இலாசடி – ககோலியன்

இத்தனை ரூபாய் முதலீடு போடுகிறோம், இத்தனை செங்கல் செய்கிறோம். எவ்வளவு குறைவான செலவில் எவ்வளவு அதிகம் செங்கல் செய்ய முடிகிறதோ, அவ்வளவு எப்பிஷியன்ட்டாக கம்பெனி நடக்கிறது. இது சரியான கணக்குதான். ஆனால் பல பத்து பில்லியன் டாலர் லாபம் காட்டும் பெருநிறுவனங்களும் இந்த மாதிரி கணக்கு போடுகின்றன,

தீபாவளி சிறப்பிதழ் – வாசகர் மறுவினை

ராமையா எழுதிய அடைக்கும் தாழ் சிறுகதை படித்தேன். கதை பின்னோக்கு உத்தியில் சொல்லப்பட்டுள்ளது. பேசாமலே இருந்த ப்ரியா மறதி நோய் உள்ள பாட்டியின் மூலம் அவர்கள் வீட்டிற்குச் சென்று மாமாவின் அன்பால் பேசத் தொடங்குகிறாள். ஆனால் தன் குழந்தைக்குப் பிராமண பாஷை வந்துவிடுமோ என எண்ணிய சரவணன் ப்ரியாவை அங்கு அனுப்ப மறுத்துவிடுகிறான்…

நாஞ்சில் நாடன் கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்

நாஞ்சில் நாடனின் இந்தக் கட்டுரைக்குள் ஒவ்வொரு பாட்டையும் சொல்வனம் இணையதளத்தார் இடைச் சொருகியே தந்திருக்கிறார்கள். இசை கேட்கக் கேட்க மயிர் சிலிர்க்கிறது. பத்தாததுக்கு கட்டுரையில் நாஞ்சில் நாடன் திரட்டித் தருகிற புலனனுபவம். அது ஒரு களவுச் சொப்பனம் போல ஆளை ஆழ்த்தும். கூடவே யாழ்பாணத்துச் சித்தர் யோகரின் பத்து கண்ணியில் வரும் பவனம், பருதி, பரவை ஆழி எல்லாமும் தாண்டி அதிலுள்ள ‘எடி’ என்கிற தொனியையும் விட்டுவிடாமல் ஒரு பிடி பிடித்து வைக்கிறார்…

கூம்பிய கனவுகள்

சொல்வனம் இதழில் பாவண்ணனின் சிறுகதை “கனவு மலர்ந்தது” படித்தேன். வாசித்து முடித்தவுடன் ஒரு சாதாரண சிறுகதையாகத்தான் தெரிகிறது. நாடகம் என்ற கலையின் வீழ்ச்சியைச் சொல்வதாக இருக்கிறது. நாடகம் என்ற வடிவம் இன்னும் இருக்கத்தானே செய்கிறது; நகரங்களில் சபாக்களில் இன்னும் கூட நடத்தப்படுகின்றனவே என்று சொல்லலாம். ஆனால்…

வாசகர் மறுவினைகள்

கதையின் முதல் மற்றும் நிறைவு வரிகளை, “சாமியே…ய், சரணம் ஐயப்பா!” என்று அமைத்தது மிகச் சிறப்பு!

இந்த வரிகளுக்கிடையில், எதார்த்தமான நடையில், எவ்வளவு நாசூக்காக வண்டி ஓட்டுநர்களின் சிரமத்தை விவரித்திருக்கிறீர்கள்!

நான் பள்ளியில் படிக்கும் போது எங்கள் ஊர் மானாமதுரையிலிருந்து குருசாமிகள், மார்கழி மாதத்தில் விரதம் இருந்து மகரதீபம் காண இருமுடி கட்டி் குழுவாகக் கூண்டு உந்துகளில் சபரிமலைக்குக் கிளம்புவார்கள்….

வாசகர் கடிதம்

இறகுப் பந்து எனப்படும் ஷட்டில் பாட்மின்ட்டனின் பெரும் நுணுக்கங்களை வாசகன் மீது விட்டெறிந்து அவனைத் தெறித்து ஓடச் செய்யாமலும், பந்தடிப்பிலிருந்து அதிகம் விலகிச் சென்று தனி மனித அவலங்களில் – புலம் பெயர்ந்தவர்களின் அவலங்களில் உழன்று விடாமலும் நன்கு கட்டமைக்கப்பட்டுள்ள புனைவு.

