்கு மேலே உள்ள அனைத்து விஷயங்களையும் ரோகனும், பேட்டி கொடுப்பவரும் பேசிக்கொள்ளும் இயல்பான உரையாடலாக அமைகிறது. கச்சிதம் என்பதோ, துறைசார் முழுமை என்பதோ இதன் இலக்கு அல்ல என்பதால் மட்டுறுத்தலோ, தவிர்க்கப்பட வேண்டிய தலைப்புகளோ பெரும்பாலும் இல்லை எனலாம்

மௌனமாய் இருந்து உன்னை நீ அறிந்து கொள்

சில ஆண்டுகளுக்கு முன் இதைப் படித்த போது நான் ஒன்றைப் புரிந்து கொண்டேன்- என் மனம்/சிந்தனை காலியாக இல்லை; அதற்குக் குறியீடுகள் இல்லை. ஆயினும், ஹெர்ல்பெர்ட் சொல்கிறார், தான் இந்த வகைதான் என்று அறுதிப்படுத்துதல் அவ்வளவாகச் சரியான ஒன்றல்ல. நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பது நமக்குத் தெரிவதில்லை, அந்தச் சோதனை ஒலிக்கு முன்னரும், பின்னருமான பதிவுகள் இதைக் காட்டித் தருகின்றன. நாம் சிந்திப்பதைப் பற்றி, சிலர் கேள்வி கேட்கையில் பொத்தாம்பொதுவாக நாம் பதில் சொல்கிறோம் அல்லவா? நம் எண்ண ஓட்டங்கள் மறைந்துள்ளதாக, மாறுபடுவதாக இருப்பதை ஓரளவிற்கேனும் நாமும் உணர்கிறோம். ஒரு மூளையில் சிந்தையின் பல வடிவங்கள் இருக்கின்றன.

அமெரிக்கக் கால்பந்து: கலாச்சார தனித்துவம்

என்.எப்.எல் அணிகளுக்கிடையே சமநிலையை தொடர்ந்து தக்கவைக்க சம்பள வரம்பு பின்பற்றுகிறது. அதாவது எல்லா அணிகளும் தங்கள் 53 வீரர்களையும் அவ்வருடத்திய அதிகபட்ச சம்பள வரம்பிற்குள் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இதனால் ஒவ்வொரு அணியும் தங்கள் தேவைகள் கருதி பணத்தை அள்ளி எறியமுடியாது. உடனடி தேவைகளும், முக்கிய வீரர்களின் சம்பளமும் வரம்பிற்குள் அமைய ஐவீ பல்கலைக் கழகங்களில் பயின்ற வணிக நிர்வாகப் பட்டதாரிகளையும், சட்ட வல்லுநர்களையும் அணிகள் ஆலோசனையாளர்களாவோ, பணியாளர்களாகவோ வைத்திருக்கின்றன.

சொல்லா, காட்சியா, எண்ணங்கள்?

உள் உரையாடல் கொண்டவர்கள், தன்னைப் பற்றி, தன் உணர்வுகளைப் பற்றி, ஆசைகள், ஆவல்கள் பற்றி சிந்தித்த வண்ணமிருப்பார்கள். இந்தத் தன் மையமானது வெளியில் உரத்த குரலில் ஒலிக்கும். 1980ல் மனோதத்துவவாதியான பெர்னார்ட் ரைம், (Bernard Rime) நாம் ஏன் நம் எதிர்மறை எண்ணங்களை பிறரிடம் சொல்கிறோம் என ஆராய்ந்தார். கெட்ட அனுபவங்கள், அசை போடுவதோடு நிற்பதில்லை, அதை வெளிப்படுத்தும் இச்சையையும் கொண்டவை. நாம் மகிழ்ச்சியாக இல்லை என்பதை மற்றவரிடம் சொல்கையில், அவர் நம்மை விட்டு விலகிச் செல்கிறார்.

சொல்லென்றும், மொழியென்றும்…

ஒற்றை மொழி பேசுபவர் இந்த முனையில் இருக்கிறார் என எடுத்துக் கொள்வோம். ஒப்புமை கொண்ட பேச்சொலிகள் இரண்டு மொழிகளிலும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. முதல் ஒரு முனை பேச்சின் (மொழியின்) ‘ஆடியோ கோடெக்’ மாதிரியிலிருந்து, ஒலிக்குறி தூண்டுதல்களைப் பெற்று, மறுமுனையில், அந்த மொழியின் ஒலிக்குறிப்பை வால் ஈஎக்ஸ் தந்துவிடுகிறது. (Coding) அந்த இடத்திலே குறி விலக்கி, செயல்படும்; மறுமுனையில் உள்ள மொழியில் இந்தப் பேச்சு பெறப்படும்.(Decoding) ஒரே பேச்சாளர்களின் மாற்று மொழித் தகவல் தரவுகள் இதற்குத் தேவையில்லை. சொல்லும் சூழலைப் பொறுத்து, அதன் தொனியை இது புரிந்து கொண்டு விடுகிறது