வசந்தா என்றே ஒரு அழகான ராகம் – உள்ளங்களில் நம்பிக்கையையும் நல்ல எண்ணங்களையும் வளர்ப்பது. வசந்த காலத்துக்கு உரியதா எனில், இல்லை; அவ்வாறு எந்தப் பகுப்புகளும் இல்லை. நளினகாந்தி, கர்ணரஞ்சனி போன்ற ராகங்களையும் வசந்தத்தின் ஓர் அழகான மனோநிலைக்குச் சேர்த்துக் கொள்ளலாம் என எங்கேயோ படித்த நினைவு!!
Series: பருவம்
கோடை மறைந்தால் இன்பம் வரும்
கோடை என்பது வருத்தும் வெயில்காலம். மனிதன் எதற்கெல்லாம் ஏங்குகிறான் என்று தெரியுமா? குளிர்ச்சியான மரம், அதன் நிழல், அம்மரத்தில் கனிந்து தொங்கும் பழங்கள், நீராடி மகிழ ஒரு நீரோடை, அதிலுள்ள குளிர்ச்சியான நீர், அந்தத் தண்ணீரினிடையே மலர்ந்து சிரிக்கும் அழகான வாசமிகுந்த சில தாமரை மலர்கள், இளைப்பாற ஒரு மேடை, அங்கு வீசக்கூடிய மெல்லிய பூங்காற்று,
மாமழை போற்றுதும்…மாமழை போற்றுதும்…
நீர் நிறைந்த மேகங்கள் மலைப்பாறைகள்மீது இறங்கி, அவற்றைக் காதலன் தழுவிக்கொண்டு இருப்பதுபோல் காணப்பட்டன. மலைகளெங்கும் அருவிகள் வீழ்ந்து கொண்டிருந்தன. எங்கும் தோகை மயில்கள் நின்று நடனமாடின. இவ்வாறு, மலைகள், மேகங்கள், அருவிகள், மயில்கள் இவற்றைக் கண்டோருக்கு உள்ளத்தில் ஒரு விதமான விருப்பு உண்டாயிற்று.
உதிரும் வண்ண இலைகள் !
துள்ளுகின்ற மீன்களாகிய மேகலையை அணிந்து, நீர்நிலைகளின் கரையோரங்களில் அமர்ந்திருக்கும் அன்னப்பறவைகள் முத்துமாலைகள் போலக் காட்சியளிக்க, பரந்த மணல் பிரதேசம் எனும் நிதம்பத்தையுடைய நதிகள், தம் இளமையாலும் அழகாலும் செருக்குற்ற இளமங்கையர் போல் தளர்நடையிட்டுக் கொஞ்சிக் குழைந்து, மெதுவாக ஆடி அசைந்து செல்கின்றன.