200-அம்பை சிறப்பிதழுக்குச் சில மறுவினைகள்

வண்ணநிலவன் சொன்னது போல அம்பை என்கிற பெயரைக் கேட்டவுடன் அந்தச் சிறு வயதில் எனக்கு அது அம்பாசமுத்திரமாகத்தான் தோன்றியது. அதுவும் ‘அம்மா ஒருகொலை செய்தாள்’ படித்த போது ‘என்ன இருந்தாலும் நம்ம ஊருல்லா! அதான் இவ்வளவு அளகா எளுதுதாங்க’ என்று தோன்றியிருக்கிறது. பின்னால் எழுத்தாளர் அம்பை என்கிற லட்சுமியைப் பற்றி அறிய நேர்ந்த போது “ச்சே! நம்ம ஊர் இல்லையாமே’ என்கிற வருத்தம் இல்லாமல் அவரது எழுத்து குறித்த மதிப்பை அந்த சமயத்தில் சற்றே வளர்ந்திருந்த எனது வாசக அனுபவம் தந்தது.

பெட்டகம்- வாசக மறுவினை

குட்டி ரேவதியின் ‘உடலே இல்லாத வெளியில் மிதந்து கொண்டிருந்த’ அருமையான நேர்காணலுக்கு மிகுந்த நன்றிகள். உடலையும், அதன் பட்டுணர்வையும் சொல்லும் அம்பையின் பார்வை மிகச் சரியாக வெளிப்பட்டிருக்கிறது. ஆண்வழி நோக்கில் உள்ள சமுதாயத்தில் பெண்ணின் உடல் கூட அவளுடையது என்ற எண்ணம் அற்றுப் போனதுதான் மிகப் பெரிய குரூரம் என அம்பை தெளிவாகச் சொல்கிறார்.

வாசகர் மறுவினை

நீங்கள் குறிப்பிட்ட ’ரே’ என்ற உச்சரிப்பு பிரபலமாக ஒரு காரணம் இவர் குடும்பம் மரபு இந்துக் குடும்பம் இல்லை. ப்ரம்மோ சமாஜ் என்ற ஒரு கிளைக் குழுவைச் சார்ந்தவர்கள் இவர்கள். இந்த சமாஜிகள் பாதிக் கிருஸ்தவர்கள் போல என்பது என் நினைவு. சோதிக்க வேண்டும். யூரோப்பியப் பண்பாட்டின் தாக்கப்படி இந்து சமுதாயத்தை (மரபுக் குழுக்களை, பழக்க வழக்கங்களை) விமர்சித்து, ஏக இறைத் தத்துவத்தை மெச்சி, பற்பல செமிதிய நம்பிக்கை/ பழக்கங்களைத் தம் பழக்கமாக மாற்றிக் கொண்டு, அதே நேரம் இந்து மரபை முற்றிலும் அழிக்காமலும் வைத்திருந்த கூட்டம் இது என்று படித்த நினைவு. நீங்கள் சுட்டுகிற ரொபீந்த்ரநாத் தாகூரும் இந்த ப்ரம்மோ சமாஜிதான்…

வாசகர் மறுவினை

பாரபட்சம் (discrimination) , கோடல்கள் (bias), நுட்பக் கோடல்கள் (micro bias) ஆகியவை நாம் பல நூறு ஆண்டுகளாக சந்தித்து வருபவை. வேற்றுக் கிரகத்தில் ஒரு ஆண், ஒரு பெண்ணை சென்றடையச் செய்து அவர்களைப் போல் குளோனிங் முறையில் பலரை உருவாக்கினாலும், அதிலும் பாகுபாட்டை முதலில் சுட்டிக்காட்டும் மனநிலை உள்ளுர ஓடிக்கொண்டிருப்பதை உணரமுடிகிற வகையில் ஒரு அத்யாயத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சாராருக்கு இருக்கிற advantage அவர்களால் உணரப்படுவதில்லை என்பனவற்றை விவாதித்த பின் இன்றும் சாதிய மோதல்கள், பாகுபாடு மோதல்கள் ஏன் தொடர்கிறது என்பது பற்றி ஒரு புரிதல் ஏற்படுகிறது. மனிதன் சிந்திக்க சிந்திக்க பல்வேறு வளர்ச்சிகளும், சாதனைகளும் சாத்தியமாயிருக்கிறது.

வாசகர் மறுவினை

இந்த கட்டுரை பல அரிய தகவல்களை சுவையாக அளிக்கிறது. மேலும் கணினி மொழியியல் (computational linguistics) மற்றும் தரவு மொழியியல் (corpus linguistics) நோக்கில் படித்தால் மிகவும் சுவாரஸ்யாக இருக்கும். நாடன் அவர்கள் புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவரது தமிழ் விழிப்புணர்ச்சி பணி மிகவும் சிறந்தது, பொறியாளர் மற்றும் பல துரை சார் வல்லுநர்கள் கவனத்தை பெரும் ஒரு கட்டுரை.

வாசகர் கடிதம்

திருமணத்திற்கு முன் எங்கள் வீட்டில் ஒரு சைக்கிள் கூடக் கிடையாது. கணவருடன் காரில் போய்விட்டு வந்தாலும் ஆட்டோமொபைல் பற்றிய அறிவு பூஜ்யம். பிள்ளைக்கு அப்போது மூன்று வயது. அவனையும் இடுப்பில் வைத்துக்கொண்டு காலையில் 9 மணிக்கு கடையைத் திறக்கவேண்டும். நட்டும், ஸ்க்ரூவும் ஆக ஏகப்பட்ட சாமான்கள். கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கும். அபூர்வமாக யாராவது வந்து ஏதாவது கேட்டால் தேட ஆரம்பிப்பேன். நான் தேடுவதைப் பார்த்து வாங்க வந்தவர்கள் போய்விடுவார்கள். ‘ஏன் தேடவேண்டும்? கடையில் சும்மா தானே உட்கார்ந்திருக்கிறாய்? ஒவ்வொரு சாமானாகப் பார்த்துக் கொண்டே வா. புரியும்!’ ஒருமுறை கூட கடைக்கு வந்து உதவியது கிடையாது. வீட்டின் அருகிலேயே கடை இருந்தது மட்டுமே எனக்கு சாதகமான விஷயம்.

வாசகர் மறுவினை

எராலியின் வரலாற்று ஆய்வுகளைப்பற்றிய அறிமுகக்கட்டுரை படிப்பதற்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. ஒரு புனைகதைக்குரிய வேகத்துடன் கச்சிதமான சொற்சித்திரங்களுடன் எழுதியிருக்கும் சுரேஷுக்கு வாழ்த்துகளும் நன்றியும் சொல்லவேண்டும். புத்தரில் தொடங்கி தென்னிந்தியச் சித்திரங்கள் வரையிலான வரலாற்றுத் திருப்பங்களையும் சாதனைகளையும் வீழ்ச்சிகளையும் சுட்டிக் காட்டியபடி நீண்டு செல்கிறது. வணிக உறவுகளாலும் சாதனைகளாலும் உச்சத்துக்குச் சென்று வளர்ச்சியைத் தொட்ட இந்தியாவின் எழுச்சி, ரோம் பேரரசின் வீழ்ச்சியை அடுத்து தேங்கிவிட்ட அம்சம் இதுவரை யாராலும் சொல்லப்படாத ஒன்று. மீண்டும் விவசாய சமூகமாக மாறி மெல்ல மெல்ல வளர்ச்சி பெறும் போக்கில் துரதிருஷ்டவசமாக அடுத்தடுத்து …

வாசகர் மறுவினை

நான் மறைந்த நண்பர்களுக்கு அஞ்சலிக்கட்டுரைகள் எழுதி எழுதி இப்போது நான் ஒரு ‘சரமக்கவிராயர்’ ஆகிவிட்டேன்! நேற்று டிஸ்கவரி-நவீன விருட்சம் நடத்திய வெ.சா. அஞ்சலிக்கூட்டத்தை ‘தலைமைப்புரோகிதராக’ இருந்து நடத்திவைத்தேன். இன்று ’உயிர்மை’ மனுஷ்ய புத்திரன் தொடர்புகொண்டு ‘வெ.சா.வுடன் நெருங்கிப்பழகியவர் நீங்கள். அடுத்த இதழுக்கு ஒரு அஞ்சலிக்கட்டுரை ஒன்று அனுப்புங்களேன்!’ என்று கேட்டிருக்கிறார். இப்போதெல்லாம் படிப்பதும் எழுதுவதும் பெரும்பாடாக இருக்கிறது. I am afraid it’s mental menopause at this old age!